அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பழங்குடியினர் புதுடில்லியில் குவிந்தனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150 ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் கூடினர் . சுமார் 500 மாவட்டங்களில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பேரணி, மாநாட்டில் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்ட பழங்குடியினரை ‘பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ , மதம் மாறியவர்களுக்கு பழங்குடியினர் ‘சலுகைகள் கொடுக்கக் கூடாது’ என்று அவர்கள் கோரினர். இதற்காக அரசமைப்பு சட்டம் 342 பிரிவை திருத்தம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.
கிறிஸ்துவ மதத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாறிய பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய மரபுகளை பின்பற்றுவதில்லை. எனவே அவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் வாதித்தார். அரசமைப்பு சட்டப்பிரிவு 342 துணை பிரிவு 3 இல் திருத்தம் செய்ய வேண்டும் என்று 235 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் இந்திரா காந்தியிடமும் நாடாளுமன்ற கூட்டு குழுவிடமும் சமர்ப்பித்தார். தங்கள் பழங்குடி மரபுகளை கைவிட்டு கிறிஸ்துவ, இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை பழங்குடியினராக கருதக்கூடாது என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
துரதிஷ்டவசமாக, இந்திரா அம்மையார் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. எனவே பிரச்சனை தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டது. பழங்குடியினரின் மரபுகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான உருவான ஜனஜாதி சுரக்ஷா மன்ச் என்ற அமைப்பு கடந்த இரண்டு தசாப்தங்களாக கார்த்திக் ஓரானின் கோரிக்கையை முன்னெடுத்து வருகிறது. டில்லியில் நடந்த பேரணியும் அந்த அமைப்பினால்தான் திரட்டப்பட்டது.
ஓரான் வெளிநாட்டில் படித்த வெகு சில பழங்குடியினரில் ஒருவர். இந்திரா அம்மையாரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். அவர் இந்த சிக்கலான விஷயத்தை ஆழ்ந்து அலசி உள்ளார். மதம் மாறிய 10 சதவீதத்தினர் பழங்குடியினருக்கான சலுகைகளில் எழுபது சதவீதம் அனுபவிக்கின்றனர். 90 சதவீதத்தினருக்கு வெறும் முப்பது சதவீதம் தான் கிடைக்கிறது. அதனால் 90 சதவீதத்தினர் ஏழ்மையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் பழங்குடி பண்பாட்டு பின்பற்றுகிறார்கள்.
கடந்த பல தசாப்தங்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளது. இன்று சுமார் 20 சதவீதத்தினர் மதம் மாறி உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மதம் மாறியவர்கள் பழங்குடியினருக்கான சலுகைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான சலுகைகள் இரண்டையும் அனுபவிப்பதால் மதம் மாறாதவர்களிடையே இது அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சனையின் வேர்கள் அரசமைப்பு சட்டத்தில் உள்ளன. பிரிட்டிஷ்காரர்கள் 1936 இல் இந்திய அரசு (பட்டியலின மக்கள்) ஆணையை அறிவித்தனர். மக்கள் தொகை கணக்கிட்டு ஆணையராக இருந்த டாக்டர் ஜே எச் ஹட்டன் என்பவர் ஜாதிகளின் பட்டியலை தயாரித்து அளித்திருந்தார். பிரிட்டிஷ் அரசின் ஆணை கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களை பட்டியல் இனத்தவர்களாக கருத முடியாது என்று தெளிவாக வரையறுத்து விட்டது.
1950 இன் இந்திய அரசமைப்பு உருவானபோது பட்டியலினத்தார்க்கும் பழங்குடியினருக்கும் தனித்தனியாக இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. பட்டியலினத்தவருக்கான சட்டத்தில் , 1936 அரசாணையை பின்பற்றி, ஹிந்துயிசத்தை தவிர வேறு சமயத்தை பின்பற்றுவர்களை பட்டியலினத்தவராக கருத முடியாது என்று திட்டவட்டமாக கூறியது. துரதிஷ்டவசமாக, அதே நேரத்தில் இயற்றப்பட்ட பழங்குடியினர் சட்டத்தில் இந்த விஷயம் தெளிவாக இல்லை. இதனால் பழங்குடியினர் இடையே அதிருப்தி ஏற்பட்டது.
2010 ல் இந்திய ஜனாதிபதியாக இருந்த திருமதி பிரதீபா பாட்டீலிடம் மூத்த பழங்குடி தலைவர்கள் மனு சமர்ப்பித்தனர். அதில் 26,253 பழங்குடி கிராமங்களில் இருந்து 27.67 லட்சம் பழங்குடியினர் கையெழுத்திட்டிருந்தனர். மதம் மாறியவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சலுகைகள் கொடுக்கக் கூடாது என்று அந்த மனுவில் கேட்டிருந்தனர்.
மதம் மாறிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரச்சனை குறித்து பலமுறை உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் சட்டம் தெளிவாக இருந்ததால் நீதிமன்றங்கள் பட்டியல் இனத்தவர் சலுகைகளை ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினரை தவிர மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று உறுதிப்பட தெரிவித்து விட்டன. பழங்குடியினருக்கான சட்ட வரைவு தெளிவாக இல்லாததால் நீதிமன்றங்கள் உறுதியான தீர்ப்பை வழங்காமல் ஆலோசனையாக சொல்லி வந்தன. 2004 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், மதம் மாறியதாலேயே ஒருவர் பழங்குடியினர் அந்தஸ்தை இழந்து விடுவார் என்று உறுதியாக கூற முடியாது. ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரித்து அததற்கு ஏற்பவே தீர்ப்பு சொல்ல வேண்டும். ஒருவர் மதம் மாறியதால் தன்னுடைய பழங்குடி மரபுகளை கைவிட்டு விட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும் , என்று சொல்லி உள்ளது.
ஹிந்து, புத்த, சீக்கிய சமயத்திற்கு வேறான மதங்களை சார்ந்தவர்களை பட்டியலினத்தவர்களாக கருத முடியாது என்று தெளிவாக வரையறுத்தது போல் பழங்குடியினருக்கும் திட்டவட்டமான வரையறை தேவை என்பதே பிரச்சனையின் மையக் கரு. 1950 ல் இந்திய அரசியல் பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஜாதிகளின் பட்டியலை மறுபரிசீலனை செய்ய ஒரு ஆலோசனை குழுவை நியமித்தது. அந்த குழு ஹிந்து அல்லாதவர்களை பட்டியலினத்தவராக கருத முடியாது என்று கூறியது. அதேவேளையில் பழங்குடியினரை பொறுத்தவரையில் அவர்கள் வாழ்க்கை முறையை பார்த்து தான் பழங்குடியினரா இல்லையா என்று கூற முடியும் என்ற தெளிவற்ற பதிலை கூறியது.
ஆனாலும் 1965 – 66 ல் நீதிபதி பி பி லோகூர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலை தயாரிக்க பரந்த அளவிலான வரையறையை சொல்லியுள்ளது. பழங்குடியினருக்கான பழக்க வழக்கங்கள், அவர்களுக்கே உரிய கலாச்சாரம், புவியியல் ரீதியாக தனித்து இருப்பது, மற்ற சமூகத்தினருடன் பழக கூச்சப்படுவது, பின் தங்கிய சமூகநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்குடியினரை வகைப்படுத்தலாம் என்று லோகூர் குழு கூறியது.
லோகூர் குழு பரிந்துரைகள், கார்த்திக் ஓரானின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கவனத்தில் கொண்டு பழங்குடியினரின் பாரம்பரிய நம்பிக்கைகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சடங்குகள், மரபுகளை கருத்தில் கொண்டு பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலை தயாரிக்க வேண்டும். இவற்றை கைவிட்டு விட்டு வேறு மதத்திற்கு சென்றவர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும். இது எந்த மதத்திற்கோ மதமாற்றத்திற்கோ எதிரானது அல்ல. மதம் மாறிய பட்டியலின , பழங்குடியினருக்கு சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும், என்பதே இப்போதைய பழங்குடியினர் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
இந்திய அரசமைப்பு பாரம்பரியமான பழங்குடியினருக்கு சட்டபூர்வமாக வழங்கியுள்ள உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. அவர்களது தனித்துவமான கலாச்சாரம், சமய அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த கோரிக்கைகளின் சாரமான விஷயம்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் – தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவர்
— மகேஷ் ஜெத்மலானி — கட்டுரையாளர்: மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.
மேற்கு வங்காளத்தின் தேர்தல் முடிவு என்பது வெறும் ஒரு தேர்தல் முடிவு அல்ல. அது ஒரு சித்தாந்த நிலநடுக்கம். அதன் பின்விளைவுகளான அதிர்வுகள் அடுத்த ஒரு தசாப்த காலத்திற்கு இந்திய அரசியலெங்கும் உணரப்படும்.
மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றி பெறுவது என்பது மம்தாவை தோற்கடிப்பது அல்லது திரிணமூல் காங்கிரஸின் நீண்டகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்ல. அது அதைவிட மிகப் பெரிய ஒன்றைப் பற்றியது. இந்திய அரசியலின் மைய இலக்கணமாக இந்து உணர்வு முழுமையாக பிரதான நீரோட்டத்தில் இடம்பிடித்துவிட்டது என்பதையே அது குறிக்கிறது.
பல தசாப்தங்களாக, இந்து அடையாள வெளிப்பாடு ஆபத்தானது என்றும், சனாதன தர்மத்தின் மீதான பெருமை மதவாதம் என்றும், கோவில் அரசியல் பிற்போக்குத்தனமானது என்றும், சமரச அரசியல், சிறுபான்மையினரின் மறுப்பு அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டனங்கள் மற்றும் இந்து குற்ற உணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘மதச்சார்பின்மை அரசியல்’ மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் என்றும் இந்தியாவிடம் கூறப்பட்டு வந்தது. மேற்கு வங்காளம் அந்த முழு அரசியல் சூழலையும் துளைத்துவிட்டது.
இந்துத்துவ அரசியலுக்கு எதிரான அறிவுசார் கோட்டையாக ஒருகாலத்தில் சித்தரிக்கப்பட்ட ஒரு மாநிலம், இன்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பு என்னவென்றால், இந்திய வாக்காளர் இனி தனது நாகரிக அடையாளத்திற்காக மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை என்பதே.
மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து சுயமரியாதை அடக்கப்பட வேண்டும் என்பதையும் வாக்காளர் இனி ஏற்கத் தயாராக இல்லை. அதற்குப் பிறகு உடனடியாக தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.
சனாதனத்திற்கு எதிரான அரசியல் பேச்சுகளின் மிகச் சத்தமுள்ள அரசியல் வாகனங்களில் ஒன்றாக இருந்த திமுக சரிந்துவிட்டது. ‘இண்டி’ கூட்டணி முடிந்துவிட்டது என்று திமுக தலைவர்களே வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.
இது வெறும் ஒரு கூட்டணியின் உடைப்பு அல்ல. இது பாஜகவுக்கு எதிரான முழு அரசியல் முன்னணியின் சித்தாந்த சிதைவின் தொடக்கம். ‘இண்டி’ கூட்டணி என்பது ஒருபோதும் கருத்துகளின் கூட்டணி அல்ல.
அது பயத்தின் கூட்டணி.
மோடியைப் பற்றிய பயம்.
பாஜகவைப் பற்றிய பயம்.
ஆர்எஸ்எஸைப் பற்றிய பயம்.
இனி மௌனமாக இருக்க மறுத்த இந்து வாக்காளரைப் பற்றிய பயம்.
வம்சாவளி அரசியல்வாதிகள், திராவிட உயரடுக்கினர், இடதுசாரி அறிவுஜீவிகள் மற்றும் வரவேற்பறை மதச்சார்பின்மைவாதிகளால் இனி பாடம் கற்பிக்கப்படத் தயாராக இல்லாத ஒரு பாரதத்தைப் பற்றிய பயம்.
அந்த பயம்தான் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றாக வைத்திருந்தது. ஆனால் பயம் ஒரு தேசியக் கண்ணோட்டமாக மாற முடியாது.
மம்தாவுக்கும் இடதுசாரிகளுக்கும் பாஜக மீதான வெறுப்பைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.
திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அரசியல் வசதியைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.
காங்கிரஸுக்கும் பிராந்தியக் கட்சிகளுக்கும் பொருத்தமுள்ளதாகத் தோன்ற வேண்டிய அவசரத் தேவையைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.
முழு கட்டமைப்பும் யாரையாவது தடுக்க வேண்டும் என்ற எதிர்மறை ஆற்றலின் மீது கட்டப்பட்டது. ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நேர்மறை ஆற்றலின் மீது அல்ல. இப்போது அந்த கட்டமைப்பு விரிசல் அடையத் தொடங்கியுள்ளது.
அதனுடன் இந்தியாவின் பழைய “மதச்சார்பின்மை அரசியலின்” அடுக்குகளும் சரிந்து விழும். ஏனெனில் நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால்:
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி, இந்து சடங்குகளை கேலி செய்து, கோவில்களை அவமதித்து, பின்னர் தேர்தலுக்கு முன் திடீரென பூணூல் அணிந்து வாக்கு கேட்கும் அரசியலால் வெற்றி பெறக்கூடிய இயல்பான மக்கள் ஆதரவு அரசியல் இன்று இந்தியாவில் எதுவும் இல்லை. அந்த காலம் முடிவுக்கு வருகிறது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்திய அரசியல் என்பது யார் அதிகமாக வேர்களோடு இணைந்தவராகத் தோன்ற முடியும், யார் அதிகமாக நாகரிக அடையாளத்தை பிரதிபலிக்க முடியும், யார் அதிகமாக கலாச்சார தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும், யார் அதிகமாக வெளிப்படையான இந்து உணர்வைக் கொண்டவராக இருக்க முடியும் என்பதைக் குறித்ததாக இருக்கும்.
இனி ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஏதோ ஒரு வடிவில் இந்து-முதன்மை கட்சியாக மாற முயற்சிக்கும். சிலர் அதை திறமையின்றி செய்வார்கள்.
சிலர் அதை வெறும் வெளிப்புற தோற்றத்திற்காக செய்வார்கள்.
சிலர் கோவில்களுக்குச் செல்வார்கள்.
சிலர் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுவார்கள்.
சிலர் திடீரென திருவிழாக்களை கண்டுபிடிப்பார்கள்.
சிலர் தங்கள் பாட்டி மிகவும் ஆன்மிக நம்பிக்கை கொண்டவர் என்பதை திடீரென நினைவுகூர்வார்கள்.
சிலர் தாங்கள் ஒருபோதும் சனாதனத்தை அவமதிக்கவில்லை என்று நடிப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கான சிக்கல் என்னவென்றால்:
அந்த அரசியல் இடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இந்து அரசியலுக்குள் தேர்தல் கால வேடமாற்றமாக நுழையவில்லை.
அவை இதே அடிப்படைக் கொள்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்.
பல தசாப்தங்களாக, அமைப்பு, ஒழுக்கம், தியாகம், சித்தாந்தத் தெளிவு, கோவில் இயக்கங்கள், கலாச்சாரப் பணிகள், சமூக அணுகுமுறைகள் மற்றும் ஆளும் அமைப்புகளால் கேலி செய்யப்பட்டபோதும் தங்கள் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்ட துணிச்சல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் இந்த அரசியல் இடத்தை உருவாக்கினர்.
50 ஆண்டுகள் இந்து அரசியலை விமர்சித்துவிட்டு, ஒரு தேர்தல் சுற்றுக்குள் அதன் உரிமையாளராக மாற முடியும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
அதனால்தான் அந்த அரசியல் வெளியில் பாஜகவுக்கு எதிராக நம்பகத்தன்மையுடன் வாக்கு கேட்க எந்த அரசியல் கட்சிக்கும் நூறு ஆண்டுகள் வரை தேவைப்படலாம்.
ஏனெனில் நாகரிக அடையாள அரசியலில் நம்பகத்தன்மையை ஒரே இரவில் உருவாக்க முடியாது.
சிவசேனாவைப் பாருங்கள்.
பாலாசாகேப் தாக்கரே மகாராஷ்டிராவில் ஒரு இயல்பான இந்து அரசியல் உணர்வை உருவாக்கியிருந்தார்.
அது கச்சிதமானது.
அது நேரடியானது.
அது உணர்ச்சிப்பூர்வமானது.
அது மறுக்க முடியாத அளவிற்கு வேர்களோடு இணைந்திருந்தது.
உத்தவ் தாக்கரே, தனது தந்தை உருவாக்கிய அந்த பாரம்பரியத்தை பாஜக எதிர்ப்பு அரசியல் மரியாதைக்காக பரிமாறிக்கொண்டார்.
அதன் மூலம் அவரது தந்தை உருவாக்கிய அரசியல் இடத்தையே அவர் அழித்துவிட்டார்.
இது இப்போது ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு எச்சரிக்கை.
உங்களுடைய சித்தாந்த முதுகெலும்பை வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாது.
தேர்தல் காலத்தில் மட்டும் இந்து அடையாளத்தை கடன் வாங்கிக் கொண்டு, முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் மதச்சார்பின்மை போலித்தனத்திற்குத் திரும்ப முடியாது.
மேற்கு வங்காளம் எதிர்காலத்தை காட்டியுள்ளது.
தமிழ்நாடு விரிசலைக் காட்டியுள்ளது.
பதற்றம் தவிர்க்க முடியாதது.
தற்போது நிலவி வந்ததாகக் கூறப்படும் மதச்சார்பின்மை ஒற்றுமை இறந்து கொண்டிருக்கிறது. புதிய இந்திய அரசியல் இந்து உணர்வுடன் கூடியதாகவும், தேசிய தன்னம்பிக்கையுடன் கூடியதாகவும், நாகரிக வேர்களை மையமாகக் கொண்டதாகவும், எந்த மன்னிப்பும் கேட்காததாகவும் இருக்கும்.
இதை ஆரம்பத்திலேயே புரிந்தவர்கள் ஏற்கனவே முன்னணியில் இருக்கிறார்கள். இதைக் கேலி செய்தவர்கள் இப்போது பல தசாப்தங்களை இதைப் பின்பற்ற முயல்வதிலேயே செலவிடுவார்கள்.
சனாதனத்தை அவமதிப்பதையே தங்களது முழு அரசியலாகக் கொண்டிருந்தவர்கள், இந்தியா பல விஷயங்களை மன்னித்தாலும், தனது நாகரிக அடையாளத்தின் மீதான அவமதிப்பை ஒருபோதும் மறக்காது என்பதை உணர்வார்கள்.
தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்னைகள் என்று மூன்றைச் சொல்லலாம்.
ஆலய ஊழல்
திரையுலக ஊழல்
டாஸ்மாக் ஊழல்.
அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.
வாக்களிக்கும் மக்கள் பக்திமான்கள். தேர்ந்தெடுக்கப்படும் அரசு பக்தி விரோத அரசு.
அதிலும் தென்னிந்தியாவில் மட்டுமே அரசின் முழு கட்டுப்பாட்டில் ஆலயங்கள் இருக்கின்றன. வடக்கில் ஆலயங்களின் உரிமை அறக்கட்டளைகளிடம் இருக்கிறது என்பது ஒரு மேலோட்டமான விஷயம்தான் என்றாலும் ஒப்பீட்டளவில் அரசின் கெடுபிடிகள் அங்கு குறைவு.
இதில் தமிழகத்தின் நிலைமைதான் மிக மிக மோசம். பிரிட்டிஷ் காலத்தில் தெளிவான திட்டமிடலுடன் ஆரம்பிக்கப்பட்டு காலப்போக்கில் முழுவதுமாக அழுகி நிற்கும் துறை.
பக்தர்களுக்கு இதில் பெரிய குறை எதுவும் இல்லை. லெளகிக சுய நலத் தேவைகளே பிரதானமாகிவிட்டால் மத உணர்வுகள் மழுங்கித்தானே போகும்.
இந்து அற நிலையத்துறையின் கணக்கு வழக்குகளை பொதுவான ஆடிட்டர்கள் தணிக்கை செய்யமுடியாதென்பது மிஷனரீஸுக்கு வரிவிலக்கு… வக்ஃப் போர்டுக்கு நீதித்துறைக்கும் மேலான அதிகாரம் என்பதையெல்லாம் விட மோசமான சட்டம். அதிலும் நாத்திக, மதச்சார்பற்ற அதாவது இந்து விரோத அரசிடம் இந்து மத நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டு அது பற்றி எந்தத் தணிக்கையும் செய்யவும் மாட்டேன் என்பது திருட்டு நடக்கும் இடத்துக்கு காவலர்கள் நுழையக்கூடாது என்று சொல்வதற்கு சமம்.
சமூக நீதி காக்கும் அரசு இந்து மத நிறுவனங்களில் சமூக நீதியை நிலைநாட்டவே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நிறுவனங்களிலும் அந்த சமுக நீதியை நிலைநாட்டும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு அல்லவா?
கருவறைக்குள் அர்ச்சக குலத்தினரைத் தவிர வேறு நபர்கள் நுழையக்கூடாதென்பது சமத்துவ மறுப்பு என்று சொன்னால் அதை நீக்க நிச்சயம் போராடலாம். பெண்கள் மசூதிகளுக்குள் வரக்கூடாது; சர்ச்களில் பாவமன்னிப்பு வழங்கக்கூடாது என்பதையும் எதிர்த்துப் போராடவேண்டும்.
சமூக நீதியை நிலைநாட்டுவதென்றால் கணக்கு வழக்குகள், சொத்து நிர்வாகம் ஆகியவை எதற்கு? கணக்கு வழக்குகளில் முறைகேடு நடக்காமல் இருக்க முறையான தணிக்கைக்கு உட்படுத்தினாலே போதும்.
உண்மையில் ஏதேனும் கோவிலில் கணக்கு வழக்கு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் ஓரிரு ஆண்டுகளில் தீர்த்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் சட்டமே. அதைச் செய்யாமல் இருப்பது, ஒருவர் வீட்டில் நடக்கும் சண்டையைத் தீர்க்க வரும் காவலர் அந்த வீட்டிலேயே ஒரு அறையில் தங்குவது போன்ற அராஜகம்.
இதில் மிகப் பெரிய வேதனை என்னவென்றால் இந்துக்களின் நலனைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாஜக இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்துவருகிறது.
முதலாவதாக, நாளைக்கே இந்த அறநிலையத்துறை சட்டத்தை மத்திய அரசு சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்து ரத்துசெய்யமுடியும். அல்லது இதில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஆயிரம் வழக்குகள் தொடுக்கமுடியும். அத்தனையிலும் நரேந்திரமோதியே ஆஜராகி வாதிட முடியும். வாதிட வேண்டும்.
வேதாரண்யம் கோவிலின் உப்பளங்களில் இருந்து ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரவேண்டும். ஆனால் மத்திய அரசு நிறுவனம் வெறும் ஐந்தயிரம் ரூபாய் மட்டுமே தருகிறது. மத்திய அரசு செய்துவரும் முறைகேட்டை நாளை வரை கூடக் காத்திருக்கவேண்டாம். இன்றைக்கே சரி செய்யமுடியும்.
கோவில் நிலங்களுக்கு முறையாக வாடகை வசூலித்தால் ஆண்டுக்கு 6,000 கோடி வருமானம் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் போர்க்கால அடிப்படையில் பாஜக அரசு சரிசெய்யவேண்டிய முதல் பிரச்னை இதுவே.
500 சொச்ச சமஸ்தான மன்னர்களை பாரதத்துடன் சேரும்படிச் சொன்னபோது கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டது மாபெரும் துரோகமென்றால், இந்து ஆலயங்களை இதுபோன்ற இந்து விரோத நவீன மன்னர்கள் வசம் ஒப்படைத்தது மன்னிக்கவே முடியாத அநீதி.
இந்து ஆலயங்களை மீட்டெடுப்பது என்ற ஒற்றை இலக்குடன் களம் இறங்கினால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியும். அப்போது மட்டுமே அது பாஜகவின் வெற்றியாக இருக்கும்.
தமிழக மக்கள் திரைப்பட கவர்ச்சியில் சிக்கியிருப்பவர்கள். எதிரிகள் வெகு தெளிவாக திரையுலகப் பிரபலங்களைக் கொண்டே தமது அத்தனை அஜெண்டாக்களையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
நாம் வெகு தெளிவாக மக்களுக்கு நெருக்கமான அந்த துறையைக் கையில் எடுக்கவே மாட்டோம் என்று சத்தியம் செய்துகொடுத்திருக்கிறோம். நம்மால் அது முடியாது என்பது உண்மையே. ஆனால் திரை உலகம் போல் கறுப்புப் பணப்புழக்கமும் வரி ஏய்ப்பும் பாலியல் சுரண்டலும் நிறைந்த துறை எதுவுமே இல்லை.
வரி ஏய்ப்பை ஒழித்தல் என்ற வகையில் கூட முதலில் சீர்செய்யப்படவேண்டிய துறை திரையுலகமே. நம் எதிரிகளின் கோட்டையாக அது இருக்கும் நிலையில் நம் முதல் தாக்குதல் இலக்குகளில் ஒன்றாக அதுவே இருக்கவேண்டும்.
சாராயக்கடைகளைப் பொறுத்தவரையில் மூன்று முக்கிய கோணங்கள் இருக்கின்றன.
இரண்டாவதாக உற்பத்திச் செலவு ரூ 30 என்றால் விற்கும் விலையோ 180. கொள்முதல் விலையோ தங்க மலை ரகசியம். 21-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பமும் இன்ன பிற வரி, நிதி மற்றும் நிறுவன விதிமுறைகள் எல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலையிலும் கண் முன்னே தினமும் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது.
100 பாட்டில் கணக்கு காட்டினால் ஆயிரம் பாட்டில்கள் அநாமத்தாக விற்பனையாகின்றன. கள்ள நோட்டை அச்சிட்டு அரசே விற்பது போன்ற ஒரு அயோக்கியத்தனம். மை நஹிம் பியூங்கா… நஹிம் பினேதூங்கா என்பது அவரின் கொள்கையில்லை. எனவே இதைக் கண்டுகொள்வதே இல்லை போலிருக்கிறது.
மூன்றாவதாக, இந்துவாக, தமிழராக வள்ளுவரின் பூமியில் வள்ளுவரின் பெயரை முன்வைக்கும் அரசில் இப்படியாக அரசே சாராயம் விற்பதென்பது மிக மிகக் கேவலம். சங்க காலத்தில் கள் புழக்கத்தில் இருந்தது. ஆனால் மன்னர்கள், கள் இறக்கி விற்கவில்லை. குடிப்பது வேறு… ஊற்றிக் கொடுப்பது வேறு. பார் டான்சர் ஊற்றிக் கொடுக்கலாம். கன்யாஸ்த்ரீ ஊற்றிக் கொடுக்கக்கூடாது. அன்னை ஊற்றிக் கொடுக்கக்கூடாது.
வருத்தத்துடன் சொல்வதென்றால் தமிழகத்தில் அதிக செல்வம் கொழிக்கும் இடங்கள் இரண்டு. ஒன்று ஆலயங்கள். இன்னொன்று சாராயக்கடைகள்.
சங்க காலத்தை எடுத்துக்கொண்டால், கள் அருந்துவது தொடர்பாக எந்தவித ஒழுக்கத் தடைகளோ நெருக்கடிகளோ இருந்திருக்கவில்லை. அளவோடு குடித்தால் நஞ்சும் அமிர்தமே.
பக்தியும் ஒரு போதை; கள்ளும் ஒரு போதை. ஒடுக்கப்படுபவர்களின் வேதனைகளை மறக்கடிக்கும் அபின் தானே மதம். நம்மவர்களுக்கு இரண்டு போதையுமே தேவையாக இருக்கிறது.
பிரச்னை எங்குவருகிறதென்றால் இந்த இரண்டிலும் நடக்கும் கல்வாரி மலையினும் பெரிய ஊழல். அது இந்து தேசத்தை மதம் மாற்றி வீழ்த்தத் துடிக்கும் சக்திகளின் கைகளில் கொத்தாகச் சென்று குவிகிறது.
மிகவும் எளிய அரசியல் பாடம் தான்.
எது மக்களுடைய மனதுக்கு நெருக்கமாக இருக்குமோ எது நேச சக்திகள் அனைவரையும் ஓரணியில் திரள வழிவகுக்குமோ எது எதிரிகளைத் தெளிவாக அடையாளம் காட்டுமோ அந்த விஷயங்களைத்தான் முதலில் கையில் எடுக்கவேண்டும்.
ஆலயச் சுரண்டல் மற்றும் சனாதன அழித்தொழிப்பு என்பது உச்சத்தில் இருக்கும் மாநிலத்தில் இந்து கட்சிகள் முன்னெடுக்கவேண்டிய முதல் போராட்டம் ஆலய மீட்புதான்.
கலை சுதந்தரம் என்ற பெயரில் கருத்துத் திணிப்பும் இந்து தர்ம இந்திய தேசிய அவதூறும் கொடிகட்டிப் பறக்கும் துறையை ஒடுக்க உணவில் உப்பு போட்டுச் சாப்பிட்டாலே போதும்.
சாரய ஊழலை ஒழிப்பதும் அரசு அதிலிருந்து வெளியேறுவதும் சனாதனம் போன்ற உன்னத கலாசாரத்தின் வாரிசுகள் உடனே செய்ய வேண்டிய வேலை.
இந்த மூன்றிலும் நடக்கும் ஊழல் நினைத்தே பார்க்க முடியாதது. மூன்றுமே எதிரிகளின் பிரதான ஆயுதக் கிடங்கு மற்றும் பொக்கிஷக் கருவூலம்.
ஆக எதிரியின் கோட்டைகளைத் தகர்க்கவே மாட்டேன். அதன் பக்கம் கூடப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு போரில் இறங்கியிருக்கும் பாஜக உண்மையில் யாருக்காக இங்கு அரசியல் செய்துவருகிறது?
ஆலயச் சுரண்டல், மதுபான ஊழல், கலை, கருத்துச் சுதந்தரப் போர்வையிலான காட்சி ஊடக அவதூறுகள் இவற்றையெல்லாம் இந்து எழுச்சி என்ற கோணத்தில் அணுக மதச்சார்பற்ற பாஜகவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவரையும்சமமாக நடத்துதல், காங்கிரஸ் முக்த் அதாவது கரெப்ஷன் முக்த் பாரத், நேர்த்தியான நிர்வாகம் என்ற அடிப்படையிலாவது இந்த மூன்றிலும் இருக்கும் முறைகேடுகளை ஒடுக்க முன்வரலாம்.
கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் மற்றும் போத்தனூர் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண் 06079, திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் சந்திப்பு விரைவு சிறப்பு ரயில் 03 & 10 ஜூன் 2026, புதன்கிழமைகளில் இயங்கும்.
திருவனந்தபுரம் வடக்கில் மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் மறுநாள் காலை 06.45 மணிக்கு சேரும்.
வண்டி எண் 06080, போத்தனூர் சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில் 04 & 11 ஜூன் 2026, வியாழக்கிழமைகளில் இயங்கும்.
போத்தனூரில் மாலை 05.00 மணி புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் மறுநாள் காலை 07.15 மணிக்கு சேரும்
இந்த ரயில் கொல்லம் • புனலூர் • செங்கோட்டை • தென்காசி • கடையநல்லூர் • சங்கரன்கோவில் • ராஜபாளையம் • ஸ்ரீவில்லிபுத்தூர் • சிவகாசி • விருதுநகர் • மதுரை • கொடை ரோடு • திண்டுக்கல் • ஒட்டன்சத்திரம் • பழனி • உடுமலைப்பேட்டை • பொள்ளாச்சி.வழியாக செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பல ஆண்டு கோரிக்கையான பழனி ரயில் சேவை இறுதியாக தற்போது இரு சேவை சிறப்பு ரயிலாக வருகிறது
செங்கோட்டை – புனலூர் – கொல்லம் ரயில் பாதை வழியாக பழனி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரயில் எண்: 06079/06080 திருவனந்தபுரம் – போத்தன்னூர் (கோவை) – திருவனந்தபுரம் சிறப்பு விரைவு
ரயில் எண்: 06079 திருவனந்தபுரம் – போத்தன்னூர் (கோவை) எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரம் வடக்கு : 01:00 PM கொல்லம் : 02:35 PM புனலூர் : 03:35 PM செங்கோட்டை : 07:20 PM தென்காசி : இரவு 07:45 கடையநல்லூர் : 08:13 PM சங்கரன்கோவில் : 08:58 PM ராஜபாளையம் : 09:38 PM ஸ்ரீவில்லிபுத்தூர் : 09:53 பி.எம் சிவகாசி : 10:28 PM விருதநகர் : 11:28 PM மதுரா : 01:05 AM கொடைக்கானல் சாலை : 01:50 AM திண்டக்கல் : 02:25 AM ஒட்டன்சத்திரம் : 03:28 AM பழனி : காலை 03:58 மணி உடுமலைப்பேட்டை : காலை 04:28 மணி பொள்ளாச்சி : காலை 05:15 மணி பொத்தனூர் சந்திப்பு (கோவை) : காலை 06:45
ரயில் எண்: 06080 போத்தன்னூர் (கோவை) – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்
போத்தனூர் சந்திப்பு (கோவை) : மாலை 05:00 மணி பொள்ளாச்சி : மாலை 05:50 மணி உடுமலைப்பேட்டை : மாலை 06:18 மணி பழனி: 07:40 PM ஒட்டன்சத்திரம் : இரவு 08:18 திண்டக்கல் : 09:05 PM கொடைக்கானல் சாலை : 09:28 PM மதுரா : இரவு 10:00 மணி விருதநகர் : 10:53 PM சிவகாசி : இரவு 11:18 மணி ஸ்ரீவல்லிபுத்தூர் : 11:45 PM ராஜபாளையம் : 12:02 AM சங்கரன்கோவில் : 12:30 AM கடையநல்லூர் : 12:56 AM தென்காசி : காலை 01:13 மணி செங்கோட்டை : காலை 01:40 மணி புனலூர் : காலை 03:40 மணி கொல்லம் : காலை 05:00 மணி திருவனந்தபுரம் சென்ட்ரல் : 07:15 AM
ரயில்வே அமைச்சர் தெற்கு ரயில்வே தென்னக ரயில்வே மதுரை கோட்டம் என்.கே.பிரேமச்சந்திரன் கொடிக்குன்னில் சுரேஷ் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
‘மனதின் குரல் (134ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 31.05.2026 தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும் போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது.
இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப்போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டார்கள், நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ் மீணா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, ஒரு நிகழ்ச்சியானது நாடெங்கிலும் பெரும் விவாதப் பொருளாகிறது என்றால் அது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம். வெறும் இரண்டே நாட்களுக்கு உள்ளாக ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியிலே தேசிய சாதனை மூன்று முறை தகர்க்கப்பட்டது. இதைச் சாதித்துக் காட்டிய இரண்டு வீரர்கள் என்றால் அவர்கள் தாம் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகியோர். இந்த முறை மனதின் குரலில் இந்த இரு விளையாட்டு வீரர்களோடும் உரையாடிப் பார்ப்போமே என்று நான் நினைத்தேன்.
தொலைபேசி அழைப்பு –
பிரதமர் – அனிமேஷ் ஜி வணக்கம். குரிந்தர்வீர் அவர்களே, உங்களுக்கும் என் வணக்கங்கள், சத்ஸ்ரீஅகால்.
அனிமேஷ், குரிந்தர்வீர் – வணக்கம் சார், வணக்கம்.
பிரதமர் – நல்லதுங்க, நீங்க மிகப்பெரிய சாதனை ஒண்ணை படைச்சிருக்கீங்க. உங்களோட இணை மிக அற்புதமா செயல்பட்டிருக்கு. இசைத்துறையில நாம ஜுகல்பந்தியை கேள்விப்பட்டிருப்போம், ஆனா சவால்ல இப்ப ஜுகல்பந்தியை முதமுறையா பார்க்கறோம். ஒருமுறை ஒருத்தர் ஒரு சவாலை விடுத்து, பிறகு மத்தவர் அந்த சவாலை எதிர்கொள்றாரு. பிறகு மூன்றாவது முறையா இதே மாதிரி. உங்க விஷயம் ரொம்ப சுவாரசியமா இருக்குங்க. மனதின் குரல் நேயர்களுக்கு நீங்க இந்த விஷயம் பத்தி விரிவா விளக்கணும்னு நான் ஆசைப்படறேன். நீங்க செஞ்சிருக்கற சாகஸம் பத்தி எல்லாருக்கும் தெரியணும்.
அனிமேஷ் – வணக்கம் சார். என் பேர் அனிமேஷ் குஜூர். நான் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில தேசிய சாதனையாளர், நான் சத்திஸ்கட்டைச் சேர்ந்தவன் சார். ஆனா இப்ப நான் ஒடிஷாவுக்காக விளையாடிட்டு இருக்கேன். கடந்த ஆண்டு ஆசிய போட்டிகள்ல பதக்கமும், உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்ல பதக்கமும் ஜெயிச்சிருக்கேன். 2021ஆம் ஆண்டு பள்ளியிலேர்ந்து தேர்ச்சி பெற்று வெளியேறினதிலேர்ந்து நான் தடகளப் போட்டிகள்ல பங்கெடுக்க ஆரம்பிச்சேன். நான் அம்பிகாபூர் சைனிக் பள்ளியில படிச்சு முடிச்சேன். முன்ன எல்லாம் கால்பந்தாட்டம் விளையாடுவேன், எங்கப்பா அம்மாவும்கூட கோவிட் காலத்தில, நீ வெளிய போய் ஓடு இல்லை விளையாடுன்னு எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தாங்க. கோவிட் காலம் முடிஞ்ச பிறகு என் கால்பந்தாட்ட நண்பர்கள் சொன்னாங்க, மாநிலப் போட்டி நடக்க இருக்கு, நீ போய் பங்கெடேன்னாங்க, நானும் பங்கெடுத்தேன். ஆனா எனக்கு தெரியாது அதிலேர்ந்து தான் தேசிய அளவுக்கு தேர்வு செய்யறாங்க அப்படீங்கற விஷயம். நானும் தேசிய அளவுக்கு தேர்வு செய்யப்பட்டேன், இன்னைக்கு நான் சர்வதேச அளவுல இந்தியாவோட பிரதிநிதியா இருக்கேன்.
பிரதமர் – ஓ…. சரி குரிந்தர்வீர் அவர்களே, நீங்க எப்படி?
குரிந்தர்வீர் – வணக்கம் சார். என் பேர் குரிந்தர்வீர், நான் இந்தியக் கப்பற்படையில பெட்டி ஆஃபீசரா இருக்கேன். நான் இந்தியாவோட மிக வேகமா ஓடக்கூடிய ஸ்பிரிண்டர், இப்ப நான் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில 10.09 விநாடிகள்ல கடந்து தேசிய சாதனையை படைச்சிருக்கேன். 10.1 நொடிகளுக்கு உள்ளார ஓடிக்கடந்த முத இந்தியரும் நான் தான். தடகளமாகட்டும், என் களப்பணி கடற்படையாகட்டும், தேசத்துக்கு சேவை செய்யணுங்கறது தான் என் முயற்சியா இருக்கு. எங்கப்பாவும் சரி, தாத்தாவும் சரி, ரெண்டு பேருமே விளையாட்டுக்கள்ல ஈடுபட்டவங்க, நம்ம இந்தியாவோட கலாச்சாரம் என்னென்னா, எந்த ஒரு பண்டிகையாகட்டும், இப்ப தீபாவளியோ, புத்தாண்டோ எதுவா இருந்தாலும், நாம நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம். அப்படித்தான் நான் எங்கப்பாவோட பதக்கங்கள், கேடயங்கள், கோப்பைகளையெல்லாம் சுத்தம் செய்வேன், அப்ப எனக்கு ரொம்ப நல்லா இருக்கும், ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்படி சுத்தம் செய்திட்டு இருக்கும் போது கேட்பேன், இந்தக் கோப்பையை எங்க ஜெயிச்சீங்க, இந்தப் பதக்கத்தை எப்படி ஜெயிச்சீங்க, இந்தப் புகைப்படம் எப்ப எடுக்கப்பட்டிச்சு அப்படீன்னு எல்லாம் கேட்கும் போது அவங்க இது பத்தின விஷயத்தை சொல்லுவாங்க. அதாவது நான் இங்க விளையாடப் போனப்ப தேசிய பதக்கத்தை ஜெயிச்சேன், எங்க அணியை ஜெயிக்க வச்சேன்பாங்க. நானும் உடனே நானும் ஏதாவது விளையாட்டை விளையாடப் போறேன்னு சொல்லுவேன். அவங்க காலையில ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளப் போகும் போது, என்னையும் கூட்டிக்கிட்டு போங்கன்னு சொன்னேன். அப்படித்தான் என்னை அவங்க கூட்டிக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க, விளையாட்டுக்களை கத்துக் குடுத்தாங்க. எனக்கு ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சுது. உசேன் போல்டோட உலக சாதனை முறியடிக்கப்பட்டதைப் பார்த்தேன். ஒரு வேடிக்கையான சம்பவம் நினைவுக்கு வருது. நான் டிவி பார்த்திட்டு இருந்தேன், எங்கம்மா டிவியை அணைச்சுட்டு, தம்பி, படிக்கற நேரமாயிருச்சு, போய் படின்னாங்க. அதுக்கு நான், என்னை இன்னைக்கு நீங்க டிவி பார்க்க விடலை இல்லை, ஒருநாள் இல்லை ஒருநாள் அதோ பாருங்க, குரிந்தர் பந்தயத்தில ஓடிக்கிட்டு இருக்கான் பாருங்கன்னு காமிக்கத்தான் போறீங்க, அப்படியும் ஒரு நாள் வரும்ன்னு சொன்னேன். இன்னைக்கு நான் களத்தில ஓடுறதை எங்கம்மா டிவியில பார்க்கையில எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
பிரதமர் – பிரமாதம், அருமை. ரொம்ப அருமையா சொன்னீங்க.
குரிந்தர்வீர் – ஐயா, நாங்க நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பங்க. எங்கப்பா கைப்பந்து விளையாடுவாரு. வீட்டுல பிரச்சினைகள் காரணமா அவர் விளையாட்டுக்களை விட வேண்டியிருந்திச்சு. அவரோட கனவு கனவாவே நிலைச்சுப் போச்சு. ஆனா தன்னோட கனவை தன்னோட மகன் நிறைவேத்துவான்னு அவரு நம்பினாரு. நான் அவரு கூட பேசும் போது எப்படி மில்கா சிங் எத்தனை கடினமா உழைப்பாருன்னு எல்லாம் சொல்லுவாரு, உங்க கனவை நான் நிறைவேத்துவேன்பான்னு அப்ப நான் சொன்னேன். வாயில சொன்னா மட்டும் கனவை நிறைவேத்திர முடியுமா, அதுக்கு கடினமா உழைக்கணும். மில்கா சிங் அவர்கள் ரத்த வாந்தியெல்லாம் எடுத்தாரு, தீவிரமான வெயில்ல ஓடினாரு. நாள்முழுக்க பயிற்சி எடுப்பாருங்கற விஷயமெல்லாம் எனக்கு கருத்தூக்கமா அமைஞ்சுது. எங்கப்பா எனக்கு உத்வேகம் அளிச்சாரு, அதாவது நான் நாட்டுக்காக ஓடுவேன், நாட்டுக்காக பதக்கங்கள் வாங்குவேன், ஜெயிப்பேன்னு. நான் 100 மீட்டர் பந்தயத்தை தேர்ந்தெடுத்தவுடனே எல்லாரும் சொன்னாங்க, 100 மீட்டரை தேர்ந்தெடுக்காதே, அது இந்தியர்களான நமக்கான போட்டி இல்லைன்னாங்க. இந்தியர்களோட உடம்பு 100 மீட்டருக்கானது கிடையாதுன்னாங்க. குரிந்தர், நாம இதை தேர்ந்தெடுத்திருக்கோம், முன்வச்ச காலை பின்வாங்க கூடாதுன்னு எங்கப்பா எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாரு. நம்மால முடியாதுன்னு யாரு சொல்றாங்களோ, அவங்களுக்கு நாம சாதிச்சுக் காட்டி பதில் சொல்லுவோம். நீ கண்டிப்பா செஞ்சு காட்டுவே, உன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கும்பாரு. எங்கப்பா எனக்கு அந்த நம்பிக்கையை அளிச்ச போது, எனக்கு அது ரொம்ப பெரிய தெம்பா இருந்திச்சு, இன்னைக்கு இந்திய ஸ்ப்ரிண்ட் பத்தி எல்லாரும் பேசறாங்க இல்லையா?
பிரதமர் – நீங்க ரெண்டு பேருமே ரொம்ப அருமையா செயல்பட்டிருக்கீங்க, வெறும் ரெண்டே நாட்கள்ல நீங்க ரெண்டு பேரும் மூணு முறை இதற்கு முந்தைய தேசியப் பதிவுகளை தகர்த்திருக்கீங்க. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில ஓடுறது பத்தி சொல்லும் போது, குரிந்தர்வீர் சொன்னா மாதிரி, இந்தியர்களுக்கு இதை ஓட வாகான உடம்பு கிடையாதுன்னு சொல்லுங்க. இத்தனை கடினமானதா இருந்தும் கூட நீங்க சிறப்பா செயல்பட்டீங்க. நானும் சரி, மனதின் குரல் நேயர்களும் சரி உங்ககிட்ட ஒண்ணு கேட்க விரும்பறோம். அதாவது உங்களுக்குள்ள அப்படி என்ன பெரிய தாகம் இருந்திச்சு, என்ன பிடிவாதம் இருந்திச்சு, எதை நினைச்சு உறுதியோட இருந்தீங்கன்னு சொல்லுங்களேன். உங்க சாதனை எத்தனை கடினமா இருந்திச்சு?
குரிந்தர்வீர் – சார், நான் குரிந்தவீர் பேசறேன். தொடக்கத்தில எல்லாம் ரொம்ப போராட்டமா இருந்திச்சு, பலமுறை சந்தேகம் வரும், நான் சரியாத் தான் செய்யறேனா, சரியாத் தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னான்னு எல்லாம். ஏன்னா நீங்க ஒவ்வொரு முறையும் ஜெயிக்கறதில்லை, சில வேளைகள்ல தான் கத்துக்க முடியும். நான் தோல்வியடையும் போது, என்னோட செயல்பாடு சரியா இல்லாத போது, ஏதோ காயம் பட்டிருக்கும் போது, எங்க வீட்டில இருந்தவங்க எனக்கு ஆதரவா இருப்பாங்க, இப்படித் தான் சில நாள் மோசமா இருக்கும், ஏன், ஒரு வருஷம் கூட மோசமா இருக்கலாம், இதனால எல்லாம் ஒண்ணும் பெரிய பாதிப்பு கிடையாது, தைரியமா இரும்பாங்க. ஆனா பாருங்க, கனவு காணுறது மட்டும் தடைப்படாது. உன்னால செய்ய முடியலைன்னா, வேற யாராலயும் செய்ய முடியாதுன்னு என்னோட பயிற்சியாளரும் என்னை ஊக்கப்படுத்துவாரு. நம்மளை சுத்தி இருக்கறவங்க, நம்மைச் சேர்ந்தவங்கன்னு எல்லாரும் நம்மளை ஊக்கப்படுத்தும் போது, நமக்குள்ள இருக்கற தெம்பு என்னைக்கும் தொய்வடையாது.
பிரதமர் – அனிமேஷ் அவர்களே.
அனிமேஷ் – சார், 2021ஆம் ஆண்டுல நான் தடகளத் துறையில நுழைஞ்ச போது. இது புதிய துறை, உன்னால செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கன்னு சொன்னாங்க. இப்ப நான் இதில நுழைஞ்சாச்சு, சாதிச்சே தீருவேன்னு நான் சொன்னேன். எங்கப்பா கூட அடிக்கடி சொல்லுவாரு, நீ இந்தக் களத்தில குதிச்சேன்னு சொன்னா, பின்னால திரும்பிப் பார்க்கவே பார்க்காதே, ஏன்னா இதைச் செய்யணும், அதைச் செய்யணும்னு நினைக்கறவங்க பல பேர் இருக்காங்க, ஆனா செய்து காட்டறவங்க ரொம்ப குறைவானவங்க தாம்பாரு. நீ இதில நுழைஞ்சதால இதிலேர்ந்து பின்வாங்கவே வாங்காதே, இதில முன்னேறுன்னு சொன்னாரு. உனக்குத் தேவையான எல்லா வசதிகளும், எல்லாத்திலயும் நாங்க ஆதரவு தர்றோம், குடும்ப ஒத்துழைப்பு, பண ஆதரவுன்னு எல்லா விஷயங்களையும் நாங்க கவனிச்சுக்கறோம், ஆனா நீ மட்டும் தொடர்ந்து உழைச்சுக்கிட்டே இரு, இந்தியர்களால ஓட முடியும்னு இந்தியர்களுக்குக் காமி, ஏன்னா 10 நொடிகளுக்கு இல்லை 10.1 நொடிகளுக்குள்ளாக இந்தியர்களால ஓட முடியாதுன்னு என்கிட்டயும் சொன்னாங்க. ஆனா இப்ப இந்தியர்களாலயும் முடியும்னு நாங்க நிரூபிச்சிருக்கோம். நமக்கு எந்த ஒண்ணும் கடினமானது இல்லை, நம்மாலயும் செய்ய முடியும். இதெல்லாம் தான் சார் என்னை ஊக்கப்படுத்திச்சு; மேலும்மேலும் நாங்க பயிற்சி மேற்கொண்ட போது, நாங்க பதிவுகளை தகர்த்துக்கிட்டே வந்தோம், நம்மால செய்ய முடியும்னு இந்தியர்களுக்கு நாங்க செஞ்சு காட்டினோம். இப்ப நாங்க காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வு ஆகியிருக்கோம், வரவிருக்கற அந்தப் போட்டிகள்லயும் நாங்க இன்னும் சிறப்பா செயல்பட இருக்கோம்.
பிரதமர் – மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களும் கூட. ஆமா, நீ என் பதிவை முறியடிச்சியா, நான் உன்னோட பதிவை முறியடிக்கறேன் பாருன்னு நீங்க ரெண்டு பேரும் ஏதும் போட்டி போடறீங்களா? முதல்ல அனிமேஷ் நீங்க சொல்லுங்க.
அனிமேஷ் – சர்ஜி, முத பதிவு 10.18 நொடிகளா இருந்திச்சு, அது நான் ஏற்படுத்தின பதிவு தான், அதை குரிந்தர்வீர் அண்ணன், அரையிறுதியில முறியடிச்சு 10.17க்கு கொண்டு வந்தாரு. நானும் விடாம அரையிறுதி இரண்டுல 10.15 விநாடிகள்ல கடந்து முறியடிச்சேன், ரெண்டு பேருக்குமே சந்தோஷமா இருந்திச்சு. எங்களுக்கு இடையில போட்டித்தன்மை இருக்கும், அது வேற விஷயம். இப்படித்தான் போட்டியில கலந்துக்க ஒருமுறை சவுதி அரேபியா போனப்ப கூட, நாங்க ஒரே அறையில தான் தங்கினோம், அப்பக்கூட நாம எப்படி இந்தியாவோட ஸ்பிரிண்டிங்கை முன்னேத்தறது, மத்தவங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய விஷயமா அதை ஆக்கறதுங்கற வகையில பேசிக்கிட்டோம்.
பிரதமர் – குரிந்தர்வீர் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
குரிந்தர்வீர் – சார், அனிமேஷ் ரொம்ப சரியா சொன்னாரு. நாம சிறப்பா செயல்படணும்னு நாங்க தீர்மானம் செய்திருக்கோம். ஒருத்தரோட உதவி இன்னொருத்தருக்கு எப்பவேணா தேவைப்படலாம். ஆகையால ஒருத்தருக்கு ஆதரவா இன்னொருத்தர் இருக்கோம், இப்பகூட முதல்ல நான் பதிவை ஏற்படுத்தினேன், அதுக்கு பிறகு உடனே அனிமேஷ் செய்தாரு. தயாரிப்புல ஈடுபடும் போது நான் அனிமேஷ் கிட்ட சொன்னேன், அனிமேஷ் அந்த ப்ளாக் சரியா இருக்கு, அங்க போய் உட்கார்ந்து அங்க ஸ்ட்ரைட் பண்ணலாம், அங்க தயாரிப்புல ஈடுபடலாம், இது சரியா இருக்கும்னு பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குவோம். இதனால நாமளும் மேம்படுவோம், மத்தவங்களும் மேம்பாடு அடைவாங்க. நட்பும் தேவை தான், ஆனா அதெல்லாம் மைதானத்துக்கு வெளிய. வெளிய நாங்க நல்ல நண்பர்கள். அதே நேரத்தில, களத்தில இறங்கியாச்சுன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியாளர்கள். நான் அவரை விட வேகமா ஓடணும்னு ஒருத்தருக்கு ஒருத்தர் நினைச்சு ஓடுவோம்.
பிரதமர் – உங்களோட போட்டி இருக்கே, அது தேசத்தோட கௌரவத்தை அதிகப்படுத்தவும், தேசத்தோட எதிர்காலத்தை இந்த இடத்துக்குக் கொண்டு வரவும் ஒரு ஆக்கப்பூர்வமான உணர்வுல செய்யப்பட்டது. உங்களோட இந்த விளையாட்டு உணர்வு இருக்கே, அதில விளையாட்டில ஈடுபடணும், ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போடணும், அடுத்தபடியா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிகரமா இருக்கணும், இது அருமையான விஷயம். உங்களுக்கு என்னோட தரப்பிலேர்ந்து பலப்பல பாராட்டுக்கள், என்ன்னோட பலப்பல நல்வாழ்த்துகள், நீங்க தொடர்ந்து நாட்டுக்கு பெருமை சேர்த்துக்கிட்டே இருங்க. இப்படியா தொடர்ந்து கடினமா உழைச்சு நீங்க நிரம்ப முன்னேற்றம் அடைவீங்கன்னு நான் முழுமையா நம்பறேன். பலப்பல நல்வாழ்த்துக்கள்.
குரிந்தர்வீர்/அனிமேஷ் – நன்றி சார்.
பிரதமர் – பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நாட்டின் பல பாகங்களில் தீவிரமான வெப்பம் காணப்படுகிறது. கடுமையான வெப்பம், சூடான காற்று, இதுபோன்ற பருவநிலைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து நீர் பருகி வாருங்கள். வெயிலில் செல்ல வேண்டியிருந்தால், கவனித்துச் செல்லுங்கள். அந்த வகையில் அரசாங்கத்தின் பலவேறு துறைகள் அளித்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கத் தவறாதீர்கள்.
நண்பர்களே, நம் நாட்டிலே கோடையின் வெப்பத்தை சமாளிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பலவேளைகளில் சமையலறையில் கிடைக்கிறது. எப்போதெல்லாம் வெப்பம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் வீட்டின் சமையலின் சுவையும் மாறிப் போகிறது, சமைக்கும் விதமும் மாறி விடுகிறது. பானையில் தண்ணீர் இடம் பெறத் தொடங்குகிறது, தயிரின் பயன்பாடு அதிகரிக்கிறது, மாங்காய் நீரில் கொதிக்க ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன, உள்நாட்டு பானம் தயாராகிறது. நம் நாட்டின் பானங்கள் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள், வட பாரதம் சென்றால், பல இடங்களில் ஆம் பன்னா கிடைக்கும், இதன் மாங்காய் சுவையோடு கூடவே, வெப்பத்திலிருந்தும் விடுப்பு கிடைக்கிறது. பஞ்சாப் ஹரியாணா பகுதிகளிலோ லஸ்ஸி பானம் கிடைக்கும், பெரிய கோப்பையில் கிடைக்கும் லஸ்ஸி. ராஜஸ்தான் குஜராத்திலோ மோர், இது ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் இணைபிரியாத ஒன்றாக ஆகி விடுகிறது. மேலும் பிஹார், ஜார்க்கண்ட், வடகிழக்கு பகுதிகளில் சத்தூ ஷர்பத், அருமையாக சுவை கூட்டவல்லது. வயிறும் நிறையும், பலமும் அதிகரிக்கும். கோங்கண், கோவா பகுதிகளில் கோகம் ஷர்பத், ஸோல் கடீ கிடைக்கும். தென்பாரதத்தில், பானகம், நீர்மோர், சம்பாரம் போன்றவையும், ஒடிஷாவிலே பேல் பனா கிடைக்கும். இது வெறும் பானம் அல்ல, பாரதத்தின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரியத்தின் அங்கம். மேலும் இதிலே ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் பிரதிபலிப்பு காணப்படும். இன்னும் ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள், இவற்றிலே அதிகபட்சம் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே கிடைக்கின்றன, நமது வயல்வெளிகளில் விளைகின்றன. எந்த ஒரு பெரிய ப்ராண்டிங் எல்லாம் கிடையாது. ஆனால் தலைமுறைதலைமுறைகளாக கிடைத்த அனுபவம் அவற்றிலே கலந்திருக்கிறது. நீங்களும் கோடையின் வெப்பத்தின் போது உள்நாட்டு பானங்களைப் பருகி ஆனந்தம் அடையுங்கள்.
நண்பர்களே, கோடை வரும் போதே, மேலும் ஒரு விவாதம் ஒவ்வொரு வீட்டிலும் தொடங்கி விடுகிறது, அது தான் மாங்காய். மாங்காய்-மாம்பழம் தான் விவாதப் பொருள், கோடையில் மாங்காய் பற்றிப் பேசாத வீடு பாரதத்திலே இருக்க முடியாது. ஒவ்வொரு பகுதிக்கும் உரித்தான மா ரகம், அதன் பிரத்யேக சுவை, மணம் ஆகியன. மகாராஷ்டிரம் மற்றும் கோங்கணில் ஹாபுஸ், அல்ஃபோன்ஸோ, குஜராத்தின் கேஸர், இது தான் மாம்பழ ரசத்தின் உயிர்நாடி. உத்தர பிரதேசத்தின் தஸ்ஹரியும், என்னுடைய காசியின் லங்க்டாவும். பொதுவாக இந்த லங்க்டாவின் சிறப்பம்சம் என்னவென்றால், பழுத்த பிறகும் இது பலவேளைகளில் பச்சையாகவே இருக்கும். பிஹாரின் ஜர்தாலு, தொலைவிலேயே இதன் மணம் இதன் அடையாளமாக ஆகி விடுகிறது. சௌஸா, மால்தா என்ற பெயர்களோடு மக்களின் நினைவுகள் கலந்திருக்கின்றன. தென் பாரதத்தின் பங்கனபல்லி, தோதாபுரி, நீலம், மல்கோவா, வங்காளத்தின் ஹிம்சாகர், ஒடிஷா மற்றும் ஆந்திரத்தின் சுவர்ணரேகா. அதாவது, இடம் மட்டும் மாறவில்லை, அதோடு கூடவே மாம்பழத்தின் வடிவமும் வண்ணமும் சுவையும் கூட மாறி விடுகிறது.
மேலும் நண்பர்களே மாம்பழத்தின் இந்தப் பயணம், இப்போது கிராமம் தொடங்கி, உலகளாவிய சந்தைகள் வரை தொடர்கிறது. இன்று மனதின் குரல் வாயிலாக நான் மாம்பழ சாகுபடியோடு தொடர்புடைய விவசாய சகோதர சகோதரிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறேன். நீங்கள் தேசத்தின் விவசாயப் பொருளாதாரத்திற்கு உதவும் மாம்பழ சாகுபடியாளர்கள் மட்டுமல்ல, சிறப்பான விவசாயிகளும் கூட. இதே போல தொடர்ந்து கோலோச்சுங்கள்.
நண்பர்களே, கோடைநாட்களிலே, பள்ளிக்கூட விடுமுறை தான் என்றாலும், நான் பேசவிருக்கும் ஒரு வகுப்பிலே நீங்களும் சேர வேண்டும் என்று உங்கள் மனமும் ஆசை கொள்ளும். நண்பர்களே, இப்படி ஒரு பள்ளியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அதிலே குழந்தைகளும் வருகிறார்கள், இளைஞர்களும் வருகிறார்கள், முதியவர்களும் வருகிறார்கள். அங்கே கட்டணம் ஏதும் கிடையாது, பெரிய கட்டடம் ஏதும் இல்லை, வகுப்பறைகள் ஒன்றும் கிடையாது, ஆனால் சுவாரசியமான விஷயமே அங்கே வகுப்பு நதியிலே தான் நடக்கும்.
நண்பர்களே, இது ஏதோ கட்டுக்கதையல்ல. இது ஒரு மெய்யான முயற்சி. கேரளத்தின் அலுவாவிலே, சாஜீ வலாஷேரில் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு நீச்சல் கிளப்பை நடத்தி வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 15,000த்துக்கும் அதிகமானோர் இங்கே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். சாஜீ அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த முயற்சியின் பின்னணியிலே ஒரு வலியும் மறைந்திருக்கிறது. சில ஆண்டுகள் முன்பாகத் தான், ஒரு படகு விபத்தில் பல மாணவர்களின் இறப்பு சம்பவித்தது. இந்தச் சம்பவம் சாஜீயை உலுக்கிப் போட்டது. அந்தக் குழந்தைகளுக்கு மட்டும் நீச்சல் தெரிந்திருந்தால், அவர்கள் ஒருவேளை தப்பியிருப்பார்கள் இல்லையா என்று அவர் நினைத்தார். இது தான் அவருடைய இந்த இயக்கத்தின் தொடக்கமானது.
நண்பர்களே சாஜி வலாஷெரில் அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பெரிய கற்றலை அளிக்கிறது. சேவை செய்ய பெரியபெரிய சாதனங்களோ கருவிகளோ தேவையில்லை; தேவை ஒரு நல்ல நோக்கம், தொடர்ந்து சேவையாற்றும் முயற்சி. இவற்றின் துணையோடு, ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்த முடியும்.
என் அன்புநிறை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் நான் ஐரோப்பாவின் நெதர்லாண்டு நாட்டுக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே பல கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அப்போது ஒரு கணம் அனைத்து பாரதநாட்டவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது. நெதர்லாண்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விழாவிலே சோழர்கள் காலத் தொன்மையான தாமிரப் பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலே நெதர்லாண்டின் பிரதம மந்திரியும் உடன் இருந்தார். இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக பல நாடுகளிலிருந்து எனக்குத் தொடர்ந்து செய்திகள் கிடைத்து வருகின்றன. மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள், பெருமிதத்தைத் தெரிவித்து வருகிறார்கள். உலகெங்கிலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் இதனால் சிறப்பான உற்சாகம் பெருக்கெடுத்திருக்கிறது.
நண்பர்களே, இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் நிறைய ஆவல் இருக்கிறது. ஆகையால் இதோடு தொடர்புடைய சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இவற்றிலே 21 பெரிய மற்றும் 3 சிறிய பட்டயங்கள் இருக்கின்றன. இவை முக்கியமாக பேரரசன் முதலாம் ராஜேந்திர சோழன் வாயிலாக அவருடைய தந்தையார் பேரரசர் ராஜராஜ சோழன் அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி வைத்தல் தொடர்பானது. ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை ஒரு புத்த விஹாரம் அமைக்க தானமாக அளிப்பது பற்றி இதிலே குறிப்பு இருக்கிறது. இந்தத் தாமிரப் பட்டயங்களிலே சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கிறது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல்வல்லமை எத்தனை மகத்தானதாக விளங்கியது என்பதை இதிலிருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு அவர்களுக்கு இருந்த தொடர்புகளைப் பற்றிய தகவல்களும் இவற்றிலே காணக் கிடைக்கின்றன.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளமான வரலாறும், கலாச்சாரமும் தொடர்பாக நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுகிறது.
நண்பர்களே, நமது அரசாங்கம் பாரதத்தின் விலைமதிப்பில்லாத மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்தத் தொடரிலே, ஞான பாரதம் இயக்கத்திற்குட்பட்டு, சத்திஸ்கட்டின் மல்ஹாரிலும் கூட ஒரு மகத்துவம் வாய்ந்த தேடல் நடந்திருக்கிறது. இங்கே மூன்று அபூர்வமான தாமிரப் பட்டயங்கள் கிடைத்திருக்கின்றன. இவை பாண்டுவம்ச அரசகுடும்பத்தின் மஹர்ஷி பாலார்ஜுனரின் ஆட்சிக்காலத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த எழுத்துப்பொறிப்புகள், 6-7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, அதாவது 1400-1500 ஆண்டுகள் பழமையான இந்த தாமிரப் பட்டயங்கள், பண்டைய பிராம்மி எழுத்துக்கள் மற்றும் பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றிலே அந்தக் காலகட்டத்தின் ஆட்சிமுறை, அறம் மற்றும் கலாச்சாரம் பற்றிய மகத்துவமான தகவல்கள் கிடைக்கின்றன.
நண்பர்களே, பாரத நாட்டவர்களான நமக்கு வானியல் தொடர்பாக எப்போதுமே ஈர்ப்பும் ஆர்வமும் இருந்து வந்திருக்கிறது. நமது தேசத்திலே இன்றும்கூட பல நூற்றாண்டுக்காலப் பழமையான வானாய்வகங்கள் இருக்கின்றன. இங்கே அற்புதமான கணிதக் கண்டுபிடிப்புகள் நடந்திருக்கின்றன. கடலோடல்-வானோடலாகட்டும், பஞ்சாங்கமாகட்டும், அல்லது நமது திருநாட்கள்-பண்டிகைகளாகட்டும், இவை அனைத்தும் வானத்தோடும், விண்மீன்களோடும் தொடர்புடையவையாக இருந்திருக்கின்றன. நம் நாட்டிலே வானியலானது ஒவ்வொரு தலைமுறையின் ஆர்வத்தையும் தொடர்ந்து தூண்டி வந்திருக்கிறது. ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்தியிருக்கிறது, இன்றைய இளைஞர்களும் கூட இது தொடர்பாக கணிசமான பேரார்வத்தோடு இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நாடெங்கிலும் வானியல் குழுக்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன என்பதை நீங்களே கூட கவனித்திருக்கலாம். பெரியபெரிய நகரங்கள் தொடங்கி, சிறிய வசிப்பிடங்கள் வரை, பள்ளிகள் முதல் பூங்காக்கள் வரை இந்தச் செயல்பாடுகளைக் காண முடிகிறது. பெங்களூர் வானியல் சங்கம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இங்கே கண்காணிப்பு சார்ந்த அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த அமைப்பிலே ஊரகப் பகுதிகளிலே வானியலை மக்களுக்கு விருப்பப்பொருளாக ஆக்கும் இயக்கமும் தொடங்கப்பட்டிருக்கிறது. ககோல் மண்டல், அதாவது வானியல் சங்கம் என்ற பெயர் கொண்ட ஒரு குழுவானது 30 மணிநேர அளவிலான மிகவும் புதுமையான படிப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறது.
நண்பர்களே, இரவின் விண்மீன்களை ரசிப்பது என்பது உள்ளபடியே மிகவும் அற்புதமான அனுபவம். ஆஸ்ட்ரோ கேரளா என்ற பெயருடைய அமைப்பு ஒன்று, இரவுக் கண்காணிப்பு முகாம்களுக்கும் கருத்துப் பட்டறைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. இங்கே இளைஞர்கள் தொலைநோக்கிக் கருவியைத் தயாரிப்பது, நட்சத்திரங்களின் வரைபடங்களைப் பயன்படுத்துவது ஆகியவை பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். ராஜ்கோட்டின் பிக்பேங்க் வானியல் சங்கமானது, கிர் காடுகள் முதல் கட்சின் ரண் வரை பல வானியல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஜோதிர்வித்யா பரிசம்ஸ்தாவும் கூட வானியலின் மிகவும் பழமையான அமைப்புகளில் ஒன்று. இங்கே கண்காணிப்பு வசதிகளுடன் கூடவே, புத்தகங்கள், நூலகம் மற்றும் தொலைநோக்கு நூலக வசதிகளும் இருக்கின்றன. நான் ISAAC ஐசாக் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். இது மாணவர்களால் வழிநடத்தப்படும் தேச அளவிலான வலையமைப்பு. இது வானியல் மற்றும் வானியற்பியல் சங்கங்களை பரஸ்பரம் இணைக்கிறது.
நண்பர்களே, நம்முடைய பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குவதும், தொடர்ந்து ஏதேனும் புதியதாகக் கற்றுக் கொண்டே இருப்பதும் மிகவும் அவசியமானவை. ஏதோ ஒரு வானியல் சங்கத்தோடு கண்டிப்பாகத் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும், இந்த விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு கோளரங்கத்திற்குக் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும் என்று இளைஞர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, மனதின் குரல் நிகழ்ச்சியை யாரெல்லாம் தொலைக்காட்சியில் பார்க்கிறார்களோ, அவர்களிடம் நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு காணொளியைக் கண்டிப்பாகப் பாருங்கள். இந்தக் காணொளி கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாகியிருக்கிறது. இதிலே சிலர் மிகவும் பொறுமையாக, மிகவும் நிதானத்தோடு ஒரு கங்கைப்பகுதி டால்ஃபினைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த மொத்த முயற்சியிலும் சுமார் 13 மணி நேரம் செலவாகி, நிறைவாக அந்த டால்ஃபின் தப்பியது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.
நண்பர்களே, பாரதத்தின் முதலாவது கங்கைப்பகுதி டால்ஃபின் மீட்பு அவசரகால வாகனத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இதில் அடங்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்தது. அங்கே ஒரு கங்கைப்பகுதி டால்ஃபின் ஒரு கால்வாயிலே சிக்கிக் கொண்டது. இந்த வேளையில் நமாமி கங்கே இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் அதற்கு நம்பிக்கைக் கீற்றாக விளங்கியது. மிகவும் கவனமாக அதை வெளியே எடுத்தது. பிறகு அது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அது பாதுகாப்பாக ராப்தி நதியில் விடப்பட்டது. ஒரு வகையில் சொல்லப்போனால், ஒரு உயிர் மீண்டும் தனது இருப்பிடம் திரும்பியது என்று கூறலாம்.
நண்பர்களே, இந்த டால்ஃபின் மீட்பு ஆம்புலன்ஸ் மிகவும் சிறப்பானது. இதை ஒரு நடமாடும் மருத்துவமனையைப் போல வடிவமைத்திருக்கிறார்கள். இதிலே டால்ஃபினுக்குத் தேவையான பாதுகாப்பு அமைப்புகள் இருக்கின்றன. பிராணவாயு வசதி, சிறப்பான ஸ்ட்ரெச்சர், மீட்பு உபகரணங்கள், அதாவது ஏதாவது டால்ஃபின், காயமடைந்து கால்வாயில் சிக்கிக் கொண்டாலோ, நதியிலிருந்து விலகிப் போயிருந்தாலோ, உடனடியாக அதற்கு உதவி செய்யப்படும்.
நண்பர்களே, நாம் கங்கைப்பகுதி டால்ஃபின்களைக் காப்பாற்றும் போது, நாம் ஏதோ ஒரு உயிரினத்தை மட்டும் காப்பாற்றவில்லை, நாம் கங்கையின் உயிரி பன்முகத்தன்மையையே காப்பாற்றுகிறோம். நதியின் ஒட்டுமொத்த உயிர்ப்பு இயந்திரத்தைக் காப்பாற்றுகிறோம், நமக்குப் பின்னால் வரும் தலைமுறையினருக்கு இயற்கையின் விலைமதிப்பில்லா ஒரு மரபினைக் காப்பாற்றித் தருகிறோம்.
எனதருமை நாட்டுமக்களே, உங்களில் பலருக்கு நதி, குளம் அல்லது ஏரிகளோடு தொடர்புடைய நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். யாருக்காவது குளத்தில் நீந்தியது, யாருக்காவது ஏரிக்கரையில் நண்பர்களோடு விளையாடியது, யாருக்காவது அந்த மண்ணின் மணம் நினைவில் இருக்கலாம். சிறுவயதின் இப்படிப்பட்ட நினைவலைகள் வாழ்க்கை முழுவதும் நம் மனங்களிலேயே நீக்கமறத் தங்கி விடுகின்றன.
நண்பர்களே, இப்படிப்பட்ட நினைவலைகளைப் பராமரிக்க உள்ளெழுச்சியளிக்கவல்ல காதைகள் உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலிருந்து காணக் கிடைக்கிறது. பஸ்தியின் ஆகாஷ் குப்தா அவர்கள் தன்னுடைய கிராமத்தின் மனோரமா நதியைக் கண்டு மிகவும் துயரமடைந்தார். ஏனென்றால் எந்த நதியை அவர் சிறுவயதிலே தூய்மையானதாகவும், உயிர்ப்புள்ளதாகவும் கண்டாரோ, காலப்போக்கிலே அந்த நதியிலே நெகிழிகள் திரண்டு, மாசு அதிகரிக்கத் தொடங்கியது. யாரையும் குற்றம்குறை கூறுவதாயில்லை, தானே ஒரு புதிய தொடக்கத்தைப் புரிவதாய் ஆகாஷ் அவர்கள் தீர்மானம் மேற்கொண்டார். குற்றம் சொல்லோம், தொடக்கம் செய்வோம் என்பது மந்திரச் சொற்களாயின. தனது நண்பர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டார். கைகளிலே வெறும் வலை இருந்தது, மண்வெட்டி இருந்தது, பாண்டு இருந்தது, அனைத்தையும் விட மேலான சக்தியாக, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தது. இந்த இளைஞர்கள் நதியில் இறங்கினார்கள், ஆகாயத்தாமரைகளை வெளியேற்றினார்கள், நெகிழிகளையும், குப்பைகளையும் அகற்றினார்கள். பல வேளைகளில் ஒரே நாளில் 50-60 கிலோ வரையிலான குப்பைகளை நதியிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். மெல்லமெல்ல மனோரமா நதியின் அந்தப் பகுதி மீண்டும் தூய்மையாகக் காட்சியளிக்கத் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருப்போரின் கவனமும் இந்தப் பணியின்பால் திரும்பியது. மக்கள் மனங்களிலும் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது.
நண்பர்களே, இதே போன்றதொரு உத்வேகமளிக்கும் சம்பவம் கோவாவிலே தெரிய வந்திருக்கிறது. கோவாவின் பாலகிருஷ்ண ஐயா அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர். ஆனால் சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற அவருடைய உற்சாகம் இன்றும் பசுமையாக இருக்கிறது. மட்டீ-தோலாப் பகுதியிலே நீர்த்தட்டுப்பாடு பலரையும் வதைத்துக் கொண்டிருந்தது. தீர்வு நோக்கி இவரும் பணியாற்றி வந்தார். பாலகிருஷ்ணா அவர்கள், குழாய்களைப் பொருத்தும் பணியில் மகத்துவமான பங்காற்றினார். இதனால் பல இல்லங்களுக்குக் குடிநீர் கிடைக்க முடிந்தது. எந்தக் குடும்பங்கள், குடிநீருக்காக தினமும் போராட வேண்டியிருந்ததோ, அவர்களுக்குப் பெரும் ஆசுவாசம் பிறந்தது.
நண்பர்களே, கடந்த மாதங்களில் ஒரு மிகப்பெரிய அனுபவம் எனக்குக் கிடைத்தது. இது மனதின் குரலோடும் கூட தொடர்புடையது. ஆகையால் இன்று நான் இதுபற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டின் நாகர்கோயிலில் நான் ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் முன்பாக நான் அவரைச் சந்தித்திருந்தேன். நான் கிரிஜா அம்மா அவர்களைப் பற்றித் தான் பேசுகிறேன். அந்தச் சந்திப்பின் போது, இளைய மாணவர்களும் அவருடன் இருந்தார்கள்.
நண்பர்களே, கிரிஜா அம்மா அவர்கள் சுமார் 15 பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். இவற்றிலே சென்னையின் ஜய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மிகவும் முக்கியமானது. இவருடைய தேசபக்தி உணர்வு, அனைத்து பாரதவாசிகளுக்கும் கருத்தூக்கமளிக்கவல்லது. இவர் மனதின் குரலால் உள்ளெழுச்சி பெற்று, தேசத்தின் பல இராணுவ வீரர்களுக்கு பங்களிப்பு அளிக்கும் உறுதி பூண்டார். இதன் பொருட்டு இவர் தனது அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உத்வேகம் அளித்தார். வீரம் நிறைந்த படைவீரர்களுக்கு நாம் ஒவ்வோர் தினமும் ஒரு ரூபாய் பணத்தைப் பங்களிப்பாக அளித்துவர வேண்டும் என்று மாணவர்களிடம் இவர் கூறினார். அதாவது ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாணவன் தரப்பிலிருந்தும் 365 ரூபாய் திரட்டப்படும். இந்தச் சின்னச்சின்னப் பங்களிப்பால் சுமார் 40 இலட்சம் ரூபாய் சேர்ந்தது. கிரிஜா அம்மா அவர்கள் இந்த மொத்தப் பணத்துக்கான காசோலையை என்னிடத்தில் அளித்தார். அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது, பாரத அன்னையிடம் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு உணர்வு எத்தனை ஆழமானது என்பதை என்னால் உணர முடிந்தது. கடந்த ஆண்டு தான் சென்னையின் முதல் ஹிந்து வித்யாலயமானது தனது 50 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்தது. தேசத்தின் கல்வி மற்றும் கலாச்சார கௌரவத்தை முன்னெடுத்துச் செல்லும் பள்ளி வலையமைப்பு தொடர்பான இவருடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நம்முடைய படைவீரர்களூக்குத் தங்களுடைய பங்களிப்பை அளித்த அந்த மாணவச் செல்வங்களுக்கும் நான் குறிப்பாக என் பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
நண்பர்களே, பாரதத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரிலும், ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அது நமக்கு உள்ளெழுச்சியை அளிக்கிறது. பல வேளைகளில், இந்த முயற்சிகள் அதிக பேசுபொருளாவதில்லை என்றாலும், அதைப் பற்றி நாம் அறியும் போது, தேசம் தனது குடிமக்களின் சக்தியின் துணையோடு முன்னேறி வருகிறது என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது. உங்கள் அருகிலே இப்படிப்பட்ட முயற்சிகளைக் கண்டிப்பாக கவனியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். யார் சமூகத்திற்காக நல்ல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்களை அடையாளம் காணுங்கள், அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், முடிந்தால் நீங்களுமே கூட ஏதோ ஒரு நல்ல பணியிலே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாத மனதின் குரலில் மேலும் சில உள்ளெழுச்சியளிக்கும் விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
லட்சக்கணக்கான ஆசிரியர்களைப் பாதிக்கும் டெட் (TET) மறுஆய்வு மனு மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் கோரி தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு சார்பில் அதன் பொதுச் செயலாளர் மு.கந்தசாமி வெளியிட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ளதாவது…
நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிரியர் அமைப்பான அகில பாரதிய ராஷ்ட்ரிய சைக்ஷிக் மகாசங் (ABRSM) உடன் தேசிய ஆசிரியர் சங்கம் இணைந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மறுஆய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் வெளிப்படுத்த தேசிய ஆசிரியர் சங்கம் விரும்புகிறது. இந்தத் தீர்ப்பு, பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பள்ளிகளில் பணியாற்றி வரும் நாடு முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்களிடையே பரவலான அதிருப்தியையும் கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், நடைமுறையில் உள்ள அரசாங்க விதிகள் மற்றும் அறிவிப்புகளின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் நடத்தப்பட்ட உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலர், கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்குச் சேவை செய்து, கல்வி முறையை வலுப்படுத்துவதற்காகத் தங்கள் வாழ்வின் பொன்னான ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளனர்.
ABRSM பின்வரும் அம்சங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறது: பல ஆண்டுகள் பணியாற்றியிருந்த போதிலும், தற்போதைய சட்ட நிலை காரணமாக லட்சக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுசெய்ய முடியாத பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
அவர்களின் பணி நிலைமைகள் குறித்த திடீர் நிச்சயமற்ற தன்மையானது, பள்ளிகளின் செயல்பாட்டையும் ஒட்டுமொத்த கல்விச் சூழலையும் மோசமாகப் பாதிக்கும்.
இந்தப் பிரச்சினை மனிதாபிமான மற்றும் நிர்வாகத் தன்மை வாய்ந்தது, எனவே அரசாங்கத்தின் அவசரத் தலையீடு தேவைப்படுகிறது.
கடந்த காலங்களில், ஊழியர்களைப் பாதுகாக்கவும் நிறுவன நிலைத்தன்மையைப் பேணவும் பரந்த பொது நலனுக்காக சட்ட நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகள் கையாளப்பட்டுள்ளன.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது பொருத்தமான அவசரச் சட்டம் அல்லது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க இந்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய நடவடிக்கை, கல்வித் துறையில் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதோடு, ஆசிரியர்களின் நலன்களையும் பாதுகாக்கும்.
ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆசிரியர் சமூகம் எப்போதும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் இருந்து வருகிறது, மேலும் அவர்கள் நீதியையும் பாதுகாப்பையும் பெறத் தகுதியானவர்கள்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காக ஜனநாயக மற்றும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட நிர்பந்திக்கப்படலாம் என்பதை தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறது. அரசின் முன்முயற்சியான தலையீட்டின் மூலம் அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.
நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:
எந்த ஒரு நாட்டின் பிரதமரும் அந்த நாட்டின் பெருமை. ஆனால் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி இதற்கு விதிவிலக்கு.
நம் நாட்டு மக்களே மோடிக்கு இழைத்த அவமதிப்பும், அவதூறும் எந்த ஒரு தகுதியற்ற நபருக்கும் நேர்ந்திருக்காது. இதில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், நம்மில் பலர் அதை எதிர்த்துக் கூட கேட்கவில்லை. இதுதான் நமது பரிதாபம்.
நாட்டில் பல தலைவர்கள் அதீத வறுமையில் இருந்து உயர் பதவிகளுக்கு வந்தார்கள். ஆனால் தேநீர் விற்றதற்கு ஆதாரம் கேட்கப்பட்டது மோடியிடம் மட்டும்தான். “அயே மேரே வதன் கே லோகோ” பாடலின்போது நேரு அழுதபோது, அது அவருடைய மென்மையான இதயத்தின் அடையாளம் என்று புகழப்பட்டது. ஆனால் மோடியின் கண்கள் எங்காவது கலங்கினால், அவை “முதலைக் கண்ணீர்” என்று முத்திரை குத்தப்படுகின்றன.
ஒருநாள், யாரோ பரிசளித்த பத்து லட்ச ரூபாய் சூட்டை அவர் அணிந்தபோது, அவரது அரசாங்கம் “சூட்-பூட் அரசாங்கம்” என்று கேலி செய்யப்பட்டது. ஆனால் அதே சூட் பின்னர் ஏலம் விடப்பட்டு, கிடைத்த 3.5 கோடி ரூபாய் “நமாமி கங்கை” திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறித்து எந்தப் பேச்சும் இல்லை.
நம் சிறுவயதில், நேருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் பார்த்தோம். அதில் தொட்டில் முதல் பிரதமர் ஆனது வரை அவருடைய பயணம் காட்டப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயமாக இருந்தது. ஆனால் மோடி தன் தாயின் கால்களைத் தொட்டு ஆசி வாங்கும் புகைப்படம் வெளியானபோது, குற்றச்சாட்டு தயாராக இருந்தது: மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கையை விளம்பரப்படுத்துகிறார்.
இந்தியாவின் சந்திரயான் திட்டம் பின்னடைவைச் சந்தித்தபோது, மோடிதான் அதற்குப் பொறுப்பு என்று கூறப்பட்டது. மோடி விஞ்ஞானிகளுடன் இரவு முழுவதும் தன்னைப் புகழ்ந்து பேசி அமர்ந்திருந்ததால், அவர்கள் கவனம் சிதறி விண்கலம் பாதை மாறியது என்று கூறப்பட்டது.
ஒருமுறை, மோடி ராட்டையில் நூல் நூற்கும் புகைப்படத்தை யாரோ வெளியிட்டபோது, பெரும் அமளி ஏற்பட்டது. “மோடி மகாத்மா காந்திக்கு இணையாக முயற்சிக்கிறார். ராஜா போஜனையும் கங்கு தெலியையும் எப்படி ஒப்பிட முடியும்?” என்று விமர்சனங்கள் வந்தன. அந்த ராட்டையில் மோடி இருப்பதை விமர்சகர்கள் விரும்பவில்லை. ஆனால் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்பவர்கள், அதே ராட்டையில் நூல் நூற்கும் பிரதிபா பாட்டீல் மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்தப் புகைப்படங்கள் கூகுள் அல்லது யூடியூப்பில் கிடைக்கின்றன. ஒருவேளை பிரதிபா தாயும் அமிதாப்பும் மகாத்மா காந்திக்கு சமமானவர்களோ?
மாண்புமிகு மோடியும் ஜசோதாபென்னும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்திருந்தபோது, பல விஷமிகள் மோடி தன் மனைவியை கைவிட்டுவிட்டார் என்று கூச்சலிட்டு, ஜசோதாபென்னை அவருக்கு எதிராகத் தூண்ட முயன்றனர். ஆனால் ஜசோதாபென் தானே நிலைமையைத் தெளிவுபடுத்தி அவர்களைக் கண்டித்த பிறகுதான் அந்த விவகாரம் அடங்கியது.
2020-இல், ஜெய் பகவான் கோயல் என்ற மோடி ஆதரவாளர் “ஆஜ் கே சிவாஜி நரேந்திர மோடி” என்ற புத்தகத்தை எழுதினார். மோடி மீது வெறுப்பில் மூழ்கியவர்கள் பொறாமையில் எரிந்தனர். மோடிக்கு இதில் சம்பந்தமே இல்லாவிட்டாலும், “நீ சிவாஜி மகாராஜா என்று நினைத்தாயா? உனக்கு அந்த தகுதி இருக்கிறதா?” என்று அவதூறுகளை வீசினர். இதற்கு முன், மறைந்த யஷ்வந்த்ராவ் சவான் பிரதி-சிவாஜி என்றும், மாண்புமிகு சரத்ராவ் பவார் ஜாண்டா ராஜா என்றும் சிவாஜி மகாராஜருடன் ஒப்பிடப்பட்டனர். ஆனால் நரேந்திர மோடி? “அய்யோ, விடுங்கள்!” அதன் விளைவாக, அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.
சமீபத்தில்தான், ஒரு புத்தகம் சந்தைக்கு வந்துள்ளது. புத்தகத்தின் பெயர் “லாச்சித் போர்புகான்: அசாம் சே சிவாஜி”, சுஜ்குமார் புயான் எழுதி விஜய் லோங்கர் மொழிபெயர்த்தது. இந்தப் புத்தகம் மோடி-வெறுப்பாளர்களின் கவனத்தில் இருந்து தப்பிவிட்டது, அல்லது இது மோடியைப் பற்றியது அல்ல என்பதால் புறக்கணிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் பற்றிய தகவலும் கூகுளில் கிடைக்கிறது.
மோடியின் எதிரிகள் எட்டிய உச்சங்கள்: அவரை “NRI PM” என்று கேலி செய்வது, சர்ஜிகல் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பது, மணிசங்கர் ஐயர் அவரை நீச் என்று அழைப்பது, சோனியா காந்தி அவரை மௌத் கா சௌதாகர் என்று அழைப்பது, ராகுல் காந்தி சௌகிதார் சோர் ஹை என்று அவமதிப்பது, மற்றும் “மனைவியைக் கவனிக்க முடியாதவன் நாட்டை எப்படி நிர்வகிப்பான்?” என்று சொல்லி மன உறுதியைக் குலைக்க முயற்சிப்பது, பாம்பு, தேள் என்று ஒப்பிடுவது வரை.
இத்தகைய தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு, சிறிதும் கவனம் சிதறாமல், இந்த மனிதர் நாட்டுக்காக தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார். அவர் உலகில் நாட்டின் மதிப்பை உயர்த்துகிறார், அதே நேரத்தில் தன் சொந்த நாட்டிற்குள் அவமானங்களை அமைதியாக சகித்துக்கொள்கிறார்.
2002 முதல், அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. தனது தனிப்பட்ட உணவுச் செலவுகளை தனது சம்பளத்தில் இருந்து ஏற்கிறார். வெளிநாட்டுப் பயணங்களின்போது, வெளிநாட்டில் ஹோட்டல் செலவை மிச்சப்படுத்த வேண்டுமென்றே இரவில் பயணம் செய்து விமானத்தில் உறங்குகிறார். தீபாவளியின்போது விடுமுறை எடுப்பதற்குப் பதிலாக, நமது வீரர்களின் மன உறுதியை உயர்த்துவதில் செலவிடுகிறார். 70-களிலும், அவர் ஒரு இளைஞனின் ஆற்றலுடன் ஓடுகிறார்.
இந்த மனிதன் எந்த மண்ணால் செய்யப்பட்டவர்? நாட்டின் பெருமைக்காக தொடர்ந்து பாடுபடும், மிகுந்த புத்திசாலித்தனமும், ஆழ்ந்த உணர்வுத்திறனும், மன உறுதியும் கொண்ட, உலக நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் பாரத மாதாவின் இந்த அசாதாரண, கடின உழைப்பாளி மகன் நரேந்திர மோடிக்கு எனது நூற்றுக்கணக்கான வணக்கங்கள். பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய பிரதமர்!! ஜய் ஹிந்த் 🇮🇳 பாரத் மாதா கி ஜய் 🇮🇳
அமெரிக்க அதிபர் முதல் அனைவரும் மேற்கு வங்க மாநில தேர்தல் நிகழ்வுகளை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாஜகவை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பல ஆண்டுகளாக மம்தா பானர்ஜி கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தங்கள் கட்சி அலுவலகங்களை மீட்டெடுத்துக் கொண்டாடினார்கள் . பாஜகவின் வெற்றி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கும் விடுதலை உணர்வை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வரும் முன்பு அதிகாரத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதையே காங்கிரசுக்கு செய்திருந்தனர். இன்று இரண்டு கட்சியினருக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் (அ முதல் ஔ வரை அனைத்து பிரிவுகளும்) வீர சாவர்க்கரை இன்றும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீர சாவர்க்கர் பெரும் புரட்சியாளர். ஆங்கிலேயரை எதிர்த்து வன்முறை வழியில் , வெடிகுண்டு பாதையில் பயணித்தவர். கம்யூனிஸ்டுகள் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகு கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர். மம்தா பானர்ஜி அதே வழியில் பயணித்து மேற்கு வங்கத்தில் அவர்களை வீழ்த்தினார். அதே வழியில் தொடர்ந்தார். ஆனால் சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை இல்லாமல் ஜனநாயக வழியில் மம்தா பானர்ஜியை வென்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.
சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?
வீர சாவர்க்கர் 1883 ஆண்டு மே மாதம் 28 தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் பாகூர் கிராமத்தில் பிறந்தார். தேசபக்தர்களான சாபேகர் சகோதரர்களை இளம் வயதிலேயே தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. அதனால் மனம் கொதித்த சாவர்க்கர் 1898 இல் தனது குலதெய்வத்தின் முன்பு ஆயுதப் புரட்சி மூலம் ஆங்கிலேய அரசை அகற்ற சபதம் மேற்கொண்டார். 1900 ஜனவரி மாதம் மித்ர மேளா என்ற அமைப்பை ஆரம்பித்து தன் சக மாணவர்களை அதில் இணைத்தார். மித்ர மேளா ரகசிய புரட்சி அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது.
1904 மே மாதத்தில் அபினவ் பாரத் என்ற புரட்சிகர இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் உறுப்பினர்கள் தங்கள் விரலை கீறி இரத்த அபிஷேகம் செய்து சபதம் ஏற்பார்கள். மேற்படிப்புக்காக லண்டனுக்கு சென்றபோதும் அவரது புரட்சிகர செயல்பாடுகள் தீவிரமாக இருந்தன . அதனால் 1910 மார்ச் மாதம் ஆங்கிலேய அரசு அவரை லண்டனில் கைது செய்தது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் வழியில் அவர் கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பிய சாகசம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1910 டிசம்பர் மற்றும் 1911 ஜனவரியில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து , அந்தமான் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. பிறகு 1921 முதல் 23 வரை இந்தியாவில் அலிப்பூர் , ரத்தினகிரி சிறையில் அடைத்தது. 1924 இல் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் எரவாட சிறையிலிருந்து விடுவித்தது.
1947 ஆகஸ்டு மாதம் ஆங்கிலேயே ஆட்சி அகன்று இந்தியா தன்னாட்சி பெற்றது. 1950 ல் அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1952 ல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. சாவர்க்கர் அப்போது அபிநவ் பாரத் அமைப்பை கலைத்து விட்டார். நம் நாட்டு மக்கள் அனைவரும் இனி எதிர்மறையான செயல்பாடுகளையும் வன்முறையையும் தவிர்த்து விட்டு நேர்மறையான செயல்பாடுகள் மூலம் தேசத்தை உயர்த்த வேண்டுமென கூறினார்.
” விடுதலை போர் நடந்து கொண்டிருந்த போது அரசு அதிகாரிகளை கொல்வது, அரசு பணத்தை கொள்ளையிடுவது, அரசு சொத்துக்களை நாசம் செய்வது போன்ற அரசுக்கு எதிரான பயங்கரவாத, வன்முறை செயல்கள் அனைத்தும் நியாயமாக இருந்தன. வன்முறை வழியே நம்முடைய மதமாக இருந்தது. ஆனால் இப்போது போர் முடிந்து விட்டது. நாம் வெற்றி பெற்று விட்டோம். இப்போது அந்த வன்முறை செயல்பாடுகள் தேவையில்லை. அவற்றை நம் நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் அது தொடருமானால் அதுவொரு நாள் நம்மையே திருப்பி தாக்கும். நமக்கு பெரும் பிரச்சனையாக ஆகிவிடும்.”
“எனவே விடுதலை பெற்ற பிறகு நம்முடைய முதல் கடமை வன்முறை , ஆயுத புரட்சி வழியை விட்டுவிட்டு சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும். விடுதலை கிடைத்த பிறகு நம் நோக்கம் மாறிவிட்டது. சுதந்திரத்தை பாதுகாப்பதும் தேசத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றுவதே நமது நோக்கம். இனி நாம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது. சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். அழிவு பாதையில் அல்ல, ஆக்கபூர்வமான நடத்தையை நாம் பின்பற்ற வேண்டும். இனி இதுவே நம்முடைய தேசிய மதமாகும். “
ஆயுத புரட்சி என்ற புயல் வீசிய காலங்கள் போய்விட்டன. இனி சுதந்திர இந்தியா தனது உள்நாட்டு, வெளியுறவுகளை எப்படி கையாள வேண்டும் என்பதில் சாவர்க்கர் தெளிவாக இருந்தார்.
உள்நாட்டில் அரசமைப்பு; வெளியே புரட்சி ! உள்ளே சட்டம்; வெளியே வாள் ! உள்ளே அமைதி; போர் வெளியே !
என்று அவர் கூறினார்.
மகாத்மா காந்திஜியையும் நேரு காங்கிரஸையும் அவர் ஏற்கவில்லை என்றாலும் விடுதலைக்கு பிறகு மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார். தேசபக்திக்கு புதிய வரைவை அவர் அளித்தார்.
” எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது குழப்பத்தையும் வறுமையையும் தான் சந்திக்க வேண்டி இருக்கும். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அவற்றை நீக்கக்கூடிய மந்திர கோல் இல்லை. இது போன்ற சூழலில் புதிய அரசு சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படும் வரை நாம் பொறுமையுடன் தான் இருக்க வேண்டும். இதுவே நம்முடைய தேசிய கடமை. மக்கள் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளாமல், இது என்ன சுதந்திரம். இதற்கு பிரிட்டிஷ் அல்லது ரஷ்ய ஆட்சியே மேலாகும் , என்று கூறுவதை நான் பார்க்கிறேன். இதை கேட்கும்போது என் முதுகெலும்பு சில்லிடுகிறது. ஏனெனில் இது போல் பேசுவது துரோக சிந்தனையாகும். இது போன்ற சிந்தனையால் தான் கடந்த காலத்தில் நாம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டோம். “
” நம் சுதந்திரத்திற்கு இது போன்ற சட்ட புறம்பான போக்கை விட மிகப்பெரிய எதிரி வேறு எதுவும் இல்லை. அந்நியரான ஆங்கிலேயர், ரஷ்யா அல்லது இறை தூதர் ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக நம்மவர்களின் மோசமான ஆட்சியை ஏற்றுக் கொள்ளலாம். உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத சூழ்நிலையை விட பெரிய நோய் தேசத்திற்கு வேறு எதுவும் இல்லை. இது வலி மிகுந்ததாக இருக்கலாம் ஆனால் குணப்படுத்த முடியாததல்ல. அந்நியர் ஆட்சி என்பது தேசத்தின் மரணம். இது நம் மக்களின் இதயத்தை பொறிக்கப்பட வேண்டும். நாடி நரம்புகளில் ரத்தமென பாய வேண்டும்.”
விடுதலைக்கு பிறகு மக்கள் சட்டம் , ஒழுங்கு , அமைதியை பராமரிக்க ஒத்துழைக்க வேண்டுமென சாவர்க்கர் சொன்னார் . ஆனால் மக்கள் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருபவர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால்……..
துடிப்பான, ஆரோக்கியமான ஜனநாயகத்தையே சாவர்க்கர் ஆதரித்தார். எந்த மாற்றமாக இருந்தாலும் அது ஜனநாயக வழியாக மட்டுமே வர வேண்டும் என்றார்.
” தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது , நன்மை செய்யக்கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்கு பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது. “
இதனால்தான் நேரு காங்கிரசுடன் அவருக்கு கருத்து முரண்பாடு இருந்தாலும் , ‘ இது காங்கிரஸ் அரசு அல்ல, நம்முடைய அரசு. அரசு நிர்வாகத்தை காங்கிரஸ் கையாளுகிறது. நாளை வேறொரு கட்சி பெரும்பான்மை பெற்று தேர்ந்தெடுக்கப்படலாம். இதுவே தேசத்தின் வழி” , என்று அவர் கூறினார்.
அதேபோல் ‘எதிர்க்கட்சி’ என்ற சொல்லாடலை பயன்படுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ” பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற எதிர்க்கட்சி என்ற வார்த்தையை நாம் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுபான்மை பலம் பெற்ற கட்சி (மைனாரிட்டி கட்சி – ஆளும் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்ற கட்சி) என்ற பதத்தை பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையினால் ஆளும் கட்சி செய்யும் அனைத்து செயல்களையும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை வராமல் தடுக்கப்படுவதுடன் பரஸ்பரம் ஒத்துழைப்பு என்ற புரிதல் உண்டாகும். பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி நம் தேசத்துக்கு விரோதமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் தடுக்கவும் தேசத்துக்கு நன்மை தரும் செயல்களை செய்யும் போது அதை முழு மனதுடன் ஆதரிக்கவும் கூடிய மனநிலை உருவாகும்” ,என்று சாவர்க்கர் கூறினார்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜகவை எதிரியாக பார்த்தன. அந்த எதிர்ப்புணர்வினால் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவது, சமுதாயத்தில் வன்முறை வெறியாட்டம், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல் தடுப்பது, வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டுக்கு விரோதமாக செயல்படுவது, சட்ட ஒழுங்கை மட்டுமின்றி அரசமைப்பையே உள்ளிருந்து சிதைப்பது ஆகிய செயல்களை செய்தன. பாஜக மக்களை திரட்டி வாக்கு பெட்டி மூலம் அந்த கட்சிகளை அதிகாரத்திலிருந்து வெற்றிகரமாக அகற்றி வருகிறது. இந்த ஜனநாயக வழியையே தேச விடுதலைக்குப் பிறகு சாவர்க்கர் வலியுறுத்தினார்.
பொன்னாரிஸம், தமிழிசையிஸம், முருகனிஸம் எல்லாவற்றையும் முன்னாள் தலைவர்களிஸம் என்று வகைப்படுத்தலாம். அவையெல்லாம் வாஜ்பாயிஸத்தின் நீட்சியே. அதாவது மிதவாதமிஸம்.
ஹெச்.ராஜாயிஸம் ஃப்யர் பிராண்ட் இஸம். அத்வானியிஸத்தின் வழியில் செல்லக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு பெரும் தலைகள் இருந்த காலகட்டத்தில் மக்களை பாஜக பக்கம் வரவைக்க மிகவும் பொருத்தமான இஸமாக அதுவே இருந்தது. ஆனால், வாஜ்பாயிஸம் அதற்கு இடம் தரவில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுவாக வெளிப்படையாக இருக்கும் இடத்தில்தான் ஃபயர் பிராண்ட் அரசியல் செல்லுபடியாகும். தமிழகத்தில் அது செல்லுபடியாகாது என்று அதை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவராமல் ஓரங்கட்டினார்கள்.
இத்தனைக்கும் எதிர் தரப்பு ஹெச்.ராஜாயிசத்தைத்தான் கட்டம் கட்டித் தாக்கியது. ஏனென்றால் அது பலம் பெற்றால் அவர்களுக்கு நெருக்கடி என்பது எதிரிகளுக்கு நன்கு புரிந்திருந்தது. நம்மவர்களுக்குத்தான் புரிந்திருக்கவில்லை.
ஒருவகையில் கருணாநிதி – ஜெயலலிதா என்ற இரு பெரும் சர்வ அதிகாரமும் மக்கள் செல்வாக்கும் பெற்ற சக்திகளை எதிர்க்க யாராலும் முடிந்திருக்காது. வன்முறை முத்திரை குத்தி எளிதில் ஓரங்கட்டிவிடுவார்கள் என்று நினைத்து மிதவாதம் பக்கம் நகர்ந்தது தவறாகிவிட்டது. இதுவுமே பின்னால் தள்ளி இருந்து பார்ப்பதால் சொல்லும் விஷயம் தான்.
அண்ணாமலையிஸம் ஓர் எல்லைவரை அதிரடியானதுதான். வாஜ்பாயிஸம் போல் மிதமானது அல்ல. அத்வானியிஸம் போல் அதிரடியானதும் அல்ல. மோதியிஸம் போல் இரண்டும் கலந்த கலவை என்று சொல்லலாம். ஊழலற்ற நிர்வாக நேர்த்தி, அனைவருக்குமான வளர்ச்சி, கலாசார மீட்டெடுப்பு ஆகியவற்றின் இதமான கலவை. பெரிதும் வளர்ச்சி மாடலை முன்னுதாரணமாகக் கொண்டது.
உண்மையில் தமிழகத்துக்கு இந்த மோதியிஸமே சரியானது. அண்ணாமலையிஸம் அதன் வழியில் செல்லும் அத்தனை சாத்தியக்கூறுகளையும் கொண்டதுதான்.
ஆனால், மக்கள் மத்தியில் வாஜ்பாயிஸம் போன்ற மிதவாதத்துக்கும் ஆதரவு இல்லை. அத்வானியிஸம் – ஹெச்ராஜாயிஸம் போன்ற ஃபயர் பிராண்டுக்கும் ஆதரவு இல்லை. இரண்டுக்கும் இடை நிலையிலான மோதியிஸ – அண்ணாமலையிசத்துக்கும் ஆதரவு இல்லை.
நயினாரிஸம் என்பதை கூட்டணியிஸம் அல்லது சமரச இஸம் என்று சொல்லலாம். இதற்கும் தமிழக மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை. ஆக, பாஜகவுக்கு தமிழகத்தில் எந்த இஸம்தான் உகந்தது?
நரேந்திர மோதியிஸம் தான் தேசம் முழுவதும் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. எனவே அதன் வழியிலான அண்ணாமலையிஸம் தமிழகத்துக்கு நன்மை தர வாய்ப்பு உண்டு.
ஆனால் மோதியிஸம் என்பது பிற மாநிலங்களில் பெற்றிருக்கும் வரவேற்பை தமிழகத்தில் பெறவில்லை. எனவே அதை அண்ணாமலையிஸம் என்ற பெயரில் முன்னெடுக்க பாஜக விரும்பியது. எதனாலோ இரண்டுக்கும் 2024-ல் பெரும் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.
உண்மையில் அன்று தோற்றது மோதியிஸமே. இந்திய அளவில் இன்னொரு முக்கியமான இஸம் வலிமையுடன் திகழ்கிறது. அது யோகியிஸம்.
இது ஹெச்.ராஜாயிஸம்-அத்வானியிஸம் ஆகியவற்றின் அல்ட்ரா மாடர்ன் வடிவம். இதை அந்தரத்திலிருந்து உருவாக்கிவிட முடியாது. உத்தரபிரதேசத்தில் (க்ரிப்டோ யாதவ்) இடைநிலை ஜாதி சர்வாதிகாரமும் இஸ்லாமிய அப்பீஸ்மெண்டும் உச்சத்தில் இருந்தது. எனவே அங்கு தலித்தாகவும் வெற்றி பெற முடிந்தது. இந்துவாகவும் வெற்றி பெற முடிந்தது.
ஒருவகையில் இங்குமே அந்த அராஜகப் போக்குதான் திராவிட இயக்க வடிவில் இருந்தது. இங்கு தலித்களின் நேச சக்தியாகவும் மென் இந்துத்துவ சக்தியாகவும் அதிமுக இருந்ததால் தலித் சக்தியும் இந்து சக்தியும் தனியாக சொந்த அடையாளத்துடன் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
பாஜகவால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை என்பவர்கள் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயம் இங்கு தலித் சக்தியும் கால் ஊன்ற முடியவில்லை.
தமிழகம் கருத்தியல் தளத்தில் சைமனிஸம் பக்கம் நகர்ந்துவிட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் துரோகம், எழுவர் விடுதலை, பாலசந்திரன் படுகொலை, சல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, சி.ஏ.ஏ. எதிர்ப்பு என தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்டவை எல்லாமே சைமனிஸத்தின் அடிப்படையிலானவையே. அந்த கருத்துருவாக்கத்தை திமுக 2021-ல் கைப்பற்றியது. 2026-ல் ஜோசஃபிடம் தந்திருக்கிறது.
சைமனிஸம், ஸ்டாலினிசம், ஜோசஃபிஸம் மூன்றும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி போன்ற ட்ரினிட்டி சக்திகளே. எனவே தமிழகத்தில் உருவாக வேண்டிய இஸம் எது என்பதை இந்த எதிரியின் ஒருங்கிணைப்பே தீர்மானிக்கவேண்டும். ட்ரினிட்டிக்கு மாற்று திரிசூலமே.
தமிழகத்தில் பாஜகவின் வரலாறை எடுத்துக் கொண்டு பார்த்தால் அண்ணாமலையிசமே ஓரளவுக்கு ஒப்பீட்டளவில் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. ஹெச்.ராஜாயிஸம்-அத்வானியிஸத்துக்கு தலைமைப் பொறுப்பு தராததால் அதைப் பற்றி அதிகம் எதுவும் சொல்லமுடியவில்லை. மற்றபடி அண்ணாமலையிஸம் தலைமைக்கும் வந்திருப்பதால் மற்ற இஸங்களைவிட முன்னணியில் இருக்கிறது.
அண்ணாமலையிஸத்தின் நிறை குறைகளைப் பார்ப்போம். திராவிட பிளஸ்தான் இதன் கொள்கை. எனவே இதை ஏற்க முடியாது. மோதியிஸம் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லா பாரதம் என்கிறது. அதன் அடிப்படையில் நமக்கு திராவிடம் இல்லா தமிழகம் என்பதுதான் சரியானது. ஆனால், வருத்தம் என்னவென்றால் மோதியுமே ‘திராவிட பிளஸ்’ என்பதை ஏற்கிறார். திராவிட மைனஸ் அல்லது சனாதனம் பிளஸ் என்பதுதான் இந்துக்கள் மற்றும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது.
* அண்ணாமலையிஸத்தின் அடுத்த அம்சம்: மத்திய தலைமைக்குக் கட்டுப்படாத தன்மை.
ஓர் எல்லை வரை சரி.
என் மண்; என் மக்கள்
அபாயகரமான முழக்கம். நம் தேசம்… நம் தர்மம் என்றே இருந்திருக்கவேண்டும்.
முன்னாள் தலைவர்களுடன் விரிசல். திராவிட ஊடகங்களின் திட்டமிட்ட சதி.
மத்திய தலைமை சொல்லியே முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் எல்லாரும் செயல்படுகிறார்கள். திமுக அதைத் தந்திரமாகத் திரிக்கிறது.
உதாரணமாக, தமிழிசை அவர்களை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடச் சொன்னது மத்திய தலைமையே. திரு எல். முருகன் மிதமாகச் செயல்படவும் மத்திய தலைமையே காரணம். நிர்மலா சீதாராமன், குருமூர்த்தி, பேராசிரியர், வானதி ஸ்ரீனிவாசன் என அனைவரின் செயல்பாடுகளும் மத்திய தலைமையின் வழிகாட்டுதலின் படியே.
இவை அனைத்தையும் உட்கட்சி மோதலாகத் திரித்தது ஊடகங்களே.
நெருப்பில்லாமல் புகையுமா..? நிச்சயம் பாஜக கட்சியினருக்கிடையே ஆளுமை உரசல் – ஈகோ க்ளாஷ் இருந்திருக்கும். எல்லா இடங்களிலும் இருப்பதுதான். ஆனால், பொது இலக்குக்காக தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விலக்கி விட்டு ஒற்றுமையாகச் செயல்படும் பக்குவமும் புரிதலும் அவர்களுக்கு உண்டு. எனவே, தலைவர்களைப் பார்த்து அதற்கேற்ப நடப்பதே தொண்டர்களுக்கு அழகு. ஈழப் படுகொலைக்குத் துணை நின்ற பின்னரும் திமுகவும் காங்கிரஸும் தோழமையைக் கைவிடவில்லை. பிற கூட்டணிக் கட்சிகளும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எதையும் மீறவில்லை. தலைவர்கள் எவ்வழி… தொண்டர்கள் அவ்வழி.
டி.எம்.கே. ஃபைல்ஸ் : தமிழர்கள் பொருட்படுத்தாத ஊழலை பிரதான வியூகமாக அமைத்தது பலன் தரவில்லை… தராது. எனவே பிழையான முன்னெடுப்பு. இடதுசாரி, காங்கிரஸ், திமுக லாபி நிறைந்திருக்கும் அதிகாரவர்க்கத்தை வைத்துக்கொண்டு ஊழலை நிரூபிப்பதும் தண்டனை வாங்கித் தருவதும் மிகவும் கடினம்.
அதிமுகவுடனான மோதல். : திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிகிறது; பாஜக தனிமைப்படுத்தப்பட்டுவிடும்; அதிமுகவில் இருக்கும் இந்துக்கள் பாஜகவின் ஆதரவாளர்களாக வேண்டியவர்கள் என்ற கோணத்தில் பார்த்தால் மோதல் தவறு.
பாஜகவின் தனித்தன்மையும் நேர்மையும் கேள்விக்குக்குள்ளாக்கப்படுகிறது என்ற கோணத்தில் பார்த்தால் மோதல் சரி.
* அண்ணாமலையிஸத்தின் ஊடகக் கையாளுகை மற்றும் விளம்பர, யுக்திகள்
மிகவும் சிறப்பு. மிகவும் அவசியம்.
* திரையுலகைப் பற்றி விமர்சனமாகப் பேசக்கூடாது; புகழமட்டுமே செய்யலாம் என்ற தீர்மானம்.
மிக மிகத் தவறு.
* ஹனி டிராப்…
நோ கமெண்ட்ஸ்.
* பண மோசடி.
வாய்ப்பே இல்லை.
*
திறமையான நிர்வாகம் சாத்தியமா?
100% சாத்தியமே.
* ஆட்சித் திறமை
கணிசமாக உண்டு. *
கட்சி அவரை ஓரங்கட்டிவிட்டதா?
இல்லை. 2026 தேர்தல் தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.
மீண்டும் தலைவராக்கப்படுவாரா..?
விஜய் சரியான நேரம் பார்த்துக் காத்திருந்து களம் இறங்கியதுபோல், அண்ணாமலையும் களமும் காலமும் கனியும்போது முன்னிலைக்கு வருவார். கட்சித் தலைவர் பதவியைவிட முதல்வர் பதவியே அவருடைய இலக்கு. நரேந்திர மோதி கட்சித் தலைவராக ஒருநாளும் இருந்ததில்லை. ஒரு ஜம்பிங் பேட் ஆக அண்ணாமலைக்கு அது முதலில் தேவையாக இருந்தது. ஆனால், இனி,மேல் அண்ணாமலையும் கட்சிப் பதவியை விரும்ப வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
அண்ணாமலை இல்லையென்றால் இனிமேல் கட்சியே இல்லை. சர்ச்சின் ஆதிக்கம் ஒடுக்கப்படாதவரை யார் வந்தாலும் பாஜகவுக்கு எதிர்காலமே கிடையாது. சர்ச்சின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்படாமல் மோதியே தமிழக முதலமைச்சரானாலும் சர்ச்சின் சொல்படியே நடந்தாகவேண்டியிருக்கும்.
விஷயம் ரொம்பவும் சிம்பிள்: அரபு நாடுகள் ஒன்றில் அமெரிக்க ராணுவம் கால் ஊன்றியிருந்தால் அந்த நாட்டில் நடப்பது அமெரிக்க ஆட்சியாகத்தான் இருக்கும். ரட்சணிய சேனை அகற்றப்படாத மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அது பாதிரியின் ஆட்சியாகவே இருக்கும். இயேசுவுக்குக் கூட அங்கு இடம் கிடையாது.
* மேலே சொல்லப்பட்டிருக்கும் தமிழக பாஜகவின் வரலாறை வைத்துப் பார்த்தால் ஹெச்.ராஜாயிஸமே மிகவும் அவசியம். அதாவது, ஜோசஃபிஸத்தை எதிர்க்க ஜோசஃபை முதன் முதலில் அம்பலப்படுத்திய ஹெச்.ராஜாயிஸமே சரியானது.
(ஜோசஃப் நேர்வழியில் செல்வாக்கு பெறுவதில் தவறில்லை. ஜோசஃப் என்பதை மறைத்துக்கொண்டு செல்வாக்கு பெறுவது தவறு. ஹெச்.ராஜாயிஸம் இதைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஜோசஃபின் முகமூடி கழண்டுவிட்டது. பிற க்ரிப்டோக்களின் முகமூடிகள் கழற்றப்படவேண்டும்.).
அண்ணாமலையிஸத்துக்கு தமிழக அளவில் மக்கள் செல்வாக்கு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. ஊடகங்களிலும் நல்ல ரீச் இருக்கிறது (நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்). ஆக ஹெச்.ராஜாயிஸத்தின் க்ரிப்டோ எதிர்ப்பு கொள்கை + அண்ணாமலையிஸத்தின் களப்பணி… இதுவே பாஜகவுக்கு தமிழகத்தில் நல்லதொரு எழுச்சியைத் தரும்.
பிராமணர் – பிராமணரல்லாதார் என்று பாஜகவுக்குள் எதிரிகள் தூண்டிவிடும் மோதலுக்கும் மிகச் சரியான பதிலடியாக இருக்கும்.
ராஜ அண்ணாமலையிஸம்… தீவிர க்ரிப்டோ எதிர்ப்பு + அனைவருக்குமான வளர்ச்சி
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கோவிலை சுரண்டும் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை :
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் திருக்கோவிலில் லட்டு பிரசாதம் முறைகேட்டில் அதிகாரிகள் துணையோடு ஊழியர்கள் பல கோடி ரூபாய் சுருட்டிய அதிர்ச்சி செய்தி வெளி வந்துள்ளது.
நேற்று (21.5.26) திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண ரசீது முறைகேட்டில் 25 லட்சம் ரூபாய் திருடிய பெண் அதிகாரி பிடிபட்டுள்ளார்.
தப்பு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு இன்றும் முழுமையாக உள்ளது. ஆனால் கோவிலில் இறைவன் முன்பே மனசாட்சி இல்லாமல் பக்தர்களை ஏமாற்றி திருடும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல் வெட்கக்கெடானது.
திருத்தணியில் ஒரு பெண் அதிகாரி மோசடியில் ஈடுபட்டபோது கட்டப்பஞ்சாயத்து செய்து அவரை காப்பாற்றியது கடந்த திமுக அரசு.
அதுபோல திருவண்ணாமலை, ஶ்ரீ ரங்கம் கோவில்களில் விசேஷ நாட்களில் போலி சிறப்பு தரிசன கட்டணக் கொள்ளை பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளிவந்தும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களின் நம்பிக்கையை, அவசரத்தை பயன்படுத்தி முறைகேடாக பல கோடி ரூபாய் சுட்டுகிறார்கள் அதிகாரிகள். ஏதோ ஒரிரு அதிகாரிகள் மட்டும் குற்றவாளி என சித்தரிப்பது, பிரச்சினையை பெரிதாகாமல் மூடி மறைக்கவே.
கோவில் உண்டியல் காணிக்கை முதல் பிரசாத வினியோகம் என ஊழல் பலவிதங்களில் நடக்கிறது. இதற்கு பின்புலத்தில் பல நெட்வொர்க் ஆட்கள் இருக்கிறார்கள்.
முழுமையாக இந்த முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.
அன்னதானம் பெரும் புண்ணியம். இந்த நற்பணி பக்தர்களின் காணிக்கையால் நடந்து வருகிறது. ஆனால் அதிலும் தரமில்லை என ஏராளமான புகார்கள் வருகின்றன. இதிலும் எண்ணற்ற முறைகேடுகளும் நடக்கின்றன.
எனவே புதிதாக பொறுப்பேற்றிருகும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி மற்றும் அமைச்சர், உடனடியாக கடந்த ஐந்தாண்டுகளில் இந்த துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமான முழுமையான வெள்ளை அறிக்கையை விரைவாக தயாரித்து பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.