Home Blog Page 2

பஞ்சாங்கம் – மார்ச் 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 27

||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்

பஞ்சாங்கம்  | 27.03.2024 | புதன்கிழமை

         !!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!

श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி 14 { 27.3.2024* } புதன் கிழமை**
வருடம் ~ சோபக்ருத் வருடம் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 4.34 pm வரை த்விதியை பின் திருதியை
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 3.44 pm வரை சித்திரை பின் ஸ்வாதி
யோகம் ~ வ்யாகதம்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்…
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை
10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.17
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்விதியை  
இன்று* ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam
thiruvalluvar deivapulavar

இன்றைய (27-03-2024) ராசிபலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்..!


குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்..!


தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்பு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : மகிழ்ச்சி ஏற்படும்.
மிருகசீரிஷம் : அதிர்ஷ்டகரமான நாள்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்..!


வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் புரிதல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்தோடு செயல்படவும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள்..!


குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்களின் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுக போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
ஆயில்யம் : சலுகைகள் கிடைக்கும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்..!


குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : தடைகள் நீங்கும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்..!


குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உதவி செய்யும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : தனவரவுகள் கிடைக்கும்.
சித்திரை : திருப்தியான நாள்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்..!


மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். பயணங்களின் போது விவேகம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

சித்திரை : சஞ்சலங்கள் மறையும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : உழைப்பு அதிகரிக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்..!


நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அலைச்சல் உண்டாகும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : சோர்வுகள் ஏற்படும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்..!


உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நவீன அணுகுமுறையால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். மாற்றம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள்..!


எதிலும் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

உத்திராடம் : விரயங்கள் ஏற்படும்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்..!


முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : தாமதங்கள் விலகும்.
சதயம் : மதிப்பு ஏற்படும்.
பூரட்டாதி : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள்..!


எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சில பணிகளில் சுயமாக முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுப்பதை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பதற்றமின்றி செயல்படவும்.
உத்திரட்டாதி : சோர்வுகள் உண்டாகும்.
ரேவதி : மதிப்பளித்துச் செயல்படவும்.




தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

ipl 2024

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 26.03.2024 – சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

சென்னை அணி (206/5, ஷிவம் துபே 51, ருதுராஜ் 46, ரச்சிந்திரா 46, ரஷீத்கான் 2/49) குஜராத் அணியை (143/8, சாய் சுதர்ஷன் 37, சாஹா 21, தீபக் சாஹார் 2/28, முஸ்தஃபிகுர் ரஹ்மான் 2/30, துஷார் தேஷ்பாண்டே 2/21) 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே சென்னையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். ரச்சின் (20 பந்துகளில் 46 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) முதலில் 5.2 ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் இருக்கும் வரை சுமாராக ஆடிய கெய்க்வாட் (36 பந்துகளில் 46 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ரச்சின் ஆட்டமிழந்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதன்பின்னர் அஜிங்க்யா ரஹானே 12 பந்துகளில் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் ஷிவம் துபே தன்னுடைய வாணவேடிக்கைகளைத் தொடங்கினார். அவர் 23 பந்துகளில், 2 ஃபோர், 5 சிக்சருடன் 51 ரன் எடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் மூன்று விக்கட் விழுந்தபோதும் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே சொதப்பல்தான். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் பின்னர் சற்று வேகமாக ஆடக்கூடியவர் ஷுப்மன் கில். இன்று அவர்தான் முதலில் அவுட்டானார். விருத்திமான் சாஹா 21 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சாய் சுதர்ஷன் (37 ரன்), விஜய்ஷங்கர் (12 ரன்), டேவிட் மில்லர் (21 ரன்), ஒமர்சாய் (11 ரன்) என சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் குஜராத் அணி 18ஆவது ஓவர் முடிவில் மீதமுள்ள 12 பந்துகளில் 79 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. அதாவது எல்லா பந்துகளிலும் சிக்சர் அடித்தால் கூட வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலை. அந்த இரண்டு ஓவர்களிலும் குஜராத் அணி ஒரு விக்கட்டை இழந்து 15 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அனி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஹைதராபாத்தில் மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

Vinash Kale Viprit Buddhi

0
music academyy letter

By        Narasimhan Vijayaraghavan

“Vinash Kale Viprit Buddhi”- In the wake of impending doom your intellect takes leave. That is a famous Sanskrit phrase quoted often, as and from Chanakyaneethi. It was made colloquially famous and aptly understandable,  when the venerable Jaiprakash Narayan spoke  it, in the wake of declaration of Internal Emergency by Madam Indira Gandhi on 26th June,1975. We know it proved true,  as she met her ignominious Waterloo moment in 1977.

On reading the exchanges between RaGa sisters and Music Academy President N Murali, and huge backlash on print and electronic and social media, one was reminded of this adage,  as aptly describing the decision of Music Academy to designate T M Krishna for Sangita Kalanidhi.

Dr. Goutam Desiraju, with impeccable credentials as a renowned scientist and a trained carnatic musician with fifty plus years exposure to the Academy,  as a member in attendance for the conferences, poignantly and pointedly asked, “ What was the reason for the Academy to announce the name in March,2024, breaking the tradition of revealing the name only by September or thereabouts, or even say little earlier but never in March, for a December season? Why?”. He does provide an answer in his expositions now gone viral on YouTube.

The vehemence, not virtuosity with  which the Academy President defended the designation , made it amply clear it was ‘his decision’  nodded in by the Committee/coterie/limpets ( you take your pick). The choice was thrust on the committee and they chose to digest, not accept. And if ‘he’ has picked the nominee, a scan across the media turf would reveal who else was behind it or what motivated them to pick ‘him’ and in March,2024.

Rasikas are not fools,  as Academy would like us to believe.Why are Rasikas up in arms? Not physically but metaphorically. They are sad and anguished. Not angry. Upset that an undeserving pick was made for ‘extraneous factors’ which the President claims were irrelevant. No they mattered. They alone mattered with this nominee.

‘He’ had norespect for the community he happened to be born in. That is fine. That is  his chosen ideology. He trained in Carnatic music. Revered as divine by the Trinity. Religiosity was imbued in the Sahityas. ‘He’ may reject them. Excuse me, it was by singing them, teaching them ( to mint his moolah with his undeniable vidwat) he attained the stature he had/has. Yet, he called names of Saint Tyagaraja and bad mouthed even M S Amma. What hypocrisy that is? Make a living ( far higher and more than most) on Tyagaraja Kritis and then trashing his divine compositions, which by mutilating  them to yield to his political proclivities.

Does such a person deserve the Sangita Kalanidhi? Why are rasikas anguished? Because they revere Carnatic music. They value the Music Academy as a hallowed institution. If the Academy disdainfully rejects such premises and yields to baser political instincts, it is shame on them. RaGa and others could not stomach it. They were ‘made’ by the  divinity for their passion, devotion and vidwat. They could not see it being taken to the cleaners,  when a ‘respected fellow musician’ who represented the very opposite of these tenets,  being designated  as the ‘repository of Carnatic music’. It is nothing short of sacrilege, blasphemy and  intolerable Abaswaram.

Murali is not Music Academy  (Indira did not prove to be India as as her crony D K Bharooah proclaimed) . The composition of minions in the committee do not make it either. It is the rasikas who made it and make it. These ‘characters’  would come to pass. They will not be remembered for whatever they may  have done earlier in the last two decades. But, they  will never be forgotten  for what they have perpetrated in 2024-25.

The Music Academy is beyond these characters as an institution. Carnatic Music is a limitless, vast and divine ocean. . These characters cannot ruin either of them . They can and  may have besmirched its  pure standing,  transiently. Just in  2024-25, for now. The commoner rasikas ought to unite to shun the Music Academy this year. That is the least we can do to support the artistes who have stood up. And attend concerts in every other Sabha which does  not host T M Krishna.

‘They’ must go. And go ‘they’  will. Not long from today. Rasikas must continue to speak and act. And they will be heard. It takes time for good things to happen,while it may take no time  to perpetrate such a nonsense, you see.

Vinash Kale Viprit Buddhi.

பஞ்சாங்கம் மார்ச் 26- செவ்வாய்| இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari

இன்றைய பஞ்சாங்கம்  – மார்ச் 26

தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:|| 

!!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்
பங்குனி~ 13 (26.3.2024) செவ்வாய் கிழமை.*
வருடம் ~ சோபக்ருத் வருடம் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 3.03 pm வரை ப்ரதமை பின் த்விதியை
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ 1.39 pm வரை ஹஸ்தம் பின் சித்திரை
யோகம் ~ த்ருவம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதி யோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.18
சந்திராஷ்டமம்~ கும்பம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ அதிதி 
இன்று   ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
26.03.2024


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


சவாலான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.
பரணி : உதவி கிடைக்கும்.
கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


புதிய திட்டங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.
ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தடைபட்ட பணிகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். திருப்தியற்ற மனநிலை குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


திட்டமிட்ட பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : வெற்றிகரமான நாள்.
ஆயில்யம் : தைரியம் மேம்படும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கலகலப்பான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். வழக்குகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம் : மதிப்பு கிடைக்கும்
உத்திரம் : அனுபவம் உண்டாகும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் வழியில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : சங்கடங்கள் மறையும்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
சுவாதி : முடிவு பிறக்கும்.
விசாகம் : திருப்பங்கள் உண்டாகும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் உள்ள தடைகளை அறிவீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆதாயம் ஏற்படும்.
அனுஷம் : தடைகளை அறிவீர்கள்.
கேட்டை : சோர்வுகள் குறையும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக திறமை மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திராடம் : பயணங்கள் ஏற்படும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


உயர் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : நன்மையான நாள்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : ஆதாயகரமான நாள்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


தற்பெருமை சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

அவிட்டம் : அலைச்சல் அதிகரிக்கும்.
சதயம் : திருப்தியின்மையான நாள்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளியூர் வர்த்தகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும். ஆபரண பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்புகளால் மனதில் மாற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஈர்ப்பு ஏற்படும்.
ரேவதி : மாற்றம் உண்டாகும்.




இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thirukkural
thiruvalluvar deivapulavar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

IPL 2024: ராயல் செலஞ்சர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

ipl 2024

ஐபிஎல் 2024 – 25.03.2024 – பெங்களூரூ
ராயல் செலஞ்சர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் அணி (176/6, ஷிகர் தவான் 45, ஜிதேஷ் ஷர்மா 27, பிர்ப்சிம்ரன் சிங் 25, சிராஜ் 2/26, மேக்ஸ்வெல் 2/29)  பெங்களூரு அணி (விராட் கோலி 77, ரபாடா 2/23, ஹர்பிரீத் ப்ரார் 2/13)

இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே பெங்களூருவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் (45 ரன்), ஜிதேஷ் ஷர்மா (27 ரன்), பிரப்சிம்ரன் சிங் (25 ரன்) நன்றாக ஆடினர். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் பிந்தைய ஓவர்களில் சிறப்பாக ஆடினர்.

முதல் 42 பந்துகளில் 50 ரன்களும், அடுத்த 33 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் எடுத்தனர். அடுத்த 31 பந்துகளில் 150 ரன்னையும் மீதமுள்ள 14 பந்துகளில் 26 ரன்களையும் அந்த அணி சேர்த்தது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது. பந்துவீச்சாளர்களில் முகம்மது சிராஜ் மற்றும் யஷ் தயால் இருவரைத் தவிர மற்றவர்கள் ரன் அதிகம் கொடுத்தனர்.

          இரண்டாவதாக ஆடவந்த பெங்களூரு அணியில் ட்யு பிளேசிஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழந்தனர். ரஜத் படிதர் 18 ரன் எடுத்தார். கிளன் மேக்ஸ்வெல் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் நன்றாக ஆடிய விராட் கோலி 16ஆவது ஓவர் முடிவில் 77 ரன்னுக்கு (49 பந்துகள், 11 ஃபோர், 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அனுஜ் ராவத்தும் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். அப்போது 22 பந்துகளில் 47 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக், மஹிபால் லோமரும் அதிரடியாக ஆடி பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை சென்னையில் சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்!

IMG 20240325 WA0233

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பங்குனி மாத திருக்கல்யாணம் திங்கட்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.காலை செப்பு தேரோட்டம். இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ தேசங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு கோவில் கொண்டுள்ள ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளன்று திருக்கோவில் முன்புள்ள ஆடிப்பூர பந்தலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழும் வண்ணம் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஆண்டாள் ரெங்க மன்னார் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. அன்று தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்க மன்னார் ரத வீதிகள் வழியே வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா இன்று (25ஆம் தேதி) காலை துவங்கியது.

ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் காலை 7 மணிக்கு மேஷ லக்னத்தில் செப்புத்தேர் எனும் கோ ரதத்தில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்கி செப்புத் தேரினை நான்கு ரத வீதிகள் வழியே இழுத்து நிலையம் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு சுவாமிகள் வீதி புறப்பாடாகியது.

IMG 20240325 WA0234

முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா இரவு 7:30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சன பட்டர் திருக்கல்யாணத்தினை நடத்தி வைத்தார். தலைமை அர்ச்சகர் ஸ்ரீ வாரி முத்துப்பட்டர் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் மணியம் கோபி கிச்சப்பன் வெங்கடேச ஐயங்கார் ஆகியோர் பூஜைகள் நடத்தி வைத்தனர்.

திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பாக்கெட் வழங்கப்பட்டது. ஆண்டாள் பெரியாழ்வார் ட்ரஸ்ட் சார்பில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் சிரமமின்றி திருக்கல்யாணத்தினை தரிசிக்க பல இடங்களில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

விழா ஏற்பாடுகளை மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க. செல்லத்துரை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

திருக்கல்யாண திருவிழாவில் செவ்வாய் கிழமை மாலை முத்துக் குறி ஊஞ்சல் சேவை தலபுராண வாசித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது .இவ் விழாக்களில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது

சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

sabarimalai nadai open
#image_title

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று பம்பை நதியில் கோலாகலமாக நடைபெற்றது.பம்பையில் இருந்து சுவாமி சன்னிதானம் வந்ததும் இரவு கொடி இறக்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

FB IMG 1711359782875

விழாவையொட்டி தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடைபெற்று வந்தது. 9-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது.

இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பம்பை ஆற்றில் ஐய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

இதனையொட்டி காலை 8 மணிக்கு ஐய்யப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் காலை 11.30 மணிக்கு பம்பை வந்து சேர்ந்தது.திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் பம்பை நதிக்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆராட்டு கடவில் ஐய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. ஆராட்டு சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றினார். களபம், மஞ்சள் பூசி ஆராட்டு கடவில் 3 முறை மூழ்கி ஐய்யப்பனுக்கு ஆராட்டு சடங்கு நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து புத்தாடை அணிவித்து அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக அய்யப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்பட்டது. மாலையில் ஐய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அத்துடன் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது. தொடர்ந்து அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.

பிறகு விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

உதகையில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!

annamalai bjp tn leader

காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உதகையில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் இன்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

IMG 20240325 WA0150

பாஜகவினருக்கு 10 மணியும் அதிமுகவினருக்கு 11 மணியம் நேரம் ஒதுக்கப்பட்டது. பாஜகவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்ப தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இரு கட்சியினரும் மாறி மாறி கோஷமிட்டனர்.

பின்னர் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்த பின்பு ஊர்வலம் தாமதமாக தொடங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல் துறையோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனத்தை தாக்கம் முயன்ற அதிமுகவினரை காவல்துறை கட்டுப்படுத்தியது தொடர்ந்து பாஜகவினரை வேகமாக செல்ல அறிவுறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஓபிஎஸ்-க்கு தடை தொடரும்-இரட்டை இலையை தொட!

ops interview at madurai copy
#image_title

அ.தி.மு.க., வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறிய உயர்நீதிமன்றம். இரட்டை இலைக்காக தேர்தல் கமிஷனை அணுக வேண்டும் என பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேடு ஆகியவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக.,வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு இன்று(மார்ச் 25) நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க.,வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனக் கூறி, வரும் ஜூன் 10ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு!

sabarimalai nadai open
#image_title

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடைபெற்று வந்தது. 9-ம் திருவிழாவான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து திங்கட்கிழமை இன்று, பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

இதனையொட்டி இன்று காலை 8 மணிக்கு ஐயப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் காலை 11 மணிக்கு பம்பை வந்து சேர்கிறது. பின்னர் பம்பை நதிக்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆராட்டு கடவில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

ஆராட்டு சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றுவார். களபம், மஞ்சள் பூசி ஆராட்டு கடவில் 3 முறை மூழ்கி ஐயப்பனுக்கு ஆராட்டு சடங்கு நிறைவேற்றப்படும்.

இதனை தொடர்ந்து புத்தாடை அணிவித்து அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக ஐயப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்படும். மாலையில் அய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அத்துடன் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

பிறகு விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.