Home Blog Page 3

சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

nepal tibet flood - 2026

பனியாற்று ஏரி உடைந்ததன் விளைவாக ஏற்பட்டிருக்கக்கூடிய பனி மற்றும் பாறைகளின் பனிச்சரிவு, பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி, நேபாளத்தின் சில பகுதிகளை சூறையாடியது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் திபெத் மற்றும் நேபாள கிராமங்களுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. 

காத்மாண்டுவைச் சேர்ந்த சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையத்தின் காலநிலை நிபுணர்கள், ஒரு பனிப்பாறையிலிருந்து ஏற்பட்ட பனிச்சரிவே புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். போத்தேகோஷி ஆற்றின் துணை நதியான லெண்டே கோலா ஆற்றில் அதிகபட்ச வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். 

“கடந்த பதினான்கு மாதங்களில் லெண்டே கோலா ஆற்றில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை, நேபாளப் பக்கத்தில் உள்ள ஒரு பனிப்பாறையிலிருந்து ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு, ஆற்றைத் தடுத்து, கீழ்நோக்கி திடீர் வெள்ளப்பெருக்கை வெளியிட்டதால் இவ்வாறு ஏற்பட்டது” என்று காலநிலை ஆராய்ச்சிக் குழுவின் பேரிடர் இடர் குறைப்பு நிபுணரான சஸ்வதா சன்யால் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“வெப்ப மயமாகும் இமயமலைப் பகுதியில், முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதே பாதுகாப்புக்கான முதல் படியாகும்,” என்றார் அவர்.  மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான ரசுவா மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மலைப் பகுதியில் நிலவிய கடும் வெப்பத்தின் விளைவாக அண்டை நாடான திபெத்தில் உள்ள ஒரு பனியாற்று ஏரி நிரம்பி வழிந்தபோது, இதேபோன்ற திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. அப்போது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. 

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலகின் பிற பகுதிகளை விட இப்பகுதி வேகமாக வெப்பமடைந்து வருவதால், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய இமயமலைப் பகுதி கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. இப்பகுதியில் வெப்ப அலைகள், கனமழை மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்து குஷ் இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகவும், குறிப்பாக உலகளாவிய வெப்பநிலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக 2000-ஆம் ஆண்டு முதல் பனி இழப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் காத்மாண்டுவைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டறிந்தனர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை தெற்காசியா முழுவதும் அடிக்கடி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தூண்டுகிறது. இப்பகுதியில் தீவிர வானிலை நிகழ்வுகளின் நிகழ்வெண் மற்றும் தீவிரத்தை பருவநிலை மாற்றம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இன்றைய திடீர் வெள்ளப்பெருக்கின் விளைவாக, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 291 பேர் உட்பட மொத்தம் 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

காலை 9 மணியளவில் போதேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல கிராமங்களையும், சாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்களையும் அழித்ததாக அதிகாரிகள் கூறினர். நேபாளத்தின் பல மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், போதேகோஷி, திரிசூலி மற்றும் நாராயணி ஆகிய ஆறுகளின் கரைகளிலிருந்து விலகி இருக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.

நேபாளக் காவல்துறை மற்றும் பிறரால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள், நிலத்தால் சூழப்பட்ட அந்நாட்டின் மலைப்பகுதிப் பள்ளத்தாக்குகள் வழியாகச் சேறு கலந்த வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் காட்டின. பாதிக்கப்பட்ட பகுதிக்குத் ஹெலிகாப்டர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்தது. 

நீர்மின்சாரம் மற்றும் சூரியசக்தி நிலையங்கள் உட்பட சுமார் 430 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக நேபாள மின்சார ஆணையம் கூறியது. பல நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன நயா பைசா கணக்கு!

upi 10th year - 2026

நயா பைசா கணக்கு!


பாரதத்தில் இப்போது நாம் பார்க்கும் மிகக் குறைந்த பட்ச நாணய மதிப்பே 1 ரூபாய் என்று உள்ளது. இன்றைய தலைமுறைக்கு ரூபாய் தவிர வேறு நாணய மதிப்பின் பெயர் தெரியாது.

நினைவில் இருந்து, என் பள்ளி நாட்களில் குறைந்த பட்ச நாணய மதிப்பாக 5 பைசா இருந்தது. 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா இவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போதும் சில நாணயங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 1 பைசா, 2 பைசா என்றெல்லாம் இருந்ததை மூத்தோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

என் தாயார், ‘ஓட்டைக் காலணாவை வளையலில் கோத்து கையில் அணிந்திருப்போம், சிறுவயதில் தாவணித் தலைப்பில் முடிச்சுப் போட்டு வெளியில் செல்வோம்’ என்பார். வீட்டில் தாமரைப் பூ நாணயங்கள் வெள்ளிக்கிழமை லக்ஷ்மி பூஜைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

பேச்சு வழக்கில், காலணா – நாலணா; அரையணா – எட்டணா என்பவை சில வருடங்களுக்கு முன் கூட நம் பழக்கத்தில் இருந்தன. ஒரு ரூபாய்க்கு இரண்டு அரையணா, நாலு காலணா என்றவாறு சில்லறை மாற்றிக் கொண்ட அனுபவமும் நமக்கு உண்டு.

பழைய புத்தகங்களைப் புரட்டும் போது, 1-8-4 என்று விலை குறிப்பிடப் பட்டிருக்கும். அது 1 ரூபாய் 8 அணா 4 பைசா என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நாட்களில் நாம் 1 ரூபாய்க்கு 100 பைசா என்று சொல்லி விடுவோம்.
ஆனால் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில்,
12 பைசா – 1 அணா
16 அணா – 1 ரூபா
அதாவது 1 ரூபாய்க்கு 12*16 =192 பைசா என்று இருந்துள்ளது.

இந்த 16 அணா = 28 அணா / 44அணா = 1 ரூபாய் என்ற கணக்கு இப்போதும் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் பைசா விஷயத்தில் ஒரு நேரத்தில் ஏதோ ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதாவது ஒரு ரூபாய்க்கு 100 பைசா வரும் வகையில்!

அண்மைக்கால கணக்குப்படி, ஒரு அணாவுக்கு 6.25 அதாவது ஆறேகால் பைசா என்று வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் அது 12 பைசா என்று இருந்துள்ளது. கிட்டத்தட்ட புதியதற்கும் பழையதிற்கும் பாதிக்குப் பாதி மதிப்பில் இருந்துள்ளது. அப்போதே ‘பைசா மதிப்பு இழப்பு’ நடவடிக்கை பாய்ந்துள்ளது தெரிகிறது. அதாவது, பழையதில் இருந்து புதியதாகும் போது மதிப்பு கூடத்தான் செய்யும் பல விஷயங்களில்! ஆனால் பைசாவைப் பொறுத்த அளவில் அது ‘நயா’பைசாவாக உருவெடுத்த போது மதிப்பு பாதிக்குப் பாதி அணா முன் மண்டியிட்டுத் தோற்றுள்ளது தெரிகிறது.

இப்போதும் சில பெரியவர்களின் பேச்சு வழக்கைக் கேட்கிறோம்…. நயா பைசா அவங்கிட்டேர்ந்து நகத்த முடியாது… என்று! இதில் இன்னுமொரு நாணயப் பெயரும் சேர்ந்திருக்கிறது, பெரியவர்களின் பேச்சுவழக்கில் இப்போதும் கேட்கலாம். அது தம்பிடியும் பிரயோஜனமில்லை என்பது. தம்பிடி என்பதும் ஒரு நாணயப் பெயரே. அதாவது மூணு தம்பிடி ஒரு பைசாவாம். இது நம் நாடு சுதந்திரம் பெற்ற 1947ன் போது செல்லாததாகிவிட்டது. ஆக, தம்பிடியும் மறைந்து போனது.

நயா என்றால் புதிய என்று பொருள். எனில் அப்போதே அது புதிய, பழைய என்ற வடிவத்தை எடுத்திருக்கிறது. இது எப்போது என்று பார்த்தால், 1957 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து! அன்று தான் நயா இந்தியா, நயா பைசா முறைக்கு – அதாவது தசம எண்களின் முறைக்கு மாறியிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் – இப்போது நாம் 2026-27 காலத்தில் இருக்கிறோம் – நயா பைசா நம் சொற்களில் தாண்டவமாடும் 70ஆம் ஆண்டில் இன்று இருக்கிறோம்.

என்றாலும் இந்த ‘நயா’வும் கூட அறிமுகமான ஏழே வருடங்களில் விடைபெற்று விட்டது. 1964 ஜூன் 1 முதல் நயா காணாமல் போய், வெறும் பைசா மட்டுமே புழக்கத்துக்கு வந்தது. 2011 ஜூன் 30 வரை எளியவர்களில் கைகளில் கோலோச்சிய பைசாவும் செல்லாததாக்கப்பட்டு, காட்சியில் இருந்து காணாமல் போய், இப்போது ரூபாய் மட்டுமே கைகளில் உள்ளது.

ஆக, தம்பிடி, நயா பைசா, அணா, பிறகு பைசா எல்லாம் காணாமல் போய், ரூபாய் என்ற ஒற்றை நாணயத்தின் காலத்தில் பாரதப் பிரதமரான நரேந்திர மோடியின் சாதனை என்று சொல்லப்படும் யுபிஐ – அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது 10 ஆண்டுகள் ஆகின்றன என்கிறது செய்திக் குறிப்பு! இந்தப் பத்து ஆண்டுகளில், முதல் ஆண்டில் ஒரு கோடியே 80 லட்சம் என்று இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள் தற்போது நாள் ஒன்றுக்கு 76 கோடி பரிவர்த்தனைகள் என்று வளர்ந்திருகிறது.

இப்போதும் நம் ஊர்களில் பார்த்திருப்போம், புதிதாக சைக்கிள் அல்லது பைக் வாங்கி மாலை போட்டு முதல் முதலாக அதை ஓட்டிப் பார்க்கும் ஆவலில் சீட்டில் அமரும் போது, “ஏலேய் கால இப்படி தூக்கிப் போடாதலே, கீழத்தான் விழுவே” என்று மனப் பொச்சரிப்பைக் காட்டும் மகான்கள் நிறைதேசத்தில், யுபிஐ அறிமுகப் படுத்தப்பட்ட காலங்களில், என்ன நான்சென்ஸ் இது என்று பானா சீனா பார்லிமெண்டில் பறை சாற்றியதைப் பார்த்துப் பதறியது, பஞ்சாகப் பறந்து போனது, பூக்கட்டும் பாட்டிமார்கூட க்யுஆர் கோடுடன் அமர்ந்திருக்கும் அழகைக் காண்கையில்!

எங்கு நோக்கிணும் யுபிஐ.,! முன்பெல்லாம் தொப்பை போட்ட தொங்கிய உடலாய்த் திகழ்ந்த பர்ஸ்கள் இப்போது மெலிந்து உருக்குலைந்து, வேண்டுமா வேண்டாமா என்ற டாஸ் போடுதலில், வேண்டாம் என்றே முடிவுகட்டி வீடுகளின் பரண்களில் அடைக்கலமாகிவிட்டது. பேசிக் கொண்டிருந்த செல்ல போன்கள் காலப்போக்கில் செல்பேசியாகி, கைபேசியாகி, இப்போது பணம் கொடுக்கல் வாங்கலிலும் கைரேகை, ஓடிபி, பாஸ்வர்ட் என்று கையடங்கிப் போய்விட்டது. எனவே அணாவும், பைசாவும் போய்ச் சேர்ந்த கதை போல வருங்காலத்தில் ரூபாயும் கண்ணாமூச்சி காட்டக்கூடும்!

