தன் எதிர்ப்பாளர்களுக்கு அரிப்பு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி வல்லவர். செங்கோட்டையில் இருந்து ஆற்றிய சுதந்திரதின உரையில் அது போன்றதொரு விஷயத்தை அவர் ஏற்படுத்தினார். ” மாவோயிச சிந்தனை கொண்டவர்கள் பற்பல ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறார்கள். அரசின் கமிட்டி களிலும் கூட அவர்கள் இருக்கிறார்கள். மாவோயிச சிந்தனை பல்வேறு அரசு அமைப்புகளையும் நிறுவனங்களையும் பாதித்துள்ளது” என்று கூறிய அவர் தனது அரசு ஆயுதமேந்திய நக்சல்களை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாகவும் ஆனால் அவர்களுக்கு ஆதரவான சிந்தனையும் செயல்பாடும் கொண்டவர்கள் இன்னமும் பொது வாழ்வில் தொடர்கிறார்கள் என்றார். ‘நாம் அந்த “திமாகி நக்சல்”களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். இளைஞர்களை ஒன்று திரட்டி இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும்’ , என்று வலியுறுத்தினார்.
புறா கூண்டில் பூனையை விட்டது போல என்ற முதுமொழி போலாகியது பிரதமரின் ‘திமாகி நக்சல்கள்’ என்ற சொல்லாடல். சில பிரிவினருக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விட்டது. சமூக வலைதளங்களில் பிரதமரை பேச்சை உற்சாகமாக ஆதரித்தவர்களின் பாராட்டுக்களும் அவர்களது அசௌகரியத்தை மேலும் அதிகரித்து விட்டது. காங்கிரசின் மூத்த தலைவரான ப. சிதம்பரம் தான் அந்த அசௌகரியத்தை முதலில் வெளிப்படுத்தியவர். ‘நான் திமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்’ , என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் . அது ஏராளமான கண்டனத்தையும் கேலியையும் கொண்டு வந்தது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியையே திமாகி நக்சல்கள் கட்சி என்று முத்திரை குத்த வழி வகுத்தது.
சில பத்திரிக்கையாளர்களை திமாகி நக்சல்கள் என்று சித்தரிப்பது தவறு என்று பத்திரிகையாளர்கள் சங்கம் (எடிட்டர்ஸ் கில்ட்) புகார் கூறியபடி பிரச்சனையில் குதித்தது. எது எப்படியோ மேட்டுக்குடி லுட்டியன்களில் ஒரு பகுதியினரை பிரதமரின் சொல்லாடல் கலக்கி விட்டது.
இதுபோன்ற விஷயங்களை எல்லா நேரங்களிலும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் தெளிவற்று இருப்பதால் ஏற்படும் சர்ச்சைகள் கேடு விளைவிக்காத வரையில் சிரித்தபடி அனுபவிக்க தக்கவை. இதற்கு முன்பும் கூட ‘அர்பன் நக்சல்கள்’, ‘கான் மார்க்கெட் கேங்’ என்ற சொல்லாடல்கள் சூடான விவாதத்தை கிளப்பின. அதற்கு பொருள் இதுதான் என்று யாரும் தெளிவாக விளக்கவில்லை என்ற போதும் விஷயம் தெரிந்தவர்கள் தங்களுக்கே உரிய வகையில் அர்த்தத்தை முடிவு செய்து கொண்டனர்.
நானும் பிரதமரின் சொல்லாடலுக்கு விளக்கம் அளிக்க போவதில்லை. மாறாக சூழலை சுட்டி காட்டுகிறேன். நக்சல் இயக்கத்தின் கருத்தியல் அடித்தளமான மாவோயிசம் வெறும் தீவிரவாத திட்டம் மட்டுமல்ல. அது உலகிலுள்ள பல நாடுகளில் பல்வேறு இயக்கங்கள் உருவாக்கிய , நன்கு கட்டமைக்கப்பட்டதொரு கருத்தியல். 1950 – 60 களில் சீனா – ரஷ்யா இடையே வேற்றுமை ஏற்பட்டபோது மாவோ இதை சீனாவில் முன்னெடுத்தார். பின்னர் பெரிய கருத்தியல் மரபாக இது உருவானது. வன்முறையுடன் கூடிய புரட்சி கருத்தாளர்கள், பாடலாசிரியர்கள், தத்துவவாதிகள், பிரிவினை/ஊடுருவல்வாதிகளும் அதை பின்பற்ற தொடங்கினர்.
கூபா வில் சே குவேரா மாவோயிச கருத்திலான கொரில்லா போரை போகோ கொள்கை என்ற பெயரில் நடத்தினார். போகோ கொள்கை அதிதீவிரதன்மை கொண்ட ஆயுதம் ஏந்திய சிறு குழு தங்கள் செயல்பாடுகளால் அரசியல் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதாகும். இது போன்ற தலைவர்கள் மற்ற பல நாடுகளிலும் இருந்தார்கள். பெருநாட்டில் கோன்சாலோ , பிலிப்பைன்ஸில் ஜோஸ் மரியா சீசன் போன்றவர்களை குறிப்பிடலாம். நம்முடைய அண்டைநாட்டிலும் (நேப்பாளம்) புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ மாவோயிச போரை ‘பிரசந்தா பாதை’ என்ற பெயரில் நடத்தினார் .அது மக்கள் யுத்தத்தையும் நகர்ப்புற எழுச்சியையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
பிரெஞ்சு தத்துவவியலாளர்களான அலைன் பாடியோ, ஜீன் பால் சார்த்தர், மாவோயிச கருத்தியல் அடிப்படையில் பல பத்திரிகைகளை நடத்திய சிமோன் டி பியூவோயர் போன்றவர்களால் வன்முறைக்கு ஆதரவாக, வலுவான வாதங்களால், உறுதியான கருத்தியலாக மாவோயிசம் முன்னிறுத்தப்பட்டது.
இந்தியாவிலும் சாரு மஜும்தார் , கனாய் சட்டர்ஜி, கணு சன்யால் போன்ற அறிவுஜீவிகளால் நக்சலிசம் துவங்கப்பட்டது. அது வெறும் கொரில்லா இயக்கம் மட்டுமல்ல. சுதந்திர இந்தியாவில் ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட அரசுக்கு எதிரான கருத்தியல். வடஇந்தியாவில் வங்காளம் தொடங்கி பீகார் வரையிலும் தெற்கில் ஆந்திரா கேரளா வரையிலும் உள்ள பல மாநிலங்களில் அரசுக்கு எதிராக, சுதந்திர இந்தியாவில், பெரும் அச்சுறுத்தலாக நக்சல் இயக்கம் வடிவெடுத்தது. ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற பழங்குடியினர் உள்ள மாநிலங்கள் நக்சல்பாரிகளின் ஊடுருவலுக்கு முக்கிய தளங்களாக ஆகின.
பல தசாப்தங்களாக கல்வித்துறை சார்ந்தவர்கள் , பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், பொதுவெளியில் புழங்கும் அறிஞர்கள் ஆகியோரின் துணையினால் அந்த இயக்கம் வலுவான கட்டமைப்பு கொண்டதாக ஆனது. கிராமப்புற, பழங்குடியினர் பகுதிகளில் ஆயுதமேந்திய நக்சல்கள் கொடூரமான, அர்த்தமற்ற வன்முறையை நிகழ்த்திய போது நகர்ப்புறங்களில் அவர்களுக்கு ஆதரவான சிவில் அமைப்பினர் அந்த வன்செயல்களை அறிவார்ந்த தளத்தில் ஆதரித்தனர்.
கிஷோர் சம்ரிட் எதிர் இந்திய அரசு வழக்கில் (2013) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உள்துறை அமைச்சரகம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். ” சி பி ஐ (மாவோயிஸ்ட்) கட்சியினரும் அந்த கருத்தியலை கொண்டவர்களும் மாநகரங்களிலும் நகரங்களிலும் புறநகர் பகுதிகளிலும் அரசுக்கு எதிரான திட்டமிட்ட ரீதியில் வலுவான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அரசை மிக மோசமாக சித்தரிப்பதும் பொய்யான தகவல்கள் மூலம் அரசை இழிவுபடுத்தியும் வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை. மேலும் அதில் ” உண்மையில் மாவோயிச இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அந்த கருத்தியலாளர்கள் பலவிதத்திலும் ‘மக்கள் யுத்த கொரில்லா படை’யினரை விடவும் ஆபத்தானவர்கள்” , என்று வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கை, ‘மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களிடையே, ‘வெகுஜன அமைப்புகள்’ மூலம் ஒன்று திரட்டுவதும் அந்த அமைப்புகளை தங்கள் ‘முன்னணி இயக்கமாக’ முன்னிறுத்தவும் செய்கின்றனர்’ என்று குறிப்பிடுகிறது.
அந்த முன்னணி இயக்கங்கள் ‘மனித உரிமைக்கான அரசு சாராத அமைப்புகள்’ என்ற போர்வையில் நக்சல் கருத்தியலாளர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், களச்செயல்பாட்டாளர்களால் நடத்தப்படுகின்றன, என்று காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணம் செய்துள்ளது.
‘ திமாகி நக்சல்கள் ‘ யார் என்று மோடி அரசு விளக்கம் அளிக்கிறதோ இல்லையோ காங்கிரஸ் தலைமையிலான அரசு அவர்களை வரையறுத்து உச்ச நீதிமன்றத்தில் அடையாளப்படுத்தி உள்ளது. ‘ இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற/ சட்டமன்ற முறையிலான அரசு அமைப்பை ஆயுதப் போராட்டம், சமுதாயத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினரை திரட்டுதல், இவர்களிடையே குயூக்தியான கூட்டு மூலம் தூக்கி எறிவது என்ற கருத்தியலை கொண்டவர்கள். அதை பிரச்சாரம் செய்பவர்கள். முன்னெடுப்பவர்கள்’ , என்று உச்சநீதிமன்றத்தில் அம்பலப்படுத்தி உள்ளது.
