Home Blog

பஞ்சாங்கம் செப்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – செப்.05

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் ஆவணி ௴ 19 ௨ { 5.9.2026 }
1.வருடம் ~ பராபவ ௵ பராபவ நாம ஸம்வத்ஸரம்}
2.அயனம் தக்ஷிணாயனம்
3.ருது ~ வர்ஷ ருதௌ
4.மாதம்~ ( ஸிம்ம மாஸம்)
5 பக்ஷம் கிருஷ்ண பக்ஷம்
6. ஸ்ரார்த்த திதி – நவமி – இரவு 9.16 வரை பிறகு தஸமி
7.நாள் சனிக்கிழமை) { ஸ்திர வாஸரம்}
8.நக்ஷத்ரம் இரவு 09.40 வரை மிருகசீரிஷம் பிறகு ஆர்த்ரா ( திருவாதிரை) ( ஸுப யோகம் )(உறியடி)
நல்ல நேரம் காலை 78 & 11 பிற்பகல் 1வரை
மாலை 5-* இரவு 8 வரை&9* 10 பின் இரவு 12* அதிகாலை 3 வரை & 4 5
குளிகை ~ காலை 067.30AM
ராகுகாலம்
காலை 9~10.30AM.*
எமகண்டம் பிற்பகல் 01.3003PM
சூரிய உதயம் ~ காலை 6.01 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.26
சந்திராஷ்டமம் இரவு 9.40 வரை விசாகம் பிறகு அநுஷம்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (5-9-2026) ராசி பலன்கள்


மேஷம்

பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பினை மேம்படுத்துவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அஸ்வினி : முயற்சிகள் கைகூடும்.
பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரிஷபம்

பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் குறையும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் நெருக்கடிகள் குறையும். குழந்தைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரோகிணி : தடைகள் குறையும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


மிதுனம்

மன நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். செயல்களை திட்டமிட்டு செயல்படவும். புது விதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : திட்டமிட்டு செயல்படவும்.
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.


கடகம்

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பணியில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : வாதங்கள் மறையும்.
பூசம் : பொறுப்புகள் குறையும்.
ஆயில்யம் : அனுபவங்கள் கிடைக்கும்.


சிம்மம்

எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். இணைய சார்ந்த துறைகளில் மாற்றங்கள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : ஆதாயகரமான நாள்.


கன்னி

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

உத்திரம் : சிந்தனை மேம்படும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : முதலீடுகளில் கவனம்


துலாம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம்
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.


விருச்சிகம்

மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : குழப்பங்கள் ஏற்படும்.
அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.


தனுசு

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருள்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : பிரச்சனைகள் தீரும்.
உத்திராடம் : வரவுகள் கிடைக்கும்.


மகரம்

வியாபாரம் விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
திருவோணம் : புரிதல் மேம்படும்.
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.


கும்பம்

தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபார கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றும். நிலுவையிலிருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : ஆர்வம் மேம்படும்.


மீனம்

உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : தெளிவுகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகமாகும்.
ரேவதி : திருப்தியான நாள்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ
(குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
– சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725)

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

எந்த மனிதரிடமும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொள்வதும், பிரதி பலன் எதிர் பாராமல் அன்பு செய்வதும், அறம்! அனைவரும் அவரவர் பார்வையில், தங்களை சரியானவர்கள் என்று நினைப்பதை புரிந்து கொண்டு, எதையும் கடந்து போக கற்றுக்கொள்!! பட்டம், பதவி, பகட்டு வாழ்க்கையுடன், மனதின் மகிழ்ச்சியை, ஒன்றாக இணைத்து பார்ப்பதை நிறுத்தும் போது, உண்மையில் மனம், பக்குவம் அடைகிறது!!!

செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

sengottai krishnan koil gokulashtami - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது.

அந்த வகையில் இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலில் இன்று காலை முதலே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணபகவானுக்கு சிறப்பு அபிசேகம், அலங்கர தீபாராதனை நடைபெற்றன.

இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பகவானை வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு வெண்ணெய், வெண் பொங்கல், பால் பாயாசம், தயிர் சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

முன்னதாக, கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு, கடந்த ஆக.21ம் தேதி ஸ்தம்ப பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து ஆக.27ம் தேதி முதல் தினமும் வேதபாராயணம், கும்ப பூஜையுடன் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இந்நாட்களில் காலை வேளைகளில் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப பாகவதர் தம்பதியின் ஸ்ரீமத் பாகவத பாராயணமும், மாலை வேளைகளில் திருவனந்தபுரம் ஸ்ரீராம பிரித்யன் நரசிம்மனின் ஸ்ரீமத் பாகவத மாஹாத்மியம் பிரவசனமும் நடைபெற்றது.

மாலை வேளைகளில், செங்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர்மசம்வர்த்தினி பஜனை மண்டலி, ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் பஜனை மண்டலி, ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை மண்டலி, ஸ்ரீ ஆண்டாள் இசைக் குழு முதலியோரின் பக்திப் பாடல்கள், நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெற்றன. செங்கோட்டை குருகுல மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், சுலோகம் பக்திப் பாடல்கள் இவற்றுடன் ஸ்ரீமதி விசாலம் ராமசுப்பிரமணியன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் செப்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் செப்.04 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 18 ( 4.9.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம்~ தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ இரவு 11.46 PM வரை அஷ்டமி பின்னர் நவமி.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ இரவு 11.24 PM வரை ரோஹிணி பின்னர் ம்ருகசீர்ஷம்.
யோகம் ~ ஹர்ஷணம்.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30 PM.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 AM.
சூரிய உதயம் ~ காலை 6.06.
சந்திராஷ்டமம் ~ துலாம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி.
இன்று ~ கோகுலாஷ்டமி / ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி / வைகானஸ ஸ்ரீ ஜயந்தி / முனித்ரய ஸ்ரீ ஜெயந்தி/ பஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 04.9.2026


மேஷம்

எதிர்பாராத தனவரவுகள் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : தனவரவுகள் மேம்படும்.
பரணி : கவலைகள் விலகும்.
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.


ரிஷபம்

பழைய சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தையில் நிதானத்துடன் இருக்கவும். உடன் இருப்பவர்களின் குணம் அறிந்து நடந்து கொள்ளவும். உடலில் ஒரு விதமான அசதிகள் தோன்றி மறையும். உங்கள் மீதான வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

கிருத்திகை : தாமதம் ஏற்படும்.
ரோகிணி : குணமறிந்து செயல்படவும்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.


மிதுனம்

உறவினர்களின் சந்திப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆடம்பரச் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய தெளிவை ஏற்படுத்தும். தெய்வீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் ஏற்படும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : புதுமையான நாள்.


கடகம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணிகளில் இழுபறியான சூழல் மறையும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : அபிவிருத்தியான நாள்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.


சிம்மம்

நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

மகம் : மரியாதை உயரும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : மாற்றம் பிறக்கும்.


கன்னி

வித்தியாசமான சில சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

உத்திரம் : குழப்பம் நீங்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : கவனம் வேண்டும்.


துலாம்

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எழுத்து சார்ந்த பணிகளில் சற்று நிதானத்தை கையாள்வது மேன்மையே ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சினைகள் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.


விருச்சிகம்

கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கற்பனை துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணம் ஈடேறும். சிலரின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் காணப்படும். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : உதவிகள் சாதகமாகும்.
அனுஷம் : மாற்றங்கள் பிறக்கும்.
கேட்டை : மேன்மை ஏற்படும்.


தனுசு

நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். சேமிப்பு விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோக முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.


மகரம்

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : இலக்குகள் பிறக்கும்.
திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.


கும்பம்

வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

அவிட்டம் : தீர்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : புரிதல் அதிகரிக்கும்.
பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.


மீனம்

கடன்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். தள்ளிப்போன காரியங்கள் சில முடியும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : செல்வாக்கு உயரும்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியத்தால் தெய்வத்திருமேனிகள் திருட்டு தொடர்வதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், பெருக்கரணை கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நடுபழனி மரகத தண்டாயுதபாணி ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள முருகன் சிலையானது சுமார் 2.5 அடி உயரம் கொண்டது. பல கோடி மதிப்பு கொண்ட முருகன் திருமேனி ஸ்ரீ எல்லப்ப சுவாமி எனும் சித்தரால் 1955 ஆம் ஆண்டு குன்றின் மீது நிறுவப்பட்டது. அதன் பிறகு ஸ்ரீ முத்துசுவாமி சித்தரால் கோவில் கட்டுமானம் செய்யப்பட்டு பெரிய ஆலயமாக எழுப்பப்பட்டது.

அன்று முதல் மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு செவ்வாய் தோறும் சஷ்டி, கிருத்திகை மற்றும் விசேஷ விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருநாளில் கோவிலுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, பறவை காவடி என பல வகையான காவடிகள் எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசிப்பது சிறப்பாகும். கார்த்திகை தீபம் அன்று குன்றின் மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசிப்பதும், ஆடி கிருத்திகை தினத்திலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆடி கிருத்திகை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக சென்று முருகப்பெருமானை தரிசித்து வருவதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பல கோடி மதிப்பிலான தெய்வத்தினியை திருடி சென்றுள்ளனர். காலையில் கோயில் அர்ச்சகர் கோயிலை திறந்த போது சிலை திருடப்பட்டது தெரியவந்தது, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்களது விசாரணை அறிக்கையில் மரகத முருகன் சிலை வெறும் 3 லட்சம் செலவில் தான் 2008 ஆம் வருடம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என விசாரணை துவங்குவதற்கு முன் பொதுமக்கள் தெரிவித்ததாக அவசரக் கதியில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இது வேண்டுமென்று கோவில் சிலை திருட்டின் முக்கியத்துவத்தை குறைப்பதாக உள்ளது. கோயிலின் சிலை நிபுணர்களை கலந்தாலோசிக்காமல் பதட்டத்தை குறைக்கும் விதத்தில் சிலையின் மதிப்பு பற்றி செய்தி வெளியிட்டதைக் கண்டிக்கிறோம்.

தொடர்ந்து தமிழகத்தில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் திருடு போயுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூரில் கோயிலில் உள்ள மரகதலிங்கம் சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை.

இதேபோல் திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் பிராணநந்தீஸ்வரர் கோயில் ஆகிய கோயில் மரகதலிங்கம் திருடப்பட்டுள்ளது. இது அப்போதைய சிலை ஆய்வாளர்கள் இந்த மரகதலிங்கம் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ளது தெரிவித்திருந்தார்கள்.

மேலும் திருவாரூர் தியாகராஜர் சாமி கோயில் மற்றும் உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சிலை திருட முயற்சியும் நடைபெற்றதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு சொல்கிறது. தொடர்ந்து தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் மரகதலிங்கங்கள் திருடப்பட்டு வருவது பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் உண்டாக்கி உள்ளது. உடனடியாக காவல்துறை செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை தண்டாயுதபாணி கோயில் உள்ள மரகத முருகர் சிலையை மீட்க தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து சுவாமி திருமேனிகள் திட்டமிட்டு திருடு போவது கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியம் தான் முக்கிய காரணம். பல கோடி மதிப்பிலானதும் மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் தெய்வத்திருமேனியை பாதுகாக்க முழு முயற்சி எடுத்து இருக்க வேண்டும். ஆனால் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதிலும் ஊழல்களில் ஈடுபடுவதில் தான் அவர்களின் கவனம் இருக்கிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதற்கு முன் திருக்கோவில் பொருட்கள் திருமேனிகள் முதலானவை கடத்தப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியில் கூட கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் தமிழக அரசு உடனடியாக தமிழக காவல்துறையின் கோயில் சிலை திருட்டு தடுப்பு பிரிவை வலுப்படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து குற்றவாளிகள் கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

பஞ்சாங்கம் செப்.03 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய பஞ்சாங்கம்  – செப்.03

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 17 ( 3.9.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாஸம் { ஸிம்ஹ மாதம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 2.07 AM வரை ஸப்தமி பின் அஷ்டமி.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 12.58 AM வரை க்ருத்திகை பின்னர் ரோஹிணி.
யோகம் ~ வ்யாகாதம்.
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம்~ அசுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 6.06.
சந்திராஷ்டமம் ~ காலை 8.01 AM வரை கன்னி பின்னர் துலாம்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ ஸப்தமி.
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - 2026
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - 2026
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
3.9.2026

மேஷம்

எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : வாய்ப்பு உண்டாகும்.
பரணி : மாற்றம் பிறக்கும்.
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.


ரிஷபம்

பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : பதற்றமின்றி செயல்படவும்.


மிதுனம்

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். பணி மாற்றத் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.
திருவாதிரை : பயணங்கள் கைகூடும்.
புனர்பூசம் : கட்டுப்பாடுகள் குறையும்.


கடகம்

சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி உண்டாகும். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூசம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
ஆயில்யம் : வேறுபாடுகள் குறையும்.


சிம்மம்

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கோவில் நலப்பணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். உடை அலங்காரத்தில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். வேலையாட்களுடன் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : மாற்றங்கள் காணப்படும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


கன்னி

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திரம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


துலாம்

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : அனுபவம் உண்டாகும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.


விருச்சிகம்

காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன்-மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : லாபம் மேம்படும்.
கேட்டை : சாதகமான நாள்.


தனுசு

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்குகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல்கள் உண்டாகும். மறைமுகமான சில போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மனதை உறுத்திய சிலர் கவலைகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : கவலைகள் விலகும்.


மகரம்

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : மாற்றம் பிறக்கும்.
அவிட்டம் : லாபம் மேம்படும்.


கும்பம்

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : ஆதாயகரமான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.


மீனம்

சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உருவாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.


இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

hindumunnani
hindumunnani

செல் போனுக்குத் தடை.. கோவிலுக்கு பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு தண்டனையா? என்று கேட்டு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட கோவில்களில் கைபேசிக்கு தடை என்பதும் அதை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிப்பது இன்று மக்களிடையே பெரிய அளவில் கடும் கண்டனத்தையும் அரசின் மீது அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று கைப்பேசி என்பது பேசுவதற்கு போட்டோ எடுப்பதற்கு மட்டும் அல்ல பலவகையிலும் மக்களுக்கு மிகத் தேவையான ஒரு பொருளாக உள்ளது. இதுபோன்ற தடை உத்தரவால் சாதாரண அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேசமயம் இராமேஸ்வரம் போன்ற கோவில்களில் படம் எடுக்க போட்டோ வீடியோவிற்கு கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு குடும்ப திருமண நிகழ்வை நினைவில் கொள்ள அதனை பயன்படுத்தி கொள்ளை கட்டணம் வசூலிக்க இந்து சமய அறநிலையத் துறை துணை போகிறது.

கோவிலில் ஆபாசமாக ரீல்ஸ் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்தவனைப்போல கைபேசிக்கு தடை விதித்து பாதுகாக்க கட்டணம் வசூலிப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோவில் என்பது பிரம்மண்டமானது. ஒரு வழியாக சென்று அதே வழியாக வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நெரிசல் தான் ஏற்படும். மேலும் அவசர உதவிக்கு அல்லது குடும்பத்தினரிடம் இருந்து அவசர செய்திக்கு என்ன ஏற்பாடு இருக்கிறது. ஐயப்பன் கோவில், திருப்பதி கோவில் போன்ற இடங்களில் கைபேசி பாதுக்காக்க கட்டணம் வசூலிப்பது இல்லை. அவசர உதவிக்கு அறிவிப்பு வசதி முதலானவை சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் எப்படி வசூல் வேட்டை நடத்தலாம் என்பதிலேயே இந்து சமய அறநிலையத் துறை குறியாக இருப்பது வெட்கக்கேடானது. 56 கோவில்களில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் வருகின்ற இடத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கோடி வரை வசூலாகும். இதனை முறைகேடாக பயன்படுத்தவும் ஏதுவாகும்.

இன்று ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கைபேசி உள்ளது. அப்படி பார்த்தால் ஒரு குடும்பம் கோவிலுக்கு வந்து செல்ல சில நூறு கொடுக்க வேண்டும் என்ற நிலையும் மேலும் பலவிதமான தொந்தரவுகளும் தந்து கோவிலுக்கு வருவதற்கு எரிச்சலை தமிழக அரசு ஏற்படுத்துவது நியாயமா?

வயதானவர்கள் சிவபுராணம் கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை கைபேசி வாயிலாக காதில் கேட்டுக்கொண்டு அமைதியாக தியானம் செய்கின்றனர். இதனை தடுப்பது நியாயமா? வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களில் இதுபோன்று தலையிட முடியுமா?

எனவே தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இந்த திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கைபேசி பாதுகாப்பு இலவசமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து முன்னணி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்..

பஞ்சாங்கம் – செப்.02 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்  | 2.9.2026 | புதன்கிழமை

ஆவணி ~ 16 { 2.9.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 6.15 AM வரை பஞ்சமி பின்னர் மறுநாள் காலை 4.18 AM வரை ஷஷ்டி அதன் பின்னர் ஸப்தமி.
நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம் ~ இரவு 2.22 AM வரை பரணி பின் க்ருத்திகை.
யோகம் ~ த்ருவம்.
கரணம் ~ தைதுளை / கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்லநேரம் ~ காலை 9.00 AM ~ 10.00 AM & மாலை 2.00 PM ~ 3.00 PM.
ராகுகாலம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
எமகண்டம் ~ காலை 7.30 AM ~ 9.00 AM.
குளிகை ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 AM and 2.00 to 3.00 PM
சூரியஉதயம் ~ காலை 6.06.
சந்திராஷ்டமம் ~ கன்னி.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ ஷஷ்டி.
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO - 2026

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026
thiruvalluvar deivapulavar

இன்றைய (2-9-2026) ராசிபலன்கள்


மேஷம்

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : பொறுமை வேண்டும்.


ரிஷபம்

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : வாதங்கள் நீங்கும்.


மிதுனம்

கால்நடை வளர்ப்புத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். துறைகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.


கடகம்

மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். வேளாண்மைத் துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சேவைப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும். வெளியுலக அனுபவம் மூலம் மாற்றங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மாற்றங்கள் உருவாகும்.


சிம்மம்

நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : தன்னம்பிக்கை மேம்படும்.
உத்திரம் : சாதகமான நாள்.


கன்னி

பழைய சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். தன வரவுகளில் இழுபறியான சூழல் அமையும். செய்யும் காரியத்தில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : குழப்பங்கள் ஏற்படும்.
அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.


துலாம்

குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த சில குழப்பங்கள் மறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
விசாகம் : குழப்பம் மறையும்.


விருச்சிகம்

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் சற்று குறையும். வழக்கு விஷயத்தில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : ஆதாயகரமான நாள்.
கேட்டை : விட்டுக்கொடுத்து செயல்படவும்.


தனுசு

புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்மக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : குழப்பம் விலகும்.


மகரம்

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : ஆர்வமின்மை குறையும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.


கும்பம்

சிறு தூரப் பயணம் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் ஏற்படும்.


மீனம்

வியாபாரப் பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயம் மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

‘வந்தேமாதர’த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

vandematharam backim chandrar - 2026

— கீதாஞ்சலி ஆங்மோ
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்


செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது “வந்தே மாதர”த்தை இசைக்க எண்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதொரு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு நாவலிலிருந்து வெளிப்பட்ட இந்த போர்குரல் தெருக்களில் நுழைந்தது. வலிமையான பேரரசுக்கு கிலியூட்டியது. நெஞ்சுரத்துடன் சிறைச்சாலை சென்றவர்களுடன், தூக்குமேடை ஏறியவர்களுடன் துணை நின்றது. ஆனால் சுதந்திர இந்தியாவின் குறியீடாக இருக்கின்ற செங்கோட்டையை அடைய அதற்கு எண்பது ஆண்டுகள் ஆனது.

ஆனாலும் வாரிசுடைமையாக வந்த இந்த புனிதத்தின் மீது ஆட்சேபனைகளும் எழுப்பப்படுகிறது. பிரபல நடிகை ஷர்மிளா தாகூரும் மற்றும் பலரும், 1937 இல் காங்கிரஸ் செய்ததை போல, அந்த பாடலின் முதல் இரண்டு பத்தியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். அடுத்தடுத்த பத்திகளில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி போற்றப்படுவதை முஸ்லிம்கள் எப்படி ஏற்று வணங்குவார்கள் ? அந்த பாடல் இடம் பெற்றிருந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜீயின் ஆனந்த மடத்தில் முஸ்லிம்களின் ஆட்சி மோசமானதாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அந்த பாடலை விலக்க வேண்டாமா ? அன்னையாக இந்தியாவை பங்கிம் சந்திரர் கற்பனை செய்த போது இந்தியா என்று ஒரு தேசம் இருந்ததா?

இவை சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் அல்ல. ஆனால் இதற்கான விடையில்தான் நாம் தொலைத்து விட்டதை மீட்டெடுக்க முடியும். தேசிய அரசு என்ற நவீன கொள்கை இந்திய வரலாற்று நீண்ட காலமாக இல்லை. வேறுவிதமாக இந்தியா தன்னை வடிவமைத்திருந்தது. பாஸ்போர்ட், நாடாளுமன்றம் அல்லது அரசியல் ரீதியான எல்லைகள் எல்லாம் வருவதற்கு முன்பு அது பாரதவர்ஷமாக – பண்பாடு மற்றும் ஆன்மீக பூமியாக – இருந்தது.

விஷ்ணு புராணம் பாரதம் என்பதை சமுத்திரத்துக்கு வடக்கேயும் இமயத்திற்கு தெற்கேயும் உள்ள நிலப்பரப்பு என்று விவரிக்கிறது. இந்த பரந்த பகுதியில் மொழிகள், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள், தத்துவங்களால் வேறுபட்ட போதிலும் இவற்றின் அடிநாதமாக ஒரே கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. எது இறுதியான உண்மை ? அதை எத்தனை மனிதர்கள் அறிந்திருக்கிறார்கள் ? என்பதே அது . காஷ்மீரம் தனது சைவத்தின் மூலம் இதற்கு பதில் அளித்தது. கர்நாடகம் மத்வரின் துவைதம் மூலமாக, துவாரகை கிருஷ்ணனை வழிபடுவதன் வழியாக பதில் அளித்தன.

இந்தியா தன்னை அறிந்து கொள்ள தேசிய அரசு என்ற நவீன கொள்கை வரும் வரையில் காத்திருக்கவில்லை. ஆயிரக்கணக்கான கேள்விகளை, எண்ணற்ற வழிகளில் எழுப்புகின்ற நாகரீகத்தில் அவளது ஒற்றுமை உறைகிறது. இந்த இடத்தில்தான் ஸ்ரீ அரவிந்தர் “வந்தே மாதரம்” என்பதை புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றார். இந்தியாவை கண்டுகொள்ள இந்தியர்களுக்கு கற்றுக் கொடுத்த ‘ரிஷி’ பங்கிம் சந்திரர் என்கிறார். “மந்திரம் கொடுக்கப்பட்டது….. அன்னை தன்னை வெளிப்படுத்தினாள் ” , என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

அன்னை எப்படிப்பட்டவள் ? பங்கிம் சந்திரர் பாடலை மீண்டும் பாருங்கள். அவள் முதலில் ஆயுதங்கள் இல்லாமல், மணிமுடி இல்லாமல், கோபுரங்கள் இல்லாமல் வருகிறாள் . அவள் சுஜலாம் சுபலாம் : நீர் வளம், நிலவளம் மிகுந்தவள் . குளிர் தென்றல், பசுமையின் செழிப்பு, தன்னிலவொளியும் மலர்களை சொரியும் மரங்களையும் கொண்டவள். ஏனென்றால் அவள் தெய்வம். நம் காலுக்கடியில் இருக்கும் பூமி தெய்வம்.

குழந்தை பருவத்தில் மனதில் நிற்கும் நதி, பாட்டி கதைகள் சொன்ன மொழி, முதல் மழையின் மணம், உணவு, இசை, மலைகள், விழாக்கள், நினைவுகள் இதுபோன்ற நெருங்கிய உறவில்தான் தேசபக்தி ஆரம்பமாகிறது . மெதுவாக இந்த புவிப்பரப்பு நம்முடையதென்ற உணர்வு வருகிறது. பிறகு இந்த பூமி நம் அன்னையாகிறாள்.

ஸ்ரீ அரவிந்தர் இதை மேலும் விரித்தெடுக்கிறார். ஒரு தேசம் என்பது ‘துண்டு நிலம்’ அல்ல. அது பற்பல கோடிகளின் சக்தி. அதன் மக்களால், பண்பாட்டால், நாகரிகத்தால், பெரும் விழைவால் உயிர்ப்பு பெறுகிறது என்கிறார். இது பங்கிம் சந்திரரின் துர்கை, லட்சுமி, சரஸ்வதியை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது.

சாதாரணமாக படிக்கும் போது மூன்று ஹிந்து பெண் தெய்வங்களை காண்கிறோம். மற்றொரு தொலைக்காட்சியில் விவாதம் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் இந்தியா எப்போதும் குறியீடுகள் மூலமாக பேசுகிறது. துர்கை என்பது வலிமை , லட்சுமி வளமை, சரஸ்வதி என்றால் அறிவு.

வல்லமை, செழிப்பு, அறிவு இம்மூன்றையும் தேவையில்லையென எந்த நாகரிகம் சொல்கிறது? தைரியம் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் துர்கையை வழிபடத் தேவையில்லை. இந்தியா வளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவர் லட்சுமியை வணங்க வேண்டியதில்லை. ஞானத்தை அடைவதற்காக ஒரு நாத்திகர் சரஸ்வதியை கும்பிட வேண்டியது இல்லை. இந்த உருவங்கள் கலாச்சார ரீதியாக இந்தியா இவற்றின் மூலம் குறிப்பிடப்படுவது அனைவருக்கும் பொதுவானவை.

‘ வந்தே மாதர’த்தை மத சண்டையாக குறுக்குவது சோகமானது. ஒருவர் ஹிந்து பெண் தெய்வத்தை பார்த்ததும் அதை விலக்க நினைக்கிறார். மற்றொருவர் ஹிந்து பெண் தெய்வத்தை பார்த்தால் தான் ஒதுக்கப்பட்டதாக கருதுகிறார். ஆனால் அவள் ‘பல கோடிகளின் சக்தி’ என்றால் . முஸ்லிம் விவசாயி, கிறிஸ்துவ செவிலியர், சீக்கியர் ராணுவ வீரர், ஜெயின வியாபாரி, புத்தபிக்கு ,இறை நம்பிக்கையற்ற அறிவியலாளர் இவர்களெல்லாம் யாருடைய இந்தியாவிலோ விருந்தினராக இருக்கவில்லை. அவளின் அங்கமாக இருக்கிறார்கள்.

எனவேதான் செங்கோட்டை கணம் முக்கியமாகிறது. இப்போது எல்லோரும் “வந்தே மாதரம்” பாட வேண்டும் என்பதற்காக அல்ல. அந்த பழைய பாடல் நம் எதிர்காலம் குறித்த கேள்வியுடன் திரும்பி வருகிறது. அந்த இரண்டு சொற்கள் நம்மிடம் கேட்பது என்ன ?

இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு, மாற்றிக் கொள்ளக்கூடிய குடியுரிமை என்றால் என்னுடைய உரிமைகள் என்னென்ன ? எனக்கு என்ன கிடைக்கும் ? மாறாக இந்தியா என்றால் அன்னை எனும்போது தேசபக்தியின் இலக்கணம் மாறிவிடுகிறது. உரிமைகள் அப்படியே இருக்கின்றன. ஆனால் கூடவே கடமையும் வந்து விடுகிறது. ‘இந்தியா எனக்கு என்ன செய்தது?’ என்ற கேள்வி மாறி ‘இந்தியாவுக்கு நான் என்ன கொடுக்க முடியும் ? ‘, என்றாகி விடுகிறது.

இதுதான் பங்கிம் சந்திரரின் இரண்டு சொற்களில் நீடிக்கும் சக்தி. அது தேசத்தை வழிபட அறிவுறுத்துவது அல்ல, மாறாக அவளுடன் உறவு கொண்டாட அழைப்பு விடுக்கிறது. தேசிய அரசு என்பது புதிய கருத்தாக இருக்கலாம். அன்னை தொன்மையானவள். அந்த உறவு புனிதமானது. எனவே நாம் அவளை வணங்குகிறோம்.
வந்தே மாதரம்

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர் லதாக்கில் உள்ள இமாலயன் இன்ஸ்டிடியூட் ஃபார் ஆல்டர்னேட்டிவ் நிறுவனர்
லதாக்கைச் சேர்ந்த சமுக செயற்பாட்டாளரான சோனம் வாங்சுகின் மனைவி என்பது கூடுதல் தகவல்


பஞ்சாங்கம் செப்.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

Astrological symbols and horoscope chart
astrology panchangam rasipalan

இன்றைய பஞ்சாங்கம் – செப்.01

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி~ 15 ( 1.9.2026 ) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பரபாவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாஸம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 7.56 AM வரை சதுர்த்தி பின் பஞ்சமி.
நாள் ~ { பௌம வாஸரம் } செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ மறுநாள் காலை 3.34 AM வரை அச்வினி பின்னர் பரணி.
யோகம் ~ வ்ருத்தி
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30 PM.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 AM and 4.30 to 5.30 PM.
குளிகை ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
சூரியஉதயம் ~ காலை 6.06.
சந்திராஷ்டமம்~ கன்னி.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி.
இன்று ~


இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

astrology - 2026

இன்றைய (01-9-2026) ராசி பலன்கள்


மேஷம்

மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். குடும்பப் பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

அஸ்வினி : நிதானம் வேண்டும்.
பரணி : நெருக்கடியான நாள்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரிஷபம்

பணிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமித்தமான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமைப் பேச்சுகளைக் குறைத்துக்கொள்ளவும். உலக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : திருப்பங்கள் உண்டாகும்.
ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


மிதுனம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளின் காரணத்தைக் கண்டறிவீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டுப் பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள்.
திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.


கடகம்

பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : அனுபவம் வெளிப்படும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.


சிம்மம்

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : மாற்றம் பிறக்கும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.


கன்னி

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும் அனுபவம் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
அஸ்தம் : சேமிப்புகள் குறையும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.


துலாம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சுபச் செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்

சித்திரை : சுறுசுறுப்பான நாள்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


விருச்சிகம்

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : புரிதல் மேம்படும்.
கேட்டை : மேன்மையான நாள்.


தனுசு

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழைய நிகழ்வுகள் மூலம் மனம் மகிழ்வீர்கள். உலக நிகழ்வுகள் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.


மகரம்

தொழில் நிமித்தமான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வீடு மற்ற எண்ணம் மேம்படும். நறுமண பொருள்கள் வழியும் ஆதாயம் அடைவீர்கள். விவசாய பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். தர்ம காரியத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : முடிவுகள் பிறக்கும்.
திருவோணம் : ஈர்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


கும்பம்

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். குறுகிய தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.


மீனம்

பயனற்ற சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திட்டமிட்ட பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு ஈடேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மறைமுகமான ஆதரவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் மறையும்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : ஆதரவுகள் ஏற்படும்.


தினம் ஒரு திருக்குறள்

vainava valluvar dhinam oru thirukkural - 2026

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

sivan - 2026

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

srirangam pagal pathu day 9 - 2026

திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்

இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

1743764 prag1 - 2026

சில உரையாடல்கள் உண்மையிலேயே அற்புதமாக அமைந்து விடுவதுண்டு — அவை திட்டமிடப்பட்டவை என்பதால் அல்ல, மாறாக எதிர்பாராத விதமாக நிகழ்வதால்.

ஃபிராங்பர்ட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த மனித வள மேம்பாட்டாளரும், புத்தக ஆசிரியருமான ஒருவர் சதுரங்க உலக No.1 பிரக்ஞானந்தா தமக்கு மிக அருகில் அமர்ந்திருந்ததைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆனால் பிரக்ஞானந்தா வெளிப்படையாகவே சோர்வாகக் காணப்பட்டதால், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பாக்கியது என்னவென்றால், சில நாட்களுக்கு முன்புதான், செயின்ட் லூயிஸில் நடந்த போட்டியில் நடப்புச் சாம்பியனான ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் ஒரு பிரமிக்க வைக்கும் மீள்வருகையில் தோற்கடித்து, “கிராண்ட் செஸ் டூர்” பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்திருந்தார். அந்த வெற்றியுடன் $200,000 பரிசும் கிடைத்தது.

சென்னையில் விமானம் தரையிறங்கிய பிறகு, அவருடன் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் உரையாடும் வாய்ப்பு அந்த புத்தக ஆசிரியருக்கு கிடைத்ததாம். “கன்வேயர் அரங்கில் தங்களது பயண சாமான்கள் முதலில் வரவேண்டுமே,” என்று எப்போதும் ஏங்கிய காலம் சென்று, அன்று முதல் முறையாக, அவரது பெட்டி பொருள்கள் கடைசியாக வர வேண்டும் என்று மனுஷர் உண்மையில் பிரார்த்தனை செய்துள்ளார்.

அவர்கள் இருவர் நடுவே நடந்த உரையாடலில், பிரக்ஞானந்தா தமது விளையாட்டு அட்டவணைகள், போட்டிகளுக்கும் தொடர்களுக்கும் இடையிலான அழுத்தம் மற்றும் பதற்றத்தை எவ்வாறு கையாளுகிறார், மேலும் தனிப்பட்ட நகர்வுகளின் தீவிரத்தை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது பற்றியும் பேசப்பட்டது. தியானம் அவரை அமைதியாக இருக்கவும், சிறப்பாக நிர்வகிக்கவும் எவ்வாறு உதவுகிறது என்கிற சூக்ஷுமத்தையும் பகிர்ந்துகொண்டாராம்.

பிரக்ஞானந்தாவின் குடும்பத்தைப் பற்றிப் பேச்சு வந்த போது —அவருக்குப் பலத்தின் தூணாக இருந்த அவருடைய தாய், மற்றும் அவருக்குச் சதுரங்கத்தை அறிமுகப்படுத்திய அவருடைய மூத்த சகோதரி, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இந்திய, உலகச் சதுரங்கத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அனைத்தும் பற்றி பிரக்ஞானந்தா மிகுந்த மரியாதையுடன் பேசினார்.

ஆனால், பிரக்ஞானந்தா என்கிற அந்த வெற்றி யாளருக்குப் பின்னால் இருந்த மனிதர்தான் தம்மை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தின் போதும், பின்னர் விமான நிலையத்திலும், செல்ஃபி எடுக்க அவரை அணுகிய மக்களுக்கு அவர் பொறுமையாகவும் அன்பாகவும் பதிலளிப்பதை பார்த்த போது, நீண்ட பயணம் மற்றும் வெளிப்படையான சோர்வு இருந்தபோதிலும், பிரக்யானந்தா அன்பாகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும், பணிவாகவும் இருந்தார்என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். .

“சதுரங்க வரலாற்றில் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டி, 200,000 டாலர்களை வென்ற ஒரு இளம் விளையாட்டுப் பிரபலம் அவர்; ஆனாலும், அவரிடம் எந்தவிதமான ஆணவப் போக்கு துளி கூட தெரியவில்லை. அவர் ஒரு வழக்கமான சென்னைப் பையனைப் போலவே அமைதியாகவும், நிதானமாகவும், அடக்கமாகவும் நடந்துகொண்டார். வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, பிரக்ஞானந்தாவுடனான – ஒரு சதுரங்க சாம்பியனுடனானஅந்த 15 நிமிடங்கள் – உரையாடலைப் போலத் தோன்றவில்லை; மாறாக, ஒழுக்கம், நிதானம், அழுத்தத்தைச் சமாளித்தல், குடும்ப ஆதரவு, எல்லாவற்றிற்கும் மேலாகப் பணிவு போன்ற விளையாட்டுத் தலைமைத் துவத்திற்கான ஒரு சிறந்த பாடத்தை கற்றது போலவே இருந்தது என்பதை உணர்ந்தேன். சதுரங்கப் பலகை பிரக்ஞானந்தாவை ஒரு வெற்றியாளராக மாற்றியிருக்கலாம்; ஆனால், இது போன்ற தருணங்களே அந்த வெற்றி யாளருக்குப் பின்னால் உள்ள உண்மையான ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.சில சமயங்களில், திட்டமிடப்படாத தருணங்களே அழியாத நினைவுகளை விட்டுச் செல்கின்றன.வாழ்த்துகள் பிரக்ஞானந்தா.. இந்தியாவிற்கும் சென்னைக்கும் நீங்கள் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளீர்கள்.” என்று பதிவு செய்துள்ளார் அந்த ஆசிரியர்.

  • ஆர். கே.