இவ்வளவு இருந்தாலும், இன்றும் கூட, பட்ஜெட் போடும்போது, ஒரு ரூபாய்க்கு இத்தனை பைசா வரவு / செலவு என்று சொல்வதைக் கேட்கும் போது, சிறு வயதில் மஞ்சள் / ஆரஞ்சு நிற டீத்தூள் பொட்டலத்தில் கிளியுடன் அச்சிடப்பெற்ற 5 பைசாதான் கண்முன் வந்து போகும்!

இவ்வளவு நேரம் மெனக்கெட்டு நீங்கள் படித்த இந்த விஷயமும் நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லாதது என்று விலக்கிவிட்டுப் போகலாம். ஆனாலும் சிலருக்கு இந்த நயா பைசா, நயாகரா நீர்வீழ்ச்சி போல் நினைவலைகளைக் கொட்டக்கூடும்!

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

புதிய விடியலுக்கு அச்சாரம்!

80th independence day speech by modiji - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார்

” எரிசக்தி பாதுகாப்பின் மிகப்பெரியதொரு பாதை அணுசக்தி ஆற்றல். நாம் புதிய இலக்கை நோக்கி செல்லும் வழியை தேர்ந்தெடுத்துள்ளோம். 2047 க்குள் நாம் 100 கிகாவாட் அணுசக்தி ஆற்றல் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். வரும் பத்தாண்டுகளில் ஐந்து புதிய அணுசக்தி ஆலைகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நாம் துரித ஈணுலை தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இதனால் அணு சக்தி ஆற்றலில் தற்சார்பை நோக்கி பெரிய காலடியை வைத்திருக்கிறோம். “

— 15 ஆகஸ்டு ’26 தில்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி ஆற்றிய உரையில்

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான போரை தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. ஆரம்பத்தில் அவர்கள் வெற்றி பெற்றது போல் தெரிந்தாலும் ஈரான் தோல்வி அடையவில்லை. இன்னமும் சவால் விட்டு கொண்டுதான் இருக்கிறது. ஹெர்முஸ் நீரிணையை வர்த்தக போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை அமெரிக்கா இன்னும் அடையவில்லை. ஆனால் பாரசீக வளைகுடா பகுதி முழுக்கவும் போரினால் நிலை தடுமாறி இருக்கிறது. உலக பொருளாதாரமும் சிக்கலில் உள்ளது.

டிரம்ப் செய்த பிழை குறிக்கோளை தெளிவு படுத்தாமல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அதனால் போர் யுக்திகளில் தடுமாற்றம். பகையாளியின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று கணிக்க தவறியது. ராணுவ நடவடிக்கையை பின்வாங்க குறைந்தபட்ச வெற்றி இலக்கை கூட நிர்ணயிக்க அவரால் முடியவில்லை. ஜோ கென்ட் என்ற ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ‘இலக்கை தேடி அலையும் படையெடுப்பு’ என்று இதை கிண்டலடித்துள்ளார்.

இருதரப்பு சண்டை என்பது விரிவடைந்து ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஈராக்கை மையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள், ஹூத்தீஸ் பயங்கரவாத படை என பலரும் உள்ளே நுழைந்து தாறுமாறாக குண்டு வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க படைகளின் இயலாமை வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. ஈரான் இன்னமும் குண்டுகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ராணுவத்தில் வெற்றி அதன் ராஜதந்திர சொதப்பல்களால் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா ஈரானுடன் நட்புறவு கொண்டிருந்த இந்தியாவில் நிலை எப்படி இருக்கிறது ?

அமெரிக்கா , இஸ்ரேலுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொண்டுள்ள இந்தியா அதேவேளையில் ஐக்கிய அரபு, சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளுடனும் நட்புறவு கொண்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எண்ணெய் தொடர்ந்து கிடைத்தது மட்டுமின்றி இதர வர்த்தகங்களும் செழிப்படைந்தன. வளைகுடா நாடுகளில் பணியில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பும் சம்பளமும் முக்கிய காரணம். அதே வேளையில் அவர்கள் நலனையும் நட்புறவினால் பாதுகாக்க முடிந்தது. அமெரிக்கா ஈரான் மோதல் இந்த சமநிலையை குலைத்து விட்டது.

இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு. 80 சதவீதம் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறோம். அதில் பாதியளவு வளைகுடா நாடுகளில் இருந்து வருகிறது. ஹெர்முஸ் வழியாகத்தான் அவை வருகின்றன. போரினால் எண்ணெய்க்கு தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. ஹெர்முஸ் நீரிணையை தவிர்த்து விட்டு சுற்றி வளைத்து வந்தால் நேரமும் செலவும் அதிகமாகி விடுகிறது. இது வீடுகளில் அடுப்பு எரிக்க பயன்படுத்தும் எரிவாயு, சாலையில் ஓடும் வாகனங்கள், விவசாய உரங்களில் எதிரொலிக்கிறது. அது மட்டுமன்றி ஐரோப்பா, வட அமெரிக்கா நாடுகளுடனான நம்முடைய வர்த்தகமும் வளைகுடா, செங்கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பணியில் இருக்கும் ஒன்பது மில்லியன் இந்தியர்களின் வாழ்வும் ஊசலாட்டத்தில் உள்ளது. இதுவரை அங்கிருந்து பெரிய அளவில் வெளியேற்றம் நடக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

ஈரானில் உள்ள சபஹார் துறைமுக திட்டத்தில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானை தவிர்த்து விட்டு ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுக்கு தொடர்பு கொள்ள முடிந்தது. அடிப்படையில் இது மும்பாயையும் மாஸ்கோவையும் இணைக்கும் திட்டம். இப்போது அதுவும் சிக்கலாகி உள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு என்ற மிகப்பெரிய சாலை திட்டத்திற்கு மாற்றாக இந்தியா முன்னெடுத்த இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார தாழ்வாரம் என்ற (கப்பல், ரயில்) இணைப்பு திட்டமும் இப்போது முடங்கியுள்ளது. இந்தியா கடுமையான முயற்சி செய்து பல லட்சம் கோடிகள் முதலீடு செய்துள்ள திட்டங்களை எல்லாம் ட்ரம்ப் இந்த போர் மூலம் மறைமுகமாக நாசம் செய்துள்ளார்.

கச்சா எண்ணெய் கிடங்குகளின் கொள்ளளவு திறன் வெறும் மூன்று நாட்களுக்கு தாங்கும் அளவில்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மோடி அரசு அதனை அதிகரித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெயை போல பெட்ரோலிய, இயற்கை வாயுவை நீண்ட காலம் சேமிக்க முடியாது. ரஷ்யா உக்ரைன் போரினால் இந்தியா ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கி சேமித்தது. அதை நிறுத்த, குறைக்க அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்தது. அதனால் வெவ்வேறு இடங்களில் இருந்து வாங்க இந்தியா முயற்சித்தது. வழக்கமான வளைகுடா நாடுகளுடன் பிரேசில், குயானா, நைஜீரியா, அங்கோலா, வெனிசுலா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியை விரிவு படுத்தியது. ஆனால் அதற்கு வழியான ஹெர்முஸ் நீரிணை, செங்கடல், பாப் எல் மண்டேப் நீரிணை. அந்த வழி போரினால் முடங்கியுள்ளது.

அமெரிக்கா, அரேபியா, ஈரான், வளைகுடா நாடுகள் இவற்றுடன் இராணுவ கூட்டணி வைத்துக் கொள்ளாமல் இந்தியா சுதந்திரமான நிலைப்பாட்டை நீண்ட காலமாக கடைபிடித்து வருகிறது. ஆப்ரேஷன் சங்கல்ப் என்ற பெயரில் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை தனது வர்த்தக கப்பல்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அது ஓரளவுக்கு உதவியது என்றாலும் அது ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டது. நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில் பக்க சாய்வு கொண்டு போரில் ஈடுபட முடியாது.

ரஷ்யாவில் இருந்து குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருந்த எண்ணெய் அமெரிக்க நிர்பந்தத்தால் குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்க்கு மிகப்பெரிய வாடிக்கையாளர் சீனாதான். என்றாலும் அமெரிக்கா இந்தியா மீது தான் அதிக அழுத்தத்தை கொடுத்தது. அதனால் இப்போது எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதம் அமெரிக்காவை சார்ந்ததாக மாறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா லாபம் அடைந்துள்ளது மட்டுமின்றி உலக வர்த்தக ஊடகமாக/ நாணயமாக டாலரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா இதிலும் மாற்று வழியை தேடி அடைந்த போதிலும் எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் நீடிக்கிறது.

1990 களின் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது லைசென்ஸ் – பர்மிட் – கோட்டா என்றிருந்த சோசலிச கொள்கையை கைவிட செய்தது. சந்தை பொருளாதாரம் அமைப்பை நோக்கித் தள்ளியது . இப்போது அமெரிக்கா – ஈரான் போர் வேறொரு சிக்கலையும் அதற்கான தீர்வையும் நோக்கி நகர்த்துகிறது. ரஷ்யா , உக்ரைன் போரினால் எண்ணெய் இறக்குமதியில் ஒரு நாட்டை சார்ந்து இருக்க முடியாது என்று பல இடங்களில் எண்ணையை வாங்கும் யுக்தியை இந்தியா மேற்கொண்டது. இப்போது பிரச்சனை மேலும் சிக்கலாகி உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணெய் , நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் உலகில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்காது. எண்ணெய் கிணறுகள் வற்றிப் போகும். அதற்கும் காலகெடு உள்ளது. 21 நூற்றாண்டில் எண்ணெயை மட்டுமே பொருளாதார பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்கு சார்ந்து இருக்க முடியாது என்ற நிலையை இந்தியா உணர்ந்துள்ளது. அதனால் மின்கலம் (பேட்டரி ) , எத்தனால் கலப்பு, ஹைட்ரஜன் தொழில்நுட்பம், அணு மின்சக்தி, சூரிய மின்சக்தி, காற்றாலைகள், புனல் மின்சாரம் என்று தனது தற்சார்பை வலுவாக வழி கண்டு வருகிறது.

உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் அணு சக்தியை பெருமளவு சார்ந்துள்ளன. காங்கிரஸ் ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் அணுசக்தி நிலையத்தை நிறுவ முனைந்தது. ஆனால் இப்போது அந்நிய நிதிஉதவி திருத்த சட்டத்தை எதிர்க்கும் அமெரிக்கா மற்றும் அதன் அடிவருடிகள் அப்போது ரஷ்ய கூடங்குளம் திட்டத்தை எதிர்த்தனர். பல கோடி முதலீடு பயனற்று போகும் நிலை மட்டுமின்றி ரஷ்யா உடனான உறவிலும் நெருடல் ஏற்பட்டது. வாஜ்பாய் பிரதமரான போது முதல் அணு உலை உற்பத்தி முழுமையும் தமிழகத்திற்கே தருவதாக கூறி முதல்வர் ஜெயலலிதாவை ஒப்புக்கொள்ள வைத்து ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அணு சக்தியை ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம். ஆக்கபூர்வமான வழியில் மட்டுமே பயன்படுத்துவோம் என்று இந்தியா அறிவித்துள்ள போதிலும் அது அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடவில்லை. வல்லரசு நாடுகளில் மேலாதிக்கத்தை ஏற்பதில்லை , சுதந்திரமான நிலைப்பாட்டை கடைபிடிப்பது என்பது எப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு. அதனால் ரஷ்யாவை தவிர வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை தரவில்லை. அதற்கு தேவையான யுரேனியத்தையும் தரவில்லை.

ஜி ஐந்து என்ற வல்லரசு நாடுகளின் அமைப்பு ஜி ஏழாக மாறிய போது அதில் இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஜவஹர்லால் நேரு சீனாவுக்கு கொடுத்ததால் பிரச்சனை சிக்கலானது. அதுமட்டுமன்றி உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு சரிந்தது. மோடியின் தலைமையில் இந்தியா வலிமை பெற்று வருகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆஸ்திரேலிய யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ளது. நிலைமை மாறி வருகிறது. உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது.

எண்ணெய் இறக்குமதியுடன் யுரேனியம் இறக்குமதி செய்வதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது என்று சிலர் முணுமுணுக்கலாம். அணுசக்தியின் உற்பத்தி செலவு குறைவு. இது மட்டுமே பதில் இல்லை. இந்தியாவில் தோரியம் ஏராளமாக கிடைக்கிறது. யுரேனியத்திற்கு மாற்றாக அதை பயன்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான தொழில்நுட்பம் இல்லை. இந்த ஆண்டு அந்த தொழில்நுட்பத்தை இந்திய அறிவியலாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து உருவாக்கி உள்ளனர். இனி யுரேனியத்திற்காக ஏங்க வேண்டாம். தோரியமும் அதற்கான தொழில் நுட்பமும் இப்போது இந்தியாவிலேயே உள்ளது. இதைதான் செங்கோட்டையிலிருந்து பிரதமர் மோடி தனது சுதந்திர தினஉரையில் “துரித ஈணுலை தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு மற்றும் தனியார் துறையும் இணைந்த கூட்டுப் பொருளாதாரத்தை ஜனசங்கத்தின் தலைவரான பண்டித தீனதயாள் உபாத்யாயா முன்வைத்தார். ஆனால் பண்டித நேருவும், இந்திரா காந்தியும் சோசலிச கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதால் 1990களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இந்தியா சந்தை பொருளாதாரத்தை ஏற்கும்படி கட்டாயத்துக்கு உள்ளானது . இப்போது கொள்கை தவறுகளினால் அல்லாமல் உலக சூழலால் இந்தியா தாமாகவே சிந்தித்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி வருகிறது.

நம் பாரம்பரியம், விழிப்புணர்வு பெற்ற நம் கையில்தான் உள்ளது!

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்


முன்பொரு விவாதத்தில் இந்து அல்லாத ஒரு பெண்ணிடம், “உங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஏன் முகம் உட்பட உடல் முழுவதையும் ஆடையால் மூடிக் கொள்கிறார்கள்?”  என்று கேட்டபோது அவர், “ஆண்களின் கவனத்தை ஈர்க்காமல் இருப்பதற்காக”  என்று பதிலளித்தார்.

“பிறரால் ஈர்க்கப்படாமல் இருப்பதற்கு ஆண்களும் தங்களை முழுமையாக மூடிக் கொள்ளலாமே. ஏன் செய்வதில்லை?”  என்று திரும்பக் கேட்டபோது, “அதற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது.  எங்கள் புனித நூலில்  கூறப்பட்டதை நாங்கள் கட்டாயமாகப் பின்பற்றுகிறோம்”  என்று அவர் கூறினார். அதற்கு மேல் வாதிட இடமே இல்லை. இது தம் மதத்தின் மீதும், புனித நூலின் மீதும் அவர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

மற்றொரு சம்பவம்: வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்,  இந்து மதத்தைச் சேர்ந்த மணமகனைத் தேடி ஒரு அமைப்பை அணுகினார். “ஏன் அப்படி விரும்புகிறீர்கள்?”  என்று அவரிடம் கேட்டபோது, ​​“என் மதத்தின் கடுமையான விதிகள் எனக்குச் சுமையாக இருக்கின்றன. அதனால் நான் ஒரு இந்து மணமகனை விரும்புகிறேன்”  என்று பதிலளித்தார். “உங்களுக்கு இந்து மதத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதா?” என்று கேட்டதற்கு, “இல்லை. இந்து கோவில்களுக்குச் செல்லாத, இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றாத ஒருவரையே நான் விரும்புகிறேன்”  என்று அவர் கூறினார்.

“உங்கள் மதத்திலேயே அத்தகைய மதச் சடங்குகளைப் பின்பற்றாத ஒருவரை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்கலாமே?” என்று அவரிடம் பரிந்துரைத்தபோது,  ​​அவர், “என் மதத்தில், நம்பிக்கையற்றவரோ அல்லது மதத்தைப் பின்பற்றாதவரோ ஒருவர்கூட இல்லை. ஆனால் இந்து மதத்தில்  மதத்தின் மீதான ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லாத பலரைக் காண முடியும்” என்று பதிலளித்தார். “வேறு எந்த மதத்திலும் அத்தகைய நாத்திகர்களை நீங்கள் காண முடியாது”  என்றும் அவர் விளக்கினார்.

மற்றொரு சம்பவம்: மதமாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக  வேறொரு மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்,  ஒரு இந்து பெண்ணையும்,  வேறொரு மதத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அவர் ஏளனமான தொனியில், “உங்கள் சிவன் தன் மனைவி சதி இறந்தபோது துயருற்றார்.  அவளது உடலைச் சுமந்து கொண்டு நாட்டியமாடிய போது சுயநினைவை இழந்தார். அப்போது விஷ்ணு தன் சக்கரத்தால் அந்த உடலைத் துண்டுகளாக வெட்டிய பிறகே சிவன் சுயநினைவுக்கு வந்தார். அறியாமை கொண்ட சாதாரண மனிதனைப் போல நடந்துகொண்ட சிவனை எப்படி கடவுளாகக் கருத முடியும்?

அதேபோல்  தன் மனைவிக்காகக் கண்ணீர் சிந்திய ராமரையோ, ஆயிரக்கணக்கான கோபிகைகளுடன் சுற்றித் திரிந்த கிருஷ்ணரையோ எப்படி கடவுளாகக் கருத முடியும்?” என்று கேட்டார்.

இதற்கு அந்த இந்துப் பெண், “அப்படியா?  எங்கள் மத நூல்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. உண்மைதான்.  அத்தகைய உருவங்கள் எப்படி கடவுளாக இருக்க முடியும்?”  என்று பதிலளித்தார்.

ஆனால்,  மற்றொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணிடம், “பிறர் அவரைச் சிலுவையில் அறைந்தபோது தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவரை எப்படி கடவுளாகக் கருத முடியும்?”  என்று அவர் கேட்டபோது,  ​​அந்தப் பெண், “நிறுத்துங்கள்.  எங்கள் பிரபுவுக்கு எதிராகச் சொல்லப்படும் எதையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்”  என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அங்கே தர்க்கத்திற்கு இடமே இருக்கவில்லை.

மேலே உண்மைச் சம்பவங்கள் மூன்றைப் பற்றி விவரித்தோம்.

1. இந்துக்கள் தம் மத  நூல்களில் உள்ளவை உண்மை என்று ஏற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும். ரிஷிகள் உலகியலுக்கும், தர்க்கரீதியான வாதங்களுக்கும் அப்பாற்பட்ட அதீத உண்மைகளை தரிசித்து இந்நூல்களை இயற்றினர். ஆயினும், இந்த  ஆழமானப் பின்னணி, சராசரி இந்துவிடம் ஒரு கட்டாயக் கடமை உணர்வை ஏற்படுத்தவில்லை.

2. இந்துக்கள் பெரும்பான்மையினராகத் தோன்றினாலும், ஆத்திகர்களும், தர்மத்தை உண்மையாகப் பின்பற்றுபவரும் மிகச் சிலரே உள்ளனர். தேவை ஏற்பட்டால் பலர் தங்கள் சொந்த மதத்தை எளிதாகக் கைவிடத் தயாராக இருக்கிறார்கள்.

3. தங்கள் சொந்த மத நூல்கள் குறித்த போதிய அறிவு ஹிந்துக்களிடம் இல்லை. தம்  தெய்வங்களைப் பிறர் இழிவுபடுத்தும்போது, பதிலடி கொடுப்பதற்கான புரிதல் பலரிடம் இல்லை. “என்னால் வாதாட முடியாவிட்டாலும்,  என் தெய்வத்திற்கு எதிரான அவமதிப்புகளை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன” என்று கூறும் அடிப்படை பக்தி உணர்வு கூட அவர்களிடம் இல்லை என்பது தெளிவாகிறது.

பள்ளி,  கல்லூரி,  பணியிடங்கள், வணிகச் சூழல்கள் என்று எங்கும் தயக்கமின்றித் தங்கள் மதச் சின்னங்களை வெளிப்படையாக அணியும் நம்பிக்கையைப் பிற மதத்தினரிடம் காண முடிகிறது. இதற்கு நேர்மாறாக, நெற்றியில் இடும் திலகம், பாரம்பரிய உடைகள், புனித மாலைகள் போன்றவற்றை அணிய இந்துக்கள் தயகுகின்றனர்.  தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிநாட்டு கலாச்சாரங்களைப் பின்பற்றும் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 

இதன் காரணமாகவே மதமாற்ற முயற்சிகள் பெரும்பாலும் இந்துக்களை மட்டுமே குறிவைக்கின்றன. அதோடு,  பொதுக் கூட்டங்களிலும், மேடைகளிலும் இந்து மதம், அதன் நூல்கள்,  தெய்வங்கள், சான்றோர்கள், மகான்கள் ஆகியோரை எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றித் துணிச்சலாகவும் வெறுப்புடனும் இழிவுபடுத்தத் துணிகின்றனர். ஆயினும், அத்தகைய செயல்களுக்கு எதிரான எதிர்ப்போ, கண்டனமோ அரிதாகவே வெளிப்படுகிறது. இதேபோன்ற அவமதிப்புகள் பிற மதங்களுக்கு எதிராக நிகழ்ந்தால், அது அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கும்.

இங்கே தன் மதத்தைத் திட்டுபவரும் ஒரு ஹிந்துவே. அப்படித் திட்டினால் கண்டுகொள்ளாமல் இருப்பவும் ஒரு ஹிந்துவே. இந்த மனப்பான்மையை நன்கறிந்த   அரசியல்வாதிகள், இந்துக்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக மற்றவர்களை நாடுகிறார்கள். நாட்டின் செல்வத்தை முதன்மையாக அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதை ஆதரிக்கிறார்கள்.

