திருபுவனத்தில் பாமக., பிரமுகர் ராமலிங்கத்தைக் கொன்ற கொலையாளிகளின் கார் சிக்கியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் ராமலிங்கத்தை கொலை செய்தவர்களின் கார் சிக்கியுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ராமலிங்கத்தைக் கொன்றவர்கள் 4 பேர், உடனே காரில் தப்பித்துள்ளனர்.
ராமலிங்கம் தனது டாடா ஏஸ் வாகனத்தில் சென்றபோது, வழி மறித்து அவரை வெட்டியவர்கள், பின்னர் காரில் ஏறித் தப்பினர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்கள் வீடுகளில் தங்க வைத்திருந்தவர்கள், பிரச்னைக்குக் காரணமானவர்கள் என 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தப்பிய கொலையாளிகள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. மேலும், ராமலிங்கத்தை கொலை செய்தவர்கள் பயன்படுத்திய ஸ்விப்ட் கார் திருச்சியில் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.