இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
உலக அளவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி கர்கடக மாத பூஜை வழிபாடு நடத்த வரும் ஜூலை 16ம் தேதி திறக்கப்படும்.
ஆடி கர்கிடக மாத சடங்குகளுக்காக சபரிமலை ஸ்ரீ ஐய்யப்ப சுவாமி கோயில் ஜூலை 16 அன்று மாலை 5:00 மணிக்கு, தந்த்ரி கண்டரரு மகேஷ் மோகனார் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் இ.டி. கருவறையைத் திறந்து விளக்கேற்றுவார். அதைத் தொடர்ந்து, 18 புனிதப் படிகள் கீழே உள்ள ஆழியில் புனித அக்னி ஏற்றப்படும். தொடர்ந்து, மாளிகப்புரம் மேல்சாந்தி எம்.ஜி.மனு நம்பூதிரி தலைமையில் மாளிகப்புரம் சன்னதி திறக்கப்படும்.
கர்கிடக மாதத்தின் முதல் நாளான ஜூலை 17 அன்று, காலை 5:00 மணிக்கு கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்படும். கர்கிடக மாதத்தின் முதல் நாளிலிருந்து, ஒவ்வொரு நாளும் சந்தியா தீபாராதனைக்குப் பிறகு 18 படிகளில் படிபூஜை நடத்தப்படும். கர்கிடக மாத சடங்குகள் நிறைவடைந்த பிறகு, சபரிமலை கோயில் ஜூலை 21 அன்று இரவு 10:00 மணிக்கு மூடப்படும்.
ஜூலை மாதத்திற்கான மெய்நிகர் முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் தரிசன நேரங்களை www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
யாத்ரீகர்களுக்கு இலவச அன்னதானம், மலிவு விலை தங்குமிடங்கள் மற்றும் சாமான்கள் வைக்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
சபரிமலை யாத்திரையைத் தொடங்குவதற்கு முன், பக்தர்கள் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நடத்தப்படும் பம்பா மற்றும் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள அன்னதான மண்டப மையங்களில் இலவச உணவைப் பெற்றுக்கொள்ளலாம். யாத்ரீகர்கள் வாரியத்தால் வழங்கப்படும் தங்குமிட வசதிகளையும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பம்பாவில் உள்ள சாமான்கள் வைக்கும் மையங்களில், பக்தர்கள் யாத்திரையை மேற்கொள்வதற்கு முன் குறைந்த கட்டணத்தில் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக ஒப்படைக்கலாம்.
சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.
சாத்தூர் அருகே மனைவி குத்தியதில் கணவர் உயிர் இழந்தார்; நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் கணவர் உயிரிழந்தது சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தில் ஆர்.சி தெரு சேர்ந்த சாமி என்பவரது மகன் மணி (வயது 34) . இவர் அருகிலுள்ள பகுதியில் தனியார் அட்டைக் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். மணி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள அப்பனேரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் திவ்யபாரதி (24) ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருவரும் சலராபுரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து 8 ஆண்டுகளாக இருவருக்கும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் திவ்யபாரதிக்கு வேறு ஒருவருடன் தெடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் மணி தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போலே இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதில் திவ்யபாரதி தள்ளிவிட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமபலம் குறித்து தகவலறிந்த சாந்தூர் தாலுகா போலீசார் சம்பல இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதணைக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மணியின் மனைவி திவ்யபாரதியை நடத்திய குறுக்கு விசாராணையில் திவ்யபாரதி சண்டையின் போது மணியை பாத்ரூமில் தள்ளி விட்டுவிட்டு கத்தியை எடுத்து மணியின் தொடையில் குத்தியதும் அதிலிருந்து வெகு நேரம் இரத்தம் வெளியேறியதால் மணி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சாத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜ் தலைமயிலான போலீசார் திவ்யபாரதியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆனி ~ 24 { 8.7.2026 } புதன் கிழமை வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் } அயனம் ~ உத்தராயணம் ருது ~ க்ரீஷ்ம ருது. மாதம் ~ ஆனி மாதம் { மிதுன மாஸம் } பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி ~ காலை 8.05 AM வரை அஷ்டமி பின் நவமி. நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் } நக்ஷத்திரம் ~ பகல் 12.25 PM வரை ரேவதி பின் அச்வினி. யோகம் ~ அதிகண்டம். கரணம் ~ கௌலவம் / தைதுளை. அமிர்தாதியோகம் ~ அசுபயோகம். நல்லநேரம் ~ காலை 9.00 AM ~ 10.00 AM & மாலை 2.00 PM ~ 3.00 PM. ராகுகாலம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM. எமகண்டம் ~ காலை 7.30 AM ~ 9.00 AM. குளிகை ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON. நல்ல நேரம் ~ 9.00 to 10.30 AM and 2.00 to 3.00 PM சூரியஉதயம் ~ காலை 5.59 AM. சந்திராஷ்டமம் ~ பகல் 12.24 PM வரை ஸிம்ஹம் பின் கன்னி. சூலம் ~ வடக்கு. பரிகாரம் ~ பால். ஸ்ராத்ததிதி ~ நவமி. இன்று ~
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
thiruvalluvar deivapulavar
இன்றைய (8-7-2026) ராசிபலன்கள்
மேஷம்
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். பேச்சுகளில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
அஸ்வினி : கவனம் வேண்டும். பரணி : சிந்தித்து செயல்படவும். கிருத்திகை : பொறுமை வேண்டும்.
ரிஷபம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். ஆன்மீக குருக்களின் ஆலோசனைகள் தெளிவினை உருவாக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கிருத்திகை : ஆதரவான நாள். ரோகிணி : தெளிவு உண்டாகும். மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
மிதுனம்
எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் நற்பெயர்கள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
மிருகசீரிஷம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும். திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும். புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
கடகம்
வரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு செயல்பாடுகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். பணிகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தந்தை வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். குருமார்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலம்
உத்திரம் : ஏற்ற இறக்கம் உண்டாகும். அஸ்தம் : மாற்றம் உண்டாகும். சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
துலாம்
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை செய்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : ஆதரவு கிடைக்கும். சுவாதி : ஆதாயகரமான நாள். விசாகம் : மாற்றங்கள் காணப்படும்.
விருச்சிகம்
உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். சிந்தனைபோக்கில் சில மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதமும் வேகமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அனுஷம் : சிக்கல்கள் குறையும். கேட்டை : வேகம் உண்டாகும்.
தனுசு
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மூலம் : ஆதரவான நாள். பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
மகரம்
ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
உத்திராடம் : முன்னேற்றங்கள் ஏற்படும். திருவோணம் : உதவிகள் கிடைக்கும். அவிட்டம் : அதிகாரங்கள் மேம்படும்.
கும்பம்
சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அவிட்டம் : மாற்றம் ஏற்படும். சதயம் : கருத்துக்களில் கவனம். பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
மீனம்
மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும் ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சினைகள் குறையும். வர்த்தக சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலம்
பூரட்டாதி : மேன்மை உண்டாகும். உத்திரட்டாதி : ஆதரவான நாள். ரேவதி : லாபகரமான நாள்.
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை. மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை. கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…
பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து! உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!! விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உறவுகள் வழியில் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு பணிகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்குப் பணிகளில் இழுபறியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். சர்வதேச வணிகத்தில் முயற்சியால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் கைகூடும். பூசம் : மாற்றங்கள் உருவாகும். ஆயில்யம் : தேடல் பிறக்கும்.
சிம்மம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவரிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : ஆதாயம் ஏற்படும். பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திரம் : வேறுபாடுகள் உண்டாகும்.
கன்னி
செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உத்தியோகம் நிமித்தமான பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள். அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும். சித்திரை : மேன்மை ஏற்படும்.
துலாம்
வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி இன்னல்கள் குறையும். பணி பொறுப்புகளால் நேரம் தவறி உண்பீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். சமூக பணிகளில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : இன்னல்கள் குறையும். சுவாதி : நிதானம் வேண்டும். விசாகம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
விருச்சிகம்
புது விதமான ஆசைகள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். சுப காரியங்களை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்த தடைகள் மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும். பூராடம் : வாய்ப்புகள் ஏற்படும். உத்திராடம் : தடைகள் மறையும்.
மகரம்
குறுகிய பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வங்கி பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : தீர்வுகள் கிடைக்கும். திருவோணம் : யுத்திகள் கைக்கூடும். அவிட்டம் : சாதகமான நாள்.
கும்பம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் குறையும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத் துறையில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
திறமைகளை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் அனுபவம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள். ரேவதி : அனுபவம் பிறக்கும்.
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருப்பாற்கடல் திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள். முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய். நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம். நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும், எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும், அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும், தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்… தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!
உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026 ரவுண்ட் 16 முதல் நாலு ஆட்டங்கள்
பிரேசில் அதிர்ச்சித் தோல்வி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது. முதல் கனடா, மொராக்கோ இடையே ஹூஸ்டனில் நடைபெற்றது. இதில் மொராக்கோ அணி கனடா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மொராக்கொ அணியின் ஔனாதி 50 நிமிடத்திலும் 82 ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 98ஆவது நிமிடத்தில் ரஹ்மி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் மொராக்கோ காலிறுதிக்கு முன்னேறியது.
அதே தினம் பிலடெல்பியாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாராகுவே அணியும் ஃபிரான்சு அணியும் மோதின. ஃபிரான்சு அணியின் முன்னனி ஆட்டக்காரர் மபாபே யொ நிமிடத்தில் பெனால்டி கிக் மூலமாக அந்த அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் ஃபிரான்சு அணி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
மூன்றாவது ஆட்டம் கிழக்கு ரூதர்ஃபோர்டு, மெட்லிஃபெ மைதானத்தில், ஜூலை 5ஆம் நாள், பிரேசில் நார்வே அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பிரேசில் அணியின் நெய்மர் 100ஆவது நிமிடத்தில் ஒரு பெனால்டி கிக் மூலம் ஒரு கோல் அடித்தார். ஆனால் நார்வே அணி 70ஆவது நிமிடத்திலும், 90ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்திருந்ததால் ஆட்டத்தில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நெய்மர் கண்ணீருடன் தான் கால்பந்து ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதே நாள் மெக்சிகோவில் நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடின. இங்கிலாந்து அணி தோற்கவேண்டும் என்பதற்காக முதல் நாள் இரவு அந்த அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியில் மெக்சிகோ அணியின் ரசிகர்கள் அதிக சத்தம் எழுப்பும் வகையில் ஆட்டம், பாட்டம் என ரகளை செய்தனர். ஆட்டத்தின்போதும் மெக்சிகோ அணி இங்கிலாந்து அணி வீரர்களை தாக்கும் வகையில் ஆடினர். இருந்தபோதிலும் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.
இங்கிலாந்து இந்திய அணிகளில் டி-20 தொடர் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. இதற்கு முன்னர் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி-20 ஆட்டங்கள் ஆடியது. இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் இரண்டு ஆட்டங்களிலும் சரியாக விளையாடவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை ஆடவைக்கவேண்டும் என கருத்து எழுந்தது.
முதல் ஆட்டம் இங்கிலாந்தில் செஸ்டர்-லே ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. டாஸ் வென்று, இந்திய அணி முதில் மட்டையாடியது. தொடக்கவீரர் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் பூஜ்யம் ரன்னுக்கு ரன் அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா 59 ரன்னும் (24 பந்துகள்), ஷ்ரேயாஸ் ஐயர் 68 ரன்னும் (47 பந்துகள்) ஷிவம் துபே 42 ரன்னும் (ஆட்டமிழகாமல், 21 பந்துகளில்) அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. இதன் பின்னர் ஏற்பட்ட மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
இரண்டாவது ஆட்டம், மான்செஸ்டரில் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றது. பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடியது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அவர் 10 பந்துகளில் 14 ரன் (2 சிக்சர்கள்) அடித்து ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் 43 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (22 பந்துகளில் 37 ரன்), இஷான் கிஷன் (40 பந்துகளில் 49 ரன்), திலக் வர்மா (11 பந்துகளில் 24 ரன்) நன்றாக ஆடினர். ஷிவம் துபே (5 ரன்) திலக் வர்மாவிற்கு முன்னதாக களமிறங்கினார்; ஆனால் சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 190 ரன் அடித்தது.
இரண்டாவதாகக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி மட்டையாளர்கள் பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் ரன் எடுக்காமல் முதல் ஓவரில் அர்ஷதீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஹாரி ப்ரூக் (39 ரன்), ஜேகப் பெதல் (76 ரன்), டாம் பேண்டன் (39 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 191 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார். அதற்கடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் மற்றொரு சிக்சர் அடித்தார். நான் காவது பந்தில் ஒரு ஃபோர் அடிக்கப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. இந்த ஓவரில் மொத்தம் 29 ரன்கள் அடிக்கப்பட்டது.
ஐந்து ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் மூன்றாவது ஆட்டம் நாட்டிங்ஹாமில் நாளை நடைபெறுகிறது.
श्री: श्री मते रामानुजाय नम: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ~ 22 ( 6.7.2026 ) திங்கள் கிழமை வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் } அயனம் ~ உத்தராயணம் ருது ~ க்ரீஷ்ம ருது. மாதம்~ ஆனி மாஸம் { மிதுன மாஸம் } பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி ~ காலை 10.25 AM வரை ஷஷ்டி பின் ஸப்தமி தொடர்கிறது. நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை } நட்சத்திரம் ~ பகல் 1.22 PM வரை பூரட்டாதி பின் உத்தரட்டாதி. யோகம் ~ ஸௌபாக்கியம். கரணம் ~ வணிஜை / பத்திரை. அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம். ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM. எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM. சூரியஉதயம் ~ காலை 5.58. சந்திராஷ்டமம் ~ காலை 7.22 AM வரை கடகம் பின் ஸிம்ஹம். சூலம் ~ கிழக்கு. பரிகாரம் ~ தயிர். ஸ்ராத்ததிதி ~ஸப்தமி. இன்று ~
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (06-7-2026) ராசி பலன்கள்
மேஷம்
கனிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை குறைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள். ரோகிணி : மேன்மை ஏற்படும். மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கைகூடும்.
மிதுனம்
விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். தூரதேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து செயல்படவும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
புனர்பூசம் : விவேகம் வேண்டும். பூசம் : ஆதரவுகள் கிடைக்கும். ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்
கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். பழமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பயணத்திற்கு தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. விவசாய பணிகளில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். பணிகளில் முன்கோபம் இன்றி செயல்படவும். பொழுது போக்கான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : ஆர்வம் ஏற்படும். பூரம் : விவேகம் வேண்டும். உத்திரம் : விரயம் உண்டாகும்.
கன்னி
நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும். அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும். சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
துலாம்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் வருகைகள் உண்டாகும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். பயணங்கள் மூலம் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
சித்திரை : பேச்சுக்களில் கவனம். சுவாதி : அனுபவமும் ஏற்படும். விசாகம் : இன்னல்கள் குறையும்.
விருச்சிகம்
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகள் மீதான ஆர்வமும் விரையமும் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : புதுமையான நாள். அனுஷம் : எண்ணம் மேம்படும். கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
தனுசு
கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். ஆபரண சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். பணிகளில் அனுபவம் வெளிப்படும். வீடு விற்பனையில் இருந்த தாமதம் குறையும். வரவு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பொதுமக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
மூலம் : ஆர்வம் உண்டாகும். பூராடம் : தாமதம் குறையும். உத்திராடம் : ஆதரவான நாள்.
மகரம்
வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணி புரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புத்திரர்கள் வகையில் ஆதாயமுண்டாகும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
உத்திராடம் : மேன்மை ஏற்படும். திருவோணம் : மதிப்புகள் மேம்படும். அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.
கும்பம்
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில அறிமுகங்கள் மூலம் புதுமையான சூழல் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும். சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூரட்டாதி : லாபம் உண்டாகும்.
மீனம்
உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!
மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து மக்கள் எச்சரித்த போது, அதுலாம் ஒண்ணும் ஆகாது குடோன்ல அப்படிதான் அனுப்புனாங்க என அலட்சியமாகச் சொல்லி நடந்து கொண்ட ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்களை ஏற்றியபடி லாரி ஒன்று சென்றுள்ளது. அதில் வைக்கப்பட்ட சிலிண்டர் ஒன்றில் கேஸ் லீக் ஆகி வெளியேறியுள்ளது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வாகனத்தை ஓட்டிசென்ற ஓட்டுனரிடம் இது குறித்து கூறியபோதும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் லாரியை பின் தொடர்ந்து சென்று லாரியை நிறுத்தி தயவுசெய்து லீக் ஆகும் சிலிண்டரை தனியாக எடுத்து எதாவது செய்து லீக்கை தடுங்கள் எனவும், இல்லையென்றால் பெரிய விபத்தாகிவிடப் போகிறது என கூறினர்.
ஏன் நிறுத்துகிறீர்கள்? அதுலாம் ஒன்றும் ஆகாது என அலட்சியமாக கூறிவிட்டு லீக் ஆன சிலிண்டரை சாய்த்துவைத்துவிட்டு லாரியை ஓட்டுனர் எடுத்துசென்றார். இதனைப் பார்த்த பொதுமக்கள் கேஸ் லீக் ஆன நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்தக் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட வேண்டிய கேஸ் சிலிண்டர்களை லீக் ஆன நிலையில் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என தெரிந்தும் அலட்சியமாக செயல்பட்ட கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் சிலிண்டர்களை கையாளும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
அதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை இங்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்தது. அதன் படி , கடந்த வருடம் பாலாலய விழாவும் நடந்தது. அதன் பிறகு திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து முடிந்தது. பின்னர் கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்க முகூர்த்தக் கால் நடப்பட்டது அதன் படி பலவண்ணங்களுடன் யாகசாலை குண்டங்கள் அமைக்கப் பட்டிருந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 1ந் தேதி முதல் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்களுடன் தொடங்கியது. பின்னர் தொடர்ந்து, 2ந் தேதி, 3ந் தேதி, 4ந் தேதி வரை 5 கால யாகசாலைபூஜைகள் நடந்து முடிந்தது.
தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையோடு நடந்தது.பின்னர் காலை 5.15 மணிக்கு மஹா பூர்ணாஹீதி நிறைவு பெற்றது.தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணகுடை பரிவாரங்களுடன் தீர்த்த குடங்கள் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி சன்னதி வித்தக,விநாயகர், ஆதிவேல் சன்னதி விமானம் மற்றும் ராஜ கோபுரத்தில் உள்ளகோபுர கலசங்களில் குடம் குடமாக புனித தீர்த்தம் 5.55 மணிக்கு ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேக விழா கோலகலமாக நடந்தது.இந்த விழாவில் பக்தர்கள் மீது அதற்கான கருவி மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பூஜை மலர்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும் மகா தீபாராணைகளும் நடந்தது. இந்த விழாவையொட்டி மதுரை திண்டுக்கல் சிவ கங்கை, தேனி, சென்னை நெல்லை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில், எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள்,அரசு உயர் அதிகாரிகள் கோவில் அலுவலர்கள்மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த விழா ஏற்பாடுகளை ,கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உள்பட 600 போலீசார்கள் செய்திருந்தனர்.
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (05-7-2026) ராசி பலன்கள்
மேஷம்
வியாபாரம் இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : முயற்சிகள் கைகூடும். பரணி : சிந்தனைகள் மேம்படும். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். முயற்சிகளில் இருந்த தாமதம் குறையும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். சுப காரிய விரயம் உண்டாகும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும். ரோகிணி : ஆதாயம் ஏற்படும். மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
மிதுனம்
குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்த அலைச்சல்கள் குறையும்.
அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : திறமை வெளிப்படும். திருவாதிரை : மாற்றமான நாள். புனர்பூசம் : அலைச்சல்கள் குறையும்.
கடகம்
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். மற்றவர்கள் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : புரிதல் ஏற்படும். பூசம் : சிந்தித்து செயல்படவும். ஆயில்யம் : ஏற்ற இறக்கமான நாள்.
சிம்மம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். இடை சார்ந்த பிரச்சினைகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : அனுகூலம் உண்டாகும். பூரம் : ஆதரவான நாள். உத்திரம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
கன்னி
பயணம் செயல்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நுட்பமான சில விஷயங்களை புரிந்துகொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் மறையும். மனதளவில் புதிய பக்குவங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : அனுபவம் உண்டாகும். அஸ்தம் : சோர்வுகள் மறையும். சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
துலாம்
சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்கள் மூலம் காரிய அணுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் விவேகம் வேண்டும்.
அதிஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
சித்திரை : குழப்பங்கள் விலகும். சுவாதி : அணுகூலம் ஏற்படும். விசாகம் : விவேகம் வேண்டும்.
விருச்சிகம்
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : ஆர்வம் ஏற்படும். பூராடம் : மாற்றங்கள் ஏற்படும். உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
மகரம்
தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிலம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும். திருவோணம் : மேன்மை உண்டாகும். அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வி சார்ந்த தெளிவுகள் பிறக்கும். ஆடம்பர பொருள்கள் மீதான ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் இடத்தில் பொறுமை காக்கவும். பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.
சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களில் முன்னேற்றம் காணப்படும். சமூகப் பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
மு.வரதராசனார் உரை: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில் பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்