தூத்துக்குடியில் பிரதமர் மோடி! ரூ.4,800 மதிப்பிலான திட்டங்களை அறிவித்து பேச்சு!

pm modi in thuthukkudi - 2026

வணக்கம். இன்று கார்கில் வெற்றித் திருநாள். நான் முதன்மையாக கார்கில் வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன், உயிர்த்தியாகிகளுக்கு என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.

நண்பர்களே, நான்கு நாட்கள் அயல்நாடுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு…… பகவான் இராமேஸ்வரனுடைய புனிதமான மண்ணில் நேரடியாக கால் பதிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. அயல்நாடுகள் பயணத்தின் போது, பாரதம் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே வரலாற்றுப்பூர்வமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

பாரதம் மீது உலகின் அதிகரித்துவரும் நம்பிக்கை, பாரதத்தின் புதிய தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளம் இது. இந்த தன்னம்பிக்கையோடு நாம், வளர்ச்சியடைந்த பாரதத்தைப் படைப்போம்…… வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இன்றும்கூட, பகவான் இராமேஸ்வரன், அறுபடைவீட்டின் இரண்டாம் படைவீடாம் திருச்செந்தி நகருறையும் செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு, தூத்துக்குடியில் வளர்ச்சிப்பணிகளின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டை வளர்ச்சியின் சிகரங்களுக்குக் கொண்டு செல்லும் குறிக்கோள் தொடங்கப்பட்டது……
தொடர்ந்து அதன் சாட்சியாக தூத்துக்குடி ஆகிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் இங்கே வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக சரக்குப்பெட்டி முனையத்திற்கான அடிக்கல் நாட்டினேன். பல நூற்றுக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்களை அப்போது தான் தொடக்கி வைத்தேன். செப்டம்பரிலே புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப்பெட்டி முனையத்தை குடிமக்களுக்கு அர்ப்பணித்து வைத்தேன்.

இன்று ஒரே முறையிலேயே, 4,800 கோடி ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படவும் இருக்கின்றன, அடிக்கல் நாட்டப்படவும் இருக்கின்றன. இவற்றில் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே துறையின் திட்டங்களோடு, எரிசக்தித் துறைசார்ந்த முக்கியமான முன்னெடுப்புகள் இருக்கின்றன. நான் உங்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கும் இதன் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி…… இவை எந்த ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பு போன்றவை. இந்த பதினோரு ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் மீது நமது முனைப்பான கவனம் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி நமக்கு எத்தனை முதன்மையானது என்பதைத் தான். இன்றைய அனைத்துத் திட்டங்களும், இணைப்புத்திறன், மாசேற்படுத்தா எரிசக்தி மற்றும் புதிய வாய்ப்புகள் ஆகியவற்றின் மையப்புள்ளியாக, தூத்துக்குடியையும், தமிழ்நாட்டையும் உருவாக்கும்.

நண்பர்களே, தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடியின் மண்ணும், இங்கிருக்கும் மக்களும், பலநூற்றாண்டுக்காலமாக, பல நூற்றாண்டுகளாக தன்னிறைவான, சக்திபடைத்த பாரதத்திற்காகத் தங்களுடைய பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள். இதே மண்ணில் தான் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களைப் போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டிருந்த காலத்திலேயே கூட, கடல்வழி வாணிபத்தின் சக்தியைப் புரிந்தவர் அவர்…..
ஆழ்கடல்களின் மீது சுதேசிக் கப்பலைச் செலுத்தி, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி அவர்கள்.

இந்த மண்ணில் தான், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன் போன்ற மாமனிதர்கள், சுதந்திரமான, வல்லமைமிகு பாரதம் படைக்கும் கனவைக் காணச் செய்தார்கள்.

