இன்றைய பஞ்சாங்கம் – ஏப்.27
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 14 (27.4.2024 ) சனிக்கிழமை*
வருடம் ~ க்ரோதி {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த* ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { *மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 7.30 am வரை த்ருதியை பின் சதுர்த்தி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ கேட்டை
யோகம் ~ பரிகம்
கரணம்~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.00
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ சதுர்த்தி
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..
இன்றைய (27-04-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாகி நிறைவேறும். கடன் தொடர்பான விஷயத்தில் நிதானம் வேண்டும். வியாபாரப் பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : வதந்திகள் நீங்கும்.
கிருத்திகை : மந்தமான நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : பொறுப்பு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனைகளில் இருந்துவந்த சஞ்சலம் விலகும். உத்தியோகப் பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : சஞ்சலம் விலகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
குழந்தைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். மற்றவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளியூர் வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் உபரி வருமானம் குறித்த சிந்தனை மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : சிந்தனை அதிகரிக்கும்.
பூசம் : ஆதாயம் மேம்படும்.
ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனை அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புதுவிதமான தெளிவு ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். பிள்ளைகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூரம் : தெளிவு ஏற்படும்.
உத்திரம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
நுணுக்கங்களை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : உதவி கிடைக்கும்.
விசாகம் : நன்மை உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நுட்பமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : சிந்தனை மேம்படும்.
கேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
வெளியூர் பயணத்தால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பவர்கள். கல்வியில் புதுமையான வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதம் தோன்றி மறையும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மூலம் : சோர்வுகள் உண்டாகும்.
பூராடம் : வாய்ப்பு கிடைக்கும்.
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
மறைமுகமான சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். கடன்கள் தீர ஆலோசனை கிடைக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : முடிவுகள் பிறக்கும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழல் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பயணம் மேம்படும். வருமானத்தை உயர்த்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : உயர்வான நாள்.
சதயம் : பயணம் மேம்படும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
தள்ளிப்போன சுபகாரியம் கைகூடிவரும். உறவினர்களின் வழியில் மதிப்பு ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சிவப்பு நிறம்
பூரட்டாதி : மதிப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : நெருக்கம் அதிகரிக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்