Home Blog Page 2

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

arunthamizh 50 book release - 2026

இலக்கியச்சாரல் அமைப்பின் நிறுவனர் கவிமாமணி இளையவன், சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.

இந்த அமைப்பின் பொருளாளர் பாமா ரவி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) என். திருமலை, விஜயலெக்ஷ்மி திருமலை ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

ஜெயஸ்ரீ எம். சாரி எழுதியுள்ள இரண்டாவது நூலான அருந்தமிழ் 50 என்ற கவிதை நூல், 50 தலைப்புகளைக் கொண்டது. இந்நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் இளையவன்.

தன் ஏற்புரையில் நூலாசிரியர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய இளையவன், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ பானுமதி ரமேஷ், வாழ்த்துரை வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் சீதாலெக்ஷ்மி, இலக்கியச் சாரல் இதழின் ஆசிரியர் ரெ. முரளி, நூல் வெளிவர உதவியவர்கள் என அனைவருக்கும் தன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

ilakkiyacharal book release function - 2026
  • ஜெயஸ்ரீ சாரி

கவிமாமணி இளையவன், அரிமா எஸ். கிருத்திவாசன் பற்றி எழுதிய ‘வரலாறு படைத்த வள்ளல்’ நூல் வெளியீட்டு விழா, இலக்கியச் சாரல் காலாண்டு இதழ் வெளியீட்டு விழா ஆகியவை, ‘நிறை இலக்கிய வட்ட’த்தின் தலைவர் ஸ்ரீநிவாஸனின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ‘இலக்கியச் சாரல்’ அமைப்பின் காவியக் கன்றுகளின் உற்சாகமான பங்களிப்பு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் சீதாலெக்ஷ்மி வரவேற்புரை ஆற்றினார். சிறுமி இமிழிசை காத்யாயினி இறை வணக்கம் பாடினார். சிறுவர்கள் லவன் , குசன் இருவரும் தமிழ் மொழியின் பெருமையை பேச்சுக் கலை மூலம் உணர்த்திய விதம் நிகழ்ச்சிக்கு மணி மகுடமாய் அமைந்தது. சிறுமி க. திவாஷிணி, அப்துல்கலாம் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

சிறுவன் க. கிரித்விக் திருக்குறள் சொல்ல, சாய் அபிராமி ஆத்திசூடி, பாரதியார் பாடல்களைச் சொன்னார். சிறுவன் ஷாஷ்வத் முகுந்தன் ஜிம்னாஸ்டிக் செய்து காட்டினார். சிறுவர்கள் ஷாஷ்வத், யுவனேஷ், சிறுமி பைரவி ஆகியோர் தங்களது அறிவியல் ப்ராஜெக்டுகளை செய்து காட்டினர்.

சிறுவன் அத்வைத் மழைநீர் சேகரிப்பு குறித்த கவிதையைச் சொல்லியும் திருப்புகழ் பாடியும் அசத்தினார். சிறுமி அதிதி, கந்தர் அனுபூதி பாடல்களைப் பாடினார். மேலும், புத்தகம் படிக்கும் பழக்கம் வளர வேண்டும் என்று சொல்லி, தனக்கு ஏற்பட்ட கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தால், தான் விரும்பிப் படித்த எழுத்தாளர் மாயூரனின் கதையை சுவைபட எடுத்துரைத்தார். இப்படி இலக்கியச் சாரலின் காவியக் கன்றுகள் அருமையாய் தங்களது திறமைகளை வெளிபடுத்தினார்கள்.

கம்ப ராமாயணத்தில் விபீஷணன் சரணாகதி பற்றிய உரையை கோகுல் ராம் நிகழ்த்த, அது நிகழ்ச்சிக்கு ஒரு மணி மகுடமாகத் திகழ்ந்தது.

பின்னர் இளையவன் எழுதிய ‘வரலாறு படைத்த வள்ளல்’ நூலை ஈசநேசன் மகஸ்ரீ வெளியிட, திவாகர் கிருத்திவாசன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் இளையவன் ஏற்புரை வழங்கினார்.

தொடர்ந்து, இலக்கியச்சாரல் காலாண்டு இதழை ஸ்ரீநிவாஸன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து இந்நிகழ்ச்சிக்காகவே வந்திருந்த ஶ்ரீ அறம் அறக்கட்டளை நிறுவனர் சாய் ஈஸ்வரி, எழுத்தாளர் இன்பா ஆகியோர் உரையாற்றினர்.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்கவும், அவர்களின் செயல்களுக்கு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இலக்கியச் சாரல் அமைப்பின் மூத்த உறுப்பினர் குச்சனூர் டி. கோவிந்தராஜனுக்கு பாராட்டு மடல் அளித்து இளையவன் கௌரவித்தார்.

இலக்கியச் சாரல் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுந்தர மகாலிங்கம், முன்னாள் தலைவர் நாகராஜன், விஜயலெக்ஷ்மி நாராயணன், பாமா ரவி, பெற்றோர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

வாழிய செந்தமிழ் பாடலுடன் விழா நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் நிறை இலக்கிய வட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு உணவு அளித்து மரியாதை செய்தனர்.

ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதிமூன்றாவது ஆட்டம் ராஜஸ்தான் vs மும்பை – கௌஹாத்தி – ஏப்ரல் 7

          முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (32 பந்துகளில் 77 ரன், 10 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (14 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இரு அணிகளுக்கும் 11 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது. அனுபவமிக்க பும்ரா ஓவர்களில் புதிய வீரர் சூர்யவன்ஷி எப்படி ஆடுவார் என்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த 15 வயது நிரம்பாத பையன் பும்ராவின் முதல் பந்தை சிக்சர் அடித்தான். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் 4, 6, 4, 0, 4, 4 என 22 ரன்கள் அடித்தார். அடுத்த பும்ரா ஓவரில் சூர்யவன்ஷி இரண்டு சிக்சர் அடித்தார். மூன்றாவது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்சர்களும் சூர்வன்ஷி ஒரு சிக்சரும் அடித்தனர். ஐந்தாவது ஓவரில் சூர்யவன்ஷி ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் துருவ் ஜுரல் (2 ரன்) ஆட்டமிழந்தார். ஒன்பதாவது ஓவரில் ரியன் பராக் (20 ரன்) ஆட்டமிழந்தார். 11ஆவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 77 ரன், மற்றும் ஹெட்மயர் 6 ரன் அடித்திருந்தனர்.

          ராஜஸ்தானின் இளைய வீரர்கள் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அனுபவமிக்க மும்பை எப்படி விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பொடு மும்பை இன்னிங்க்ஸ் தொடங்கியது. ரியன் ரிக்கிள்டன் (8 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ரோஹித் ஷர்மா (5 ரன்) அவுட் ஆனார். ஹார்திக பாண்ட்யா (9 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் திலக் வர்மாவும் (14 ரன்) அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரூதர்ஃபோர்ட் (8 பந்துகளில் 25 ரன்) 8ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைப்போலவே அதிரடியாக ஆடிய நமன் தீர் (25 ரன்) 9ஆவது ஓவரில் அவுட் ஆனார். 11 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 123 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக யசஸ்வீ ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார்.

பதிநான்காவது ஆட்டம் குஜராத் vs டெல்லி – டெல்லி – ஏப்ரல் 8

          முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் (12 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் ஷுப்மன் கில் (45 பந்துகளில் 70 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), வாஷிங்க்டன் சுந்தர் (32 பந்துகளில் 55 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் சிறப்பாக ஆடியதால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய  டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா (24 பந்துகளில் 41 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கே. எல். ராகுல் (52 பந்துகளில் 92 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதற்குப் பின்னர் வந்தவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் மட்டும் ஆட்டமிழக்காமல் 41 ரன் (20 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்சர்) அடித்தார். ஆயினும் 19.5ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க அவர் தவறினார். கடைசி பந்தில் சிக்சர் அடிக்கலாம் என எண்ணியிருப்பார் போலும். கடைசிப் பந்தில் ஒரு ரன் ஓட முயல மறுமுனை மட்டையாளர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனார். அதனால் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.  

பதினைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs லக்னோ – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 9

          எப்போதும் அதிரடியாக ஆடும் கொல்கொத்தா நைட் ரைடர் அணியின் ஆட்டக்காரர்கள் இன்று லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆட முடியவில்லை. இருப்பினும் அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே (24 பந்துகளில் 41 ரன்), ரகுவன்ஷி (33 பந்துகளில் 45 ரன்), காமரூன் கிரீன் (24 பந்துகளில் 32 ரன்), ரோமன் போவெல் (24 பந்துகளில் 39 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய லக்னோ அணியின் வீரர்களும் தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை. அந்த அணி 12 ஓவர்கள் முடிவதற்குள் அந்த அணி நாலு முக்கியமான வீரர்களான மிட்சல் மார்ஷ் (15 ரன்), மர்க்ரம் (22 ரன்), ரிஷப் பந்த் (10 ரன்), நிக்கோலஸ் பூரன் (13 ரன்) ஆகியோரை இழந்து விட்டது. ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 54 ரன்) மற்றும் முகுல் சவுத்ரி (27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்) எடுத்தனர். கடைசி ஓவரில் 14 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முகுல் சவுத்ரி இரண்டு சிக்சர்கள் அடித்து வெற்றிக்கு வழிகோலினார். இதனால் லக்னோ அணி வெற்றிபெற்றது.

பதினாறாவது ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான் – கௌஹாத்தி – ஏப்ரல் 10

          முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 10.5 ரன் ரேட்டில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. அந்த அணியின் விராட் கோலி (16 பந்துகளில் 32 ரன்), படிக்கல் (7 பந்துகளில் 14 ரன்), ரஜத் படிதர் (40 பந்துகளில் 63 ரன்), ஷெப்பர்ட் (11 பந்துகளில் 22 ரன்), வெங்கடேஷ் ஐயர் (15 பந்துகளில் 29 ரன்) ஆகியோர் சுமாராக ஆடினர். ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் ஷர்மா தலா 2 விக்கட்டுகள் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி (26 பந்துகளில் 78 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (43 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) அதிரடியாக விளையாடினர். இதனால் 18 ஓவர்களிலேயே 4 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 11

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ 28 (11.4.2026) சனிக்கிழமை
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 9.58 pm வரை நவமி பின் தசமி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 11.17 am வரை உத்ராடம் பின் திருவோணம்
யோகம் ~ சித்தம்
கரணம்~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.09
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ நவமி
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (11-04-2026) ராசி பலன்கள்


மேஷம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயம் பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : முடிவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.


ரிஷபம்

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.


மிதுனம்

மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : தடைகள் குறையும்.
புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.


கடகம்

மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

புனர்பூசம் : விமர்சனங்கள் மறையும்.
பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : சாதகமான நாள்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.


கன்னி

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : முதலீடுகளில் கவனம்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


துலாம்

தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : திருப்தி உண்டாகும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.


விருச்சிகம்

உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : சுறுசுறுப்பான நாள்.
கேட்டை : திருப்பங்கள் ஏற்படும்.


தனுசு

எதிர்காலம் தொடர்பான நிலையான சிந்தனைகள் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்து வந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மூலம் : மாற்றம் ஏற்படும்.
பூராடம் : வரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : வேறுபாடுகள் குறையும்.


மகரம்

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். பயம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : மாற்றங்கள் பிறக்கும்.
திருவோணம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.


கும்பம்

உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மனதளவில் பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : சேமிப்புகள் குறையும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


மீனம்

மனதளவில் புதிய தேடல்கள் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணியில் இருந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : தேடல்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி : இழுபறிகள் விலகும்.
ரேவதி : ஆதாயம் ஏற்படும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”

  • ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

reserve bank of india rbi - 2026
#image_title
  • சக்கரவர்த்தி மாரியப்பன்

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

நமது அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் 11 மாதங்கள் வரை தாங்கும் அளவுக்கு பலமாக உள்ளது. இரண்டாவதாக சிறப்பாக நிதி நிர்வாகம் செய்யக்கூடிய வங்கிக் கட்டமைப்பு தற்காலிக சந்தை அபாயங்களைத் தாங்கிக் கொள்ள உதவும். – உலக வங்கி.

பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடு விலையேற்றம் நிச்சயம் நம்மை பாதித்தாலும், மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

● பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்புக் கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது. தற்போது டீசலுக்கு கூடுதல் சுங்க வரி கிடையாது. பெட்ரோலுக்கு ரூ.3 (முன்பு ரூ.13).

இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதில் உத்தேசமாக 15 நாள்களுக்கு ரூ.7000 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

● ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்தியுள்ளது. டீசல் – லிட்டருக்கு ரூ.21.50, விமான எரிபொருள் ATF – லிட்டருக்கு ரூ.29.5. இதன் மூலம் ரூ.1500 கோடி வருவாய் கிடைக்கும்.

● இவை தவிர ஜூன் 30 வரை, 40 பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளது. இவை பிளாஸ்டிக், பெட்ரோகெமிக்கல், ஜவுளி, பேக்கேஜிங், மருந்து, ரசாயனம் மற்றும் வாகன உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

● மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு பயணத்தில் உள்ள ரிஸ்க், ஏற்படும் கூடுதல் காப்பீடு செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு துறைமுகங்களில் வாடகை, குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்ணர்கள் கட்டணம் போன்றவற்றில் சலுகை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

● வீடுதோறும் குழாய் வழி எரிவாயு இணைப்புகளைப் பயன்படுத்த புதிய இலக்குகள் நிர்ணியிக்கப்பட்டு வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

● வருங்காலத்தில் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் இலக்கான 500 GW ஐ நோக்கி நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். தற்போது 280 GW இலக்கை அடைந்து உலகின் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் சக்தியில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறோம்.

● பாதுகாப்பான Small Modular Reactors, Fast Breeder Reactors கொண்ட அணுவுலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் போது நமது இறக்குமதி கணிசமாகக் குறையும். பார்க்கலாம்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

1001355335 - 2026

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 10ம் தேதி இன்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் 15ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் ஏப்ரல் 14ல் சித்திரை விஷு கொண்டாடப்படுகிறது.

சித்திரை விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். கேரளாவில் இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று 10ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் திறக்கப்பட்டது.

இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 வரை விஷுக்கனி தரிசனம் நடைபெறும். விஷுக்கனியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை வழங்குவார்கள். வரும் 18ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது.

வரும் 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

pakistan defense minister khawaja asif - 2026

இஸ்ரேலை “அழிக்க வேண்டும்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆசிஃப் கவாஜா சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்தை தொடர்ந்து இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆசிஃப் தனது எக்ஸ் தளத்தில், “இஸ்ரேல் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நாடு; பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நாடு அழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காசா, ஈரான், லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற அழைப்பு எந்த அரசிலிருந்தும் வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கண்டனம் தெரிவித்தது. இந்த சர்ச்சைக்குப் பிறகு, ஆசிஃப் தனது எக்ஸ் கணக்கை நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு தரப்புகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு “அதிர்ச்சியளிக்கிறது” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஒரு கூர்மையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் வியாழக்கிழமை “தீயது” என்றும் “மனிதகுலத்திற்கே ஒரு சாபம்” என்றும் அழைத்தார். இதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து ஒரு வலுவான மறுப்பு வந்தது.

X தளத்தில் தற்போது நீக்கப்பட்ட ஒரு பதிவில், “இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், லெபனானில் இனப்படுகொலை நடத்தப்படுகிறது” என்று ஆசிஃப் கூறியிருந்தார்.

“முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும் அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், ரத்தக் கொதிப்பு தடையின்றி தொடர்கிறது,” என்று அவர் எழுதியிருந்தார்.

“ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீன மண்ணில் இந்த புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் நம்பி பிரார்த்திக்கிறேன்,” என்று ஆசிஃப் மேலும் கூறினார்.

இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பு “அதிர்ச்சியளிக்கிறது” என்று நெதன்யாகு கூறினார்.

“இது எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும், குறிப்பாக அமைதிக்கான நடுநிலை நடுவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்திடமிருந்தும் பொறுத்துக் கொள்ளக்கூடிய ஒரு அறிக்கை அல்ல,” என்று அவரது அலுவலகம் X தளத்தில் பதிவிட்டது.

முறையான உறவுகளைப் பேணாத இரு நாடுகளுக்கு இடையே அரிதான நேரடி இராஜதந்திர மோதலைக் குறிக்கும் வகையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியான் சாரும் பாகிஸ்தான் தலைமையை பகிரங்கமாகக் கண்டித்தார்.

“வெளிப்படையான யூத-விரோத இரத்த அவதூறுகள்” என்று அவர் விவரித்ததைக் கண்டித்த சாரும், இஸ்ரேலை “புற்றுநோய்” என்று முத்திரை குத்துவது அதன் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். “இஸ்ரேலை அழிப்பதாக சபதம் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்” என்று அவர் கூறினார். இது, இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் சொல்லாடல்களை டெல் அவிவ் எவ்வளவு தீவிரமாகப் பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்ததில் இருந்து தொடங்கிய தொடர் நிகழ்வுகளுக்குப் பிறகு இஸ்ரேலின் இந்த எதிர்வினை வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, குவாஜா ஆசிஃப் சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் கருத்துக்களைப் பதிவிட்டார்.

இஸ்ரேலிடமிருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ஆசிஃப் தனது பதிவை நீக்கிவிட்டார்.

ராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில், டெல் அவிவ் வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுடன் நேரடித் தொடர்பைத் தவிர்த்து வந்த நிலையில், இஸ்ரேலியத் தலைவர் பகிரங்கமாகப் பதிலளித்த இந்த முடிவு, அவரது கடந்தகால நடைமுறையிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

எந்தவொரு மத்தியஸ்த முயற்சியிலும் பாகிஸ்தானின் பங்கு குறித்த இஸ்ரேலின் அவநம்பிக்கை முன்னரே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இஸ்ரேலின் தூதர் ரூவன் அசார், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானை ஒரு நம்பகமான மத்தியஸ்தராக இஸ்ரேல் கருதவில்லை என்று கூறினார்.

இஸ்ரேல்-லெபனான் மோதல்

போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ராக்கெட்டுகளை வீசியபோது, மார்ச் 2 அன்று லெபனான் மத்திய கிழக்கு போரில் இழுக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா போரில் நுழைந்ததிலிருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்கள் புதன்கிழமை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றன. இது, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான அமைதியற்ற போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் ஆட்டம் காணச் செய்தது.

ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், இந்த போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது.

மத்திய கிழக்கு போரில் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் ஷெரீப், அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தம், லெபனான் உட்பட “எல்லா இடங்களிலும்” நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

ஷெரீப்பின் கூற்றை ஈரான் ஆதரித்த நிலையில், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள டிரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோர், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றனர்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதில் கவனம் செலுத்தி, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தனது அமைச்சர்களுக்கு நெதன்யாகு வியாழக்கிழமை உத்தரவிட்டார். இஸ்ரேலும் லெபனானும் அடுத்த வாரம் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உருவாகிவரும் சூழ்நிலைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை தெஹ்ரான் இடைநிறுத்தக்கூடும் என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் தடம்புரளக்கூடும் என்ற கவலைகளை இந்த நிகழ்வு எழுப்புகிறது.

எதிரி நாட்டை ‘முற்றிலுமாக அழிப்பதற்கான’ டொனால்ட் டிரம்பின் காலக்கெடு முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அமெரிக்காவும் ஈரானும் செவ்வாயன்று இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. போர் நிறுத்தம் கோரியிருந்த ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் பேசியதாக டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஏப்ரல் 10-ஆம் தேதி, ஒரு “முடிவான ஒப்பந்தத்தை” எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக, இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் வரவேற்கும் என்று ஷெரீப் தெரிவித்தார். பின்னர், அப்பேச்சுவார்த்தைகள் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதன் விளைவாக, பிப்ரவரி 28-ஆம் தேதி வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பாதையில், பாகிஸ்தானில் வைத்து வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் ஒப்புக்கொண்டிருப்பதாக டெஹ்ரான் தெரிவித்தது.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

pm modi in ap meeting - 2026

பிஹார்: அமெரிக்க சிஐஏ துணையுடன் பாரதப் பிரதமர் மோதியை முடிக்கத் திட்டம் போட்ட 3 பேர் கைது!

பிஹாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு காவல்துறைக் குழு சிம்ரி காவல் நிலையப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி, ஒரு இளைஞரைக் கைது செய்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்ரியில் உள்ள ஆஷா பத்ரி கிராமத்தைச் சேர்ந்த அமன் திவாரி என அடையாளம் காணப்பட்ட முக்கியக் குற்றவாளி, அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் ஷுபம் ஆர்யாவின் கூற்றுப்படி, குற்றவாளி பிரதமரைத் தாக்கத் திட்டமிட்டதாகவும், ஒரு வெளிநாட்டு அமைப்புடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளி, இந்தத் திட்டம் தொடர்பாக பெரும் தொகையைக் கோரி மத்திய புலனாய்வு முகமைக்கு (சிஐஏ) ஒரு திட்ட அறிக்கையை அனுப்பியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், திட்டத்தைச் செயல்படுத்த 22 நாட்கள் அவகாசம் கோரியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் கூற்றுகளின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்ந்து விசாரணையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் இல்லத்திலிருந்து மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை காவல்துறை மீட்டெடுத்தது. மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கவும், டிஜிட்டல் தகவல் தொடர்புகளை சரிபார்க்கவும் இவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியின் கூட்டாளிகள் என்று நம்பப்படும் மேலும் இரண்டு நபர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. கூறப்படும் சதியின் இயல்பைத் தீர்மானிக்க மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் குறிப்பிட்ட நெட்வொர்க் அல்லது தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையில் முன்னேற்றம் காணும்போது மேலும் பல விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

school leave - 2026

அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நிறைவடைகின்றன.

ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 1–3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

– இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிஜேபி., உள்ள வந்துடும்!

kanimozhi karunanidhi maran - 2026
  • கே.எஸ். ராதாகிருஷ்ணன்

என்டிஏ கூட்டணி முற்றிலும் தமிழகத்திற்கு விரோதமானது. அவர்களுக்குத் தமிழ் மண்ணில் ஒரு சீட் கூடக்கிடைக்காது என்று அபத்தமாக பேசி வருகிறார் கனிமொழி .

உண்மையில் மோடி அரசு தமிழர்களுக்கு விரோதமானவரா?யார், நீங்கள்தான் தமிழர்கள் விரோதிகள் ? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் ஈழத்தமிழர் முள்ளிவாய்க்கால் மரணங்களுக்கு யார் காரணம்?

இத்தனை வருடம் ஆட்சி செய்தும் மத்திய அமைச்சரவையில் 18 வருடங்கள் பங்குபெற்றும் கூடத் தமிழை ஆட்சி மொழியாக ஏன் உங்களால் கொண்டு வர முடியவில்லை! இப்போது வந்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் மட்டும் என்ன பலன்?

ஆனால் உங்கள் குழந்தைகளை மட்டும் இந்திப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்! உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் டெல்லிக்கு எம்பி ஆகப் போக வேண்டும் என்கிற முறையில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறோம் என்று மக்களிடம் இரட்டை முகம் காட்டுகிறீர்கள்.

மட்டுமல்லாமல் நாடாளுமன்றத் திமுக வேட்பாளர்களுக்கான நேர்முகத்தில் உங்களுக்கு இந்தி தெரியுமா என்றும் கேட்கிறீர்கள்?! இந்த லட்சணத்தில் பாஜகவை எதிர்ப்பதாகவும் பாஜக வந்தால் இந்தி வந்துவிடும்! தமிழ் ஒழிந்து விடும் என்று இதே பொய்ப் பிரச்சாரத்தை எத்தனை வருடம் செய்வீர்கள்? எங்கே பிஜேபி தமிழருக்கு எதிராக இருந்தார்கள்.

கனிமொழி தொகுதியில் குலசேகரப்பட்டினத்திற்கு ராக்கெட்ஏவு நிலையம்
30, 000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி துறைமுகம் , தூத்துக்குடி விமான நிலைய மத்திய அரசுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அன்றைக்கு எல்லாம் ஒரு சீட் கூட பிஜேபிக்கு கிடைக்கவில்லை! ஆனால் அவர்கள் தமிழகத்திற்கு இத்தனை வசதிகளையும் செய்திருக்கிறார்களா இல்லையா?

நீங்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி பேசுகிறீர்களே! நீங்கள் எத்தனை துரோகங்களை தமிழகத்திற்குச் செய்திருக்கிறீர்கள்! சேது சமுத்திரத் திட்டத்தைத் தோண்ட தோண்ட மண் சரியசரிய தோண்ட தோண்ட எவ்வளவு பணத்தை விரயம் பண்ணி அதில் எத்தனை ஊழல் செய்து நீங்கள் கொழுத்திருக்கிறீர்கள்.

அத்தனையும் தோல்வியில் முடிந்த பிறகும் உங்கள் தகப்பனார் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சவால் விட்டுவிட்டும் போய்விட்டார்.

அத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி அரசுப் பணம் வீணாகி விட்டது. ஒருபிடி மண்ணைக் கூட பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று முட்டாள் தனமாகப் பேசினீர்களே! இன்றைக்கு இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்டு விட்டீர்களா?

திமுக போட்ட அத்தனை திட்டங்களிலும் ஊழல்! கேட்டால் பாஜக தமிழ்த்திற்கு துரோகம் செய்தது என்று பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டே நீங்கள் செய்த அத்தனை அட்டூழியங்களையும் மறைத்துக் கொண்டு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் பாஜகவை குற்றம் சாட்டுகிறீர்கள்.

எதிலும் ஒரு நியாயம் ஒரு அரசியல் எதார்த்தம் ஒரு அறநெறி எதுவுமே இல்லையே! எதற்கும் கட்டுப்படாமல் இவ்வளவு கேவலமாக உங்கள் குடும்ப அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். போக உங்கள் மாவட்ட செயலர்கள் மந்திரிகள் என அவர்கள் குடும்பங்களையும் இந்த ஊழல்களின் மூலம் காப்பாற்றிக் கொண்டு வருகிறீர்கள்.

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.