Home Blog Page 2

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 8

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

வைகாசி ~ 25 ( 8.6.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 10.38 pm வரை அஷ்டமி பின் நவமி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ மறுநாள் (அதி)காலை 5.25 am வரை பூரட்டாதி பின் உத்தரட்டாதி.
யோகம் ~ விஷ்கம்பம் / ப்ரீத்தி.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
சூரியஉதயம் ~ காலை 5.53.
சந்திராஷ்டமம் ~ கடகம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9 to 10.30 am & 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 5.53.
சந்திராஷ்டமம் ~ கடகம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ அஷ்டமி.
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (08-6-2026) ராசி பலன்கள்


மேஷம்

எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : உற்சாகம் பிறக்கும்.
பரணி : காரியம் நிறைவேறும்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்


ரிஷபம்

சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நிமித்தமான எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். சுபகாரிய சிந்தனைகள் மேம்படும். மனதில் திருப்தியின்மையான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்
ரோகிணி : செலவுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் கூடும்


மிதுனம்

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். செய்கின்ற முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : தெளிவு பிறக்கும்
திருவாதிரை : சவால்களை வெல்வீர்கள்
புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.


கடகம்

உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : பொறுமை வேண்டும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.


சிம்மம்

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். சமூக பணிகளில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஒற்றுமை கூடும்
பூரம் : ஆதரவு கிடைக்கும்
உத்திரம் : முடிவு பிறக்கும்


கன்னி

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : சிக்கல்கள் தீரும்
அஸ்தம் : லாபம் மேம்படும்.
சித்திரை : ஆதரவு பெருகும்.


துலாம்

செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபம் அடைவீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : சந்திப்பு உண்டாகும்
சுவாதி : லாபகரமான நாள்.
விசாகம் : முடிவுகள் பிறக்கும்.


விருச்சிகம்

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுகள் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : குழப்பம் விலகும்
அனுஷம் : வாய்ப்புகள் வரும்
கேட்டை : பாராட்டு கிடைக்கும்


தனுசு

சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : தீர்வுகள் கிடைக்கும்
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


மகரம்

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். சுபகாரிய தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்களும் காலதாமதங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : காலதாமதம் ஆகும்


கும்பம்

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைதுறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

அவிட்டம் : வெற்றிகரமான நாள்.
சதயம் : மாற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : மதிப்பளித்து செயல்படவும்.


மீனம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார தொடர்பான வெளியூர் பயணம் கைக்கூடும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். இணையம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : பயணம் கைகூடும்
ரேவதி : ஆதாயமான நாள்.


thiruvalluvar 1 - 2026

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

annamalai k - 2026

–பத்மன்

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை என்று அதிமுகவில் இருந்து பாதிப்பின்றி விலகி, பாஜகவில் சேர்ந்து, பின்னர் அதன் தமிழகத் தலைவர் ஆகவே ஆகிவிட்ட நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். பாஜகவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.

அதேநேரத்தில் வேறு சில விஷயங்களையும் ஆராய வேண்டியுள்ளது. அண்ணாமலை பாஜகவில் சேராமல் நேரடியாக தனிக்கட்சி தொடங்கியிருந்தால் மக்களிடையே இந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்க முடியாது. இப்போது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நடிகர் விஜய் தொடங்கிய தவெக பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில் அண்ணாமலையின் புதிய கட்சி அரசியல் களத்தில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே!

விஜய்யுடன் ஒப்பிட்டால் அவருக்குக் கிடைத்திருக்கும் கண்மூடித்தனமான மக்கள் செல்வாக்கு அதாவது பாபுலாரிட்டி, அண்ணாமலைக்கு கிடைக்காது. அவ்வாறின்றி கொள்கை ரீதியில் வழிநடத்தப்படும் கட்சி எனில் என்ன கொள்கை?

மேலும் தமிழகத்தில் திமுகவும் பின்னர் அதிமுகவும் வளர்ச்சி கண்டதற்கு கொள்கையைத் தாண்டிய கவர்ச்சி அரசியலே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கொள்கை அல்லது மக்கள் நலன் பேசும் எல்லோரையும் மக்கள் முழுமூச்சாக ஏற்றுக் கொள்வார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை. உதாரணத்துக்கு சீமான், விஜயகாந்த்.

ஆகையால் தமிழகத்தைப் பொருத்தவரை கொள்கை வாதம் பேசும் பாஜகவுக்கு அண்ணாமலை போன்ற மக்கள் செல்வாக்கைப் பெற்று அதனை மேலும் வளர்க்கும் தலைவர்களும், அண்ணாமலை போன்ற அரசியலில் சாதிக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு பாஜக போன்ற கருத்தியல் சார்ந்த, கடினங்களைத் தாண்டி வளரும் கட்சியும் பரஸ்பர அவசியம்.

நடந்தது நடந்துவிட்டது, இனி? என் வழி தனி வழி என்றுபோன அண்ணாமலை அவரது வழி என்ன என்பதைத் தெளிவாக வெட்டவெளிச்சமாக்கட்டும்.

தேசிய, தமிழக வளர்ச்சிக்கு அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம்/ கட்சி சிறப்பான பங்காற்ற வாழ்த்துகள். அதேநேரத்தில் தமிழுணர்வும், ஹிந்து சமுதாயச் சிந்தனையும் கொண்ட தேசியவாதியான என்போன்றோருக்கு, தமிழகத்தில் இனி பாரதிய ஜனதாவின் நிலைப்பாடும் செயல்பாடும் எவ்விதம் அமையும் என்பதுதான் அக்கறை செலுத்த வேண்டிய விஷயம்.

ரஜனிகாந்த் தனிக்கட்சி தொடங்காததால், தங்கள் கட்சியில் இணைந்த அண்ணாமலையை இந்த அளவுக்கு வளர்த்து, உயர்த்திய பாஜக அதன் பயன்களைச் சரியாக அறுவடை செய்யவில்லை. தமிழகத்தில் திமுகவைத் தோற்கடிக்க பாஜகவுக்கு கூட்டணி தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் அதிமுகவின் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அண்ணாமலைக்கும் சீட் கொடுக்காமல், குறைந்த சீட்டுகளுக்கு பாஜக ஒப்புக்கொண்டது மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைத்தது.

தமிழக பாஜக, அண்ணாமலை தலைமையில் அதிமுக அல்லாத கூட்டணி அமைத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். ஒருவேளை அது திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிளந்து திமுகவுக்கே சாதமாகப் போயிருந்தாலும்கூட பாஜகவுக்கு இந்த அளவுக்குப் பாதகம் விளைந்திருக்காது. அவ்வாறின்றி, இதேபோல் மட்டமான தேர்தல் முடிவு கிடைத்திருந்தால், அப்போது அண்ணாமலையை மாற்றியிருக்கலாம். தவறில்லை.

அதிமுக கூட்டணிக்காக பாஜக நீர்த்துப் போகாது இருந்திருந்தால், தீய திராவிடத்துக்கு எதிரான ஹிந்து தேசியவாதத்துக்கான வலு எவ்வகையிலேனும் கூடியிருக்கும்.

போனது போகட்டும்! இனி… சித்தாந்தவாதிகள் என்போரில் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரையும், பதவி சுகத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டு கட்சி வளர்ச்சியையும், கட்சித் தொண்டர்கள் நலனையும் கண்டுகொள்ளாத சிலரையும், கட்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்காக அன்றி சுய வளர்ச்சி, சுய லாபத்துக்காக மட்டுமே கட்சியில் சேர்ந்து, அவ்வகையில் செயல்பட்டுவரும் கணிசமானோரையும், பலவிதமான லாபிகள் நடத்துவோரையும் தயவுதாட்சண்யமின்றி களையெடுக்க பாஜக முன்வர வேண்டும்.

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

தேசிய அளவில் வெறும் 2 சீட்டுகள் என்று கடும் பின்னடைவைக் கண்டு, பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டி இந்த அளவுக்கு அசைக்க முடியாத ஆலமரமாக வளரந்துள்ளது பாரதீய ஜனதா. அதன் தமிழக விழுதைச் சற்று சரிசெய்ய வேண்டியுள்ளது. அந்தச் சற்று சாமான்யமானது அல்ல, ஆனால் சாத்தியமானதே!

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

annamalai welcome amit sha in combatore - 2026
  • B.R. மகாதேவன்

பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் பிரச்னை தேர்தல் வெற்றிகள், வியூகங்கள், கூட்டணிகள், லாபிகள், கொள்கைகள் தொடர்பானவை அல்ல.

அது அதிகாரப் பகிர்வு தொடர்பானது. பணி சுதந்தரம், சர்வ அதிகாரம் தொடர்பானது.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

முழு அதிகாரமும் தன்னிடம் இருக்கவேண்டும் என்பது ஹிட்லரின் விருப்பம் மட்டுமல்ல; காந்தியின் விருப்பமும் கூட (காந்தியின் உதாரணத்தை விரும்பாதவர்களுக்கு: இராஜ ராஜ சோழன் கூட ஒருவகையில் சர்வ அதிகாரம் கொண்டவர்தான்). எனவே சர்வாதிகாரம் என்பது சரியா தவறா என்பது யார் முன்வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது மட்டுமே.

அண்ணாமலை சர்வ அதிகாரத்தை / சுதந்தரத்தை விரும்பினாரா..?

அரசியல் சமரசங்களை அவர் முன் யூகித்திருக்கவில்லையா?

என்னால் கட்சியை வளர்க்க முடியும் என்று நம்பி என்னிடம் பொறுப்பை ஒப்படைக்கிறீர்களென்றால் என் வழியில் செய்ய அனுமதியுங்கள். இதுதானா அண்ணாமலையின் எளிய வேண்டுகோள்.

ஏன் இதில் மோதல் வந்தது?

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  1. முன்னாள் தலைவர்களைக் கையாண்ட விதம்.

எல்.முருகன், இல.கணேசன், சி.பி.ஆர்., தமிழிசை, ம.வெங்கடேசன் என பலரும் பல்வேறு பொறுப்புகள் கொடுத்து கெளரவமாக வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் (பொன்னார், ஹெச்.ராஜா போன்றவர்கள் கொஞ்சம் பின்னரங்குக்குச் சென்றனர்).

இதை முன்னாள் தலைவர்களுக்குச் செய்த மரியாதை என்றும் சொல்லலாம். கொஞ்சம் விலகி நில்லுங்கள் என்று கை காட்டியதாகவும் சொல்லலாம்.

உள் அரங்கில் இது தொடர்பாகப் பேசப்பட்டவை ஆரோக்கியமாக இருந்திருக்கவில்லை. இதுவே பின்னர் வெளிப்படவும் செய்தது.

*

  1. ஊழல் எதிர்ப்புப் போராட்டம்

திமுகவை எதிர்ப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட டி.எம்.கே. ஃபைல்ஸ் நடவடிக்கை முழுக்கவும் அண்ணாமலையின் விருப்பம் மட்டுமே.

மத்திய தலைவர்களும் மாநிலத்தில் சிலரும் விரும்பியிருக்கவில்லை.

இரு தரப்பினருக்கும் அவரவர் பக்க நியாயங்கள் இதில் இருந்தன.

காமன் வெல்த் ஊழல், கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என பல ஊழல்களை அம்பலப்படுத்தித்தான் பாஜக 2014-ல் காங்கிரஸையே வீழ்த்தியிருந்தது. நானும் லஞ்சம் வாங்கமாட்டேன்; யாரையும் வாங்கவும் விடமாட்டேன் என்பதுதான் நரேந்திர மோதியின் முத்திரை முழக்கம். இன்றுவரை அவர் அதை திறமையாக அமல்படுத்தியும் வந்திருக்கிறார்.

ஆனால் தமிழகத்துக்கு இந்த ஊழல் எதிர்ப்பு பலன் தராது என்று பல தலைவர்கள் சொன்னார்கள். அதற்கு அவர்களிடம் பல புள்ளிவிவரங்கள் இருந்தன.

திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழலில் கரை கண்டவை. இருந்தும் தமிழக மக்கள் மாறி மாறி இந்த இரண்டு கழகங்களின் பின்னால் மட்டுமே அணி திரண்டனர். இங்கிருந்த கம்யூனிஸ்ட்கள் கூட இந்த ஊழலை ஒரு பொருட்டாக மதித்து ஒருபோதும் களமாடியதில்லை. காங்கிரஸின் நிலைமை வேறு. விசிக, பாமக கூட ஊழலைப் பிரதான விஷயமாக முன்வைத்துக் களமாடியதில்லை.

திமுகவை எதிர்க்கப் பல வழிகள். அதில் ஊழல் எதிர்ப்பும் ஒரு ஓரமாக இருக்கும். இதுதான் தமிழக அரசியல் கள நிலைமை.

தமிழக மக்களுமேகூட ஒப்பீட்டளவில் பிற மாநிலத்தினரைவிட ஊழலில் திளைப்பவர்களே. வோட்டுக்கு காசு; டிவி, கிரைண்டர், ஃபேன் இலவசங்கள்; 2000 ரூபாய் வெள்ள நிவாரண நிதியை எட்டாவது மாடியில் இருந்தவர்கள் கூட காரில் வந்து வாங்கிச் செல்லும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகுந்தவர்கள். அமைச்சர் எவ்வழி மக்கள் அவ்வழி… அல்லது மக்கள் எவ்வழி அமைச்சர்கள் அவ்வழி.

எனவே இந்தக் களச் சூழலில் ஊழல் எதிர்ப்புக்கு இத்தனை முக்கியத்துவம் வேண்டாம் என்று மத்திய தலைமையும் மாநில சக தலைவர்களும் சொன்னபோது, நான் மேனேஜர் அல்ல என்று அண்ணாமலை தெளிவாக பதில் சொன்னார்.

அவர் ஒரு காவல்துறை அதிகாரி. அவருடைய எல்லைக்குள் முழு அதிகாரம் அவரிடமே இருக்கும். இருக்கவேண்டும். பாஜகவிலும் அதையே எதிர்பார்த்தார்.

மத்திய தலைமை இதை விரும்பவில்லை.

மக்கள் ஒருவேளை ஊழல் கட்சிகளை எதிர்ப்பதில் ஆர்வத்துடன் இருந்திருந்தால் மத்திய பாஜக நிச்சயம் அண்ணாமலையின் ஊழல் ஒழிப்பு முயற்சிக்கு முழு ஆதரவு தந்திருப்பார்கள்.

இன்னொரு வகையில் பார்த்தால், மத்திய பாஜகவுமே ஊழல் தொடர்பான முழக்கங்களை ஆட்சிக்கு வந்ததோடு நிறுத்திக் கொண்டுவிட்டார்கள்.

சுப்ரமணியம் ஸ்வாமிக்கு மத்திய தலைமையுடன் விரிசலுக்கான பல காரணங்களில் ஒன்று: ஊழல்வாதிகளைத் தண்டிப்பதில் பாஜக தீவிரம் காட்டவில்லை என்பதுதான். அண்ணாமலைக்கும் இது சார்ந்த வருத்தம் உண்டு.

போதாக்குறையாக ஊழல் வழக்குப் பேச்சு வெளியே வந்ததும் முதல்வர் உட்பட திமுகவினர் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று நேராக பிரதமரையோ நிர்மலா சீதாராமனையோ சந்தித்து காலில் விழுந்துவிட்டு வந்துவிடுவார்கள்.

காங்கிரஸ் காலத்தில் நியமிக்கப்பட்ட வருமான மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதோடு வழக்கை ஓரங்கட்டுவார்கள். அல்லது நீர்த்துப் போகவைப்பார்கள்.

இந்த விஷயத்தில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது… யார் பக்கம் குறைவாக இருக்கிறது என்ற முடிவெல்லாம் அவ்வளவு எளிதில் எடுக்கமுடியாது.

மக்கள் ஊழலைப் பெரிதாக நினைக்கவில்லை; எனவே டி.எம்.கே. ஃபைல்ஸ் முயற்சி தேவையில்லை என்று மத்திய தலைமை சொல்லியிருக்கலாம்.

திமுகவை அடக்கி வைக்க இதுவே வழி என்று அண்ணாமலை நினைத்திருக்கலாம்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது மத்திய அரசா… மாநில அரசா… மத்திய பாஜகவா… மாநில பாஜகவா..? யார் எடுக்கும் முடிவு அமலாகவேண்டும் என்ற சிக்கலாக இது மாறியிருக்கிறது.

*

  1. காட்சி ஊடகம் மற்றும் பிற ஊடகங்களைக் கையாள்வது எப்படி..?

இந்த விஷயத்திலும் அண்ணாமலை மிகத் தெளிவாக கட்சித் தலைவர் என்ற வகையில், தான் மட்டுமே ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார்.

முன்பெல்லாம் தமிழைசை கட்சித் தலைவராக இருப்பார். ஹெச். ராஜா ஒரு கருத்து சொல்வார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை சொல்வார். இப்படியாக கட்சி ஜனநாயக வழியில் இயங்கி வந்தது. இதை அண்ணாமலை விரும்பவில்லை. எனவே டி.வி. விவாதங்களில் பாஜக பெயரில் யாரும் கலந்துகொள்ளவேண்டாம் என்று சொன்னார்.

இதை அண்ணாமலையின் பிராண்ட் பில்டிங் நடவடிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம். கட்சியின் தீர்மானம் தெளிவாக, ஒன்றாக இருந்தால்தான் நல்லது. ஆளாளுக்கு ஒன்று பேசுவது சரியல்ல என்ற நடவடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், திரையுலகத்தைப் பற்றிப் பேசவேண்டாம் என்று அண்ணாமலை முடிவு செய்தார். இது நமது பிரம்மாஸ்திரத்தை நாமே பரணில் போடுவதற்கு சமம்.

உண்மையில் தமிழகத்தில் திமுகவின் பலமே அதன் பிரசார யுக்திகள்தான். அதிலும் திரை உலகமும் பிற பிரபலங்களும் திமுகவின் ஊதுகுழல்களாகவே எப்போதும் செயல்பட்டனர். மக்கள் மனதில் பாஜக மீதான விலகலை அதைக் கொண்டே செய்துகாட்டினார்கள். அப்போது நிச்சயமாக பாஜக அவர்களை அந்தக் களத்தில் மோதி வீழ்த்த முயற்சி செய்திருக்கவேண்டும்.

எதிரியின் பலம் யானைப் படையென்றால் நாமும் வலுவான யானைப் படை கொண்டு மோதியாகவேண்டும். போரின் அடிப்படை அரிச்சுவடிப் பாடம் இது.

ஆனால், அண்ணாமலை காட்சி ஊடகங்கள் பற்றிப் பேசவே கூடாது என்று சொன்னார். உண்மையில் ஊடகங்களைக் கையாள்வதில் மத்திய பாஜகவுமே பெருமளவுக்குத் தோற்றுத்தான் போயிருக்கிறது. கருத்து சுதந்தரம், கலை சுதந்தரம் என்ற பெயரில் இந்து, இந்தியா, மோதி, பாஜக, இந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ். எல்லாம் தாக்கப்பட்ட அளவுக்கு வேறு யாரும் தாக்கப்பட்டதில்லை. மத்திய பாஜகவும் இந்தப் போரில் உரிய கவனம் செலுத்தியதே இல்லை.

ஆனால், தேசம் முழுவதும் வெற்றி முகத்தில் இருந்த மத்திய பாஜக அந்த விஷயத்தில் அப்படி இருந்ததில் ஒருவகையில் எந்தத் தவறும் இல்லை. தமிழக பாஜகவும் அப்படி இருந்தது மிக மிகப் பெரிய தவறு. ஏனென்றால் இங்கு வெற்றி பெற காட்சி ஊடகப் பிரசாரங்கள், பதிலடிகள் பெரிதும் உதவியிருக்கும்.

உண்மையில் ஊழலை ஒழிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்ற வகையில் திரையுலகில் புழங்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்கவாவது களம் இறங்கியிருக்கவேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவே இல்லை. தினகரனுடனான அவருடைய நட்பைக்கூடப் புறம் தள்ளிவிடலாம். ஆனால், திரையுலகை அவர் எதிர்க்காமல் இருப்பதென்பது நம் வெற்றி வாய்ப்பை நாமே கை கழுவுவது போன்றது.

ஆளுங்கட்சி தனது அரசியல் செல்வாக்கை வைத்து திரையுலகை தன் ஏகபோக ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. இதைத் தகர்ப்பதைத் தவிர ஒரு துணிச்சலான காவலருக்கு வேறு என்ன இலக்கு இருந்திருக்கமுடியும்?

  1. பிராமணர்களுடன் அண்ணாமலைக்கு மோதலா..?

இல்லை.

அண்ணாமலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எல்லா ஜாதியிலும் ஆட்கள் இருப்பதுபோல் பிராமண ஜாதியிலும் உண்டு. ஊடகங்களில் அதிகம் பேசும் எதிர்த்துப் நபர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதால் பிராமண லாபி அண்ணாமலைக்கு எதிரானது என்று திராவிட மாஃபியா அழகாக ஒரு கட்டுக்கதையை முன்னெடுத்தது. அதை திராவிட சிந்தனையில் ஊறிய பலரும் இன்றும் சுமந்துகொண்டும் இருக்கிறார்கள்.

ஊடகங்களில் பாஜக சார்பில் யாரும் பேசவேண்டாம் என்று அண்ணாமலை தன்னுடைய தலைமைக் காலத்தில் முடிவெடுத்ததென்பது பிராமணர்கள் பேசுவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்தார் என்று சொன்னால் எப்படிப் பிழையாக இருக்குமோ அதுபோன்றதுதான் பிராமண சமூக ஊடகவியாளர்கள் சிலர் எதிர்ப்பதை பிராமண லாபியின் எதிர்ப்பாகச் சொல்வதும் பிழையான பார்வையே.

*

  1. 2024 தேர்தல் முடிவுகள்.

ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டிருந்தது; ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்டிருந்தது. 400 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும் என்ற நல்லெண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு பல நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. என் மண் என் மக்கள் யாத்திரையில் அது மக்கள் மத்தில் கொண்டு செல்லப்பட்டிருந்தது (அல்லது அப்படி நம்பப்பட்டது).

திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 2016-2021 காலகட்ட மோதி எதிர்ப்பு வெகுவாக வலுவிழந்துவிட்டிருந்தது. கழகங்கள் இல்லா தமிழகம் என்ற முழக்கம் அழுத்தமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அண்ணாமலை என்ன எதிர்ப்பார்ப்புடன் தலைமைப் பதவிக்கு வந்திருந்தாரோ அதற்கான இறுதித் தேர்வு.

நம் கூட்டணிக்கு 18 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. தனியாக 11 % மாக வாக்கு அதிகரித்திருக்கிறது.

முன்பு எவ்வளவு இருந்தது?

3%.

முன்பு எத்தனை இடங்களில் போட்டியிட்டோம்?

2019-ல் ஐந்து இடங்கள். 2014-ல் 9 இடங்கள்.

2014-ல் ஒன்றில் வெற்றி… இல்லையா?

ஆமாம்.

இப்போது?

11% வாக்கு உயர்ந்திருக்கிறது.

போட்டியிட்ட இடங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறது?

ஏகதேசம் நான்கு மடங்கு.

ஆக அதனால் வாக்கு சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. கண்டெஸ்டட் வோட் ஷேரில் என்ன மாற்றம்?

  • 2009: ~7.1% • 2014: ~24% • 2019: 28.52% • 2024: 19.6%

ஆக முன்னேற்றம் எதுவுமில்லை. நல்லது நாம் கடினமாக உழைத்தோம். மக்கள் வாக்களிக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்வோம்.

இதுதான் மத்திய பாஜக 2024 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொண்ட விதம்.

எந்த நிலையிலும் கொடுத்த வாக்கை / டார்கெட்டை நிறைவேற்றவில்லையே ஏன் என்று கேட்கவே இல்லை. அமித்ஷாவும் சேர்ந்து களமாடிக் கிடைத்த தோல்வி அல்லவா? அவர்களுக்கும் அதில் பொறுப்பு இருக்கிறதே. தனிமைப்படுத்தி யாரையும் தண்டிக்க அவர்கள் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

*

  1. கடைசியாக மிக முக்கியமான விஷயம்: இறுதியாக ஏற்றப்பட்ட மயில் பீலி: அதிமுகவுடனான கூட்டணி.

அண்ணாமலை இதை விரும்பவில்லை. நான் தலைவராக இருக்கும்வரை அது நடக்காது என்றார். சரி என்று தலைமை முடிவெடுத்தது.

இங்கும் தில்லியா… தமிழகமா; அண்ணாமலையா… அமித்ஷாவா என்ற கேள்வியே எழுந்தது.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி. மத்திய அரசின் திட்டங்கள், முடிவுகளை மாநில அரசு நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அதைத்தான் மத்திய அரசு விரும்பும்.

காங்கிரஸ் தன் சொல் பேச்சு கேட்காத மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. பாஜக, ஆட்சியில் அதைச் செய்ததில்லை. கட்சியில் அதைச் செய்திருக்கிறது.

செய்யும்.

இந்தக் கூட்டணி ஜெயிக்காது என்று சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை என்று கண்ணோடு கண் பார்த்து, சொல்லாமல் சொல்லிவிட்டு அண்ணாமலை விடைபெற்றிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடு என்று அவர் சொன்னார். உண்மையில் அது தமிழ்த் திமிர்.

தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.

ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்?

விஜய்+அதிமுக கூட்டணி அமைத்திருப்பார்கள். அல்லது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக முன்பே விஜய் பக்கம் நகர்ந்திருப்பார்கள். இப்போது அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருப்பதால் இந்து வோட்டுகள் ஓரணியில் சேர்ந்துவிடும். திமுக கூட்டணி பிரிந்தால் அதிமுக வென்றுவிடும் என்று சரியாக முடிவெடுத்துத்தான் விஜயுடன் தேர்தலுக்கு முன்பாக இணையவில்லை.

பாஜகவும் அதிமுகவும் சேர்ந்திருக்காவிட்டால் எளிதில் திமுகவை கை கழுவியிருப்பார்கள். அல்லது அவர்கள் சேர்ந்து இருந்திருந்து, திமுகவே வென்றிருக்கும்.

47 இடங்களில் அதிமுக வென்றது. அதில் 44 இடங்களில் இரண்டாம் இடம் திமுக. ஆக பாஜக அதிமுக பிரிந்து நின்றிருந்தால் அதிமுக இவற்றில் தோற்றிருக்கும்; திமுக வென்றிருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால் பாஜக முழுவதுமாகத் தனிமைப்பட்டுத்தான் போயிருக்கும். தினகரன், பாமக எல்லாம் நிச்சயம் அதிமுக இருக்கும் இடத்தில்தான் சேர்ந்திருப்பார்கள். அல்லது விஜய் பக்கம் நகர்ந்திருப்பார்கள்.

உன் வழியில் போயிருந்தால் இதுதானே நடந்திருக்கும் என்று அமித்ஷாவும் கண்ணோடு கண் பார்த்துக் கேட்டிருப்பார்.

நம் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று பதில் சொல்ல முற்பட்டிருந்தால் அதை அமித்ஷா கேட்டிருக்க வாய்ப்பில்லை.

*

உண்மையில், இந்த ஆறு விஷயங்களிலும் மத்திய பாஜக பக்கம் அதாவது அமித்ஷா பக்கம் இருக்கும் நியாயங்கள் மிக அதிகம்.

அதாவது தமிழகத்தில் தொடர் தோல்விக்கான முக்கிய காரணங்கள் வேறு. அமித்ஷாவின் அணுகுமுறையா… அண்ணாமலையின் அணுகுமுறையா எது சரி என்ற கேள்விக்கே இடமில்லை. இருவருடைய அணுகுமுறையும் தோற்ற இடத்தில் யாரை உயர்ந்தவராகச் சொல்லமுடியும்?

அமித்ஷா பிற மாநிலங்களில் தொடர் வெற்றியைப் பெற்றுக் காட்டியிருக்கிறார். அந்த வகையில் அவரே பாஸ்.

மத்திய பாஜக, தமிழகத்துக்கு எவ்வளவோ செய்தும் தமிழக மக்கள் உரிய நன்றியும் மரியாதையும் காட்டாமல் இருப்பதுபோலவே தமிழக பாஜகவிலும் பலர் இருக்கிறார்கள்.

திராவிடர்களைப் போலத்தானே திராவிட பாஜகவும் இருக்கமுடியும்.

இங்கு திராவிட இயக்க அணுகுமுறையே வென்று வந்திருக்கிறது. எனவே, அண்ணாமலை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

என் மண்… என் மக்கள் என்று அவர் முழங்கியது அமித்ஷாவைப் பார்த்துத்தான் என்று இருக்கும்வரையில் இதில் வருத்தப்பட அதிகம் எதுவும் இல்லை. இரு தனி நபர் ஆளுமைகளுக்கு இடையிலான மோதல் என்று அதைத் தாண்டிவிடலாம்.

இந்திய தேசியம் நோக்கி, பாரத மாதாவை நோக்கிச் சொன்னதாக அது ஆகாமல் இருக்கவேண்டும்.

*

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது.

மாணிக் தாகூர் தொடங்கி எதிர் தரப்பில் பலரும் சொல்வது என்னவென்றால், இது பாஜகவின் நாடகம். தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்றவே முடியவில்லை என்பதால் அண்ணாமலை பிரிந்து தனிக் கட்சி காண்கிறார். பாஜகவை எதிர்ப்பதால் அவருக்கு தமிழகத்தில் செல்வாக்கு கிடைக்கும். அவர் கால் ஊன்றியபின் பாஜகவுக்கு அதை மடை மாற்றித் தருவார் என்று சொல்கிறார்கள்.

இதற்கு 100% சாத்தியம் இருக்கிறது.

ஆனால் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதுபோல் ஒரு டீலிங் செய்யப்பட்டது. அதாவது, மோதியை சல்லிக்கட்டு நாயகராக்கலாம். தமிழகத்தில் அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை பன்னீர் செல்வம்-எடப்பாடி கொண்டு நிரப்பலாம். அந்த ஆட்சியை ஐந்தாண்டு நடக்க அனுமதித்து பாஜக மெள்ள கால் ஊன்றலாம் என்று ஒரு வியூகம் வகுக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவை(யும்) இயக்கிய சர்ச் வெகு எளிதாக பாஜகவை குழிக்குள் தள்ளியது. இலங்கை பிரச்னையில் திமுகவும் காங்கிரஸும் துரோகம் செய்திருக்க, பாஜகவையும் மோதியையும் 2016-2021 காலகட்டத்தில் தமிழக விரோதிகளாகக் கட்டமைப்பதில் தமிழ் தேசிய சக்திகள் வெற்றிபெற்றுவிட்டன. இதை பாஜகவின் ஆதரவில் நடந்த அதிமுகவின் ஆட்சியை கொண்டே சாதிக்கவும் செய்தன.

இப்போதும் பாஜகவும் அண்ணாமலையும் எதிர்ப்பதுபோல் காட்டிக் கொண்டு களமாடத் தீர்மானித்திருக்கலாம். ஜாக்கி சான் படங்களில் இப்படித்தான் அவரும் அவருடைய நண்பரும் தமக்குள் சண்டைபோல் போலியாகக் காட்டிக்கொண்டு வில்லன் கையில் இருக்கும் துப்பாக்கியைத் தட்டிப் பறித்து அவனை வீழ்த்துவார்கள். இது ஒரு நல்ல போர் தந்திரம் தான்.

ஆனால், பாஜகவும் அதிமுகவும் இணைந்து நடத்திய ஆட்சியில் பாஜக வீழ்த்தப்பட்டதுபோல் இப்போதும் ஆகிவிடக்கூடாது. ஏனென்றால் எதிரி, நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தவைத்த கதைகள் ஏராளம்.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
ஆனால், மிக மோசமானதற்குத் தயாராக இருப்போம்.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை.

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

annamalai bjp tn leader - 2026

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார். அறிவித்த அன்று காலையில் அதில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 20,000 க்கு கீழே இருந்தது. அவரின் அரசியல் அறிவிப்பு மற்றும் கோரிக்கைக்கு பின்னர் அதில் இணைந்தவர்களின் எண்ணிக்கை அன்றைய இரவிற்குள் 10 லட்சத்தை தாண்டியது. 

விஜய் இதுபோல ஒரு முன்னெருப்பை சில வாரங்களுக்கு முன்பிருந்து விளம்பரப்படுத்தி ஆரம்பித்தபோது, 22 லட்சம் பேர் சேர்ந்தார்கள். எந்த அறிவிப்பும் இல்லாமல் அண்ணாமலை விலகிய செய்தி பலரை சேராமாலே இது என்பது குறிப்பிடத்தக்கது. சில நண்பர்கள் இது ஒரு கோடியை ரொடும்.என்கிறார்கள், அபப்டி எனக்கு தோன்றவில்லை, ஆனால் விஜயின் இலக்கை மிஞ்சிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த குறியீடு அவருக்கான ஆதரவு தளத்தை, தாகத்தை, தாக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 

இது மூப்பனார் தொடங்கிய TMC போல ஒரு தேசியவாதத்தை ஆதரிக்கும் கட்சி. உணமையான செக்யூலரிஸம் என இந்து தர்மத்தின்படி நம்பிக்கை, வழிபாட்டு உரிமையில் தலையிடாத ஒரு நிலையை ஏற்றிருக்கும். பாஜகவும் இதே கொள்கையை கொண்ட கட்சியாக இருந்தாலும், திமுக அதற்கு மதசாயம் பூசியதால், அதை உடைக்க முடியவில்லை, ஆம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவைதான் செக்யூலர் பார்டி. ஏனெனில் பாஜகாவால் திமுகவை உதைக்க முடியவில்லை. 

தவெக என்பது எப்படி மெஷினரிகளால் கிரியேட் செய்த திமுகவின் கார்பன் காப்பியோ, TMC எப்படி காங்கிரஸின் காப்பியோ அதுபோல அண்ணாமலையுன் புதிய கட்சி பாஜகவின் கார்பன் காப்பியாக இருக்கும். அப்போது எதற்கு தனி கட்சி என்றால், பாஜக என்ற தேசிய கட்சிக்கு தமிழகம் என்பதைவிட இந்தியா என்பது முன்னுரிமை என்பதால், தமிழகத்தின் நலன்கள் சமரசம் செய்துகொள்ளப்பட்டது. திமுகவில் குடும்ப நலன்களுக்காக கட்சி சமரசம் செய்துகொண்டது போல என்பதனால் தவெக கொள்கையில் எதிரிகளல்ல, அரசியில் எதிரிகள். 

அண்ணாமலைக்கு இந்த திறமை இருந்ததால்தான் அவருக்கு கட்சியில் சேரும்போதே பதவி, அடுத்த ஒரு வருடத்தில் மாநில தலைவர் பதவி, முன்பு எந்த தலைவருக்கும் இல்லாத சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை முழுதாக கொடுக்கவில்லை (2024 வேட்பாளர் தேர்வு, அதிமுகவுடன் கூட்டணி என்று தாமதித்ததால் கொடுக்க வேண்டிய நேரத்தில் (தேர்தலுக்கு மிக அருகில்) கொடுக்கவில்லை. அது தேசிய கட்சிகளுக்குள்ள சாபம்.

ஆனால் அந்த தேர்தலில் 2014 ஆண்டு பாஜக கூட்டணி பெற்ற சீட்டுக்களை வாங்க முடியவில்லை, ஓட்டுக்களைத்தான் அண்ணாமலையால் வாங்க முடிந்தது என்றால், அது தவறு.  அந்த தேர்தலில் பாஜக தேமுதிகவின் ஜூனியர் பார்ட்னர், அதனால் பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%.ஆனால் 2024 ல் பாஜக தலைமையில் அமைந்த கூட்டணியில் பாஜக பெற்றது 11.34%. அதில் பாமகவை கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் பாஜக சற்றேறக்குறைய 18% வாங்கி இருக்கும். பாஜகவின் மத்திய தலைமை பாமகவை கூட்டணியில் சேர்க்க காரணம், அதிமுகவின் வெற்றியை தடுப்பதுதான் பிராதானமாக இருந்தது என்பதால், அண்ணாமலைக்கு தேவையான சுதந்திரம் அங்கேயும் கிடைக்கவில்லை.

அதுவல்லாமல் பாஜகவிற்கு தொடந்து மதசாயம் பூசிய திமுக மீது பல வழக்குகள் இருந்தும், பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதை வெற்றி பெற அனுமதித்தது. அதிலும் TR பாலு, கனிமொழிக்கு எளிதாக வெல்லும் வாய்ப்புகளை பாஜக தாரை வார்த்து கொடுத்தது. அப்போதே அவர்களை தண்டித்து இருந்தால் பாஜக அன்றே சில தொகுதிகளிலாவது ஜெய்த்திருக்கும். 

அவையெல்லாம் முடிந்துபோனவை. ஆனால் தமிழக சட்டமன்றத்திற்கு களத்தை திமுக எதிர்ப்பை முன்னிறுத்தி, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி என்ற நிலையில் தயார் செய்து வைத்தபோது, அதிமுக கூட்டணி மூலம் அதை தவெகவிற்கு தாரை வார்த்து கொடுத்தது. அதுவும் பாஜக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காகவல்ல, திமுக மீண்டும் ஆட்சியில் அமராமல் இருப்பதற்காக ஒரு பக்கம், மறுபக்கம் அதிமுக, தவெகவுடன் சேராமல் தடுப்பதற்காக மறுபுறம்.

இப்படி தமிழக பாஜக என்பது மத்திய தலைமையின் தேவைக்காக என்றபோது, அதனால் தமிழக பாஜக அதற்கான வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டது, அதுவே வருங்காலத்திலும் தொடரும் என்பது எதார்த்தம். அது தேசிய நோக்கில் சரிதான் என்றாலும், தமிழகத்தின் நலன் சமரசம் செய்துகொள்ளப்பட்டது. 

இன்று தவெக ஆட்சியில் உள்ளது. ஆனால் அதற்குரிய் அனுபவமோ, திமுக விட்டுச்சென்ற மிக மோசமான நிதி நிலையால், துளிகூட அரசு ஆளுமை என்ன மற்ற வகைகளில் கூட அனுபவம் இல்லாததால் தவெக கட்சி தடுமாறுகிறது, தடம் மாறுகிறது. அதன் செயல்பாடுகள் வெறும் வாய்ச்சவாடல் என்பதால் அது மீண்டும் இடைத்தேர்தலில், அதுவும் திருச்சியில் வெல்லுமா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகிவிட்டது. 

ஏனெனில் அதன் வாக்குகள் சரிவடைந்துள்ளதாக செய்திகள் இருந்தாலும் அதனுடன் இப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, அடுத்து மதிமுக என்று  இருப்பதாலும், ஆளும் கட்சி என்பதாலும், அதற்கு வெற்றிபெற வாய்ப்புகள் போதுமானது. ஆனால் அதன் செயல்பாடுகள், கொடுத்த வாக்குறுதிகளில் ஏமாற்று என்று அதே திமுக பாலிசியால் அதற்கு மக்களிடம் எதிர்ப்பு மிக குறுகிய காலத்தில் எழுந்துள்ளது. 

இந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட எதிர்ப்புக்கு முக்கிய காரணம் திமுகவின் சிறப்பான எதிர்கட்சி என்ற அதன் செயல்பாடுகளே என்பதை நாம் மறைக்க முடியாது. முதலில் அந்த எதெப்பு ஆளும் கட்சிக்கு சாதகத்தைத்தான் கொடுத்தது, ஆனால் தவெகவின் நிர்வாக செயலற்ற இயாலமையால் அது எதிராக திரும்பி வருகிறது. இப்போதுள்ள திமுகவின் மைனாரிட்டி, கூட்டணி இழப்பால் அதனால் தேர்தலில் வெல்லும் நிலையில் இருந்து சருக்கிவிட்டது. அதே சூழலில் அதிமுக கிட்டத்தட்ட தனது இருப்பை இழந்துவிட்டது என்றதால், அதனாலும் வெல்ல முடியாது. 

இந்த சூழலில் இந்த தேர்தலில் அண்ணாமலை கட்சி போட்டியிட்டால், கனிசமான தவெக வாக்குகளை இழக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் மூலம் எதிர்கட்சி வாக்குகள் சிதையாமல் சேர்ந்தால், அது ஜெய்க்க வாய்ப்புண்டு. திமுக, அதிமுக, பாஜக என்று மூன்றும் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தால், அது ஒரு மிக வலுவான ஒரு டஃப் ஃபைட்டை தவெகவிற்கு கொடுத்து வெற்றிபெற முடியும். திமுக தேர்தல் வெற்றிக்கு தேவைப்பட்டால் காவடி எடுக்கவும் தயங்காது.

தவெகவின் செயல்பாடுகள் வரப்போகும் நாட்களில் அதன் செயல்பாடுகளை பொறுத்தே, எதிரே இருக்கும் கட்சிகளுக்கான வாய்ப்பு என்பது முடிவாகும். தற்போது கைகாட்டும் தவெகவின் ஆட்சி என்பது திரிணமுள் காங்கிரஸ் கட்சியின் நிலையை நோக்கி செல்கிறது என்றால், அந்த ஆதரவு அண்ணாமலை பக்கம் மாறும். அதாவது திராவிட கட்சிகளின் கூட்டணியில் பாஜக ஒரு பக்கம், அண்ணாமலை ஒரு பக்கம் என்று மாறலாம். இப்போது நாம் முன்பு சொன்ன மெஷினரிகளின் நோக்கம் என்பது தவெக ஒரு பக்கம், திமுக ஒரு பக்கம் என்று தமிழக அரசியலை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது என்றால் RSS இன் இந்த மூவ் வெற்றி பெறுமேயானால், மெஷினரிகளுக்கு தமிகத்தில் எழுதப்பட்ட முடிவுரையல்லவா?

நான் 1984 லிருந்து பாஜக ஆதரவாளன். ஆனால் தமிழகத்தில் 2004 வரை திமுகவின் ஆதரவாளன் என்பதை விட அதிமுகவின் எதிர்ப்பாளர். அதன் பின் நடந்த திமுகவின் விலகலாலும், 2006-11 ல் நடந்த திமுகவின் கேடுகெட்ட ஆட்சியால் அந்த கட்சியை தோற்கடிக்கும் கூட்டணிக்கு வாக்களித்து வருகிறேன். மத்திய பாஜகவின் வெகுசில நடவடிக்கைகள் தவிர முழுமையாக பாஜகவை ஆதரித்து வருகிறேன், இனிமேலும் அது தொடரும். 

ஆனால் தமிழகத்தில் அண்ணாமலையின் வழி என்பது மாற்று வழியில்லாத கட்டாயம் என்பதால் முழு மனதோடு ஆதரிக்கிறேன். இது என்ன ரெட்டை குதிரை சவாரியா என்றால் இதுவரை எந்த பதவியையும் கட்சியில் ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, எனக்கு என்னைவிட கடை பெரிது, கட்சியைவிட நாடு பெரிது என்பதால் நாளை மோடியை விட நல்ல தலைவர் நாட்டிற்கு கிடைத்தால் அவரையும் ஆதரிப்பேன். 

இன்றுவரை மட்டுமல்ல, அடுத்த 4 ஆண்டுகளுக்கு மோடிக்கான மாற்று யாருமில்லை. நாளை நல்ல ஒரு தலைவர் வந்துவிட்டால், அப்போதும் மோடி என்றா மாபெரும் தலைவரை, அவர் செய்த இமாலய சாதனையை நான் ஒரளவிற்கு புரிந்தவன் என்பதால், அவர்தான் இந்தியாவின் தேசத்தந்தை, என்று நம்புகிறேன். இன்றும் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், அதற்கு மின் வந்த வாஜ்பாய் அவர்களை நேசிக்கிறேன். 

ராஜீவ் காந்தியை இன்னும் நன்றியோடு நேசிப்பதால் நான் மோடிக்கு எதிரானவன் என்று சொல்கிறவர்களை பற்றி எனக்கு  கவலையில்லை. ஆம், இப்போது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதல்ல எ(ந)மது நோக்கம், திராவிஷத்தால் தரம் தாழ்ந்துபோன தமிழகத்தை, தலை நிமிர செய்ய முடியாவிட்டாலும், தரம் குறைந்த நிலையை மாற்ற என்னால் முடியாது, ஆனால் அண்னாமலையால் முடியும் என்று நம்புகிறேன். அவர் பின்னால் காலடி எடுத்து வைக்கிறேன்.

அதற்காக அவர் பின்னால் வராத பாஜகவினரை நான் குற்றம் சொல்ல மாட்டேன், அது அவரவர் புரிதல், நம்ம்பிக்கை, தேவை போன்றவற்றை பொறுத்தது. அதனால் அவர்களையும் மதிக்கிறேன். அதே சமயம் எனக்கு சென்ற தேர்தலில், அதிமுகவோடு பாஜக கூட்டு சேர்ந்ததை நான் அண்ணாமலையின் பார்வைக்கு மாறாக ஆதரித்தேன். ஆனால் என் நோக்கம் திமுகவை வீழ்த்தியாக வேண்டும்  என்ற பாதி வெற்றியை பெற்றாலும், மீதி வெற்றியை பெற முடியாமல் போனதிற்கு என் புரிதல் தவறு என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

அப்படியெனில் அண்ணாமலையை 100% ஏற்கிறீர்களா என்றால், என் அப்பா, அம்மா, மனைவி, மகள்கள் என்று அவர்களிடமே எனக்கு 100% உடன்பாடு இல்லை எனும்போது, எப்படி அண்ணாமலையிடம் அது வரும்?  அப்படி நான் இருப்பதாக சொன்னால், நான் அவரிடம் எதிர்பார்க்கும் எனது தேவைக்காக அதை சமரசம் செய்துகொள்கிறேன் என்பதோ அல்லது எனக்கு சுயமாக எந்த புரிதலும் இல்லை என்பதோ அர்த்தமாகிவிடும். 

மோடி ஆட்சி மீது எனக்கு பெரும் சேடிஸ்பேக்‌ஷன் இருக்கிறது என்றாலும், சில விஷயங்களில் முரண்பாடுகள் உண்டு, அதை நான் எப்போதும் சொல்ல தயங்கியதில்லை. அதே சமயம், அவர் சூழலில் நாம் இல்லாததால், அதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம் என்பதையும் ஏற்கிறேன் என்பதால் எதிர்க்கவில்லை. அதுவே தொடரும்..

இது நான் சுத்தமானவன் என்று யாருக்கு நிரூபிக்க எழுதப்பட்ட பதிவு அல்ல, இப்படி ஒரு பார்வையும்.உண்டு என்று நண்பர்களுக்கு புரியவைக்க.

எனவே இங்கே யார் சரி ஒருவருக்கொருவர் சண்டை போடுவதை விட, சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. எனவே நீஙகள் எந்த கட்சியாகவோ, அமைப்பாகவோ இருக்கலாம். அதில் தொடர்வதில் எந்த சிக்கலுமில்ல, நான் இன்றும் பாஜககாரன் தான், மோடி அரசின் ஆதரவாளந்தான். ஆனால் தமிழகற்றிற்கு தேவையான மேம்பட்ட இந்த நோக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். இது சரியாக சென்றால், அடுத்து தொடங்கப்படும் கட்சியில் சேர்ந்து பயணிப்போம்… 

மேலும் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் பொறாமை. என்னைவிட ஒரு அறிவாளியை பார்த்தால், பாராட்டுவதற்கு பதிலாக, பொறாமையே நம்மிட. மேலிடுகிறது. அதற்கு மெக்கல்லெந் கல்வியை போதித்த திராவிஷத்தின் 60 ஆண்டு ஆட்சி காரணம். என்னைவிட அண்ணாமலை 14 வருடம் சிறியவர். நான் பேண்ட் போட்டிருந்தபோது ட்ராயர் போட்டதை பார்த்தவன். ஆனால், அவரின் அறிவும், திறமையும் என்னைவிட அதிகம், நான் செய்ய நினைத்ததை அண்ணாமலை செய்வதால், இன்னும் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால், அவரை தலைவராக ஏற்க எனக்கு எந்த கூச்சமுமில்லை, மாறாக பெருமைபப்டுகிறேன். எனவே அசரின் இந்த இயத்தில் சேர்கிறேன் 

இப்போதுவரை இந்த அமைப்பில் சேர்ந்தவர்கள் 12,39,777. இது விரைவில் 22 லட்சத்தை, ஒரு லட்சியத்தை அடையும் என்று நம்புவதால், வரவேற்கிறேன். அதே சமயம், முதலில் உங்கள் குடும்பத்தி தேவையை பூர்த்தி செய்துவிட்டு, அதற்கு மேல் உள்ள நேரத்தை இந்த பொ(பு)து நலனுக்காக அர்ப்பணியுங்கள். பொது நலன் என்பது சுய நலனை அடைய ஒரு பொதுவான மாற்றுவழியே..

வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன்.. #Indea

— முரு. தெய்வசிகாமணி

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

annamalai bjp tn leader - 2026

தமிழக பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தாம் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தாம் பார்த்து வந்த ஐபிஎஸ் பணியைத் துறந்து, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார் அண்ணாமலை. அதன் பின் தாம் அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். தாம் பாரதப் பிரதமர் மோடி மீது கொண்ட மதிப்பு மற்றும் பற்றின் காரணமாக தாம் பாஜக.வில் இணையப் போவதாகக் கூறினார். 

2020 ஆகஸ்ட் 25 அன்று, தில்லியில் தேசியத் தலைவர்கள் முன்னிலையில், அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் பாஜக.,வில் சேர்ந்த ஒரு வாரத்துக்குள், அவர் பாஜக., தமிழக துணைத் தலைவராக நியமிக்கப் பட்டார். 

ஜூலை 2021ல் அவர் பாஜக.,வின் தமிழக மாநிலத் தலைவராக நியமிக்கப் பட்டார். அதன் பின் பாஜக.,வில் அவரது அரசியல் பயணம் உச்சத்தை அடைந்தது. 

ஜூலை 2023 முதல் பிப்ரவரி 2024 வரை அவர் தமிழகம் முழுதும் மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாத யாத்திரை அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. அவரது யாத்திரைகளில் பாரதப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பங்கேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தனர். 

 2024ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

ஏப்ரல் 2025ல் அடுத்து வரப் போகும் தேர்தல்களை முன்னிட்டு, அவர் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் தேசியப் பொதுக்குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டார். 

அதன் பின் அடுத்த ஒரு வருடத்தில் பாஜக.,வில் இருந்து வெளியேறி, தாம் ஏற்கெனவே தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்த ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்புக்கு மீண்டும் புத்துயிரூட்டி, அதன் வழியே தனது தனிப்பட்ட அரசியல் பயணம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்.

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

இந்நிலையில் அவரது விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசியலில் முக்கிய நிகழ்வாக ஆனது. சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலை வீடியோவில் தோன்றிய அவர், தனது ராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கியதோடு, ‘வளர்ந்த பாரதம்’ கனவோடு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாகவும் பிரகடனம் செய்தார்.

மதியம் 12 மணிக்கு சமூகத் தளப் பக்கத்தின் வாயிலாக தமது முடிவினை தெரிவிக்கப் போவதாகக் கூறி அவர் சமூகத் தளத்தில் பேசியவை…

“நான் டிசம்பர் 4, 2025 அன்றே பாஜக தேசியத் தலைமைக்குச் சென்று கட்சியிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்துவிட்டேன். இந்த முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் 2025லேயே இதை மூத்த தலைவர்களிடம் தெரிவித்து விட்டேன். அவர்களை மன ரீதியாகத் தயார் படுத்தினேன். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமை தேர்தல் முடியும் வரை பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கோரியது, அதை மதித்து எனது கடமையை நிறைவேற்றிய பின்னரே இப்போது விலகியுள்ளேன்… என்றார் அண்ணாமலை.

“என்னுடைய கருத்துகளுக்கு கட்சி தலைமை செவிசாய்க்கவில்லை. எனவே எதிர்காலத்தை நோக்கி புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்ட அண்ணாமலை, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படப் போவதாகக் கூறினார்.

தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப கால நினைவுகளைப் பகிர்ந்த அண்ணாமலை, 2020-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை அவரது அரசியல் கட்சியில் இணைய அழைத்ததை நினைவுகூர்ந்தார். “ரஜினி சார் மீது மிகுந்த மரியாதை இருந்தபோதிலும், அப்போது சில காரணங்களால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, தமிழக மக்களுக்கான பிராந்திய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இதற்கென wearetheleaders.org என்ற இணையதளத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். “வளர்ந்த பாரதத்தை நோக்கி இளைஞர்களும் பொதுமக்களும் இணையலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்: இயக்கத்தில் இணையும் அனைவருக்கும் அரசியல், சமூகப் பயிற்சி அளிக்கப்படும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்படும்.

வாரிசு அரசியல் ஒழிப்பு: தகுதி அடிப்படையிலான அரசியலை ஊக்குவிக்கும். பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

நிரந்தரப் பதவிகள் இல்லை: “நிரந்தர தலைவர், நிரந்தர எம்எல்ஏ, எம்பி என்ற கலாச்சாரம் இருக்காது. தகுதியானவர்கள் முன்னிறுத்தப்படுவார்கள்” என்று அண்ணாமலை உறுதியளித்தார்.

அடுத்த தேர்தலில் முழு பலம்: வரும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

அண்ணாமலை தமிழக அரசியலில் தனிநபர் வழிபாட்டு அரசியலை மாற்றி, கூட்டுத் தலைமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை கொண்டு வருவதாக வலியுறுத்தினார். அவரது இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

usilampatti murugan temle kumbabishekam - 2026

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிக்கள் மேற்கொள்ளப்பட்டு சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள், மூலஸ்தானம் கோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு பூஜைகள் செய்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இதில், கருவறையில் உள்ள முருகனுக்கு பால், தயிர்,இளநீர்,சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் திருமுருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இதில் , உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். தொடர்ந்து , தனியார் திருமண மண்டபத்தில் ஏராளமான பொது மக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

va ve su iyer mandapam seranmahadevi - 2026

— ராமலிங்கம் கிருஷ்ணா —

இந்திய விடுதலைக்காக முதன்மையாக பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். வேங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881-ல் பிறந்தார். இவர் தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

வ.வே. சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அந்த வயதிலே அத்தை மகள் பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார், பின்னர் எம்.ஏ. தேர்ச்சி, சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907-ல் வ.வே.சு. ரங்கூன் வழி லண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரர் ஆக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

லண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களும் அப்பயிற்சியில் இனைந்தனர்.

1909-ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு. வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர். *பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9-ல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். சங்கேத பாஷையில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.

கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தனர்.

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப் பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920-ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சியில் உள்ள தனது வரகனேரி இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920-ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவு கொள்ள நினைத்தது, தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜத்துவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.

மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்து உட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். “பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்.”

தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம், பாபநாசம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார்.

தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு “ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா” என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4-ல் அணைந்தது.

வாழ்க நீர் எம்மான்….

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

perunkulam temple thiruvlalluvar - 2026

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது…

வள்ளுவரை தெய்வப் புலவர் என்றே அழைத்தது நம் தமிழுலகு. உலகின் மற்ற ஒற்றை நபரால் தோன்றிய மதங்கள் பரவுதற்கு முன்பு வியாபித்திருந்த சனாதன தர்மத்தின் கோட்பாட்டை தம் குறட்பாக்களின் தொகுப்பில் அளித்த யோக ரிஷி திருவள்ளுவர். எவ்வித தனித்த அடையாளங்களும் தேவைப்படாத அந்நாளில் பொத்தாம் பொதுவாக வழக்கில் இருந்த தர்மத்தை அவர் சொல்லியிருக்கிறார் என்பதற்காக, அவரது சனாதன தர்ம நெறியை அவரிடம் இருந்து பறித்தல் – தமிழ்ச் சமுதாயத்துக்கே செய்யும் அப்பட்டமான துரோகம், தீங்கு.

நண்பர் குழாத்துடன் அண்மையில் பெருங்குளம் சென்றிருந்த போது எடுத்த படங்கள், கணினி சேமிப்பில் இருந்து திடீரெனத் தலைகாட்டின. அவற்றில் இந்தத் திருவள்ளுவர் படமும் ஒன்று. பெருங்குளம் சிவாலயத்தில் இது போல் ஔவையார், கம்பர், நக்கீரர் உள்ளிட்ட சங்கப் புலவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவை கால ஓட்டத்தில் சிதிலமுற்று எதிரே உள்ள குளத்தில் போடப்பட்டதாகவும் செவிவழியாக தகவல் நிலவி வருகிறது.

இப்போது திருவள்ளுவர் என்று அடையாளப்படுத்தப்படும் விக்ரகம் மட்டும் அம்மன் சந்நிதியில் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அறிவுச் சுடராம் வள்ளுவம் தந்த தெய்வப் புலவருக்கு அகல் சுடரை ஏற்றி வெளிச்சமிட்டு வழிபடுகிறார்கள் அன்பர்கள். வள்ளுவர் எதிரே விளக்கு ஏற்ற வசதியாக வைக்கப்பட்டுள்ள விளக்குத் தட்டு இதைச் சொல்லும்.

இவ்வாலயத்தில் அல்லது இத்தலத்தில் திருவள்ளுவர் தம் திருக்குறளை அரங்கேற்றினார் (அல்லது ஊரார் முன் தம் வாய்மொழியாகச் சொன்னார் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்) என்கிற குறிப்பையும் செவிவழியாக வழிவழியாகச் சொல்லி வருகிறார்கள்.

இனி… இந்தக் கோயிலைப் பற்றியும், இங்கே தெய்வப் புலவர்களான நம் தமிழ்ப் புலவர்களுக்கு சிலைகள் இருந்தமை குறித்தும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள் தம் ‘என் சரித்திரம்’ தொகுப்பில் குறிப்பிட்டுள்ளதை நண்பர்களின் பார்வைக்குத் தருகிறேன். பெருங்குளம் எனும் தலைப்பில் அவர் எழுதியவை இங்கே….
***

பெருங்குளம்‌

அவரிடம்‌ விடை பெற்றுக்கொண்டு பெருங்குளத்தை அடைந்து அங்குள்ள செங்கோல்‌ மடத்துக்குப்‌ போய்‌ மடாதிபதியைக்‌ கண்டேன்‌. நான்‌ போனபொழுது அவர்‌ வீணை வாசித்துக்‌ கொண்டிருந்தார்‌. மிக்க அன்போடு பேசி என்னை உபசரித்தார்‌.

** தங்களுக்கு யமகந்திரிபுகளில்‌ நல்ல தேர்ச்சியுண்டு என்று கேட்டிருக்கிறோம்‌. சிலவற்றைச்‌ சொல்ல வேண்டும்‌ ?” என்றார்‌. எல்லாரையும்‌ வசப்படுத்தும்‌ கலையாகிய சங்கீதத்திலே இன்பம்‌ காணும்‌ அவர்‌ மிகவும்‌ சிரமப்பட்டுப்‌ பொருள்‌ தெரிதற்குரிய யமகந்திரிபுகளிலும்‌ இன்பங்‌ காணும்‌இயல்பினராக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அவர்‌
விரும்பிய பொருள்‌ என்னிடம்‌ நிரம்ப இருந்தது.

மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளையவர்கள்‌ இயற்றிய திரிபுயமக அந்தாதிகளிலிருந்து பல பாடல்களைச்‌ சொன்னேன்‌. 3 எழுத்து முதல்‌ 13 எழுத்துக்கள்‌ வரையில்‌ யமகமாக அமைந்த செய்யுட்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ சொன்னேன்‌. கேட்டுக்‌ கேட்டு அவர்‌ மகிழ்ச்சி அடைந்‌தார்‌. நான்‌ வந்த காரியத்தை அறிந்து தம்மிடமுள்ள ஏடுகளெல்லாவற்றையும்‌ நான்‌ பார்க்கும்படி செய்தார்‌. பல பிரபந்தங்களும்‌ புராணங்களும்‌ அச்சிட்ட நூல்களும்‌ இருந்தன. குறுந்தொகை மூலம்‌ ஒரு பிரதி இருந்தது. அன்று முழுவதும்‌ அங்கே தங்கி அவருடன்‌ சல்லாபம்‌ செய்து கொண்டிருந்தேன்‌.

அவ்வூரிலுள்ள ஆலயத்திற்கு என்னை அழைத்துச்‌ சென்று அதன்‌ சிறப்பை அவர்‌ எடுத்துரைத்தார்‌. அங்கே உக்கிரபாண்டியர்‌ அரசாட்சி செய்தாரென்றும்‌, அவராற்‌ பூசிக்கப்‌ பெற்றமையின்‌ அவ்‌வூர்ச்‌ சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர்‌ என்னும்‌ திருநாமம்‌ வழங்குகிறதென்றும்‌ அறிந்தேன்‌. அந்தப்‌ பாண்டியர்‌ முன்னிலையில்‌ நக்கீரனார்‌ முதலிய சங்கப்‌
புலவர்கள்‌ கூடிய இடத்தில்‌ திருக்குறள்‌ அரங்கேற்றம்‌ நடைபெற்றதென்றும்‌ அங்ஙனம்‌ நடந்த இடம்‌ அதுவேயென்றும்‌ கூறி, அதற்கு அடையாளமாகச்‌ சிவாலயத்தில்‌ 49 புலவர்களின்‌ வடிவமும்‌ உக்கிர பாண்டியர்‌ வடிவமும்‌ அமைந்துள்ள இடத்தை அவர்‌ காட்டினார்‌.

“இங்கே அவர்கள்‌ இருந்தார்களோ இல்லையோ, தமிழ்ப்‌ புலவர்களைத்‌ தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப்‌ போற்றும்‌ வழக்கம்‌ இந்த நாட்டில்‌ இருப்பதை நாம்‌ பாராட்டவேண்டும்‌? என்று நான்‌ எண்ணினேன்‌. 

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

janagai mariamman temple ther - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்

சுமார் 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம் எல் ஏ வடம் பிடித்து துவக்கி வைத்தார் சின்ன கடைவீதி பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேல ரத வீதி வடக்கு ரத வீதி கறிக்கடை சந்து மூலக்கடை பகுதி முத்துக்குமரன் நகை மாளிகை ஆகிய பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்றது

தேரோட்டத்தில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர் தேரோட்டம் நடைபெற்ற இடங்களில் பொது மக்களுக்கு நீர்மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது தேரோட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் சேத்தாலி வேஷம் போட்டும் ஊர்வலமாக வந்தனர்

சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மூலக்கடை பகுதியில் வாடிப்பட்டி தாலுகா தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் வழங்கினார்கள்

தேரோட்ட நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மருது பாண்டியன் வள்ளி மயில் கொத்தாலம் செந்தில்வேல் ரேகா ராமச்சந்திரன் ஜெனகை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி, வசந்த், கவிதா , பெருமாள் உள்ளிட்டோர் சமயநல்லூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் கண்காணிப்பாளர், சோழவந்தான், காடுபட்டி உதவிக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேரை வடம் பிடித்துச் சென்றனர்.

தேரோட்ட நிகழ்ச்சியை மண்டக படிதாரர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு மற்றும் அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

annamalai bjp tn leader - 2026

சி எம். மகாதேவன்

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. அவர் தலைவர் பதவியில் இருந்து விலகியதில் இருந்தே இந்த வதந்தி ரெக்கை கட்டி பறந்து கொண்டு தான் இருக்கிறது. சென்ற டிசம்பரில் கூட கட்சிக்கு பெயர் வைத்து, கொடியெல்லாம் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அண்ணாமலை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் 2 நாளில் பேசுவதாக சொன்னது மேலும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. அதுவும் பாஜக கொடி இல்லாத காரில் வந்தார் என்றெல்லாம் செய்திகளை பார்க்கும் பொழுது சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிறது.

அண்ணாமலை எதற்காக தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்? என்ற கேள்வியில் இருந்து தான் பதில் தேட வேண்டும்.

அண்ணாமலை மீண்டும் மாநிலத்தலைவராக வேண்டும் என்பது தான் ஒவ்வொரு பாஜக தொண்டனின் விருப்பம். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூட அண்ணாமலை மீண்டும் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த நடுநிலை மீடியா ஆட்கள் கூட அண்ணாமலை வந்தால் தான் பாஜகவுக்கு எதிர்காலம் என்று வெளிப்படையாக பேசுகிறார்கள்.

அண்ணாமலைக்கும் மீண்டும் தலைமை பதவியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவர் கட்சி தலைமையிடம் சில உத்திரவாதங்களை கேட்கிறார். அதில் மிக முக்கியமானது எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அண்ணாமலை எதிர்பார்க்கிறார்.

தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறிவிட்டது. விஜயின் வெற்றி முற்றிலுமாக எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது. இன்று திமுக தனிமைப்பட்டு கிடக்கிறது. பதவி இல்லாமல் அதிகாரம் இல்லாமல் திமுகவால் 5 ஆண்டுகளை கடக்க முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் திமுக கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று இப்பொழுதே பேசப்படுகிறது.

பாஜகவின் கொள்கை எதிரி + அரசியல் எதிரி இரண்டுமே திமுக தான். அப்படிப்பட்ட எதிரியுடன் கூட்டணி வைப்பதை அண்ணாமலை ஒருபோதும் விரும்பமாட்டார். அவரது தலைமையில் அப்படி ஒரு இணைவு நடந்தால் அண்ணாமலையின் நம்பகத்தன்மை முற்றிலுமாக சிதைந்துவிடும். ஏற்கனவே அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று கட்சி தலைமை முயற்சித்த பொழுதே அதற்கு தடையாக இருந்தவர் அண்ணாமலை. கடைசியில் அவரது தலைமை பதவியை விட்டுக்கொடுத்து தனது நம்பகத்தன்மையை காப்பாற்றிக்கொண்டார். ஆனாலும் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் அண்ணாமலைக்கு ஏற்பட்டது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று சொல்லலாம். ஆனால் அண்ணாமலை முன்வைக்கும் மாற்று அரசியலுக்கு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது ஒத்துவராது.

அண்ணாமலையின் நோக்கம் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும், பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எப்போதும் பாஜக ஆட்சி வர வாய்ப்பே இல்லை. எனவே தோல்வியே கிடைத்தாலும் களத்தில் போராட நான் தயாராக இருக்கிறேன். நாம் காத்திருப்போம் என்ற அண்ணாமலையின் வழி கட்சி மேலிடத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் அவர் ஒதுங்கி விட்டார்.

இப்போது மீண்டும் தலைவராகி விட்ட இடத்தில இருந்து அவர் பணிகளை துவக்கி கட்சியை ஆக்டிவாக கொண்டு செல்லும் போது நாளை திமுகவுடன் கூட்டணி என்று டெல்லி முடிவு செய்தால் அதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மீண்டும் தலைவராகிறேன், ஆனால் என் வழியில் தான் கட்சி நடக்கும். எந்த தலையீடும் இருக்கக்கூடாது, அதற்கு ஒப்புக்கொண்டால் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் அண்ணாமலையின் ஒரே கண்டிஷனாக இருக்கும்.

ஆனால் டெல்லி தலைமை மாற்றி யோசிக்கிறது. திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பாஜக தயங்கினாலும், திமுகவிடம் இருக்கும் 22 எம்பிக்கள் எண்ணிக்கை அனைத்தையும் மறக்கடிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வருடம் இருக்கும் காலகட்டத்தில் 22 எம்பிக்கள் ஆதரவு கிடைக்கிறது என்பது பாஜகவுக்கு ஜாக்பாட் தான். அதுவும் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையும் குறைகிறது என்பதையும் இங்கே சேர்த்து கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே பாராளுமன்ற தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு வரும் ஆதரவை வாங்கிக்கொள்வோம் என்று நிலைப்பாட்டையும் பாஜக எடுக்கலாம். அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது தான் என்னுடைய பார்வை.

ஆனால் என்னை பொறுத்தவரை காங்கிரசும் பாஜகவும் எப்படி சேர முடியாதோ, கம்யுனிஸ்டும் பாஜகவும் எப்படி சேர முடியாதோ, அகிலேஷ்யாதவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாதோ அதே போல் தான் திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்க முடியாது.

திமுக முன்னெடுத்த பாஜக எதிர்ப்பு என்பது மிக கடுமையானது. நுணுக்கமாக திட்டமிடப்பட்டது. காங்கிரசை காப்பாற்ற, திமுக மீண்டும் அதிகாரத்திற்கு வர மிக தெளிவாக பாஜகவை வில்லனாக கட்டமைத்து வெற்றி பெற்றது திமுக. இன்று வரை அந்த எதிர்ப்பு மனநிலையை முழுமையாக உடைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது பாஜக. அப்படிப்பட்ட எதிரியுடன் கூட்டணி வைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். மாற்று அரசியலுக்காக பாஜக பக்கம் வந்த தொண்டர்களே விரும்ப மாட்டார்கள்.

ஏற்கனவே இருந்த கூட்டணி தானே என்று சால்ஜாப்பு சொல்லலாம். ஆனால் கருணாநிதி காலத்து திமுக வேறு, இன்றைக்கு ஸ்டாலின் காலத்து திமுக வேறு. இன்றைய திமுக தேசவிரோத பிரிவினை பாதையில் நீண்ட தூரம் சென்று விட்டது. இந்து மத எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, பிரிவினைவாதம் இவைதான் இன்றைய திமுக. இதிலிருந்து திமுக தன்னை மாற்றிக்கொள்ளுமா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை.

ஒருவேளை இந்த கூட்டணி அமைத்தால் திமுக சர்வைவ் ஆகிவிடும். ஆனால் பாஜகவால் சர்வைவ் ஆகமுடியாது என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

ஏனென்றால் திமுக முன்னெடுத்த அதே பாஜக எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு அரசியலை விஜய் செய்வார். இன்றைய சமூக வலைதள யுகத்தில் எந்த கேள்விக்கும் பாஜகவால் பதில் சொல்லவே முடியாது. இது ஒரு சுழல். மீளவே முடியாத ஒரு சுழல்.

எனவே திமுக கூட்டணி என்பது ஒரு தற்கொலை முயற்சி. அதைத்தான் அண்ணாமலை அவர்களும் சொல்கிறார்.

இன்று அண்ணாமலை முன் இருப்பதே இரண்டே ஆப்ஷன்கள்.

ஒன்று கட்சி தலைமை சொல்வதை கேட்டு நடப்பது. ஒருவேளை நாளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அவருக்கான பதவி கிடைக்கும். டெல்லி அரசியலை செய்யலாம்.

இல்லையென்றால் தனியாக போராடலாம். சமரசங்கள் செய்து கொள்ளாத தலைவனாக அவர் முன்வைத்த மாற்று அரசியலை நோக்கி பயணத்தை தொடங்கலாம்.

ஆனால் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து 1 மாதம் கூட ஆகாத நிலையில் ஒரு கட்சியை ஆரம்பிப்பது அண்ணாமலைக்கு எந்த வகையிலும் பலன் தராது என்பது என்னுடைய பார்வை.

அடுத்த தேர்தலுக்கு 3 வருடங்கள் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் 5 வருடம். அதுவரை சர்வைவ் ஆக வேண்டும். இங்கிருக்கும் எல்லா கட்சியையும் எதிர்க்க வேண்டும். டெல்லி ஆசியும் இல்லாமல், அதிகாரமும் இல்லாமல் அரசியல் செய்வது சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் அண்ணாமலைக்கும் தெரியும்.

எனவே தான் அண்ணாமலை தனிக்கட்சி என்ற முடிவுக்கு போகமாட்டார் , அவர் இப்போதும் கட்சி தலைமையை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று தான் நான் நம்புகிறேன். 2031 வரை எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று டெல்லி தலைமை முடிவெடுத்தால் அண்ணாமலை 2.0 வெற்றிகரமாக தொடங்கும்.

மோடி மற்றும் அமித்ஷா இருவரும் அண்ணாமலையின் முடிவை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

பொறுத்திருந்து பாப்போம்.