சென்னை: கருத்துரிமை,பேச்சுரிமை,எழுத்துரிமை என்ற பெயரில் ஆபாச புத்தக எழுத்தாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு எழுதியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: Ø கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சிலர் பொருளாதாரஆதாயத்திற்காகவும்,தங்களை பிரபலபடுத்திக்கொள்ளவும் கொங்கு மண்டலத்தில் அமைதியாக வாழ்ந்துவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்தும்,அவர்கள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கேவலப்படுத்தியும் ஆபாச புத்தகங்களை எழுதிவருகின்றார்கள். Ø திருச்செங்கோட்டை மையமாகக் கொண்டு பெருமாள் முருகனும்,கரூரை மையமாககே கொண்டு புலியூர் முருகேசனும் இதற்கு சிறந்த உதாரணங்கள். Ø எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லாமல் பெருமாள் முருகனும்,புலியூர் முருகேசனும் காமக்கதைகள் எழுதுவதுபோல புத்தகங்களை எழுதி மரியாதையோடு வாழ்ந்துவரும் ஒரு சமுதாயத்தின்மீது தன் வக்கிரங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். Ø இதுபோல எந்தவொரு சமுதாயத்தைப்பற்றி எழுதினாலும் யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.இதை அனுமதிக்கவும் முடியாது. Ø இதுபோன்ற ஆபாச புத்தகம் எழுதும் எழுத்தாளர்களை கண்டிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்கள் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அவர்களுக்காக போராட்டம் நடத்துவதும்,அறிக்கை வெளியிடுவதும் கண்டனத்துக்குரியது. Ø மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணனும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்துஅரசனும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் இவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பற்றி கேவலமாக ஆபாசமாக விமர்சித்து புத்தகம் எழுதினால் அவர்களுக்கு இவர்கள் ஆதரவு தருவார்களா? Ø எனவே இதுபோன்ற ஆபாச புத்தகங்களை இலக்கியம் என்ற பெயரில் எழுதி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் எழுத்தாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
Hot this week
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

