
இன்றைய பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 18 ( 01.5.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ 11.06 pm வரை பௌர்ணமி பின் ப்ரதமை.
நாள் ~ (ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ மறுநாள் அதிகாலை 4.40 am வரை ஸ்வாதி பின் விசாகம்.
யோகம் ~ ஸத்தி.
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 5.58
சந்திராஷ்டமம் — மீனம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ பௌர்ணமி.
இன்று ~ சித்ரா பௌர்ணமி /
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 01.5.2026
மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்களின் அறிமுகங்களால் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : தெளிவு பிறக்கும்.
பரணி : இன்னல்கள் குறையும்.
கிருத்திகை : ஆதரவும் கிடைக்கும்.
ரிஷபம்
கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த இழுபறியான நிலைகள் மறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : இழுபறிகள் மறையும்.
மிதுனம்
எதிர்கால செயல் திட்டங்களை வடிவமைப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். காப்பீடு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் உண்டாகும். மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்டதிசை : வடக்கு
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
கடகம்
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
பூசம் : ஆதாயம் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆர்வமின்மை குறையும்.
சிம்மம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாக பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கைகூடும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : துரிதம் உண்டாகும்.
உத்திரம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
கன்னி
மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பயணம் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். அடமான பொருள்கள் பற்றிய கவலைகள் ஏற்படும். தனவரவுகள் மூலம் வங்கி இருப்புகள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.
சித்திரை : வரவுகள் மேம்படும்.
துலாம்
உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றம் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : மாற்றம் ஏற்படும்.
விசாகம் : பயணங்கள் கைகூடும்.
விருச்சிகம்
வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரங்களில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.
கேட்டை : அலைச்சல்கள் மேம்படும்.
தனுசு
தன வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சில பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : முடிவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
மகரம்
பணி புரிவோர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். வீடு மற்றும் மனை ஆகியவற்றால் லாபம் ஏற்படும். நிறுவனங்களில் நிர்வாக திறமை வெளிப்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : உதவிகள் சாதகமாகும்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
கும்பம்
எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பணி சார்ந்த முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். உறவுகளிடத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். அலுவலகப் பணிகளை பகிராமல் மேற்கொள்வது நல்லது. பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
அவிட்டம் : ஆதாயகாரமான நாள்.
சதயம் : செலவுகள் உண்டாகும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
மீனம்
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வேலையாட்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகமான செயல்பாடுகள் பிரச்சனைகளை தவிர்க்கும். தடைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : விவேகம் வேண்டும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!













