பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன நாய் இருந்தது. சொல்ல ஆரம்பித்தார்….
“என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது. என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது; நான் மிகவும் நல்ல உணவளித்து நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிக்கவில்லை. நான் அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடும். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள். நான் அதை மிகவும் நேசிக்கிறேன். அதன் அலட்சிய போக்கை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்றார்.
டாக்டர் நாயைக் கூர்ந்து பார்த்தார். பதினைந்து நிமிடம் ஆராய்ந்துவிட்டு சொன்னார், “இந்த நாயை ஒரு இரவு என்னுடன் விட்டு விடுங்கள். நான் அதை கவனிப்பதன் மூலம் சிகிச்சை செய்வேன்.”
அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
மருத்துவர் தனது உதவியாளரை அழைத்து…அதை எருமை மாடுகளுடன் கட்டி, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் மட்டும் கொடுத்து, தோல் பெல்ட்டால் அடிக்கச் சொன்னார். மருத்துவரின் உதவியாளர் இரவு முழுவதும், டாக்டர் சொன்னபடியே சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.
மறுநாள் அந்த பெண்மணி வந்து கேட்டார்.
“ஐயா என் நாய்க்குட்டி எப்படி இருக்கு ?
டாக்டர் சொன்னார், “உங்கள் நாய்க்குட்டி நீங்கள் இல்லாத குறையை உணர்ந்து விட்டது என்று நம்புகிறேன்.”
டாக்டரின் உதவியாளர் நாயை அழைத்து வந்தார். நாய் அறைக்குள் வந்தவுடன்.. துள்ளிக் குதித்து மேடத்தின் மடியில் அமர்ந்து, வாலை அசைத்து, மேடத்தின் முகம், வாயை நக்க ஆரம்பித்தது.!! அவருக்கு மிகுந்த சந்தோஷம்.
மேடம் சொல்ல ஆரம்பித்தார்: திடீர்னு இந்த மாதிரி பாசக்காரனா மாறிட்டானே ? என்ன பண்ணீங்க சார்?
டாக்டர் கூறினார்: பெரிய ஏர் கண்டிஷனர் அறையில், தினமும் மிகவும் சுவையான உணவை சாப்பிட்டுவிட்டு, தன்னையே மாஸ்டர் என நினைத்து, தன் உரிமையாளரை மறந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும் உளவியல் மற்றும் உடல் சிகிச்சை தேவைப்பட்டது. கொடுத்தோம், இப்போது அது நலமாக உள்ளது.
சுருக்கம்:
நாட்டிற்குள்ளும் சிலருக்கு தேவை இந்த சிகிச்சை: 1) அன்னை பாரதத்தை அவமரியாதை செய்தல், 2) இந்தியாவை துண்டு துண்டுகளாக்குவோம் என்று மிரட்டுவது, 3) சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து சுதந்திரம் தேடுபவர்கள், 4) *எல்லை காக்கும் வீரர்களை அவமதிப்பு செய்தல், 5) எதிரி நாட்டை ஜிந்தாபாத் என்று அழைப்பவர்கள், அனைவருக்கும் இந்த வைத்தியம் தேவை. அப்போது தான் தில்லி மட்டுமல்ல, நாடு முழுவதும் பயங்கரவாதம், நக்சலிசம் ஒழியும்.
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களைக் காவல் துறையினர் ஒவ்வொருவராக பெயர் விவரம் கொடுத்த பிறகு தான் மலைக்கு செல்ல முடியும் என்று தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா அமைக்கப்பட்டுள்ளது. இன்று ரம்ஜானை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை செய்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் மலை மீது செல்ல முற்பட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மலைக்குச் செல்லும் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகே அனுமதிக்க முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “ஆண்டுதோறும் தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் நாள் அதுவும் நிறுத்தி ஒவ்வொருவராக அனுப்புவது சரியில்லை” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்றும், இது தங்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாகவும் கூறி காவல்துறையினருடன் அவர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் சசி பிரியா வழக்கமாக, மலை மீது செல்லும் அனைவரிடமும் கேட்கும் விவரங்களை கேட்க பிறகு தான் அனுப்ப முடியும் என்றும் புதிதாக எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவே, ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.
ஆனால் புனித ரமலான் நாள் அன்று அதிகமாக எங்களை தடுத்து நிறுத்துவது சரி இல்லை என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மலை மேல் தொழுகைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது பெயர் முகவரி தொலைபேசி எண் பதிவு செய்த பின், மலைக்கு தொழுகைக்குச் சென்றனர்.
श्री: श्री मते रामानुजाय नम: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி ~ 7 (21.3.2026) சனிக்கிழமை வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்} அயனம் ~ உத்தராயணம் ருது ~ சிசிர ருது. மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம்} பக்ஷம் ~ சுக்ல பக்ஷம். திதி ~ இரவு 2.27 am வரை த்ருதியை பின் சதுர்த்தி நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை. நக்ஷத்திரம் ~ இரவு 2.57 am வரை அசுவனி பின் பரணி யோகம் ~ மாஹேந்திரம் கரணம்~ தைதுளை அமிர்தாதியோகம் ~ சுபயோகம் ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30. எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00. குளிகை ~ காலை 6.00 ~ 7.30. நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm சூரிய உதயம் ~ காலை 6.21 சந்திராஷ்டமம் ~ கன்னி சூலம் ~ கிழக்கு. பரிகாரம் ~ தயிர் ஸ்ராத்த திதி ~ த்ருதியை இன்று ~
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..
