Home Blog

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 11

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ 28 (11.4.2026) சனிக்கிழமை
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 9.58 pm வரை நவமி பின் தசமி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 11.17 am வரை உத்ராடம் பின் திருவோணம்
யோகம் ~ சித்தம்
கரணம்~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.09
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ நவமி
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (11-04-2026) ராசி பலன்கள்


மேஷம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயம் பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : முடிவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.


ரிஷபம்

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.


மிதுனம்

மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : தடைகள் குறையும்.
புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.


கடகம்

மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

புனர்பூசம் : விமர்சனங்கள் மறையும்.
பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : சாதகமான நாள்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.


கன்னி

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : முதலீடுகளில் கவனம்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


துலாம்

தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : திருப்தி உண்டாகும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.


விருச்சிகம்

உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : சுறுசுறுப்பான நாள்.
கேட்டை : திருப்பங்கள் ஏற்படும்.


தனுசு

எதிர்காலம் தொடர்பான நிலையான சிந்தனைகள் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்து வந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மூலம் : மாற்றம் ஏற்படும்.
பூராடம் : வரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : வேறுபாடுகள் குறையும்.


மகரம்

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். பயம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : மாற்றங்கள் பிறக்கும்.
திருவோணம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.


கும்பம்

உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மனதளவில் பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : சேமிப்புகள் குறையும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


மீனம்

மனதளவில் புதிய தேடல்கள் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணியில் இருந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : தேடல்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி : இழுபறிகள் விலகும்.
ரேவதி : ஆதாயம் ஏற்படும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”

  • ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

reserve bank of india rbi - 2026
#image_title
  • சக்கரவர்த்தி மாரியப்பன்

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

நமது அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் 11 மாதங்கள் வரை தாங்கும் அளவுக்கு பலமாக உள்ளது. இரண்டாவதாக சிறப்பாக நிதி நிர்வாகம் செய்யக்கூடிய வங்கிக் கட்டமைப்பு தற்காலிக சந்தை அபாயங்களைத் தாங்கிக் கொள்ள உதவும். – உலக வங்கி.

பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடு விலையேற்றம் நிச்சயம் நம்மை பாதித்தாலும், மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

● பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்புக் கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது. தற்போது டீசலுக்கு கூடுதல் சுங்க வரி கிடையாது. பெட்ரோலுக்கு ரூ.3 (முன்பு ரூ.13).

இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதில் உத்தேசமாக 15 நாள்களுக்கு ரூ.7000 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

● ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்தியுள்ளது. டீசல் – லிட்டருக்கு ரூ.21.50, விமான எரிபொருள் ATF – லிட்டருக்கு ரூ.29.5. இதன் மூலம் ரூ.1500 கோடி வருவாய் கிடைக்கும்.

● இவை தவிர ஜூன் 30 வரை, 40 பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளது. இவை பிளாஸ்டிக், பெட்ரோகெமிக்கல், ஜவுளி, பேக்கேஜிங், மருந்து, ரசாயனம் மற்றும் வாகன உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

● மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு பயணத்தில் உள்ள ரிஸ்க், ஏற்படும் கூடுதல் காப்பீடு செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு துறைமுகங்களில் வாடகை, குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்ணர்கள் கட்டணம் போன்றவற்றில் சலுகை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

● வீடுதோறும் குழாய் வழி எரிவாயு இணைப்புகளைப் பயன்படுத்த புதிய இலக்குகள் நிர்ணியிக்கப்பட்டு வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

● வருங்காலத்தில் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் இலக்கான 500 GW ஐ நோக்கி நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். தற்போது 280 GW இலக்கை அடைந்து உலகின் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் சக்தியில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறோம்.

● பாதுகாப்பான Small Modular Reactors, Fast Breeder Reactors கொண்ட அணுவுலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் போது நமது இறக்குமதி கணிசமாகக் குறையும். பார்க்கலாம்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

1001355335 - 2026

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 10ம் தேதி இன்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் 15ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் ஏப்ரல் 14ல் சித்திரை விஷு கொண்டாடப்படுகிறது.

சித்திரை விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். கேரளாவில் இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று 10ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் திறக்கப்பட்டது.

இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 வரை விஷுக்கனி தரிசனம் நடைபெறும். விஷுக்கனியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை வழங்குவார்கள். வரும் 18ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது.

வரும் 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

pakistan defense minister khawaja asif - 2026

இஸ்ரேலை “அழிக்க வேண்டும்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆசிஃப் கவாஜா சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்தை தொடர்ந்து இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆசிஃப் தனது எக்ஸ் தளத்தில், “இஸ்ரேல் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நாடு; பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நாடு அழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காசா, ஈரான், லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற அழைப்பு எந்த அரசிலிருந்தும் வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கண்டனம் தெரிவித்தது. இந்த சர்ச்சைக்குப் பிறகு, ஆசிஃப் தனது எக்ஸ் கணக்கை நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு தரப்புகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு “அதிர்ச்சியளிக்கிறது” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஒரு கூர்மையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் வியாழக்கிழமை “தீயது” என்றும் “மனிதகுலத்திற்கே ஒரு சாபம்” என்றும் அழைத்தார். இதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து ஒரு வலுவான மறுப்பு வந்தது.

X தளத்தில் தற்போது நீக்கப்பட்ட ஒரு பதிவில், “இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், லெபனானில் இனப்படுகொலை நடத்தப்படுகிறது” என்று ஆசிஃப் கூறியிருந்தார்.

“முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும் அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், ரத்தக் கொதிப்பு தடையின்றி தொடர்கிறது,” என்று அவர் எழுதியிருந்தார்.

“ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீன மண்ணில் இந்த புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் நம்பி பிரார்த்திக்கிறேன்,” என்று ஆசிஃப் மேலும் கூறினார்.

இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பு “அதிர்ச்சியளிக்கிறது” என்று நெதன்யாகு கூறினார்.

“இது எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும், குறிப்பாக அமைதிக்கான நடுநிலை நடுவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்திடமிருந்தும் பொறுத்துக் கொள்ளக்கூடிய ஒரு அறிக்கை அல்ல,” என்று அவரது அலுவலகம் X தளத்தில் பதிவிட்டது.

முறையான உறவுகளைப் பேணாத இரு நாடுகளுக்கு இடையே அரிதான நேரடி இராஜதந்திர மோதலைக் குறிக்கும் வகையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியான் சாரும் பாகிஸ்தான் தலைமையை பகிரங்கமாகக் கண்டித்தார்.

“வெளிப்படையான யூத-விரோத இரத்த அவதூறுகள்” என்று அவர் விவரித்ததைக் கண்டித்த சாரும், இஸ்ரேலை “புற்றுநோய்” என்று முத்திரை குத்துவது அதன் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். “இஸ்ரேலை அழிப்பதாக சபதம் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்” என்று அவர் கூறினார். இது, இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் சொல்லாடல்களை டெல் அவிவ் எவ்வளவு தீவிரமாகப் பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்ததில் இருந்து தொடங்கிய தொடர் நிகழ்வுகளுக்குப் பிறகு இஸ்ரேலின் இந்த எதிர்வினை வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, குவாஜா ஆசிஃப் சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் கருத்துக்களைப் பதிவிட்டார்.

இஸ்ரேலிடமிருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ஆசிஃப் தனது பதிவை நீக்கிவிட்டார்.

ராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில், டெல் அவிவ் வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுடன் நேரடித் தொடர்பைத் தவிர்த்து வந்த நிலையில், இஸ்ரேலியத் தலைவர் பகிரங்கமாகப் பதிலளித்த இந்த முடிவு, அவரது கடந்தகால நடைமுறையிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

எந்தவொரு மத்தியஸ்த முயற்சியிலும் பாகிஸ்தானின் பங்கு குறித்த இஸ்ரேலின் அவநம்பிக்கை முன்னரே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இஸ்ரேலின் தூதர் ரூவன் அசார், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானை ஒரு நம்பகமான மத்தியஸ்தராக இஸ்ரேல் கருதவில்லை என்று கூறினார்.

இஸ்ரேல்-லெபனான் மோதல்

போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ராக்கெட்டுகளை வீசியபோது, மார்ச் 2 அன்று லெபனான் மத்திய கிழக்கு போரில் இழுக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா போரில் நுழைந்ததிலிருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்கள் புதன்கிழமை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றன. இது, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான அமைதியற்ற போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் ஆட்டம் காணச் செய்தது.

ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், இந்த போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது.

மத்திய கிழக்கு போரில் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் ஷெரீப், அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தம், லெபனான் உட்பட “எல்லா இடங்களிலும்” நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

ஷெரீப்பின் கூற்றை ஈரான் ஆதரித்த நிலையில், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள டிரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோர், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றனர்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதில் கவனம் செலுத்தி, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தனது அமைச்சர்களுக்கு நெதன்யாகு வியாழக்கிழமை உத்தரவிட்டார். இஸ்ரேலும் லெபனானும் அடுத்த வாரம் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உருவாகிவரும் சூழ்நிலைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை தெஹ்ரான் இடைநிறுத்தக்கூடும் என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் தடம்புரளக்கூடும் என்ற கவலைகளை இந்த நிகழ்வு எழுப்புகிறது.

எதிரி நாட்டை ‘முற்றிலுமாக அழிப்பதற்கான’ டொனால்ட் டிரம்பின் காலக்கெடு முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அமெரிக்காவும் ஈரானும் செவ்வாயன்று இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. போர் நிறுத்தம் கோரியிருந்த ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் பேசியதாக டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஏப்ரல் 10-ஆம் தேதி, ஒரு “முடிவான ஒப்பந்தத்தை” எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக, இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் வரவேற்கும் என்று ஷெரீப் தெரிவித்தார். பின்னர், அப்பேச்சுவார்த்தைகள் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதன் விளைவாக, பிப்ரவரி 28-ஆம் தேதி வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பாதையில், பாகிஸ்தானில் வைத்து வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் ஒப்புக்கொண்டிருப்பதாக டெஹ்ரான் தெரிவித்தது.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

pm modi in ap meeting - 2026

பிஹார்: அமெரிக்க சிஐஏ துணையுடன் பாரதப் பிரதமர் மோதியை முடிக்கத் திட்டம் போட்ட 3 பேர் கைது!

பிஹாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு காவல்துறைக் குழு சிம்ரி காவல் நிலையப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி, ஒரு இளைஞரைக் கைது செய்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்ரியில் உள்ள ஆஷா பத்ரி கிராமத்தைச் சேர்ந்த அமன் திவாரி என அடையாளம் காணப்பட்ட முக்கியக் குற்றவாளி, அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் ஷுபம் ஆர்யாவின் கூற்றுப்படி, குற்றவாளி பிரதமரைத் தாக்கத் திட்டமிட்டதாகவும், ஒரு வெளிநாட்டு அமைப்புடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளி, இந்தத் திட்டம் தொடர்பாக பெரும் தொகையைக் கோரி மத்திய புலனாய்வு முகமைக்கு (சிஐஏ) ஒரு திட்ட அறிக்கையை அனுப்பியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், திட்டத்தைச் செயல்படுத்த 22 நாட்கள் அவகாசம் கோரியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் கூற்றுகளின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்ந்து விசாரணையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் இல்லத்திலிருந்து மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை காவல்துறை மீட்டெடுத்தது. மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கவும், டிஜிட்டல் தகவல் தொடர்புகளை சரிபார்க்கவும் இவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியின் கூட்டாளிகள் என்று நம்பப்படும் மேலும் இரண்டு நபர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. கூறப்படும் சதியின் இயல்பைத் தீர்மானிக்க மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் குறிப்பிட்ட நெட்வொர்க் அல்லது தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையில் முன்னேற்றம் காணும்போது மேலும் பல விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

school leave - 2026

அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நிறைவடைகின்றன.

ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 1–3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

– இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிஜேபி., உள்ள வந்துடும்!

kanimozhi karunanidhi maran - 2026
  • கே.எஸ். ராதாகிருஷ்ணன்

என்டிஏ கூட்டணி முற்றிலும் தமிழகத்திற்கு விரோதமானது. அவர்களுக்குத் தமிழ் மண்ணில் ஒரு சீட் கூடக்கிடைக்காது என்று அபத்தமாக பேசி வருகிறார் கனிமொழி .

உண்மையில் மோடி அரசு தமிழர்களுக்கு விரோதமானவரா?யார், நீங்கள்தான் தமிழர்கள் விரோதிகள் ? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் ஈழத்தமிழர் முள்ளிவாய்க்கால் மரணங்களுக்கு யார் காரணம்?

இத்தனை வருடம் ஆட்சி செய்தும் மத்திய அமைச்சரவையில் 18 வருடங்கள் பங்குபெற்றும் கூடத் தமிழை ஆட்சி மொழியாக ஏன் உங்களால் கொண்டு வர முடியவில்லை! இப்போது வந்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் மட்டும் என்ன பலன்?

ஆனால் உங்கள் குழந்தைகளை மட்டும் இந்திப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்! உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் டெல்லிக்கு எம்பி ஆகப் போக வேண்டும் என்கிற முறையில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறோம் என்று மக்களிடம் இரட்டை முகம் காட்டுகிறீர்கள்.

மட்டுமல்லாமல் நாடாளுமன்றத் திமுக வேட்பாளர்களுக்கான நேர்முகத்தில் உங்களுக்கு இந்தி தெரியுமா என்றும் கேட்கிறீர்கள்?! இந்த லட்சணத்தில் பாஜகவை எதிர்ப்பதாகவும் பாஜக வந்தால் இந்தி வந்துவிடும்! தமிழ் ஒழிந்து விடும் என்று இதே பொய்ப் பிரச்சாரத்தை எத்தனை வருடம் செய்வீர்கள்? எங்கே பிஜேபி தமிழருக்கு எதிராக இருந்தார்கள்.

கனிமொழி தொகுதியில் குலசேகரப்பட்டினத்திற்கு ராக்கெட்ஏவு நிலையம்
30, 000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி துறைமுகம் , தூத்துக்குடி விமான நிலைய மத்திய அரசுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அன்றைக்கு எல்லாம் ஒரு சீட் கூட பிஜேபிக்கு கிடைக்கவில்லை! ஆனால் அவர்கள் தமிழகத்திற்கு இத்தனை வசதிகளையும் செய்திருக்கிறார்களா இல்லையா?

நீங்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி பேசுகிறீர்களே! நீங்கள் எத்தனை துரோகங்களை தமிழகத்திற்குச் செய்திருக்கிறீர்கள்! சேது சமுத்திரத் திட்டத்தைத் தோண்ட தோண்ட மண் சரியசரிய தோண்ட தோண்ட எவ்வளவு பணத்தை விரயம் பண்ணி அதில் எத்தனை ஊழல் செய்து நீங்கள் கொழுத்திருக்கிறீர்கள்.

அத்தனையும் தோல்வியில் முடிந்த பிறகும் உங்கள் தகப்பனார் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சவால் விட்டுவிட்டும் போய்விட்டார்.

அத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி அரசுப் பணம் வீணாகி விட்டது. ஒருபிடி மண்ணைக் கூட பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முட்டாள் தனமாகப் பேசினீர்களே! இன்றைக்கு இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்டு விட்டீர்களா?

திமுக போட்ட அத்தனை திட்டங்களிலும் ஊழல்! கேட்டால் பாஜக தமிழ்த்திற்கு துரோகம் செய்தது என்று பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டே நீங்கள் செய்த அத்தனை அட்டூழியங்களையும் மறைத்துக் கொண்டு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் பாஜகவை குற்றம் சாட்டுகிறீர்கள்.

எதிலும் ஒரு நியாயம் ஒரு அரசியல் எதார்த்தம் ஒரு அறநெறி எதுவுமே இல்லையே! எதற்கும் கட்டுப்படாமல் இவ்வளவு கேவலமாக உங்கள் குடும்ப அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். போக உங்கள் மாவட்ட செயலர்கள் மந்திரிகள் என அவர்கள் குடும்பங்களையும் இந்த ஊழல்களின் மூலம் காப்பாற்றிக் கொண்டு வருகிறீர்கள்.

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

write thoughts - 2026
#image_title

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

மெட்ரோ ரயில் என்பது ஒரு வெள்ளை யானை கோடிகளை கொட்டினாலும் அதிலிருந்து வரும் வருவாய் மிக குறைவு. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களிலேயே மெட்ரோ ரயில் தடுமாறுகிறது.

துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் இன்னமும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா…? கொஞ்சம் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் அறிக்கையை இணையத்தில் எடுத்துப் பாருங்கள்…

21–22ல் நிகர நஷ்டம் 85.79 கோடி. 22–23ல் இது 34 கோடி. படிப்படியாக குறைந்து வருகிறதே தவிர இன்னமும் பிரேக் ஈவன் எனப்படும் லாபம்–நஷ்டம் இல்லா நிலையை அடையவில்லை. அனேகமாக 27–28 ல் பிரேக் ஈவன் வரலாம். அதன்பின் லாபத்தை பார்க்க வேண்டும்.

பெங்களூரிலும் மெட்ரோ நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த நிதியாண்டில் ஆயிரம் கோடி வருவாயை எட்டியும் 623 கோடி நஷ்டம். இது முந்தைய ஆண்டை விட கூடுதல் நஷ்டமாம்.

சென்னை, பெங்களுருக்கே இந்த நிலைய என்றால் மதுரை, கோவை எம்மாத்திரம். மதுரை மக்கள் எண்ணித்தான் செலவழிப்பார்கள். தேவையில்லா செலவுகள் மதுரையில் மிகவும் குறைவு. திருமங்கலத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு பஸ்சை விட கட்டணம் குறைவாக இருந்தால் தான் மெட்ரோவை ஏற்பார்கள்.

அதிலும் நகருக்குள் மெட்ரோ ரயில் நிலையங்கள் எங்கே அமையும், அதற்கும் செல்லும் இடத்திற்கும் எவ்வளவு துாரம், ஆட்டோ பிடிக்க வேண்டுமா போன்ற விஷயங்களை பொருத்து தான் பயணிப்பார்கள். ஆரம்பத்தில் மெட்ரோ மீதான மோகத்தால் வேண்டுமானால் சென்று வருவார்கள். அதன்பின் வரவேற்பு குறைந்து விடும்.

சென்னையில் திருமயிலை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும் தடுமாற்றத்தில் தான் இருந்தது. தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டபின் ஓரளவு மக்கள் பயணிக்கின்றனர்.

முதல்வரும் தி.மு.க.,வினரும் மீண்டும் மீண்டும் சொல்வது, ‘ஆக்ராவில் மெட்ரோ ரயில் வந்து விட்டது… உ.பி.,யில் வந்து விட்டது’ என்பது. ஆக்ரா, உ.பி., சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம். அங்கு மெட்ரோ கண்டிப்பாக வரவேற்பை பெறும்.

மதுரையை அப்படியா வைத்திருக்கிறீர்கள். ஒருமுறை வந்து செல்லும் சுற்றுலா பயணி மீண்டும் வரவே மாட்டார்…. யாரும் மதுரைக்கு போகிறேன் என்றால் கூட போக விட மாட்டார். அவ்வளவு மோசமாக இருக்கிறது நிர்வாகம்.

வாகன நிறுத்துமிடம் துவங்கி சுற்றுலா பயணிகளை நம்மவர்கள் டீல் செய்யும் அழகு உலகப்பிரசித்தி.. அதை விட ரோடும், கோயிலும்… (அன்னை மீனாட்சி கோயிலும் அதை இவர்கள் நிர்வகிக்கும் அழகையும் பற்றி தனியாக எழுத உள்ளேன்)

என்னை பொறுத்தவரை மதுரைக்கு மெட்ரோ.. கிட்ரோவெல்லாம் தேவையே இல்லை. ரோடுகளை சரியாக அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோரிப்பாளையத்தில் கட்டியுள்ளது போன்று தேவையான இடங்களில் பாலங்கள் அமைத்தாலே போதும். கோடிகளை கொட்டி மெட்ரோவை கொண்டு வந்து பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றால் என்னாகும்.

பயணிகளிடம் வரவேற்பு இருக்குமா, நிலம் கையகப்படுத்த எவ்வளவு செலவு வரும் போன்ற மத்திய அரசு கேட்கும் விபரங்களை தர வேண்டியது மாநில அரசின் கடமை. அதை விடுத்து அதில் அரசியல் செய்வது பொறுப்பின்மையின் உச்சம்.

  • எஸ்.சந்திரசேகர், மதுரை

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ 27 (10.4.2026) வெள்ளி கிழமை.
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ 8.59 pm வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ (ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ 9.30 am வரை பூராடம் பின் உத்ராடம்
யோகம் ~ சிவம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.09
சந்திராஷ்டமம் — 3.58 pm வரை வ்ருஷபம் பின் மிதுனம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 10.4.2026


மேஷம்

மனை தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உருவாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் மேம்படும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். மற்றவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

அஸ்வினி : லாபங்கள் மேம்படும்.
பரணி : ஆதாயம் உண்டாகும்.
கிருத்திகை : புரிதல்கள் மேம்படும்.


ரிஷபம்

உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற செயல்களை குறைத்து கொள்ளவும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்கவும். சிறு மற்றும் குறு தொழிலில் விவேகம் வேண்டும். பயணம் மூலம் செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். துணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் குறையும்.


மிதுனம்

மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதிகளை குறைத்து கொள்ளவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. சமூக பணிகளில் அலைச்சல் மேம்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : போட்டிகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : அலைச்சல் மேம்படும்.


கடகம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி பிறக்கும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
பூசம் : ஆதாயகரமான நாள்.
ஆயில்யம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.


சிம்மம்

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். திடீர் யோகங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : வரவுகள் கிடைக்கும்.
பூரம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : மாற்றம் பிறக்கும்.


கன்னி

மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்விக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் எதிர்பாராத விரயம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : வேறுபாடுகள் நீங்கும்.


துலாம்

தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். விருந்தினர்களின் வருகைகள் ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் சில புரிதல்களை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : மேன்மை ஏற்படும்.
விசாகம் : புரிதல்கள் மேம்படும்.


விருச்சிகம்

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கற்றல் திறனில் புதுவிதமான சூழல் காணப்படும். நீண்ட நாள் ஆசைகளும் எண்ணங்களும் நிறைவேறும். சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

விசாகம் : வெற்றிகரமான நாள்.
அனுஷம் : புதுமையான நாள்
கேட்டை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

—————————————

தனுசு

கணவன் மனைவிக்கு மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன வரவுகள் மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சிந்தனைப் போக்கில் உற்சாகம் தோன்றும். தம்பதிகளுக்குள் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். தோற்றப்பொழிவில் மாற்றங்கள் காணப்படும். குழப்பங்கள் நீங்கி புதிய பாதையும் தெளிவும் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : தெளிவுகள் உண்டாகும்.
பூராடம் : உற்சாகம் பிறக்கும்.
உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும்.


மகரம்

முயற்சிகளில் கவனம் வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் இருந்த தடைகள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவோணம் : மாற்றம் ஏற்படும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.


கும்பம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருள்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : ஆர்வம் உண்டாகும்.
பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.


மீனம்

சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். வியாபார பணிகளில் லாபங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

பூரட்டாதி : இழுபறிகள் மறையும்.
உத்திரட்டாதி : மனப்பக்குவம் உருவாகும்.
ரேவதி : வேறுபாடுகள் குறையும்.



தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

thirumavalavan - 2026

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் பற்றி பேசாதே என்று கோஷமிட்டு, விசிக.,வினர் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து தூக்கி வீசி, கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாஜக., இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்களில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எல்.முருகன் கண்டனம்

ஏபிவிபி மாணவர்களை தாக்கிய விசிகவினரை கைது செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டார். அதில்,

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி சார்பில் கூட்டத்தில் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துக்களை எடுத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகி இருக்கிறது. விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.- என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்து முன்னணி கண்டனம்

தமிழக தேர்தல் நேர்மையாக நடக்குமா? மாணவர்கள் கூட்டத்தில் விசிக வன்முறை தாக்குதல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா? இந்தச் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று கடலூரில் ஏபிவிபி மாணவர் அமைப்பு நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரகளை செய்துள்ளனர். காவல்துறையினர் கண் முன்னே மிரட்டல் விடுத்த விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இத்தகைய வன்முறை சம்பவங்கள் திமுகவின் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுபோல் நடந்தன.

மேலும் ஊடகங்கத்தினரும் மிரட்டப்படுகின்றனர். செய்தி சேகரிக்க செல்லும் விடீயோ கலைஞர்கள், நிருபர்களை ஆகியோரை போலீஸ் தாக்குவது, விரட்டுவது தொடர்கிறது. இதற்கு காரணம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக, காவல்துறை அதிகாரிகளாக திமுக ஆதரவாளர்கள் இருப்பதால் தான்.

இன்னமும் திமுகவின் கண் அசைவுக்கே அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா? அல்லவா? என்ற சந்தேகம் எழுகிறது.

காவல்துறையின் உயர் அதிகாரிகள் சில இடங்களில் மாற்றப்பட்டனர். ஆனால் பல முக்கிய இடங்களில் அதிகாரிகள் மாற்றப்படவில்லை.

வன்முறையில் இறங்கும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் தேர்தல் நாளன்று வாக்காளர்களை அச்சுறுத்தி, நேர்மையற்ற தேர்தலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்து முன்னணி சார்பில் எச்சரிக்கிறோம்.

ஆகவே, இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு மாணவர்களை தாக்கியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்வத்தாமன், பாஜக.,

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. அதில் விசிக குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசத்தை நேசிக்கிற மாணவர்கள் கூட்டம் என்பதால் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இந்த கொடூர தாக்குதல்களின் அடிப்படையில் விசிக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாஜக.,வின் எஸ்.ஜி. சூர்யா

சிதம்பரத்தில் ABVP கடலூர் சார்பாக நடைபெற்ற “மாணவர்களின் குரல் மாற்றத்திற்கான குரல்” தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், மது போதையில் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்!

ABVP மாநில பொதுச் செயலாளர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, நாற்காலிகளை வீசி எறிந்து, பொறுப்பாளர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெறிச்செயலில் பன்னீர்செல்வம் மற்றும் பல அப்பாவி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

மேலும், ABVP மத்திய செயற்குழு உறுப்பினர் செல்வி.வேதாஞ்சலி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்திருப்பது இவர்களின் கீழ்த்தரமான சிந்தனையை அப்பட்டமாக காட்டுகிறது. ஒரு பெண் நிர்வாகியை தகாத வார்த்தைகளால் அசிங்கப்படுத்தும் இவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவது மிகப்பெரிய கேலிக்கூத்து.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவில்லாமல், வன்முறையை கையில் எடுக்கும் இது போன்ற சமூக விரோதிகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக கைது செய்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயக குரலை எந்த ரவுடித்தனத்தாலும் ஒடுக்கி விட முடியாது!