Home Blog

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை ~ 18 ( 01.5.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ 11.06 pm வரை பௌர்ணமி பின் ப்ரதமை.
நாள் ~ (ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ மறுநாள் அதிகாலை 4.40 am வரை ஸ்வாதி பின் விசாகம்.
யோகம் ~ ஸத்தி.
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 5.58
சந்திராஷ்டமம் — மீனம்.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ பௌர்ணமி.
இன்று ~ சித்ரா பௌர்ணமி /

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 01.5.2026


மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்களின் அறிமுகங்களால் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : தெளிவு பிறக்கும்.
பரணி : இன்னல்கள் குறையும்.
கிருத்திகை : ஆதரவும் கிடைக்கும்.


ரிஷபம்

கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த இழுபறியான நிலைகள் மறையும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : இழுபறிகள் மறையும்.


மிதுனம்

எதிர்கால செயல் திட்டங்களை வடிவமைப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். காப்பீடு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் உண்டாகும். மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்டதிசை : வடக்கு
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீலம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : புரிதல்கள் அதிகரிக்கும்.


கடகம்

பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
பூசம் : ஆதாயம் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆர்வமின்மை குறையும்.


சிம்மம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாக பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கைகூடும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : துரிதம் உண்டாகும்.
உத்திரம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.


கன்னி

மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பயணம் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். அடமான பொருள்கள் பற்றிய கவலைகள் ஏற்படும். தனவரவுகள் மூலம் வங்கி இருப்புகள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.
சித்திரை : வரவுகள் மேம்படும்.


துலாம்

உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றம் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : மாற்றம் ஏற்படும்.
விசாகம் : பயணங்கள் கைகூடும்.


விருச்சிகம்

வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரங்களில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.
கேட்டை : அலைச்சல்கள் மேம்படும்.


தனுசு

தன வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சில பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : முடிவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.


மகரம்

பணி புரிவோர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். வீடு மற்றும் மனை ஆகியவற்றால் லாபம் ஏற்படும். நிறுவனங்களில் நிர்வாக திறமை வெளிப்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : உதவிகள் சாதகமாகும்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.


கும்பம்

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பணி சார்ந்த முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். உறவுகளிடத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். அலுவலகப் பணிகளை பகிராமல் மேற்கொள்வது நல்லது. பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

அவிட்டம் : ஆதாயகாரமான நாள்.
சதயம் : செலவுகள் உண்டாகும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


மீனம்

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வேலையாட்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகமான செயல்பாடுகள் பிரச்சனைகளை தவிர்க்கும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : விவேகம் வேண்டும்.



தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

madurai azhagar - 2026
#image_title

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் கடைசி முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை மே 1ல் அதிகாலை 5:30 முதல் 5:55 மணிக்குள் நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து மாலை மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.

பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கன்னனேந்தல் வழியாக நேற்று மதுரை வந்த கள்ளழகர், மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.

மதுரை மாநகர் பகுதிக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றுவருகிறது. அதனை தொடர்ந்து தல்லாகுளம் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி நாளை (மே 1) அதிகாலை வெள்ளி குதிரை வாகனத்தில் வீரராகவ பெருமாள் வரவேற்க, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளவுள்ளார்.

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய பஞ்சாங்கம்  – ஏப்ரல் 30

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை ~ 17 ( 30.4.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாஸம் {மேஷ மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 9.49 pm வரை சதுர்தசி பின் பௌர்ணமி.
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 2.42 am வரை சித்திரை பின் ஸ்வாதி.
யோகம் ~ வஜ்ரம்
கரணம் ~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம்~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 5.59
சந்திராஷ்டமம் ~ 1.54 pm வரை கும்பம் பின் மீனம்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்தசி.
இன்று ~ நரசிம்ம ஜயந்தி.

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - 2026
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - 2026
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
30.4.2026


மேஷம்

தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வியாபார நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : நம்பிக்கை மேம்படும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரிஷபம்

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : அனுபவங்கள் ஏற்படும்.
ரோகிணி : தெளிவுகள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.


மிதுனம்

முக்கியமான முடிவுகளில் ஆலோசனை பெறவும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கடகம்

நவீன தொழில் நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வியாபாரத்தில் தவறிய சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
பூசம் : கவலைகள் குறையும்.
ஆயில்யம் : நன்மையான நாள்.


சிம்மம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணி புரியும் இடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : ஒத்துழைப்பான நாள்.
பூரம் : பயணங்கள் ஈடேறும்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.


கன்னி

உத்தியோக தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் யோகம் மூலம் மாற்றம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : மாற்றம் பிறக்கும்.


துலாம்

சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தம்பதியர்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : அனுபவம் வெளிப்படும்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.


விருச்சிகம்

அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நிலையான வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : சிந்தனைகள் உண்டாகும்.
கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.


தனுசு

உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : குழப்பம் விலகும்.
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.


மகரம்

உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மாமன் வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற இறுக்கமான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

உத்திராடம் : பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம் : மதிப்பளித்து செயல்படவும்.


கும்பம்

பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் உண்டாகும். பூர்விக சொத்துக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். திடீர் பயணம் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : குழப்பம் உண்டாகும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


மீனம்

உத்தியோக பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : பிரச்சனைகள் தீரும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : திருப்பங்கள் உண்டாகும்.



இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

railway news - 2026
#image_title

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

தாம்பரம் — தென்காசி/செங்கோட்டை,சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி ,
ஈரோடு — சென்னை போத்தனூர், போத்தனூர் சென்னை இன்டர்சிட்டி ஆகிய 4 வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 30 அன்று புறப்பட இருக்கிறது . மேலும் தொடர் விடுமுறை முடிந்து ஞாயிறு சென்னை நோக்கி வர இந்த நான்கு ரயில் இருக்கிறது.

இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம் .

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 30 காலை 08:00 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

ஈரோடு சென்னை போத்தனூர் சிறப்பு ரயில் முன்பதிவு மட்டும் இன்று 6 மணிக்கே துவங்கி நடைபெற்று வருகிறது.

தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம்:

வண்டி எண் 06089 – தாம்பரம் – தென்காசி தாம்பரத்தில் இருந்து ஏப்.30 வியாழன் இரவு 10.30க்கு கிளம்பி, தென்காசிக்கு மறு நாள் காலை 10 மணிக்கு வந்து சேரும்.

வண்டி எண் 06090 – செங்கோட்டை- தாம்பரம் ரயில், செங்கோட்டையில் இருந்து மே 3ம் தேதி இரவு 9.30க்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு மறு நாள் காலை 10.30க்கு சென்றடையும்.

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

srivilliputhur andal maalai for kallalagar - 2026

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் மதுரை அழகர் சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று புறப்பட்டது. திரளான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை உள்ள மண்டபங்களில் ஆண்டாள் மாலைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு நாளை வியாழக்கிழமை இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடைகிறது. 01/05/2026 சித்திரை பௌர்ணமி அதிகாலை கள்ளழகர், ஆண்டாள் மாலை அணிந்து ஆற்றில் இறங்குகிறார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1 அன்று நடைபெற உள்ளது. அதிகாலை 5.35 முதல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் பிரவேசிப்பார்.

ஏப்ரல் 19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரைத் திருவிழாவில், ஏப்ரல் 28 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 29 இன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, மே 1 – கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்கிறார். அதற்காக, ஏப்ரல் 29 இன்று மாலை 6.15க்கு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்பட்டார்.

ஏப்ரல் 30 அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 11.00 மணி முதல் 12 மணிக்குள், தல்லாகுளத்திலிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள கள்ளழகர் புறப்படுவார்.

மே 1 அதிகாலை 5.35 – 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் பிரவேசிப்பார். அன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மே 2 காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை, வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுகிறது.

மே 4 அன்று அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி கள்ளழகர் புறப்படுவார்.

மே 5 காலை 10.40 – 11.10 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு சென்றடைந்து திருவிழா நிறைவு பெறும்.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

school exams - 2026

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முடிவுகள் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகவுள்ளன

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்… இந்தாண்டு எழுதிய தேர்வின் முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

தேர்வு முடிவுகளை, tnresults.nic.in dge.tn.gov.in-ஆகிய இணையதளங்கள் வாயிலாக காணலாம்.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது. எப்போது பார்த்தாலும் ராங்க் எடுப்பதற்கான ஓட்டமும், பணம் சம்பாதிப்பதிற்கு முன்னுரிமை அளிப்பதுமே தம் பிள்ளைகளுக்கு முக்கியம் என்று பெற்றோர் கருதுகின்றனர். அதனால்தான் தாமும் கடைப்பிடிக்காமல் பிள்ளைகளுக்கும் கற்றுத் தராமல், பழக்கப்படுத்தாமல் தர்மத்திலிருந்து தொலைவாக விலகிச் செல்கிறார்கள். தர்மத்தின் மீது அர்பணிப்பு மனப்பான்மை, அனுஷ்டான பயிற்சிகள் இல்லாது போவதால் இந்தச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த வெற்றிடத்தை பிற மதங்கள் பயன்படுத்திக் கொண்டு, தீய உத்திகளைக் கையாண்டு    மதமாற்றங்களை அரங்கேற்றுகிறார்கள். ஐயம் ஏதும் கொள்ளாத ஹிந்து இளைய தலைமுறையின் மூளையில் தம் மதக் கோட்பாடுகளைத் திணிக்கிறார்கள். அவையே மிகச் சிறந்தவை என்ற பிரமையை உருவாக்குகிறார்கள். தம் பாரம்பரியம் பற்றி அறிவின்மையாலும், அறிந்துள்ள வேண்டும் என்ற நாட்டம் இன்மையாலும் இளைஞர்களும், யுவதிகளும் பிறரால் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். உடல் ரீதியான ஈர்ப்பும், உலகியல் போகங்களின் மேல் ஏற்படும் பேராசையும் அவர்களுடைய விவேகத்தை வேலை செய்ய விடாமல், பகுத்தறியும் திறனை மழுங்கடித்து விடுகின்றன.

கல்லூரிப் பருவத்திலேயே இத்தகைய ஆசைகளுக்கும், பிரமைகளுக்கும் உள்ளாகி கட்டுப்பாடற்ற நடத்தையாலும், கூடா நட்பாலும், முறையற்ற உடல் ரீதியான தொடர்புகளாலும் மதம் மாறுகிறார்கள். உண்மையில் காதலே முக்கியமென்றால் அவர்களைத் தம் ஹிந்து மதத்திற்கு மாறச் சொல்லி கேட்கலாம் அல்லவா? அவர்களுக்கு இருக்கும் மத ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தம் தாய் மதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அறிவியல் பூர்வமான பாரம்பரியமும், நல்லொழுக்கமும், உலகம் வியந்து மதிக்கும் தத்துவ சிந்தனையும், அற்புதமான கலைச் செல்வங்களும், யோகக்கலையும், மந்திர சாதனைகளும் கொண்ட அற்புதமான ஹிந்துமதத்தை விட உயர்ந்தது வேறொன்று உண்டு என்று எப்படி இவர்களால் எண்ண முடிகிறது?  அப்படியென்றால் இந்த அற்புத அம்சங்களைத் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதது பெற்றோரும், பெரியவர்களும் செய்யும் பெருங்குற்றம்.

சிறுவயது முதல் நம் ஹிந்து மதம் பற்றி அறிஞர்களின் உரைகள், சந்தேகங்களுக்கு அளித்த பதில்கள், ஆலயங்களின் சிறப்பான தனித்தன்மை, அவற்றின் சரித்திரம், நம் தேசத்தின் மீதும் சனாதன தர்மத்தின் மீதும் நடந்த பயங்கரமான் தாக்குதல்கள், அவற்றை எதிர்கொண்டு உயிர் துறந்த தியாகிகள், யோக சித்தி பெற்ற மகநீயர்களின் வாழ்க்கை வரலாறு, போதனைகள், சாஸ்திரங்கள் போன்ற நல்ல விஷயங்களை பிள்ளைகளுக்குக் கற்றுத் தராததும் தாமும் கற்றுக் கொள்ளாததும் இத்தகைய விபரீதமான சூழ்நிலைக்கு முக்கிய காரணம். தம் பராம்பரியத்தின் மீது குறைந்தபட்ச கௌரவம் கூட ஏற்படுத்த இயமால் போவது கவலைக்குரியது. வருந்தத் தக்கது

கல்வி நிலையங்கள் முதல், பணி புரியும் உயர் நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் மதத் தீவிரவாதிகள் ஊடுருவி, மத மாற்றங்களே நோக்கமாக, ஹிந்து மதத்தை அழிப்பதே லட்சியமாக, பாரத தேசத்தில் அமைதியின்மையையும் குழப்பத்தையும் பிளவையும் தோற்றுவிப்பதற்குச் சற்றும் தயங்குவதில்லை.

அண்மையில் நாசிக்கிலும், வேறு சில இடங்களிலும்  நூற்றுக்கணக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தொடர்ந்து, சில ஆண்டுகளாகவே நடக்கும் இவ்விதமான மத வெறித் தாக்குதல்களின் செய்திகள் பெருமளவில் வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றின் மூலம் அவர்களுக்கு நமது மதத்தின் மேல் இருக்கும் பகையும், வெறுப்பும் தெளிவாகத் தெரியவருகின்றன.

இத்தருணத்தில் மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பு, நியமத்தோடு கூடிய வாழ்க்கையில் இருக்கும் தெய்வீகம், புனிதம் போன்றவற்றை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். பிற மதத்தவர் தம் மதத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அதன் மேல் முழு மதிப்பும், தன்மானமும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும்  கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய உணர்வுகள் ஹிந்து குடும்பங்களில் ஏன் இல்லை?

‘காதல்’ என்ற பெயரில் காமக் கேளிக்கையின் மேல் ஆசை கொண்டு, பிறருடைய வஞ்சனையில் சிக்கி வருந்துவது மானசிக பலவீனம் இல்லையா? இந்த பலவீனமே பிறகு அவமானகரமாக, மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கிறது. அதன் பிறகு அநியாயம் நடந்து விட்டது என்று அழுதும், பிரச்சனை செய்தும் என்ன பயன்?

அவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் குற்றம் அந்தப் பக்கம் இருப்பவர்களுடையது   மட்டுமே அல்ல. அதற்கு இடம் கொடுத்த மன விகாரம், விவேகமின்மை, எதற்கும் துணிந்த பொறுப்பற்ற தனம் உள்ள இந்தப் பக்கம் இருப்பவர்களுடையதும் குற்றமே.

பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாகக் கொண்ட கல்வி முறைக்கும், மனப்பான்மைக்கும்     கிடைக்கும் கொடுமையான, கசப்பான வெகுமதி இது. நம்முடைய உயர்ந்த தர்மக்  கோட்பாடுகள் வக்கிரமாக சித்திரிக்கப்படும் போது உதாசீனமாகவும், அலட்சியமாகவும்  இருப்பதோடு, சனாதன தர்மம் பற்றிய சரியான புரிதல் இன்றி, பிற மதத்தவரின் வியூகங்களில் சிக்கி சொந்த மதத்தில் இருந்து விலகி பிரஷ்டர்கள் ஆகிறார்கள்.

பிள்ளைகளை அடிக்கடி நம் கோவில்களுக்கு அழைத்துச் செல்வது, நம்முடையதான ஸ்தோத்திரங்களையும் மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்து தினமும் படிக்கச் செய்வது, நாம சங்கீர்த்தனம், வார இறுதியில் சிறப்பு பாராயணம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினால், அந்த தெய்வ சக்தியின் தாக்கத்தால் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்பட்டு தீய குணங்கள் மனத்தில் எழாமல், வாழ்க்கையை காப்பாற்றும் என்பதில் ஐயமில்லை. நம்முடையதான பாரம்பரிய உடை அணிதல், நெற்றியில் சமயச் சின்னங்களைத் தரித்தல், அவற்றை மதித்தல், பொருளாதார உயர்வு ஏற்படும் போது உலகியல் போகங்களுக்கும் தீய பழங்கங்களுக்கும் அடிமையாகாமல், அடக்கத்தோடு தார்மீக சேவை நிகழ்சிகளில் ஈடுபடுவது போன்றவற்றைக் கற்றுத் தந்தால் இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருந்திருக்குமோ என்னவோ.

சனாதன தர்மத்தின் மேல் சுயமரியாதையையும், தேசத்தின் மேல் கடமை உணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலைத் தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டும். அது வாழ்வாதாரத்திற்கான வழியாக உணர வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. முன்னோர்களிடம் இருந்து கிடைத்த பாரம்பரியச் செல்வமான ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதும், சம்பிரதாய விழுமியங்களையும் காப்பாற்றிக் கொள்வதும் வாழ்வின் நோக்கம் என்று சிறு வயது முதல் கற்றுத்தர வேண்டும்.

(Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், மே, 2026)

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

1001383462 - 2026

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில் திரண்டனர் லட்சக்கணக்கான பக்தர்கள் .சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

சைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை விழாக்கள் இணைந்த விழாவாக இந்த பெருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

1001383336 - 2026
Screenshot

மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ந் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. தொடர்ந்து, சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா மஹாதேவா சிவசிவா முழக்கத்துடனும் தேரை பக்தர்கள் இழுத்தனர்

1001383301 - 2026

பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் சென்றது. தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் சென்றனர். அசைந்து வரும் தேரை காண்பதற்காக மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று மாலையில் அதிர்வெட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுக சுமார் 500 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகருக்கு நாளை (30-ந் தேதி) மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் வெள்ளமென திரண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (1-ந் தேதி) அதிகாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்த பக்தி பரவசக்காட்சியை காண, தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்  | 29.4.2026 | புதன்கிழமை

சித்திரை ~ 16 { 29.4.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் {மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 9.00 pm வரை த்ரயோதசி சதுர்தசி.
நாள்~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ இரவு 1.11 AM வரை ஹஸ்தம் பின் சித்திரை.
யோகம் ~ ஹர்ஷணம்
கரணம் ~ கௌலவம் / தைதுளை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00 pm
சூரியஉதயம் ~ காலை 6.02.
சந்திராஷ்டமம் ~ கும்பம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி.
இன்று ~ ப்ரதோஷம்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO - 2026

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026
thiruvalluvar deivapulavar

இன்றைய (29-4-2026) ராசிபலன்கள்


மேஷம்

நிர்வாக திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். உயர்பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : அறிமுகங்கள் கிடைக்கும்.
கிருத்திகை : வரவுகள் உண்டாகும்.


ரிஷபம்

உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : புரிதல்கள் ஏற்படும்.
ரோகிணி : ஆதரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை :😀 வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஆதாயம் மேம்படும்.
திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


கடகம்

மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்படியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் தீர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூசம் : நெருக்கடிகள் குறையும்.
ஆயில்யம் : தீர்வுகள் கிடைக்கும்.


சிம்மம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு ஏற்படும். தந்தையிடம் வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : தீர்வு ஏற்படும்.
உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.


கன்னி

தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணைவர் பிடிவாதமாக இருப்பார்கள். திட்டமிட்ட ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சிந்தனைகளில் கவனம்.
அஸ்தம் : விழிப்புடன் செயல்படவும்.
சித்திரை : மாற்றம் ஏற்படும்.


துலாம்

மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக் காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகி கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சுவாதி : வரவுகள் கிடைக்கும்.
விசாகம் : புதுமையான நாள்.


விருச்சிகம்

திறமைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
அனுஷம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.


தனுசு

உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். உல்லாச பயணம் சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
பூராடம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : அறிமுகங்கள் கிடைக்கும்.


மகரம்

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். திடீரென புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : எண்ணங்கள் பிறக்கும்.
அவிட்டம் : முடிவுகள் பிறக்கும்.


கும்பம்

எண்ணிய சில பணிகள் செய்வதில் காலதாமதம் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். குழந்தைகள் வழியில் கவனம் வேண்டும். பொது பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். நிர்வாக துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கால்களில் வலிகள் ஏற்பட்டு நீங்கும். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

அவிட்டம் : தாமதம் உண்டாகும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.


மீனம்

உத்தியோக பணிகளில் இருந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : இடர்பாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.
ரேவதி : முயற்சிகள் கைகூடும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Dhinasari Home page

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள், வீராங்கணைகள் தேர்வு வருகின்ற 30.04.2026 (வியாழன்) காலை 9 மணி அளவில் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (I.C.I Govt Boys Hr Sec School) தென்காசியில் வைத்து நடைபெறுகிறது.

பங்கேற்க வரும் வீரர் மற்றும் கொண்டு வரவேண்டிய வீராங்கணைகள் ஆவணங்கள் :
ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்று அசல்

வயது வரம்பு:
01.01.2010க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தொடர்புக்கு: 9965334227, 9443556046