இன்றைய (21-03-2026) ராசி பலன்கள்
மேஷம்
சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். பத்திரம் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மீது இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அஸ்வினி : அங்கீகாரம் கிடைக்கும். பரணி : வாய்ப்புகள் ஏற்படும். கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். நண்பர்களின் கருத்துக்களை புரிந்து முடிவு எடுக்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வங்கி செயல்களில் பொறுமை வேண்டும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
தொழில் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்கள் மூலம் இனிமையான அனுபவங்கள் ஏற்படும். பீரிதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும். திருவாதிரை : ஆதரவான நாள். புனர்பூசம் : அனுபவங்கள் ஏற்படும்.
கடகம்
மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும். பூசம் : முன்னேற்றம் உண்டாகும். ஆயில்யம் : உதவிகள் சாதகமாகும்.
சிம்மம்
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். பூரம் : புத்துணர்ச்சியான நாள். உத்திரம் : திருப்தியான நாள்.
கன்னி
குழந்தைகளால் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். பொழுது போக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : தாமதம் உண்டாகும். அஸ்தம் : ஆர்வமின்மை ஏற்படும். சித்திரை : நிதானம் வேண்டும்.
துலாம்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள். சுவாதி : சலுகைகள் கிடைக்கும். விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
நிர்வாகத் பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெளியூர் வேலை வாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களால் உங்கள் இலக்குகளில் தடுமாற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : கவனம் வேண்டும். அனுஷம் : மாற்றம் ஏற்படும். கேட்டை : ஆலோசனை கிடைக்கும்.
தனுசு
உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்கால துறைகளில் நிபுணத்துவம் வெளிப்படும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : பொறுமை வேண்டும். பூராடம் : வருமானம் அதிகரிக்கும். உத்திராடம் : நிபுணத்துவம் வெளிப்படும்.
மகரம்
செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் ஓரளவு குறையும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் வழி கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அவிட்டம் : தன்னம்பிக்கை ஏற்படும். சதயம் : ஆர்வம் ஏற்படும். பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வேலை ஆட்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். இழுபறியான செயல்களையும் சாதுரியமான முறையில் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள். உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். ரேவதி : அறிமுகங்கள் ஏற்படும்.
தினம் ஒரு திருக்குறள்
thiruvalluvar
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்! முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!! ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்! நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!! உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!
அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுவைக் கொலை செய்ய முயற்சித்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவை செக் நாட்டில் ஜுன் 30 2023 ல் அமெரிக்க FBI கைது செய்தது. மேலும் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் பணி செய்யக்கூடிய விகாஸ் யாதவ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயர்களையும் அமெரிக்கா காட்சிக்குள் கொண்டு வந்தது.
உடனே இந்தியாவில் வாழக்கூடிய தேச விரோதிகள், ‘பாகிஸ்தான் என எண்ணி விட்டீர்களா, இது அமெரிக்கா! அவர்களிடம் உங்களுடைய பாச்சா பலிக்காது’ என அமெரிக்கா பற்றி பெருமை பேசிக் கொண்டார்கள். கூடவே இந்திய அரசுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வாரி வழங்கினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது வெளிநாட்டவர் ஏழுபேர் கைது என்ற செய்தி.
மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதனைச் சுற்றியுள்ள மலைப் பாங்கான இடங்களில் குக்கி இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குக்கி இன மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.
மெய்தி இனம் நாங்களும் இந்த நாட்டுடைய குடிமக்கள் தான் எங்களுக்கும் சில சலுகைகள் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். பல கட்ட போராட்டங்களுக்கு பின் ஏப்ரல் 2023 உச்ச நீதிமன்றம் மெய்தி இன மக்களுக்கு சில சலுகைகளை வழங்கி உத்தரவிட்டது.
இதனை அடுத்து குக்கி இன மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் குறைந்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் மே 3 2023 மாபெரும் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கான மெய்தி இன மக்களைக் கொன்று குவித்தார்கள். பல ஆயிரம் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
மெய்தி இன மக்கள் கடுமையான உழைப்புடன் ஓரளவுக்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருவதால் அவர்களை கண்டு குக்கி இன மக்களுக்கு #பொறாமை ஏற்படுவதுண்டு. எனவேக் கலவரத்தை காரணமாக வைத்து மெய்தி இன மக்களின் சொத்துக்களைச் சூறையாடினார்கள்.
ஒண்ட வந்த பிடாரி கதையாக இந்திய தேசத்தின் உண்மையான குடிமக்களை மியான்மர் நாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்த மர்ம நபர்கள் கிறிஸ்தவராக மதம் மாற்றி உண்மையான மக்களை துரத்த ஆரம்பித்தார்கள். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்திய அரசு 40 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மணிப்பூரில் இறங்கியது.
இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்ததின் காரணமாக பிரச்னை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசுக்கு நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போராட்டமாக இது தெரிய ஆரம்பித்தது. இந்தப் பிரச்சனைக்கு பின்னால் மாபெரும் சக்திகளின் கைகள் இருக்கக் கூடும் என இந்திய அரசு உணரத் தொடங்கியது.
இந்த நேரத்தில் குக்கி இன மக்கள் 40க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார்கள். சமகால சர்வதேச அரசியல் பற்றிய எதுவும் தெரியாமல் இருக்கக் கூடிய திராவிட ஸ்டாக்குகள் போன்று எந்த விதமான அறிவியல் பூர்வமான பொது அறிவும் இல்லாத மலைவாழ் மக்களிடம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ட்ரோன்கள் இருப்பது இந்திய ராணுவத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் இந்திய அரசு இதனைப் பற்றி பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
2025 மார்ச் மாதம் மிசோரம் மாநில சட்டசபையில் அம்மாநில முதலமைச்சர் சில கேள்விகளை முன்வைத்தார். அதாவது தங்கள் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக வெளிநாட்டவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், அதில் பலர் எல்லை தாண்டி மியான்மர் நாட்டுக்குள் சென்றதாகவும் கருத்து தெரிவித்து இரூந்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் இரு தினம் முன் இந்திய அரசு ஒரு முக்கிய செய்தியை உலகத்திற்கு கொடுத்து இக்கின்றது. சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த சில வெளிநாட்டவர்கள் விதிமுறையை மீறியும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்றதாகவும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் அனைவரையும் கைது செய்ய பட்டதாகவும் தெரிவித்தது.
சில நாடுகளிலிருந்து இந்தியா வந்த இவர்கள் பல இடங்களுக்கு தனித்தனியாக யாருக்கும் சந்தேகம் வராதபடி பிரிகின்றார்கள். பின்னர் ஒரே புள்ளியில் கூடுகின்றார்கள். தங்கள் வேலை முடிந்தவுடன் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று தங்கள் நாடுகளுக்கு புறப்பட தயாராகின்றார்கள்.
என்.ஐ.ஏ., சில திமிங்கலங்களை வேட்டையாட சரியான நேரம் பார்த்து வலை விரித்துக் காத்துக்கொண்டிருந்த அந்த வேளையும் வந்தது. கொல்கத்தா விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவனை என் ஐ ஏ., கைது செய்தது. அதேபோன்று லக்னோ மற்றும் தில்லி விமான நிலையத்திலும் மொத்தம் 6 உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தது. பின்னர் தில்லியில் உள்ள #பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். இதில் முக்கியமாக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏ உளவாளியும் son of Liberty அமைப்பின் தலைவருமான மேத்திவ் வாண்ட்கே.
இவர்கள் மொத்தமாக இந்தியாவுக்கு சுற்றுலா வந்து தனித்தனியாகப் பிரிந்து சென்று பின்னர் மிசோரம் மாநிலத்தில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். மிசோரத்தில் உள்ள சமூக விரோதிகளின் துணையுடன் மியான்மர் நாட்டுக்கு தப்பிச் சென்று இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேலும் பல போர் தந்திர நெறிமுறைகளை நவீன ஆயுதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிம் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இருந்து நவீன உபகரணங்கள் டிரோன்கள் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இவர்களின் உரையாடல்கள் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்துமே எலன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார் லிங் செயற்கைக்கோள் இணையம் வழியாக நடைபெற்றுள்ளது.
அமெரிக்க உளவாளியான இவனை உளவாளி என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் உளவாளி என்பவன் உளவு மட்டுமே பார்ப்பான். ஆனால் இவன் தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து அந்த அரசுகளுக்கு எதிராகவே ஆயுதம் தூக்கிப் போராடக் கூடியவன். லிபியாவில் புரட்சி நடைபெற்ற போது தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து ஆயுதம் எடுத்து லிபியா அரசுக்கு எதிராகப் போராடியவன். சிரியா நாட்டுக்குச் சென்று சிரிய நாட்டு தீவிரவாதக் குழுவுடன் இணைந்து அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராடியவன்.
தற்போது இந்தியாவுக்கு வந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இப்போது கைது செய்யப்பட்டு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய உளவுத்துறை இவன் முன் வைக்கக்கூடிய கேள்விகள்:
எங்கெல்லாம் சென்றார்கள் யாருடன் தொடர்பு வைத்துக் கொண்டார்கள் என்ன திட்டத்துடன் வந்தார்கள் இவர்களுக்கு உதவி செய்த உள்ளூர் சமூக விரோதிகள் யார் இவர்களை அனுப்பி வைத்தது யார்
விஷயம் கொதிநிலையில் சென்று கொண்டிருக்கும்போது இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம், கைது செய்யப்பட்டுள்ள தங்கள் நாட்டு குடிமகன்களைப் பார்ப்பதற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என புகார் கூறியிருக்கிறது.
உங்கள் நாட்டு குடிமகன்களாக இருக்கலாம், தற்போது அவர்கள் இந்தியாவில் தீவிரவாதிகளாகச் செயல்பட்டுள்ளார்கள். இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு எப்படி உடனடியாக அனுமதி கொடுக்க முடியும்?
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் அவசரமாக இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசி இருக்கிறார். நிச்சயமாக இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நிகில் குப்தா பற்றி பேசி இருக்கக்கூடும். இறுதியாக அமெரிக்கா என்ன முடிவு எடுக்கிறதோ அதன் அடிப்படையில் இந்தியாவுடைய முடிவும் இருக்கும் என பேசி இருக்கக்கூடும். நாங்கள் தேடப்படும் ஒரு தீவிரவாதிக்கு எதிராக மட்டுமே செயல்பட்டோம். ஆனால் அமெரிக்க அரசு இந்திய அரசுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பேசி இருக்கலாம்.
RAW மீது தடை விதிக்க வேண்டும் என ஒரு தற்குறி ஆணையத்தை வைத்து அறிக்கை விட்டீர்கள். இப்பொழுது நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக CIA அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை ஒன்று திரட்டி தீர்மானம் கொண்டு வரட்டுமா? என இந்தியர்கள் கேட்கிறார்கள்.
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உலகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஏன் இந்தியாவிலுள்ள கேடுகெட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. ஆனால் அவர்கள் இந்தியத் திருநாட்டுக்கு எதிராக அந்நிய சக்திகளுடன் இணைந்து எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தெள்ளத் தெளிவாக தெரிய வருகின்றது.
ஆயுதம் தூக்குபவன் மட்டும் தீவிரவாதி அல்ல அதற்கு துணை போகும் நபர்களும் தீவிரவாதிதான். அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . மேலும் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளிடம் எத்தகைய தாக்குதைலை நடத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தீர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். அன்று பஞ்சாயத்திற்காக இந்திய அதிகாரிகளை அமெரிக்கா அழைத்தார்கள். ஆனால் இன்று தீர்ப்பு சொல்ல வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது .
இந்தியாவில் நடக்கக்கூடிய ஒரு சம்பவத்தை உலகமே ஆதரிக்கிறது என்றால் கண்டிப்பாக அதில் அந்நிய நாட்டின் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக செயல்படுவதாக எண்ணி தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களும் திருந்த வேண்டும். மிக நுட்பமான முறையில் சதி திட்டங்களில் ஈடுபட்ட இவர்களை கைது செய்து பல சதிகாரர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இந்திய திருநாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
அனேகமாக துரந்தர் 3.0 படம் எடுக்கும் அளவிற்கு இந்த சம்பவம் இருக்கின்றது. கண்டிப்பாக இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட வேண்டும். இந்திய தேசத்திற்கு எப்படி எல்லாம் ஆபத்து வருகிறது என அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நொடியும் இந்திய தேசத்தைப் பாதுகாக்க காடுகளில் குகைகளில் பாதாள சுரங்கங்களில் அரசனாக ஆண்டியாக பிச்சைக்காரனாக பைத்தியக்காரனாக தங்கள் நடை உடை பாவனை என அனைத்தையும் மாற்றி இந்த மண்ணைத் தங்கள் கண்களாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று கண்டிக்காத எங்களை போன்றவர்கள் மீது அவர்கள் எரிச்சல் திரும்பி உள்ளது.
அமெரிக்க சொல்லாடலில் இதை ‘வட்டமாக சுற்றி சுடுவது’ என்பார்கள். அதாவது தங்களை தாங்களே சுட்டுக் கொள்வது. இந்தியா உயர்ந்த தார்மீக பீடத்தில் ஏறிக்கொண்டு, இது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவது என்று கூறி நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நான் முதலில் சில விஷயங்களை தெளிவு படுத்தி விடுகிறேன் : சர்வதேச சட்டங்களின்படி இந்த போரை நியாயப்படுத்த முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பிற நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது ,இறையாண்மை மதிக்க வேண்டும், பிரச்சனைகளை பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா எப்போதும் வலியுறுத்தும் விஷயங்களுக்கு இது முரணானது . நான் ஏற்கனவே சொன்னது போல், தற்காப்பு நடவடிக்கையாக முன் கையெடுத்து தாக்குவது என்றும் இதை சொல்ல முடியாது.
ஈரானின் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது நாம் உடனடியாக இரங்கலை தெரிவித்தோம். அதேபோல் இப்போது ஈரானின் உச்சப்பட்ச தலைவர் கொல்லப்பட்டபோது உடனடியாக நமது கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். இதைச் சொல்ல எனக்கு சுதந்திரம் உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியில் இருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட எனது நண்பர்களுக்கும் இருக்கிறது. ஆனால் , இந்திய அரசு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் அமைதி காப்பதை நான் கண்டனம் செய்ய மாட்டேன்.
எப்போதுமே இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் கொள்கைகளையும் நிதர்சனத்தையும் கருத்தில் கொண்டு, இரண்டையும் சமன்படுத்தும் விதமாகவே இருந்துள்ளன. ஜவஹர்லால் நேருவின் அணிசேரா கொள்கை என்பது தார்மீக நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் தவிர்த்தது அல்ல. மாறாக இரு துருவ பனிப்போரில் சிக்கிக் கொள்ளாமல் தவிப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் இருப்பையும் தக்க வைத்துக் கொண்ட சாதுர்யம்.
உலகம் இன்று பல அதிகார மையங்களை கொண்டதாக மாறியுள்ளது. எதிர் எதிரான சக்திகளுடன் ‘பல்முனை உறவை’ இந்தியா பேணி வருகிறது. நம் தேச நலனை முக்கியமாக கொண்டு சில நேரங்களில் கடுமையான நிலைப்பாட்டையும் மேற்கொள்கிறது.
குறிக்கோள் மாறாமல் இருக்கிறது :
உலகில் நீதி நியாயத்தை பேசும் அதே வேளையில் இந்தியாவின் இறையாண்மையை காத்துக் கொள்ள வேண்டும். தேசபக்தியை யாருக்கும் மொத்த குத்தகைக்கு விடவில்லை. காந்தி , நேரு சொல்லித்தந்த பண்புகளை விளக்கம் அளிக்கும் உரிமை எந்த ஒரு சாராருக்கு மட்டும் இல்லை. அவர்கள் சொன்ன குணங்களை நம் காலத்து சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தி செயல்படுவதே நாம் அவர்களது வாரிசுகள் என்பதற்கு உண்மையான அடையாளம். நம் நாட்டு நலன்களை காவு கொடுத்துவிட்டு சுயபரித்தியாகம் செய்ததாக சொல்லிக் கொள்வதில் இல்லை.
தேச நலனும் நெறி சார்ந்த விழுமியங்களும் முரண்படும்போதெல்லாம் இந்தியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளதை இன்று விமர்சனம் செய்பவர்கள் வசதியாக மறந்து விட்டனர். 1956 இல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் அப்பட்டமான அத்துமீறலை நாம் கண்டனம் செய்யவில்லை. அதேபோல் 1968 ல் செக்கோஸ்லோவாகியாவிலும் 1979 இல் ஆப்கானிஸ்தானிலும் நடந்தபோது நாம் அமைதியாக இருந்தோம். அது ஏன் ?
ஏனெனில் நாம் தார்மீக நிலைப்பாட்டை மேற்கொண்டால் அது மாஸ்கோவுடன் நமக்கு இருக்கும் நல்லுறவை சிதைத்து விடும் என்று சரியாக கணித்தோம். சோவியத் யூனியன் நமக்கு முக்கியமான ஆயுத வியாபாரி. ராஜதந்திர நிலைப்பாடுகளில் நமக்கு கூட்டாளி. மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க சரியான மாற்று.
அமைதியாக இருந்ததன் மூலம் நாம் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரித்ததாக அர்த்தம் இல்லை. எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டால் அதற்கான விலை என்ன என்பதை புரிந்து கொண்டோம். அதனால் ஆவேசமான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை. இன்று உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு , ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலிலும் அதே வாதத்தின் நீட்சியாக நம் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, ஈரானிய ஏவுகணைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள வளைகுடா நாடுகளிலும் நமக்கு ஏராளமான பணயம் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 200 பில்லியன் டாலருக்கு இந்த பகுதியில் நாம் வர்த்தகம் செய்து வருகிறோம். நமது எரிசக்தி தேவை வளைகுடா எண்ணெய் , இயற்கை எரிவாயுவை சார்ந்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் வசிக்கும் ஒன்பது மில்லியன் இந்தியர்களின் நலன் அந்த பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் நேரடியாக தொடர்புடையது.
ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் போரை தார்மீக அடிப்படையில் கண்டனம் செய்வதாக பாசாங்கு செய்தால் அவர்களுடனான நமது உறவு பாதிக்கப்படும். அது மட்டுமன்றி அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் சம்பள பணம் – இதுதான் பல லட்சம் இந்திய குடும்பங்களுக்கு ஆதாரமாக உள்ளது, நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான எரிசக்தி, நம் வளர்ச்சிக்கு ஆதாரமான வர்த்தகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் அமைதியாக இருப்பது கோழைத்தனம் அல்ல. நம்முடைய தேச நலனும் அந்த பிராந்திய நிதர்சனங்களும் சிக்கல்களும் பின்னி பிணைந்துள்ளன என்பதை புரிந்து கொண்ட தெளிவை காட்டுகிறது.
வாஷிங்டனின் உள்ள அரசின் இயல்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றுள்ள ஐக்கிய அமெரிக்கா நாம் எதிர்பார்ப்பது போல சர்வதேச சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன் நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்களை விளாசத் தயங்குவதில்லை. போரானது இதுவரை நாம் மேற்கொண்ட நெறிகளுக்கு முரணாக இருக்கிறது என்றாலும் அமெரிக்காவுடன் நமக்கு இருக்கும் வேறு பல ஆதாயங்களை காவு கொடுப்பது அறிவார்ந்தது அல்ல.
சீனாவின் வளர்ச்சியினால் நமக்கு எழுந்துள்ள கவலைகள் எல்லாம் அமெரிக்காவின் ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்பக் கூட்டு, உறுதியான நட்புறவை பக்கபலமாக சார்ந்துள்ளோம். ஈரான் போரில் நெறி சார்ந்த நிலைப்பாட்டை மேற்கொண்டு அமெரிக்காவை முறைத்துக் கொண்டால் அது நம்முடைய முக்கியமான நலன்களை இழப்பதற்கு ஈடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அயலுறவு கொள்கை என்பது நம்முடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்வதும், நம் நலன்களை முன்னெடுத்துச் செல்வதும், அமைதியை நிலை பெற செய்வதற்குமானது.
இப்போது தார்மீக உயர்நிலைப்பாட்டை மேற்கொள்வது நம்முடைய நலன்களுக்கு உகந்தது அல்ல. அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை தாங்கிக் கொள்ள முடியும் என்றால் அந்த நிலையை மேற்கொள்ளலாம். ஆனால் இன்று நம்மால் அந்த நிலையை மேற்கொள்ள இயலாது.
யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடப்பது என்றால் வேறு எவரையோ பின்பற்றுவதாகாது. பல பன்னாட்டு அரங்குகளில் இந்தியா உலக நீதியை பலமுறை பேசியுள்ளது. ஆனால் எப்போது நம் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். சமநிலையை பேணும் இந்த புரிதல் பொறுப்பான அரசியல் களமாடலில் அவசியம்.
ஆதாயம் அற்ற சூழ்நிலையில் அமைதியாக இருப்பது விவேகமானது. அது நம்முடைய நலன்களை பாதுகாக்கும் என்பது மட்டுமின்றி தேவைப்படும் போது அமைதியாக ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாகும். தேவையற்ற மோதலை தவிர்த்து உரிய நேரத்தில் இரண்டு தரப்பினரிடையே பேசி அமைதி திரும்ப வழிவகை காண இயலும். அதற்கு நாம் ஊடகமாக இருக்க முடியும்.
போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று கேட்கும் இந்திய முற்போக்காளர்கள் நெறி சார்ந்த நிலைப்பாட்டை தார்மீக தைரியம் என்று தவறாக புரிந்து வைத்துள்ளார்கள். அயலுறவு கொள்கை என்பது வகுப்பறையில் பாடம் எடுப்பது அல்ல. இதை மறந்து விடக்கூடாது. அது அதிகாரமும் கொள்கைகளும் எதிரெதிரே நிற்கும் போட்டி அரங்கம். அந்த களத்தின் விளைவுகள் பல கோடி உயிர்களை, வாழ்க்கையை பாதிக்க கூடியவை. இதை கருத்தில் கொள்ளாமல், கண்டனம் செய் என்று அடுக்குமொழியில் அலற்றுவது பொறுப்பின்மையின் உச்சமாகும்.
நாம் தார்மீக சக்தியின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று காந்தி சொல்லித் தந்துள்ளார். சர்வதேச சட்டங்கள்தான் அமைதியின் ஊற்றுக்கண் என்று நேரு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் நம் தேச நலன் முக்கியம் என்பதையும் புரிந்து கொண்டவர்கள். அவர்களது வாரிசுகள் இறுகிய பற்றாளர்கள் இல்லை. மாறாக , சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களது கூற்றை நடைமுறைப்படுத்துபவர்கள்.
ஈரான் மீது நடக்கும் போரை சர்வதேச சட்டங்களால் நியாயப்படுத்த முடியாது. இந்தியா அமைதியாக இருப்பதால் போரை அது ஆதரிப்பதாக கருதக்கூடாது. நம் தேச நலனை பற்றி புரிந்து கொண்ட செயலறிவு முக்கியமே அன்றி நெறி சார்ந்த நிலைப்பாடல்ல.
இந்திய அரசுக்கு நான் ஆலோசனை கூற வேண்டுமென்றால், அது எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும், அடக்கி வாசியுங்கள் என்றுதான் கூறுவேன். நம்மை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருப்பதே பலம். கொள்கையையும் யதார்த்தத்தையும் சமன் செய்வதே வலிமை. நம்முடைய நலன்களை பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய விழுமியங்களை மதிப்புறச் செய்ய வேண்டும். ஆபத்தான உலகில் அறிவின் துணையுடன் பயணிக்க வேண்டுமே அன்றி போலி துணிச்சலுடன் தற்பெருமையோடு எதிர்கொள்ளக்கூடாது.
புவிசார் அரசியல் நிதர்சனங்களை புரிந்து கொண்டு , இந்திய பொருளாதாரத்தின் மீது ஏற்படும் விளைவுகளை எடை போட்ட பிறகு, விவேகமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் அரசு ‘சரணாகதி அடைந்த’ அரசு அல்ல. பொறுப்பை உணர்ந்த சாதுரியமாக அரசு.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். அயலுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர்.
