
இன்றைய பஞ்சாங்கம்: ஜூன் 14
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி ~ 31 ( 14.6.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ பகல் 11.50 am வரை சதுர்தசி பின் அமாவாஸ்யை.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ இரவு 10.41 pm வரை ரோஹினி பின் ம்ருகசீர்ஷம்.
யோகம் ~ த்ருதி.
கரணம் ~ சகுனி / சதுஷ்பாதம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 am & 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 5.54.
சந்திராஷ்டமம் ~ துலாம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ அமாவாஸ்யை.
இன்று ~ ஸர்வ அமாவாஸ்யை.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (14-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். மனதை உறுத்திய கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : குழப்பங்கள் மறையும்.
கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரிஷபம்
தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். சில செயல்களில் கட்டுப்பாடுடன் இருக்கவும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உருவாகும். விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
மிதுனம்
தாய்மாமன் வழியில் அனுசரித்து சென்றால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் முக்கியமான சில பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். இனம் புரியாத சில நினைவுகள் மூலம் கவலைகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.
புனர்பூசம் : கவலைகள் மறையும்.
கடகம்
சபை சார்ந்த துறைகளில் பொறுமையை கையாள வேண்டும். மனதில் நினைத்த எண்ணங்களை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
ஆயில்யம் : இலக்குகள் பிறக்கும்.
சிம்மம்
வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்விகளில் இருந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : குழப்பங்கள் குறையும்.
பூரம் : மேன்மை ஏற்படும்.
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : மந்தமான நாள்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : ஆதாயகரமான நாள்.
துலாம்
தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
சித்திரை : ஏற்ற இறக்கமான நாள்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
விருச்சிகம்
சுபகாரிய எண்ணங்கள் கைக்கூடும். மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசு பணிகளில் ஆதரவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : மதிப்பளித்து செயல்படுவீர்கள்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : ஆதரவுகள் மேம்படும்.
தனுசு
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
மகரம்
பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். கால்நடைகள் மூலம் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.
கும்பம்
வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்த தாமதங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.
மீனம்
உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தந்தையின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான செயல்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.
ரேவதி : அனுபவங்கள் ஏற்படும்.
தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!
- எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
- நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
- பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
- வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
- ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
- ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!