இன்று நம்மைச் சுற்றி பார்க்கும் போது மேற்சொன்ன மனநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்படுவதை காணலாம். நேபாளத்தில் அரசுக்கு எதிரான ஜென்சி புரட்சி ஏற்பட்ட போது இந்தியாவில் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ‘இந்திய அரசியல் சாசனத்தை காப்பாற்றுவோம்’ என்று கவர்ச்சிகரமாக முழங்கினார்.
இந்திய ஜனநாயகத்தை நாடாளுமன்றத்திலோ அல்லது தேர்தல் மூலமாகவோ தீர்மானிக்க முடியாது. அது தெருக்களில் முடிவு செய்யப்படும், என்று ஒரு லுட்டியன் அறிவுஜீவி அறைகூவல் விடுத்தார்.
இந்நிலையில் “திமாகி நக்சல்கள்” என்பதை நாம் விளக்க வேண்டிய அவசியம் என்ன ?
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (31-8-2026) ராசி பலன்கள்
மேஷம்
உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும். பரணி : நம்பிக்கை மேம்படும். கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வியாபார பணிகளில் லாபங்கள் கிடைக்கும். இழுபறியான தன வரவுகள் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான காரியங்களையும் எளிமையான முறையில் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறுதூரப் பயணம் முலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். திருவாதிரை : அனுபவம் கிடைக்கும். புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நவீன கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நில நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். பூசம் : வாய்ப்புகள் அமையும். ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஆரோக்கியத்தில் கவனம் பூரம் : அலைச்சல்கள் உண்டாகும். உத்திரம் : விவேகம் வேண்டும்.
கன்னி
குழந்தைகள் மூலம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : திறமைகள் வெளிப்படும். அஸ்தம் : ஆதரவான நாள். சித்திரை : இன்னல்கள் குறையும்.
துலாம்
உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விலகி இருந்தவர்கள் மூலம் சாதகமான பலன்கள் உருவாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : மாற்றமான நாள். சுவாதி : உதவிகள் கிடைக்கும். விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
விருச்சிகம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் மேம்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : ஆர்வம் மேம்படும். அனுஷம் : சிந்தனைகள் பிறக்கும். கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு
எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி நிறைவு பெறும். பயணங்களில் சுகமான அனுபவங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : அனுபவங்கள் ஏற்படும். பூராடம் : புரிதல் உண்டாகும். உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்
அக்கம் பக்கம் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். கற்பனை சார்ந்த சிந்தனைகளால் புதுமைகளை உருவாக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இனம் புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். நிர்வாகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் பாதுகாக்கும் திறன் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும். சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூரட்டாதி : வரவுகள் உண்டாகும்.
மீனம்
புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பயணங்களில் நிதானம் அவசியம். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும். உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். ரேவதி : முடிவுகள் கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. போதை, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் கவலை அடைந்திருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
நேற்று இரவு இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போலீஸ் கண்காணிப்பு அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த தணிகாசலம் என்பவரை துடிக்கத்துடிக்க கொன்று விட்டு தப்பிச் சென்று இருக்கிறது ஒரு கும்பல்.
தணிகாசலம் அவர்கள் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் காவல்துறை குறிப்புகளில் இந்து முன்னணி பொறுப்பாளர் என்றுள்ளது. பல ஆயிரம் மக்கள் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இது பொதுநிகழ்வு ஆகும். அதனால் இந்து முன்னணி பொறுப்பாளர் கொலை என்று செய்திகளில் வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் நடமாட்டம், போதையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். இளம் பெண்கள் கஞ்சா போதையில் சாலைகளில் ரகளை செய்யும் காணோளி தமிழகத்திற்கு தலைகுனிவு.
கடந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கருதியது இந்த போதை குற்றங்கள் தான் முதன்மையானது ஆகும். இந்த ஆட்சியிலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து போதை பொருளின் நெட்வொர்க்கை கண்டறிந்து துடைத்தெறியாமல் மேம்போக்காக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போன்ற சம்பவங்களால்தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று சுட்டிக் காட்டுகிறோம்.
குற்றங்கள் நடக்க காவல்துறை வழக்கமான ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதான பயம் இல்லாத காரணமே முதன்மையானது. அதனால் தான் துணிந்து இதுபோன்ற கொடூர குற்றங்களைச் செய்யும் துணிவு அவர்களுக்கு வருகிறது.
கொலையுண்ட தணிகாசலம் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக்கு கடுமையான தண்டனை வழங்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக முதல்வர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி விரைவாக காவல்துறை செயல்பட அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
‘மனதின் குரல் (137ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 30.08.2026 தமிழில் / குரல் : ஆர். சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
பாரம்பரியத்தைக் காட்டும் வலைத்தள உருவாக்கம்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் இந்தப் புதிய பகுதிக்கு உங்களனைவரையும் மீண்டுமொரு முறை நான் வரவேற்கிறேன். புதிய முயற்சிகளை பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மனதின் குரல் என்பதை நீங்களனைவரும் நன்கு அறிவீர்கள். நாட்டு மக்களின் நூதனமான எண்ணங்கள் மீது விவாதம் நடக்கிறது. இவற்றில் பல கருத்துக்கள்-எண்ணங்களின் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கையின் மாபெரும் சக்தியை முதலீடு செய்திருக்கிறார்கள்.
நண்பர்களே, சில காலம் முன்பு சமூக ஊடகத்தில் யாரோ ஒருவர், ஆஷாட ஏகாதசியின் புனிதமான வேளையிலே, வரலாற்றை சுவாரசியமானதாக ஆக்கும் எனது முயற்சியை நான் தொடங்குகிறேன் என்பதைக் கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், என்று எழுதியிருந்தார். அவர் தொடர்ந்து வெளிப்படுத்திய எண்ணம் மிகவும் எளிமையானது. நீங்கள் இந்த வலைத்தளத்திற்குச் சென்று ஏதோ ஒரு ஆண்டைத் தேர்வு செய்யுங்கள். அந்தக் காலத்தில் பாரதத்தின் எந்தப் பாகத்தில் யார் ஆட்சி செய்து வந்தார்கள் என்பது உங்களுக்கு சுலபமாகத் தெரிந்துவிடும். எனக்குமே கூட இது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இது குறித்து மேலும் தகவல்களைப் பெறலாமே என்று எண்ணமிட்டேன். மும்பையிலே வசிக்கின்ற கிருஷ்ண சேஷாத்ரி அவர்கள் தான் இந்தச் செயலை செய்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. மேலும் சுவையான விஷயம் என்னவென்றால் கிருஷ்ணா அவர்கள் தனது வலைத்தளத்திற்கும் கூட எளிமையான பெயரைச் சூட்டியிருந்தார் என்பது தான் – www.bharatrajya.com இவர் மேற்கொண்ட இந்த முயற்சி பற்றிய தகவல்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். ஆகையால், அவரோடேயே பேசிப் பார்க்கலாமே என்று தோன்றியது. நண்பர்களே, கிருஷ்ணா அவர்கள் இப்போது நம்மோடு தொலைபேசியிலே இணைகிறார்.
பிரதமர் – கிருஷ்ணா அவர்களே வணக்கம்.
கிருஷ்ணா சேஷாத்ரி – வணக்கம் சார் வணக்கம்.
பிரதமர் – சார் நீங்க தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர் இல்லை, வரலாற்று ஆசிரியரும் இல்லை அப்படீங்கறது தெரிய வந்திச்சு. ஆனாலும் கூட எப்படி நீங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாறு தொடர்பான ஒரு தளத்தை உருவாக்கினீங்க? இதெல்லாம் எப்படி உருவாச்சுன்னு தெரிஞ்சுக்க நான் ஆவலா இருக்கேன்.
கிருஷ்ணா சேஷாத்ரி – நன்றி சார். உங்களோட பேசுவது எனக்கு மிகப்பெரிய சௌபாக்கியமான விஷயம் சார். என்னைப்பத்தி கொஞ்சம் சொல்லிக்கறேன். நான் ஒரு பொறியாளரா இருந்தேன், பிறகு நான் எம்பிஏ செஞ்சேன், பிறகு மார்கெட்டிங் துறைக்குப் போயிட்டேன். ஆனா, இதெல்லாம் நான் செஞ்சிட்டு இருந்தாலும், என் மனசுக்குள்ள என் சின்ன வயசு ஆசையான வரலாறு மேலேயே இருந்திச்சு. வரலாறு தொடர்பா ஏதாவது நான் செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தேன், எப்படி அதை சுவாரசியமா ஆக்குறது, இப்ப நமக்குக் கத்துக் குடுக்கற வழிமுறையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தணும்னு கூட தோணும், இது மூலமா வரலாற்றை ஒரு கதை வடிவத்தில எல்லாருக்கும் கொண்டு சேர்க்க முடியும்னு நினைச்சுப்பேன்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி, பாரத நாட்டு வரலாற்றோட எந்தப் பக்கத்தைப் பத்தின தகவல்கள் அதிக அளவுல மக்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்னு நீங்க நினைக்கறீங்க?
கிருஷ்ணா சேஷாத்ரி – நம்ம பள்ளிகள்ல-கல்லூரிகள்ல கற்பிக்கப்படற பாரதநாட்டு வரலாறுன்னு நீங்க பார்த்தா, அதுல ஏதோ ஒரு சாம்ராஜ்யம், அல்லது ஒரு ராஜ்ஜியம், அதுபத்தின பார்வை, அதோட கண்ணோட்டம் கற்பிக்கப்படுது, அந்த சாம்ராஜ்ஜியங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே முக்கியத்துவமும் கிடைக்குது. இந்தச் சுழல்ல சிக்கி, இன்னும் நம்ம பல சாம்ராஜ்ஜியங்கள், எடுத்துக்காட்டா சோழர்கள், பல்லவர்கள், கஷ்மீரத்தில இருந்த கர்கோடக வம்சம் அல்லது அசாமில இருந்த அஹோம்கள் – இவங்க குறைஞ்சது 600 ஆண்டுகள்வரை அஸாமில தங்களோட கலாச்சாரம், தங்களோட விழுமிய முறைகளை பராமரிச்சு வச்சிருந்தாங்க, இவங்களை பத்தி நமக்குத் தெரியாது. ஆகையால இப்படிப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியங்களைப் பத்தியும் மக்களுக்கு அறிமுகம் செய்யற வகையில ஒரு தளத்தை ஏற்படுத்தணும்னு நான் தீர்மானிச்சேன்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி, நீங்க இத்தனை கடுமையா உழைக்கறீங்க, அனுமானமா கேள்வி ஒண்ணை நான் கேட்கறேன். இந்திய வரலாற்றுல மூணே மூணு பேர் கூட பேச உங்களுக்கு சந்தர்ப்பம் குடுத்தா, நீங்க யார் கூட பேச விரும்புவீங்க, ஏன்?
கிருஷ்ணா சேஷாத்ரி – ஆமாம் சார். நான் முதலாவதா ராஜராஜ சோழன் பத்தி அல்லது ராஜேந்திர சோழன் கூட பேசுவேன், ஏன்னா சோழ சாம்ராஜ்ஜியத்தோட மிக சக்திவாய்ந்த அரசர்களாவும், மிக முக்கியனவங்கள்ல ஒருத்தங்களாவும் அவங்க இருந்தாங்க. தஞ்சை பெரிய கோயிலான பிருகதீஸ்வரர் கோயில் இல்லை கங்கைகொண்ட சோழபுரம் மாதிரியான பிரும்மாண்டமான சிவன் கோயில்களைக் கட்டறதுக்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை, திட்டமிடல், அந்த எண்ணம், அடுத்த 1000-2000 ஆண்டுகள் வரை கூட வரக்கூடிய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய இந்தத் தொலைநோக்கு, இந்த எண்ணம் அவங்களுக்கு எப்படி வந்திச்சுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்க விரும்புவேன். ரெண்டாவது ஆளுமைன்னு பார்த்தா, என் கண்ணோட்டத்தில இந்திய வரலாற்றோட மிகவும் குறைத்து மதிப்பிடப்படுற ஆளுமை அவர். அவர் பெயர் ஹேமு, அவரைப் பத்தி இந்திய வரலாற்றுல பார்த்தோம்னா அதிகபட்சம் ரெண்டு மூணு வரிகள்ல படிச்சு முடிச்சுடறோம். அந்த ஹேமு ஒரு சாதாரண குடிமகன், ஒரு வியாபாரி, அவர்தான் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பறாரு. அவரு ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினவர் மட்டுமல்லாம, இராணுவ மேதாவிலாஸம் படைச்ச ஒரு மதியூகியும் கூட. தன்னோட வாழ்க்கையில 23 போர்கள்ல களம் கண்டு, 22 போர்கள்ல ஜெயிக்கவும் செஞ்சிருக்காரு. அவரோட சிந்தனா ஓட்டம் எப்படி இருந்திச்சு, எப்படி ஒரு சாதாரண குடிமகனா இருந்து ஒரு பெரிய அரசனா உருவாகறாரு, அவரோட பயணம் பத்தி தெரிஞ்சுக்கவும் ரொம்ப ஆர்வமா இருக்கேன் சார். அடுத்து மூணாவது ஆளுமைன்னு சொன்னா, அவங்க ஒரு சுவாரசியமான ஆளுமைன்னு தான் சொல்லணும். இவங்க ஒரு பெண் சார், இவங்க திரிபுவன் மஹாதேவி. ஒடிஷாவோட பௌமாகாரா வம்சத்தை சேர்ந்த இவங்களோட கதையும் ரொம்பவே சுவாரசியமானது. 850ஆம் ஆண்டுவாக்கில அவங்க அண்டை நாடான பாலா வம்சத்து அரசர் இவங்க ராஜ்ஜியம் மேல போர் தொடுத்தாங்க, அதில இவங்க கணவர் மாண்டு போறாரு. இதன் காரணமா இவங்க ராஜ்ஜியம் சிறுத்துப் போயி, அதில இருந்த படைத்தலைவர்கள் எல்லாம் ராஜ்ஜியத்தை விடுத்துப் போக ஆரம்பிச்சாங்க. அப்ப திரிபுவன் மஹாதேவியானவங்க ராஜ்ஜியத்தைத் தன் கட்டுப்பாட்டுல எடுத்தாங்க, அவங்க இந்திய வரலாற்றிலேயே முதல் சுதந்திரமான அரசியா ஆனாங்க. அவங்க ராஜ்ஜியத்தை ஸ்திரப்படுத்தினதோட மட்டுமில்லாம, அதை சக்திவாய்ந்ததாகவும் ஆக்கினாங்க. எந்த அளவுக்கு சக்தியுடையவங்களா ஆனாங்கன்னா, அடுத்த 100 ஆண்டுகள் வரை அவங்க கலிங்கப் பகுதியில ஆட்சி செலுத்தினாங்க. அந்த வகையில இந்த மூணு சுவாரசியமான ஆளுமைகளையும் வரலாற்றுல நான் சந்திக்க விரும்பறேன் சார்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி நீங்க வரலாற்றில வாழலை, நீங்க முழுமையா அதில மூழ்கிட்டீங்கன்னு புரியுது. நானும் கூட ரொம்ப ஆர்வமா உங்களோட தளத்துக்குப் போனேன், இதில ரொம்ப சுவாரசியமான விஷயம் என்னென்னா, உங்க தளத்தில ஒரு டேப் இருக்கு, அங்க மக்கள் திருத்தங்களையும், ஆலோசனைகளையும் அளிக்க முடியும். இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களை ஏத்துக்கற வகையில இருக்கறது ரொம்பவே பெரிய விஷயம். மக்களோட ஆலோசனைகள் உங்களுக்கு வரத் தொடங்கியாச்சா? அது தொடர்பா நீங்க எப்படி பணியாற்றறீங்க?
கிருஷ்ணா சேஷாத்ரி – ஆமாம் சார். நிறைய ஆலோசனைகள் வருது சார். இரண்டு வகையான ஆலோசனைகள் சார். ஒண்ணு எப்படி வருதுன்னா, அதில எனக்கு திருத்தங்களை அறிவுறுத்தறாங்க. – இந்த மாநிலத்தில, இந்த காலத்தில, இந்த தேசத்தில இந்த அரசர் இருந்தாரு அல்லது இந்த காலத்தில இந்த யுத்தம் நடந்திச்சு, இப்படி சில ஆலோசனைகள் வரும். இரண்டாவது ஆலோசனை எப்படி இருக்கும்னா நீங்க இந்த வலைத்தளத்தில இந்த அம்சத்தையும் கூட போடலாமே, அல்லது இதை சேர்த்துக்கலாமேன்னு இப்படி ரெண்டு வகையாகவும் ஆலோசனைகள் வரும். இப்ப இந்த பகுதியில, இந்த காலத்தில இந்த ராஜா ஆட்சி புரிஞ்சாருன்னு யாராவது சொன்னா அதை ஏத்துக்கறோம். நாங்க அடிப்படையில சில ஆதாரங்களை அடிப்படையா வச்சுத் தான் இணைக்கறோம். எடுத்துக்காட்டா, நீங்க இந்தியாவை காமிக்கறீங்க ஆனா மாநில அளவுலயும் காமிக்கலாமேன்னு சொன்னப்ப, இது நல்லா இருந்திச்சு, நாங்களும் அந்த அம்சத்தை அமல் செஞ்சோம். அடுத்ததா இன்னொரு அம்சத்தை அறிமுகம் செஞ்சோம், அதில நாங்க ஒரு துருப்புச் சீட்டு மாதிரி உருவாக்கி, பசங்க வரைக்கும் இதைக் கொண்டு போகணுங்கறதுக்காக எல்லா சாம்ராஜ்ஜியங்கள் பத்தின தரவுகள்-புள்ளிவிவரங்களையும் கொடுத்தோம்; அப்ப ஒருத்தர் ஒரு ஆலோசனை குடுத்தார், அதை நீங்க ஒரு இடத்திலே ஒண்ணு திரட்டி வையுங்க, அப்பத் தான் எல்லாராலயும் தரவிறக்கம் செஞ்சு, எங்களால அதைப் பகிர முடியும்னாரு, இதை நாங்க அமல் செஞ்சிட்டு இருக்கோம் சார். நாங்க ஒண்ணும் அதிமேதாவிகள் இல்லை, நாங்க தப்பு செய்வோம்னு தெரிஞ்சு தான் எங்களை திருத்திக்க ஒரு டேப் (Tab) வச்சிருக்கோம். ஏன்னா இது நம்ம எல்லாரோட தளமா இருக்கணும், இனிவருங்காலத்தில அனைத்து பங்களிப்பு காரணமா, அடுத்த சில ஆண்டுகள்ல வரலாறு ஒரு சுவாரசியமான பாடமா மாறுகிற அளவுக்கு இந்த வலைத்தளத்தை உருவாக்குவோம்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி, நீங்க உள்ளபடியே மிகப்பெரிய வேலையை செஞ்சிருக்கீங்க. வரலாறு தவிர உங்களுக்கு இன்னும்பல பொழுதுபோக்குகள் இருக்கலாம், வேற எதில உங்களுக்கு ஈடுபாடு இருக்கு?
கிருஷ்ணா சேஷாத்ரி – அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை சார். நான் அத்தனை சுவாரசியமான ஆசாமி எல்லாம் இல்லை சார்.
பிரதமர் – (சிரிக்கிறார்)…
கிருஷ்ணா சேஷாத்ரி – எனக்கு தொழில்நுட்பம்னா பிரியம் உண்டு, வரலாறு மேல ஆர்வம் உண்டு, தொழில்நுட்பமும் வரலாறும் ஒண்ணு சேரும் போது, அதிலேயே நாள் முழுக்க மூழ்கிக் கிடப்பேன் சார்.
பிரதமர் – நல்லது கிருஷ்ணா ஜி, உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துகள். நீங்க ரொம்ப நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்கீங்க, மேலும் உங்க வழிமுறையும் எப்படி இருக்குன்னா, மக்கள் அதில இணைவாங்க அப்படீங்கற முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கு. என் தரப்பிலேர்ந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துகள்.
நண்பர்களே, கிருஷ்ணா அவர்களின் இந்த முயற்சி வரலாற்று மாணவர்களுக்கு மட்டுமல்ல, இது நம்மனைவருக்கும் கூட கடந்த காலத்தை சுவாரசியமான முறைகளில் அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். உங்களிடம் கூட இப்படிப்பட்ட முயற்சிகள் பற்றிய தகவல் இருந்தால், அதைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளவும்.
போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்!
எனதருமை நாட்டுமக்களே, வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக போதைப் பழக்கமில்லா இளைஞர்கள், இந்த இயக்கம் நாடு முழுவதும் வேகமான வளர்ந்து வருகிறது. இதன் நோக்கம் தெளிவானது – போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள், Drug Free India. பலர், குறிப்பாக நமது இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த இயக்கத்தில் பங்கெடுத்து வருகிறார்கள். இது பாரத நாட்டு இளைஞர்களின் உடல்நலம், அவர்களுடைய சந்தோஷம், வளமான எதிர்காலத்துக்காக நமது சமூகரீதியிலான உறுதிப்பாடு.
நண்பர்களே, போதை தனது பிடியில் ஒரு தனிநபரை மட்டும் பீடிப்பதில்லை, இதன் பாதிப்புகளால் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் அவதிக்கு உள்ளாக நேர்கிறது. போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோர், போதையால் பீடிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோர் ஆகியோரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். போதையில்லா பாரதம் படைக்க வலுவான கோஷம் எதையாவது உங்களால் உருவாக்க முடியுமா? நமது இளம் இசையமைப்பாளர்கள், போதையில்லா வாழ்க்கை தொடர்பான பாடல்களை உருவாக்கலாம். மாணவர்களும், நாடகக் குழுக்களும் மனதைத் தொடக்கூடிய வகையில் குறு நாடகங்களை எழுதி நடிக்கலாம், இதில் போதைப்பொருட்களால் ஏற்படக்கூடிய அபாயங்களோடு கூடவே அவற்றிலிருந்து வெளிவரக்கூடிய பாதையையும் வெளிப்படுத்தலாம். நம்முடைய நாட்டிலே வெகுசிறப்பான உள்ளடக்கத்தை உருவாக்குவோருக்குக் குறைவேதும் இல்லை. பல்வேறு மொழிகளில் இப்படிப்பட்ட உள்ளடக்கத்தை ஏற்படுத்தி, இதனால் சமூகத்துக்கு உதவும் வகையில் அவர்கள் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய இந்த முயற்சிகளை ஹேஷ்டேகுடன், சமூக ஊடகத்திலே கண்டிப்பாகப் பகிருங்கள். படைப்பாற்றல் முயற்சியானது பல வேளைகளில், முறையான இயக்கத்தை விட அதிக பலனளிப்பதாக இருக்கின்றது. பாரத நாட்டு இளைஞர்களை போதையிலிருந்து விலக்கவும், போதையிலிருந்து விடுவிக்கவும், இந்த பவித்திரமான செயலில் நாமனைவரும் நம்முடைய பங்களிப்பை அளிப்போம். நீங்கள் உங்களுடைய முயற்சியை # நஷா முக்த் யுவா என்பதோடு கூட, சமூக ஊடகத்திலும் பகிருங்கள்.
8 கோடிக்கும் மேல் மூவர்ணக் கொடி சுயபடங்கள்!
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து இடங்களிலும் தேசபக்தியின் பல வண்ணங்களை நாம் காண முடிந்தது. இந்தக் காலத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் தேசபக்தி உணர்வு மேலும் பலம்பெறுகிறது. தேசிய கைத்தறி நாள் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டு விழா தொடர்பாக தேசம் துண்டாடப்பட்டதன் நினைவு நாளாக இதைச் சிறப்பாக நினைவுகூர்கிறோம். சுதந்திரத் திருநாள் மற்றும் தேசிய விண்வெளி நாட்கள் என்று வந்தால், நாட்டுமக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறார்கள். வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி என்ற உணர்வுக்கு மேலும் வலுகூட்டப்படுகிறது. வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் ஆன வேளையில் இந்த ஆண்டு மேலும் சிறப்பானதாக ஆகிறது. இந்த முறை 8 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி சுயபடங்கள் தரவேற்றம் செய்யப்பட்டன. மேலும் மூவண்ணத்தின் இந்தத் திருவிழா பாரதத்தில் மட்டும் நடக்கவில்லை. இந்த ஆண்டு சூர்யபத் திரங்காவின்படி நமது மூவண்ணக்கொடி உலகெங்கும் ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கியது. ஃபிஜியின் சுவாவிலே சூரியனின் முதல் கிரணங்களோடு மூவண்ணக்கொடி பறக்கவிடப்பட்டது. இதன் பிறகு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ வரையிலான இந்தியத் தூதரகங்களிலும், படைத்துறைக்களங்களிலும் மூவண்ணக்கொடி பறந்தது. கற்பனை செய்து பாருங்கள், இந்தக் காட்சி எத்தனை அற்புதமானதாக இருந்திருக்கும்!! உலகம் முழுவதிலும் சூரியன் முன்னேற முன்னேற, பாரதத்தின் மூவண்ணக்கொடியும் அடுத்தடுத்து பறந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் சமூகத்தை ஓரிழையில் இணைக்கின்றன. இவற்றால் தேசத்தோடு கூடவே நமது பிடிமானம் மேலும் ஆழப்பட்டுப் போகிறது. இந்த முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் என்னுடைய பலப்பல பாராட்டுக்கள்.
பெண்களுக்கு நம்பிக்கை தரும் நிதித் திட்டம்!
என் கனிவான நாட்டுமக்களே, நமது நகரங்கள்-டவுன்களில் இருக்கும் சாலைகளில் எல்லாம் தினமும் காலை முதல் மாலைவரை இலட்சக்கணக்கான பெண்கள் தங்கள் தங்களுடைய பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். சிலர் காய்கறி விற்கிறார்கள், சிலர் பழம் விற்கிறார்கள், சிலர் தேநீர், சிலர் மலர்கள்-விளக்குகள்-பூஜைப் பொருட்கள் விற்பனை செய்கின்றார்கள். பல வேளைகளில், முதலீடு செய்ய சிறிய அளவிலான பணத்தட்டுப்பாடு அவர்களின் தொழிலை முன்னேற விடாமல் முடக்கி விடுகிறது. ஆனால் இப்போது இப்படிப்பட்ட இலட்சக்கணக்கான தாய்மார்கள் சகோதரிகளுக்கு பிரதம மந்திரி ஸ்வநிதித் திட்டத்தால் பலம் கிடைத்து வருகிறது. பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பின் இந்த முன்னெடுப்பின் மீது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடப்பதில்லை. பிரதம மந்திரி ஸ்வநிதித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 46 சதவீதம் பெண்கள் தாம். அதாவது நாடெங்கிலும் சுமார் 35 இலட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு தொழிலை முன்னேற்றி வருகின்றார்கள்.
நண்பர்களே, காஜியாபாதின் பபீதா ஷர்மா அவர்கள் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. பபீதா அவர்கள், வழிபாட்டுப் பொருட்கள் கொண்ட ஒரு சிறிய கடை நடத்தி வந்தார். பழங்கள், விளக்குகள், அகர்பத்தி, தேங்காய் போன்ற பொருட்களை விற்பனை செய்து, இவர் தனது குடும்பத்துக்கான வாழ்வாதாரத்தில் பங்களிப்பு அளித்து வந்தார். நன்றாக உழைத்தாலும், தொழிலை மேம்படுத்தத் தேவையான மூலதனம் தேவையாக இருந்தது. பிஎம் ஸ்வநிதியால் இவருக்குப் பொருளாதார உதவி கிடைத்தது. இவர் தனது கடையில் பொருட்களை அதிகரித்தார், தொழிலை விரிவாக்கினார். வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள், வருவாய் அதிகரித்தது, வீதியோரத்திலே சின்ன கடையாக இருந்த அவருடைய கடை, மெல்லமெல்ல பெரிய கடையாக மாறியது.
நண்பர்களே, பெங்களூரூவின் டீ.எஸ். நின்கம்மா அவர்களின் எடுத்துக்காட்டும் கூட மிகவும் கருத்தூக்கமளிக்கவல்லது. நின்கம்மா அவர்களும் அவருடைய கணவரும் இணைந்து இட்லி, தோசை, சாம்பார் விற்பனை செய்யும் சிறிய வேலை ஒன்றைத் தொடங்கினார்கள். வேலை என்னமோ நடந்தாலும், அதை மேலும் முன்னேற்றத் தேவையான முதலீடு தேவையாக இருந்தது. நின்கம்மா அவர்களுக்கும் பிஎம் ஸ்வநிதியின் துணை கிடைத்தது. அவர் தனது வண்டியை மேம்படுத்தினார். பொருட்களை மொத்தமாக வாங்கத் தொடங்கினார், மெனுவிலும் புதியபுதிய பொருட்களை சேர்த்தார். வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள், வருமானம் அதிகமானது, குடும்பத்தின் நிதிநிலைமை மேலும் சிறப்பானது. இன்று இவர் தனது மூன்று குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வியளிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நண்பர்களே, பெண் ஒருவரின் தொழில் பெருகும் போது, அதோடு கூடவே ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமும் முன்னேற்றம் காண்கிறது. குழந்தைகளின் கல்வி சிறப்பாகிறது, வீட்டின் தேவைகள் நிறைவடைகின்றன, பெண்களுக்குள்ளே தன்னம்பிக்கை மேலும் பலமடைகிறது. இது தானே பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் உயிர்ப்புடைய வடிவம்!! நான் தள்ளுவண்டிப் பணியோடு தொடர்புடைய அனைத்து சகோதரிகளுக்கும், அவர்களுடைய பிரகாசமான எதிர்காலத்துக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூய்மை இயக்கம்; வீடு தொடங்கி நாடு வரை!
என் மனம் நிறை நாட்டுமக்களே, தூய்மைக்கென ஒரு தனி அழகு உண்டு. எந்தவொரு இடத்தையும் தூய்மையாக வைத்திருப்பது என்பது அங்கே இருப்போரின் உறுதிப்பாடாக ஆகும் போது, அந்த மாற்றம் தூய்மையோடு நின்று போவதில்லை. இதனால் அந்த இடத்தின் மொத்த அடையாளமும் மாறிப் போகிறது. தேசத்தின் பல பாகங்களில் தூய்மைக்கான இப்படிப்பட்ட முயற்சிகள், நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகின்றன. உத்தர பிரதேசத்தின் ராம்புரில் ஒரு கிராமம், பட்வாயி. அங்கே ஆகாஷ், ரோஹன் என்ற பெயருடைய இரண்டு நண்பர்கள், தங்களுக்கு அருகே இருக்கும் இடங்களில் குப்பை நிரம்பி இருப்பதைக் கண்டு, அதைத் தூய்மையாக்குவதில் இறங்கினார்கள். மெல்லமெல்ல மற்ற இளைஞர்களும் இவர்களோடு இணைந்து கொள்ள, ஒரு குழுவே உருவாகியது. இதன் பெயர் கிளீன் அப் பட்வாயி. இந்த இளைஞர்கள் இதுவரை நான்கு கங்கைப் படித்துறைகளைத் துப்புரவாக்கியிருக்கிறார்கள். ஒரு டன் அளவை விட அதிகமாக நெகிழிக் குப்பைகளை அகற்றியிருக்கிறார்கள். இவர்கள் நிறைய குளங்களையும், பொதுவிடங்களையும் தூய்மைப்படுத்தி இருக்கிறார்கள்.
நண்பர்களே, இந்த முறை ஸ்ரீ அமர்நாத் ஜியின் புனித யாத்திரையிலும் கூட, தூய்மை மற்றும் மக்கள் பங்களிப்பு என்ற உள்ளெழுச்சி அளிக்கவல்ல காட்சிகளைக் காண முடிந்தது. கடினமான பாதைகளிலே, ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் இரவுபகல் பாராது பணியாற்றினார்கள். இந்த ஆண்டு யாத்திரையின் போது, 400 மெட்ரிக் டன்களுக்கும் மேற்பட்ட குப்பைக்கூளங்கள் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டன. இந்த முயற்சியில் குறிப்பாக இந்த விஷயம் எனக்குப் பிடித்திருந்தது. தூய்மையின் இந்த இயக்கத்திலே பக்தர்களும் கலந்து கொண்டார்கள். 16,000த்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள், தூய்மையைக் கடைப்பிடிப்பதாக உறுதி மேற்கொண்டார்கள். 10,000த்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு பொறுப்பான யாத்ரீகர் என்ற சான்றிதழும் அளிக்கப்பட்டது. இங்கே ஒரு மிகவும் வித்தியாசமான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. யாத்திரையில் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் சாணத்தைக் கொண்டு, சாணவாயு உற்பத்தி செய்யப்பட்டு, அந்தத் தூய்மையான எரிசக்தியால், தூய்மையான விளக்கொளி பிரகாசித்தது. அதாவது பாபா பர்ஃபானியின் இந்த பவித்திரமான யாத்திரையிலே, சேவை மற்றும் நம்பிக்கையின் ஒரு வடிவமாக தூய்மையும் ஆகியது.
நண்பர்களே, நமது கிராமமாகட்டும், நகரமாகட்டும், நமது நதிகளாகட்டும், நமது புனிதத் தலங்களாகட்டும். இவற்றின் அடையாளம் நமது நடத்தையாலும் ஏற்படுகிறது. மேலும் தூய்மை என்பது இந்த நடத்தையில் இடம் பெறும் போது, அந்த இடத்தின் அழகு மேலும் மெருகேறுகிறது.
விரிவடைந்த மலர் சாகுபடிச் சந்தை!
எனதருமை நாட்டுமக்களே, சில வேளைகளில் நமது சிறியதொரு ஆசையும் கூட வாழ்க்கையில் ஒரு பெரிய சாத்தியக்கூறுக்கான பாதையைத் திறந்து விடுகிறது. நாகாலாந்தின் ஃபேக் மாவட்டத்தின் வேசாலு புரோ அவர்களின் யாத்திரையும் கூட இப்படிப்பட்டது தான். வேசாலு அவர்கள் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயது தொடங்கியே இவர் தனது பெற்றோர் வயல்வேலைகளில் ஈடுபடுவதைக் கவனித்து வளர்ந்தார், இவருக்கே கூட மலர்களின் மீது கொள்ளை நாட்டம் உண்டு. 2021ஆம் ஆண்டிலே இவர் இந்த ஆர்வத்தோடு சிறிய அளவிலே மலர் சாகுபடி செய்வதைத் தொடக்கினார். மெல்லமெல்ல இவர் இதிலே சாத்தியக்கூறு இருப்பதை அடையாளம் கண்டுகொண்டார். திருமணங்கள், பிற பண்டிகைகள் ஆகியவற்றின் போது மலர்களின் தேவை எப்போதுமே அதிகம் இருப்பதைத் தெரிந்து கொண்டார். வேசாலு அவர்கள் தனது இந்த ஆர்வத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லத் தீர்மானித்தார். இந்தப் பயணத்தில் இவருக்கு உள்ளூர் வேளாண் அறிவியல் மையங்களிடமிருந்து அறிவியல் முறைப்படி மலர் சாகுபடி செய்ய பயிற்சி கிடைத்தது. பிறகு இவர் கால் ஏக்கர் நிலத்தில் க்லாடியோலஸ் மலரின் ஆயிரக்கணக்கான செடிகளை நடவு செய்தார். முதல் முயற்சியிலேயே 5000த்துக்கும் அதிகமான மலர்களை சாகுபடி செய்தார். நண்பர்களே, இந்த வெற்றி வேசாலு அவர்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக ஆனது. இவர் மலர் சாகுபடியை மேலும் முன்னெடுத்தார். எந்த மலர் உள்ளூர் சந்தைகளில் மட்டுமே இருந்து வந்ததோ, இன்று இது நாகாலாந்திலிருந்து வெளியேறி தில்லி-மும்பை போன்ற நகரங்களையும் சென்றடைகின்றது. வேசாலு புரோ அவர்களின் இந்தப் பயணம் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால், ஆர்வம் என்பது உழைப்பாகி, சரியான வழிகாட்டுதல் இதோடு இணையும் போது, புதிய சாத்தியக்கூறுகளுக்கான பாதை துலக்கப்படுகிறது என்பதைத் தான்.
வனப் பாதுகாப்பில் சூழல் சுற்றுலா!
என் உளம்நிறை நாட்டுமக்களே, நமக்கருகே இப்படிப்பட்ட பலர் இருக்கிறார்கள், இவர்கள் சிறிய முயற்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள். ஆனால் பார்த்துக் கொண்டே இருக்கையிலே அவர்களின் இந்த ஒரு முயற்சி பலரின் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய பாதையை அமைத்துக் கொடுக்கிறது. ஒடிஷாவின் தேபரீகட்டின் ஒரு கிராமம், தோட்ரோகுசும். சில ஆண்டுகள் முன்பு வரை இந்த கிராமத்தின் மைதிலி புஏ அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் காட்டுக்குச் செல்வார். சில போது விறகு கொண்டு வர, சில வேளை மஹுவா மற்றும் கேந்து இலை பறிக்க, சில சமயம் மூங்கில் குருத்துக்களையோ வேறு வனப் பொருட்களையோ கொண்டு வர. இவருடைய மற்றும் இங்கிருக்கும் பல குடும்பங்களின் பல தேவைகளை இந்தக் காடு நிறைவேற்றித் தந்தது என்றாலும், மைதிலி அவர்கள் தேபரீகட் சூழல் சுற்றுலாவோடு இணைந்தார். இங்கிருந்து தான் காட்டுடனான இவருடைய உறவு ஒரு புதிய திசைக்குத் திரும்பியது. நண்பர்களே, மைதிலி அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம் மற்ற பெண்களுக்கு உள்ளெழுச்சியை அளித்தது. இன்று 60க்கும் மேற்பட்ட பெண்கள் காடுகளைப் பாதுகாப்பதில் இணைந்திருக்கிறார்கள். அனைத்து வன உயிரினங்களின் பாதுகாப்பின் பொறுப்பையும் இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். சிலர் புல் மைதானத்தின் மேம்பாட்டுடன் இணைந்திருக்கிறார்கள், சிலர் சூழல் சுற்றுலா நடவடிக்கைகளில் பங்களிப்பு அளிக்கிறார்கள். நண்பர்களே, மைதிலி அவர்களும், தேபரீகட்டின் இந்த சகோதரிகளும் என்ன காட்டியிருக்கிறார்கள் என்றால், இயற்கையையும் பாதுகாக்கலாம், வாழ்க்கையும் வளமாகும் என்பதைத் தான். இந்த சகோதரிகள் அனைவரின் முயற்சிகளும் நம்மனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கின்றன.
இளைஞர்களின் கனவுத் திட்டம் ‘மிஷன் சக்திசேட்’
நண்பர்களே, இன்று நமது பெண்களின் கனவுகளுக்கு சிறகுகள் முளைத்து, தரையிலிருந்து வானம் வரை எட்டுகின்றன; இப்படிப்பட்ட கனவுகளைக் காணும் உலகின் ஆயிரக்கணக்கான பெண்களை பாரதம் ஒருங்கிணைத்து வருகிறது என்பது உங்களைப் பெருமைப்பட வைக்கலாம். இந்த முயற்சியின் பெயர் தான் மிஷன் ஷக்திசேட். இதன் வாயிலாக 108 நாடுகளின் 12,000 மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைக் கற்கவும், புதுமைகள் படைக்கும் துறையில் முன்னேறவும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று தேசிய விண்வெளி தினத்தன்று இந்த மிஷனுடைய ஒரு அழகான காட்சியை உத்தர பிரதேசத்தின் க்ரேடர் நொய்டாவில் காண முடிந்தது. கௌதம் புத்த பல்கலைக்கழகத்திலே மிஷன் ஷக்திசேட்டின் இரண்டாவது கட்டம் தொடங்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலே உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுமார் 100 மாணவர்கள் ஒன்று திரண்டார்கள். பாரதத்தின் தொலைவான பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் இதிலே கலந்து கொண்டார்கள். இந்த மொத்த முயற்சியின் நோக்கமும் மிகவும் சிறப்பானது. முழுமையான வகையிலே மாணவர்களின் பங்கெடுப்போடு தயாரான செயற்கைக்கோளை நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டு சேர்க்க தயாரிப்புகள் நடந்தன. நண்பர்களே, இவர்களிலே பல மாணவர்கள் வரும் காலத்திலே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைக்கும் துறையில் தங்களுடைய புதிய அடையாளத்தைப் பதிப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஆந்திராவில் அவோகேடா பழம்! அசத்தும் மனிதர்!
என் பாசமிகு நாட்டுமக்களே, இப்போதெல்லாம் அவோகேடோ பழம் அனைவர் கருத்திலும் இடம் பிடித்திருக்கிறது. முன்பெல்லாம் இது பற்றித் தெரிந்தவர்கள் அரிதாகவே இருந்திருப்பார்கள். இதன் மதிப்பும், தேவையும் குறைவாகவே இருந்தாலும், இன்று இதை உணவு மேஜையில் காண முடிகிறது. இன்று இது உடல்நலம் மற்றும் உயர் மதிப்புச் சந்தைகளின் விருப்பப்பொருளாக ஆகி விட்டது. நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு இது பெரும் உதவிகரமாக இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் கடப்பாவில் வரதராஜன் அவர்களின் எடுத்துக்காட்டு. இவர் பல ஆண்டுகளாக தனது வயலிலே தக்காளியும், வாழையும் சாகுபடி செய்து வந்தார். ஒரு நாள் இவர் தனது நண்பர்களின் வயலிலே அவகேடோ சாகுபடி செய்யப்படுவதை கவனித்தார். இதன் பிறகு இவர் யூ ட்யூபில் இதுபற்றிய தகவல்களை சேகரித்தார். இதுவரை இவர் சுமார் 4 டன் அவகேடோவை சாகுபடி செய்திருக்கிறார். இன்று இவர் நேரடியாக உள்ளூர் கடைகளுக்கு இதை அனுப்பித் தருகிறார். புதிய மகசூல், அறிவியல் ஆலோசனை மற்றும் நேரடி சந்தைப்படுத்தல் காரணமாக சிறிய பண்ணைகளின் வருவாயும் முழுமையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டின் கோடைக்கானலைச் சேர்ந்த விவசாயியான சந்திரசேகரன் அவர்கள், அரை ஹெக்டேர் நிலப்பரப்பில் அவோகேடோ சாகுபடி செய்யத் தொடங்கினார். இவருக்கு இதற்கான நல்ல விலை கிடைத்து வருகிறது, அதிக வருவாய் ஈட்டி வருகிறார். கர்நாடகாவின் சிக்மகளூரிலே சில விவசாய சகோதர சகோதரிகள், காப்பிப் பயிர்களுக்கு இடையே அவோகேடோவை நடவு செய்திருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு காப்பி – கருமிளகோடு சேர்த்து கூடுதல் வருவாயும் கிடைக்கிறது. நண்பர்களே, நாம் நகரங்களிலே ரெஸ்டாரண்டுகளில் பல வேளைகளில் அவகேடோ டோஸ்ட் என்பது பற்றி கேள்விப்படுகிறோம் ஆனால், இந்த அவகேடோ வாயிலாக நமது நூதனம் படைக்கும் விவசாயிகள், வருமானத்திற்கான புதிய செய்முறையையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதாவது நமது நாட்டின் அவகேடோவால் உங்களுடைய டோஸ்டின் சுவையை அதிகப்படுத்துகிறார்கள், விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கிறது.
மகாநாயகன் உத்தம் குமார்
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இன்னும் சில நாட்களில் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மகாநாயகன் உத்தம் குமார் அவர்களின் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாட இருக்கிறோம். நண்பர்களே, உத்தம் குமார் அவர்கள் ஒரு இயல்பான நடிகர், தனது நடிப்புத் திறமையால் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். திரைப்பட நேசர்களின் கருத்து என்னவென்றால், சத்யஜித் ரே அவர்களின் படமான நாயகன் – the heroவின் மொத்தக் கதையுமே மகாநாயகன் உத்தம் குமார் அவ்ர்களைக் கருத்தில் கொண்டு தான் எழுதப்பட்டதாம். உத்தம் குமார் அவர்களிடத்தில் கண்ணியத்தோடு சேர்த்து அற்புதமான உணர்வுபூர்வமான ஆழம் இருந்ததாக சத்யஜித் ரே அவர்கள் கூறியிருக்கிறார். பாத்திரத்திற்கு உயிரூட்ட அவர் கடுமையாக உழைப்பார். உத்தம் குமார் அவர்கள் தன்னுடைய இயல்பான போக்கோடு கூடவே வள்ளல் குணத்துக்கும் சொந்தக்காரராக இருந்தார். எப்போதும் தோல்வியை ஏற்காமல் தொடர்ந்து போராடி வெல்லும் பாடம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அவருடைய தொடக்ககாலப் படங்கள் பல சரிவர ஓடவில்லை என்றாலும் அவர் தனது வேலையில் கவனமாக இருந்தார். இதன் விளைவாகவே அவரால் அத்தனை உயரத்தை எட்ட முடிந்தது. நண்பர்களே, நான் கோல்காத்தாவில் ரோட் ஷோ செய்த போது, உத்தம் குமார் அவர்களின் வீட்டுக்கு முன்பாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அங்கே ஒரு நபர் அவருடைய உருவப்படம் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். நான் மீண்டுமொருமுறை மகாநாயகன் உத்தம் குமார் அவர்களுக்கு என் நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். அவர் எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் கோலோச்சிக் கொண்டிருப்பார்.
மகாநாயக் உத்தம் குமார் சீரோதின் மானுஷேர் ஹ்ருதயே ராஜ் கோர்பேன்.
வரிசை கட்டும் விழாக்கள்! வளப்படுத்தும் வாழ்க்கை!
எனதருமை நாட்டுமக்களே, நமது திருநாட்கள், பண்டிகைகள், நமது பாரம்பரியங்கள் இவற்றோடு கூடவே நாம் ஒருவரோடு ஒருவர் இணையும் சந்தர்ப்பங்களையும் அளிக்கின்றன. வரவிருக்கின்ற நாட்களில் நாம் மேலும் நம்முடைய பல மகத்துவம்வாய்ந்த புனித நாட்களைக் கொண்டாட இருக்கிறோம். செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று ஜன்மாஷ்டமி புனித நன்னாள். செப்டம்பர் மாதத்திலேயே நாம் விஸ்வகர்மா பூஜையைக் கொண்டாட இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே நாம் நமக்கருகே இருக்கும் கைவினைஞர்கள், சிற்பிகள் மற்றும் விஸ்வகர்மா நண்பர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். சில மாதங்கள் கழித்து தீபாவளியும் வரவிருக்கிறது, இதற்கான தயாரிப்புகளும் மெல்லமெல்ல தொடங்கிவிட்டன. பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், மீண்டுமொரு முறை உங்களிடம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் தொடர்பான வேண்டுகோளை விடுக்கிறேன். இதன் பொருள் என்னவென்றால் மண் அகல் விளக்கு வாங்குவது மட்டும் போதாது, இதன் பின்னால் இருக்கும் கண்ணோட்டம் மிகவும் பெரியது. நாம் நமது வீடுகளுக்கான பொருட்களை வாங்கும் போது, அவை பாரதத்தில் தயாரிக்கப்பட்டவை தானா என்பதை ஒருமுறை பாருங்கள். பாரதம் தற்சார்புடையதாக ஆகும் பாதை, பாரதத்தில் உருவாகும் பொருட்களின் மீது பெருமையடையும் போது தான் துலங்கும். இந்தச் செய்தியை அதிக அளவிலான நபர்கள் வரை கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும். நமது படைப்பாள நண்பர்களே, தாக்கம் ஏற்படுத்தும் influencerகளே, பிரபலங்களே, உங்களுடைய பங்களிப்பும் மகத்தானது. உங்களனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள், நீங்களும் உள்ளூர் பொருட்களையே வாங்குங்கள், மற்றவர்களும் உள்ளூர் பொருட்களை வாங்க உத்வேகப்படுத்துங்கள்.
நண்பர்களே, உங்கள் அருகே, தங்களுடைய சின்னச்சின்ன முயற்சிகளால் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவரும் பலர் இருக்கலாம். நீங்கள் அவர்களைப் பற்றி மனதின் குரலில் கண்டிப்பாக எழுதுங்கள். உங்களுடைய அனுபவங்கள், தேசத்தின் ஏதோவொரு மூலையிலே, யாரோ ஒருவருக்கு, புதிய உத்வேகமாக ஆகலாம், இல்லையா? உங்களுடைய ஆலோசனைகள்-அனுபவங்களுக்காக நான் காத்திருக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (30-8-2026) ராசி பலன்கள்
மேஷம்
வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் ஆலோசித்து முடிவெடுக்கவும். பயனற்ற கருத்துகளை தவிர்க்கவும். சிந்தனைகளின் போக்கில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும். பரணி : பிரச்சனைகள் நீங்கும். கிருத்திகை : சிந்தனைகளில் கவனம்.
ரிஷபம்
செய்கின்ற முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான சில செயல்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : சாதகமான நாள். ரோகிணி : ஆதரவான நாள். மிருகசீரிஷம் : முடிவுகள் பிறக்கும்.
மிதுனம்
பழைய அனுபவம் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பொதுமக்கள் பணிகளில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும். புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
கடகம்
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நேர்மைக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான சூழல்கள் உருவாகும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
புனர்பூசம் : அதிர்ஷ்டகரமான நாள். பூசம் : அங்கீகாரங்கள் கிடைக்கும். ஆயில்யம் : குழப்பங்கள் குறையும்.
சிம்மம்
சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் உண்டாகும். பணி நிமித்தமான பொறுப்புகளும் அலைச்சலும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆதரவாக இருந்தவர்கள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வாகன பயணங்களால் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
உத்திரம் : புரிதல்கள் உண்டாகும். அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும். சித்திரை : அனுபவம் ஏற்படும்.
துலாம்
சுப காரியம் நிமித்தமான விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் சிறு சிறு மாறுதல்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : விரயங்கள் ஏற்படும். சுவாதி : அனுபவங்கள் ஏற்படும். விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத சில விரயங்கள் நேரிடும். எதிலும் அவசரம் இன்றி சிக்கனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அனுபவங்கள் கிடைக்கும். அனுஷம் : பொறுப்புகள் குறையும். கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
தனுசு
எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார நிமித்தமான பயணம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும். பூராடம் : அமைதியான நாள். உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
மகரம்
பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் மனம் அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். திருவோணம் : திருப்தியான நாள். அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.
கும்பம்
தனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும். சதயம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். பிடிவாதக் குணத்தை குறைத்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : குழப்பம் நீங்கும். உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும். ரேவதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
தினம் ஒரு திருக்குறள்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை: ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மு.வரதராசனார் உரை: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில் பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
அப்பட்டமான ஒருதலைப்பட்சமாக செயல்படும் தவெக அரசு. வாக்கு வங்கியை மனதில் கொண்டு சிறுபான்மையினர் சலுகைகளை அறிவித்திருப்பதைக் கண்டிக்கிறோம் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
இன்று சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய சிறுபான்மை துறை நல அமைச்சர் ஷாஜகான், முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு பலவிதமான சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதில் இஸ்லாமிய மாணவியர்கள் இளங்கலை முதல் உயிர்கல்வியை தொடரும் வரையில் அரசு நிர்ணயிக்கும் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் அதற்காக இந்த ஆண்டு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது எனக் கூறினார்.
அனைத்து மதத்தினரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள். சிறுபான்மை சமுதாயம் என்ற போர்வையில் பொதுவான வரி பணத்தை முஸ்லிம் மாணவிகள் மட்டும் உயர்கல்வி படிப்பதற்கு ஒதுக்குவது என்ன நியாயம்?
பெரும்பான்மை இந்துக்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள கல்வி கற்க இயலாத பல ஏழை மாணவ மாணவிகள் இருந்து வரும் சூழ்நிலையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.
அதேபோல வக்ப் சொத்துகள் மற்றும் கிறித்துவ சர்ச் சொத்துக்களை பாதுகாக்கவும் கட்டிடங்கள் அமைக்கவும் 100 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் தர ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு வழிபாட்டு தலங்களை அமைத்துக் கொள்ள வெளிநாட்டு நிதி கோடிக்கணக்கில் வருகிறது. அதற்கும் முறையான கணக்கு வழக்குகளை சமர்ப்பிப்பது இல்லை. வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்காகவும் சமூக சேவை செய்வதற்காகவும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு கணக்கு வழக்குகளை முழுமையாக வைத்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் FCRA சட்டத்தையும் தமிழகத்தில் முஸ்லிம் கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்த்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேவாலயங்கள் மசூதி அமைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகின்ற நிதியைப் பெற்று இங்கே மதமாற்றத்திற்காக அதை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக புதிதாக சர்ச்களும், பெந்தேகோஸ்தே சபைகளும், மசூதிகளும் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் இவர்களுக்கு தேவையான பணம் ஏற்கனவே இருக்கின்ற பொழுது அரசாங்கமும் சிறுபான்மை வழிபாட்டு இடங்களுக்காக நிதி ஒதுக்குவது அவர்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து தான் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
சர்ச் மற்றும் மசூதிகளின் சொத்துக்கள் முஸ்லிம், கிறிஸ்தவர்களால் பராமரிக்கப்படுகிறது. அதன் வருமானம் அவர்களிடம் உள்ளது. மேலும் அதன் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது.
பெரும்பான்மை இந்து கோவில்களின் கோடிக்கணக்கான வருமானம் அரசாங்கத்தின் அறநிலையத்துறையிடம் இருக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல இந்து கோவில்கள் புனரமைக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கிறது. ஒருகால பூஜைக்கூட வழியில்லாமல் பல்லாயிரம் கோவில்கள் பூட்டி கிடக்கின்றன.
வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் அடிப்படை வசதிகள் இன்றி, பராமரிப்பின்றி இருந்து வருகிறது. இன்னும் பல ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பழனி திருச்செந்தூர் ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் 100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் வருகிறது.
இந்து கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு எடுத்துக் கொண்டு அரசின் திட்டங்களுக்கும் நிர்வாகத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இடங்களை அரசு அலுவலகத்திற்காக பேருந்து நிலையங்களா, நீதிமன்றங்களா, கலெக்டர் அலுவலகங்களாக ஒரு ரூபாய் வாடகை தராமல் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகளின் சொத்துக்களுக்கு நிகராக சர்ச் மசூதிகளுக்கு இடங்கள் இருக்கின்றன. அதன் வருவாய் முழுக்க அவர்கள் மதத்தை பாதுகாக்க பரப்புவதற்கு மட்டுமே பயன்படுகின்றது.
இந்நிலையில் சிறுபான்மை வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. முஸ்லிம் கிறிஸ்தவர்கள் மட்டுமே இந்த நாட்டின் குடிமக்கள் என்பது போன்றும் அவர்கள் மட்டுமே வாக்களித்து தாங்கள் ஆட்சி அமைத்ததாகவும் தமிழக வெற்றிக் கழக அரசு நினைக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. ஏற்கெனவே பல அரசாங்க நிலங்கள் வக்பு இடங்கள் என ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. பலநூறு கோடிக்கணக்கான ரூபாய் வக்பு வாரியத்திடம் உள்ளது. அந்த வக்பு வாரியத்திற்கு 40 கோடி ரூபாயை அரசு நிதி ஒதுக்கி தான் கட்டடம் கட்டும் நிலையில் அது இல்லை.
முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் சலுகைகளை தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் வழங்குகிறது. இந்த சலுகைகளையும் தாண்டி சர்ச், மசூதிகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்குவது ஒருதலைப்பட்சமான செயல்பாடு என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.
இந்து கோவில்களின் மீது எந்த விதமான அக்கறையும் இல்லாமல் வருமானத்தை மட்டுமே குறி வைத்து செயல்படும் த.வெ.க அரசு தேவாலயங்களுக்கு இதுவரை இல்லாத அளவு நிதி ஒதுக்கி இருப்பது இது கிறிஸ்துவ ஆட்சி தான் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் உள்ளதாக மக்கள் எண்ணுகிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக மதத்தின் பெயரால் சலுகை வழங்குவதை தடை செய்கிறது. இத்தகைய சலுகைகள் மற்றும் நிதி வழங்குவது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். இத்தகைய வாக்கு வங்கி அரசியல் ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயல்.
அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.
ஆனால் இந்த அரசின் செயல்பாடு ஒவ்வொன்றிலும் இது கிறித்துவ முஸ்லிம் சார்பான அரசு என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இத்தகைய செயல்பாடு தமிழக மக்களை வெறுப்படைய செய்கிறது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக்கிறோம்.
நூல் அறிமுகம் தலைப்பு : The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity ஆசிரியர் : கிருஷ்ணன்டு சேகர் தாஸ்பட் நாயக் வாங்க: 93454 31930 (அமேசானிலும் கிடைக்கிறது)
உலகிலுள்ள உயிரினங்கள் அவற்றின் உள்ளியல்புகளின் வளர்ச்சி காரணமாக இன்னொன்றாக ஆவதுதான் பரிணாமம் . சார்லஸ் டார்வினின் பரிணாம கொள்கை உயிர் பரிணாம வாதம் என்று சொல்லப்படுகிறது. அதாவது உயிர்கள் தங்கள் (சூழ்நிலைக்கு ஏற்ப) தகமைவால் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணாமம் கொள்வதை டார்வின் விளக்குகிறார். இந்திய மரபில் ஒரு ஆன்மா தன் செயல்கள் மூலம் இன்னும் மேலானதாக பரிணாமம் கொண்டு கடைசியில் முழுமை அடைவதை பற்றி பேசப்பட்டுள்ளது . உலகில் இன்றுள்ள உயிரினங்களில் உயர்வானவன் மனிதன். ஆனால் பரிணாம வளர்ச்சியில் அவன் இறுதியானவன் அல்ல. அவனைவிட மேம்பட்ட உயர்வான அதிமனிதன் அல்லது சூப்பர் மேன் வருவான் என்கிறார் மகரிஷி அரவிந்தர்.
சுதந்திர போராளியான அரவிந்தர் அலிப்பூர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அங்கு அவர் யோக தவத்தை மேற்கொண்டார். அதனால் அவருக்கு இறை தரிசனமும் வழிகாட்டுதல்களும் கிடைத்தன. பின்னர் அவர் பாண்டிச்சேரியை தன் தவச்சாலையாக கொண்டு யோகத்தில் ஆழ்ந்தார்.
இந்தியா விடுதலை பெற வேண்டும். அதனால் ஆசிய நாடுகளுக்கு விடியல் கிடைக்கும். உலகிற்கு ஆன்மீக வெளிச்சத்தை தருவதே இந்தியாவின் பணி. அதற்காக அது விடுதலை அடைய வேண்டும், என்றார் ஸ்ரீ அரவிந்தர். தேச விடுதலையின் லட்சியத்தின் நீட்சியாக அவர் மானுட பரிணாமத்தை முன் வைத்தார். அந்த கருத்தின் ஆய்வகமாக ஆரம்பிக்கப்பட்டது பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம். இன்று ஆரோவில் உலக நகரம் என்ற பெயரில் பயிற்சிக்களமாக விரிவடைந்து நிற்கிறது.
உயர்ந்த தளத்தில் உள்ள இறை சக்தியை மனித மனத்திற்கு இறக்குவதும் அதன் மூலம் இறை சக்தியின் பரிணாம பணியை துரிதப்படுத்துவது அவரது யோக கருத்தியல் . அதற்கான சூழலை உருவாக்குவது ஆசிரமம். ‘இந்த ஆசிரமம் மற்ற ஆசிரமங்களை போல இல்லாமல் வேறுபட்டதொரு நோக்கத்திற்காக துவங்கப்பட்டுள்ளது. உலகியலை துறப்பதற்காக இல்லாமல் வேறொரு பரிணாம வளர்ச்சிக்காக, வாழ்க்கைக்காக, முயற்சி செய்பவர்களின் பயிற்சி களம் இது’, என்று ரிஷி அரவிந்தர் கூறியுள்ளார்.
‘ உயர்ந்த நிலையில் உள்ள விழிப்புணர்வை கீழ் இறக்கி இந்த பூமிக்கு கொண்டு வர ஆன்மீக வாழ்க்கை வாழ்வதற்கான மையம் இது. அந்த சக்தி தனிநபர் “மோக்ஷத்”திற்காக இல்லாமல் இந்த பூவுலக வாழ்க்கையே தெய்வீக வாழ்க்கையாக்க கூடியது”, என்று ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படும் ரிஷிகா மிர்ரா அல்பாசா ஆசிரமம் பற்றி சொல்லியுள்ளார். ஒட்டுமொத்த மனித இனத்தையும் உடனடியாக மாற்ற முடியாது. அதற்கு தயாரிப்பு தேவை. அதற்கான ஆய்வகம் தான் ஆசிரமம், என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
முதலில், தெய்வீக சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். அடுத்ததாக, அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான முனைப்பும் வேண்டும். இதற்கு எதிரான செயல்களையும் சிந்தனைகளையும் விலக்கும் உறுதி வேண்டும். மூன்றாவதாக, ஆனால் மிக முக்கியமாக பரிபூரண சரணாகதி செய்ய வேண்டும், என்று ரிஷிகா வழிகாட்டி யுள்ளார்.
மகரிஷி அரவிந்தர் இறை சக்தியை தன் உடல் மூலமாக இந்த உலகிற்கு இறக்கிய நாள் 1926 நவம்பர் 24. அன்றுதான் அரவிந்தர் ஆசிரமம் உதயமானது. அதன் நூற்றாண்டு காலம் இது. அதை ஒட்டி மகரிஷி அரவிந்தர் , ஸ்ரீ அன்னையின் வாழ்க்கையில் தொடங்கி அவர்களது கருத்தியல், அதற்காக துவங்கப்பட்ட ஆசிரமம், ஆரம்பத்தில் அதனுடன் இணைந்தவர்கள், பல்வேறு கட்டங்களாக அதன் வளர்ச்சி, இன்றைய நிலை, ஆசிரமம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்கால திட்டங்கள் என 14 அத்தியாயங்களில் முழுமையான வரலாற்றை எழுதி உள்ளார் கிருஷ்ணன்டு தாஸ்பட்நாயக். ஒடிசாவை சேர்ந்த இவர் சிறு வயது முதல் ஆசிரமத்துடன் தொடர்புடையவர். இப்போது ஆசிரமவாசி.
திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
தென்காசி மற்றும் செங்கோட்டை பிரிவில் உள்ள எண் 503-ஐக் கொண்ட இன்டர்லாக் செய்யப்பட்ட பொறியியல் பிரிவு ரயில்வே லெவல் கிராசிங்கிற்கு (Interlocked Engineering Level Crossing) பதிலாக சாலை மேம்பாலம் (ROB) அமைப்பதற்கான ‘கிரிடர்’ (girder) பொருத்தும் பணிக்காக, 29.08.2026 முதல் 31.08.2026 வரை (3 நாட்கள்) ரயில் பாதையில் பராமரிப்புப் பணி (Line/Power Block) மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பணியை மேற்கொள்ள வசதியாக ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
29.08.2026, 30.08.2026 மற்றும் 31.08.2026 ஆகிய தேதிகளில் *செங்கோட்டையிலிருந்து மதியம் 2:20 மணிக்கு கிளம்பும்.
56776 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் , செங்கோட்டை – தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் தென்காசியில் இருந்து கிளம்பும்.
29.08.2026, 30.08.2026 மற்றும் 31.08.2026 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும்* 56773 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்
செங்கோட்டை யில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோயில்களில் பூணூல் மாற்றி சிறப்பு வழிபாடு!
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, செங்கோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்று பூணூல் மாற்றிக் கொண்டனா்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் விஸ்வகா்மா சமுதாயம் சாா்பில் உலக நன்மைக்காக குண்டாற்று நதிக் கரையில் அந்தச் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீஅக்கசாலை விநாயகா் கோயிலில் விநாயகா், முருகன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், முருகன் சந்நிதி வளாகத்தில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி வேதமந்திர பாராயணத்துடன் நடந்தது.
இதில், விஸ்வகர்மா சமுதாயத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனா்.
இமயமலையில் சீனாவின் கட்டுமானங்களே இன்றைய நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இமயமலைப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால் ஏற்பட்ட பனிச்சரிவே காரணம் என ‘நேபாள் கரஸ்பாண்டன்ஸ்’ குற்றம் சாட்டியுள்ளது. இதன் முழுமையான பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்…
* சூழலியல் பேரழிவுக்குக் காரணமான சீனா: பனிப்பாறைகள் நிறைந்த மிக உயரமான இமயமலைப் பகுதிகளில் சீனா அமைத்து வரும் ‘ஜியாவோகாங்’ குடியிருப்புகளால் பெரும் சூழலியல் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைகளின் நுண்ணிய தன்மையைச் சிதைக்கும் இந்தக் கட்டுமானங்களால்தான், சீனா-நேபாள எல்லையில் ஆண்டுதோறும் பனிச்சரிவுகள் ஏற்பட்டு, அது நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்காக மாறுகிறது.
* இயற்கை நதியை மறித்துக் கட்டப்பட்ட நகரம் : இன்றைய பயங்கர வெள்ளப்பெருக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் உள்ள கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவால் உருவாகியுள்ளது. மலைகளைக் குடைந்து இந்த நகரம் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, திரிசூலி நதியின் இயற்கையான நீரோட்டப் பாதையை மறித்து அதன் மீதே இந்த நகர்ப்புற கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* திட்டமிட்ட அபாயமா? : ரசுவா எல்லையில் சீனா அமைத்துள்ள கைரோங் போர்ட், வேண்டுமென்றே இரண்டு நதிகள் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேபாள எல்லையை நோக்கிப் பாயும் நதிநீரின் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட சூழலியல் பேரழிவு மட்டுமல்ல, மிகவும் கொடூரமான செயலாகும்.
* பலிகிடாவாகும் நேபாளம்: பனிச்சிகரங்களில் உள்ள மிக நுண்ணிய மற்றும் பாதுகாப்பட வேண்டிய சூழலியல் அமைப்பை சீரழிப்பதன் விளைவாக, நேபாளம் ஒவ்வொரு ஆண்டும் பெரும் வெள்ளத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் நேபாள மக்களுக்குத் தொடர்ச்சியாகப் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது.
நேபாளப் பிரதமருக்கு கோரிக்கை: இமயமலைப் பகுதி முழுவதும் சூழலியலை அழித்து, ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி வரும் சீனாவின் இந்த ஆபத்தான நடவடிக்கை குறித்து, நேபாளப் பிரதமர் உடனடியாக சீனாவிடம் கடுமையான முறையில் கேள்வி எழுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.