சுப்பிரமணிய பாரதி போன்ற தேசியக்கவியும் கூட இங்கே அருகே தான் பிறந்தார். நீங்கள் அனைவரும் அறிவீர்கள்……. சுப்பிரமணிய பாரதிக்கு எத்தனை பலமான உறவு தூத்துக்குடியோடு இருக்கிறதோ, அதே அளவு பலமான உறவு என்னுடைய நாடாளுமன்றத் தொகுதியான காசியோடும் இருக்கிறது. காசி தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் வாயிலாக நமது கலாச்சார மரபுகளை, நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம்.

நண்பர்களே, கடந்த ஆண்டு தான், நான் தூத்துக்குடியின் பிரபலமான முத்துக்களை, பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கு அந்த நல்முத்துக்கள் மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிநாட்டு முத்துக்கள்….. ஒருகாலத்தில் உலகம் முழுவதிலும் பாரதத்தின் பொருளாதார சக்தியின் அடையாளமாக இருந்து வந்தது.

நண்பர்களே, இன்று நாம் நமது முயற்சிகளின் காரணமாக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கினை முன்னெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பிரிட்டன் மற்றும் பாரதத்திற்கு இடையே நடந்த FTA, தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கூட, இந்த தொலைநோக்கிற்கு வேகம் அளிக்கிறது.

இன்று பாரதத்தின் வளர்ச்சியிலே….. உலகம் தனது வளர்ச்சியைக் காண்கிறது. இந்த ஒப்பந்தமும் கூட, பாரதத்தின் பொருளாதாரத்திற்குப் புதிய பலத்தை அளிக்கும். இதனால், உலகத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆகும் நமது வேகம் இன்னும் விரைவாகும்.

நண்பர்களே, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்பனையாகும் 99 சதவீத பாரதநாட்டுப் பொருட்களின் மீது எந்தவொரு வரியும் விதிக்கப்படாது. பிரிட்டனில் பாரதநாட்டுப் பொருட்கள் விலைமலிவானவையாக இருக்கும், அங்கே அவற்றுக்கான தேவை அதிகரிக்கும், அதே வேளையில் இங்கே பாரதத்திலே அந்தப் பொருட்களை உருவாக்க அதிக வாய்ப்புகள் உருவாகும்.

நண்பர்களே, பாரதம்-பிரிட்டன் நாடுகளின் தடையில்லா வணிக ஒப்பந்தம்….. நம் நாட்டு இளைஞர்களுக்கு, நமது சிறுகுறுநடுத்தரத் தொழில்துறைக்கு, நம்முடைய ஸ்டார்ட் அப்புகளுக்கு மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் தொழில்துறையாகட்டும், நமது மீனவர்களாகட்டும், அல்லது ஆய்வுகள் மற்றும் புதுமைகள் படைத்தலாகட்டும், அனைவருக்கும் ஆதாயங்கள் ஏற்படும்.

நண்பர்களே, இன்று மேக் இன் இண்டியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் மிஷன் மேனுஃபேக்சரிங், இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கும் பாரத அரசு அதிக வலு சேர்க்கிறது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவில் தயாரிப்போம் குறிக்கோளின் பலத்தைக் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை மண்ணோடு மண்ணாக்கியதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களினி பெரும் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், இன்றும் கூட, பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களைத் தூங்க விடாமல் செய்திருக்கிறது.

நண்பர்களே, நமது தமிழ்நாட்டின் ஆற்றல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்த, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலே நாங்கள் துறைமுகக் கட்டமைப்பை உயர்தொழில்நுட்பம் உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதோடு கூடவே, விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றுக்கு இடையேயும் கூட, பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட முனையத்தின் தொடக்க விழா இந்தத் திசையில் மேலும் ஒரு பெரிய முன்னெடுப்பாகும். 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த முனையம் இப்போது, ஒவ்வோர் ஆண்டும், 20 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும். முன்பு, ஆண்டுக்கு வெறும் மூன்று இலட்சம் பயணிகளை மட்டும் கையாளும் திறன் கொண்டதாக இருந்தது இது.

