
இன்றைய பஞ்சாங்கம் – செப்.05
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஆவணி ௴ 19 ௨ { 5.9.2026 }
1.வருடம் ~ பராபவ ௵ பராபவ நாம ஸம்வத்ஸரம்}
2.அயனம் தக்ஷிணாயனம்
3.ருது ~ வர்ஷ ருதௌ
4.மாதம்~ ( ஸிம்ம மாஸம்)
5 பக்ஷம் கிருஷ்ண பக்ஷம்
6. ஸ்ரார்த்த திதி – நவமி – இரவு 9.16 வரை பிறகு தஸமி
7.நாள் சனிக்கிழமை) { ஸ்திர வாஸரம்}
8.நக்ஷத்ரம் இரவு 09.40 வரை மிருகசீரிஷம் பிறகு ஆர்த்ரா ( திருவாதிரை) ( ஸுப யோகம் )(உறியடி)
நல்ல நேரம் காலை 78 & 11 பிற்பகல் 1வரை மாலை 5-* இரவு 8 வரை&9* 10 பின் இரவு 12* அதிகாலை 3 வரை & 4 5
குளிகை ~ காலை 067.30AMகாலை 9~10.30AM.*
ராகுகாலம்
எமகண்டம் பிற்பகல் 01.3003PM
சூரிய உதயம் ~ காலை 6.01 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.26
சந்திராஷ்டமம் இரவு 9.40 வரை விசாகம் பிறகு அநுஷம்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (5-9-2026) ராசி பலன்கள்
மேஷம்
பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பினை மேம்படுத்துவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அஸ்வினி : முயற்சிகள் கைகூடும்.
பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரிஷபம்
பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் குறையும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் நெருக்கடிகள் குறையும். குழந்தைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரோகிணி : தடைகள் குறையும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
மிதுனம்
மன நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். செயல்களை திட்டமிட்டு செயல்படவும். புது விதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : திட்டமிட்டு செயல்படவும்.
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
கடகம்
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பணியில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வாதங்கள் மறையும்.
பூசம் : பொறுப்புகள் குறையும்.
ஆயில்யம் : அனுபவங்கள் கிடைக்கும்.
சிம்மம்
எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். இணைய சார்ந்த துறைகளில் மாற்றங்கள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : ஆதாயகரமான நாள்.
கன்னி
குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
உத்திரம் : சிந்தனை மேம்படும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : முதலீடுகளில் கவனம்
துலாம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம்
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
விருச்சிகம்
மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : குழப்பங்கள் ஏற்படும்.
அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
தனுசு
உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருள்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : பிரச்சனைகள் தீரும்.
உத்திராடம் : வரவுகள் கிடைக்கும்.
மகரம்
வியாபாரம் விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
திருவோணம் : புரிதல் மேம்படும்.
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்
தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபார கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றும். நிலுவையிலிருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : ஆர்வம் மேம்படும்.
மீனம்
உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : தெளிவுகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகமாகும்.
ரேவதி : திருப்தியான நாள்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ
(குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
– சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725)
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!
எந்த மனிதரிடமும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொள்வதும், பிரதி பலன் எதிர் பாராமல் அன்பு செய்வதும், அறம்! அனைவரும் அவரவர் பார்வையில், தங்களை சரியானவர்கள் என்று நினைப்பதை புரிந்து கொண்டு, எதையும் கடந்து போக கற்றுக்கொள்!! பட்டம், பதவி, பகட்டு வாழ்க்கையுடன், மனதின் மகிழ்ச்சியை, ஒன்றாக இணைத்து பார்ப்பதை நிறுத்தும் போது, உண்மையில் மனம், பக்குவம் அடைகிறது!!!