பங்குனி ~ 06 (20.3.2026) வெள்ளி கிழமை. வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}. அயனம்~ உத்தராயணம் ருது ~ சிசிர ருது. மாதம் ~ பங்குனி மாஸம் { மீன மாஸம்} பக்ஷம் ~ சுக்ல பக்ஷம். திதி~ மறுநாள் காலை 4.27 am வரை த்விதியை பின் த்ருதியை நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை. நட்சத்திரம்~ மறுநாள் காலை 4.14am வரை ரேவதி பின் அசுவனி யோகம் ~ ப்ராம்மம் கரணம் ~ பாலவம் அமிர்தாதியோகம் ~ சுபயோகம் நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00. ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00. எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30. குளிகை ~ காலை 7.30 ~ 9.00. சூரிய உதயம் ~ காலை 6.21 சந்திராஷ்டமம் — சிம்மம் சூலம் ~ மேற்கு பரிகாரம் ~ வெல்லம் ஸ்ரார்த்த திதி ~ த்விதியை இன்று ~ கரிநாள்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 20.3.2026
மேஷம்
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கும். பயனற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்குகளை நோக்கி செயல்களில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அஸ்வினி : லாபகரமான நாள். பரணி : வேறுபாடுகள் நீங்கும். கிருத்திகை : குழப்பங்கள் மறையும்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்டதிசை : மேற்கு அதிர்ஷ்டஎண் : 9 அதிர்ஷ்டநிறம் : வெண் மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும். திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும். புனர்பூசம் : இழுபறிகள் குறையும்.
கடகம்
எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்டதிசை : கிழக்கு அதிர்ஷ்டஎண் : 5 அதிர்ஷ்டநிறம் : சில்வர் நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். பூசம் : தொடர்புகள் அதிகரிக்கும். ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும்.
சிம்மம்
குடும்பத்தினரை விட்டுக் கொடுத்து பேசுவதை தவிர்க்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். திடீர் பயணங்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். அலுவலக பணிகளில் ஆணவம் இன்றி செயல்படவும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மகம் : நிதானத்துடன் செயல்படவும். பூரம் : குழப்பமான நாள். உத்திரம் : கவனம் வேண்டும்.
கன்னி
தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் ஒற்றுமை ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். அஸ்தம் : சுறுசுறுப்பான நாள். சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.
துலாம்
கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் செல்ல நேரிடும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். உழைப்பு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : வித்தியாசமான நாள். சுவாதி : அனுசரித்து செல்லவும். விசாகம் : புதுமையான நாள்.
விருச்சிகம்
செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவசாயத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பொன் பொருள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்டதிசை : மேற்கு அதிர்ஷ்டஎண் : 4 அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஆர்வமின்மை ஏற்படும். அனுஷம் : அனுசரித்து செல்லவும். கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மூலம் : மந்தமான நாள். பூராடம் : புரிதல் ஏற்படும். உத்திராடம் : உதவிகள் சாதகமாகும்.
மகரம்
முயற்சிக்கு ஏற்ப வெற்றியும் பாராட்டும் கிடைக்கும். புது விதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுவிதமான கனவுகளை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : பாராட்டும் கிடைக்கும். திருவோணம் : புத்துணர்ச்சியான நாள். அவிட்டம் : மேன்மையான நாள்.
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான நிலை ஏற்படும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இணையம் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : மாற்றமான நாள். சதயம் : திறமைகள் வெளிப்படும். பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
மீனம்
மற்றவர்களை பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். கல்வி பணிகளில் பொறுமை வேண்டும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்டதிசை : மேற்கு அதிர்ஷ்டஎண் : 8 அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீல நிறம்
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!! உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!
பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர் சோதனை சாவடி பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பயணித்த கார் சோதனை.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுரை–தூத்துக்குடி நெடுஞ்சாலையின் ஆவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பயணித்த கார் திடீரென நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, முதல்வரின் அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டதுடன், காரில் இருந்த சூட்கேஸ் மற்றும் பிற பொருட்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு உறுதி செய்யும் வகையில் எந்த வாகனமும் விலக்கு இல்லாமல் சோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க சி ஐ ஏ ஏஜென்ட் இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் சிக்கியுள்ளான். கூட ஐந்தாறு உக்ரைன்காரர்கள் வேறு. அமெரிக்க நாட்டின் கெடுதலை நினைப்பவர்கள் பாரதத்தில் ஒருவர் கூட இல்லை. ஆனால் உலக நலனை விரும்புகிறவர்கள் அமெரிக்காவில் ஒருவர் கூட இல்லை.
நாம் நன்றாக இருக்கவேண்டுமென்றால் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதோடு அடுத்தவன் நன்றாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அவர்கள் எல்லாரும் உயிரோடு இருக்கவேண்டும், நாம் போடும் பிச்சைக்கு ஏங்க வேண்டும், நம்மையே முதலாளியாக எண்ணவேண்டும், நிரந்தர தாழ்வு மனப்பான்மையோடு நம்மை கடவுளுக்கு இணையாக பார்க்கவேண்டும். இந்த எண்ணத்தை ஆழ்மனதில் விதைத்து வைத்துள்ளது அமேரிக்கா அவர்களது மக்கள் மனதில்.
இந்தியா தங்களுக்கு உதவவில்லை, போரையும் நிறுத்தவில்லை என்பதற்காக கூலிப்படைகளை அனுப்பியுள்ளது இரு நாடுகளும். இந்த இரண்டு நாடுகளிலும், பாரத நாட்டில் இருப்பது போல தங்கள் நாட்டை நேசிக்கும் தேசபக்தர்கள் எல்லாம் கிடையாது. தங்கள் நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய சுகத்தை நாடு உத்தேசிப்பதால், நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் கூட்டம் தங்களுக்கு பணம் தருகிறது என்பதால் நாட்டுக்காக வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான்.
