Home Blog Page 6034

ஜக்மோகன் டால்மியாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரான ஜக்மோகன் டால்மியாவுக்கு (வயது 75) நேற்று இரவு 9 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்டார். மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது இதய வால்வில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதனை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் ஜக்மோகன் டால்மியா அனுமதிக்கப்பட்டபோது அவரது மகன் அபிஷேக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியும் உடனிருந்தனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

சசிகுமார் நடிக்கும் வெற்றிவேல்; தஞ்சையில் படப்பிடிப்பு

 

பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை நடித்த முடித்தகையோடு தனது புதிய படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார் நடிகர் மற்றும் இயக்குனர் M. சசிகுமார்.

ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்த்ரன் தயாரிக்கும் புதிய படத்தில், வசந்தமணி இயக்கத்தில் நடிக்கின்றார்.

வெற்றிவேல் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நாயகனாக M. சசிகுமார் நடிக்க, உடன் பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். டி இமான் படத்திற்கு இசையமைக்க, SR. கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தஞ்சாவூரில் இப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இயக்குனராக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் சீ.வி.குமார்

 

புதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.

வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனமும் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால் மற்றும் கலை இயக்கம் கோபி ஆனந்த். அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் படபிடிப்பு தொடங்குகிறது.

disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு:

தமிழ் தினசரி.காம் தளம் – தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தமிழ் இணையச் செய்தித் தளமாக செய்திகளின் சுவை அறிந்த குழுவால் இந்தத் தளம் செயல்படுத்தப் படுகிறது.

தினசரி தளத்தில் வரும் தேசிய, உலகச் செய்திகள், தகவல்கள் ஏஜென்ஸி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை. உள்ளூர் செய்திகள், தகவல்கள் செய்திக் குழுவினரால் பெரிதும் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும்.

தளத்தில் வெளியாகும் படைப்புகள் கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தினசரி தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.

தினசரி.காம் தளத்தில் வரும் பின்னூட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம். இருப்பினும், தனிநபரைத் தாக்காத, கேலியாகக் குறிப்பிடாத பின்னூட்டங்களை அப்படியே வெளியிட நினைக்கிறோம். அவ்வாறு குறிப்பிடப்படும்

பின்னூட்டங்களின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தினசரி தளம் பொறுப்பேற்காது.

எனவே வாசக அன்பர்கள், தங்களின் பொறுப்பு உணர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தினசரி.காம் தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

about-us

தமிழ் தினசரி.காம் தளம் – தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தமிழ் இணையச் செய்தித் தளமாக செய்திகளின் சுவை அறிந்த குழுவால் இந்தத் தளம் செயல்படுத்தப் படுகிறது.

தினசரி தளத்தில் வரும் தேசிய, உலகச் செய்திகள், தகவல்கள் ஏஜென்ஸி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை.

உள்ளூர் செய்திகள், தகவல்கள் செய்திக் குழுவினரால் பெரிதும் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும்.

For Contact:

SSS Media

F – 101, VGN Southern Avenue,
Potheri, Chennai – 603 203
Cell No., : +91 88388 53843
Mail your suggestions to: dhinasarinews@gmail.com

contact-us

தினசரி தளம் – dhinasari.comsss media logo - 2026
SSS Media  -ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

For Contact:

SSS Media

F – 101, VGN Southern Avenue,
Potheri, Chennai – 603 203
Cell No., : +91 88388 53843
Mail your suggestions to: dhinasarinews@gmail.com

பஸ் பலகை உடைந்து சாலையில் விழுந்த பெண்: அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

 

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்தின் தென்காசி டிப்போவில் இருந்து தினமும் ஒரு பஸ் கேரள மாநிலம், புனலூர் வழியாக கொட்டாரக்கரைக்கு இயக்கப்படுகிறது. டிஎன் 72- என் 1586 பதிவு எண் கொண்ட இந்த பஸ் புனலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்தபோது, பஸ்சில் பின்புறமுள்ள சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து நின்றபோது, பஸ்சிற்குள் அமைக்கப்பட்டிருந்த மரப்பலகை திடீரென உடைந்தது.

இதனால் அந்தப் பெண் கையில் வைத்திருந்த பையோடு பஸ்சின் உள்புறத்தில் இருந்து கீழே விழுந்தார். பஸ்சின் கடைசி சீட்டிற்கு முன்புறம் என்பதால் பஸ் கடந்துவிட்டது. பஸ் ஸ்டாண்ட் என்பதால் வேறு வாகனங்கள் எதுவும் பின்தொடரவில்லை. இதனால் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரோஸ்நிற சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் ஸ்வாதி பின்னர் ஒருவாரு சுதாரித்து எழுந்து உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து வீடியோ எடுத்த நபர், தற்செயலாக இந்த காட்சியை வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ காட்சி நேற்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணைய தளங்களில் பரவியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பஸ்சை கவனிக்காமல் தடத்தில் இயக்க அனுமதித்த அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர், உதவிப் பொறியாளர், கண்டக்டர், டிரைவர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காயமடைந்த பெண் ஸ்வாதி தந்த புகாரின் பேரில் புனலூர் போலீசார், நெல்லை பஸ் டிரைவர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்திரா, ராஜீவ் தபால்தலை தடை: நாளை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியபோது…

இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்.. அனுமதி கிடைக்காவிடினும் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறினார்.

