Home Blog Page 2

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

மேகாலயாவில் 1946 இல் ஆர் எஸ் எஸ் ஷாகா ஆரம்பிக்கப்பட்டது . அப்போது அது அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 1972 ஜனவரியில் தனி மாநிலமாக ஆனது. மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் முதல் ஷாகாவை ஆரம்பித்தவர் வசந்த் ராவ் ஓக். இவர் ஆர் எஸ் எஸ் ஸின் ஆரம்பகால முழு நேர ஊழியர்களின் ஒருவர். இவரும் தாதாராவ் பரமார்த், கிருஷ்ண பரஞ்சாபே ஆகிய மூத்த தலைவர்களும் இணைந்து வடகிழக்கு இந்தியாவில் கௌஹாத்தி, திப்ரூகார் , ஷில்லாங்கில் ஆர் எஸ் எஸ் கிளையை தொடங்கினார்கள். ஓக் தில்லியில் ஆர் எஸ் எஸ் ஸை வலுவாக இடம் பெற செய்தவர். அதனாலேயே அவரது நண்பர்களால் ‘தில்லீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்எஸ்எஸ் செயல்வீரர்கள் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். மேகாலயா, நாகாலாந்து போன்ற கிறிஸ்துவ பெரும்பான்மை கொண்ட மாநிலங்களில் உள்ளூர் அளவில் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் கருத்தியல் உறுதி கொண்ட தலைவர்களையும் உருவாக்குவதே அவர்களின் நோக்கம். மத மோதலில் ஈடுபடாமல் சரியான கலாச்சார பண்புகளை வளர்ப்பது என்பதே அவர்களது செயல் திட்டம். வடகிழக்கு பகுதியை மைய இந்தியாவுடன் ஒருங்கிணைப்பது மழைக்காலத்தில் ஈர ஆடைகளை காய வைப்பது போன்ற கடினமான பணி என்பது அவர்களுக்கு தெரியும்.

வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களின் உடல் அமைப்பு சீனர்களை போன்ற மங்கோலாயிடு அமைப்பைக் கொண்டது. மைய இந்திய பகுதியினரின் தோற்றத்திலிருந்து மாறுபட்டது. ஏழு வட கிழக்கு மாநிலங்களும் பல தசாப்தங்களாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தன. அந்த பகுதியில் 200 பழங்குடி வகுப்பினரும் 200 மொழிகளும் உள்ளன. இது தவிர 1000 க்கும் மேற்பட்ட பேச்சு மொழி இருக்கின்றன என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

மேகாலயாவில் உள்ள காசி, ஜெயின்தியா மலைப்பகுதியில் முழு நேர ஊழியராக பணி புரிகிறார் பிரதாப் சாம்பிரி. ஷில்லாங்கில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பெண்களுக்கு நகரம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. நெற்றியில் சிகப்பு திலகம் இடுவதே தொலைக்காட்சி தொடர்களை பார்த்து தெரிந்து கொண்டார்கள். யாருக்கும் இந்தி தெரியாது. இப்போது தொலைக்காட்சி, அலைபேசி, இன்டர்நெட் வந்த பிறகு சில பிள்ளைகள் இந்தி பேச தொடங்கியுள்ளார்கள், என்று கூறுகிறார் அவர்.

மேகாலயாவில் உள்ள காசி இன மக்கள் தங்களை மகாபாரதத்தில் வரும் துரோணரின் சீடரான ஏகலைவனின் வாரிசுகள் என்று நம்புகின்றனர். அஸ்ஸாமில் உள்ள போடோ பழங்குடியினர் பிரம்ம தேவரின் வழிவந்தவர்கள் என்றும் அதே அஸ்ஸாமில் உள்ள கார்பீஸ் பழங்குடியினர் தங்களை இராமாயணத்தில் வரும் சுக்ரீவ மகாராஜாவின் வாரிசுகள் என்றும் கூறிக் கொள்ளுகின்றனர். நாகாலாந்தின் தலைநகரான திம்மபூரின் பழைய பெயர் இடும்பப்பூர் என்றும் அது மகாபாரதத்தில் பீமனின் மனைவியான இடும்பியின் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. திம்மப்பூரில் உள்ள ஒரு காட்டில் பெரிய பெரிய உடைந்த சதுரங்க ஆட்ட காய்களை பார்க்க முடிகிறது. அந்த வனப் பூங்காவில் பீமன் தன் மகன் கடோத்கஜனுடன் சதுரங்கம் ஆடியதாக அந்த மக்கள் நம்புகின்றனர். அருணாச்சலத்தில் உள்ள ஐடூ மிஸ்மி பழங்குடியினர் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியான ருக்மணியின் வழிவந்தவர்கள் என்கிறார்கள். ருக்மணியின் காதலை எதிர்த்த அவளது அண்ணன் ருக்மியை ஸ்ரீ கிருஷ்ணர் கொல்லாமல் தலையை மொட்டை அடித்து விட்டதன் நினைவாக அவ்வின மக்கள் இன்றும் தங்கள் தலையில் வட்டமாக ஸ்ரீ கிருஷ்ணரின் சக்கராயுதம் போல் இருக்கும்படி சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர்.

1992 ல் ஜனாதிபதி தேர்தலில் பாஜக.,வினரால் முன்னிறுத்தப்பட்ட ஜி ஜி ஸ்வெல் என்ற மேகாலயாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸின் சங்கர் தயாள் சர்மாவிடம் தோற்றுப் போனார். அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் அவர் பாஜக.,வின் பசுவதை தடையை எதிர்த்து பேசினார். அப்போது, நாங்கள் (மேகாலயாவை சேர்ந்தவர்கள்/ வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்) மாட்டிறைச்சியை முக்கிய உணவாகக் கொள்கிறோம். நீங்கள் அதை தடை செய்ய நினைக்கிறீர்கள், என்று குற்றம் சாட்டினார். அது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

சங்கத்திற்கு இது ஒரு முக்கியமான பிரச்சனை. நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது இங்குள்ள நிலை. உள்ளூர் உணவு பழக்க வழக்கங்களை சங்கம் ஏற்க மறுப்பதில்லை. ஆற்று நீர் எப்படி கற்களையும் பாறைகளையும் தழுவி பயணிக்கிறதோ அது போன்ற சமரசப்போக்கு சங்கத்திற்கு உள்ளது. இங்கு ஷாகாவுக்கு வருகின்றவர்கள் அநேகர் மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்கள். நம்மூரில் காபி, டீ போல அங்கு வீட்டிலேயே ஒரு வகை மது தயாரித்து கொடுப்பார்கள் . முழு நேர ஊழியர்கள் அதை மறுக்க முடியாது. பல வீடுகளின் முன் வாசலில் மாட்டு தோல் காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே போனால் டாக்டர் ஜி, குருஜி படம் மாட்டியிருக்கும் . ஸ்ரீ குருஜி கோல்வல்கர், நாம் உடையால், உணவால் , பழக்க வழக்கத்தால் வேறுபட்டிருந்தாலும் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள், என்று சொல்லியுள்ளார்.

இங்கு பெண்களுக்கு தான் சொத்துரிமை உள்ளது. எண்பது சதவீதம் சொத்துக்கள் பெண்கள் பெயரில் இருக்கிறது. குடும்ப சொத்து வீட்டின் கடைசி பெண்ணுக்கு தான் சேரும். அவள்தான் பெற்றோர்களை பார்த்துக் கொள்ள கடமைப்பட்டவள் . குடும்ப பிணைப்பு மிகவும் உறுதியாக உள்ளது இங்கு. எந்த வகையிலும் குடும்ப கட்டுப்பாடு இங்கு பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகள் இறைவனின் வரம் என்று இம்மக்கள் நம்புகிறார்கள்.

ஆரம்பத்தில் ஷில்லாங்கில் தொடங்கிய ஆர் எஸ் எஸ் கிளை இன்று மேகாலயா மாநிலத்தில் எல்லா பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவா பாரதி, வனவாசி கல்யாண், வி எச் பி, ஏ பி வி பி , பூர்வ சைனிக் பரிஷத் போன்ற ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் மூலம் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பல்வேறு சேவை திட்டங்கள் மாநிலம் முழுக்கவும் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவ மதத் தலைவர்கள் சங்கத்துடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்டாலும் அவர்களது சேவை திட்டங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அண்மையில் சங்க நிகழ்ச்சி ஒன்றை உள்ளூர் பாதிரியார் காவி கொடியேற்றி தொடங்கி வைத்தார். ‘ உள்ளூர் கிறிஸ்தவ தலைவர்கள் நம்முடைய நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பல நிகழ்ச்சிகளில் காவி கொடியேற்றி துவங்கி வைப்பதே அவர்கள்தான். இது அவர்களுக்கும் நமக்குமிடையே கருத்து பரிமாற்றத்துக்கு வழிவகுக்கிறது’ , என்கிறார் பிரதாம் சாம்பிரி.

மேகாலயாவில் எழுந்த மிகப்பெரிய சவால் அங்கு கொண்டாட கூடிய தேசிய தலைவர்கள் யாரும் இல்லாததுதான். அந்த பழங்குடியின அரசர்கள், தலைவர்கள் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி உள்ளார்கள். அவர்களது வீரமும் தேசபக்தியும் அம்மக்களிடையே வாய்மொழி வரலாறாகவே நீடித்தது. ஆவணப்படுத்தப்படவில்லை. இது ஆதிக்க சக்திகளுக்கும் மதமாற்ற சக்திகளுக்கும் எளிதாக ஆயிற்று. அவர்கள் அந்த வரலாற்றை சுலபமாக அழித்துவிட்டார்கள். அதன் மூலமாக அம்மக்களின் அடையாளமும் பெருமையும் துடைத்தெறியப்பட்டது.

ஹிந்துத்துவ அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு பெரும் வீரர்கள் மூன்று பேர்களின் வரலாற்றை ஜனசமூகத்திலிருந்து அகழ்ந்தெடுத்தனர் . யூ கியாங் நாங்பா , யூ தைரோட் சின் சையீம் என்ற காசி இன தலைவர்கள் இருவர். மற்றொருவர் பா தோகன் சங்மா என்ற காரோ’ இனத்தலைவர் . இம்மூவரின் வாழ்க்கையை, விடுதலைப் போராட்டத்தை ஆவணப்படுத்தினார்கள். அது அம்மக்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் அந்த தலைவர்களின் தியாகத்தை புரிந்து கொண்டு போற்றத் தொடங்கினர். சங்கப் பணியிலும் பல தியாகிகள் உருவாகினர்.

காசி இன மக்களிடையே கலாச்சார மறுமலர்ச்சிக்காக துவங்கப்பட்டது செங்காசி என்று அமைப்பு. அது அம்மக்களின் மரபை , பாரம்பரிய சமயத்தை மீட்டெடுக்க துவக்கப்பட்டது. அந்த பெயரில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் காசி, ஜெயின்தியா மலை பகுதி மக்களை மதமாற்றம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராகவும் ஒரு இயக்கம் முன்பு நடந்தது. அது இப்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது . ரைஜோய் சின் கோங்சா என்ற ஆர்எஸ்எஸ்காரர் அதை உயிர்ப்பித்து துடிப்புடன் நடத்தினார் . உள்ளூர் மக்களிடையே பிரபலமானார். பிரிவினைவாதிகளிடமிருத்து அச்சுறுத்தல் வந்தது. 2001 மார்ச் மாதம் அவரை கடத்திச் சென்று கொன்று விட்டார்கள் . கண்டன ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. கடைசி வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரது கொலை பலரை ஆர் எஸ் எஸ் பக்கம் இழுத்து வந்தது. அப்படி வந்தவர்தான் பாவ்னாம் சிசா கோங்சோய். நான் மூன்றாவது படிக்கும்போது முதன் முதலில் ரைஜோவை சந்தித்தேன். சலிப்படையாமல் கிராமம் கிராமமாக சென்று பழங்குடி மக்களுக்கு அவர் பணியாற்றதை பார்த்தேன். அவரால் தான் இன்று காசி மலைப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு காரியகர்த்தா உருவாகியுள்ளார்கள், என்கிறார் பாவ்னாம் சிசா.

உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் பிரதமர் மோடியை புகழ்கிறார்கள். வங்கதேசத்தின் எல்லைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் திங்ரியாங் கிராமத்திற்கு மின்சாரம் , சாலை, கழிப்பிடம் ஆகியவை எல்லாம் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. மோடி பிரதமரானதும் இவையெல்லாம் வெகு விரைவாக எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்கள். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதலை நடத்திய பிரதமர் மோடியை கிறிஸ்துவ இளைஞர்கள் வெகுவாக புகழ்கிறார்கள். பாஜக.,வில் இணைகிறார்கள். உள்ளூர் வட்டச் செயலாளர்களாக பல கிறிஸ்தவ இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இயற்பியலில் முதுகலை பட்டதாரியான பாவ்னாம் ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் . அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் செங்காசி அமைப்பின் உதவியால் பள்ளியை தொடங்கினார். இன்று அது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மேற்படிப்புக்காக தில்லி, மகாராஷ்டிரா, அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டனர். வெளிமாநில தொடர்பு அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது படித்த, வசதியான காசி இன பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு கிறிஸ்துவ பையன் தானாகவே கிறிஸ்துவத்தை விட்டுவிட்டு தாய் மதம் திரும்புவது சகஜமாகிவிட்டது, என்கிறார் பாவ்னாம்.

நாங்கள் யாரையும் தாய் மதம் திரும்பும் படி வற்புறுத்துவதில்லை. ஆனால் கிறிஸ்துவ பாதிரிகளால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு சர்ச் மூலமாக பாரம்பரிய பூசாரிகளை கொண்டு சடங்குகளை செய்கிறார்கள். அதற்காக பாரம்பரிய சமய பூசாரிகளை அணுகுகிறார்கள். தங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை நோக்கி திரும்பும் பயணத்தை அம்மக்கள் அங்கிருந்து தொடங்குகிறார்கள். இப்படி பல நூறு குடும்பங்கள் தாய் மதம் திரும்பி உள்ளனர், என்கிறார் பா என்ஜிஸ்டர். இவர் பாவ்னாவுக்கு உதவியாக இருக்கும் செயல்வீரர்.

நான் பெங்களூரில் எம்பிஏ முடித்தேன். அப்போது தான் நான் இந்தியாவை புரிந்து கொண்டேன். காப்பீட்டு துறையில் வேலை செய்கிறேன். நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் பாஜக., பற்றி எனக்கு வேறு பார்வை இருக்கிறது, என்கிறார் முப்பத்தி ஐந்து வயதான பிலைலேடு காங்கியாங் . இவர் அங்குள்ள கத்தோலிக்க சர்ச்சின் தலைவர். கிராம சபைக்கு பொறுப்பாளர்.

இந்த மாநில மக்களுக்கும் சரி எனது பழங்குடியினருக்கும் சரி வெளியுலகம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தங்களுக்கு உண்மையில் எது பிரச்சனை என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை. உண்மையான முன்னேற்றத்தையும் பாராட்ட தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாமே இலவசமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்கிறார் அவர். பாஜக.,வில் வேலை செய்ய பிரச்சனையாக இல்லையா என்று கேட்டபோது, எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் வேலை செய்ய முடிகிறது . என்னுடைய பிரச்சினை பாஜக., எனக்கு பயணப்படியை ஒழுங்காக தருவதில்லை என்பதுதான், என்கிறார். பணத்திற்காக பாஜக.,வில் சேர்ந்தீர்களா? என்றதற்கு, ஐந்து ரூபாய் பணம் கட்டி கட்சியில் சேர்ந்தவன் நான் , என்று குரலை உயர்த்துகிறார் காங்கியாங்.

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

2018 ன் தொடக்கத்தில் திரிபுராவில் கம்யூனிச ஆட்சியை வீழ்த்தி பாஜக., வாகை சூடியது. வெற்றி பெற்றதும் அங்கிருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. ஊடகங்களில், குறிப்பாக தமிழ் ஊடகங்களில், பலத்த கூக்குரல் எதிரொலித்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தபோது 1999 இல் விஜயபாரதத்தில் வெளியான ஆர்எஸ்எஸ் தலைவர் கு. சி. சுதர்சன்ஜியின் நேர்காணல் நினைவுக்கு வந்தது.

அந்த நேர்காணலின் முதல் கேள்வியே ஆர்எஸ்எஸ்.,காரரான வாஜ்பாய் பிரதமராக உள்ள நிலையில் திரிபுராவில் ஆர்எஸ்எஸ்., தலைவர்கள் வங்கதேசத்திற்கு கடத்தப்பட்டதை பற்றி இருந்தது. 1999 இல் திரிபுராவில் கம்யூனிச ஆட்சி இருந்தது. ஆர்எஸ்எஸ்., இன் மாவட்ட , மாநில மற்றும் பிராந்திய தலைவர்கள் ஆறு பேர்களை திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பினர் வங்கதேசத்திற்கு கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொன்றனர். தேசிய சிந்தனை கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக ஊடகங்கள் அதை அமைதியாகக் கடந்து சென்றன. அடுத்த இருபது ஆண்டுகளில் அங்கு பாஜக., ஆட்சியை கைப்பற்றியது . இன்று பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்து தேசியவாதிகளே ஆட்சியில் உள்ளனர் . இது சாதாரணமாக வந்தது அல்ல. அதற்குப் பின்னணியில் கடும் உழைப்பும் தியாகமும் உள்ளது.

மணிப்பூர்

மணிப்பூரின் தலைநகர் இம்பால் அங்கிருந்து 100 கிலோமீட்டர் குறைவான தூரத்தில் உள்ளது பங்க்டி சீரூ என்ற கிராமம். பசுமையான மலையடிவாரத்தில் உள்ள பல கிராமங்களில் இதுவும் ஒன்று. அந்த பகுதி தான் 26 வயதான லீசியின் கர்மபூமி. அவர் ரோங்மோய் என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவள். குக்கி , மொய்த்தி என்ற இரண்டு பழங்குடி வகுப்பினர் பெயர்கள் மட்டுமே நமக்கு தெரியும். அதுவும் கலவரத்தினால் தெரியும். ஆனால் அந்த சிறிய மாநிலத்தில் சுமார் 9 – 10 பழங்குடி வகுப்பினர் உள்ளனர். ஒவ்வொன்றுக்கும் மற்றதை ஏற்றுக் கொள்வதில்லை. பூசலிடுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு தேசம், அரசாங்கம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். தங்கள் இனக்குழுவின் ஆதிக்கம் தான் பிரதானம்.

இந்த சூழ்நிலையில்தான் லீசி அந்த கிராமத்தில் எட்டு பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறாள் . தனது நான்கு வயது தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தங்கை அல்ல நான்கு பேர்கள். கடைக்குட்டி யின் வயது நான்கு. இது தவிர அவர் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிப்பாள். ஏனெனில் அவள் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் முழு நேர ஊழியர். கல்யாண் ஆசிரமம் பழங்குடியினர்களிடையே சேவையாற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு. அது நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் பழங்குடி கிராமங்களில் 18 ஆயிரம் சேவை திட்டங்களை செயலாற்றி வருகிறது. இதன் முழு நேர ஊழியர்களுக்கு ஐந்து முதல் பத்தாயிரம் வரை மாத மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

லீசி கிராமங்களுக்கு நடந்து செல்வாள் . சற்று தூரமாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் செல்வாள் . பெரும்பாலான கிராமங்கள் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்கள். வீடு வீடாக சென்று பிள்ளைகளின் படிப்பு முதல் பாட்டின் உடல்நிலை என அன்றாட விஷயங்கள் தொடங்கி எல்லா விஷயங்கள் பற்றியும் அவள் விசாரித்து பேசி வருவாள் .பெரும்பாலும் தனியாக செல்வாள். சில நேரங்களில் கல்யாண் ஆசிரமத்தின் மூத்த ஊழியர் அவளுடன் கிராமங்களுக்கு செல்வார் . பல குடும்பத்தினருக்கு குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவு லீசி தான்.

வடகிழக்கு இந்திய பகுதிகளில் 1931 முதல் கிறிஸ்துவம் வேகமாக வளர்ந்தது. விடுதலைக்கு பிறகு இன்னும் வேகம் எடுத்தது. கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (2011) நாகலாந்தில் 87.9 சதவீதம் கிறிஸ்துவர்கள் . மிசோராமில் 87.2 சதவீதம். மேகாலயாவில் 74.6 சதவீதம். மணிப்பூரில் 41.3 சதவீதம். அருணாச்சல பிரதேசத்தில் 31 சதவீதம். அஸ்ஸாமில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 34 சதவீதம் . இப்பொழுது 40 சதவீத்தைக் கடந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீசி சொல்கிறாள் : சில கிறிஸ்துவ கிராமங்களில் மக்கள் என்னை மடக்கி நீ எங்களை இந்து மதத்திற்கு மாற்ற வந்திருக்கிறாய் என்று சொல்லி மிரட்டுவார்கள். அவர்களெல்லாம் குடித்துவிட்டு என்னை சுற்றி வளைத்து மிரட்டுவார்கள். நான் மதப் பிரச்சாரம் செய்யவில்லை. என் வேலை பழங்குடி பண்பாடு பற்றியது என்பேன். கிராமத்தில் உள்ள மற்ற சிலர் எனக்கு ஆதரவாக வந்து என்னை அவர்களிடமிருந்து மீட்டு அனுப்புவார்கள்.

மணிப்பூரில் இப்போது பாஜக., ஆட்சியில் இருக்கிறது. ஆனால் மாற்றத்திற்கான அடித்தள பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டன. மதுமங்கள் ஷர்மா இவர் 1987 இம்பாலில் பிறந்தார். மாநில அரசு அதிகாரியாக பணி ஓய்வு பெற்ற இவர் 1985 முதல் 1990 வரை பாஜக.,வின் மாநில தலைவராக இருந்தார். கட்சியை வளர்த்தார். அவருக்கும் முன்பாக 1950 களில் ஆர்எஸ்எஸ் , வி எச் பி யின் பணிகள் தொடங்கி விட்டன. மதுமங்கள் சர்மா தினமும் சுமார் 75 கிலோமீட்டர் பயணிப்பார். கிராமம் கிராமமாக சென்று போதை பொருள் பழக்கத்திற்கு எதிராகவும் பிரிவினை வாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தார்.

மணிப்பூரில் குறிப்பாக இம்பாலில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரிவினைவாதிகளின் வலைபின்னலில் முக்கிய பங்கு இருந்தது. அவர்கள் ஊடுருவும் தீவிரவாதிகளை பாதுகாத்தனர். அவர்களுக்கு உளவு சொல்லினர். மதுமங்கள் சர்மா 1995 பிப்ரவரி மாதம் ஒரு பிரிவினைவாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சர்மாவின் கொலை தனியானது அல்ல. மாவட்ட , மாநில அளவிலான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அபாயங்களை பற்றி கவலைப்படாமல் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் பாஜக., ஆட்சி இல்லாத போதும் களப்பணி ஆற்றினர். பாஜக., ஆட்சி வருவதற்கு முன்பு தினமும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்கிறார் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர். இன்று மணிப்பூரில் மட்டும் 120 ஆர்எஸ்எஸ் ஷாகாகள் உள்ளன. 1995 இல் ஆர் எஸ் எஸ் நடத்திய பள்ளிக்கூடங்கள் 650 ஆக இருந்தன. இன்று 6000 மாக அதிகரித்துள்ளன. ஆர் எஸ் எஸ் நடத்தும் ஒராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கல்வியின் மூலமாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய சிந்தனையை வலுப்படுத்தி வருகிறது ஆர் எஸ் எஸ்.

சடு – சீரு கிராமத்துக்குள் லீசி நுழைந்ததும் அங்குள்ள ஒரு கிறிஸ்துவ குடும்பம் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. அந்த வீட்டின் மூத்த பாட்டி ஒரு நாற்காலியில் வெயிலில் உட்கார்ந்து இருந்தார். லீசியைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது. கையை அசைத்து அவளை அருகே அழைத்தார். அவருக்கு இதய கோளாறு. அந்த குடும்பத்தின் மாத வருமானம் ரூபாய் 15 ஆயிரம் . சிகிச்சைக்கு 1.7 லட்சம் தேவைப்பட்டது. லீசி கல்யாண் ஆசிரமத்தின் மேலிடத் தலைவர்களிடம் பேசினார்.

அவர் முன்பு இரண்டு பிரச்சனை இருந்தன. மிக அவசரமான பிரச்சனை சிகிச்சை. பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இருந்த பெரிய தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பேசி மருத்துவ கட்டணத்தை குறைத்தனர் கல்யாண ஆசிரமத்தில் மாநில பொறுப்பாளர்கள். சிகிச்சை பெற்றவரின் குடும்பம் மட்டுமல்ல அந்த கிராமமே மகிழ்ச்சி அடைந்தது. வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அருமையை புரிந்து கொண்டது.

இரண்டாவது பிரச்சனை பிரதம மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தனியார் மருத்துவமனை தான் இணைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பெரிய அரசு மருத்துவமனை இணைக்கப்படவில்லை. மாநில பொறுப்பாளர்கள் மேலிடத்திற்கு விஷயத்தை எடுத்துச் சென்றார்கள். அவர்கள் மூலம் மத்திய அரசுக்கு செய்தி போனது. இப்போது பலரும் பலனடையும்படி அரசு மருத்துவமனைக்கும் ஆயுஷ்மான் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

சீரூ பழங்குடி கிராமத்திற்கு மற்றொரு வரப்பிரசாதமாக அமைந்தது பிரதமரின் கிராம சாலை திட்டம். அதன் மூலம் அருகில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அந்த சாலை ஓரத்தில் உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் வீட்டு தயாரித்த அன்னாசி பழச்சாறு, உள்ளூரில் விளையும் மாதுளை போன்ற மற்ற பழங்களின் சாறுகளை விற்கத் தொடங்கினர். வருவாய் அதிகரித்தது. தங்கள் வீட்டை ஒட்டிய இடங்களில் அவர்கள் விளைவித்த வெங்காயம் நேரடியாக நல்ல விலை போனது.

மணிப்பூர் மாநிலத்தில் மாற்றத்திற்கு வித்திட்டவர்களின் முக்கியமானவர் சங்கர் தின்கர் கானே. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் 1971 தனது ஆசிரியர் பணியை விடுத்து இம்பால் வந்தார். பிறகு தூஷோம் பகுதியில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற தொடங்கினார். அடுத்த 15 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களை மகாராஷ்டிராவில் உள்ள ஆதரவான குடும்பங்களில் தங்க வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அவர்கள் படிந்து திரும்பி வந்தபோது அவரது நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல அவரது பணியும் சுலபமானது. அவர் காலமான போது அவரது மாணவர்கள் ஓஜா சங்கர் வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தை அவர் நினைவாக தொடங்கினர். அந்த பள்ளி மியான்மர் எல்லையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கூட தேசிய கொடியை ஏற்ற முடியாது. பிரிவினைவாத அமைப்பினர் அதற்கு தடை விதித்திருந்தனர். ஆர் எஸ் எஸ் சார்புடைய அமைப்புகளின் பணியினால் இன்று சூழ்நிலை மாறியுள்ளது. தேசிய கொடியும் தேசிய கீதமும் அந்த பகுதியில் பாடப்படுகிறது. சர்ச் நடத்தும் பள்ளிகளிலும் தேசிய பாடல்கள், தேசிய சின்னங்கள், விழாக்கள் ஆகியவற்றை அவர்களது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். கூடவே பண்பாட்டை மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

கிறிஸ்துவ மிஷனரிகள் உள்ளூர் கலாச்சாரத்தை தீயது என்று புறமொதுக்கி அதில் வெற்றியும் பெற்றனர் . வனவாசி கல்யாண் ஆசிரமம் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அந்த குழு கோம், மோயோன் , மாரிங் , தாங்குல் போன்ற பழங்குடியினர் இடையே எழுபது வயதிற்கும் மேற்பட்ட மூத்தவர்கள் பலரிடம் பேசி மறைந்து போன பழங்குடியினரின் சொற்களை, பழமொழிகளை, வாய்மொழி வரலாற்றை மீட்டெடுத்து ஆவணப்படுத்தினர் . அவர்களது பழங்குடி பாடல்களை, சுமார் 300 பாடல்களை, தொகுத்து ஒரு இசை தட்டில் பதிவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

கலாச்சார மீட்டெடுப்பு அத்துடன் நிறவில்லை. ஒன்பது பழங்குடி வகுப்பினரது பாரம்பரிய விளையாட்டுக்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த விளையாட்டுக்கள் சுவாரசியமானவை மட்டுமல்ல ஆழமான சமூக பிணைப்பை ஏற்படுத்துபவை.

எடுத்துக்காட்டாக , மாஓ பழங்குடியினர் விளையாடும் ஓசு காகா விளையாட்டு. இது அறுவடை காலங்களில் விளையாடப்படுகிறது. பயிர் அறுவடை செய்யும் போது இடையே கிடைக்கும் இடைவேளை பொழுதில் விளையாடப்படுகிறது. அதில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆனவர்களை சவாலுக்கு அழைப்பார்கள். அதே பழங்குடி சமூகத்தினர் விளையாடும் இன்னொரு விளையாட்டு லீரீ கைபிச் சோ . அது ஒரு பண்டிகை காலத்தில் விளையாடப்படுகிறது. ஈட்டிகளை கொண்டு விளையாடப்படும் அந்த விளையாட்டு பழங்கால போர்களை நினைவூட்டுவதாக உள்ளது.

மன் பழங்குடியினர் விளையாடும் நாக்கின்ஜி – நாக்கின்ஜி என்ற விளையாட்டு. அதில் பாட்டு போட்டி உள்ளது. மணிப்பூரில் போலோ (குதிரை மீதேறி விளையாடும் பந்தாட்டம்) விளையாட்டை போன்றதொரு விளையாட்டு உள்ளது. அதன் பெயர் சகோல் காங்ஜியீ. பொதுயுகம் 33 ல் மணிப்பூரை ஆண்ட நாங்டா லைலென் போக்காங்பா என்ற மன்னர் தன் நண்பர்களுக்கும் இதர பழங்குடி தலைவர்களுக்கும் சகோல் காங்ஜியீ விளையாட்டில் சிறந்தவரான லைசனாவை பெருமையுடன் அறிமுகப் படுத்துவார் என்று தொன்மையான ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

மறைந்து போன / மறந்து போன பழங்குடியினர் இசைக்கருவிகளை வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் குழு மீட்டெடுத்துள்ளது. டாங் டங் , ரோசெம், சராங்தார் என்று அந்த மூன்று இசைக்கருவிகளுக்கு பெயர். ரோசெம் என்பது பேக் பைபர் போல் உள்ளது. மூங்கிலால் செய்யப்பட்டது. சராங்தாரைச் செய்ய குதிரைவால் பயன்படுத்தப்படுகிறது.

தாவரவியல் குறித்து உள்ளூர் பாரம்பரிய ஞானம் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மட்டுமின்றி மண்ணை சாகடிக்காத பாரம்பரிய விவசாய முறைகள்,சிறு காடுகள், சதுப்பு நிலப்பகுதி, உள்ளூர் மீன் வகைகள் என சூழலியல் அழிவிலிருந்து அந்த பகுதியை பாதுகாக்கும் அம்சங்கள் கண்டறியப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் தட்பவெப்பத்திற்கு ஏற்ப முன்பு பயன்பாட்டில் இருந்த பயிர் விதைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் பாரம்பரியத்தை மீட்கும் அதே வேளையில் மியான்மர், வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவலையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. பாஜக., அரசு வந்த பிறகு மாநிலத்துக்குள் பயணம் செய்ய இன்னர் லைன் பர்மிட் என்ற அடையாளம் / அனுமதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு குறுகிய காலம் சென்று வர முடியும். இது சட்ட விரோதமாக ஊடுருவி குடியமர்பவர்களை தடுக்கவும் பயன்படுகிறது. மொய்த்தி பழங்குடியினருக்கு பழங்குடியினர் அந்தஸ்தையும் சலுகைகளையும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆர் எஸ் எஸ் ஆதரித்து வருகிறது.

மியான்மரில் இருந்து ஊடுருவும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஜிரிபாம் , லீலாங் போன்ற நகர் பகுதிகளில் அதிகமாக குடியேறி வருவதை கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றன ஆர் எஸ் எஸ் அமைப்புகள். உள்ளூர் வாசிகளின் துணையுடன் ஹிந்து பண்பாட்டு தேசியவாதிகள் தங்கள் போராட்டத்தை தொடர உறுதியாக உள்ளார்கள்.

பஞ்சாங்கம் மே 22 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் மே 22 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் ~ வைகாசி ௴ 8 ௨ 22.5.2026 }
.வருடம் பராபவ ௵ பராபவ நாம ஸம்வத்ஸரம்}*
அயனம் உத்தராயணம்
ருது ~ வஸந்த ருதௌ
மாதம் ( வ்ருஷப மாஸம்)
.பக்ஷம்~ * ஸுக்ல பக்ஷம்
ஸ்ரார்த்த திதி ஸப்தமி (பிற்பகல் 12.31வரை ஷஷ்டி)
நாள்~ வெள்ளிக்கிழமை ப்ருகு வாஸரம் }
நக்ஷத்ரம் காலை 08.34 வரை புஷ்யம் பிறகு ஆச்லேஷா
( யோகம் சரியில்லை)
நல்ல நேரம் காலை 69&1010.30 * பிற்பகல் 1 3 மாலை 56இரவு 81112 நாளை காலை1& 36 குளிகை காலை 7.30~9 AM
ராகுகாலம் காலை 10.30~12 AM
எமகண்டம் பிற்பகல் 03.4.30 PM
சூரிய உதயம் ~ காலை 05.48 AM
சூரிய அஸ்தமனம்- மாலை 06.26 PM
சந்திராஷ்டம் காலை 08.34 வரை மூலம் பிறகு பூராடம்

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 22.5.2026


மேஷம்

உறவினர்கள் மத்தியில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். கடன் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : திருப்பம் உண்டாகும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.


ரிஷபம்

மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரோகிணி : பயணங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.


மிதுனம்

விவசாய பணிகளில் அனுகூலம் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் : விவேகம் வேண்டும்.


கடகம்

ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்ப்பீர்கள். மனதளவில் ஒரு விதமான சோர்வுகள் தோன்றி மறையும். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்துவதை தவிர்க்கவும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி முடிவு பெறும். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். பயனற்ற வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

புனர்பூசம் : சோர்வுகள் மறையும்.
பூசம் : உதவிகள் சாதகமாகும்.
ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.


சிம்மம்

கூட்டாளிகளால் சில அலைச்சல்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல், வாங்கலில் இழுபறியான நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு சாதகமாக அமையும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும். தாய் மாமனின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். முயற்சிகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

மகம் : இழுபறியான நாள்.
பூரம் : கடன்கள் குறையும்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.


கன்னி

சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு ஏற்படும். திறமையான பேச்சுகள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுகூலம் ஏற்படும்.
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.


துலாம்

முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சில அனுபவங்களால் புதிய பாதைகள் புலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

சித்திரை : அனுபவங்கள் கிடைக்கும்.
சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.
விசாகம் : மதிப்புகள் கிடைக்கும்.


விருச்சிகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் பொறுப்புகள் மேம்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆலய வழிபாடுகள் மூலம் மன தெளிவுகள் உண்டாகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
அனுஷம் : பொறுப்புகள் மேம்படும்.
கேட்டை : தெளிவுகள் உண்டாகும்.


தனுசு

பயனற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். புத்திரர்களால் அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : நெருக்கடிகள் உண்டாகும்.


மகரம்

மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது சார்ந்த முடிவுகள் உண்டாகும். சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

உத்திராடம் : தெளிவு ஏற்படும்.
திருவோணம் : முடிவுகள் உண்டாகும்.
அவிட்டம் : மேன்மை ஏற்படும்.


கும்பம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மன மகிழ்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கடியாக இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.


மீனம்

வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : ஈடுபாடு ஏற்படும்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

பஞ்சாங்கம் மே 21 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய பஞ்சாங்கம்  – மே 21

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

வைகாசி ~ 7 ( 21.5.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாதம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ பகல் 2.29 pm வரை பஞ்மி பின் ஷஷ்டி.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ காலை 9.49 am வரை புனர்பூசம் பின் பூசம்.
யோகம் ~ கண்டம்.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம்~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 5.53
சந்திராஷ்டமம் ~ தனுர்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி / ஷஷ்டி.
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - 2026
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - 2026
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
21.5.2026

மேஷம்

மாமன் வழி உறவுகளால் ஆதரவுகள் மேம்படும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : ஆதரவுகள் மேம்படும்.
பரணி : ஆர்வம் ஏற்படும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரிஷபம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். சகோதரர்களால் காரிய அனுபகூலம் ஏற்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். திட்டங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரோகிணி : ஒத்துழைப்பு மேம்படும்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.


மிதுனம்

புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் மேம்படும். கணிதத்துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுகளால் ஆதாயம் அடைவீர்கள். மனைவிற்றல் வாங்கலில் லாபம் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : லாபகரமான நாள்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


கடகம்

எதிலும் ஒரு முறை இருமுறை சிந்தித்து செயல்படவும். வேலையாட்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : மாற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


சிம்மம்

வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் நிறம்

மகம் : சிந்தித்து செயல்படவும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.


கன்னி

எதையும் சமாளிக்கும் பக்குவம் மனதளவில் பிறக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்த சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்களின் சேர்க்கை ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்து தாமதங்கள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

உத்திரம் : பக்குவம் பிறக்கும்.
அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : தாமதங்கள் மறையும்.


துலாம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : அனுபவம் ஏற்படும்.
சுவாதி : ஈடுபாடு ஏற்படும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.


விருச்சிகம்

சக பணியாளர்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மிக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சில புரிதல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : ஆதாயம் ஏற்படும்.
அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.
கேட்டை : புரிதல் அதிகரிக்கும்.


தனுசு

நெருக்கமானவர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். நிதானமான பேச்சுகளால் நம்பிக்கை மேம்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். பயணம் முலம் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூராடம் : நம்பிக்கை மேம்படும்.
உத்திராடம் : ஏற்ற இறக்கமான நாள்.


மகரம்

தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சிந்தனைப் போக்கில் இருந்த குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


கும்பம்

குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : பிரச்சனைகள் மறையும்.
சதயம் : வித்தியாசமான நாள்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


மீனம்

குழந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். தொழிலில் திடீர் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.


இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

பஞ்சாங்கம் – மே 20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்  | 20.5.2026 | புதன்கிழமை

வைகாசி ~ 6 { 20.5.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாதம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ மாலை 4.36 pm வரை சதுர்த்தி பின் பஞ்சமி.
நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம் ~ பகல் 11.12 AM வரை திருவாதிரை பின் புனர்பூசம்.
யோகம் ~ சூலம்
கரணம் ~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00 pm
சூரியஉதயம் ~ காலை 5.53.
சந்திராஷ்டமம் ~ வ்ருச்சிகம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தி.
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO - 2026

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026
thiruvalluvar deivapulavar

இன்றைய (20-5-2026) ராசிபலன்கள்


மேஷம்

செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொள்முதல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

அஸ்வினி : அறிவு வெளிப்படும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : தயக்கங்கள் குறையும்.


ரிஷபம்

செயல்பாடுகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : பொறாமைகள் குறையும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். நிர்வாக பொறுப்புகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களால் மனதில் சில நெருடல்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் மனதில் அமைதி நிலவும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் பிறக்கும்.
திருவாதிரை : அமைதி நிலவும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


கடகம்

வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் தோன்றி மறையும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். சிறு சிறு விஷயங்களுக்கு பொறுமையுடன் முடிவெடுக்கவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சமூகப் நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்s

புனர்பூசம் : நெருக்கடிகள் ஏற்படும்.
பூசம் : கையிருப்புகள் குறையும்.
ஆயில்யம் : புதுமையான நாள்.


சிம்மம்

பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். சிந்தனைகளை செயல்பாடுகளில் மாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : தெளிவுகள் உண்டாகும்.
பூரம் : வெற்றிகரமான நாள்.
உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.


கன்னி

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : லாபகரமான நாள்.


துலாம்

அரசு பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொத்துக்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.
சுவாதி : ஏற்ற இறக்கமான நாள்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.


விருச்சிகம்

வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சமூக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கேட்டை : புரிதல்கள் ஏற்படும்.


தனுசு

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மேன்மை கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும்.


மகரம்

சோர்வுகள் நீங்க சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : மேன்மை ஏற்படும்.
திருவோணம் : அனுகூலம் ஏற்படும்.
அவிட்டம் : தீர்வுகள் கிடைக்கும்.


கும்பம்

புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சிந்தித்து முடிவு எடுக்கவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.


மீனம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை குறித்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
உத்திரட்டாதி : அனுபவங்கள் ஏற்படும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

Astrological symbols and horoscope chart
astrology panchangam rasipalan

இன்றைய பஞ்சாங்கம் – மே 19

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

வைகாசி~ 5
( 19.5.2026 ) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பரபாவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ மாலை 6.53 pm த்ருதீயை பின் சதுர்த்தி
நாள் ~ { பௌம வாஸரம் } செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ பகல் 12.45 pm வரை ம்ருகசீர்ஷம் பின் திருவாதிரை.
யோகம் ~ த்ருதி.
கரணம் ~ தைதுளை / கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்.
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 5.53
சந்திராஷ்டமம்~ வ்ருச்சிகம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்ருதீயை.
இன்று ~


இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

astrology - 2026

இன்றைய (19-5-2026) ராசி பலன்கள்


மேஷம்

மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்படும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.


ரிஷபம்

உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : நட்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


மிதுனம்

பெற்றோர் வழியில் அனுசரித்து செல்லவும். விதண்டாவாத பேச்சுகளை தவிர்க்கவும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : உதவிகள் தாமதமாகும்.
புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.


கடகம்

சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : புரிதல்கள் உண்டாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அபிவிருத்தி உண்டாகும்.


சிம்மம்

எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : சோர்வுகள் குறையும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


கன்னி

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. இனம் புரியாத சிந்தனைகளால் மனப்போராட்டம் மேம்படும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : பேச்சுக்களில் கவனம்.
சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும்.


துலாம்

திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : உயர்வு உண்டாகும்.
விசாகம் : ஈடுபாடு ஏற்படும்.


விருச்சிகம்

சமூகப் பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும். புதிய கொள்முதல்களில் கவனம் வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

f

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

விசாகம் : விவேகம் வேண்டும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.


தனுசு

சில முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தேவைக்கு உகந்த வரவுகள் கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் உயரும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் ரீதியான இழுபறியான வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதரிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : வரவுகள் கிடைக்கும்.
பூராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : அனுகூலம் கிடைக்கும்.


மகரம்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளில் தெளிவுகள் பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில வேலைகள் சாதகமாகும். தன வரவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.


கும்பம்

சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் கூடுதல் லாபங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : செயல்களில் கவனம்
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : லாபகரமான நாள்.


மீனம்

பெரியோர்களின் கருத்துக்களால் மனதில் மாற்றம் பிறக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவீர்கள். மக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் ஆதாயமும் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
உத்திரட்டாதி : மேன்மை ஏற்படும்.
ரேவதி : புரிதல்கள் மேம்படும்.


தினம் ஒரு திருக்குறள்


அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்

இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

garlanding vaidyanatha iyer statue - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதை முன்னிட்டு, உயரமான சுவரில் சிரமப்பட்டு வயதானவர்கள் ஏறி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது, திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த உதவியாக, படிக்கட்டுகள் அமைத்துத் தர புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சுததிரப் போராட்ட கால கட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை நடத்திக் காட்டியவர் மதுரை வைத்யநாதய்யர். தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவோடு வைத்தியநாத அய்யர் போராட்டம் நடத்தி வெற்றிபெற்று கோவிலுக்குள் ஹரிஜன் மக்களை அழைத்து சென்றார்.

சட்டமும் இயற்றப்பட்டது‌ அதோடு தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்று வைத்தியநாத ஐயரும் அவரது குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் பிறந்த தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தியாகி வைத்தியநாத ஐயர் திருவுருவ சிலைக்கு அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, உக்கிர பாண்டி பட்டர், தன்னார்வலர் மற்றும் தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர் இல.அமுதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வைத்தியநாத ஐயரின் திருவருவ சிலை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளதால் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க தன்னார்வலர்கள் மிகவும் சிரமப்பட்டு சுவர் ஏறி குதித்து சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தன்னார்வலர்கள் வைக்கும் வேண்டுகோள் உடனடியாக, ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கும் வைத்தியநாத ஐயர் சிலை அமைந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சிலைக்கு செல்ல படி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிற்காக பல போராட்டாங்கள் நடத்திய தியாகியின் சிலைக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமித்துள்ள இடம் சீரமைக்கப்பட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

anaimangalam seppedu returned to india by modiji - 2026

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

நமது சோழப் பேரரசின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமது தாயகத்திற்குத் திரும்பியுள்ளன.

1976 முதல் 2013 வரை வெளிநாடுகளில் இருந்து வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. ஆனால், நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 228-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மற்றும் நமது பழங்காலப் பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுப் பத்திரமாகத் தாய்மண்ணிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வரலாற்றுச் சாதனையின் உச்சமாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தச் செப்பேடுகள் முறைப்படி நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நமது தொன்மையை மீட்டெடுப்பதில் இந்திய அரசு காட்டும் ஈடுபாட்டிற்கு இதுவே மிகப்பெரிய சான்று.

இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு எப்படிச் சென்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு வலிமிகுந்த வரலாறு. நமது நிலத்தின் சில பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில், இந்த விலைமதிப்பற்ற செப்பேடுகள் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனாலேயே இது லைடன் செப்பேடுகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் செப்பேடுகள் வெறும் உலோகத் தகடுகள் அல்ல; தமிழர்களின் ஈடு இணையற்ற கலைத்திறன், அறிவியல் அறிவு, துல்லியமான நில அளவை முறைகள் மற்றும் செம்மையான ஆட்சி நிர்வாகத்தின் உயிரோட்டமான ஆவணம்.

இதில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு வரலாற்று உண்மை உள்ளது. மாமன்னர்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தீவிரமான சிவபக்தர்கள். சைவம் தழைக்கப் பல பிரம்மாண்டமான சிவாலயங்களை எழுப்பியவர்கள். அன்றைய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் (இன்றைய இந்தோனேசியா) மன்னர் மாரவிஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை என்ற புத்த விகாரத்தை அமைக்க உதவிகோரினார்.

ஒரு தீவிர சிவபக்தராக இருந்தபோதிலும், பௌத்த மத விகாரைக்கு ஆனைமங்கலம் கிராமத்தை முழுமையாக மானியமாக வழங்கி மாமன்னர் ராஜராஜ சோழன் ஆதரவளித்தார். இது சோழர்களின் அளப்பரிய மத நல்லிணக்கத்தையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்த மானிய விவரங்களை அவரது மகன், மாமன்னர் ராஜேந்திர சோழன் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் செப்பேடுகளாகப் பொறித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இன்று மீண்டும் நம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு நெடிய சட்டப் போராட்டம் உள்ளது. வழக்கறிஞர் திரு.பி.ஜெகநாத் அவர்கள் 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான ராஜதந்திர நகர்வுகளுமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

திரு.பி.ஜெகநாத் அவர்களின் பயணம் இதோடு முடிந்துவிடவில்லை. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சு மிஷனரிகளால் இடிக்கப்பட்ட சூடாமணி விகாரையின் கோபுரத்தை, மீட்கப்பட்ட இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் குறிப்புகளைக் கொண்டு அதே நாகப்பட்டினத்தில் மீண்டும் கட்டமைக்க வேண்டும் எனத் தனது அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை அவர் தற்போது துவங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

நமது பண்பாட்டின் ஆணிவேரான இந்தச் செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது, தமிழ் கலாச்சாரத்திற்கும் வரலாற்றுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை. நமது வரலாற்றை மீட்டெடுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்தப் பணிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது பெருமைமிக்க வரலாற்றை மீட்டெடுப்போம்! வருங்கால சந்ததிக்குச் சோழர்களின் புகழைக் கொண்டு சேர்ப்போம்!

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

udayanidhi in assembly - 2026
  • ஆனந்த் வெங்கட் –

சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி. ஏற்கனவே இது போல பேசியதற்கு வழக்கு நடக்கிறது. ஆக இது ஒன்றும் தெரியாமல் பேசிய பேச்சல்ல என்று நிரூபணம் ஆகிறது. அந்த வழக்கை துரிதப்படுத்த நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும் பாஜக. (அப்போது முதல்வரின் reactionஐயும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆமோதித்து போல இருந்தது அந்த தலையாட்டல்.)

வேண்டுமென்றே முதல்வரை வம்புக்கு இழுத்து அவரையும் மறைமுக திமுகவாக ஆக்க செய்யப்படும் முயற்சி இது. இதற்கெல்லாம் இசைந்து கொடுப்பது நன்றாக இல்லை.

திமுக ஆதரவு தந்தது விஜயின் கட்சியை காப்பாற்ற அல்ல. மாறாக உள்ளே இழுத்துக்கொள்ள. இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களது மறைமுக வழிகாட்டுதல் இல்லாமல் நடக்காது. இதை விஜய் உணர்ந்தால் நல்லது.

முதல்வர் மீது இருக்கும் சந்தேக நிழலை ஊர்ஜிதம் செய்வது போல இருக்கிறது அந்த தலையாட்டல். முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது. உங்களுக்கு வாக்களித்தது வெறும் கிருஸ்தவர்கள் மட்டுமல்ல. மிகப்பெரும்பான்மையில் ஹிந்துக்களே. இளைஞர்களும் பெரியவர்களும் இளைஞிகளும் மிகப்பெருமளவில் நம்பிக்கை வைத்துள்ளார்கள் முதல்வர் மீது.

திமுக விரிக்கும் வலையில் சிக்கி வீணாக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சாராய கடைகளை மூடுவது பெரும் பாராட்டுக்குரிய செயல். இதுதான் தேவை நாட்டுக்கு. இந்த காலாவதியான சனாதன எதிர்ப்பை கையில் எடுத்ததன் விளைவைத்தான் திமுக இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

உறவாடிக்கெடுக்க முயற்சி செய்கிறது திமுக, செய்தே தீரும், நம்பிக்கையை பெற்றே தீரும், விஜயை அழித்தே தீரும். எப்படி அழிந்தோம் என்ற தடம் கூட தெரியாமல் அழிக்கும். யாராவது முதல்வருக்கு இதை சொல்லுங்கள்.

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

udayanidhi in assembly - 2026

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: உதயநிதி

தமிழக சட்டமன்றத்தில் இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமர வைத்தனர். அதன் பின்னர் சபாநாயகர் பிரபாகர், துணை சபாநாயகர்ரவிசங்கர் ஆகியோருக்கு உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி பேசியபோது, நிறைவாக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி முடித்தார். அவரது உரையில்,

“தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்; வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” – என்று பேசி முடித்தார். உதயநிதியின் பேச்சின் நிறைவில் முதலமைச்சர் விஜய் கைகூப்பி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

எனினும் உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

ஹிந்து மதத்தின் மீது உங்களுக்குள்ள அதீத வெறுப்பே, உங்கள் சரிவிற்கு வழிவகுக்கும. உங்கள் முதல் சட்டமன்ற உரையிலேயே கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. ஹிந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்திற்குரியது.

துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று நீங்கள் ஒருமுறை பொதுவெளியில் பேசி, ஹிந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்.

எனவே, நீங்கள் அரசியலில் மென்மேலும் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெட்டி எறிந்துவிட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியம். ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவரவர் மத அடையாளங்களும் நம்பிக்கைகளும் அதிமுக்கியம் என்பதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு ஹிந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, ‘மத’ யானையின் மீது அரசியல் சவாரி செய்ய முயன்றால் மீள முடியா பாழுங்குழியில் வீழ்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும், அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரச்சாரத்திற்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதைத் தான் தமிழகம் தற்போது ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

உதயநிதி பேச்சு விஜய்க்கு விடப்பட்டிருக்கும் சவால்: பாஜக

“சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று மீண்டும் திமுக வின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திட்டமிடப்பட்ட, உள்நோக்கத்தோடு பேசியுள்ள அதே வேளையில், திமுகவுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் தயவால் தான் விஜய் முதலமைச்சராக இருக்கிறார் என்று ஆணவத்தோடு உதயநிதி பேசியிருப்பதும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதாவது முதலமைச்சர் விஜய் அவர்கள் சனாதனம் குறித்து உதயநிதி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அரசுக்கு ஆதரவு இருக்காது என்பதை மறைமுகமாக சொல்லி மிரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த மிரட்டலை திமுக விடுத்திருப்பது முதலமைச்சர் விஜய்க்கு விடப்பட்டிருக்கும் சவாலே!”

– நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பா.ஜ.க.


அர்ஜுன் சம்பத் அறிக்கை!

கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆயுதங்கள் தமிழக சட்டசபையில் வேலையை செய்ய துவங்கி விட்டன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் மாண்புமிகு திரு ஜே சி டி பிரபாகர் ஐயா அவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேரி மாதா சர்ச்சுக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றது சிலுவையை தொட்டு வணங்கி கும்பிட்டது தன்னை ஒரு கிறிஸ்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பைபிள் பரிசு வழங்கியது ஆகியோவற்றை குறித்து பேசியுள்ளார்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன் என்று பேசியவர். தற்பொழுது உதயநிதியும், ஜோசப் விஜய்யும்,ஜே சி டி பிரபாகர் அவர்களும் ஒரே லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் ஒருவர் பிடிப்பு உள்ளது என்றும் பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை ஒழிப்பதாக பேசியது குறித்து ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசுவது திமுகவில் உள்ள ஒரு கோடி ஹிந்துக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.

குறிப்பாக அவரது தாயார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை பின்பற்றுபவர். முதலில் அவர் அவரது வீட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இஸ்லாமிய கிறிஸ்தவ மதவெறி மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக அப்பாவி இந்து தமிழர்கள் பின்பற்றுகின்ற தமிழர்களின் பாரம்பரியமான சனாதனத்தை ஒழித்துக் கட்டுவேன் என தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது திராவிட மாடல் திமுக இன்னும் திருந்தவில்லை. என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திரைப்பட நடிகராக இருந்த காலத்தில் மெர்சல் திரைப்படத்தில் தமிழர்களின் பாரம்பரியம் வேஷ்டி சட்டை என்பதை குறித்து பெருமை பேசி இருப்பார். ஆனால் தற்பொழுது அதற்கு மாறாக தமிழக சட்டசபையில் கோட் அணிந்து பங்கெடுத்துக் கொள்கிறார் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை புறக்கணித்து வருகிறார்.

திரு ஜோசப் விஜய் அவர்கள் லயோலா கல்லூரியில் படித்து வருபவர் லயோலா கல்லூரி நிர்வாகிகளான அவரது உறவினர்கள் திரு சேவியர் மற்றும் திரு பிரிட்டோ ஆகியோருக்கு கிறிஸ்தவ மதம் பரப்பும் வேலையை தொடர்ந்து செய்து வருபவர்கள். இந்து சமயம் குறித்தும் சனாதன தர்மம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள்.

தற்பொழுது சட்டசபையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஹிந்து தமிழர்கள் தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கன்னியாகுமரி,சென்னை போன்ற பகுதிகளில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாக உள்ளனர் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக மாறிவிட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெற முடியாது ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மிக எளிதாக கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்று வந்து இந்து விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் தீய சக்தி திமுக சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.