சிவப்பு பயங்கரவாதத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்துவிட்டதால், மீறி வந்தால் பாரதம் உள்ளே வந்து தாக்கும் என்பதால் உள்ளே வராமல் இருக்கும் இடத்திலிருந்தே தாக்கும் டிரோன்களுக்கான பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். ஏற்கனவே உக்ரைன் டிரோன் விஷயத்தில் ரஷியா கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறது. அதனால் இந்த பகுதியில் கிருஸ்தவ நாடு உருவாக்குவதை விட, கிறிஸ்தவம் என்ற பெயரில் சிகப்பு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுதான் திட்டம். அங்குள்ள லூஷாய், ஹுமார், லாய், ரால்ட், மற்றும் சகமா இனங்களை தூண்டி விட்டு, போதை பொருளை ஊக்குவிப்பதே நோக்கம்.
ஏற்கனவே பாகிஸ்தானில் விளைந்துள்ள போதைப்பொருட்களை அரபிக்கடல் வழியாக கடத்த முடியவில்லை. கவனித்து பார்த்தீர்களென்றால் சமீப காலமாக கடலில் பெருமளவில் பொருள் எதுவும் சிக்கவில்லை. காரணம், இந்திய இராணுவம். மாட்டினால் தொலைந்தோம் என்று வரவில்லை. அதனால் சீனா வழியாக மியான்மார் வழியாக மிசோரம் பகுதியில் கால் பாதிக்க திட்டம்.
கில்கிட் பகுதியை பாகிஸ்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் வந்த வினை. அப்படியே நடந்து போகிறார்கள் திபெத், சீனா என்று. ஆனால் பலூச் புரட்சியாளர்கள் அடித்து நிமிர்த்துவதால், ஆப்கனிஸ்தான் இன்னொரு பக்கம் துளைத்து எடுப்பதால் நேரடியாக பாரதம் போர் என்று எதுவும் புரியாததால், பழியை பாரதத்தின் மீது போட்டுவிட்டு, பலூச்ச்சையும், ஆப்கானியர்களையும் எதுவும் செய்ய முடியாததால் இப்படி திருட்டு அடி அடிக்க வந்துவிட்டார்கள்.
இப்போது ஒரேயொரு வழி இருக்கிறது. வந்திருக்கும் அமெரிக்கனையும், உக்ரைன்காரனையும் நாம் கொல்லக்கூடாது. விசாரணை, விசாரணை என்று வைத்து அவனை வெறுப்பேற்றி, தூதரக உதவியை கோர முடியாதென்பதால், யாரையும் சந்திக்க முடியாமல் செய்து, ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விசாரணையை பதிவு செய்து வெளியிட்டு எங்களை அனுப்பியது அமெரிக்க சி ஐ ஏ மற்றும் உக்ரைன் அரசுதான் என்று சொல்ல வைத்துவிட்டால் போதும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்துவிடலாம்.
உலக பயங்கரவாதி அமெரிக்காவுக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு மனமெல்லாம் கிடையாது என்பது ஒரு புறம். ஆனால், அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் லாபி செய்து, என்ன காரணத்துக்காக உலக நன்மையை உத்தேசித்து, உழைத்து முன்னேற துடிக்கும் ஒரு நாட்டுக்கு எதிராக, பயங்கரவாதத்தை தூண்ட ஆட்களை அனுப்பினீர்கள் என்று கேட்டு இதற்கு நேரடி பொறுப்பேற்று அதிபரை ராஜினாமா செய்ய சொல்லி தூண்டலாம். அமேரிக்கா சென்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அல்லது பெரிய பத்திரிக்கைகளை இங்கு வரவழைத்து அவர்களுக்கு பேட்டி அளித்து தலைகுனிவை ஏற்படுத்தலாம்.
இதே வேலையை உக்ரைனுக்கும் செய்ய வேண்டும். நாட்டை ஒழுங்காக ஆண்டு, பக்கத்து நாடான ரஷியாவுடன் நட்பு பூணாமல் சண்டை போட்டு பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து வரும் பைத்தியம், சம்பந்தமே இல்லாத பாரதத்தில் பயங்கரவாதத்தை தூண்டுகிறது, போரை தூண்டுகிறது என்று கலகம் செய்யலாம்.
ஆனால், ஒன்று நிச்சயம். இவ்வளவு பலம் குறைந்த எதிரி என்று மியான்மாரை நினைக்கவே கூடாது. அப்படி நினைக்காமல் கவனமாக இருந்ததால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மாமனிதர்களுக்கு நன்றி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மார்ச் 10ம் தேதி காணாமல் போனார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்த விவகாரத்தில் மாணவி மாயமானதாக புகார் வந்ததும் வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளி, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்றும், மாணவியின் விரல் நகங்களில் இருந்த சதையின் டிஎன்ஏ மாதிரியுடன் தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ ஒத்துப் போனதாகவும் போலீசார் கூறினர்.
கைதான தர்ம முனீஸ்வரன், 2020இல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவர், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தனது சந்தேகத்தை சமூகத் தளப் பதிவில் வெளியிட்டிருக்கிறார் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவரது கேள்விகள்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin , இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.