வடலூர் ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு!

vadalur jothi darshan1 - 2026

கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 148 வது ஜோதி தரிசனத்தைக் காண பக்தர்கள் பலர் குவிந்திருந்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் தை பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை பூச ஜோதி தரிசனம் இன்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு வருடா வருடம் தைப்பூசத் திரு விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு 148வது தை பூசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சத்திய ஞானசபையில் உள்ள கொடிக் கம்பத்தில் சன்மார்க்க சங்க கொடியேற்றப்பட்டது.

இதேபோல், வள்ளலார் பிறந்த மருதூரிலும் பிறகு கருங்குழி ஆகிய ஊர்களிலும் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு சத்திய ஞானசபையில் முதல் ஜோதி தரிசனம் நடந்தது. 7 திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட இந்த தரிசனத்தை தொழில்துறை அமைச்சர் சம்பத், உட்பட பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். இதனை த்தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடந்தது.

நாளை காலையும் 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. இந்த தைப்பூசத் திருவிழாவில் வெளிநாடு, வெளிமாநிலம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். ஜோதி தரிசனம் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

வடலூர் நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது. அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சபை வளாகம் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக சத்திய ஞானசபை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்யப்பட்டிருந்தது.

கடலூர் எஸ்பி. சரவணன் தலைமையில் 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தைப் பூச திருவிழாவையொட்டி வடலூர் நகரம் விழாக் கோலம் பூண்டு உள்ளது. வடலூர் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

நாளை மறுநாள் 23ம் தேதி மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத் திரு அறை தரிசனம் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories