- பனிமயமாதா விழா!-கலெக்டர் தலைமையில் நடக்கும்
- நாகூர்தர்கா விழா-20 கிலோ சந்தனக்கட்டைமுதல்வர் வழங்கினார்.
- விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை..
- மதசார்பற்ற அரசு வாழ்க…
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை தடுப்பதற்க்கான முயற்சிகளை 2018 ஆம் ஆண்டிலிருந்தே செய்கிறது மாநில அரசு.
சாத்தியமில்லாத ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்து G.O. 598, Public Department , dated 09.08.2018 என்ற அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணைப்படி ஒருவரும் இங்கு பிள்ளையார் சிலை வைக்க முடியாது .
அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடர்ந்து சில தளர்வுகளை பெற்றோம்.
அடுத்த ஆண்டு 2019 , அந்த தளர்வுகள் தொடர்ந்தாலும் , புதிய பிள்ளையார் சிலைகளுக்கு அனுமதி இல்லை என்றார்கள்.
இப்போது , “கொரானா” ஒரு சாக்கு ஆகிவிட்டது. மொத்தமாக விநாயகர் சதுர்த்தியே கொண்டாடக் கூடாது என சொல்கிறார்கள்.
இயல்பாகவே , நம் தெருக்களில் வைக்கப்படும் பிள்ளையார்களை நாம் பெரிய கூட்டமாக வழிபடுவதில்லை. அந்த தெருமக்கள் மட்டுமே , அதுவும் இப்போதைய சூழ்நிலையில் சமூக இடைவெளியுடன் கும்பிடப்போகிறோம்.
பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்க்கு கட்டுபாடுகள் விதிக்கலாம் , ஒரு பிள்ளையாருக்கு இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என சொல்லலாம். அதைவிடுத்து விநாயகர் சதுர்த்தியே வேண்டாம் என்றால்…..?!
ரம்ஜானுக்கு 5000 மெட்ரிக் டன் பச்சரிசி கொடுத்து பல் இளிக்கும் ,அதே போலி மதச்சார்பின்மை , விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் வயிறு எரிகிறது.
என்று தணியும் இந்த இந்துக்கள் மீதான வன்மம் ?!
- அ.அஸ்வத்தாமன் (பாஜக)