இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேசியப் பாடலும் தேசிய கீதமும் இணைந்து இசைக்கப்படும் போதெல்லாம், தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவத்தில் உள்ள அனைத்து ஆறு சரணங்களும் முதலில் இசைக்கப்பட வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றம், ஆளுநர்களின் உரை மற்றும் பிற அதிகாரபூர்வ நிகழ்வுகள் போன்ற முக்கிய அரசு விழாக்களில் இந்த முழுமையான ஆறு சரணங்கள் கொண்ட வடிவம் பாடப்படவோ அல்லது இசைக்கப்படவோ வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களின் கீழ், குடிமை விருது வழங்கும் விழாக்கள், அதிகாரப்பூர்வ அரசு விழாக்கள் மற்றும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் பிற நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் வருகை தரும்போதும் அங்கிருந்து புறப்படும்போதும் தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் இசைக்கப்பட வேண்டும். மேலும், அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவதற்கு முன்னரும் பின்னரும், அணிவகுப்பின்போது தேசியக் கொடி கொண்டு வரப்படும்போதும் இது இசைக்கப்பட வேண்டும். தேசியப் பாடல் இசைக்கப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் ‘கவன நிலை’யில் (attention posture) நேராக நிற்க வேண்டும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கடந்த 9ம் தேதியிட்ட அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிகாரபூர்வ அரசின் முக்கிய விழாக்களில், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தேசியப் பாடலான வந்தேமாதரம் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலப் பாடல் இவற்றுடன் பாட நேர்ந்தாலும், தேசியப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என்பதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதனுடன், தேசியப் பாடலையும் மாநிலப் பாடலையும் எப்படி உச்சரிக்க வேண்டும், எத்தனை கால அவகாசத்துக்குள் பாடப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான அறிக்கையையும் அளித்துள்ளது.
தவெக அரசு 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 84 ஏக்கர் திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க எடுத்துள்ள முடிவு துரதிருஷ்டவசமானது. இந்து சமயத்துக்கு எதிரானது. இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து, தற்போது ராஜினாமா செய்துவிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூரில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் பேசிய போது, இனாம் ஒழிப்பு சட்ட நடைமுறையை, திருக்கோவில்களின் சொத்துக்களில் கொண்டு வர வேண்டும்; உழுதவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதாக என்று குறிப்பிட்டுப் பேசினார். குறிப்பாக கரூரில் உள்ள திருக்கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து கட்டியவர்களுக்கே அந்நிலம் சொந்தம் என உத்தரவிட வேண்டும் என பேசினார். அவர் பேசி முடித்தவுடன் தமிழக அரசு, அந்த நிலங்களைப் பதிய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இது ஹிந்து கோவில்களுக்கு த. வெ. க அரசு செய்துள்ள பச்சை துரோகம் என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
திருக்கோவில்களின் அசையா சொத்தை, அது ஒரு சிறிய அளவில் இருந்தாலும் கூட இந்து சமயஅறநிலையத்துறைக்கே விற்க அனுமதி இல்லாத போது த.வெ.க வின் தமிழக அரசு என்ன அடிப்படையில் பத்திரம் பதிய இருந்த தடையை நீக்கி உத்திரவிட்டுள்ளது என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. எனவே ஜோசப் விஜய் தலைமையிலான தவெக., அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
”கோவில் நிலங்களை எந்த அடிப்படையில் தனியாருக்கு பட்டா வழங்கினர் என்பது குறித்து முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை பீளமேட்டில் உள்ள பாஜக., அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தார்.
கரூர் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் நிலத்தை, அவசர கதியில், அறநிலைய துறை இணை ஆணையர் பரிந்துரையில் ஒரே நாளில், தனியாருக்கு பட்டா வழங்கி உள்ளனர். கோவில் நிலங்களுக்கு எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து முதல்வரும், அறநிலையத் துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும். கோவில் நிலங்களை தனியாருக்கு வழங்க அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. கோவில் சொத்துக்களை மீட்கும் போராட்டத்தை பா.ஜ., நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
கரூர் கோவில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…
கோவிலுக்கு சொத்துக்களை தானமாக வழங்கி பக்தியை பண்பாட்டை வளர்த்தார்கள் அந்த கால ஆட்சியாளர்கள்!இந்த கால ஆட்சியாளர்கள் கோவில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அள்ளி கொடுத்து கோவிலை அழிக்க துணிகிறார்கள் சுயநலவாத ஆட்சியாளர்கள்!
கரூரில் நான்கு பிரதான கோவில்களின் 3084 ஏக்கர் நிலங்கள் கோவிலின் பொருளாதாரம் மற்றும் கோவிலுக்கு சேவை செய்யும் மக்கள் வாழ்வதற்கு தரப்பட்டவை ஆகும். ஆனால் காலபோக்கில் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி பணத்தாசை காட்டி சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். கோவிலுக்கு தொண்டு செய்தவர்களுக்கு உதவியாக கொடுத்த கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அனுபவிப்பவர்களுக்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே ஆக்கிரமிப்புகள் தர்மத்திற்கு எதிரானது.
ஆனால் ஆக்கிரமித்தவர்கள் சொத்துக்களை சொந்தம் கொண்டாட விதித்த தடையை இந்து சமய அறநிலையத்துறை தற்போது விலக்கிக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அரசின் நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது என்று 200-க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்த மாநில அரசு கோயில் நிலங்களை கூறுபோட்டு தாரை வார்க்க என்ன அருகதை உள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநில அரசின் இந்த அநியாய செயலை உரிய முறையில் நீதிமன்றத்தில் இந்து முன்னணி எடுத்துரைத்து கோயில் சொத்துகளை பாதுகாக்க இந்து முன்னணி தொடர்ந்து போராடும். கோயில் சொத்துகள் பறிபோவதற்கு துணைபோகும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறது. கோயில் சொத்துகளை தாரைவார்க்கும் அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது!
நூல் பெயர்: அருந்தமிழ் 50 நூல் வகை: புதுக்கவிதைகளின் தொகுப்பு ஆசிரியர் பெயர்: ஜெயஸ்ரீ எம்.சாரி வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்- சென்னை ஆண்டு: எப்ரல் 2026 நூல் வாங்க அலைபேசி: 9380530884 விலை: 100 ரூபாய்
— திறனாய்வு: முனைவர் மா. தாமோதரகண்ணன் —
கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.
“சொற்கள் நடந்தால் உரைநடை சொற்கள் நடனம் ஆடினால் கவிதை” என்று சொல்லுவார்கள். அந்த வகையில் கவிஞர் தன் மனதில் இயல்பாக எழுந்த உணர்ச்சிகள் முத்தமிழ்ச்சொற்களாகக் கவிதையாக நடனமாடியதை நூல் முழுவதும் காணலாம்.
மரபுக்கவிஞர்கள் பலர் இலக்கண வரம்பிற்கு உட்பட்டு சொல்லின் கட்டுப்பாட்டில் இயங்கி விடுவதைக் காணலாம். புதுக்கவிஞர்களுக்கு அத்தகைய இலக்கண வரம்பெல்லாம் கிடையாது. புதுக்கவிஞர்களின் கட்டுப்பாட்டில் சொற்கள் இருக்கும்.
மரபுக் கவிஞர்கள் சொல்லின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். புதுக்கவிஞர்கள் தான் நினைக்கின்ற சிந்தனையும் அதனை அப்படியே வெளிப்படுத்தும் சொற்களும் இணைந்து இயல்பாக வந்துவிடும். அதை அப்படியே பதிவு செய்து வெற்றியும் பெற்று விடுவார்கள்.
கவிஞர் நினைப்பது போலவே அப்படியே வாசகரும் நினைக்க வேண்டும்.வாசகர் கவிதை அனுபவத்தை கவிஞர் அனுபவித்ததைப் போலவே அனுபவிக்க வேண்டும். அப்பொழுது தான் கவிதை வெற்றி பெறும்.இந்நூலாசிரியரும் தன்னுடைய முன்னுரையில் “என் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்துகளாக முயற்சித்தேன் ” என்று எழுதி உள்ளார். நூலின் தொடக்கத்தில் மூன்று வகையான உட்தலைப்புகளுடன் தமிழ் வணக்கத்தோடும் வாழ்த்தோடும் கவிதையைத் தொடங்கியுள்ளார்.”ஏற்றமாய் இருந்தாலும் செருக்கு அற்றவள் “
“ஞானத்தால் தமிழர்கள் ஞானத்தை வெல்வதை “என்னும் பொன் வரிகளால் தமிழன்னையை வணங்கியும் புகழ்ந்தும் உள்ளார்.
இந்நூலாசிரியர் தன் படைப்புகளில் எதுகை, மோனை, இயைபு, அணி போன்ற இலக்கிய நயங்களுக்கு கூறுகளுக்கெல்லாம் ஆசைப்படவில்லை அதேவேளை ஓசைப்படாமல் இயல்பாக அத்தகைய இலக்கியக் கூறுகள் வருவதை அப்படியே பதிவு செய்துள்ள பாங்கும் போற்றத்தக்கது. இக்கவிதை நூல் வாசகர் மனதில் நிச்சயமாக இடம் பெறும். காலமும் அதனை மறக்காமல் இந்நூலை அசை போடும்.
திருக்குறளைப் புதியக் கண்ணோட்டத்தில் இரசித்துள்ளார். திருக்குறளில் காணப்படும் எதிர் எதிர் அதிகாரத்தில் தலைப்புகளைக் கொண்டுள்ள திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.”எதிரெதிர் தலைப்புகளில் எதிரொலிக்கும் வார்த்தைகளாமது கல்வியின் பயனுமாம் கல்லாமையின் நிலையுமாம் ” என்று பாடியுள்ளார். மேலும் மருந்து, நட்பாராய்தல் அதிகாரங்களின் தலைப்பிலான திருக்குறளுக்கும் புதுக்கவிதை நடையில் புதுமையாய் விளக்கம் தந்துள்ளார்.”உலகியலுக்கு ஒவ்வாத நட்பு நலம் அன்று ” என மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். “நேர விரயமானாலோ வாழ்வும் விரயமே ” என்று திருக்குறளைப் பற்றி அருமையாகத் தமிழ் வார்த்தைகளில் செதுக்கியுள்ளார்.
சிறுவயதில் தன்னை போற்றி வளர்த்த வானொலிக்கு நன்றி சொல்லி “என்னை எழுப்பும் அலாரமாம் வானொலி ” என்று சுவைபட கவிதை எழுதியுள்ள பாங்கு நன்றாக உள்ளது. புதுக்கவிதையில் சோதனை முயற்சியாக அந்தாதி நடையில் மூன்று தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளை எழுதியுள்ளார்.
“காலம் காட்டும் கண்ணாமூச்சி ” என்னும் தலைப்பில் “வாய்ப்பினையும் கொடுத்து வினையும் வைப்பான்;வைத்த வினையின் வழியையும் விளக்குவான்”என்னும் வைர வரிகள் வாழ்வியலை உணர்ந்து கொள்ளச் சொல்லும் அழகான வரிகளாக அமைகிறது. “ஆளுமை கொள் ” என்னும் கவிதையானது அகர வரிசையில் அமைத்து நற்செய்திகளை உரைக்கும் ஆத்திச்சூடி கவிதை என்றும் புகழ்ந்துரைக்கலாம்.
“வாரச்சந்தை” பற்றி பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் சுவாரசியங்களைத் தொகுத்து “சில்லறைத்தனமாய் பேரம் பேசுவோரும் கூடும் இடமாம் சில்லறையுடன் சிரிப்பையும் இலவசமாய் பெறக்கூடிய இடமாம் “என்று கலகலப்பாக எழுதியுள்ளார்.
“தோல்வியின் வலி” அனைவருக்குமான தன்னம்பிக்கை வெளிச்சம் தரும் கவிதையாக வலம் வருகிறது.”தத்தி தத்தி நடக்க முயலும் குழந்தையின் தோல்வியோ பாதங்களை வலிமையாக்கும் “, “மிதிவண்டி கற்கும் போது ஏற்படும் சரிவே மீண்டும் முயல வழிவகுக்கும்” என்று பாடியுள்ளார்.
காந்தியடிகளின் குடில் பற்றிய வரலாற்றுச் செய்திகளை உள்வாங்கிய கவிதை காந்தியடிகள் வாழ்ந்த காலச்சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.தோழிகள் பேசிக் கொள்வது போல நாட்டுப்புற மெட்டில் “மண்வாசனை” என்னும் கவிதை மண்வாசனைக் கமழும் கவிதையாக இடம் பெறுகிறது.
“பிறக்கும் சொற்களால் பிறரும் மகிழட்டுமே” என்று மனித நாக்கு பற்றிய கவிதை நயமாக உள்ளது. நேரடியாக நட்புப் பாராட்டுகின்ற பழக்கம் குறைகிறது.அருகருகே அமர்ந்திருந்தாலும் அலைபேசியில் தனித்தனியே மூழ்கி விடும் அவல நிலையை ஒரே வரியில் “முகநக நட்பை முகநூல் முந்துகிறதே” என்று ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“செவிகள் திறக்கட்டும்” கவிதையில் இயற்கையில் எழுதும் ஆயிரக்கணக்கான ஒலிகளை இவ்வுலகில் கேட்டுக் கேட்டு மகிழ்வுறவே சொல்கின்றார். அக்காலத்தில் திருபாவையாக விளங்கிய ஆண்டாள் பாடிய திருப்பாவை நூலின் பெருமைகளைச் சொல்லும் கவிதை இந்நூலுக்கு அணிசேர்க்கிறது.
புத்தம் புதிய சிந்தனையில் “முதியோர் இல்லம்” இருப்பதால் முதியவர்கள் பெரும் நன்மைகளை நயமாய் பட்டியலிடுகிறது. “நூலினைப் பகுத்துணர் ” கவிதை நூல் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ” சுட்டிகளின் சேட்டைகள் “கவிதைகள் படிக்கும் அனைவரின் பழைய நினைவுகளை மீட்டெடுத்து இரசிக்க வைக்கிறது.
“அடுக்குத்தொடர் கவிதை” தாய்மையின் சிறப்புகளை ஒவ்வொரு அடியிலும் அடுக்குத்தொடர் சொல்லாட்சிகள் அமைந்து நல்லதொரு புதுக்கவிதை உத்தியாக இடம் பெற்றுள்ளது. “தீப்பொறி ” கவிதையில் இயைபுத்தொடையில் தீப்பொறியாய் படிப்பவர் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டும் சொற்கள் இடம் பெறுகிறது.
“பாரதத்தின் தீ பாரதி” என்னும் கவிதையில் இரத்தினச் சுருக்கமாகப் படிப்பவர் மனதில் தைக்கும் படியாகச் சொற்களை அமைத்துள்ளார். “நவீனமாய் ஒரு தாலாட்டு” கவிதையில் பாடுபொருளும் பாடிய விதமும் நவீனப் புதுக்கவிதையாகப் புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.
வேலைக்காரி பாடுவதாக “வீடு முழுக்க விளையாட்டு பொம்மைகள் தான் உன்னோடு விளையாடத் தான் ஒருத்தரும் இல்லையே” என்று ஏங்குகிறாள்.
கதிரவன் தன் கதிர்வீச்சால் ஏற்படுத்தும் வர்ணஜாலங்களை “கரம் இல்லா ஓவியன்” என்னும் தலைப்பில் பாடியுள்ளார். குறிஞ்சி நிலம் முல்லை நிலம் பற்றியும் பாடல்களில் விளக்கி எழுதியுள்ளார். “அம்மையின் வயிற்றில் ஆரம்பித்த பயணம் “, “சுடர் தீபமாய் அக இருளை அகற்றுவதால் இன்பமுடன் என் பயணங்கள் என்றும் முடிவதில்லை”என்று கவிஞர் பயணங்கள் முடிவதில்லை என்று பாடிய படியே அவருடைய தமிழ்க் கவிதை பயணம் இந்நூலின் வழியாக தொடரும் என்றும் தொடரட்டும் என வாழ்த்துகின்றோம். அருந்தமிழ் நூல் அருமையான தேன் தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய நூல்.
உளவியல் போர் நடவடிக்கை என்பது ராணுவம் மற்றும் உளவு துறை தந்திரங்களில் ஒன்று. பல நாடுகள் இதை சிறப்பாக பயன்படுத்துவதில் தேர்ந்தவை. தவறான செய்திகளை பரப்புவதன் மூலம் எதிரி நாடுகளில் உள்ளவர்களை குழப்பி சந்தேகப்பட வைப்பது அதில் அடங்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா பாகிஸ்தானிடையே அதிகார பூர்வமற்ற, அரசு முறை சாராத, இரண்டாவது வழித்தட பேச்சு வார்த்தை கொழும்புவில் நடந்தது என்ற பொய்யான செய்தி. இது உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
சில அப்பாவி ஊடகங்களும், எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் ஊடகங்களும், சில அரசியல்வாதிகளும், பல சமூக ஊடகவியலாளர்களும் அந்த செய்தியின் உண்மையை சோதிக்காமல் தங்கள் பெயரிலோ அல்லது பெயர் இல்லாமலோ விமர்சித்து வருகின்றன. அதை பரப்பி வருகின்றன.
லண்டனிலிருந்து இயங்கும் புகழ்பெற்ற அறிஞர்கள் அமைப்பு ஒரு தசாப்ததிற்கும் மேலாக தெற்காசிய மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதில் சிந்தனையாளர்கள், ஓய்வு பெற்ற ராஜதந்திரிகள், ராணுவம் மற்றும் உளவுத்துறை சேர்ந்தவர்களும் அரிதாக சில அரசியல்வாதிகளும் பணியில் உள்ள அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். அந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனாவில் இருந்தும் பலர் கலந்து கொள்வார்கள்.
அது போன்ற மாநாடுகள் இரண்டாம் வழித்தட பேச்சு வார்த்தைகளில் வராது என்று இந்திய அயலுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெளிவுபடுத்தி உள்ளார். இரண்டாம் வழித்தட பேச்சு வார்த்தை என்பது இரு தரப்பு அல்லது பல்முனை பேச்சு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக , சம்பந்தப்பட்ட அரசுகளின் மறைமுக ஒப்புதலுடன் நடத்தப்படுவது. பல நாடுகளுக்கு அதுபோன்ற பேச்சுவார்த்தை நடத்த நாம் களம் அமைத்துள்ளோம். ஆனால் இரண்டாம் வழித்தட பேச்சுவார்த்தை அரை டஜன் நாடுகள் சூழ்ந்திருக்க நடத்தப்படுவதில்லை.
மேற்சொன்ன கருத்தரங்கு இந்தியா உட்பட உலகம் எங்கும் நடத்தப்படும் வழக்கமான ஒன்று. இதுபோன்ற நிகழ்வுகளில் பல முறை கலந்து கொண்ட ஒருவர் இதைப் பற்றி மிக சரியாக ‘பேச்சுக் கடைகள்’ (Talk Shops) என்று குறிப்பிட்டுள்ளார். அவை ரகசிய பேச்சு வார்த்தைகள் கிடையாது. இரண்டாம் தடப்பேச்சுவார்த்தை போல் குறிப்பிட்ட நோக்கம் இல்லாதவை. அதே வேளையில் அவை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் கொண்டதாக நடத்தப்படுபவை. அதில் கலந்து கொள்பவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்வார்கள்.
வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநாடு இம்முறை கொழும்புவில் நடத்தப்பட்டது. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் உரையாற்றினார்கள். நான் ஒரு அரங்கில் பேசி விட்டு கிளம்பி விட்டேன். பக்குவப்பட்ட பார்வையாளர்களுக்கு அந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி ஆவல் எழுவது இயல்பு. ஆனால் ஏன் பேசினாய் , பேச வேண்டிய தேவை / நோக்கம் என்ன என்று கேட்பது பொருத்தமற்றது.
இந்தியா – பாகிஸ்தான் தொடர்புடைய எந்த விஷயமும் இந்தியாவில் தீவிரமான உணர்ச்சியை தூண்டக் கூடியதாக இருக்கிறது. இதுபோன்ற மாநாடுகளிலும் அது எதிரொலிக்கிறது. இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக தொடர்பு கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் மிகவும் ஆவலாக இருக்கிறது. ஆனால் இந்தியா உறுதியாக மறுத்து வருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டில் இரட்டை தன்மை கிடையாது.
பாகிஸ்தான் உடனான உறவு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து போயிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதை உடைத்தார். 2014 இல் தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பை அழைத்தார். அதன் பிறகு ஓராண்டு கழித்து லாகூருக்கு (நவாஸ் மகள் நிச்சயதார்த்தத்திற்கு) தானே சென்று நட்புக் கரம் நீட்டினார். ஆனால் கட்டுப்பாடற்ற குணம் கொண்ட அண்டை நாடு அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் தனது வழக்கமான பாணியில் ஊரி , புல்வாமா பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் பதிலளித்தது. இந்தியாவில் யாருடன் மோதுகிறோம் என்று அது புரிந்து கொள்ளவில்லை. மோடி அரசு பாகிஸ்தானுடன் எல்லா விதமான நேரடி உறவையும் துண்டித்து விட்டது. அதனால் பாகிஸ்தான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.
கிரிக்கெட் போன்று, விளையாட்டுத் துறை தவிர்த்து வேறெந்த வகையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வதில்லை. இது பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா எல்லா நாடுகளுடன் ,அது சிறிதோ பெரிதோ, நல்லுறவு வைத்துக் கொண்டு பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்ள மறுப்பதன் மூலம் தன்னை அலட்சியப்படுத்தி, அற்பமாக நடத்துவதாக நினைக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மோடி தலைமையில் பெரிய நாடுகளுக்கு இணையாக நாம் வளர்ந்து வருகிறோம். இந்த நேரத்தில் மேற்குப் பக்கம் உள்ள தோல்வி அடைந்த அண்டை நாட்டுடன் இந்தியா தேவையற்ற சச்சரவை தவிர்க்க முயல்கிறது. அது மட்டுமல்ல 2025 ஏப்ரலில் பெகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாக வைத்து கொண்டு இருப்பதையும் அதன் மூலம் இந்தியாவை மீண்டும் மீண்டும் தாக்கலாம் என்ற அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதும் உறுதிப் பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையில் பாகிஸ்தான் உடனான உறவை மீண்டும் தொடங்குவதில் இந்தியாவுக்கு அவசரமும் இல்லை ஆர்வமும் இல்லை. பெகல்காமுக்கு பிறகு இந்தியா சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு உள்ளே இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை வெற்றிகரமாக அழித்தது. இந்தியா நினைத்ததை சாதித்த பிறகு தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. பாகிஸ்தானுடன் இனி இதுதான் ‘புதிய நடைமுறை’ என்று மோடி அறிவித்து விட்டார். அது இப்போது வரை உறுதியாக தொடர்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் ஐநா பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்த போவதாக பேசி உள்ளார். ஆனால் நடைமுறையோ வேறு விதமாக இருக்கிறது. பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் கூட அதற்கு விழிப்போடு இருக்கும் இந்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளே காரணம்.
பாகிஸ்தான் வழக்கம் போல் உலகளாவிய பயங்கரவாதத்தின் விளைநிலமாகவே இருக்கிறது. பெகல்காம் தாக்குதலுக்கு காரணமானவனும் லக்சர் இ தொய்பாபின் தலைவனுமான சைபுல்லா கசூரி பாகிஸ்தானின் சுதந்திரமாக திரிவது மட்டுமல்லாமல் ‘காஷ்மீர் நடவடிக்கை’யில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு உள்ளான். அவன் காஷ்மீர் விஷயத்தை ‘சூடாக’ வைத்திருக்க விரும்புகிறான். பயங்கரவாதத்தில் அவனுக்கு போட்டி அமைப்பான ஜெய்ஸ் இ முகம்மத் துபாயில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக கூட ஆள்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் பணத்தையும் போதை பொருட்களையும் தொடர்ந்து காஷ்மீருக்குள் அனுப்பி கொண்டே இருக்கிறது. கடத்த ஆண்டு பயங்கரவாதிகளை உள்ளே அனுப்ப ஐந்து முறை முயன்றுள்ளது. அந்த முயற்சிகளை இந்திய பாதுகாப்பு படைகள் தடுத்து நிறுத்த , எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். உட்பகுதியில் நடந்த வேறொரு நடவடிக்கையில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் இருவர் உயிருடன் பிடிபட்டனர்.
அந்த இருவரும் மின்னணு சோதனை சாதனங்களுக்கு சிக்காமல் இருக்க மாற்று கருவிகளை வைத்திருந்தார்கள். பாகிஸ்தானில் உள்ள அவர்களது தலைவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தியாவுக்குள் நீண்ட காலம் தங்கியிருந்து, இங்குள்ள இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து அவர்களை கொண்டு பயங்கரவாத செயல்களை நிகழ்த்த வேண்டும் என்பது அவர்களது திட்டம்.
ஆன்லைன் மூலமாகவும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்ட மூளைச்சலவை செய்து வருகிறது. அதற்காக டி ஆர் ஆர் (புரட்சிகர எழுச்சி) , ஜி யூ வி (எதிர்ப்பின் ஆன்மா) என்ற ஆன்லைன் பத்திரிகைகளை பயங்கரவாத அமைப்புகள் மூலம் நடத்தி வருகிறது. இந்திய உளவுத்துறையினர் அவற்றின் ஐபி விலாசத்தை தேடி பார்க்க அவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்வதும் அமைதியை சீர்குலைப்பதும் காஷ்மீரை பிரிக்க வேண்டுமென தூண்டுவதும் அவற்றின் முக்கிய நோக்கம்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலையற்ற அமைதி உடன்படிக்கைக்கு மேடை அமைத்ததால் பாகிஸ்தான் தன்னை அமைதி தூதுவனாக பீற்றிக்கொள்ள முயல்கிறது. ஆனால் அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் ‘பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது’ என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர், தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்தவர்.
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..
இன்றைய (11-07-2026) ராசி பலன்கள்
மேஷம்
மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும்.
அதிர்ஷ்டதிசை : தெற்கு அதிர்ஷ்டஎண் : 2 அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீல நிறம்
மற்றவர்களை நம்பி வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
மிதுனம்
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும். திருவாதிரை : புரிதல் உண்டாகும். புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
கடகம்
உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடினமான பணிகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான செயல்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். பூசம் : தெளிவுகள் பிறக்கும். ஆயில்யம் : சாதகமான நாள்.
சிம்மம்
தொழில்நுட்பக் கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கிப் பணிகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட இலக்குகள் உருவாகும். திட்டமிட்டு செயல்களில் எண்ணிய முடிவுகள் உண்டாகும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆர்வம் அதிகரிக்கும். பூரம் : முடிவுகள் கிடைக்கும். உத்திரம் : இழுபறி குறையும்.
கன்னி
எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். கால்நடைகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும். அஸ்தம் : புரிதல்கள் அதிகரிக்கும். சித்திரை : மாற்றம் உண்டாகும்.
துலாம்
வியாபார முன்னேற்றத்திற்கான அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிர்வாக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். அரசு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும். சுவாதி : சேமிப்புகள் குறையும். விசாகம் : கவனம் வேண்டும்.
விருச்சிகம்
ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டதிசை : தென்மேற்கு அதிர்ஷ்டஎண் : 2 அதிர்ஷ்டநிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும். அனுஷம் : மகிழ்ச்சியான நாள். கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
தனுசு
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தூரத்து உறவினர்களில் வருகைகள் ஏற்படும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவ கருத்துக்கள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும். பூராடம் : ஆதாயம் ஏற்படும். உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
மகரம்
சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் பிறக்கும். பணிபுரியும் இடத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். புதிய செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வேலையாட்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : மாற்றம் பிறக்கும். திருவோணம் : ஆர்வம் ஏற்படும். அவிட்டம் : வேறுபாடுகள் விலகும்.
கும்பம்
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அந்நிய தேச பயண வாய்ப்புகள் சாதகமாகும். பிற இன மக்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும். சதயம் : வாய்ப்புகள் சாதகமாகும். பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
மீனம்
வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சிந்தனைப் போக்கில் இருந்த குழப்பங்கள் விலகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணம் மேம்படும். தள்ளிப்போன சில ஒப்பந்தம் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : குழப்பங்கள் விலகும். உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் ஏற்படும். ரேவதி : ஒப்பந்தம் சாதகமாகும்.
தினம் ஒரு திருக்குறள்
thiruvalluvar
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்! முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!! ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்! நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!! உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!
ஆனி ~ 26 ( 10.7.2026 ) வெள்ளி கிழமை. வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் } அயனம்~ உத்தராயணம் ருது ~ க்ரீஷ்ம ருது. மாதம் ~ ஆனி மாதம் { மிதுன மாஸம் } பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி~ இரவு 2.06 AM வரை ஏகாதசி பின் த்வாதசி. நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை. நட்சத்திரம்~ காலை 10.07 AM வரை பரணி பின் க்ருத்திகை. யோகம் ~ சூலம். கரணம் ~ பவம் / பாலவம். அமிர்தாதியோகம் ~ சுபயோகம். நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM. ராகு காலம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON. எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30 PM. குளிகை ~ காலை 7.30 ~ 9.00 AM. சூரிய உதயம் ~ காலை 6.00. சந்திராஷ்டமம் ~ மாலை 3.45 PM வரை கன்னி பின் துலாம். சூலம் ~ மேற்கு பரிகாரம் ~ வெல்லம் ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி. இன்று ~ ஸர்வ ஏகாதசி
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 10.7.2026
மேஷம்
உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : வருத்தங்கள் நீங்கும். பரணி : முன்னேற்றமான நாள். கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீல நிறம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பும் ஏற்படும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.
அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாக செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : கையிருப்புகள் அதிகரிக்கும். பூசம் : மாற்றம் ஏற்படும். ஆயில்யம் : முடிவுகள் பிறக்கும்.
சிம்மம்
எதிலும் திருப்தி அற்ற மன நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும். பூரம் : முன்னேற்றம் ஏற்படும். உத்திரம் : திறமை வெளிப்படும்.
கன்னி
புதிய தொழில் நுட்ப பொருட்களை வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும். அஸ்தம் : வெற்றி கிடைக்கும். சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
துலாம்
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன் பொருட்களில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் புதுமையான அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும். பூராடம் : முடிவுகள் பிறக்கும். உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.
மகரம்
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும். திருவோணம் : ஆர்வம் ஏற்படும். அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
மருத்துவத் துறையில் இருப்பதற்கு மேன்மை ஏற்படும். சிற்ப பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். தாயின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வாசனை திரவிய பொருள்களால் லாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : மேன்மை ஏற்படும். சதயம் : அமைதி உண்டாகும். பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
மீனம்
சிந்தனை போக்கில் தெளிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் மாற்றம் பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!! உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!
உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026 : ரவுண்ட் 16 கடைசி நான்கு ஆட்டங்கள்
போர்ச்சுகல் அதிர்ச்சித் தோல்வி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாலு ஆட்டங்கள் ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடந்தது. இதில் போர்ச்சுகல் அணி ஸ்பெயின் அணியிடல் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இது போட்டியின் ஒரு அப்செட் தோல்வியாகும். அதுபோல போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்க அணி பெல்ஜியம் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. போட்டியை நடத்தும் மூன்று நாடுகளும் போட்டியில் இருந்து தோல்வியடைந்து விலகிவிட்டன.
காலியிறுதிக்கு முந்தைய கட்டத்தின் ஐந்தாவது ஆட்டம் ஆர்லிங்க்டனில் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. போர்ச்சுகல், ஸ்பெயின் அனிகள் மோதின. இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டநேர இறுதி வரை சென்றன. ஆனால் 91ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் மிக்கல் மெரினோ கோல் அடித்தார். “லா ராஜா” என ஸ்பானிஷ் மொழியில் அழைக்கப்படும் ஸ்பேயின் அணி இந்த ஒற்றை கோலால் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டொ இந்தத் தோல்வியால் மனமுடைந்து போனார்.
ஆறாவது ஆட்டம் அமெரிக்கா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையே சியாட்டிலில் ஜூலௌ 6ஆம் தேதியன்றெ நடைபெற்றது. இதில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏழாவது ஆட்டம் அர்ஜெண்டைனா, எகிப்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடந்தது. ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்திலும் 67ஆவது நிமிடத்திலும் கோலடித்து எகிப்து அணி கோலடித்து முன்னணியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அர்ஜெண்டைனா அணியின் ரொமெரோ (79ஆவது நிமிடம்), மெஸ்ஸி (83ஆவது நிமிடம்), ஃபெர்னான்டஸ் (92ஆவது நிமிடம்) கோல் அடித்து அர்ஜெண்டைனா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறவைத்தனர். இந்த ஆட்டத்தில் நடுவர்கள் எகிப்து அணிக்கு எதிராகவும் அர்ஜெண்டைனா அணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும் கோல் போடவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.
காலிறுதி ஆட்டங்கள்
ஜூலை 9இல், ஃபாக்ஸ்பர்ரோவில் ஃபிரான்சு, மொராக்கோ அணிகளுக்கு இடையேயும்
ஜூலை 10ஆம் நாள் இங்க்லேவுட்டில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயு
ஜூலை 11இல், மியாமியில் இங்கிலாந்து, நார்வே அணிகளுகிடையேயும்
ஜூலை 11இல் கன்சாஸில் அர்ஜெண்டைனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயும் நடைபெறுகின்றன.
பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜேண்டைனா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது என்னுடைய கணிப்பு.
श्री मते रामानुजाय नम: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ~ 25 ( 9.7.2026 ) வியாழன் கிழமை. வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் } அயனம் ~ உத்தராயணம் ருது ~ க்ரீஷ்ம ருது. மாதம் ~ ஆனி மாஸம் { மிதுன மாதம் } பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி ~ காலை 6.23 AM வரை நவமி பின் மறுநாள் காலை 4.20 AM வரை தசமி பின்னர் ஏகாதசி. நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை. நட்சத்திரம் ~ பகல் 11.25 AM வரை அச்வினி பின் பரணி. யோகம் ~ ஸுகர்மம் / த்ருதி. கரணம் ~ கரஜை / வணிஜை / பத்திரை. அமிர்தாதியோகம்~ சுபயோகம் நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM. ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM. எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM. சூரிய உதயம் ~ காலை 5.59. சந்திராஷ்டமம் ~ கன்னி. சூலம் ~ தெற்கு. பரிகாரம் ~ நல்லெண்ணெய். ஸ்ராத்ததிதி ~ தசமி. இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். !!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!! ॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |! !!धर्मो रक्षति रक्षित:!! !!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
sarathambal
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை : சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் : குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு : குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
astrology panchangam rasipalan dhinasari 2
இன்றைய ராசிபலன்கள் 09.7.2026
மேஷம்
வாகன பயணங்களில் தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும். பரணி : மகிழ்ச்சியான நாள். கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
ரிஷபம்
தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் மாற்றமான சூழல் அமையும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் ஏற்படும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். வியாபாரப் பணிகளில் சில சிக்கலான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ரோகிணி : அலைச்சல் ஏற்படும். மிருகசீரிஷம் : சிக்கலான நாள்.
மிதுனம்
புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. இறை வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆபரணங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும். பூசம் : விழிப்புணர்வுடன் செயல்படவும். ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்
ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வீட்டினை மனதிற்குப் பிடித்தவாறு சில மாற்றங்களைச் செய்வீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மகம் : முடிவுகள் கிடைக்கும். பூரம் : மதிப்புகள் அதிகரிக்கும். உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயனற்ற பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும். அஸ்தம் : ஆதரவான நாள். சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
துலாம்
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : ஆதரவான நாள். சுவாதி : நன்மை ஏற்படும். விசாகம் : கலகலப்பான நாள்.
விருச்சிகம்
பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
விசாகம் : தீர்ப்பு கிடைக்கும். அனுஷம் : ஆதரவான நாள். கேட்டை : பயணங்கள் கைகூடும்.
தனுசு
நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செய்தொழிலில் சில நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். வழக்குகளில் சில திருப்பமான சூழல் உண்டாகும். தலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய வகை உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : நுட்பங்களை அறிவீர்கள். பூராடம் : ஆர்வம் உண்டாகும். உத்திராடம் : ஈடுபாடு ஏற்படும்.
மகரம்
பொருளாதார சிக்கல்கள் குறையும். சமுக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
உத்திராடம் : சிக்கல்கள் குறையும். திருவோணம் : ஆர்வம் உண்டாகும். அவிட்டம் : ஆதரவு மேம்படும்.
கும்பம்
பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். மனை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் ஒத்துழைப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
தனவரவில் இருந்து வந்த தடைகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : தடைகள் குறையும். உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும். ரேவதி : அனுபவம் கிடைக்கும்.
மு.வ உரை: பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…! ‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
இங்கிலாந்து 20 ஓவர்களில் 201/7 (பில் சால்ட் 70, பட்லர் 36, சாம் கரன் 41, ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கட்) இந்திய அணி 11.4 ஓவர்களில் 76க்கு ஆல் அவுட் (ஜோஷ் டாங் 4/28, ஆர்ச்சர் 3/29)
பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் பில் சால்ட் (70 ரன்), ஜாஸ் பட்லர் (36) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். பின்னர் ஹர்ஷித் ராணா மற்றும் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் சில விக்கட்டுகள் வீழ்ந்தன. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாகப் பந்துவீசவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது.
இதன் பின்னர் இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணியின் தொடக்கவீரர்கள் அபிஷேக் ஷர்மா (10 ரன்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (13 ரன்) தங்களுடைய சிக்சர்கள் மூலம் விறுவிறுப்பாக ரன் சேர்த்தனர். ஆனால் இரண்டாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா, மூன்றாவது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி, நாலாவது ஓவரில் இஷான் கிஷன், ஐந்தாவது ஓவரில் அக்சர் படேல் என வரிசையாக மட்டையாளர்கள் ஆட்டமிழந்தனர். பின்னால் வந்த மட்டையாளர்கள் எவரும் ஒற்றை இலக்க ஸ்கோரைத் தாண்டவில்லை. இதனால் இந்திய அணி 11.4 ஓவர்களில் 76 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது,
இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
— ராகுல் பண்டிதா — தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக காஷ்மீரில் இருந்து சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தினர் (பண்டிதர்கள்) வெளியேற்றப்பட்ட விஷயம் இந்திய அரசியலில் அசாதாரணமான இடத்தை பிடித்துள்ளது. இந்த விஷயம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. ஆனால் இது ஏன் நிகழ்ந்தது என்று யாரும் ஆராய்வதுமில்லை விவாதிப்பதும் இல்லை.
காஷ்மீருக்கு வெளியே இது தேச பக்தி மற்றும் மத சார்பின்மை என்ற கருத்தியல் போராட்டத்திற்கு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. காஷ்மீருக்கு உள்ளேயோ இது ஒரு விஷயமாகவே இல்லை. எப்போதாவது மிக எச்சரிக்கையுடன் பட்டும் படாமல் சில குரல்கள் எழும்பும்.
1990 ம் ஆண்டு இஸ்லாமிய தீவிரவாதிகளால் 3.5 லட்சம் ஹிந்துக்கள் காஷ்மீரில் இருந்து விரட்டி அடிக்கபட்டார்கள். அதைப்பற்றி விவாதம் எழும்போதெல்லாம் யார் பாதிக்கப்பட்டார் (காஷ்மீரிகளா பண்டிதர்களா) என்று போட்டி ஏற்பட்டு விவாதம் சரிந்து விழும்.
இப்போது, இரண்டு விஷயங்கள் அதை அடியோடு மாற்றி அமைத்துள்ளது.
அண்மையில் காஷ்மீரின் முக்கிய தலைவர்களும் பிரிவினைவாத தலைவர்களும் பண்டித சமூகத்தினரிடம் நெருங்கி வந்துள்ளனர். கடந்த வாரம் மக்கள் ஜனநாயக கட்சியின் (பி டி பி) தலைவி மெஹ்பூபா முப்தி ஷீர்பவானி கோயிலின் வருடாந்திர உற்சவத்தில் கலந்து கொண்டு, பண்டிதர்கள் காஷ்மீருக்கு திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதே வேளையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை 1990 ஆண்டு சரளா பட் என்ற இளம் ஹிந்து செவிலியர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து மறுவிசாரணையை துவங்கி உள்ளது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்க ஆரம்பித்த காலங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளை பற்றி முதல் முறையாக தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட துவங்கியுள்ளது.
இரண்டு நிகழ்வுகளும் — காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் பண்டிட்கள் திரும்பி வர அழைப்பு விடுப்பது , பண்டிட்களின் கொலைகள் பற்றி விசாரணை தீவிர படுத்தப்படுவது — ஒரு விஷயத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன. பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது இனியும் அடி குறிப்பாக இல்லாமல் நிகழ்வுக்கு காரணம் எது, யார் என்பதை ஒத்துக் கொள்ளவும் நிகழ்வுக்கு பொறுப்பேற்க செய்வதும் என்ற கட்டத்தை நோக்கி செல்வதை சொல்லுகின்றன.
பண்டிட்கள் விரட்டியடிக்கப்பட்டது யாரால், ஏன் என்ற காரணத்தை கஷ்டப்பட்டு தேடி போக வேண்டியது இல்லை. கடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் ஜமாத் இ இஸ்லாமி சார்பில் நிறுத்தப்பட்ட (போலி) போட்டி வேட்பாளர்கள் கூட பண்டிட்கள் திரும்பி வரவேண்டும் என்று கூறினர் . 2019 க்கு முன்பு காஷ்மீரில் இது கற்பனை கூட செய்ய முடியாத விஷயம். 2019 க்கு பிறகு காஷ்மீர் அரசியல் மாறிவிட்டது. டில்லி எதிர் ஸ்ரீநகர், பிரிவினைவாதம் எதிர் மைய நீரோட்டம் என்ற பழைய இருமை அரசியல் மறையவில்லை ஆனால் மங்கியுள்ளது.
ஆனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே திசையை நோக்கி பயணிக்கின்றன என்று சொல்ல முடியாது. பண்டிட்களின் வெளியேற்றத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வெறுமனே, அது நடந்தது என்று பேச்சளவில் ஒப்புக்கொள்வது எந்த விளைவையும் தராது. பண்டிட்கள் காஷ்மீர் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்பது இப்போது காஷ்மீர் அரசியலின் சொல்லாடல் ஆகியுள்ளது. ஆனால் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதென்பது முற்றிலும் வேறொரு விஷயம்.
பொறுப்பேற்றுக் கொள்வது என்றால் வெளியேற்றப்பட்டனர் என்ற உண்மையை ஒப்புக் கொள்வதில்லை மட்டுமல்ல. எதனால் அது நடந்தது, அது நடக்க காரணமானவர்கள் எவர், அடையாளம் தெரியாத நபர்கள் என்றில்லாமல் யார் என்று பெயர் குறிப்பிட்டு, அறிக்கை என்று இல்லாமல் சான்றுகள் சாட்சிகளுடன் பொறுப்பாக்க வேண்டும். 1990 இல் நடந்த வன்முறைகள் இனியும் சமுதாயத்தின் கூட்டு நினைவில் இருண்ட பக்கமாக இருக்க முடியாது.
பண்டிட்கள் திரும்பி வரவேண்டும் என்று கேட்பது ஒரு விஷயம். அவர்களை அச்சுறுத்தியவர்கள் யார், அவர்களை கொன்றவர்கள் யார், காஷ்மீரில் வாழ முடியாது வெளியேறி விடுவது தான் பாதுகாப்பானது என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் நினைக்க வைத்த சூழல் யாரால் உருவாக்கப்பட்டது என்று கேட்பது வேறொரு விஷயம்.
பண்டிட் களின் மத உற்சவத்தின் போது நடக்கும் ஒரு நடனத்தை முக்கியமான முஸ்லிம் தலைவர் கலந்து கொண்டு பார்ப்பது என்பது ஒரு முக்கிய குறியீடு. இதுவரை காஷ்மீரில் பொது மொழியில் தவிர்க்கப்பட்டு வந்த விஷயம் , சந்தேகம் இல்லை. ஆனால் இந்த குறியீடு கடினமான இதர விஷயங்களுடன் பொருந்த வேண்டும். திரும்பி வாருங்கள் என்று அழைப்பு வன்முறை நடந்தது ஏன் என்று கேள்வியை மனதிடத்துடன் எதிர்கொள்ளும் விருப்பம் இல்லாமல் விடுக்கப்பட்டால், திரும்பி வாருங்கள் என்று அழைக்க வேண்டியதற்கான முதல் காரணத்தை மறைத்து விடுக்கப்பட்டால் அது அர்த்தமற்றதாகும்.
இந்த இடத்தில்தான் சரளா பட் கொலை குறித்த விசாரணை ஒரு வழக்கு என்பதற்கும் அப்பால் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தாமதம் என்றாலும் கூட , அரசியல் அறிக்கைகளால் மட்டுமே பதிலளிக்க முடியாத விஷயங்கள் குறித்து அரசு நிர்வாகம், நிறுவனங்கள் கேள்வி எழுப்ப தொடங்கியதை இது சுட்டிக்காட்டுகிறது.
சரளா பட் கொலை விசாரணை ஏன் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள 1990 ஆண்டு வசந்த காலத்திற்கு செல்ல வேண்டும் . அப்போதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதுவரை இல்லாத வகையில் பயம் கவ்வியது. அரசு நிர்வாகம் முற்றிலும் சரிந்தது. பயங்கரவாதிகள் பண்டிட்களை குறிவைத்து கொல்லும்போது அவர்களை காப்பாற்ற யாரும் அங்கில்லை. ஆரம்பத்தில் நீதிபதிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் என்ற நிலையில் இருந்த பண்டிதர்கள் மட்டுமே தங்கள் இயக்கத்துக்கு எதிரி என்று அடையாளப்படுத்தப்பட்டு குறி வைத்து தாக்கப்பட்டார்கள் . ஆனால் அது விரைவில் சாதாரண மக்களையும் கொல்வதாக ஆனது. வெளியேற்றம் தொடங்கியது.
சரளா பட் உடல் தகனத்தின் போது இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயானத்திற்கு வந்து அவளது இறுதி அஸ்தியை மிதித்தும், கூடியிருந்த அவரது உறவினர்களை காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென்றும் அச்சுறுத்தினர். ஷிரி இ காஷ்மீர் மருத்துவமனையில் குறை பிரசவ குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 23 வயது சரளா பட் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அண்மையில் நிறுவப்பட்ட மாநில காவல் துறையின் சிறப்பு விசாரணை , அவர் 1990 ஏப்ரல் 18 தேதி மதியம் பணி முடித்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார் . அதுதான் நண்பர்கள் அவரை கடைசியாக உயிருடன் பார்த்தது. அவளை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியினர் (ஜே கே எல் எப்) கடத்திக்கொண்டு ஜம்மு நகரத்துக்குள் கொண்டு சென்றனர் . அவளை உடலியல் ரீதியாக தாக்கினர். கொடுமைப்படுத்தினர். இறுதியாக சுட்டுக்கொன்றனர். அவளது உடல் மறுநாள் வேறொரு இடத்தில் கண்டறியப்பட்டது, என்று அறிக்கையை பதிவு செய்துள்ளது.
ஹிந்து பண்டிட் பெண்ணின் கொலை விசாரணை அப்போதைய மாநில அரசுக்கு முக்கியமான படவில்லை. ஆஜாதிக்காக (விடுதலைக்காக) போராடும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளை சூழ்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக வெறி கூச்சலிட்ட உள்ளூர் மக்களின் செயல் உறைய வைப்பதாக இருந்தது. 200க்கும் மேற்பட்ட அந்த வெறி கும்பல் சரளா பட் அஸ்தியை காலால் மிதித்தும் அவளது உறவினர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறும்படியும் அச்சுறுத்தியது. அடுத்த நாள் சரளா பட் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. மொத்த குடும்பமும் காஷ்மீரை விட்டு வெளியேறியது. இதை சரளாவின் உறவினர் ஜம்முவில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிருபரிடம் கூறியுள்ளார். அடுத்த சில மாதங்களிலேயே 700க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சரளாவை போலவே கொடூரமாக கொல்லப்பட்டனர்.
சரளா பட்டின் கொலை ஜே கே எல் எஃப் தலைமையின் உத்தரவுபடி தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. அதில் குர்ஷித் அகமத் சால்கு உட்பட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கூறியது. கடந்த 35 ஆண்டுகளாக சரளாவின் கொலை மற்ற பண்டிதர்களின் கொலை போல வெறும் புள்ளி விவரமாக இருந்தது. ஆரம்பத்தில் நடந்த காவல்துறை விசாரணை வழக்கமான சடங்குகளை தாண்டி செல்லவில்லை. அரசு நிர்வாகமும் அதை தொடர்ந்து பல தசாப்தங்கள் அமைதியில் உறைந்து விட்டது.
கடந்த ஆண்டு அந்த வழக்கு மீண்டும் தொடங்கியது. நடந்த குற்றத்தை போலவே அதை தொடர்ந்த அமைதியை இப்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அமைப்பு தீர்க்க முனைகிறது. சாட்சிகளின் மறுவிசாரணை, புதிய அறிக்கைகள், குற்றம் நடந்த இடத்தை சம்பவத்தை மீண்டும் கட்டமைத்து பார்ப்பது, ஆதாரங்களை கைரேகைகளை ஆய்வு செய்வது , முன்னாள் ஜே கே எல் எஃப் தீவிரவாதிகளை தேடுவது ஆகியவற்றுக்கு பிறகு சரளா பட் மீது நடத்தப்பட்ட கொடூரமும் கொலையும் ஜே கே எல் எஃப் தலைவனான யாசின் மாலிக்கின் கட்டளைப்படி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது என்று சிறப்பு விசாரணை அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது.
யாசின் மாலிக் பயங்கரவாத செயலுக்கு நிதி அளித்த விஷயமாக வேறொரு வழக்கில் சிறையில் உள்ளான். சரளா பட் வழக்கு ஒரு தனி விஷயம் அல்ல. காஷ்மீர் பண்டிட் சமூகத்தை அச்சுறுத்தி ஒட்டுமொத்தமாக மாநிலத்தை விட்டே ஓட செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதிதான் என்கிறது சிறப்பு விசாரணை அமைப்பு. விசாரணையின் ஊடாக ஒரு முக்கிய செய்தியையும் அனுப்பியுள்ளது அது .
காவல்துறையின் குற்றப்பத்திரிகை கடந்த ஜூன் 29 தேதி பதிவானது. அதில் : ” இது (குற்றப்பத்திரிக்கை) வலுவான, தவறவே விட முடியாத ஒரு செய்தியை சொல்கிறது. காலத் தாமதம் ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு கேடயமாக இருக்க முடியாது. எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் பயங்கரவாத கொடூர செயல்களுக்கு சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். பயங்கரவாத செயல்கள் பயத்தினாலோ அச்சுறுத்தலினாலோ வன்முறையினாலோ நீதியை தள்ளி போட முடியுமே அன்றி சட்டத்தின் ஆட்சியை நிரந்தரமாக எப்போதும் தோற்கடிக்க முடியாது. “
மேற்கண்ட முடிவுரை நீதிமன்றத்திற்கு அப்பால் விளைவுகளை எதிர் நோக்குகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி, சகோதரத்துவத்தை பற்றி வாய் நிறைய பேசுவோரின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது. ஹிந்து பண்டிட் கொலை விசாரணை குறித்த தகவல் வெளிவந்த பிறகு எந்த காஷ்மீர தலைவரும் வாய் திறக்கவில்லை. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி இந்த செய்தியாளரிடம் பேசும் போது, காஷ்மீரை சேர்ந்த தலைவர்கள் பலரிடம் அசாதாரணமான நிலையை இந்த விசாரணை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற விசாரணையின் பின்னால் உள்ள ‘நோக்கத்தை’ குறித்து அவர்கள் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள் , என்றார்.
காவல்துறை சிறப்பு விசாரணை அமைப்பின் குற்ற பத்திரிக்கை வெளிவந்த வேளையில், பண்டிதர்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகிறது அரசு. இதுவரை சுமார் 3000 கனால் (ஒரு கனால் = 5445 சதுர அடி) பகுதி மீட்கப்பட்டு உண்மையான சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீர் தலைவர்களின் பதில் வினை எப்படியாக இருந்தாலும், எப்படிப்பட்ட அரசியல் விளைவுகளை ஏற்பட்டாலும் கூட விசாரணை குறித்த விவாதம் குறிப்பிட்ட குற்ற செயலின் சரித்திரம், அதை செய்தவர்களின் பெயர்கள், அதை செய்ய கட்டளையிட்டவர்கள் / தூண்டியவர்களின் அதிகார படிநிலை , நோக்கம் ஆகியவற்றைப் பற்றி கவனத்தை திருப்பி உள்ளது.
விசாரணை அமைப்புடன் சம்பந்தப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி, இது ஆரம்பம்தான் வரும் நாட்களில் மேலும் அதிகமான கொலை வழக்குகள் விசாரணை செய்யப்படும், என்று உறுதிப்பட தெரிவித்தார். ‘சரளா பட் கொலை விசாரணையின் போது வேறு பல கொலைகள் குறித்த தகவல்களும் ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன’, என்று அவர் கூறினார்.
இனி என்ன ? ஹிந்து சமய விழாக்களில் கலந்து கொள்வது ஒன்று. பழைய ஹிந்து நண்பர்களை தேடிச் சென்று சந்திப்பதாக காணொலி வெளியிடுவது வேறொன்று. ஆனால் , காஷ்மீர வரலாற்றில் பண்டிட்கள் தங்கள் பங்களிப்பு பற்றி கேட்கும் போது என்ன நடக்கும் ? அந்த கதையில் தங்களை கொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றி கேட்கும்போது ? இது போன்ற கேள்விகளுக்கு நீண்ட கால நோக்கில் அரசியல் ஒருமித்த கருத்து உருவாவதை பொறுத்தே ஒற்றுமையும் நல்லிணக்கமும் உருவாகி வரும்.
சரளா பட் வழக்கு ஒரு விதிவிலக்காக , ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால் மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால் 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.
அதுவே இப்போது காஷ்மீர அரசியல் அகராதியில் இடம் பிடித்துள்ள திரும்பி வாருங்கள், ஒன்றாக வாழ்வோம், நட்போடு வாழ்வோம் என்ற வார்த்தைகளுக்கு பொருள் சேர்க்கும். ஏனென்றால் திரும்பி வருவதென்பது வேலைவாய்ப்பு, பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வெளியேற்றப்பட்டவர்களை திரும்பி வாருங்கள் என்று வரவேற்கும் சமூகத்தின் மீதான நம்பிக்கையை பொருத்தது. நிகழ்த்திய வன்முறையை அவர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்தது.
இதுதான் சரளா பட் கொலை விசாரணையின் அரசியல் முக்கியத்துவம். மீண்டும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்பது எப்போதோ நடந்த குற்ற செயல்கள் இன்று அரசியல் ரீதியாக அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதால் அவை முக்கியமற்றவை என்பதாகி விடாது என்ற முக்கியமான சமிக்கையை வெளிப் படுத்துகிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.