கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்!இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! :
– மு . க. ஸ்டாலின்.
சென்ற வாரம் திருவள்ளூர் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தீண்டாமை கொடுமையால் கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் அமிர்தம் அவர்கள் பாதிக்கப்பட்டபோது வாய் மூடி மௌனமாக இருந்தது ஏனோ திரு. ஸ்டாலின் அவர்களே? அதற்கு காரணம் தி மு க வினர் என்பதால் தானே? மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா? ஜே. கிருஷ்ணாபுர ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஒரு நியாயம், ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒரு நியாயமா? சரிதாவுக்கு பாதுகாப்பு, அமிர்தத்துக்கு மிரட்டலா?
- நாராயணன் திருப்பதி. (செய்தி தொடர்பாளர், பாஜக.,)