இத்தகைய சூழலில்  உண்மையான ஈடுபாடு கொண்ட இந்துக்கள் என்ன செய்ய வேண்டும்?  நேர்மையான சுயபரிசோதனை இதற்கான விடையளிக்கும். முதலாவதாக,  சுயமரியாதை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து,  மத சம்பிரதாயங்களைக்  கற்றுக்கொடுத்து, அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

இறைவனின் மீதான பக்தியையும், கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்தி, அவற்றை வழக்கமாகவும், ஒழுக்கமான கடமையாகவும் வளர்க்க வேண்டும். இந்து சமய நிகழ்ச்சிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும்படி உற்சாகப்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது வகுப்புகள் மூலம் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கற்றுக்கொள்ளும் ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு ஊடகங்கள் வாயிலாகப் பெரியோர்கள் தொகுத்து வழங்கும் நம்பகமான, நற்பயன் தரும் தகவல்களைத் தேடிப் பெற்றுப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும்,  அவற்றை மறுத்துரைக்கவும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் தார்மிகர்கள் இத்தகைய ஒருங்கிணைந்த சக்தியைப்  பெற வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்வோம்.

இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

chozhavandhan bus frequency - 2026

இலவச பேருந்து வேண்டாம்; கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும் மதுரை சோழவந்தான் அருகே பாதி வழியில் திரும்பிச் சென்ற அரசு பேருந்தால் பெண்கள் ஆத்திரம்!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் கருப்பட்டி செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி செல்லக்கூடிய 63 ஆம் எண்கொண்ட பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையம் செல்லாமல், வட்ட பிள்ளையார் கோவில் வழியாக கருப்பட்டி சென்று விடுவதாக கூறி பயணிகள் வட்ட பிள்ளையார் கோவிலில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், வட்ட பிள்ளையார் கோவில் வந்த பேருந்து கருப்பட்டி செல்லாமல் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக திரும்பியது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

இலவச பேருந்துகள் இயக்குவதால் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தை தாண்டி பேருந்தை நிறுத்துவதால் ஓடி சென்று பேருந்தில் ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும், பாதி வழியில் பேருந்தை திருப்பி போக்குவரத்து பணி மனைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஆகையால், இலவச பேருந்துகளை நிறுத்திவிட்டு கட்டண பேருந்துகளை அனுப்பினால் கூட போதும் என்று பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் கூறினார்கள்.

மேலும், பேருந்திலும் இலவச பேருந்து டிக்கெட் கொடுத்து விட்டு பணத்தை கேட்பதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ச்சியாக, கருப்பட்டி இரும்பாடி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்து சோழவந்தான் வரை மட்டுமே வந்து செல்வதாகவும் இதன் காரணமாக தினசரி வட்ட பிள்ளையார் கோவிலில் கருப்பட்டி இரும்பாடி செல்லக்கூடிய பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார்கள்.

ஆகையால், அரசு கட்டண பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி பயணிகளின் சிரமத்தை குறைக்க வேண்டும் தனியார் பேருந்திலாவது உரிய மரியாதை உள்ளது அரசு பேருந்தில் எந்த மரியாதையும் இல்லை என விரக்தியுடன் கூறினார்கள். சோழவந்தான் பகுதிக்கு முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

thruparankundram murugan to puttu thiruvizha - 2026

ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு பாண்டிய மன்னாக புறப்பட்டார் அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் தங்க பல்லாக்கில் எழுந்தருளினார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் புட்டு திருவிழா நடைபெறவுள்ளது. அதில் , கலந்து கொள்வதற்குகாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு இன்று காலை உற்சவ சன்னதியில் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் நடைபெற்றது..

அதன் பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க பல்லாக்கில் சுவாமி எழுந்துருளி மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
மதுரையில் நடைபெறும். புட்டு திரு விழாவில் கலந்து கொண்டு பின்பு வருகின்ற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்துருளி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைவார்கள்.

விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி கோயில் ஸ்தானிய பட்டர்கள் கோவில் ஊழியர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

pm modi ind speech - 2026
#image_title

ஒவ்வொரு அரசியல் காலகட்டத்திற்கும் ஒரு பெயர் சூட்டப்படும். இப்போது உள்ள அரசியலும் ஆட்சியும் நரேந்திர மோடியை மையமாக கொண்டு இருப்பதால் ‘மோடியிசம்’ என்று பெயர். நரேந்திர மோடி சிறந்த தலைவர். கட்டுப்பாடு உள்ள கட்சி அமைப்பை கொண்டவர். பண்பாட்டை பெருமிதத்துடன் உயர்த்தி பிடிப்பவர். முடிவெடுக்க மத்தியில் ஒரு குழுவை கொண்டவர். திட்டங்களை தொழில்நுட்பத்தின் துணையுடன் முன்னெடுப்பவர். உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை மேம்படுத்துபவர். தேச பாதுகாப்பில் சக்தி வாய்ந்த அரணை ஏற்படுத்தியுள்ளவர். பொது மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்.

இதுவொரு வகையில் , ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தை பயன்படுத்தி தேசத்தை வரையறை செய்வது . உறுதியான தலைவர், குறிக்கோள் கொண்ட ஆட்சி, வலிமையான இந்தியா இதுவே உறுதிமொழி. இதை யாரும் மறுக்க முடியாது. கவனிக்க தவற முடியாது.

சர்ச்சைக்கு உட்படுத்த முடியாதபடி அரசியல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். பாஜகவை முக்கிய அரசியல் கட்சி என்ற நிலையில் இருந்து இந்திய அரசியலின் மைய அச்சாக மாற்றியுள்ளார். நெடுங்காலமாக அந்த கட்சி கோலோச்சிய புவிபரப்பை விரிவு படுத்தி உள்ளார். தொடர்ந்து அதற்கு ஆதரவளித்து வந்த சமூகங்களுக்கு அப்பால் உள்ள சமூகங்களுக்கும் அதை விரிவாக்கி , அவற்றிற்கு அரசியல் தலைமை கொடுத்துள்ளார்.

2024 ல் பாஜக 240 இடங்களுக்கு சரிந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த தேர்தல் தீர்ப்பு மோடியை நிராகரிக்கவில்லை . அவருக்கு தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தது. தேசம் தொடர்ச்சியை தேர்ந்தெடுத்தது. அதே வேளையில் பரஸ்பர ஆலோசனை, கூட்டணி, கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் கொண்டு வந்தது.

மோடியிசத்தினால் பொது சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளது வெளிப்படை. உள்கட்டமைப்பு வளர்ச்சி, எண்ம பொது பயன்பாடுகள், நலத் திட்டத்தின் பயன்கள் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது, நிதி உதவிகளையும் நேரடியாக வங்கி கணக்கில் வழங்குதல் , கழிப்பறை, வீடு, மின்மயமாக்கல் , நலத்திட்ட உதவிகளை மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கக்கூடிய அளவில் அரசின் திறன் வளர்ந்துள்ளது. அத்துடன் தேவையற்ற மாநில அரசியலையும் கட்டுப்படுத்தி உள்ளது.

நிதிஆயோக்கின் கணக்கின்படி 2013-14 இல் 29.17 சதவீதமாக இருந்த வறுமை 2022-23 ல் 11.28 ஆக குறைந்துள்ளது. கணக்கீட்டு முறை பற்றி விவாதம் இருக்கலாம். ஆனால் மக்களிடம் நலத்திட்டங்களும் நிதி உதவியும் நேரடியாக போய் சேர்ந்துள்ளதை மறுப்பது நேர்மையற்றதாகும்.

அரசின் திறனுக்கு இணையாக அதன் அரசியல் தெளிவும் மக்களை கவர்ந்துள்ளது. முன்னேற வேண்டும் என்று மொழியை மோடியிசம் பேசுகிறது. தேசத்தின் உறுதியை, பண்பாட்டு மீட்சியை பேசுகிறது. தாமதம் , முடிவெடுக்க முடியாமல் திணறல், பிளவுபட்ட அதிகாரம் ஆகியவற்றால் வெறுப்புற்று இருந்த மக்களிடையே வேகமான அரசு, பெரிய அளவிலான செயல்பாடுகளைக் கொண்ட அரசுக்கு வரவேற்பு இருப்பது இயல்புதான்.

மோடியிசம் தேசத்தின் அரசியல் சாசனத்தில் உறுதியாக இருக்கிறதா என்று கேள்வி அடுத்ததாக எழுதுகிறது. மோடியின் காலகட்டம் தேசத்தின் பன்மையை பலவீனப்படுத்தி உள்ளது. உரிமைகளை அரசு தரும் சலுகைகளாக மாற்றி உள்ளது. அரசு அமைப்புகளை கைப்பற்றிக் கொண்டுள்ளது இவற்றின் மூலம் அரசியல் சாசனத்தையே மாற்றி அமைக்கிறது என்று எதிர்பாளர்கள் விமர்சிக்கிறார்கள். ஆதரவாளர்களோ அவற்றை மோடியின் மீதுள்ள காழ்ப்பினால் சொல்லப்படுபவை. இந்திய பண்பாட்டின் மீள்எழுச்சிக்கு எதிரானவை என்று புறமொதுக்குகிறார்கள்.

இரண்டு நிலைப்பாடும் முழுமையானது அல்ல. அரசியல் சாசனத்தின்படி ஒரு அரசை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அது எப்படி அதிகாரத்தை பயன்படுத்துகிறது என்று பார்க்க வேண்டுமே தவிர அரசியல் கோஷங்கள், ஆதாரமற்ற அபிப்பிராயங்கள் மூலமாக அல்ல.

தேர்தல்கள் தொடர்ந்து கடுமையான போட்டியை கொண்டுள்ளன. மாநிலங்களில் அரசுகள் மாறுகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் அரசுகள் உள்ளன. நீதிமன்றங்கள் அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து அடிப்படை உரிமைகள் பறி போகாமல் நிலை நிறுத்துகின்றன.

‘சோஷலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற அரசு’ என்பதை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் 2024 நவம்பரில் தள்ளுபடி செய்தது. தேசத்தின் அரசியல் சாசனத்தின் சீர்மை குலைக்கப்பட்டதாக கூறுவது சரியல்ல.

ஆனால் அரசியல் சாசனத்தில் உள்ள வார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக நீக்காமலே அதை பலவீனப்படுத்த முடியும். ஆவணங்களில் எந்தவித மாறுதலும் செய்யாமல் அமைப்புகளின் சுதந்திரத்தை, நம்பகத்தன்மையை, மரபை ஒழிக்க முடியும். ஜனநாயகம் என்பது அவ்வப்போது நடக்கும் தேர்தல்களினால் மட்டுமே நிலை நிறுத்தப்படுவதில்லை. வரம்பு மீறாத அதிகாரம், மாற்றுக் கருத்துக்கும் மதிப்பு , நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறல் , மாநிலங்களிடையே சமத்துவ அணுகுமுறை, சமமான குடியுரிமை ஆகியவற்றால் நிலை நிறுத்தப்படுகிறது.

பன்மை பற்றி கவலை என்பது சட்டப்படி மத சுதந்திரத்தை அகற்றுவது என்பதில்லை. பெரும்பான்மையினரை திரட்டுவதும் சிறுபான்மையினரை நிபந்தனைக்குட்பட்டே ஏற்க முடியும் என்ற அனல் பறக்கும் பேச்சுக்களினாலும் ஏற்படுகிறது. பண்பாட்டு தேசியம் என்பது அரசியல் சாசனத்தின் படி சரியானது. ஏற்புடையது. ஆனால் பண்பாட்டு மேலாதிக்கம் என்பது அல்ல.

ஹிந்து நாகரீகத்தின் தொடர்ச்சியை தேசம் பெருமையுடன் ஏற்கலாம். ஆனால் குடியரசு ஒவ்வொரு குடிமகனுக்குமானது. அதில் எந்த நிபந்தனையும் இல்லை. சமமான குடியுரிமை என்பது மதம் சார்ந்ததோ, அரசியல் கொள்கை சார்ந்ததோ, குறிப்பிட்ட தேசிய அடையாளத்தை சார்ந்ததோ அல்ல.

சோசலிசம் குறித்து அறிவார்ந்த விவாதம் தேவை. நம்முடைய சோசலிச அரசமைப்புச் சட்டம் லைசன்ஸ் – பர்மிட் – கோட்டா முறையை மீண்டும் கொண்டு வரும்படி கோரவில்லை. தனியார் தொழில் முனைப்புக்கு எதிரானது அல்ல. எல்லாவற்றிலும் அரசுடமைக்கு முன்னுரிமை என்பதல்ல. அது சமூக , பொருளாதார நீதியை கோருகிறது. வாய்ப்புகளில் சமத்துவம் , ஏற்றத்தாழ்வுகளில் இருந்து பாதுகாப்பை கேட்கிறது.

மோடி யுகத்தின் நலத்திட்டங்கள் பலவும் அரசமைப்பு சட்டத்தின் இந்த நோக்கத்தை முன்னெடுத்து செல்வதாகவே உள்ளன. கௌரவ பதவிகள் தலைவரின் வெகுமதியாக வழங்கப்படும் போது தான் பிரச்சனை வருகிறது. உணவு பாதுகாப்பு, வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் , வீட்டு வசதி, கல்விக்கான நிதி உதவிகள், சமூக பாதுகாப்பு ஆகியவை பெருந்தன்மையான செயல்கள் அல்ல. அவை பொதுமக்களுக்கான கடமை. குடிமக்களிடமிருந்து பெறப்படும் நிதியிலிருந்து சட்டப்படி அவர்களுக்கு செய்யப்பட வேண்டியவை.

எனவே, உரிமைகளின் அடிப்படையில் அமைந்த அரசாட்சி என்பது ஒத்திசைவு கொண்டதாக இருக்க வேண்டுமேயன்றி வெகுமதி அரசியலாக இருக்கக் கூடாது. வீணாய் கசிவதை தொழில்நுட்பம் தடுக்கலாம். பலன்களை சரியாக கொண்டு சேர்க்கலாம். ஆனால் சரியான தரவுகள் இல்லாததாலோ, முறையாக அடையாளப்படுத்தப்படாதாலோ, நிர்வாக முறை கேடுகளினாலோ குடிமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற முடியாமல் போக கூடாது. நலத்திட்ட உதவிகளுக்கான நெறிகள் அனைவருக்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்கான வழிமுறைகள், சமூக தணிக்கை, சட்ட ஆய்வுக்கான வழிகள் ஆகியவை இருக்க வேண்டும்.

ஒரு குடிமகன் உரிமை பெற்றவனாக இருப்பது கட்டாயம் . சலுகைகளுக்கு நன்றி உள்ளவனாக வாழக் கூடாது.

அதேபோல் அமைப்புகளை கைப்பற்றி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வெற்று கோஷமாக இல்லாமல் சான்றுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசும் ஆட்சி செய்யவும், சட்டப்படியான நியமனங்களை செய்யவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உரிமை பெற்றவை. ஆனால் அமைப்பின் தன்னாட்சி என்பது சட்ட தொழில்நுட்பத்தை சார்ந்ததாக இருக்கக் கூடாது. அதற்கு வெளிப்படையான பணி நியமனங்கள், சீரான நெறிமுறைகள், பக்க சாய்வு கொண்ட தலைமையிடமிருந்து விலகி இருத்தல் தேவைப்படுகிறது.

கவலை அளிக்கும் புள்ளி விவரங்களை இப்போது பார்ப்போம். 17 வது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் சட்டமானவை 58 சதவீதம். 16 சதவீதம் சட்ட வரைவுகள் மட்டுமே நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டன. 2019 முதல் 2023 வரை 80 சதவீத மத்திய பட்ஜெட் எந்த விதமான விவாதமும் இன்றி வாக்கெடுப்பில் வென்றுள்ளன.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் ரகசியமாக நிதி திரட்டுவது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதில் ஆளும் தரப்புக்கு மேலாதிக்கம் தருவது அதன் செயல்பாடுகளில் சுதந்திர தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. இதனால் ஒவ்வொரு அமைப்பும் ஆளும் தரப்பால் கைப்பற்றப்பட்டதாக கூற முடியாது. ஆனால், உண்மையில் சுதந்திர தன்மை பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி அவற்றின் சுதந்திரத் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும்.

மோடியிசம் தொடர வேண்டுமா ? ஆம். அதன் சாரமான விஷயம் தொடர வேண்டும்.

நம் நாட்டிற்கு உறுதியான தலைமை, தேசிய நம்பிக்கை, உள்கட்டமைப்பு, எண்ம புதுமை, நம்பத் தகுந்த பாதுகாப்பு திறன், நேரடியாக கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியும்படியான நற்பலன்கள் ஆகியவை தேவை. ஆனால் மோடியிசம் என்பது தலைவரை மையம் கொண்டது என்பதிலிருந்து அமைப்பை மையம் கொண்டு தேச நிர்மாணத்தில் ஈடுபடுவதாக பரிணாமம் பெற வேண்டும்.

இந்த மாறுதலுக்கு தெளிவான திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் சீரிய விவாதங்கள் நடக்க வேண்டும். சட்ட வரைவுகள் குழக்களால் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பொது செலவினங்கள் மீது கட்டுப்பாடு இருக்க வேண்டும். மாநிலங்களை பாதிக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அரசமைப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கான பணி நியமனங்கள் கட்சி சார்பை கடந்து இருக்க வேண்டும்.

விசாரணை அமைப்புகள் அனைவர் மீதும் சமமாக நடவடிக்கை மேற்கொள்வதாக இருக்க வேண்டும். நலத்திட்டங்களின் பலன்கள் உரிமையுடன் பெறப்படுபவையாக இருக்க வேண்டும். அரசியல் விவாதங்கள் வழக்கம் போல பிளவை ஏற்படுத்துவதற்கு பதிலாக சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

வளர்ச்சியின் அடுத்த கட்டம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக, போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதாக, சிறு தொழில் துறையை வலுப்படுத்துவதாக, விவசாயத்தில் அதிக வருமானத்தை ஈட்டுவதாக, தரமான பொதுக் கல்வியை தருவதாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் எட்ட கூடியதாக மருத்துவம், வாழத் தகுதியான நகரங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் சூழலியல் ஆகியவை தேவைப்படுகின்றன.

பாஜகவும் தனது வெற்றிகளை அமைப்பு சார்ந்ததாக்க வேண்டும். என்னதான் அசைக்க முடியாதவர் என்றாலும் ஒரு ஆளுமையை மட்டும் சார்ந்து இருப்பது தேசிய கட்சிக்கு நல்லதல்ல. அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நம்ம தகுந்த மாநில தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உட்கட்சி விவாதங்கள் நடக்க வேண்டும். அடுத்தடுத்து தலைவர்கள் மேலெழுந்து வரும் கலாச்சாரம் தேவை.

மோடியிசம் இந்தியாவுக்கு துடிப்பான சக்தியை தந்துள்ளது. வளர வேண்டும் என்ற நோக்கத்தையும் சர்வதேச அளவில் வலிமையான குரலையும் தந்துள்ளது. இருந்தாலும் அதன் வரலாற்றுப் பூர்வமான மதிப்பு ஒரு தலைவரின் ஆதிக்கத்தினாலோ அல்லது கட்சியின் தேர்தல் வெற்றிகளாலோ மட்டுமே அளவிடப்படுவதில்லை.

மோடியா அல்லது அரசியல் சாசனமா என்பது தெரிவு செய்யப்பட வேண்டிய விஷயம் அல்ல. அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்ட மோடியிசமா அல்லது அதை மீறி வளரும் மோடியிசமா என்பதுதான்.

நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் பஞ்சாபின் முன்னாள் முதல்வர். இப்போது பாஜகவில் உள்ளார்.

சோசலிசம் என்னும் கை விலங்கு!

ram madhav rss - 2026

— ராம் மாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னணி தொழில் நிறுவனங்கள் இரண்டின் தலைவர்களை அலட்சியப்படுத்தியது சமூக ஊடகங்களில் பேசு பொருளானது. அவர் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை விமர்சித்து கேலி செய்வதும் இந்திய கார்ப்பரேட்டுகளை வில்லனாக சித்தரிப்பதும் ஊடகங்களில் செய்தியாகி உள்ளன.

இவை சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில் சோசலிசம் ஆளும் வர்க்கத்தின் பார்வையாகவும் அது லாபம் ஈட்டுவோர் மற்றும் செல்வ வளங்களை உற்பத்தி செய்வோருக்கு எதிரான மன நிலையாகவும் இருந்ததை நமக்கு நினைவூட்டுகிறது.

அண்மையில் ஓ டி டி யில் ஒரு திரைப்படம் வெளியானது.சோசலிச மனோபாவத்தின் விளைவுகளை பற்றி எடுத்து சொல்வதாக அந்த திரைப்படம் உள்ளது. 1991 இல் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு மில்லியனுக்கும் கீழே சரிந்து , அதனால் நம் நாட்டுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டதை அந்த திரைப்படம் காட்டியது.

இந்தியாவின் பொருளாதார நிலை மாறியதற்கு காரணம் பி வி நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் கொண்டு வந்த பொருளாதாரம் சீர்திருத்தங்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அந்த திரைப்படம் 1990 – 91 சப்பாணி அரசின் பிரதமராக இருந்த சந்திரசேகரின் பங்களிப்பை பற்றி பேசுகிறது.

பிரச்சனை மிகவும் கடினமானதாக இருந்தது. இந்திய அரசிடம் இருந்த தங்கத்தை இங்கிலாந்து வங்கி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து டாலரை கடனாக பெறுவது மட்டுமே ஒரே வழி என்று அப்போதைய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எஸ் வெங்கடரமணன் கூறினார். ஆச்சார்யா நரேந்திர தேவ் , ராம் மனோகர் லோகியா போன்ற தீவிர சோசலிஸ்ட் தலைவர்களின் சீடராக அரசியலில் வளர்ந்த சந்திரசேகருக்கு கருத்தியல் ஊசலாட்டம் ஏற்பட்டது. ஆனால் சோசலிச கருத்தியலை விட தேசம் முக்கியமானது என்று வெங்கடரமணன் அவருக்கு புரிய வைத்தார்.

இந்த (80வது) சுதந்திர தினத்தின் போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 700 மில்லியன் டாலராகவும் தங்கத்தின் கையிருப்பு 880 டன்னாகவும் உள்ளது. இது நமக்கு ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் 1991 இல் நடந்த நிகழ்வு நாம் சுதந்திரத்திற்கு பிறகான நான்கு தசாப்தங்கள் சோசலிச பார்வையை தவிர்த்து இருந்தால் இன்னமும் சிறப்பாக முன்னேறி இருப்போமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

1927 ல் ஜவஹர்லால் நேரு அக்டோபர் புரட்சியின் 10 வது ஆண்டு நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோ சென்றதில் இருந்து இது தொடங்குகிறது. அவர் அந்த பயணத்துக்கு பிறகு தன்னை சோசலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டார். 1929 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ‘இந்தியா சோசலிச பாதையில் பயணிக்கும்’ என்று அறிவித்தார்.

அவர் அந்த பேச்சை தொடர்ந்து பேசப்பேச 1936 இல் காங்கிரஸ் செயற்குழுவில் எதிர்ப்பு வெடித்தது. சர்தார் பட்டேல், ராஜேந்திர பிரசாத், சி ராஜகோபாலாச்சாரி , ஜே பி கிருபளானி , ஜமன்லால் பஜாஜ் உட்பட ஏழு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தார்கள். காங்கிரஸின் அதிகார பூர்வமான கொள்கையாக சோசலிசம் இருக்காது என்ற உறுதி மொழியை நேருவிடம் இருந்து காந்தி பெற்றார். காந்தியும் பட்டேலும் உயிருடன் இருக்கும் வரை நேரு அந்த உறுதிமொழியை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் . ஆனால் 1950 க்கு பிறகு அவர் தனது செல்லக்கருத்துக்கு திரும்பி விட்டார்.

1955 ல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘சோசலிச சமுதாயமே’ தனது அரசின் லட்சியம் என்று தீர்மானம் இயற்றினார். அரசின் முன்னெடுப்பிலான வளர்ச்சியை வலியுறுத்தி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியார் தொழில் முனைப்பை பர்மிட் – லைசன்ஸ் – கோட்டா மூலம் கட்டுப்படுத்தும் ஐந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவுகள் விரைவில் வெளிப்பட்டன.

1965 யில் வெளியான பத்தாண்டு புள்ளி விவரங்களின்படி தேசத்தின் வறுமை 52.60 சதவீதத்தில் இருந்து 58.60 ஆக அதிகரித்துவிட்டது. இரண்டாம் உலக போருக்கு பிறகு உணவு கட்டுப்பாட்டை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்திய ஒரே நாடு இந்தியாதான். விவசாய உற்பத்தி திறன் உலகிலேயே மிகவும் குறைவாக இருந்த நாடும் இந்தியா தான். 1963 இல் நாடாளுமன்றத்தில், நாளொன்றுக்கு மூன்று அணாவுக்கும் (18 பைசா) கீழ் ஊதியம் கொண்ட 270 மில்லியன் இந்தியர்கள் வாழும் நிலையில் நேருவின் நாய்க்கு நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டி பரபரப்பான சர்ச்சைக்கு வித்திட்டார் லோகியா.

மோசமான அனுபவங்களுக்கு பிறகும் பிரதமர் இந்திரா காந்தி அதே கொள்கைகளை பின்பற்றினார். 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் ‘சோசலிசம்’ என்ற வார்த்தையை புகுத்தினார்.

1978 ல் டெங் ஜிப்பியாங் தலைமையில் சீனா ‘நான்கு நவீனங்கள்’ என்ற பெயரில் சோசலிசத்தை கை கழுவி விட்டது. 1990 களில் சோசலிச சோவியத் ஒன்றியம் சிதறியது. நாம் 1991 சோசலிச பாரத்தை இறக்கி விட்டுவிட்டு பொருளாதார வெளிப்படை தன்மை, சந்தை சீர்திருத்தம் என்ற புதிய பாதையில் பயணிக்க தொடங்கினோம்.

ஆனால் நாம் இழந்த தசாப்தங்களை மறக்க முடியாது. குறிப்பாக இப்போதுள்ள துடிப்பான பொருளாதாரத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து அருவருப்புடன் விமர்சித்து வரும் சூழ்நிலையில் அதை மறக்க கூடாது.


நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார்


எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

amitsha in parliament - 2026

தமிழில் / குரல் : ஆர். சுதர்ஸன்

எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி: காக்காய் கூட்டத்தைக் கதறவிட்ட அமித் ஷா அவர்கள்

அவைத்தலைவர் அவர்களே, 2014க்குப் பிறகு, தோற்பதே வாடிக்கை ஆகிப்போனது.  தோல்வியே வழக்கமாகிப் போன பிறகு, ஆமாமாம் ஜெயித்தீர்கள்.  ஆனால் தோற்பதும் வாடிக்கையாகியது அல்லவா?  அவை முன்னவரே, தோல்வி வாடிக்கையாகிப் போன பிறகு, இவர்கள் முதன்மையான விஷயமாக, ஈவிஎம்மை குறிவைத்தார்கள்.  

இன்று உங்கள் வாயிலாக அவைக்கும் அவை வாயிலாக நாட்டுமக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  ஈவிஎம்மை யார் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்?  அவைத்தலைவர் அவர்களே யார் அறிமுகப்படுத்தினார்கள்?  மார்ச் மாதம் 15ஆம் தேதி 1989இலே, ராஜீவ் காந்தி இந்த நாட்டின் பிரதமராக இருந்த போது, அப்போது ஈவிஎம்மை அறிமுகப்படுத்தும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.   இப்போது ராஜீவ் காந்தியின் ஈவிஎம் சட்டத்திருத்தத்தையும் நீங்கள் எதிர்க்கிறீர்களே!!   அவைத்தலைவர் அவர்களே, இதற்குப் பிறகு, அட கேளுங்கய்யா என்ன செயல்பாடு நடந்தது என்று. 

இதற்குப் பிறகும் கூட, ஈவிஎம்முக்கு எதிராக, யார் மனு கொடுத்தார்கள்?   இந்த தேசத்தின் உச்சபட்ச நீதிமன்றத்தின் 5 நீதிமான்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஈவிஎம்மின் சட்டத்திருத்தத்தை, 2002ஆம் ஆண்டிலே, உகந்தது என்று கூறினார்கள்.  ராஜீவ் காந்தியையும் ஏற்றுக் கொள்ளவில்லை, உசசநீதிமன்றத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை, பிறகு 98ஆம் ஆண்டிலே, மத்திய பிரதேசம் ராஜஸ்தானம் தில்லி, இவற்றிலே வெறும் 16, 16 சட்டமன்றாத் தொகுதிகளில் மட்டும் பரிசோதிக்கப்பட்டது.  எத்தனை கவனமாக செய்யப்பட்டது, இதையும் முழுவதும் தெரிவிக்கிறேன்.  உட்காருங்கள்.  இதிலே எத்தனை கவனமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது பாருங்கள்!! 

மத்திய பிரதேசம் ராஜஸ்தானம் மற்றும் தில்லி, இந்த மாநிலங்களின் வெறும் 16 சட்டமன்றத் தொகுதிகளில், இது சோதனை செய்யப்பட்டது.  அனைத்துவித சோதனைகளுக்குப் பிறகு, ஈவிஎம்மின் பயன்பாடு, முதன்முறையாக, ஒட்டுமொத்த தேசத்திலும், 2004ஆம் ஆண்டிலே செய்யப்பட்டது.   2004க்கு மகத்துவம் உண்டு மன்றத்தலைவரே.  முதன்முறையாக 2004இலே நடந்தது.  மொத்த மக்களவைத் தேர்தலில் எங்கள் ஆட்சிக்காலத்தில், ஈவிஎம் பயன்படுத்தப்பட்டது. 

ராஜீவ் காந்தி கொண்டு வந்தார்…. அப்போதிலிருந்து 2004 வரை, மேலும் 2004 தேர்தலிலே யார் ஜெயித்தார்கள் நண்பர்களே?  அவர்கள் ஜெயித்தார்கள்.  அந்த நேரத்தில் ஈவிஎம் பற்றிய விவாதம், இல்லை.  2009இலே, 2009இலே தேர்தல் நடந்தது.  முழுவதும் ஈவிஎம் மூலம் நடந்தது.  இவர்கள் ஜெயித்தார்கள், மௌனிகளானார்கள்.  2014இலே நாங்கள் ஜெயித்தவுடன், காகாகாகாகாகாகா என்று கூவுகிறார்கள்.   மன்றத் தலைவரே, இதெல்லாம் என்ன? 

அதாவது, சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள் இயந்திரத்தைக் கொண்டு வந்தீர்கள், தேர்தலை இயந்தியத்திலே முதலில் ஜெயித்தீர்கள், 2ஆவது தேர்தலிலும் ஜெயித்தீர்கள், ஜாலியாக பத்தாண்டுகள் ஆட்சி செய்தீர்கள், ஆனால் தோற்ற பிறகு ஒப்பாரி வைக்கிறீர்கள்.

ஊடுருவல்காரர்களை விரட்ட வேண்டும் என்றால் காங்கிரஸ் ஏன் ஓடுகிறது? வினா எழுப்புகிறார் அமித் ஷா அவர்கள்

நேற்று இரவு நடு இரவிலே, நேற்று நள்ளிரவிலே நான் என் உரையைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  என்னை நானே கேட்டுக் கொண்டேன்.  இத்தனை தெளிவாக இருக்கும் போது ஏன் இதை பிரச்சனையாக்குகிறார்கள்?   என் புரிதலுக்கு இத்தனை தெளிவாக இருக்கும் போது அவர்களும் படித்திருப்பார்களே!!  இந்தப் பிரச்சனை ஏன் எழுகிறது?  அடிப்படை பிரச்சனையே, ஊடுறுவல்காரர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காமல் வைத்திருப்பது. 

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் 200 முறை வெளிநடப்பு செய்தாலும் கூட, நாங்கள் ஒரு ஊடுறுவல்காரரைக்கூட இந்த நாட்டில் இருக்க அனுமதிக்க மாட்டோம்.  இது எங்கள் எண்டியேவின் கொள்கை அவைத்தலைவர் அவர்களே.  டிடெக்ட், அதாவது தேடுங்கள்.  டெலீட் செய்யுங்கள்.  வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குங்கள்.  மேலும் அவர்களை டிபோர்ட்.   நாங்கள் அரசியல்சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, டிடெக்ட் டிலீட் மற்றும் டிபோர்ட், இதை நிறைவேற்றுவோம்.  இவர்கள் அவையை விட்டு ஏன் ஓடிப் போனார்கள்? 

நான் இவர்களைப் பற்றி, ஒன்றுமே பேசவில்லையே!!  காங்கிரஸ் கட்சி பற்றியும் எதையும் பேசவில்லையே!!  நான் பேசியதெல்லாம் ஊடுறுவல்காரர்களை தேசத்திலிருந்து, வெளியேற்றுவது பற்றி.  அட இவர்கள் வெளியேறி விட்டார்களே ஐயா!!  ஒருவேளை, நான் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்தால், திரு ஜவஹர்லால் நேரு பற்றி இந்திரா அவர்கள் பற்றி இவருடைய தந்தை பற்றி சோனியா அவர்கள் பற்றி, அப்போது ஓடியிருந்தால் புரிந்து கொள்ளலாம்.   இவர்கள் ஊடுறுவல்காரர்களுக்காக ஓடியிருக்கிறார்கள் ஏனென்றால், பாருங்கள் எங்களுடைய கொள்கை என்னவென்றால் டிடெக்ட் டிலீட் மற்றும் டிபோர்ட்.  இவர்களுடைய கொள்கை என்ன? 

ஊடுருவலை இயல்பாக்கி விடு.  அதன் பிறகு அங்கீகாரம் அளித்துவிடு.  தேர்தலிலே, வாக்காளர் பட்டியலிலே இவர்களைச் சேர்த்து, வாக்குவங்கியாக்கி விடு.  ஆனால் ஐயா நீண்டகாலம் இதை அனுமதிக்க முடியாது.  நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் என் கட்சியின் கொள்கையும் இதுதான்.  ஆனால் நாம் நம்புகிறேன், மக்கட்தொகையிலே இத்தனை பெரிய மாற்றம், தேசத்திற்கு மிகப்பெரிய அபாயம்.  இந்த தேசம், ஒருமுறை, மக்கட்தொகை அடிப்படையில் பிளவுபட்டு விட்டது. 

வரவிருக்கின்ற தலைமுறை, இந்த தேசத்திலும் ஒரு பிளவை, எதிர்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை.  ஆகையாலே, மிக முக்கியமானது என்னவென்றால், இந்த தேசத்திலே, ஊடுருவலை தடுத்தே ஆக வேண்டும்.

100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (5)

எனதருமை இளைஞர்களே, தேசத்தின் முன்பாக தேசத்தின் இளைஞர்களின் முன்பாக, போதைப்பொருள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.  போதைப்பொருள் இல்லா பாரதம், இது நம்மனைவரின் சமூகப் பொறுப்பாக வேண்டும்.  நமது பிரகாசமான எதிர்காலத்திற்காக, நமது இளைய சமூகம் பலமாக வேண்டும், நமது இளைஞர்களின் வல்லமை, நமது தேசத்திற்கு உதவ வேண்டும்.  ஆகையால் போதையில்லா பாரதம், கடந்த நாட்களிலே, மைபாரத் தன்னார்வலர்கள், நாட்டின் என் ஜி ஓக்கள், தேசத்தின் சமூக கலாச்சார அமைப்புகள், தேசத்தின் ஆன்மீகப் பெரியோர் இணைந்து, போதையில்லா பாரதத்துக்கான 100 வாரக்கால நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  100 வாரங்களுக்கு இந்த இயக்கம் நடைபெறும்.  நான் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், நீங்களும் கூட, இந்த இயக்கத்தில் பங்கு பெறுங்கள்.  நீங்கள் இதோடு இணையுங்கள்.  மேலும், தேசத்தின், போதையில்லா பாரதம் என்ற கனவை நிறைவேற்ற, நீங்கள் முன்னே வாருங்கள்!! 

எனதருமை நாட்டுமக்களே, 21ஆம் நூற்றாண்டிலே, பல பத்தாண்டுகள் பழமையான சவால்கள், இவற்றுக்கு முடிவுகட்டுவது முக்கியமானது.  நக்சல்வாதம் மாவோவாதம், இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து விட்டது.   பல தாய்மார்களுடைய, பிரகாசமான இளைஞர்களைக் குலைத்து விட்டது, நாசமாக்கி விட்டது.  தாய்தந்தையரின் கனவுகளைப் பொடிப்பொடியாக்கி விட்டது.  இந்த நக்சல் பயங்கரவாதம். 40 ஆண்டுகளாக, இந்தியாவின் கணிசமான பகுதியிலே கணிசமான மக்களை, மிதித்து வந்தது.  துப்பாக்கி முனையில் அமுக்கி வைத்திருந்தது.  அரசியல் சட்டத்தை கேலிப்பொருளாக்கி இருந்தது.  மேலும் நாட்டின் சாமான்யர்களின் பாதுகாப்பிலே, 3500த்திற்கும் மேற்பட்ட, நமது காவல்துறையினர், பாதுகாப்புப் படைகளின் வீரர்கள், உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது. 

போரிலே இறக்கும் வீரர்களைவிட, அதிகமாகவே, நமது காவல்துறை வீரர்கள், உயிரைப் பணயம் வைக்க நேர்ந்தது.  அப்போது தான் நாட்டின் சாமான்யர்கள் நிம்மதியாக இருக்க முடிந்தது.  இந்த நக்சல் பயங்கரவாதம், பூமியிலே ரத்த வெள்ளத்தைப் பெருக்கியது.  2014இலே, நீங்கள் எங்களுக்கு வாய்ப்பளித்த போது, அன்றே நாங்கள் உறுதி பூண்டோம்.  நாங்கள் தேசத்தை நக்சல் பயங்கரவாதத்த்லிருந்து விடுதலை அளிப்போமென்று.   இன்று எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.  அதாவது இந்த நக்சலி-மாவோவாத வன்முறை, இறுதி மூச்சை விடக்கூட, அதனிடம் சக்தி இல்லை.  முழுமையாக அதற்கு முடிவுகட்ட இருக்கிறோம்.  எங்கே ஒருகாலத்தில், நக்சல்வாதிகளின் தோட்டாக்கள் பறந்தனவோ, எங்கே ஒரு காலத்தில், நிலம் சிவப்பாக இருந்ததோ, இன்று, அதே நக்சல் பகுதியிலே, அதே பகுதிகளிலே, நக்சல்வாதிகள் இல்லாத காரணத்தால், வளர்ச்சி, நம்பிக்கை, மற்றும் முயற்சியின் மூவண்ணம் பட்டொளிவீசிப் பறக்கிறது. 

எனதருமை நாட்டுமக்களே, ஆனால் இந்தச் சவாலை நாம், குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது.  இந்தச் சவாலிடம் நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பல ஆண்டுகளாக, தேசத்தின் அதிகாரத்தில், மாவோவாதி சிந்தனையாளர்கள், அமர்ந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.  அரசுக் குழுக்களில் ஆலோசகர்களாகவும் கூட, இந்த மாவோவாதி சிந்தனையாளர்கள், கொள்கைகளை பாதித்தார்கள். 

எனதருமை நாட்டுமக்களே, காடுகளிலே, வனங்களிலே நாம், ஆயுதமேந்திய நக்சலைட்டுகளை ஒழித்துக்கட்டுவதில், அந்த சங்கடத்திலிருந்து தேசத்தை விடுவிப்பத்ல் வெற்றி கிடைத்தது.  ஆனால், ஆயுதமேந்திய நக்சல்கள் என்னவோ சென்றாலும், நக்சல் சிந்தனையாளர்கள், இந்த நக்சல் சிந்தனையாளர்கள், வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.  வன்முறை அராஜம் என்ற பாதையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  சமுதாயத்தை, தவறான பாதையிலே, பிடித்துத் தள்ள வகைவகையான சூழ்ச்சிகளைப் புனைகிறார்கள்.  இந்த நக்சல் சிந்தனையாளர்களை அடையாளம் காண வேண்டும்.  இந்த நக்அல் சிந்தனையாளர்களை தனிமைப்படுத்த வேண்டும்.  மேலும் தேசத்தை, வளர்ந்த பாரதமாக ஆக்கும் திசையிலே, நாட்டின் இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

என்கனிவுநிறை நாட்டுமக்களே, பாதுகாப்பான பாரதத்தை ஏற்படுத்துவது, நம்மனைவரின் பொறுப்பாகும்.  சவால் எல்லைக்கு உள்ளே இருந்தாலும், அல்லது எல்லைக்கு அப்பால், பாரதம் அனைத்துச் சூழ்நிலைகளுக்கும், தயாராக இருக்கிறது.  இன்று போரின் போக்கே மாறி வருகிறது.  போர் எல்லைப்பகுதியில் நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  இன்று போர், நாட்டுக்கு உள்ளே, எண்ணை சுத்தகரிப்பு இலக்காகலாம், வங்கித்துறை இலக்காகலாம், தரவு மையங்கள் இலக்காகலாம், ஒருவகையிலே புதியவகையான போரில், கட்டமைப்பு தகர்க்கப்படும் ஆலைகள் தகர்க்கப்படும்.  நாங்கள் மிஷன் சுதர்ஷன் சக்கரம் குறித்து கடந்த ஆண்டு அறிவித்தோம்.  விரைவுகதியில் இது தொடர்பாக பணிகள் நடக்கின்றன.  இன்று பாதுகாப்புத் துறையில் ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  சுமார் 100 நாடுகளில் நமது ஆயுதங்கள் சென்றடைகின்றன.  உலக அரங்கிலே பாரதத்தின் புகழ் மெல்லமெல்ல, அதிகரித்து வருகிறது. 

மாறிவரும் காலத்திலே, நாம் ஆயுதங்கள் மீதும் செயலாற்ற வேண்டும்.  பாதுகாப்புப் படைகளின் வல்லமயை அதிகரிக்க வேண்டும்.  ஆனால் இதோடு கூடவே, குடிமக்களையும் தயார்ப்படுத்த வேண்டும்.  கடந்த நூற்றாண்டின் போர்களை ஒட்டி, சிவில் பாதுகாப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.  அவை காலாவதியாகி விட்டன.  ஆகையால் இன்று செங்கோட்டையிலிருந்து அறிவிக்கிறேன்.  அதாவது நாங்கள், வரவிருக்கின்ற நாட்களிலே, சிவில் பாதுகாப்பு தொடர்பான உயிர்ப்புடைய வலைப்பின்னலை அமைப்போம்.  நவீனமான, அமைப்புகளை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம்.  நவீன சங்கடங்கள் தொடர்பாக குடிமக்களை, பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பான, மிகப்பெரிய தன்னார்வலர் படை, சிவில் பாதுகாப்பிற்கு, நவீனமான, சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே படைக்க இருக்கிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, தேச நிர்மாணத்திலே இன்று, நமது சகோதரிகள் பெண்களுடைய பங்கு, நம்மனைவருக்கும் மிகப்பெரிய, கருத்துக்கமாக அமைந்திருக்கிறது.  போர்விமானமாகட்டும், பயணிகள் விமானமாகட்டும், நமது பெண்கள், முன்னனி வகிக்கிறார்கள்.  விளையாட்டு மைதானமாகட்டும், நமது பெண்கள் முன்னணியில் மின்னுகிறார்கள்.  ஸ்டெம் கல்வியிலே இடம்பெறும் செயல்முறையாகட்டும், அதிக அளவில் நமது பெண்கள் இடம் பிடிக்கிறார்கள்.  இன்று, படையிலும் கூட, எண்டியேவிலிருந்து, வெளிப்படும் பெண்கள், மிகுந்த பெருமிதத்தோடு, நாட்டின் படைக்குத் தலைமையேற்கும் வல்லமையை வெளிப்படுத்துகிறார்கள். 

பெண்களின் வல்லமை என்ன தெரியுமா?  கடந்த நாட்களில் சாணந்திலே, ஒரு குறைகடத்தி ஆலைக்குச் சென்றேன்.  அங்கே நாட்டின் பல்வேறு இடங்க்ளிலிருந்து வந்த பழங்குடிப் பெண்கள் வேலை பார்த்து வந்தார்கள்.  பாஸ்போர்ட் என்றால் என்ன என்று கூடத் தெரியாத இடங்களிலிருந்து வந்திருந்தார்கள்.  அந்தப் பெண்கள் அயல்நாடுகளுக்குச் சென்று பயின்று வந்தார்கள்.  இன்றோ சிப் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  நான் அவர்களுடய தன்னம்பிக்கையைப் பார்த்தேன்.  உண்மையிலேயே, நான் கவரப்பட்டேன்.  இன்று மூன்று கோடி, மூன்று…. மூன்றுகோடி, மூன்று… மூன்று கோடி பெண்களுக்கு, இலட்சாதிபதி தீதி ஆகும் இலக்கை நிர்ணயித்தோம்.  அதைக் கடந்து விட்டார்கள்.  இப்போது, நாம் 6 கோடி, இலட்சாதிபதி தீதி என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம்.  3 கோடி புதிய இலட்சாதிபதி தீதிக்கள் என்றால், ஊரகப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம், தாய்மை சக்தியால் வரவிருக்கின்றது. 

என் இதயம்நிறை நாட்டுமக்களே, இன்று பஞ்சாயத்தாகட்டும் நகராட்சியாகட்டும் மாநகராட்சியாகட்டும், அதிக அளவிலே, நமது பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தேசத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் கண்டு வருகிறர்கள்.  திறமையான தலைமையை வழங்கி வருகிறார்கள்.  இதை கவனத்திலே கொண்டு, நாங்கள் நாடாளுமன்றத்திலே பெண்சக்திக்கு கௌரவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றினோம்.  ஆனால், ஏதோ காரணத்தினாலே, அரசியல் போர்க்களத்திலே, கடந்த 40 ஆண்டுகளாகவே, இந்தக் கனவு, எப்போதுமே, அரசியல் போரில் களபலியாகி வந்தது.  நான் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், இன்று செங்கோட்டையிலிருந்து தேசியக் கொடியின் நிழலிலே நின்று கொண்டு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.  வேண்டிக் கொள்கிறேன். 

வாருங்கள்.  பெண்களின் வல்லமையைப் போற்றுவோராக ஆகுங்கள்.  பெண்களின் கௌரவத்தைக் காப்போராக வாருங்கள்.  மிகவும் விரைவாக, நமது தாய்மார்கள் சகோதரிகளுக்கு, 33 சதவீதம், சட்டப் பேரவைகள் மக்களவையிலே, பிரதிநிதித்துவம் கிடைக்கவும், பாரதத்தின் கொள்கை வடிவமைப்பில் பங்களிக்க அளிக்கவும், காலத்தின் தேவையாகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளிடத்திலும், மீண்டும் வேண்ட்க் கொள்கிறேன்.  வாருங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு பெண்கள் கௌரவத்திலே, நீங்களும் இணையுங்கள், உங்களுக்கும் பெருமையுண்டு, ஆனால் எனது தாய்மார்கள் பெண்களுக்கு அவர்களின் உரிமையைத் தாருங்கள். 

எனதருமை நாட்டுமக்களே, வளர்ச்சியடைந்த பாரதக் கனவு எப்போது நிறைவாகும் என்றால், வளர்ச்சி கடைசி மனிதன் வரை செல்லும் போது தான்.  2014க்கு முன்பாக, வெறும் 25 கோடி நபர்களிடம் மட்டுமே, சமூக பாதுகாப்புக்கான கவசம் இருந்தது.  வெறும் 25 கோடி மட்டுமே.  நண்பர்களே கடந்த 5-7 தசாப்தங்களிலே, வெறும் 25 கோடி.  நாங்கள் ஒரே பத்தாண்டுக்குள்ளாக, 100 கோடி நாட்டுமக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசத்தை அளித்திருக்கிறோம்.  ஆயுஷ்மான் பாரதம் திட்டப்படி, 70 வயதான, 70 வயது முதியவருக்கு, இன்று, 5 இலட்சம் வரையிலான இலவச மருந்துக்கான அமைப்பு இருக்கிறது.  கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இதனால் பலன் கிடைத்திருக்கிறது.  மேலும் இந்த ஆயுஷ்மான் அட்டை காரணத்தால், 2 இலட்சம் கோடி ரூபாய், மருந்துகள் அறுவை சிகிச்சைக்கு இடையே ஆகும் செலவினம், என் குடும்பங்களுக்கு சேமிக்கப்பட்டிருக்கிறது.  அவர்கள் ஏழைகள் மத்தியத்தட்டுக் குடும்பங்கள்.  அவர்களுக்கு பெரிய ஆசுவாசம்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று ஒரு விஷயத்தில் எனக்கு உங்கள் உதவி தேவை.  நான் உங்களனைவரிடமும், ஒரு உதவியைக் கோருகிறேன்.  அனைத்து இளைஞர்களிடமும் நான் வேண்டுகிறேன், நீங்கள், இதற்குத் தலைமையேற்க வேண்டும்.  உங்களுடைய, ஒன்று அல்லது இரண்டு மணிநேரம், தேசத்திற்கு பெரிய சக்தியை அளிக்க இருக்கிறது.  ஒன்றிரண்டு மணிநேரத்தில் நான் தேசத்திற்கு என்ன செய்து விட முடியும் என்று தோன்றலாம்…… நான் கூறுகிறேன்.  நீங்கள் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறீர்கள்.  ஆகையால் ஒவ்வொரு வீட்டிலும் சூழல் அமைய வேண்டும். 

இப்போது, தேசத்திலே மக்கட்தொகை கணக்கெடுப்பு, பணி நடக்கிறது.  சென்ஸஸ் நடக்கிறது.  எண்ணிக்கை நடந்து வருகிறது.  மேலும் எண்ணிக்கை வெறும், புள்ளிவிவரங்களால் ஆவது இல்லை.  இதை நுணுகி ஆய்ந்து, கொள்கைகள் வடிவமைக்கப்படும்.  திட்டங்கள் உருவாகும்.  தேசம் முன்னேற, வரையறைகளை ஏற்படுத்துகிறது.  அந்த வகையிலே, துல்லியமான தகவல் தெரிதல் முக்கியமானது.  சில வேளைகளில், அரசு, தரப்பிலிருந்து பிரதிநிதிகள் வருவார்கள்.  அவசரத்தில் இருப்பார்கள், பெயர்கள் எழுதுவதில் தவறு செய்யலாம்.  இதன் காரணமாக முடிவிலே விளைவுகள், சரியாக கிடைப்பதில் சங்கடம் ஏற்படுகிறது. 

இப்போது தொழில்நுட்பம் இருக்கிறது.  இந்த முறை தீர்மானம் செய்திருக்கிறோம், நீங்க்ளே கூட, கணக்கெடுப்பிலே, உங்கள் தகவல்களை மொபைல் பேசியில் நிரப்பி அளிக்கலாம்.  பிறகு அரசு அலுவலர் வருவார், பிரதிநிதி வருவார் கலந்து பேசுவார்.  ஆனால் நீங்கள், குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்து, டிஜிட்டல் முறையில், உங்கள் தகவல்களை நிரப்பினீர்கள் என்றால், நுணுக்கமான வகைய்லே பெயரிலே தவறுகள் செய்யாமல், தகவல்களிலே தவறேதும் செய்யாமல், எத்தனை செம்மையாகத் தகவல்களை அளிக்கிறீர்களோ, தேசத்தை முன்னேற்றிச் செல்ல பேருதவியாக இருக்கும். 

அந்த வகையிலே, நான் நாட்டின் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள், உங்களுடைய குடும்பத்தவர்களை அமரச் செய்து, படிவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.  முதலில் காகிதத்தில் படிவத்தை நிரப்புங்கள், தவறு இருந்தால் திருத்துங்கள்.  அதன் பிறகு, தொழில்நுட்பரீதியாக, டிஜிட்டல்ரீதியாக, அதை தரவேற்றம் செய்யுங்கள்.  தேசத்தின் மிகப்பெரிய பணி நிறைவேறும், தேசத்தின் நேரமும் சக்தியும், சரியான பணிக்கு உதவிகரமாக இருக்கும்.  ஆகையால் நாட்டின் இளைஞர்களிடம், இந்தக் கணக்கெடுப்புப் பணியிலே, ஆக்கப்பூர்வமாக இணைந்து கொள்ள, நான் வேண்டிக் கொள்கிறேன். 

எனதருமை நாட்டுமக்களே, நான் செங்கோட்டையிலிருந்து ஐந்து உறுதிப்பாடுகள் குறித்துப் பேசியிருந்தேன்.  இந்த 5 உறுதிப்பாடுகள், தேசத்தை, தன்னுடைய சுயகௌரவத்தை நோக்கி முன்னேற்றிச் செல்ல, இலட்சியங்களை எட்டும் வல்லமையோடு முன்னேற்றக்கூடிய, ஒரு பெரிய ஆசுவாசம் அளித்திருக்கிறது.  அடிமைத்தன மனோபாவத்தை நாம் தொடர்ந்து அழித்து வரவேண்டும்.  எந்த பாரதத்தின் கனவு, நேதாஜி சுபாஷ் போஸ் கண்டாரோ, பாபாசாகேப் அம்பேட்கர் கண்டாரோ, பண்டித நேரு கண்டாரோ, சர்தார் படேல் பகத்சிங், சுக்தேவ் ராஜ்குரு பார்த்தார்களோ, டாக்டர் ஷாமாபிரசாத் முகர்ஜி கண்டாரோ, பகவான் பிர்சா முண்டா கண்டாரோ, ஜோதிபா புலே கண்டாரோ, அவர்கள் அனைவைரிடமும் உத்வேகம் பெற்று, நாம் முன்னேறிச் செல்வோம்.  வாருங்கள்!!  இந்த உறுதிப்பாட்டை மீளுரைப்போம்.  தன்னலத்தை விட, தேசநலனே பெரியது.  தன்னலத்தை விட தேசநலனே பெரியது.  மேலும் கடமை மட்டுமே, நமது அடையாளமாகட்டும்.  நான் நாட்டுமக்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். 

காலம் நம்முடையது.  நான் நாட்டுமக்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.  காலம் நம்முடையது.  சந்தர்ப்பம் நம்முடையது.  உறுதிப்பாடு நம்முடையது.  வாருங்கள்.  கனவுகளை உறுதிப்பாடுகளாக்குவோம்.  உறுதிப்பாடுகளை வல்லமைகளாக்குவோம்.  மேலும் வல்லமைகளை, வெற்றிகளாக மாற்றிக் காட்டுவோம்.  வாருங்கள்.  ஒவ்வொரு படியையும் வளர்ச்சிப் படியாக்குவோம்.  ஒன்றிணைந்து நாம் பயணிப்போம்.  மனம் ஒன்றுபட்டுப் பாடுபடுவோம்.  இலட்சியப் பாதையில் சேருவோம்.  ஒரு தீபத்தால், ஆயிரம் தீபங்களை ஏற்றுவோம்!!  வாருங்கள், இணைந்து நாம் வளர்ந்த பாரதம் படைப்போம்!!  இந்த ஒரு, விருப்பதோடு, இந்த மங்களமான வேளையிலே, உங்களனைவருக்கும், பலப்பல நல்வாழ்த்துக்கள்.  என்னுடன் இணைந்து கூறுங்கள்.