திருவையாறு : திருவையாறில் இன்று மாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா தொடங்குகிறது.
இன்று தொடங்கி, ஜனவரி 25ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் இந்த ஆராதனை விழாவில், முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சி ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம், பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தப்படும். இந்த விழாவில் நாள்தோறும் சுமார் 60 இசைக் கச்சேரிகள் நடத்தப்பட உள்ளது.