எழுத்துரிமை என்ற பெயரில் ஆபாச எழுத்தை ஆதரிக்கும் கம்யூஸ்ட்களுக்கு கொ.ஜ.க. கண்டனம்

சென்னை: கருத்துரிமை,பேச்சுரிமை,எழுத்துரிமை என்ற பெயரில் ஆபாச புத்தக எழுத்தாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு எழுதியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: Ø கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சிலர் பொருளாதாரஆதாயத்திற்காகவும்,தங்களை பிரபலபடுத்திக்கொள்ளவும் கொங்கு மண்டலத்தில் அமைதியாக வாழ்ந்துவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்தும்,அவர்கள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கேவலப்படுத்தியும் ஆபாச புத்தகங்களை எழுதிவருகின்றார்கள். Ø திருச்செங்கோட்டை மையமாகக் கொண்டு பெருமாள் முருகனும்,கரூரை மையமாககே கொண்டு புலியூர் முருகேசனும் இதற்கு சிறந்த உதாரணங்கள். Ø எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லாமல் பெருமாள் முருகனும்,புலியூர் முருகேசனும் காமக்கதைகள் எழுதுவதுபோல புத்தகங்களை எழுதி மரியாதையோடு வாழ்ந்துவரும் ஒரு சமுதாயத்தின்மீது தன் வக்கிரங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். Ø இதுபோல எந்தவொரு சமுதாயத்தைப்பற்றி எழுதினாலும் யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.இதை அனுமதிக்கவும் முடியாது. Ø இதுபோன்ற ஆபாச புத்தகம் எழுதும் எழுத்தாளர்களை கண்டிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்கள் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அவர்களுக்காக போராட்டம் நடத்துவதும்,அறிக்கை வெளியிடுவதும் கண்டனத்துக்குரியது. Ø மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணனும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்துஅரசனும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் இவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பற்றி கேவலமாக ஆபாசமாக விமர்சித்து புத்தகம் எழுதினால் அவர்களுக்கு இவர்கள் ஆதரவு தருவார்களா? Ø எனவே இதுபோன்ற ஆபாச புத்தகங்களை இலக்கியம் என்ற பெயரில் எழுதி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் எழுத்தாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories