Home Blog

பஞ்சாங்கம் ஏப்.27 -சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – ஏப்.27

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்
சித்திரை ~ 14 (27.4.2024 ) சனிக்கிழமை*
வருடம் ~ க்ரோதி {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த* ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { *மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 7.30 am வரை த்ருதியை பின் சதுர்த்தி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ கேட்டை
யோகம் ~ பரிகம்
கரணம்~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.00
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ சதுர்த்தி 
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (27-04-2024) ராசி பலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாகி நிறைவேறும். கடன் தொடர்பான விஷயத்தில் நிதானம் வேண்டும். வியாபாரப் பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : வதந்திகள் நீங்கும்.
கிருத்திகை : மந்தமான நாள்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : பொறுப்பு கிடைக்கும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


சிந்தனைகளில் இருந்துவந்த சஞ்சலம் விலகும். உத்தியோகப் பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : சஞ்சலம் விலகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


குழந்தைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். மற்றவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளியூர் வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் உபரி வருமானம் குறித்த சிந்தனை மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : சிந்தனை அதிகரிக்கும்.
பூசம் : ஆதாயம் மேம்படும்.
ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனை அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புதுவிதமான தெளிவு ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். பிள்ளைகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூரம் : தெளிவு ஏற்படும்.
உத்திரம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


நுணுக்கங்களை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : உதவி கிடைக்கும்.
விசாகம் : நன்மை உண்டாகும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நுட்பமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : சிந்தனை மேம்படும்.
கேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


வெளியூர் பயணத்தால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பவர்கள். கல்வியில் புதுமையான வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதம் தோன்றி மறையும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

மூலம் : சோர்வுகள் உண்டாகும்.
பூராடம் : வாய்ப்பு கிடைக்கும்.
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


மறைமுகமான சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். கடன்கள் தீர ஆலோசனை கிடைக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : முடிவுகள் பிறக்கும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழல் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பயணம் மேம்படும். வருமானத்தை உயர்த்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : உயர்வான நாள்.
சதயம் : பயணம் மேம்படும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


தள்ளிப்போன சுபகாரியம் கைகூடிவரும். உறவினர்களின் வழியில் மதிப்பு ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சிவப்பு நிறம்

பூரட்டாதி : மதிப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : நெருக்கம் அதிகரிக்கும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”

  • ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


IPL 2024: கொல்கத்தா அணியின் பந்துகளை பஞ்சா பறக்கவிட்ட பஞ்சாப் அணி!

36ம் நாள்: ஐபிஎல் 2024 – 26.04.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

          கொல்கொத்தா அணியை (261/6, பில் சால்ட் 75, சுனில் நரேன் 71, வெங்கடேஷ் ஐயர் 39, ஆண்ட்ரு ரசல் 24, ஷ்ரேயாஸ் ஐயர் 28, அர்ஷதீப் சிங் 2/45) பஞ்சாப் அணி (262/2, ஜானி பெயிர்ஸ்டோ 108*, பிரப்சிம்ரன் சிங் 54, ரிலீ ரோஸ்கோ 26, ஷஷாங்க் சிங் 68*) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே கொல்கொத்தா அணி மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (37 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் சுனில் நரேன் (32 பந்துகளில் 71 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். சுனில் நரேன் 10.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 12.3 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 163/2. அவருக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (23 பந்துகளில் 39 ரன்), ஆண்ட்ரு ரசல் (12 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (10 பந்துகளில் 28 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஷ்ரேயாசுக்குப் பின்னர் ஆடவந்த ரிங்கு சிங் 4 பந்துகளில் 5 ரன் அடித்தார். அதன் பின்னர் ரமன்தீப் சிங் 3 பந்துகளில் 6 ரன் அடித்தார். இதனால்  20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 261 ரன் எடுத்திருந்தது. கொல்கொத்தா மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச் ஐ.பி. எல் ஸ்கோர் இதுவாகும்.

          262 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரப்சிம்ரன் சிங் (20 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ (48 பந்துகளில் 108 ரன், 8 ஃபோர், 9 சிக்சர்)இறுதி வரை ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவருடன் ரிலீ ரோஸ்கோ (16 பந்துகளில் 26 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷஷாங்க் சிங் (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ரன், 2 ஃபோர், 8 சிக்சர்) இணைந்து ஆடி 18.4 ஓவரில் வேற்றிக்குத் தேவையான 262 ரன்னை எடுத்தனர்.

இதனால் பஞ்சாப் அணி ஒரு அதிக பட்ச ஸ்கோரை சேஸ் செயது 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

          பஞ்சாப் அணியின் ஜானி பெயர்ஸ்டோ தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம்  லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். 

26.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்871140.698
கொல்கொத்தா853100.972
ஹைதராபாத்853100.577
லக்னோ853100.148
சென்னை84480.415
டெல்லி9458-0.386
குஜராத்9458-0.974
பஞ்சாப்9366-0.187
மும்பை8346-0.227
பெங்களூரு9274-0.721

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

#image_title

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

1) 2.5.24 முதல் வண்டி எண் 06877 தினமும் விழுப்புரத்தில் மாலை 6.25 க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம் பூந்தோட்டம் நன்னிலம் வழியாக இரவு 10:45 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

2) 03-5-24 முதல் வண்டி எண் 06690 தினமும் காலை 5 10 மணிக்கு திருவாரூரில் புறப்பட்டு விழுப்புரம் 9. 15 மணிக்கு சென்றடையும்.
இது பல்லவனுக்கு இணைப்பாக அமையக்கூடும்.

3) 02-5-24 முதல் இரவு 8:25 மணிக்கு திருச்சியில் புறப்படும் வண்டி எண் 06876 தஞ்சாவூர் சாலியமங்கலம் நீடாமங்கலம் கொரடாச்சேரி வழியாக திருவாரூருக்கு இரவு 11:05க்கு வந்து சேரும்.

4) 03.5.24 முதல் தினமும் காலை 4.45 க்கு திருவாரூரில் புறப்பட்டு திருச்சிக்கு 7:00 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் திருச்சியில் புறப்படும் இன்டர்சிட்டி ரயிலுக்கு இணைப்பாக அமையக்கூடும்.

5)3.5.24 முதல் வ. எண் 06627 அகஸ்தியன் பள்ளியில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத்துறை, நெய் விளக்கு, கரியாப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் வழியாக திருவாரூர் 7.55 மணிக்கு வந்தடையும்.

6) 03.5.24 முதல் வண்டி எண் 06630 திருவாரூரில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு அகஸ்தியன் பள்ளிக்கு இரவு 9.30 சென்றடையும்.

7) வண்டி எண் 06851 திருவாரூரில் காலை 08.30க்கு கிளம்பி பட்டுக்கோட்டை 10.05 மணிக்கு சென்றடையும்.

8) மாலை 5. 15 மணிக்கு பட்டுக்கோட்டையில் கிளம்பி (வண்டி எண் 06852 ) திருவாரூருக்கு மாலை 06.55 மணிக்கு வரும்.

9) வ.எண் 06197 திருவாரூரில் காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 9 35 மணிக்கு சேரும்.

10) மறு மார்க்கத்தில் மாலை 6 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனமான அபய் பக்சந்த் சாஜேத் மற்றும் அருண் குமார் அகர்வால் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டுமே தேர்தல் ஆணையம் EVM வாக்குகளை VVPAT மூலம் சரிபார்க்கும் நடைமுறைக்கு பதிலாக, அனைத்து VVPAT களும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். 

‘தெளிவற்ற மற்றும் ஆதாரமற்ற’ அடிப்படையில் EVMகள் மற்றும் VVPAT களின் செயல்பாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி இது என்று தேர்தல் ஆணையம் இந்த மனுக்களை எதிர்த்தது. 

கூடுதலாக, அனைத்து VVPAT காகித சீட்டுகளையும் கைகளால் முறையாக எண்ணுவது, பரிந்துரைக்கப்பட்டபடி, உழைப்பு மற்றும் நேரத்தைச் செலவழிக்கும், ஆனால் ‘மனிதப் பிழை’ மற்றும் ‘சிரமத்திற்கு’ வாய்ப்புள்ளது என்று வாதிடப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் பதிலில், EVMகள் சேதப்படுத்த முடியாதவை என்றும், மனுதாரர்கள் கூறியது போல் வாக்காளர்களுக்கு அத்தகைய அடிப்படை உரிமை இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) இன்று, உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்கள்) தரவுகளை வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள், தணிக்கை (விவிபிஏடி) பதிவுகளுடன் 100% குறுக்கு சரிபார்ப்பு கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்குகள் ஏப்ரல் 18 ஆம் தேதி உத்தரவுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து சில தொழில்நுட்ப விளக்கங்களை பெஞ்ச் விரும்பியதால் ஏப்ரல் 24 ஆம் தேதி விசாரிப்பதற்காக,  மீண்டும் பட்டியலிடப்பட்டது. அளிக்கப்பட்ட பதில்களை கருத்தில் கொண்டு, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்விவகாரத்தில் இரு நீதிபதிகளும் தனித்தனியாக, ஆனால் இணக்கமான தீர்ப்புகளை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்புகளின் முடிவைக் குறிப்பிட்டு, நீதிபதி கன்னா நீதிமன்றத்தில் வாக்குச் சீட்டு  முறைக்கே திரும்புதல், முழுமையான EVM-VVPAT சரிபார்ப்பு, வாக்குப்பெட்டியில் வைக்க வாக்காளர்களுக்கு VVPAT சீட்டுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். “நடைமுறையில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பதிவில் உள்ள தரவு ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட பிறகு, மனுவில் கோரிய அனைத்தையும் நாங்கள் நிராகரித்துள்ளோம்” என்று நீதிபதி கன்னா கூறினார்.

முன்னதாக, இது தொடர்பில் இரண்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இருப்பினும், பின்வரும் 2 வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன:

(1) 01.05.2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட VVPAT இல் சின்னத்தை ஏற்றும் செயல்முறை முடிந்ததும், சின்னம் ஏற்றுதல் அலகு (SLU) சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முத்திரையிட்டு கையெழுத்திட வேண்டும். SLUகள் அடங்கிய சீல் செய்யப்பட்ட கன்டெய்னர்கள், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு EVMகளுடன் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் போலவே அவை திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு கையாளப்பட வேண்டும்.

(2) 5% EVMகளில் உள்ள காலியான நினைவக செமிகண்ட்ரோலர், அதாவது கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் VVPAT என, நாடாளுமன்றத் தொகுதியின் சட்டமன்றப் பிரிவுக்கு, EVM தயாரிப்பாளர்களின் பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்படும். 

அதிக வாக்களிக்கப்பட்ட வேட்பாளருக்கு பின் 2 மற்றும் 3 இடங்களில் உள்ள வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் முடிவுகளை வெளியிடவும். அத்தகைய வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் வாக்குச் சாவடி அல்லது வரிசை எண் மூலம் EVMகளை அடையாளம் காண வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் சரிபார்ப்பின் போது உடனிருக்க உரிமை உள்ளது. 

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் அத்தகைய கோரிக்கை வந்தால் ஏற்கப்பட வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரி, பொறியாளர்கள் குழுவுடன் கலந்தாலோசித்து, காலியான நினைவக மைக்ரோகண்ட்ரோலரின் நம்பகத்தன்மை மற்றும் அப்படியே இருப்பதை சான்றளிக்க வேண்டும். சரிபார்ப்பு செயல்முறை நடத்தப்பட்ட பிறகு, கூறப்பட்ட சரிபார்ப்புக்கான உண்மையான செலவு அல்லது செலவுகள் ECI ஆல் அறிவிக்கப்படும், மேலும் அந்த கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளர் அதற்கான கட்டணத்தை செலுத்துவார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால், செலவுகள் திரும்பப் பெறப்படும்.

நீதிபதி கன்னா மேலும், வாக்குச் சீட்டுகளை எண்ணும் மின்னணு இயந்திரம் மற்றும் சின்னத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் பார்கோடு இருக்க முடியுமா என்ற பரிந்துரையை ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டார்.

நீதிபதி தத்தா, தனது தீர்ப்பின் கூடுதல் விஷயங்களைக் குறிப்பிட்டு, ஒரு அமைப்பை கண்மூடித்தனமாக நம்புவது தேவையற்ற சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். “அதற்கு பதிலாக, அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த ஆதாரம் மற்றும் காரணத்தால் வழிநடத்தப்படும் ஒரு முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்…” என்றார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்ட வாக்குப் பதிவின் தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

#image_title

“மக்களே! மறக்காம என் மறைவுக்கு வந்துருங்க!” – மல்லிகார்ஜுன் கார்கே வினோத அழைப்பு!

— ஆர். வி. ஆர்

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

சமீபத்தில் கர்நாடக மாநிலம், கலபுர்கி லோக் சபா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவந்தார் கார்கே. அப்போது மேடையில் நின்று மக்களை நோக்கி, “நீங்கள் என் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி ஊர்வலத்துக்கு வந்து விடுங்கள்” என்று தத்தக்கா பித்தக்கா என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசினார்.

ஒருவேளை கலபுர்கியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கார்கே நினைத்திருக்கலாம். அதற்காக, இப்படி உணர்ச்சி பூர்வமாக – அதுவும் இறப்பு நிகழ்ச்சி என்றெல்லாம் – பேசினால் மக்கள் பரிதாபத்தில் உருகி சற்று அதிகமானவர்கள் தனது கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவார்கள், காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். எதுவானாலும் இது வடிகட்டின அசட்டுப் பேச்சு.

ஒரு வருடம் முன்பு திமுக மாநில அமைச்சர் துரை முருகன், முதல்வர் ஸ்டாலினை அருகில் வைத்துக்கொண்டு, “நான் மறைந்த பிறகு, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று எழுதுங்கள்” என்று பேசி, கட்சியிலுள்ள மற்ற தலைவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஸ்டண்ட் அடித்தார். அதை மனதில் வைத்து, ‘இப்போது அரசியலில் பல தலைவர்களும் மலிவாகப் பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சும் அது மாதிரித்தான்’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயமில்லை இது.

துரைமுருகன் பேசியது, அக்மார்க் திமுக பாணி. இது போன்ற பேச்சு, இந்த அளவிலான மற்ற செயல்கள், திமுக-வுக்கே உரித்தானது.

சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பாக, திமுக-வின் மு. கருணாநிதி ஒரு காரியம் செய்தார். அப்போது திமுக நடத்திய ஒரு போராட்டத்தின் பகுதியாக, திருச்சிக்கு அருகில் ‘டால்மியாபுரம்’ என்றிருந்த ஒரு ரயில் நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றக் கோரியது அக்கட்சி. அந்த சமயத்தில், அந்த ஊர் ரயில் நிலையத்திற்குள் கட்சிக்காரர்களுடன் சென்று ரயில் தண்டவாளத்தில் படுத்து, அங்கிருந்து கிளம்பவிருந்த ரயில் புறப்படாமல் ஸ்டண்ட் செய்தார் கருணாநிதி – என்ன இருந்தாலும் ரயில் தன் மீது ஏறாது என்ற நிச்சயத்தில். கருணாநிதிக்கு அப்போது வயது 29. இதனால் அரசியலில் சில படிகள் முன்னேறினார் கருணாநிதி.

சமீபத்தில் தனது 84-வது வயதில், துரை முருகன் தன்னால் முடிந்த ஸ்டண்டைத் தன் ‘கல்லறைப் பேச்சு’ மூலமாகவே செய்துவிட்டார் – திமுக வழியில். ஆனால் மல்லிகார்ஜுன் கார்கே பிதற்றியது, தலை சிறந்த காங்கிரஸ் முன்னோடிகளிடம் அவர் கற்ற பாடத்தினால் அல்ல.

திமுக அன்றுபோல் இன்றும் மலிவான பேச்சு, கண்ணியம் குறைந்த செயல்கள், ஸ்டண்ட் நடவடிக்கைகள், என்றுதான் அரசியல் செய்கிறது. ஆனால் திறமைக்கும் கண்ணியத்திற்கும் பொதுவாழ்வில் அர்ப்பணிப்புக்கும் ஒரு காலத்தில் பெயர்போன காங்கிரஸ் கட்சி, இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமையில், எல்லா வகையிலும் தாழ்வுற்று நிற்கிறது. இந்தப் பெரும் சோகத்தின் ஒரு அடையாளம், காங்கிரஸ் கட்சியின் பொம்மைத் தலைவராக (‘பிரஸிடெண்ட்’ என்று) பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேயும் அவரது பேச்சும் செயல்களும்.

திமுக தலைவர் கருணாநிதி, தன் கட்சிக்குள் தனது மகன் மு. க. ஸ்டாலினை உயர்த்திவிட, ஸ்டாலினுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பொறுமையாகச் செயல்பட்டு வந்தார். எதிர்பார்த்தபடி அதைக் கட்சியில் அனைவரும் ஏற்றனர். இப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை எப்படி வேகவேகமாகக் கட்சிக்குள் முன்நிறுத்துகிறார், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் எப்படி அசாத்தியமாகத் தொழில் செய்கிறார், கட்சிக்குள் இருக்கும் மற்ற தலைவர்கள் அந்த இருவரை எப்படி விழுந்து விழுந்து வரவேற்கிறார்கள், வணங்குகிறார்கள், என்பதும் வெளிப்படை.

காங்கிரஸ் கட்சி இப்போது கௌரவம் இழந்து சீரழிந்து விட்ட நிலையில், அதன் தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது பேச்சில் திமுக மாதிரி கட்சிகளின் பாணியைக் காப்பி அடிக்கிறார்கள். இதில் ஸ்டாலினோடு போட்டிபோட்டு அவரை மிஞ்சுகிறார் ராகுல் காந்தி. அதே பொறுப்பற்ற வகையில், ஆனால் ராகுலை மிஞ்சி விடாமல், கலபுர்கியில் பேசி இருக்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே.

சரி, மல்லிகார்ஜுன் கார்கே இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பிதற்றுவதற்கு ஏன் கலபுர்கி லோக் சபா தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்? மனிதர் காரண காரியமாகத் தான், திடீரென உணர்ச்சியில் உருகித் தனது கடைசிப் பயணத்துக்குக் கலபுர்கி மக்களைக் கண்ணில் நீர் மல்க அழைத்துவிட்டார். இதில் திமுக-வின் சாயல் பெரிதும் உண்டு. கலபுர்கி தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் வேறு யாருமல்ல, அவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் மாப்பிள்ளைதான்!

அடுத்த படியாக, தமிழகத்தில் நோஞ்சானாய் இருக்கும் தமது கட்சியைப் பெரிதாய் வளர்க்க, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேச்சிலும் செயலிலும் என்ன புதுமையைக் கடைப் பிடிப்பார்களோ? மேல்மட்டத்தில் காங்கிரஸ் இப்போது கெட்ட கேட்டில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனி எப்படியெல்லாம் திமுக வழியில் செல்வார்களோ, அவர்களுக்கு மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சு எப்படி உதாரணமாகத் திகழுமோ, என்றெல்லாம் யாராவது கணிக்க முடியுமா?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

#image_title

– மு.ஸ்ரீனிவாஸன்

17 ஆம் நூற்றாண்டின் சம்ஸ்கிருதக் கவிகளிலே தன்னிகரற்று விளங்கியவர் நீலகண்ட தீட்சிதர். அவர் பன்முக வித்தகராக வாழ்ந்தார். பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

ஏறக்குறைய கி.பி.1582 ஆம் ஆண்டில் நீலகண்ட தீக்ஷிதர் பிறந்தார். அவருக்கு முன்னும் பின்னும் ஐந்து தலைமுறைகளுக்கு புகழோடு விளங்கிய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தார். தனது வம்சாவளியை அவருடைய நூலான கங்காவதரணம் என்ற காவியத்தில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்.

“பரத்வாஜர் என்று மூவுலகிலும் புகழ்பெற்ற ஒரு மகரிஷி உண்டு. அவருடைய சொல்லைக் கேட்டு, ராமன் காட்டில் திரிந்து கொண்டிருப்பதை நிறுத்தினான். அவருடைய வம்சத்தில், பாற்கடலிலிருந்து நிலா தோன்றியது போல், முதலாம் அப்பய்ய தீக்ஷிதர் தோன்றினார். அவர்
பெரும் சிவபக்தர். அவரது தம்பி ஆச்சான் தீக்ஷிதர். அவரும் தமையனைப் போலவே எல்லாம் கற்றறிந்தவர். அவருடைய
பிள்ளை நாராயண அத்வரி. அவருக்கு அன்பினால் இணைந்த ஐந்து புதல்வர்கள். அவர்கள் தாயின் கருவில் இருக்கும்போதே சிவபக்தியை சொத்தாகப் பெற்றவர்கள். அவர்களுள் தாய் பூமிதேவிக்கு இரண்டாவதாகப் பிறந்த மகன் நான்.”

அவரது முன்னோர்கள் பலரும் அரசர்களால் மதித்துப் போற்றப்பட்டவர்கள். அப்பய்ய தீக்ஷிதரின் தாத்தா ஆசார்ய தீக்ஷிதர் விஜய நகரம் கிருஷ்ண தேவராயரின் அவையை அலங்கரித்தவர். அப்பய்ய தீக்ஷிதர் வேலூர், பெனுகொண்டா மன்னர்களால் கொண்டாடப்பட்டவர். மிக உயர்ந்த நூறு நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர் அப்பய்ய தீக்ஷிதர். எழுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த அவரைக் கனகாபிஷேகம் செய்து மன்னர் கௌரவித்ததாகவும், அவர் சிதம்பரத்தில் முக்தியடைந்ததாகவும் வரலாறு. அவரது
ஆதரவில் வளர்ந்தவர் நீலகண்டன்.

கோவிந்த தீக்ஷிதரின் புதல்வரும் சதுர் தண்டிப்ரகாசிகா நூலின் ஆசிரியருமான வேங்கட மகியிடம் அவர் கல்வி கற்றார். கிருஷ்ணானந்த யதி, கீர்வாணேந்த்ர சரஸ்வதி, தந்தையான நாராயணாத்வரி முதலியவர்களிடம் சாஸ்திரங்களையும், குறிப்பாக அத்வைதத்தையும் கற்றுத் தேர்ந்தார். அவரது பன்னிரெண்டாவது வயதில் அப்பய்ய தீக்ஷிதர் காலமானார். பெரிய தாத்தாவின் சொத்தாக தேவி மகாத்மியத்தையும் ரகுவம்சத்தையும் பெற்றுக் கொண்ட அவரை, “நீ தேவியின் அருளால் மகாகவியாவாய்’ என அப்பய்ய தீக்ஷிதர் ஆசிர்வதித்தாராம்.

பின்னாளில் சுமார் முப்பதாண்டுகள் நீலகண்ட தீக்ஷிதர் மதுரையரசர் திருமலைநாயக்கனது அமைச்சராக இருந்தார். அது பற்றிய சுவையான வரலாறு உண்டு. மதுரையில் ஆற்று மணலில் தீக்ஷிதர் தேவி மகாத்மியப் பிரவசனங்கள் செய்து வந்தார். அதை மறைந்திருந்து கேட்டு அதனால் பெரிதும் கவரப்பட்ட திருமலை நாயக்கன் ஒரு புலவர் சபையைக் கூட்டி ஒரு போட்டி வைத்தவன். அதில் கேட்கப்பட்ட கேள்வி காக்கைக்குக் காகம் என்று எப்படிப் பெயர் வந்தது என்பதாகும். அவ்வளவு பெரிய சபையில் ஒரே நிசப்தம். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை.

சபையைக் கலைக்க வேண்டியது தான் என்று அரசன் நினைத்த நேரத்தில் ஒருவர் எழுந்தார். ஒரு விளக்கமும் அளித்தார். இந்திரகுமாரன் ஜயந்தன் காக்கையுருவில் சீதையின் மார்பைக் கொத்திய போது ராமன் வெகுண்டான். ஆனால் சீதை ஜயந்தனை பொறுமையாய் மன்னிக்க, ராமனும் தன் கருணையால் அவனை மன்னித்தான்.
அதைக் கண்டு சுற்றியிருந்த காகங்கள் “”இவ்வுலகில் பொறுமை, மன்னிக்கும் இயல்பு இவற்றில் சீதையை ஒத்தவள் யார்?

( கா). இவ்வுலகில் தயையில் ராமனை ஒத்தவன் யார்? (: க)? என்று “காக’ என்று குரலெழுப்பி ஆர்ப்பரி
த்தன. அதனால் “காக” என்ற பெயர் வந்தது. (யார் என்பதற்கு “கா’ என்பது பெண்பால் சொல், “க’ என்பது ஆண்பால் சொல் சம்ஸ்கிருதத்தில்). அப்படி விளக்கமளித்தவர் நீலகண்ட தீக்ஷிதர். அவரை உடனேயே தனது மந்திரியாக்கினான் திருமலை நாயக்கன்.

மதுரையின் அமைச்சராக நீலகண்ட தீக்ஷிதர் நல்ல பல சீர்திருத்தங்களைச் செய்தார். மீனாக்ஷியம்மன் கோவிலில் செய்யப்பட வேண்டிய தினசரி பூஜை பல்வேறு உற்சவங்கள் முதலியவற்றை நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்தினார். நிர்வாக அலுவல்களுக்கு நடுவில் ஏராளமான நூல்களை எழுதினார். தான் கற்ற கல்வியை பிறருக்கும் போதித்து ஒரு நல்ல சிஷ்ய பரம்பரையை உருவாக்கினார்.

கடைசியில் ஒரு நாள் அரசுப் பணியும் சலித்தது. இறையருளிலே திளைக்க விரும்பிய அவர் பட்டம் பதவிகளைத் துறந்து விட்டு, திருநெல்வேலிக்கருகில் தாம்பிரவருணியின் கரையிலமைந்த பாலாமடை கிராமத்தில் துறவியாகத் தனது எஞ்சிய நாட்களைக்
கழித்து இறைவனடி சேர்ந்தார். அவர் மதுரையை விட்டுஅகன்றது பற்றியும் ஒரு கதை உண்டு.

மதுரைக் கோவிலின் புதுமண்டபம் 1626 முதல் 1633 வரை திருமலை நாயக்கனால் கட்டப்பட்டது. அங்கே ஒரு தூணில் திருமலை நாயக்கன் தன் ஏழு பத்தினிகளுடன் இருக்கும் பெரிய சிற்பம் உள்ளது. சுந்தரமூர்த்தி ஆசாரி என்ற தலைமைச் சிற்பிக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

பட்டமகிஷியின் சிலையைச் செய்யும்போது, இடது துடையில் சில்லுப் பெயர்ந்து விட்டது. மீண்டும் புதிதாகச் செய்தான், மீண்டும் அதே இடத்தில் சில்லுப் பெயர்ந்தது. அப்போது அப்பணியை மேற்பார்வை பார்க்க அங்கு வந்த தீக்ஷிதர் விஷயத்தைக் கேட்டு, சற்றே கண்மூடி யோசித்துவிட்டு, “”அதை அப்படியே விட்டுவிடு. மீண்டும் செய்து பயனில்லை. ஏனெனில் அந்த இடத்தில் மகாரா
ணிக்கு ஒரு பெரிய மச்சம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஆசாரியும் அதை அப்படியே விட்டு விட்டான். பின்னால் அங்கு வந்த அரசன் நடந்ததைக் கேள்விப்பட்டான். தன் தே
வியின் துடையில் மச்சமிருப்பது தெரிந்த அவனுக்கு சந்தேகம் பிறந்தது. அதுவே பெருங்கோபமாக மாறியது. அரண்மனை சென்றதும் தீக்ஷிதரை அழைத்து வரச் சொல்லி அதிகாரியை அனுப்பினான். தீக்ஷிதர் அப்போது அம்பாளது பூஜையில் இருந்தார்.

அரசன் ஆளனுப்பியது அவருக்குப் புதிய அனுபவம். உடனே கண்மூடி தியானித்தார். அரசனின் மடமை அவருக்குப் புரிந்தது. உடனே கையில் ஏற்றியிருந்த கற்பூரத்தை அம்பிகைக்குக் காட்டிவிட்டு அதனாலேயே தன் கண்களையும் அவித்துக் கொண்டார்.

“அரசன் அளிக்கவிருந்த தண்டனையைத் தானே விதித்துக் கொண்டதாகச் சொல்’ என்று அதிகாரியைத் திருப்பியனுப்பினார். பிறகு அம்பிகையைத் தன் உள்ளமுருக்கும் பாடல்களால் துதிக்கத் தொடங்கினார். பாடல்கள் முடிவதற்குள் அவரது கண்பார்வை மீண்டது.

நடந்ததையறிந்த திருமலை நாயக்கன் ஓடோடி வந்து தீக்ஷிதரிடம் மன்னிப்பு வேண்டினான். அரசனை பெருந்தன்மையுடன் மன்னித்த தீக்ஷிதர் தன் பதவியை உடனே துறந்து பாலாமடை சென்றார். திருமலை நாயக்கன் பாலாமடை கிராமத்தை அவருக்கே வழங்கினான். அதற்கு நீலகண்ட ஸமுத்ரம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அப்போது தீக்ஷிதர் பாடிய பாடல்களே “ஆனந்த ஸாகரஸ்தவம்.’

நீலகண்ட தீக்ஷிதரின் மிகப் பிரசித்தி பெற்ற காவியம் சிவலீலார்ணவம். சிவ லீலைகளாகிய பெருங்கடல் என்று பொருள்.

ஹாலாஸ்ய மகாத்ம்யத்தையட்டி சிவனது 64 லீலைகளும் பேசப்படும் நூல். 22 காண்டங்களில் இரண்டாயிரத்துக்கு இரண்டு பாடல்கள் குறைவாக இயற்றப்பட்ட மகாகாவியம்.
1907 ஆம் ஆண்டு முதன் முதலாக மகாமகோபாத்யாய தருவை கணபதி சாஸ்திரிகளால் திருவனந்தபுரத்தில் அச்சிடப்பட்டது.

மதுரை மீனாக்ஷி பிறப்பு, வளர்ப்பு, ஆட்சி, திக்விஜயம், சுந்தரேச்வரருடன் திருமணம், திருவாதவூரர் கதை, ஈசன் நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, அரிமர்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டது, நக்கீரர் அகந்தை அடக்கியது, கூன் பாண்டியன் நோய் நீக்கியது, சம்பந்தரும் சமணரும், அனல் வாதம், புனல் வாதம், பிறகு வந்த பாண்டிய மன்னர்களுக்கு அருளிய செயல்கள் அனைத்தும் கொண்ட காவியம்.

எட்டு காண்டங்கள் கொண்ட “கங்காவதரணம்’ (கங்கை கீழிறங்கியது) பகீரதன் கதை. “நீலகண்ட விஜய சம்பு’ திருப்பாற்கடலைக் கடைந்த நிகழ்ச்சியும், பிரபஞ்சத்தைக் காக்க சிவன் ஆலகால விஷத்தைக் குடித்து நீலகண்டனாக ஆன கதை உரை நடையும், பாடலும் கலந்த சம்பு இலக்கியம்.

“நள சரித நாடகம்’ 6 வது அங்கத்தோடு நின்று விடுகிறது. “கலி விடம்பனம்’ என்ற 102 பாடல்களைக் கொண்ட நூல் கலியுகத்தின் தீய பழக்க வழக்கங்களைக் காட்டும் நையாண்டிப் பாடல்கள். பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைப் போலமைந்த 105 பாடல்களமைந்த “சபாரஞ்ஜன’.
ஒன்றைச் சொல்லி ஆனால் உள்ளே ஆழ்ந்த வேறு பொருள் உள்ள “அன்யபதேச சதகம்’ என்ற 101 பாடல்கள். “ஆனந்த
ஸாகரஸ்தவ’ காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அம்பாளைப் பற்றிப் பாடிய 108 பாடல்கள்.

பர்த்ருஹரியைப் போல 101 பாடல்களில் ஒரு “வைராக்ய சதகம்.’ வாழ்க்கையை அனுபவித்து அதன் இன்ப துன்பங்களைக் கண்டு களைத்து, அமைதியை விரும்பும் ஒரு முதிய உள்ளத்தின் “சாந்தி விலாசம்’ என்ற சிந்தனைகள். “சிவோத் கர்ஷ மஞ்சரி’, “சிவ தத்வ ரஹஸ்ய’, “சண்டி ரஹஸ்ய’, “குரு தத்வ மாலிகா’, “ஸெளபாக்ய சந்த்ராதபா’ என்ற சாக்த மத விளக்கம்…

இப்படி மேலும் பல நூல்கள். சிவனைப் பற்றியே பாடிய அவர், கண்ணனது குழந்தைப் பருவம் பற்றிய “முகுந்த விலாசம்’ என்ற நூலையும், “ரகு வீரஸ்தவ’ அல்லது “ராமாயண ஸாரஸங்க்ரஹ’ என்று ராமன் மேல் 33 பாடல்களையும் பாடியிருக்கிறார்.

அவரது கரைகாணாக் கல்வித் தேர்ச்சியும், கவிதைத் திறனும், அனுபவ அறிவும் ஒருங்கே துலங்கும் அவரது பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

மாறிவரும் பருவங்களைப் பற்றிப் பேசுமிடத்தில் ஒரு பேருண்மையைக் காட்டுகிறார். சில பருவங்களில் சில பூக்கள் கிடைப்பதில்லை. அதனால் என்ன? வேறு பூக்கள் உண்டே.

போதவிழ் தாமரை இல்லையெனில்
புதிய தாழம் பூஇலையோ?
சோதியாம் நிலவு இல்லையெனில்
சுந்தர மன்மதன் இங்கிலையோ?
ஏதும் அன்னங்கள் இல்லையெனில்
எழில்மிகு மயில்கள் இங்கிலையோ
ஏதோ ஒரு பொருள் இல்லையென
ஏங்கித் தவிப்பது எதற்காக?

கவிதைக்கு மக்களிடையே ஆதரவு இல்லையென்பது அவரது மனக்குறை. அவர் சொல்லுகிறார்:

“வீணை இசையை எழுப்புகிறது; அங்ஙனமே தான் குழலும். குழந்தைகளும் ஊமைகளும் கூட அந்த இசையைக் கேட்கிறார்கள். ஆனால் கவிதையைக் கேட்பதற்கோ அதன் இனிமையைச் சுவைப்பதற்கோ ஓரிருவர் இருக்கலாம்; அல்லாது இல்லாமலும் இருக்கலாம்.”

அந்தக் கவிதையும் துஷ்பிரயோகம் ஆகிறது என்று அங்கலாய்க்கிறார். “சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுவன்’ என்று நம்மாழ்வார் சொன்னபடி மானிடரைப் புகழ்ந்து பாடாதே என்றும், கொடுப்பவனின் குறைகளையும்
கவி காட்டுவதில்லை என்றும் கூறுகிறார்:

கவிதை யென்பது கலைகளின் சிகரம்
கவிதா தேவியின் கருணைப்ரசாதம்
மனிதரைப் புகழ்ந்து பாடுவதாலே
மாண்பு குறைந்து மதிப்பை இழக்கும்.
அனைவர் விருப்பமும் அள்ளியே தந்திடும்
அற்புதக் காமதேவனுவாம் பசுவை
ஏரில் பூட்டி உழுவதை ஒக்கும்.
கொடுப்பவர் குறைகளைக் கவியும் கூறான்.
கார் மேகத்தைக் கருதிப் பார்த்தால்
நீரைப் பொழியும் என்பத னாலதன்
கருமைக் குறையைப் பேசுவார் யாருளர்?
தாம்ரவருணி ஆற்றைப் பற்றி புலமை நிறைந்த ஒரு கற்பனை.

“தாம்ரபர்ணி கடலில் கலக்குமிடத்தில் கடல் அலைகளால் முத்துக்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அகஸ்திய கோத்திரத்தில் பிறந்தவள் என்ற மரியாதையுடன் கடலரசன் புஷ்பங்களை வாரி இறைத்து தாம்ரபர்ணியை எதிர்கொண்டு அழைத்துச் செல்வது போலிருக்கிறது இது.”

கலி விடம்பன நூலில் கலிகாலத்தில் கூட்டத்தில் வேண்டிய குணங்கள் என்று கிண்டலாக அவர் எழுதுகிறார்:

“கூட்டத்தில் வேண்டிய குணங்கள் குருட்டு தைரியம், வெட்கமின்மை, எதிரியிடம் அலட்சியம், இகழ்ச்சிப் பார்வை, கேலி செய்தல், கூச்சலிடுவது. எதிரி சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதோ, புரிந்து கொள்வதோ கூடாது. எதிரி சாதுவாக இருந்தால், தன் கட்சி ஜயித்து விட்டதாகக் கத்தவேண்டும். எதிராளி படித்தவனாக இருந்தால், அவன் பாரபட்சமாகப் பேசுவதாகக் குற்றம் சாட்ட வேண்டும்.
மன்னனைப் (பதவியில் இருப்பவரை) புகழவேண்டும்.”

இன்றைய அரசியல்வாதிகளையும் அவர்களை அண்டிப் பிழைக்கும் “ஜால்ரா’க்களையும் பற்றிய உண்மையான கேலிச் சித்திரம், ஆனால் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது.

ஆனந்த ஸாகரஸ்தவத்தில் பக்திப் பரவசத்தோடு தேவியைப் பாடுகிறார். அர்த்தநாரி வடிவத்தைப் பற்றிப் பேசும் போது சமத்காரமாகக் கேள்வி எழுப்புகிறார்:

“”நெற்றியின் மத்தியில் உள்ள கண்ணால் மன்மதனை எரித்ததில் சிவனுக்குப் பாதிப்பங்கு தான் உண்டு. அக்கீர்த்தியை அவர் முழுதும் எடுத்துக் கொண்டார். போனால் போகட்டும். ஆனால் இடது காலால் உதைத்து யமனை வென்றதில் அவருக்கு என்ன சம்பந்தம்?”

“சாந்தி விலாச’த்திலே நம்மை சிந்திக்க வைக்கிறார் ஒரு பாடலில்:

அகண்ட கடலை அகத்தியர் குடித்தார்
விசுவா மித்ரரோ விச்வமே படைத்தார்
அவரது அஸ்திரம் அனைத்தையும் தனது
பிரும்ம தண்டத்தால் பிளந்தார் வசிஷ்டர்
ஆற்றலில் தவத்தில் அவர்க்கிணை உண்டோ?
ஆயினும் ஒருநாள் அவர்களும் மறைந்தனர்
காலத்தின் பிடியில் கருகி மடிந்தனர்.
சகத்துள நாமோ சாச்வதமென்று
எண்ணி யிருத்தல் எத்தனை மடமை?
புத்தியின் துணையால், புலன் வசப்பட்ட
மனத்தை விட்டு மாட்சிமை பெறுவோம்.

இறுதியில் சரணாகதியே வழியென்று தேர்கிறார். அம்பிகையோடு தொடர்பில்லாத எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்குகிறார்.

ஆனந்த ஸாகரஸ்தவத்தில் அவரது பாடல்களில் இந்த மன நிலையைக் காண்கிறோம்:

உனக்கொரு கோவில் இல்லாத
ஊரில் இருக்க நான்விரும்பேன்:
உன்னைப் பற்றிப் பேசாத
உயர்ந்த வித்தை நான்வேண்டேன்:
உந்தன் பொன்னடி போற்றாத
ஒருவம் சத்தை நான்வேண்டேன்:
உன்னைப் பற்றிய நினைவில்லா
ஒருவாழ்க் கையையும் நான்வேண்டேன்.

பேயாய் உழலும் சிறுமனத்தின்
பிதற்றல் எதையும் கேளாது
தாயாம் சக்தித் தாளினிலே
தள்ளுவாய் வாழ்க்கைச் சுமையெல்லாம்.
சேயாம் உனக்குப் பிறவிக்கடல்
சிறியதோர் குட்டையாய் ஆகிவிடும்.
நீயும் எளிதில் அதைத் தாண்டி
நிர்மல சுகத்தைப் பெற்றிடலாம்.

பாடல்களின் தமிழ்வடிவம்: கட்டுரையாசிரியர்

சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

#image_title

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததும், புராண சிறப்பு மிக்க இந்த சிவன் கோவிலில், கடந்த ஒரு வருடமாக புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீநடராஜர், பைரவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சந்நதிகளும் முழுமையாக, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மகா கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. கடந்த 5 நாட்களாக மகா யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

இன்று அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி சந்நதி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் சந்நதி, பரிவார தெய்வங்களின் சந்நதிகள் மற்றும் கோவில் நுழைவு வாயில் கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாாரப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஏப்.26: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

#image_title

தங்கம் கடந்த வார விலையில் இருந்து சற்றே குறைந்து, நேற்று ரூ.160 குறைந்து சற்றே மனம் இரங்கிய நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து இல்லத்தரசிகளின் மனதில் பகீர் திகிலை ஏற்றியுள்ளது. இன்று சவரன் விலை ரூ.360 அதிகரித்து,சவரன் விலை ரூ.54,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக் கிழமை இன்று காலை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,755க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் விலை ரூ.54,040 என்ற அளவில் இருந்தது.

வெள்ளி விலை – நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.88க்கு விற்பனையாகிறது.

ஏப்..26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol-crude-oil

சுமார் 22 மாதங்களாக ஏற்ற இறக்கமின்றி, ஒரே விலையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 14 அன்று, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.2 அளவில் குறைப்பதாக அறிவித்தது.

அதன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி…

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.88 குறைந்து, ரூ.100.72க்கு விற்பனை செய்யப் படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் ரூ.1.90 குறைந்து, ரூ.92.34க்கு விற்பனை செய்யப் படுகிறது.

இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. .

சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும் .

பஞ்சாங்கம் ஏப். 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஏப்.26- வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||

!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!

!!ஸ்ரீராமஜயம்!!

श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை~ 13 (26.4.2024) வெள்ளி கிழமை.
வருடம் ~ க்ரோதி
{க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { *மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 7.26 am வரை த்விதியை பின் திருதியை
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 2.59am வரை அனுஷம் பின் கேட்டை
யோகம் ~ வரியான்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.00
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ த்ருதியை  
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் -26.04.2024


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்களால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பரணி : தடுமாற்றங்கள் உண்டாகும்.
கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


பிடிவாத குணம் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
ரோகிணி : மதிப்பு மேம்படும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : மகிழ்ச்சி ஏற்படும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். மனதில் புதுமையான சிந்தனை தோன்றும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடு அதிகரிக்கும். அசதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
பூசம் : செலவுகளை தவிர்க்கவும்.
ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


மனை சார்ந்த வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூரம் : மாற்றம் ஏற்படும்.
உத்திரம் : ஆதாயம் கிடைக்கும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : சுபமான நாள்.
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைபட்ட தனவரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
சுவாதி : நன்மை உண்டாகும்.
விசாகம் : மனக்கசப்புகள் குறையும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அனுகூலம் ஏற்படும்.
அனுஷம் : அனுபவம் உண்டாகும்.
கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான விஷயங்களில் அனுபவம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : மதிப்பளித்துச் செயல்படவும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்களின் வருகையால் சில மாற்றங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சோர்வுகள் குறையும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


மனதளவில் வித்தியாசமான சிந்தனை தோன்றும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.
சதயம் : ஒத்துழைப்பான நாள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : சுறுசுறுப்பான நாள்.



தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.