மேடம்… இந்த மாதிரி… இங்க ஒரு கேள்வி கேக்கறாங்க…
போபர்ஸ் ஊழல் விவகாரத்துல குவாத்ரோச்சியும் வின்சத்தாவும் கமிஷன் பெற்ற பணத்துக்கு வருமான வரி பாக்கிய கட்டச் சொல்லி சம்பந்தப் பட்டவங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் போச்சுல்ல… அப்படி,
ஓட்டுக்கு லம்ப்பா ஒரு அமவுண்ட் வாங்கினதுக்கும் வாக்காளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செஞ்சா நல்லாருக்குமாம்…
அதுமூலமா வாக்குக்கு பணம் கொடுக்கறதையும் வாங்கறதையும் சட்டபூர்வமா ஆக்கிடலாமாம்…
எப்படி ஊழல் பணத்த கமிஷனா வாங்குறதை சட்டபூர்வமா அணுகுறா மாதிரி ஏற்பாடு ஆச்சோ அந்த மாதிரி…
இப்போ என்னடான்னா இந்த தேர்தல் கமிஷனையும் இவ்ளோ வேலை வாங்கி… அவங்களையும் பகைச்சிக்கிட்டு…
இதெல்லாம் தேவையான்னு கேக்கறாங்க..?!