இலங்கை போர்க்குற்றம் – பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும்: ராமதாஸ்

 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் பன்னாட்டுக்குழு நடத்திய விசாரணையின் அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அல்- உசைன் நேற்று தாக்கல் செய்திருக்கிறார். இலங்கையில் திட்டமிட்டே மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டன என்பதை விசாரணை அறிக்கை தெள்ளத் தெளிவாக நிரூபித்திருக்கிறது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டும் தான் விசாரணை நடத்தப்பட்டது என்ற போதிலும், இதில் தெரியவந்துள்ள தகவல்களை அடிப்படையாக வைத்தே இலங்கையில் இனப் படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியும். இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் குண்டு பாய்ந்த காயங்களுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைகள் மீது சிங்களப்படையினர் குறி வைத்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் நடத்தியது, விசாரணை மற்றும் சோதனை என்ற பெயரிலும் தமிழ் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியது, போரின் முடிவில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன் ஆகியோர் சிங்களப்படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப் பட்டது என அனைத்து போர்க்குற்றச்சாற்றுகளும் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொடுமைகள் அனைத்தும் தமிழர்களை அழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்பதால், இனப்படுகொலை என்றும் அறிவிக்க முடியும்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டதும், இன அழிப்பு நடந்ததும் உண்மை தான் என்பது பல தருணங்களில் அம்பலமாகி வருகிறது. இலங்கை நிகழ்வுகள் குறித்து விசாரிக்க ஐ.நா. பொதுச்செயலாளர் பான்.கி.மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மேன் தலைமையிலான குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் கொத்து குண்டுகளை வீசி படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டப்ளின் நகரில் விசாரணை நடத்திய இந்திய நீதிபதி இராஜேந்திர சச்சாரை உள்ளடக்கிய மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்தது உண்மை தான் என்று தீர்ப்பளித்தது. தொடர்ந்து, 2013 ஆண்டு டிசம்பர் மாதம் 7 முதல் 10 ஆம் தேதி வரை ஜெர்மனியின் பிரெமன் நகரில் நடைபெற்ற இதே மக்கள் தீர்ப்பாய விசாரணையின் முடிவில் இலங்கையில் நடத்தப்பட்டது திட்டமிட்ட இனஅழிப்பு போர் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்காவதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையிலும் போர்க்குற்றம் நிரூபனமாகியிருக்கிறது.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மை, அதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும், இக்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை நீதிமன்றத்தில் விசாரித்தால் நீதி கிடைக்காது என்று கூறியுள்ள மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விசாரிப்பதற்காக கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறிவித்திருப்பது தான் அதிர்ர்சியளிக்கிறது. உள்நாட்டு விசாரணைக்கும், கலப்பு விசாரணைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. உள்நாட்டு விசாரணையில் முழுக்க முழுக்க இலங்கை நீதிபதிகளே இருப்பார்கள் என்றால், கலப்பு விசாரணையில் பாதியளவு இலங்கை நீதிபதிகள் இருப்பார்கள் என்பது தான் உண்மை. போர்க்குற்றச்சாற்று குறித்த நீதிமன்ற விசாரணையில் ஒரே ஒரு இலங்கை நீதிபதி இருந்தால் கூட, தமிழர்களைப் போலவே நீதியும் படுகொலை செய்யப்பட்டு விடும். எனவே, மனித உரிமை ஆணையம் நடத்திய புலன் விசாரணையில் வெளிவந்துள்ள உண்மைகள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த அட்டூழியங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையம் கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. இன்னொரு புறம் உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இதில் எது நடந்தாலும்,‘அறுவை சிகிச்சை வெற்றி… ஆனால், நோயாளி மரணம் (The Operation Was a Success, but the Patient Died)’ என்ற நிலை தான் ஏற்படும். இதைத் தடுக்க இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இந்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும், அது எந்த அளவு மனப்பூர்வமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கக்கோரி இலங்கை வடக்கு மாநில சட்டப்பேரவையில் கடந்த ஒன்றாம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றும்படி கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பா.ம.க. உறுப்பினர் கணேஷ்குமார் வலியுறுத்திய போது, அதுகுறித்து பேச ஜெயலலிதா அரசு அனுமதி மறுத்தது. அதே ஜெயலலிதா அரசு தான் இப்போது தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறையிருந்தால், 233 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்து அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம்: அக்டோபரில் பணி தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

 

சென்னை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்குத் தொடர்ந்தார். இதில் தமிழக அரசு அவரது மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறி, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு எதிராக நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார். இந்த மனு, நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை அடையாறில் உள்ள ஆந்திர சபா அருகே சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்பட உள்ளதாகவும், இந்தப் பணி 2017க்குள் முடிந்ததும் இந்தச் சிலை அங்கு மாற்றப்படும் எனவும் அரசு வழக்குரைஞர் பதில் அளித்தார் .

அப்போது, இந்த மணி மண்டபம் கட்ட ஏன் இரண்டு ஆண்டுகள் தேவை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.