நண்பர்களே, வரவிருக்கும் காலத்தில், தேசதின் மேலும் பல வழிகள் வரை தூத்துக்குடியின் இணைப்பு அதிகரிக்கும், அப்போது இங்கிருக்கும் வியாபாரத்துக்கும், தொழில்களுக்கும் ஊக்கம் கிடைக்கும். தமிழ்நாட்டின் பெருநிறுவன பயணங்கள், கல்வித்துறை மையங்கள், உடல்நல கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இதனால் ஆதாயங்கள் உருவாகும். இதோடு கூடவே, இந்தப் பகுதியில் சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகளுக்கும் புதிய ஆற்றல் கிடைக்கும்.

நண்பர்களே, இன்று நாம் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சாலை கட்டமைப்புகளையும் கூட மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் சாலைகள், இரண்டு பெரிய வளர்ச்சிப் பகுதிகளை சென்னையோடு இணைக்க இருக்கின்றன. இந்தச் சாலைகள், டெல்டா மாவட்டங்களைச் சென்னையோடு சிறப்பாக இணைக்கும் பணியை ஆற்றும்.

நண்பர்களே, இந்தத் திட்டங்களின் உதவியோடு, தூத்துக்குடி துறைமுகத்தின் இணைப்பும் கூட, இன்னும் சிறப்பாக ஆகியிருக்கிறது. இந்தச் சாலைகள், இந்த மொத்தப் பகுதியின், வாழ்க்கையைச் சுலபமாக வாழும் தன்மையை மேலும் சிறப்படையச் செய்யும். இதுகூடவே, வர்த்தகம், வேலைவாய்ப்புக்குமான புதிய பாதையும் திறக்கும்.

நண்பர்களே, நமது அரசாங்கம், தேசத்தின் ரயில்வே துறையை தொழில்துறை வளர்ச்சி மற்றும் தற்சார்பு பாரதத்தின் உயிர்நாடியாக கருதுகிறது. ஆகையால் தான், கடந்த 11 ஆண்டுகளிலே, தேசத்தின் ரயில்வேதுறைக் கட்டமைப்பு நவீனமயமாக்கம் என்ற புதிய போக்கைக் கடந்து வருகிறது. தமிழ்நாட்டின் ரயில்வே துறை கட்டமைப்பு, நவீனமயமாக்கல் இயக்கத்தின் ஒரு முக்கியமான மையமாகும்.

நமது அரசாங்கம் அமுத பாரதம் நிலையங்கள் திட்டத்தின்படி, தமிழ்நாட்டின் 77 நிலையங்களின் மறுமேம்பாட்டை மேற்கொண்டு வருகிறது. நவீன வந்தே பாரத் ரயில்கள் வரிசையில், தமிழ்நாட்டினி மக்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்து வருகிறது. தேசத்தின் முதல் மற்றும் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்கு ரயில் பாலமான பாம்பன் பாலமும் கூட, தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாம்பன் பாலத்தால் வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை மற்றும் பயணிப்பதில் சுலபத்தன்மை இரண்டுமே அதிகரித்திருக்கிறது.

நண்பர்களே இன்று தேசத்தில் மிகப்பெரிய மற்றும் நவீன கட்டமைப்புகளை மேம்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட ஜம்மு கஷ்மீரத்தின் சினாப் பாலம், பொறியியல் அற்புதமாக கருதப்படுகிறது. இந்தப் பாலம் காரணமாக முதன்முறையாக ஜம்மு பகுதி, ஸ்ரீநகரோடு இணைக்கப்பட்டது.

இதைத் தவிர தேசத்தின் மிகவும் நீளமான பாலம் அடல் பாலம் உருவாக்கப்பட்டது….. அசாமிலே போகிபீல் பாலம் கட்டப்பட்டது. 7 கிலோம்கீட்டருக்கும் அதிக நீளம் ஆன சோன்மர்க் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டது…. இப்படி எத்தனையோ திட்டங்களை பாரத அரசு நிறைவேற்றி இருக்கிறது. இவை அனைத்தும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது.

