பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
மெட்ரோ ரயில் என்பது ஒரு வெள்ளை யானை கோடிகளை கொட்டினாலும் அதிலிருந்து வரும் வருவாய் மிக குறைவு. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களிலேயே மெட்ரோ ரயில் தடுமாறுகிறது.
துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் இன்னமும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா…? கொஞ்சம் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் அறிக்கையை இணையத்தில் எடுத்துப் பாருங்கள்…
21–22ல் நிகர நஷ்டம் 85.79 கோடி. 22–23ல் இது 34 கோடி. படிப்படியாக குறைந்து வருகிறதே தவிர இன்னமும் பிரேக் ஈவன் எனப்படும் லாபம்–நஷ்டம் இல்லா நிலையை அடையவில்லை. அனேகமாக 27–28 ல் பிரேக் ஈவன் வரலாம். அதன்பின் லாபத்தை பார்க்க வேண்டும்.
பெங்களூரிலும் மெட்ரோ நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த நிதியாண்டில் ஆயிரம் கோடி வருவாயை எட்டியும் 623 கோடி நஷ்டம். இது முந்தைய ஆண்டை விட கூடுதல் நஷ்டமாம்.
சென்னை, பெங்களுருக்கே இந்த நிலைய என்றால் மதுரை, கோவை எம்மாத்திரம். மதுரை மக்கள் எண்ணித்தான் செலவழிப்பார்கள். தேவையில்லா செலவுகள் மதுரையில் மிகவும் குறைவு. திருமங்கலத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு பஸ்சை விட கட்டணம் குறைவாக இருந்தால் தான் மெட்ரோவை ஏற்பார்கள்.
அதிலும் நகருக்குள் மெட்ரோ ரயில் நிலையங்கள் எங்கே அமையும், அதற்கும் செல்லும் இடத்திற்கும் எவ்வளவு துாரம், ஆட்டோ பிடிக்க வேண்டுமா போன்ற விஷயங்களை பொருத்து தான் பயணிப்பார்கள். ஆரம்பத்தில் மெட்ரோ மீதான மோகத்தால் வேண்டுமானால் சென்று வருவார்கள். அதன்பின் வரவேற்பு குறைந்து விடும்.
சென்னையில் திருமயிலை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும் தடுமாற்றத்தில் தான் இருந்தது. தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டபின் ஓரளவு மக்கள் பயணிக்கின்றனர்.
முதல்வரும் தி.மு.க.,வினரும் மீண்டும் மீண்டும் சொல்வது, ‘ஆக்ராவில் மெட்ரோ ரயில் வந்து விட்டது… உ.பி.,யில் வந்து விட்டது’ என்பது. ஆக்ரா, உ.பி., சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம். அங்கு மெட்ரோ கண்டிப்பாக வரவேற்பை பெறும்.
மதுரையை அப்படியா வைத்திருக்கிறீர்கள். ஒருமுறை வந்து செல்லும் சுற்றுலா பயணி மீண்டும் வரவே மாட்டார்…. யாரும் மதுரைக்கு போகிறேன் என்றால் கூட போக விட மாட்டார். அவ்வளவு மோசமாக இருக்கிறது நிர்வாகம்.
வாகன நிறுத்துமிடம் துவங்கி சுற்றுலா பயணிகளை நம்மவர்கள் டீல் செய்யும் அழகு உலகப்பிரசித்தி.. அதை விட ரோடும், கோயிலும்… (அன்னை மீனாட்சி கோயிலும் அதை இவர்கள் நிர்வகிக்கும் அழகையும் பற்றி தனியாக எழுத உள்ளேன்)
என்னை பொறுத்தவரை மதுரைக்கு மெட்ரோ.. கிட்ரோவெல்லாம் தேவையே இல்லை. ரோடுகளை சரியாக அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோரிப்பாளையத்தில் கட்டியுள்ளது போன்று தேவையான இடங்களில் பாலங்கள் அமைத்தாலே போதும். கோடிகளை கொட்டி மெட்ரோவை கொண்டு வந்து பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றால் என்னாகும்.
பயணிகளிடம் வரவேற்பு இருக்குமா, நிலம் கையகப்படுத்த எவ்வளவு செலவு வரும் போன்ற மத்திய அரசு கேட்கும் விபரங்களை தர வேண்டியது மாநில அரசின் கடமை. அதை விடுத்து அதில் அரசியல் செய்வது பொறுப்பின்மையின் உச்சம்.
பங்குனி ~ 27 (10.4.2026) வெள்ளி கிழமை. வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்} அயனம்~ உத்தராயணம் ருது ~ சிசிர ருது. மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம் } பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி~ 8.59 pm வரை அஷ்டமி பின் நவமி நாள் ~ (ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை. நட்சத்திரம்~ 9.30 am வரை பூராடம் பின் உத்ராடம் யோகம் ~ சிவம் கரணம் ~ பாலவம் அமிர்தாதியோகம் ~ சுபயோகம் நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00. ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00. எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30. குளிகை ~ காலை 7.30 ~ 9.00. சூரிய உதயம் ~ காலை 6.09 சந்திராஷ்டமம் — 3.58 pm வரை வ்ருஷபம் பின் மிதுனம் சூலம் ~ மேற்கு பரிகாரம் ~ வெல்லம் ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி இன்று ~
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 10.4.2026
மேஷம்
மனை தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உருவாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் மேம்படும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். மற்றவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற செயல்களை குறைத்து கொள்ளவும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்கவும். சிறு மற்றும் குறு தொழிலில் விவேகம் வேண்டும். பயணம் மூலம் செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ரோகிணி : கவனம் வேண்டும். மிருகசீரிஷம் : சேமிப்புகள் குறையும்.
மிதுனம்
மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதிகளை குறைத்து கொள்ளவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. சமூக பணிகளில் அலைச்சல் மேம்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி பிறக்கும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும். பூசம் : ஆதாயகரமான நாள். ஆயில்யம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். திடீர் யோகங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : வரவுகள் கிடைக்கும். பூரம் : அனுகூலம் உண்டாகும். உத்திரம் : மாற்றம் பிறக்கும்.
கன்னி
மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்விக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் எதிர்பாராத விரயம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும். அஸ்தம் : அனுகூலமான நாள். சித்திரை : வேறுபாடுகள் நீங்கும்.
துலாம்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். விருந்தினர்களின் வருகைகள் ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் சில புரிதல்களை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும். சுவாதி : மேன்மை ஏற்படும். விசாகம் : புரிதல்கள் மேம்படும்.
விருச்சிகம்
மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கற்றல் திறனில் புதுவிதமான சூழல் காணப்படும். நீண்ட நாள் ஆசைகளும் எண்ணங்களும் நிறைவேறும். சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
விசாகம் : வெற்றிகரமான நாள். அனுஷம் : புதுமையான நாள் கேட்டை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
—————————————
தனுசு
கணவன் மனைவிக்கு மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன வரவுகள் மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சிந்தனைப் போக்கில் உற்சாகம் தோன்றும். தம்பதிகளுக்குள் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். தோற்றப்பொழிவில் மாற்றங்கள் காணப்படும். குழப்பங்கள் நீங்கி புதிய பாதையும் தெளிவும் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : தெளிவுகள் உண்டாகும். பூராடம் : உற்சாகம் பிறக்கும். உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும்.
மகரம்
முயற்சிகளில் கவனம் வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் இருந்த தடைகள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும். திருவோணம் : மாற்றம் ஏற்படும். அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருள்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். சதயம் : ஆர்வம் உண்டாகும். பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
மீனம்
சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். வியாபார பணிகளில் லாபங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!! உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் பற்றி பேசாதே என்று கோஷமிட்டு, விசிக.,வினர் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து தூக்கி வீசி, கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாஜக., இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்களில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எல்.முருகன் கண்டனம்
ஏபிவிபி மாணவர்களை தாக்கிய விசிகவினரை கைது செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டார். அதில்,
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி சார்பில் கூட்டத்தில் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துக்களை எடுத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகி இருக்கிறது. விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.- என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்து முன்னணி கண்டனம்
தமிழக தேர்தல் நேர்மையாக நடக்குமா? மாணவர்கள் கூட்டத்தில் விசிக வன்முறை தாக்குதல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா? இந்தச் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
நேற்று கடலூரில் ஏபிவிபி மாணவர் அமைப்பு நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரகளை செய்துள்ளனர். காவல்துறையினர் கண் முன்னே மிரட்டல் விடுத்த விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இத்தகைய வன்முறை சம்பவங்கள் திமுகவின் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுபோல் நடந்தன.
மேலும் ஊடகங்கத்தினரும் மிரட்டப்படுகின்றனர். செய்தி சேகரிக்க செல்லும் விடீயோ கலைஞர்கள், நிருபர்களை ஆகியோரை போலீஸ் தாக்குவது, விரட்டுவது தொடர்கிறது. இதற்கு காரணம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக, காவல்துறை அதிகாரிகளாக திமுக ஆதரவாளர்கள் இருப்பதால் தான்.
இன்னமும் திமுகவின் கண் அசைவுக்கே அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா? அல்லவா? என்ற சந்தேகம் எழுகிறது.
காவல்துறையின் உயர் அதிகாரிகள் சில இடங்களில் மாற்றப்பட்டனர். ஆனால் பல முக்கிய இடங்களில் அதிகாரிகள் மாற்றப்படவில்லை.
வன்முறையில் இறங்கும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் தேர்தல் நாளன்று வாக்காளர்களை அச்சுறுத்தி, நேர்மையற்ற தேர்தலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்து முன்னணி சார்பில் எச்சரிக்கிறோம்.
ஆகவே, இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு மாணவர்களை தாக்கியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்வத்தாமன், பாஜக.,
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. அதில் விசிக குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசத்தை நேசிக்கிற மாணவர்கள் கூட்டம் என்பதால் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.
விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இந்த கொடூர தாக்குதல்களின் அடிப்படையில் விசிக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாஜக.,வின் எஸ்.ஜி. சூர்யா
சிதம்பரத்தில் ABVP கடலூர் சார்பாக நடைபெற்ற “மாணவர்களின் குரல் மாற்றத்திற்கான குரல்” தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், மது போதையில் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்!
ABVP மாநில பொதுச் செயலாளர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, நாற்காலிகளை வீசி எறிந்து, பொறுப்பாளர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெறிச்செயலில் பன்னீர்செல்வம் மற்றும் பல அப்பாவி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும், ABVP மத்திய செயற்குழு உறுப்பினர் செல்வி.வேதாஞ்சலி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்திருப்பது இவர்களின் கீழ்த்தரமான சிந்தனையை அப்பட்டமாக காட்டுகிறது. ஒரு பெண் நிர்வாகியை தகாத வார்த்தைகளால் அசிங்கப்படுத்தும் இவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவது மிகப்பெரிய கேலிக்கூத்து.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவில்லாமல், வன்முறையை கையில் எடுக்கும் இது போன்ற சமூக விரோதிகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக கைது செய்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயக குரலை எந்த ரவுடித்தனத்தாலும் ஒடுக்கி விட முடியாது!
ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்: ஈரான் தனது பிடிவாதத்தை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை நிறுத்தாததால், ஆத்திரமடைந்த ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் முழுமையாக மூடிவிட்டது. இது ட்ரம்ப் கொடுத்த 2 வார அவகாசத்தை ஆபத்தில் தள்ளியுள்ளது.
ட்ரம்ப் & நெதன்யாகு அவசர ஆலோசனை: இந்தச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொலைபேசி வழியாகப் பேசியுள்ளனர்.
ட்ரம்ப்பின் ரியாக்ஷன்: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், “ஈரான் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்று கூறியுள்ளார். 2 வார அவகாசம் முடிவதற்கு முன்பே ட்ரம்ப் தனது தாக்குதல் உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் அதிரடி: இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் அணுசக்தி மையங்களை நோக்கித் தங்கள் வான்வழித் தாக்குதலைத் தொடங்கத் தயாராகிவிட்டன. லெபனான் பதற்றம்: லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகர் மீது 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இன்னும் கொடூரமான தாக்குதலை பெய்ரூட்டில் நடத்தி வருகிறது.
மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கையும்… இஸ்ரேல், அமெரிக்காவின் அதிரடி பதிலும்…
ஹார்முஸ் நீரிணை: ஈரானின் IRGC கடற்படை நீர்சந்தியில் புதிய வழித்தடங்களை அறிவித்துள்ளது. “கடல் கண்ணி வெடிகள் இருப்பதால், எங்களின் அனுமதி இல்லாமல் வரும் கப்பல்கள் அழிக்கப்படும்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட “வெண்டிலேட்டரில்” இருக்கும் நிலையில், ட்ரம்ப், நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ வார்த்தைகள் உலகை அதிர வைத்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: தனது சமூக வலைதளத்தில் மற்றும் ஒரு குறுகிய வீடியோ உரையில் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்: நான் பாகிஸ்தான் தலைவர்கள் மீது கொண்ட மரியாதையால் 2 வாரம் அவகாசம் கொடுத்தேன். ஆனால் ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடி விளையாடுகிறது.
இது ஒரு மிகப் பெரிய தவறு. இப்போதே நீரிணையைத் திறந்து, உங்களின் அணுசக்தித் திட்டங்களை நிறுத்தவில்லை என்றால், அந்த 2 வாரம் வரை நான் காத்திருக்கப் போவதில்லை. அடுத்த 24 மணிநேரத்தில் ‘Operation Fury’ மீண்டும் தொடங்கலாம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: ஈரான் உடனான இந்த தற்காலிகத் இடைவெளி லெபனானுக்குப் பொருந்தாது. ஹிஸ்புல்லா ஒழிக்கப்படும் வரை அங்கு குண்டுவீச்சு தொடரும்.
எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.
श्री मते रामानुजाय नम: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி ~ 26 (9.4.2026) வியாழன் கிழமை. வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்} அயனம் ~ உத்தராயணம் ருது ~ சிசிர ருது. மாதம் ~ பங்குனி மாஸம் {மீன மாதம்} பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி ~ 7.33 pm வரை சப்தமி பின் அஷ்டமி நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை. நட்சத்திரம் ~ 7.20 am வரை மூலம் பின் பூராடம். யோகம் ~ பரிகம் கரணம் ~ பத்திரை அமிர்தாதியோகம்~ சுபயோகம் நல்ல நேரம் ~ சந்திராஷ்டமம் ~ வ்ருஷபம் சூலம் ~ தெற்கு. பரிகாரம் ~ நல்லெண்ணெய். ஸ்ராத்ததிதி ~ சப்தமி இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். !!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!! ॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |! !!धर्मो रक्षति रक्षित:!! !!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
sarathambal
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை : சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் : குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு : குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
astrology panchangam rasipalan dhinasari 2
இன்றைய ராசிபலன்கள் 9.4.2026
மேஷம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும். திருவாதிரை : ஆர்வம் உண்டாகும். புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
கடகம்
சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உருவாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : ஒற்றுமை உண்டாகும். பூசம் : புரிதல்கள் மேம்படும். ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : நம்பிக்கை பிறக்கும். அஸ்தம் : ஆதரவுகள் கிடைக்கும். சித்திரை : அனுசரித்து செல்லவும்.
துலாம்
எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : புரிதல் உண்டாகும். சுவாதி : அனுகூலம் ஏற்படும். விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : சிந்தித்து செயல்படவும். அனுஷம் : ஆதரவுகள் கிடைக்கும். கேட்டை : உணவுகளில் கவனம்
தனுசு
சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மூலம் : எண்ணங்கள் ஈடேறும். பூராடம் : அனுபவமும் ஏற்படும். உத்திராடம் : கவனம் வேண்டும்.
மகரம்
உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் சார்ந்த வருமான சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசு செயல்களில் இருந்த தாமதம் விலகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : முன்னேற்றம் காணப்படும். சதயம் : ஆசிகள் கிடைக்கும். பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
மீனம்
அணுகுமுறையில் சில மாற்றம் காணப்படும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். அரசு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : மாற்றம் பிறக்கும். உத்திரட்டாதி : பயணங்கள் உண்டாகும். ரேவதி : வாய்ப்புகள் அமையும்.
மு.வ உரை: பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…! ‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
அதிமுகவுடனான கூட்டணி வென்றால் தேர்தல் வியூகம் வெற்றி என்று ஆகும்.
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
திமுக வென்றால் நாடாளுமன்றத்தில் தேவைப்படும்போது பாஜகவுக்கு சாதகமாக நடந்துகொள்ளும்.
*
அதிமுகவுக்கு எது நடந்தாலும் நன்மையே.
கூட்டணி வென்றால் ஆட்சி கிடைக்கும்.
தோற்றால் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க உதவியதாக ஆகும்.
*
கிறிஸ்தவர்களுக்கு எது நடந்தாலும் நன்மையே
திமுக வென்றால் 100% பலம்.
அதிமுக வென்றால் 70-80% பலம்.
பாஜக வென்றால் 50% பலம்,
*
இந்துக்களுக்கு திமுக வென்றால் 100% கஷ்டம்.
அதிமுக வென்றால் 70-80% கஷ்டம்.
பாஜக வென்றால் 50% கஷ்டம்.
*
இந்துத்துவர்களுக்கு மட்டும் யார் வென்றாலும் கஷ்டம்.
இந்துத்துவம் பக்கம் இந்துக்களும் பாஜகவும் வந்தாலொழிய காலப்போக்கில், மூவருக்கும் எது நடந்தாலும் கஷ்டமே.
*
இந்துத்துவம் என்றால் என்ன என்பது பற்றி அடிக்கடி விளக்கம் தந்தபடியே இருக்கவேண்டியிருக்கிறது.
இந்துத்தன்மையே இந்துத்துவம்.
சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் அது வெளிப்படவேண்டும்.
வாழ்வின் அனைத்துச் செயல்களிலும் அது வெளிப்படவேண்டும்.
ஓர் இந்து தன்னை மற்ற அனைவருக்கும் சமமாக நடத்தும்படித்தான் கேட்கிறார். கூடுதல் சலுகை எதையும் கேட்கவில்லை.
அனைவரையும் நடுநிலையாக நடந்துகொள்ளும்படித்தான் கேட்கிறார். தனக்கு சாதகமாக நடக்கும்படிக் கேட்கவில்லை.
எம்மதமும் சம்மதம் என்கிறார். அதையே மற்ற மதத்தினரிடமும் எதிர்பார்க்கிறார்.
தன்னிடம் குறைகள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். தன்னிடம் மட்டுமே குறைகள் இருக்கின்றனவா என்பதே அவருடைய கேள்வி.
பெரும்பான்மை என்பதை பேராதிக்கமாக அவர் ஒருநாளும் முன்வைத்ததில்லை. பெரும் தண்டனையாக ஆக்கப்படுவதைத்தான் கேள்வி கேட்கிறார்.
பாகிஸ்தானுக்குப் போ என்று ஈ.வெ.ரா. சொன்னதுபோல் சொல்லவில்லை. பாகிஸ்தானைப் பார்; அங்கு சிறுபான்மைகள் நடத்தப்படும்விதத்தைவிட 100 மடங்கு மேலாக இங்கு உரிமைகளும், சலுகைகளும், அதிகாரங்களும், அதிகார துஷ்பிரயோக உரிமைகளுக்கும் கிடைத்திருப்பதைப் பார் என்று சொல்கிறார்.
தேசத்தே நேசி… தர்மத்தைப் பின்பற்று… கலாசாரத்தைக் கைவிடாதே என்கிறார்.
இந்துத்துவர் ஆயுதத்தை எப்போது எடுக்கிறார்; எப்போது கீழே போடுகிறார்; எதனால் எடுக்கிறார் என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கச் சொல்கிறார்.
ஜிஹாதிகளின் வன்முறை, சிலுவைப் போர் கொடூரங்கள், கம்யூனிஸ பயங்கரவாதம், புலிகளின் வன்முறை ஆகியவற்றின் முன்னால் இந்துத்துவத் தாக்குதல்கள் எண்ணிக்கையிலும் எண்ணத்திலும் மிகவும் குறைவானது. அதிகம் அவதூறு செய்யப்படுவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் உள்ளதிலேயே அதிகம் அப்பாவி அதுவே என்பது.
ஒரு துளி ரத்தம் என்றாலும் கண்டிக்கத் தகுந்ததுதான். ஒரு துளி கூட ரத்தம் சிந்த வைக்காதவராலேயே கண்டிக்கப்படவேண்டும். காட்டுக்குள் சுள்ளி பொறுக்கும் பூர்வகுடியை மர ஆலை வியாபாரி கண்டிக்கக்கூடாது.
மத மாற்றம் என்பதை பூர்வ கலாசாரப் படுகொலை என்று இந்தியா உலக அரங்கில் அறிவிக்கவேண்டும்.
மத மாற்றம்/பூர்வ கலாசாரப் படுகொலை ஒரு பாவச் செயல்; மத மாற்றம்/பூர்வ கலாசாரப் படுகொலை தண்டனைக்குரிய குற்றம் என்று பள்ளி நூல்களில் பொன் எழுத்துகளில் அச்சிடவேண்டும்.
தர்ம சாஸ்திரங்களில் தலித் என்ற பெயரே/அடையாளமே கிடையாது. தலித் ஒடுக்குமுறை என்பது தலித் என்ற பெயர் முன்வைக்கப்பட்ட நவீன காலத்தில்தான் ஆரம்பித்தது.
நாலாம் வர்ணத்தினரில் பட்டியல் ஜாதியினரும் அடக்கம். அவர்களுக்கென்று தனி விதிமுறைகள், ஒடுக்குமுறைகள் எதுவும் இல்லை. நாலாம் வர்ணத்தினருக்கு இருந்த அதே சலுகைகள், கட்டுப்பாடுகள் பட்டியல் ஜாதிகள் என்று பிரிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.
இந்து தர்ம சமூகத் தொகுப்பில் பட்டியல் ஜாதி, பட்டியல் பழங்குடி, மலைவாசி, வனவாசி, நாடோடிகள், நரிக்குறவர்கள் என்ற நவீன காலப் பிரிவினைகள் எதுவுமே கிடையாது. அன்று இருந்த வாழ்வியல் நால் வர்ண தர்ம அடையாளம்; நாலாயிரம் ஜாதி குல அடையாளம்.
எல்லா ஜாதிகளில் இருக்கும் அர்ச்சகர்களும் புனிதச் சடங்குகள் செய்பவர்களும் வழிகாட்டிகளும் அந்தந்த ஜாதிகளின் பிராமண வர்ணத்தினரே.
பிராமண வர்ணத்திலும் கடைநிலை ஜாதிகள் உண்டு. நாலாம் வர்ண ஜாதிகளிலும் அவர்களுக்கான க்ஷத்ரியர், வைஸ்யர் உண்டு.
நவீன கால உரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் மரபான காலத்துக்கு பொருத்திப் பார்ப்பது தவறு. அப்படியே பார்த்தால் உலகில் பிற எந்த சமூகமும் மதமும் நாடும் எவ்வளவு மோசமாக முன்பு இருந்ததோ அதைவிட பாரதம் அந்த விஷயங்கள் அனைத்திலும் மேலாகவே இருந்திருக்கிறது.
ஒரே நாட்டின் மரபான காலத்தையும் நவீன காலத்தையும் ஒப்பிடுவதைவிட ஒவ்வொரு நாட்டின் மரபான காலங்களை ஒப்பிடவேண்டும். ஒவ்வொரு நாட்டின் நவீன காலங்களை ஒப்பிடவேண்டும்.
உலகில் பிற மதங்களில் அடிமை முறை இருந்தபோது இந்து தர்மத்தில் வர்ணாஸ்ரமம் இருந்தது.
வர்ணாஸ்ரமம் ஒன்றாக இருந்தவர்களை நான்காகப் பிரிக்கவில்லை. நான்காக இருந்தவர்களை ஒன்றாகத் தொகுத்தது.
மனிதர்களை ஆயிரம் ஜாதிகளாகப் பிரிக்கவில்லை. ஆயிரம் ஜாதிகளாக இருந்த மனிதர்களை ஒரு நூலில் கோர்த்தது.
Dharmic Nation First. Offence is THE Best Defence.
ஒன்பதாவது ஆட்டம் ராஜஸ்தான் vs குஜராத் – அகமதாபாத் – ஏப்ரல் 4
முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அந்த அணியின் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (36 பந்துகளில் 55 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்), வைபவ் சூர்ய வன்ஷி (18 பந்துகளில் 31 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), துருவ் ஜுரல் (42 பந்துகளில் 75 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடியதால் ராஜஸ்தான் அணி 210 ரன் எடுத்தது. பின்னர் இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் (44 பந்துகளில் 73 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்), ஜாஸ் பட்லர் (14 பந்துகளில் 26 ரன்), ரஷீத் கான் (16 பந்துகளில் 24 ரன்) மற்றும் ரபாடா (16 பந்துகளில் 23 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் தோல்வியுற்றது. ராஜஸ்தான் அணியின் ரவி பிஷ்னோய் 4 விக்கட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
பத்தாவது ஆட்டம் – ஹைதராபாத் vs லக்னோ – ஹைதராபாத் – ஏபரல் 5 – முதல் ஆட்டம்
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் நான்கு வீரர்களான ட்ராவிஸ் ஹெட் (7 ரன்), அபிஷேக் ஷர்மா (பூஜ்யம்), இஷான் கிஷன் (1 ரன்), லியம் லிவிங்க்ஸ்டோன் (14 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆட வந்த ஹென்றி கிளாசன் (41 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (33 பந்துகளில் 56 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். அதனால் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்க இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. லக்னோ அணியின் முகம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான் மூவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் எய்டன் மர்க்ரம் (27 பந்துகளில் 45 ரன்), ரிஷப் பந்த் (ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 68 ரன், 9 ஃபோர்) எடுத்தனர். ஆட்டநாயகனாக முகம்மது ஷமி அறிவிக்கப்பட்டார்.
பதினோராவது ஆட்டம் – பெங்களூரு vs சென்னை – பெங்களூரு – ஏபரல் 5 இரண்டாவது ஆட்டம்
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 250 ரன் எடுத்தது. இந்த ஐபிஎல்லின் அதிக பட்ச ஸ்கோர் இது. ஐபிஎல்லில் அதிக பட்ச ஸ்கோர் 2024ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி பெங்களூரு அணிக்கு எதிராக அடித்த 287/3 ஆகும். பெங்களூரு அணியின் டிம் டேவிட் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன், 3 ஃபோர், 8 சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். அவரைத்தவிர பில் சால்ட் (30 பந்துகளில் 46 ரன்), விராட் கோலி (18 பந்துகளில் 28 ரன்), தேவதத் படிக்கல் (29 பந்துகளில் 50 ரன்), ரஜத் படிதர் (19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர் கூட சரியாகப் பந்துவீசவில்லை.
251 என்றா மிகப் பெரிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை அணியின் சஞ்சு சாம்சன் (9 ரன்), கெய்க்வாட் (7 ரன்), ஆயுஷ் மாத்ரே (1 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சர்ஃப்ராஸ் கான் (25 பந்துகளில் 50 ரன்), பிரஷாந்த் வீர் (29 பந்துகளில் 43 ரன்), ஜமி ஓவர்டன் (16 பந்துகளில் 37 ரன்) சிறப்பாக ஆடினர். இருப்பினும் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சென்னை அணி 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூரு அணியின் புவனேஷ் குமார் 3 விக்கட், டஃப்ஃபி, அபிநந்தன் சிங், க்ருணால் பாண்ட்யா தலா 2 விக்கட்டுகள் எடுத்தனர். டிம் டேவிட் ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.
பன்னிரண்டாவது ஆட்டம் – கொல்கொத்தா vs பஞ்சாப் – கொல்கொத்தா – ஏபரல் 6
கொல்கொத்தாவில் ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழையால் தடைபட்டது. முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 3.4 ஓவர்கள் விளையாடி 2 விக்கட் இழப்பிற்கு 25 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இறுதியில் ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு கூறினர் .
மதுரை மாவட்டத்தின், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்களை பல இடங்களில் உள்ள அரசின் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர்.
சில இடங்களில் மூடைகளாக பிடித்து கட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்தும் உள்ளனர் ஒரு சில பகுதிகளில் நெல்லை கொள்முதல் செய்யாமலும் சில பகுதிகளில் மூடைகளாக கட்டி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களுக்கு அதிகாரிகள் கொண்டு செல்லாமல் இருப்பதால், மூடைகள் தேங்கியும் நெல் மணிகள் மலை போல் குவிந்தும் இருப்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் ராயபுரம் ,ரிஷபம், திருமால் நத்தம், திருவாலவாயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல் மணிகள் ராயபுரம் தேவாலயம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் , குடோன்களுக்கு கொண்டு செல்வதற்காக சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் குடோன்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுவதால் தற்போது விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
குடோன்களுக்கு, கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ராயபுரம் கிராமத்தின் மந்தை பகுதி சர்ச் பகுதி தெருக்களில் நெல்கள் குவித்து வைக்கப்பட்டும் நெல் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டும் இருப்பது விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது .
இது குறித்து, விவசாயிகள் தரப்பில் கூறுகையில், வரிசைப்படி தான் வாகனங்களை அனுப்ப முடியும் என அதிகாரிகள் கூறுவதால் பல நாட்களாக நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.
இதனால், திடீர் மழை பெய்யும் பட்சத்தில் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடையும் நிலைக்கு தள்ளப்படும் இதன் காரணமாக ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோன்று, சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம், இரும்பாடி ,கருப்பட்டி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் நெல் மூட்டைகள் குவியல்களாகவும் நெல் மூட்டைகளாகவும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் .
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
திமுகவின் உள்நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பை திமுக அரசு அடாவடியாக செயல்படுத்தவில்லை. இதற்காக அரசியல் சாசனத்திற்கு எதிராக, அரசு அதிகாரிகளை செயல்பட வைத்தது திமுக செய்த தேச துரோகச் செயலாகும்.
அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளனர்.
ஆனால் அங்கு கலவரத்தை உருவாக்க முயன்றவர்கள் யார்? திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அங்கு கந்தூரி நடத்த ஆட்டை தோளில் போட்டு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் திமுக கூட்டணியினர். அதற்கு உடந்தையாக இருந்தவர் திமுகவின் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது.
அவரைத் தொடர்ந்து இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் மலைமீது பிரியாணி கொண்டு போய் சாப்பிட்டு விட்டு எச்சிலை அங்கே போட்டதை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டார். திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் வாரிய சொத்து என்று பேட்டி அளித்தார்.
எம்பி கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரது கட்சியினரை கலவரம் செய்ய தூண்டி விட்டது உண்மை தானே.
முருக பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அதற்கு 144 தடை உத்தரவு போட்டு தடுத்தது திமுக அரசு.
எல்லா தடைகளையும் சட்டரீதியாக உடைத்து முருக பக்தர்கள் மன உணர்வை வெளிப்படுத்தியது இந்து முன்னணி.அதன்பிறகு கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றபோது சட்டத்திற்கு புறம்பாக நடந்தது திமுக அரசு.
கோவிலுக்குச் சாதகமாக வந்த தீர்ப்புக்கு எதிராக வாதாட முருக பக்தர்களின் காணிக்கை நிதியை செலவு செய்தது எத்தகைய கொடுமை. இதனை வெட்கமே இல்லாமல் செய்தது திமுக அரசு.
இத்தனை சட்டவிரோதச் செயலுக்கும் காரணம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்.
திமுகவின் நயவஞ்சகச் செயலை தமிழர்கள் புரிந்து கொண்டு ஜனநாயக வழியில் தேர்தலில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
முதலில் ஆடிய லக்னோ அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 141 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் 35 ரன், அப்துல் சமது 36 ரன் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக அணியின் தலைவர் ரிஷப் பந்த் 7 ரன் மட்டுமே எடுத்தது அணிக்கு மிகவும் மோசமாக இருந்தது. டெல்லி அணியில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கட்டுகள் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சமீர் ரிஸ்வி 70 ரன் (5 ஃபோர், 4 சிக்சர்) அடித்தார்.
ஆறாவது ஆட்டம் – ஹைதராபாத் vs கொல்கொத்தா – கொல்கொத்தா – ஏப்ரல் 2
ஹைதராபாத் அணி இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியது 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கட் இழப்பிர்கு 226 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (21 பந்துகளில் 46 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (21 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். இஷான் கிஷன் 14 ரன் அடித்தார். அவருக்குப் பின் வந்த ஹென்றி கிளாசன் (35 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (24 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரும் அதிரடியாக ஆடினர். கொல்கொத்தா அணியில் முசர்பானி 4 விக்கட்டுகள் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய கொல்கொத்தா அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. கொல்கொத்தா அணியில் ரகுவன்ஷி 52 ரன்னும், ரிங்கு சிங் 35 ரன்னும், ஃபின் ஆலன் 28 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆட்டநாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
ஏழாவது ஆட்டம் – சென்னை vs பஞ்சாப்- சென்னை – ஏப்ரல் 3
சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது. முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் இந்த முறையும் குறைந்த ரன்னுக்கு (7 பந்துகள், 7 ரன், ஒரு ஃபோர்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர், அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் (22 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர்) சரியாக விளையாடவில்லை. பின்னர் வந்த ஆயுஷ் மாத்ரெ (43 பந்துகளில் 73 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே (27 பந்துகளில் 45 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினர். கடைசி நேரத்தில் சர்ஃப்ராஸ் கான் (12 பந்துகளில் 32 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) அதிரடியாக ரன் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியில் விஜயகுமார் வியாஷ்க் 2 விக்கட்டுகளும் பார்லட், யான்சென், சாஹல் மூவரும் தலா ஒரு விக்கட்டும் எடுத்தனர்.
இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (11 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அதிரடித் தொடக்கம் தந்தார். அவருடைய ஜோடியான ப்ரப்சிம்ரன் சிங் (34 பந்துகளில் 43 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) நன்றாக ஆடினார். பின்னர் வந்த கூப்பர் கன்னோலி (36 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (29 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினர். இதனால் 18.4 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
எட்டாவது ஆட்டம் – டெல்லி – ஏப்ரல் 4 – மும்பை vs டெல்லி
முதலில் ஆடிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (26 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (36 பந்துகளில் 51 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), நமன் தீர் (21 பந்துகளில் 28 ரன்), மிட்சல் சாண்ட்னர் (13 பந்துகளில் 18 ரன்)ஆகியோர் சிறப்பாக ஆடினர். பிறர் சோபிக்கவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் பதுன் நிசாங்கா (30 பந்துகளில் 44 ரன்), சமீர் ரிஸ்வி (51 பந்துகளில் 90 ரன், 7 ஃபோர், 7 சிக்சர்), டேவிட் மில்லர் (18 பந்துகளில் 21 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 18.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்து அந்த அணியை வெற்றி பெறச்செய்தனர்.