நண்பர்களே, இன்றும்கூட, தமிழ்நாட்டிற்காக நாம் எந்த ரயில்துறைத் திட்டங்களை அர்ப்பணித்திருக்கிறோமோ, இவற்றால் தென் தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாயங்கள் ஏற்படும். மதுரை-போடிநாயக்கனூர் வழிப்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு இப்போது, இங்கே வந்தே பாரத் போன்ற ரயில்கள் பய்ணிக்கும் பாதை திறக்கப்பட்டு விட்டது. இந்த ரயில்வே திட்டங்கள் தமிழ்நாட்டின் வேகத்தை…. மற்றும் அதன் வளர்ச்சியின் வீச்சு இரண்டுக்குமே……….. ஒரு புதிய சக்தியை அளிக்க இருக்கிறது.

நண்பர்களே, இன்று இங்கே 2000 மெகாவாட் கூடங்குளம் அணுமின்சக்தித் திட்டத்திலிருந்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டங்களுக்கான அடித்தளமும் நாட்டப்பட்டது. சுமார் 550 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகிவரும் இந்த அமைப்பு, வரவிருக்கும் ஆண்டுகளில் தேசத்திற்குத் தூய்மையான எரிசக்தியை அளிக்கும் பெரிய பங்களிப்பை ஆற்ற இருக்கிறது.

இந்த எரிசக்தி, பாரதத்தை உலக எரிசக்தி இலக்குகளையும், சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றும் ஊடகமாக ஆகும். மின்சாரதி தயாரிப்பு அதிகரிக்கும் போது, தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு, உள்ளூர் நுகர்வோர் ஆகிய அனைவருக்கும் இதனால் இலாபம் ஏற்படும்.

நண்பர்களே, தமிழ்நாட்டில் பிரதம மந்திர் சூரியசக்தி வீடு இலவச மின்னாற்றல் திட்டமும் கூட, விரைவான கதியிலே செயல்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் வந்து விட்டன, 40,000 சூரியசக்தி கூரை மீதான கருவிகள் பொருத்தப்பட்டு விட்டன. இந்தத் திட்டம் இலவசமானது, மாசேற்படுத்தா மின்சக்தியை அளிப்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழ்நாடு என்ற கனவு….. இவை நமது முக்கியமான உறுதியாகும். நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே தொடர்ந்து முதன்மையை அளித்து வந்திருக்கிறோம்.

கடந்த தசாப்தத்திலே, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு என்ற வகையிலே தமிழ்நாட்டிற்கு 3 இலட்சம் கோடி ரூபாயை அனுப்பியிருக்கிறது. இந்தத் தொகை, கடந்த யுபிஏ அரசாங்கம் வாயிலாக அளிக்கப்பட்ட தொகையோடு ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்குக்கும் அதிகமானது.

இந்தப் பதினோரு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. முதன்முறையாக, கரையோரப் பகுதிகளின் மீன்பிடித் துறையோடு தொடர்புடைய சமூகங்களுக்கு, எந்தவொரு அரசும் இத்தனை கரிசனத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தியதில்லை. நீலப் புரட்சி வாயிலாக நாங்கள் கரையோரப் பொருளாதாரத்திற்கு விரிவாக்கம் அளித்து வருகிறோம்.

நண்பர்களே, தூத்துக்குடியின் இந்த மண், ஒரு புதிய புரட்சியின் சாட்சியாக ஆகிவருகிறது. இணைப்பு, மின்பரிமாற்றம், கட்டமைப்பு என இந்த அனைத்துத் திட்டங்களும், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு-வளர்ச்சியடைந்த பாரதத்தின் பலம்வாய்ந்த ஆதாரங்களாக ஆகவிருக்கின்றன. நான் மீண்டுமொரு முறை, தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்த அனைத்துத் திட்டங்களுக்குமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.


பிரதமர் நரேந்திர மோடியின் உரை தமிழில் மொழிபெயர்த்து குரல் கொடுத்தவர்: ராமஸ்வாமி சுதர்ஸன்


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories