Home Blog Page 3

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

kamalalayam tn bjp - 2026
  • பி.ஆர். மகாதேவன்

அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே ஏழு லட்சம்
அதிமுக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 41 லட்சம்
அதிமுக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 76 லட்சம்
அதிமுக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 53 லட்சம்
அதிமுக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே நான்கு லட்சம்

அதாவது 2006-ல் ஜெயலலிதா தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகளைவிட 2021-ல் எடப்பாடி தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகள் 46 லட்சம் அதிகம்.

2026-ல் தோற்றபோது அதிமுக வாங்கியிருக்கும் வாக்குகள் 2006-ல் வாங்கிய வாக்குகளைவிட வெறும் முன்று லட்சம் மட்டுமே குறைவு.

நிச்சயம் ஜெயலலிதாபோல் எடப்பாடியார் பெரிய ஆளுமை இல்லைதான். ஆனால் வாக்களித்திருக்கும் அதிமுகவினரும் பொது மக்களும் எடப்பாடியை இன்றுவரையிலும் கைவிடவில்லை.

மக்களாட்சியில் ஒரு தலைவருடைய மதிப்பு என்பது அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பாஜக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஆறு லட்சம்
பாஜக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் எட்டு லட்சம்
பாஜக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் பதிநான்கு லட்சம்

பாஜக 2009-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 7 லட்சம்
பாஜக 2014-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 22 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 15 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 48 லட்சம்

போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையிலான பாஜகவின் வாக்கு சதவிகிதம்.
2014 – 9 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 24.1%
2019 – 5 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 28.5%
2024 – 23 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 20%

மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை… அதில் ஒரு கட்சி எத்தனை வாக்குகளைப் பெறுகிறது என்ற அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிடுவது ஒரு கட்சியின் உண்மையான வளர்ச்சியைக் காட்டாது.

எத்தனை இடங்களில் போட்டியிட்டிருக்கிறது. அங்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில் ஒரு கட்சி எத்தனை சதவிகிதம் பெற்றிருக்கிறது என்றுதான் கணக்கிடவேண்டும்.

ஒரு கட்சி போட்டியிடாத தொகுதிகளில் விழுந்த வாக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்ப்பதென்பது சரியல்ல. ஏனென்றால் போட்டியிடாத பகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஒரு வாக்கும் கிடைத்திருக்காதே.

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டால் ஒரு கட்சியின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். அதைவைத்து கட்சி வளர்ந்துவிட்டதாகச் சொல்லவே முடியாது.

தமிழகத்தில் பாஜக கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் நிறைய இடங்களில் போட்டியிட்டிருக்கின்றன. ஆனால் ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவரைத் தாண்டி மக்கள் பாஜக பக்கம் வரவே இல்லை. இது அத்வானி, வாஜ்பாய் ஆகியோரின் தோல்வி அல்ல. தமிழக மக்கள் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் அந்நாட்களில் இந்து நேச சக்தியாகப் பார்த்தனர். அவர்களை மீறி கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதெல்லாம் மிகவும் கடினமான விஷயம்.

அதோடு அப்போது நரேந்திர மோதி தலைமையிலான மத்திய ஆட்சியும் அமைந்திருக்கவில்லை. எனவே 2014க்கு முந்தைய பாஜகவின் செயல்பாடுகளை இந்தப் பின்னணியில்தான் மதிப்பிடவேண்டும்.

2014க்குப் பிறகும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் பெரிய ஆதரவு அலை ஒன்றும் வீசிவிடவில்லை. படிப்படியான வளர்ச்சி என்று கூட சொல்ல முடியாது. ஒருவித தேக்க நிலையே நிலவுகிறது. வாஜ்பாய் காலத்தைவிட மோதியின் காலத்தில் ஒப்பீட்டளவில் இந்து சக்திகள் ஓரளவுக்கு பலம் பெற்றிருக்கின்றன. இது ஒருபோதும் போதாது.

இந்தக் காலகட்டத்திலும் மக்கள் அதிமுகவிடமிருந்து பாஜக பக்கம் நகர்ந்திருக்கவே இல்லை.

2026 தேர்தலிலும் அதிமுக ஒரு கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அவை முழுவதும் பாஜகவின் வாக்குகள்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் பாஜகவுக்கு வளர்ச்சி கிடைக்கவில்லை. தனியாக நின்றாலும் வளர்ச்சி கிடைக்கவில்லை.

எனவே அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்று வியூகம் வகுக்காமல் இந்துக்களை அணி திரட்டுவது எப்படி என்று வியூகம் வகுக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், அதிமுக பற்றிய சிந்தனையே பாஜகவுக்குத் தேவையே இல்லை. ஆனால், அதிமுகவுக்கு வாக்களிக்கும் இந்துக்களைப் பற்றி பாஜக சிந்தித்தே தீரவேண்டும். ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவர் இருந்தபோது பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பதில் ஆச்சரியப்படவோ வருத்தப்படவோ எதுவும் இல்லை. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின்னரும் அந்த இந்துக்களின் நம்பிக்கையை பாஜகவால் ஏன் இன்னும் பெற முடியவில்லை?

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஊடகங்களின் துறையுடன் உருவாக்கி வைத்திருக்கும் மாயத் தோற்றம் உடைக்கப்படவேண்டும். உண்மையில் அது 2009 வாக்கிலேயே ஆரம்பித்துவிட்டது. நாம் தமிழர் என்றும் தமிழ் தேசியம் என்று 2009 வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்து-இந்திய வெறுப்பு பிரசாரத்தின் இரண்டாம் சுனாமிதான் 2016-2021 காலகட்டத்திலான திமுகவின் பேயாட்டம். உண்மையில் சைமனிஸமே ஸ்டாலினிஸத்தின் முன்னோடி மற்றும் வழிகாட்டி.

பஞ்ச பரிவர்த்தன் என்ற பெயரில் பிளாஸ்டிக் பை உபயோகிக்கூடாது, தினமும் பல் தேய்க்க வேண்டும், சோப் போட்டுக் குளிக்கவேண்டும், அப்பா அம்மாவிடம் அன்பாக நடந்துகொள்ளவேண்டும், டிராஃபிக் கான்ஸ்டபிளை மதிக்கவேண்டும் என்றெல்லாம் நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். பேரியக்கம் நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் பின்பற்ற வேண்டிய பஞ்ச சீலங்கள் :

  1. அண்ணாமலையை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக்கவேண்டும். தமிழக ஊடகங்களை நடுநிலையாக நடந்துகொள்ளச் செய்யவேண்டும். அதாவது சர்ச்-திமுக-இடதுசாரிப் பிடியில் இருக்கும் தமிழக ஊடக மாஃபியாவை அடக்கவேண்டும். அவர் மத்திய அரசு அல்லது மத்திய அரசியல் பதவிக்குச் செல்ல விரும்பாவிட்டால் தமிழகக் கிளைக்கென்று தனியாக ஒரு பதவியை ஆரம்பித்து அதன் தலைவராக அண்ணாமலையை நியமிக்கலாம். சிங்கத்துக்கு வேட்டைக் களம் அமைத்துத் தரவேண்டும். சர்க்கஸ் கூண்டு அல்ல.
  2. மத்திய வருமான வரி – லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையின் தமிழக கிளை ஒன்றை புதிதாக ஆரம்பித்து சுப்ரமணியம் ஸ்வாமியை அதன் தலைவராக நியமிக்கவேண்டும். குற்றம் செய்து தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் ஆ.ராசா, ஸ்டாலின், கனிமொழி, மாறன், சிதம்பரம், செந்தில் பாலாஜி, பொன்முடி, கி.வீரமணி என வரிசையாக கைது செய்யப்படவேண்டும்.
  3. இந்து அற நிலையத்துறையில் மட்டுமல்லாமல் தலித் பெயரில் இட ஒதுக்கீடு பெற்று பதவியில் இருக்கும் அத்தனை க்ரிப்டோக்களையும் பதவி நீக்கம் மற்றும் உரிய சட்டபூர்வமான அபராதம்+சிறை தண்டனை வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தையும் இட ஒதுக்கீட்டையும் மதிக்கும் அரசு முதலில் செய்ய வேண்டியது, அரசியல் சாசன மீறலையும் இட ஒதுக்கீட்டு ஏய்ப்பையும் தடுப்பதுதான். அம்பேத்கரை மதிப்பதென்றால் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை மதிக்கவும். இதற்கென்றே ஒரு துறை உருவாக்கி அதற்கு ஹெச்.ராஜாவைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  4. வகஃப் சொத்து முறைகேடுகளை புதிய சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து கடந்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரித்திருக்கும் வக்ஃப் சொத்துகளை மீட்டு உரிய நபர்களுக்குத் தரவேண்டும். இந்தத் துறைக்கு தமிழத்தின் சார்பில் வேலூர் இப்ராஹிமைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  5. திரைப்படத்துறையில் புழங்கும் கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, கஞ்சா பண முதலீடு, விநியோக ஏக ஆதிக்கம், பாலியல் வன்கொடுமைகள், இந்து துவேஷச் சித்திரிப்புகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் தடுக்கவும் கடும் தண்டனைகள் உடனே வழங்கவும் ஒரு வாரியம் புதிதாக அமைக்கவேண்டும். தமிழிசை-வானதி-குஷ்பு ஆகியோர் தலைமையில் முழு அதிகாரம் கொண்ட ஒரு சக்தி கேந்திரமாக அதைச் செயல்பட அனுமதிக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் தமிழகம் தனி நாடு என்றுதானே இந்திய விரோத இந்து விரோத சக்திகள் செயல்படுகின்றன. எனவே தமிழகத்துக்கென்றே தனியான துறைகளை அவர்கள் கேட்பதுபோல் அமைத்து தமிழகத்தை வளம் பெறச் செய்யவேண்டும்.

எந்தப் பதவிக்கு யார் என்பதெல்லாம் ஒரு புரிதலுக்காகச் சொல்லப்பட்டிருப்பவையே. ஒவ்வொரு நபரின் அணுகுமுறை, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் அவை சொல்லப்பட்டிருக்கின்றன.

அடிப்படை விஷயம் என்னவென்றால் attitude… அதுவே முக்கியம்.
ஆள் அல்ல; ஆளுமை அதுவே பிரதானம்.
சொல் அல்ல; செயலே பிரதானம்.
ஆட்சி அல்ல; அதிகாரப் பிரயோகமே பிரதானம்.

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழக முதல்வர் அறிவித்துள்ள வெள்ளை அறிக்கையில், இந்து கோயில்கள் பற்றிய வருமானம், சீரமைப்பு மற்றும் அதன் எதிர்காலத் திட்டம் குறித்தும் முழுமையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

தமிழகத்தில் பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக கூறியுள்ளார். இதனை வரவேற்கிறோம். அதே சமயம் அனைத்து துறைகளிலும் கடந்த திமுக ஆட்சி செய்தது என்ன? அதில் நடந்த முறைகேடுகள் என்ன? என்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது தமிழக மக்கள் கோரிக்கையாக சமூக ஊடகங்களில் வெளிவருகிறது.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை என பல துறைகளில் ஊழல் கறைபடிந்த நிர்வாகம் குறித்த கேள்விகள் நீள்கிறது. உதாரணமாக வெளிநாட்டு முதலீடு ஈர்த்த விவகாரம் குறித்த விமர்சனங்கள் திமுக ஆட்சியிலேயே எழுந்தன. இதில் புதிய அரசுக்கு நமது கோரிக்கை, இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடு குறித்தும் தீவிரமான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் மூவாயிரம் கோவில்களில் அவசரகதியில் குடமுழுக்கு நடைபெற்றது. பல லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டது. அதில் பல முறைகேடுகள் குறித்து புகாரும் வந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நடந்த முறைகேடுகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டது தெரிய வந்தது.

கோவில் நிலங்கள் வீடுகள் முறைகேடாக தனியாருக்கு, அரசு துறைகளுக்கு தாரை வார்க்க அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்ட வழக்குகள் பதிவாகின.

பக்தர்கள் காணிக்கை அளித்த நகைகள் உருக்கப்பட்டதில், கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களைத் தந்தும் கடந்த திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை.

மேலும் திமுக, அதிமுக ஆட்சியில் தெய்வத் திருமேனிகள், கோவிலின் புனிதமான பொருட்கள், பழைமையான விக்ரகங்கள் முதலானவை களவாடப்பட்டு, கடத்தப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? இந்த குற்றங்களுக்குத் துணைபோன இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தனர். ஆனால் அந்த வழக்குகள் தொடர்ந்து நடத்தாமல், குற்றச்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீண்டும் பணி அமர்த்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட இறைவன் திருமேனிகள் மீட்க போதுமான நடவடிக்கை இல்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்தது இன்றைய ஊடகங்களில் வெளிவந்துள்ளது. எனவே ஊழலில் முறைகேடுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத் துறை கடந்த காலங்களில் செயல்பட்டதை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை புதிய அரசு, தமிழக மக்கள் முன் வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இதன் மூலம் கடந்த ஆட்சியில் நடைபெற்றவை மக்களின் பார்வைக்கு வரும். மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் அதிகாரிகள் செய்யும் தவறை தட்டிக்கேட்கத் துணிவு வரும்.

இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணை போகாமல், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையாக, நேர்மையாக இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

எனவே முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

tasmac shops - 2026

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள் மூடப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான
சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

rss nagpur 2nd year camp - 2026

“We are all one”, this realization of oneness is attained in the Varg – Atul LimayeJiKaryakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Rashtriya Swayamsevak Sangh’s (RSS) Karyakarta Vikas Varg-Dwitiya has been inaugurated on Monday at the Maharshi Vyas Sabhagruha, located in the Dr. Hedgewar Smruti Bhavan premises in Reshimbag, Nagpur.

Sah-Sarkaryavah and Varg Palak Adhikari Atul Ji Limaye; Sah-Sarkaryavah Ramdatt Ji; and the Jaipur Prant Sanghchalak as well as Varg Sarvadhikari Mahendra Singh Maggo Ji were present during inauguration. They formally inaugurated the varg by offering floral tributes to the statue of Bharat Mata. This year 880 swayamsevak from across the country have participated in the varg.  This varg provides training focused on social awareness and social transformation.

Addressing the swayamsevak’s on this occasion, Sah-Sarkaryavah Atul Limaye Ji stated that it is our great fortune to have been born in Bharat, to have become swayamsevak through our association with the Sangh, and to be participating in the Karyakarta Vikas Varg-Dwitiya during the Sangh’s centenary year. Throughout the Sangh’s century-long journey, it has faced ridicule, neglect, and opposition. It was even banned on three separate occasions. This journey was made possible solely through the dedication, struggle, and timely sacrifices of the volunteers. It was the extraordinary conduct of seemingly ordinary volunteers that built the Sangh into what it is today. He further noted that the Sangh’s process of Vyakti Nirman is decentralized.

A crucial component of this Vyakti Nirman process is the Sangh’s daily ‘Shakha’. Similarly, the Sangh Shiksha Varg’s also serves the purpose of character building. The Sangh Shiksha Varg was first initiated in 1927. Over time, the methodology and format of these vargs have evolved. However, the conviction that Bharat is a Hindu Rashtra; the objective of organizing the entire society to achieve its ultimate glory (Param Vaibhav); and the process of character building as the means to achieve social unity, these three fundamental principles have remained unchanged. Given that this varg is being hosted in Nagpur – the birthplace of the RSS – it holds exceptional significance. Along with physical readiness, mental preparedness is equally essential; this varg is designed to facilitate precisely that process. We have been granted the privilege of witnessing this phase of the Amrit Kaal. We must make the fullest possible use of this period. The varg offers a unique and distinct experience, combining physical training with intellectual development. It brings together people from various prant to live and learn together. “We are all one” – this realization of oneness is attained in the Varg.

The realization of this oneness that “we are all one” will be attained during this varg. Gautam Buddha once said, “I show the path to liberation (Moksha), but only those who follow that very path and persevere in their journey actually reach the destination.” This varg is designed to prepare swayamsevak’s, equipping them to steadfastly walk upon their chosen path.

This varg will continue for the next 25 days and is scheduled to conclude on June 4th.

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

joseph vijay oath taking ceremony in chennai - 2026

முதல்வர் விஜய் அவர்களுக்கு….
ஒரு கணக்கியல்:

நீங்கள் தந்த வாக்குறுதிகளின் அடிப்படையில். ஒவ்வொரு ஆண்டின் நிதிச்சுமையின் அளவு (தோராயமாக):

1) வருடத்திற்கு 6 இலவச எரிவாயு உருளைகள் – 12,000 கோடி.

2) மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் – 14,000 கோடி.

3) பெண்களுக்கு மாதம் 2500, வேலை இல்லாத பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா இளைஞர்களுக்கு உதவி – 27,000 கோடி.

4) இலவச பேருந்து, 8 கிராம தங்கம், விரிவான மருத்துவ காப்பீடு, சுய உதவிக் குழுக்களின் வட்டி மானியம் மற்றும் தள்ளுபடி ,பள்ளி ஊக்கத்தொகை (school incentive), கூடுதல் அரசாங்க வேலைகள் உருவாக்கம், இதர – 65,000 கோடி.

ஆக கூடுதல் நிதிச்சுமை – 1,20,000 கோடி..

தற்போது இருக்கும் மொத்த நிதிச்சுமை (நிலுவையில் இருக்கும் 9,40,000 கோடி கடனின் வருடாந்திர 68,000 கோடி வட்டி , அரசாங்க ஊழியர்கள் சம்பளம், மற்றும் எல்லா செலவுகளும் உட்பட)- 4,50,000 கோடி.

மொத்த வருடாந்திர செலவு – 1,20,000 + 4,50,000 = 5,75,000 கோடி.
ஓராண்டு தமிழ்நாட்டின் நிதி வரவு- 3,75,000 கோடி.
ஓராண்டின் நிதிபற்றாக்குறை – 2 லட்சம் கோடி!
ஐந்து ஆண்டுகளுக்கு 10 லட்சம் கோடி!

2026 இல் பதவி ஏற்கும்போது இருந்த நிதிச்சுமையையும் கூட்டினால் 2031 மே மாத முடிவில் நாம் எதிர்பார்க்கும் நிலுவைக் கடன் – 19 லட்சம் கோடி!

தமிழ்நாடு தப்பித்து வரக்காரணம் தொழில்முறை வர்த்தக வருமானம் மற்றும் துரிதமான வரி வசூல்.. ஆனால் இது எதையும் எவ்வளவு அதிகப்படுத்தினாலும் 20 லட்சம் கோடி நிதிச்சுமையை எல்லாம் யாராலும் சமாளிக்க முடியாது.
விளைவு?

1) மது வருமானத்தை அதிகரிக்க வேண்டி வரும் – நான் இன்று மருத்துவம் செய்யும் 10 நோயாளிகளில் குறைந்தது 7 ஆண்கள் அன்றாடம் குடிப்பவர்கள்..

2) போக்குவரத்துக் கழகம், TANGEDCO – இரண்டுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு icu வில் போய் படுத்துக்கொள்ளும்..பிறகு TANGEDCO விற்கு oxygen தருவதற்கே மின்சாரம் கிடைக்காது..

உங்களால் பழைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் நிதிச்சுமைக்கு காரணமாக பழிக்க முடியாது..ஏனென்றால் அவர்கள் தயவில்தான் இன்று உங்களுக்கு சிம்மாசனமே..

ஆகையினால் திரு விஜய் அவர்களே…இதைப் புரிந்து கொள்ளுங்கள்..

1) நீங்கள் ஏதோ ஒரு வேகத்தில் இலவசங்களை அறிவித்து விட்டீர்கள்..ஒன்பது கோள்களையும் விற்றால்கூட இவை எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியாது.

2) உங்களுக்கு எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பவர்களின் “எதிர்க்கட்சி” திறமையை நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை..உங்கள் ஒவ்வொரு அடியையும் இனி பிரித்து மேய்வார்கள்..அவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்..

3) மாறாக “வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது” என்ற ஒரு புத்தகம் கடந்த 5 ஆண்டுகளில் வெளி வந்துள்ளது..அதை வாங்கி படியுங்கள்.

4) இல்லையென்றால் மக்களிடம் இந்த நிறைவேற்ற முடியாத வாக்குகளுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு ஒரு சுமார் ஆட்சியையாவது தாருங்கள்.

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

  • டாக்டர் ராஜேஷ் ஜெயராமன்

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

joseph vijay oath taking ceremony in chennai - 2026

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் மூன்று பாடல்கள் இசைக்கப்பட்டது மிக அருமையாக இருந்தது. வந்தே மாதரம் (தேசியப் பாடல்), ஜனகணமன (தேசிய கீதம்), நீராரும் கடலுடுத்த (தமிழ்த்தாய் வாழ்த்து) என்ற அந்த வரிசையும் மிகச் சரியானது. அனாவசியமாக இதைக் குறித்து வேண்டாத பிரசினையைக் கிளப்பி, பதவியேற்பு விழாவில் ஏதோ பெரிய “அபசாரம்” நடந்து விட்டது என்ற ரீதியில் கூச்சலிடும் இரண்டு-எம்.எல்.ஏ சில்லறைக் கட்சிகளின் அற்பத் தனமான எதிர்ப்புகளை எல்லாம் உண்மையில் முதல்வர் விஜய் அரசு பொருட்படுத்தத் தேவையே இல்லை.

ஆனாலும், இதை ஏதோ ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, “கவர்னர் தரப்பில் மத்திய அரசின் நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டு இது நடந்தது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப் படுவதில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. இனி இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார். இதற்கு எந்த அவசியமும் இல்லை.

முதலில் தேசம், அதற்குப் பின்பு தான் மொழி, மாநிலம் எல்லாம். நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியில் கூட இந்தியா தான் முதலில் வந்தது. அதன்பிறகு தான் “தமிழ்நாட்டின்” என்று வந்தது. அதே வரிசை தான் பாடலிலும் பின்பற்றப் பட்டது.

“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த பெருமிதம் உள்ளது” என்கிறார் அமைச்சர். வந்தே மாதரம் பாடலுக்கு அதற்கும் முந்தைய, அதைவிடவும் பெரிய தேசியப் பெருமிதமும் பாரம்பரியமும் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். சமீபத்தில் தான் வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் அமைப்பே எப்படி இருக்கிறது? அது “நிலமடந்தை” என்று முதலில் பூமித்தாயைக் கூறுகிறது. “வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என்று இரண்டாவதாக பாரத நாட்டை அவளது திருமுகம் என்கிறது. மூன்றாவதாகத் தான் “தக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்று தமிழ்நாட்டை அவளது திருநெற்றியாகவும், நான்காவதாக “தரித்த நறும் திலகமுமே” என்று தமிழ்மொழியை அவளது நெற்றித் திலகமாகவும் கூறுகிறது. எனவே, விழாவில் பாடல்கள் பாடப்பட்ட வரிசையும் இதை ஒட்டியே தான் அமைந்திருந்தது. இதற்கு மாறாக அல்ல.

உண்மையில் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இரண்டு பாடல்களுமே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கின்றன. “மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா” என்ற வேதரிஷியின் பிரகடனத்தின் எதிரொலிகள் தான் இந்த இரண்டு பாடல்களும் என்பதை உணரவேண்டும்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்ற பாரதியாரின் மகத்தான வரிகளில், வரிசை தமிழிலிருந்து தொடங்கி பாரதத்திற்குச் செல்கிறது. ஆனாலும், உணர்வு ஒன்றுதான்.

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும் என்பதே அதற்கு வாக்களித்த பெருவாரியான தமிழ்நாட்டு மக்களின் அவா. திராவிட இயக்கத்தின் பிரிவினைவாதப் பிசாசுகள் ஒழிந்ததாகவே இருக்கட்டும். அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டாம்.

  • ஜடாயு, பெங்களூரு

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

pm modi in madurai meet - 2026

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 9,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஹைதராபாத் – பனாஜி பொருளாதார வழித்தடத்தில் அமைந்துள்ள குடேபெல்லூர் முதல் மஹபூப்நகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டம், சங்காரெட்டி மாவட்டத்தில் அமைய உள்ள ஜஹீராபாத் தொழிற்பேட்டை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில், காசிபேட் – விஜயவாடா ரயில் தட திட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும், ஹைதராபாத்தில் உள்ள க்ரீன்பீல்டு பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் முனையத்தையும், காசிபேட் ரயில் மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வாரங்கலில் உள்ள பிரதமர் மித்ரா பூங்காவும் தொடக்கி வைக்கப்பட்டது. தெலுங்கானா கவர்னர் சிவ பிரதாப் சுக்லா, காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செகந்திராபாத் பொதுக் கூட்டத்தில் பாரத பிரதமரின் வேண்டுகோள்களின் முழு உரை :

நண்பர்களே, இன்று இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் அதே நேரத்தில், இந்தியா பல பெரும் சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது.

கோவிட் காலத்திலேயே, உலகம் ஒரு பெரிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. கோவிட்டிற்குப் பிறகு, உக்ரைனில் போர் தொடங்கியது, இது உலகளாவிய சிரமங்களை மேலும் அதிகரித்தது. உணவு, எரிபொருள் மற்றும் உரங்கள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக, நமது அரசாங்கம் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அந்த நேரத்தில், இன்றும் கூட, உலகின் பல பகுதிகளில் ஒரு மூட்டை உரம் சுமார் ₹3,000-க்கு விற்கப்படுகிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனாலும், அதே மூட்டை உரம் இந்திய விவசாயிகளுக்கு ₹300-க்கும் குறைவான விலையில் வழங்கப்படுகிறது. உலகளவில் ₹3,000-க்கு விற்கப்படும் உரத்தை, இந்திய விவசாயிகள் ₹300-க்கும் குறைவான விலையில் பெறுகிறார்கள்.

இந்த விநியோகச் சங்கிலிச் சிக்கல்களுக்கு மத்தியில், கடந்த இரண்டு மாதங்களாக நமது அண்டை நாட்டில் ஒரு பெரும் போர் நடந்து வருகிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்பட்டுள்ளது, மேலும் இந்தியா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, இந்தியாவிடம் பரந்த எண்ணெய் வளங்கள் இல்லை. நாம் மற்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்தப் போரின் காரணமாக, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் வியத்தகு அளவில் உயர்ந்துள்ளன. விலைகள் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டன. அண்டை நாடுகளின் நிலைமை குறித்த செய்திகளையும் நாம் செய்தித்தாள்களில் காண்கிறோம்.

கடந்த இரண்டு மாதங்களாக, இந்திய அரசு இந்த நெருக்கடியிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மக்கள் மீது சுமை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அரசாங்கமே அதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் நண்பர்களே, விநியோகச் சங்கிலித் தடைகள் தொடரும்போது, எல்லா நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

எனவே, தேசத்திற்கு முதலிடம் கொடுத்து, அன்னை இந்தியாவை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்து, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இதை எதிர்த்துப் போராட வேண்டும்.

தேசபக்தி என்பது நாட்டிற்காக இறப்பது மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டிற்காக வாழ்வதும், தேசத்திற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதும் தேசபக்திதான்.

இந்த உலகளாவிய நெருக்கடிக் காலத்தில், நாம் நமது கடமைகளுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுரிமை அளித்து, முழு அர்ப்பணிப்புடன் சில உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதே ஒரு முக்கிய உறுதிமொழியாகும். நாம் நமது எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டும். மெட்ரோ சேவைகள் உள்ள நகரங்களில், முடிந்தவரை மெட்ரோவைப் பயன்படுத்த நாம் முடிவு செய்ய வேண்டும். காரில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத பட்சத்தில், நாம் கார் பூலிங்கை (carpooling) முயற்சிக்க வேண்டும். பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தால், முடிந்தவரை அவற்றை ரயில் சரக்கு சேவைகள் மூலம் அனுப்ப முயற்சிக்க வேண்டும், ஏனெனில் மின்சார ரயில்களுக்கு பெட்ரோலோ டீசலோ தேவையில்லை. மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்களும் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

வீட்டிலிருந்து வேலை பழகுக

கோவிட் காலத்தில், நாம் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள், இணையவழி சந்திப்புகள் மற்றும் காணொளிக் கூட்டங்களை மேற்கொண்டோம். இந்த முறைகளுக்கு நாம் பழகிவிட்டோம். தேசிய நலனுக்காக அவற்றை மீண்டும் புத்துயிர் அளிப்பதே தற்போதைய தேவையாகும். வீட்டிலிருந்து வேலை செய்வது, இணையவழி மாநாடுகள் மற்றும் மெய்நிகர் சந்திப்புகளுக்கு நாம் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எரிபொருள் சிக்கனம் தேவை

நண்பர்களே, இன்றைய நெருக்கடியானது அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் நாம் வலுவாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் கோருகிறது. உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளதால், எரிபொருளைச் சேமிப்பதும், அதன் மூலம் அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிப்பதும் நமது பொறுப்பாகும்.

வெளிநாட்டுப் பயணங்களை தள்ளிப் போடவும்!

நம் அனைவரின் சிறிய முயற்சிகள் கூட நாட்டிற்குப் பெரிதும் உதவும். உதாரணமாக, இன்று வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கக் கலாச்சாரத்தில் வெளிநாடுகளில் நடக்கும் திருமணங்கள், வெளிநாட்டு விடுமுறைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை அடங்கும். இந்த நெருக்கடியான நேரத்தில், தேசபக்தியின் அழைப்பிற்கு இணங்க, இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்களை நாம் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது ஒத்திவைக்க வேண்டும். இந்தியாவிலேயே சுற்றிப் பார்க்க பல அழகான இடங்களும், உள்நாட்டிலேயே செய்யக்கூடிய பல விஷயங்களும் உள்ளன.

தங்கம் வாங்குவதை ஒரு வருடம் ஒத்தி வைக்கவும்!

நண்பர்களே, அந்நியச் செலாவணியைச் சேமிக்க சாத்தியமான எல்லா வழிகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

அதிக அளவு அந்நியச் செலாவணி செலவிடப்படும் மற்றொரு பகுதி தங்கம் வாங்குவது. ஒரு காலத்தில், நெருக்கடிகள் அல்லது போர்களின் போது, மக்கள் நாட்டிற்காகத் தங்கத்தை நன்கொடையாக வழங்கினர். இன்று நன்கொடைகளுக்கு அவசியமில்லை, ஆனால் தேசிய நலன் கருதி, ஒரு வருடத்திற்கு, குடும்ப விழாக்கள் அல்லது கொண்டாட்டங்களைப் பொருட்படுத்தாமல், நாம் தங்க நகைகளையோ அல்லது தங்கத்தையோ வாங்க மாட்டோம் என்று முடிவு செய்ய வேண்டும். இந்தச் சவாலை ஏற்று அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டும் என்று தேசபக்தி கோருகிறது.

உள்நாட்டு உற்பத்திக்கு ஊறு விளைவிப்பவர்களை ஒதுக்கவும்

நண்பர்களே, இது மற்றொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கான நேரமும் கூட. ஒரு காலத்தில் இந்தியா செம்பை ஏற்றுமதி செய்தது, ஆனால் இப்போது நாம் அதை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக நம் நாட்டில் உள்ள செம்பு ஆலைகள் மூடப்பட்டன, இப்போது நாம் மதிப்புமிக்க அந்நியச் செலாவணியைப் பயன்படுத்தி செம்பை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

எனவே, தொழிற்சங்கங்களும் முக்கியக் குழுக்களும் இதுபோன்ற பிரச்சினைகளை மனதில் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவின் தற்சார்புக்குத் தடையாக இருக்கும் எதிலிருந்தும் நாம் விலகி இருக்க வேண்டும். இதுபோன்ற சதிகளில் ஈடுபடுபவர்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் தேசிய நலனுக்கு உகந்த தீர்வுகளைக் கண்டறியுமாறு நாட்டின் நீதிமன்றங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும்!

சமையல் எண்ணெய்களுக்கும் இதுவே பொருந்தும். சமையல் எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா பெருமளவு அந்நியச் செலாவணியைச் செலவிடுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்களது எண்ணெய் பயன்பாட்டைச் சிறிதளவு குறைத்தால், அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நான் பலமுறை கூறியுள்ளேன்: எண்ணெய் பயன்பாட்டைப் பத்து சதவீதம் குறையுங்கள். குறைவாக எண்ணெய் பயன்படுத்துவதும் ஒருவகை தேசபக்தியே. அது தேசிய சேவைக்கும் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. அது நாட்டின் கருவூலத்தின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இயற்கை விவசாயத்துக்கு படிப்படியாக மாறுங்கள்

அந்நியச் செலாவணியைச் செலவழிக்கும் மற்றொரு துறை விவசாயம். நாம் பெருமளவில் ரசாயன உரங்களை இறக்குமதி செய்கிறோம். இரசாயன உரங்களின் அதீத பயன்பாடு பூமித்தாயைப் பாதிக்கிறது மற்றும் நமது வயல்களைச் சேதப்படுத்துகிறது. இன்று நமது விவசாய நிலங்களை நாம் பாதுகாக்கவில்லை என்றால், எதிர்காலப் பயிர்களும் ஆபத்தில் இருக்கும்.

எனவே, ரசாயன உரப் பயன்பாட்டை 25 சதவீதம், 30 சதவீதம், 40 சதவீதம் அல்லது 50 சதவீதம் வரை குறைத்து, இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்வது மிகவும் முக்கியம். உரப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம், நாம் அந்நியச் செலாவணியைச் சேமிக்கலாம், நமது பண்ணைகளைப் பாதுகாக்கலாம் மற்றும் பூமித்தாயைப் பாதுகாக்கலாம்.

சூரிய சக்திக்கு முன்னுரிமை கொடுங்கள்

நண்பர்களே, இந்திய அரசு விவசாயத்தில் டீசல் பம்புகளுக்குப் பதிலாக சூரிய சக்தி பம்புகளை ஊக்குவித்து வருகிறது. நாம் பண்ணைகளில் சூரிய சக்தி பம்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

சுதேசியை ஆதரியுங்கள்

கோவிட் காலத்தில்கூட, உள்ளூர் பொருட்களை வாங்குமாறும், “உள்ளூருக்காகக் குரல் கொடுப்போம்” என்ற மந்திரத்தைப் பின்பற்றுமாறும் நான் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், நாம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும், மேலும் நம் நாட்டில் உள்ளூர் உற்பத்திக்கு எந்தக் குறைவும் இல்லை. அது காலணிகளாக இருந்தாலும் சரி, பைகளாக இருந்தாலும் சரி, அல்லது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களாக இருந்தாலும் சரி, நாம் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

ஏற்கனவே தங்களிடம் உள்ள வெளிநாட்டுப் பொருட்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், புதிய வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

பல நேரங்களில், நமது அன்றாட வாழ்வில் நாம் எத்தனை வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பதை நாம் உணர்வதே இல்லை. மேலும், நான் சுதேசி பற்றிப் பேசும்போது, சிலர் உள்ளூர் தீபாவளி விளக்குகளை மட்டும் வாங்கினால் போதும் என்று நினைக்கிறார்கள். அது ஒரு தவறான கருத்து. கத்தரிக்கோல், சீப்பு முதல் பற்பொடிகள், பல் துலக்கும் தூரிகைகள் வரை, எத்தனை வெளிநாட்டுப் பொருட்கள் நம் வீடுகளுக்குள் கவனிக்கப்படாமல் நுழைந்துள்ளன என்பதைப் பார்க்க, நாம் வீட்டுப் பொருட்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். நாம் படிப்படியாக அவற்றை இந்தியத் தயாரிப்புகளால் மாற்ற வேண்டும்.

தேசபக்தி உணர்வைத் தட்டியெழுப்புங்கள்

நண்பர்களே, இவை ஒரு அரசாங்கம், ஒரு கட்சி அல்லது ஒரு தனிநபரைப் பற்றிய பிரச்சினைகள் மட்டுமல்ல. இது வெறும் பாஜக பிரச்சினை அல்ல. இது ஒரு தேசியப் பிரச்சினை. ஒவ்வொரு குடிமகனும், அரசியல் கட்சியும், அரசாங்கமும், அமைப்பும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இந்த இலட்சியப் பயணத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

தேசிய நலனுக்காக ஊடகவியலாளர்களும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தேசபக்தி உணர்வைத் தட்டி எழுப்பி, இந்தியா இந்த உலகளாவிய நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்றி, சூழ்நிலைகளைத் தாண்டி உயரக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவோம்.

ஒவ்வொரு குடிமகனும் இந்தத் தீர்மானங்களை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றும்போது, இந்தியா ஒவ்வொரு நெருக்கடியிலும் நிச்சயம் வெற்றி பெறும்.”

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

vandematharam backim chandrar - 2026

பத்மன்

தேசத்துக்கு எதிரான திரிபுவாதங்களை, வரலாற்றை மழுங்கடிக்கும் புளுகுமூட்டைகளைத் திராவிட இயக்கங்களும் அவர்களுக்கு பக்கவாத்தியமாக கம்யூனிஸ இயக்கங்களும் தீவிரமாகக் கட்டவிழ்த்து விடுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் வந்தே மாதரம் பாடலுக்கான எதிர்ப்பு.

வந்தே மாதரம் என்பதன் பொருள் தாயை வணங்குகிறேன். நாட்டை, மொழியை, நதியைத் தாய்த் தெய்வமாக வணங்குதல் தமிழகம் உட்பட பாரதம் முழுவதிலுமான பண்பாடு. அதுவே இந்தியப் பண்பாடு எனப்படும் ஹிந்துப் பண்பாடு. இந்தப் பண்பாட்டு ஒற்றுமைதான் பாரத மாதா வந்தனம், தமிழ்த் தாய் வாழ்த்து என நம் முன்னோர்களைச் சிந்திக்க வைத்தது.

ஆனால் தமிழ் என்பதையே சிதைத்து இல்லாத திராவிட இனவாதத்தை முன்னிறுத்தும் பிரிவினைவாத அரசியல் அயோக்கியர்களும், தேசியத்தை மதிக்காமல் சர்வதேசியம் என்ற போர்வையில் அன்னியர்களுக்கு கால்பிடிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் இதர பிற சதிகாரர்களும் தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அது முஸ்லிம்களுக்கு எதிரானதாம்.

அடே மூடர்களே! தேச விடுதலை வேள்வியில் தியாக தீபங்களை உருவாக்கிய தெய்வீகப் பாடல், முழக்கமடா வந்தே மாதரம்!
நீங்கள் அடிக்கடி புரட்டும் வரலாற்றின் பக்கங்களை வழக்கமான புரட்டு இல்லாமல், உண்மையாகவும் நேர்மையாகவும் புரட்டிப் பாருங்கள். அந்தப் புரட்சியின் வீரியம் புலப்படும்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதி, கடந்த 1882-இல் வெளியான ஆனந்த மடம் புதினத்தில் இடம்பெற்ற பாடல் இந்த வந்தே மாதரம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தை ஆண்ட அன்னிய நவாப் கொடூர ஆட்சிக்கு எதிராக இந்த மண்ணின் மைந்தர்களான ஹிந்து சன்யாசிகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட நாவல் ஆனந்த மடம்.

அதேநேரத்தில் மதம் மாற்றப்பட்ட வங்காள முஸ்லிம்களிடையேயும் செல்வாக்குப் பெற்ற பாடல் வந்தே மாதரம். அன்னிய ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களின்போது முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் தரப்பினராலும் உணர்ச்சி பொங்கப் பாடப்பட்டது, முழங்கப்பட்டது வந்தே மாதரம்.

கடந்த 1905-இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் வைஸ்ராய் கர்ஸான் மத அடிப்படையில் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது அதற்கு எதிராக ஹிந்துக்களோடு முஸ்லிம்களும் ஒற்றுமையாகத் திரண்டு எழுப்பிய கோஷம் வந்தே மாதரம். இந்தக் கடும் எதிர்ப்பின் விளைவாக, பிரிட்டன் மன்னர் ஜார்ஜால் கடந்த 1911-இல் வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்டது.

அத்தகைய சக்தி வாய்ந்த இந்த வந்தே மாதரம் பாடலுக்கு ஜாதுநாத் பட்டாசார்யா என்பவர் மெட்டமைக்க, கடந்த 1882-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாகவி ரவீந்திர நாத் தாகூரால் முதன்முதலில் பாடப்பட்டு பொது வாழ்வில் அறிமுகமானது. அப்போது முதல் வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அதற்குச் சில காலம் பின்பு வரையில் முஸ்லிம்களும் பாசத்தோடு முழங்கிய கீதம் வந்தே மாதரம். பாரத மக்களை ஒன்றிணைக்கும் வீரிய மந்திரம் வந்தே மாநரம் என்பதால்தான், நமது மகாகவி சுப்ரமண்ய பாரதியார், இலக்கணச் சுத்தமாக ஒரு முறையும் பின்னர் பாமரர்களுக்கான எளிய நடையில் ஒரு முறையும் என இரு முறை அதனை மொழிபெயர்த்தார்.

ஆனால் 1921-இல் கிலாபத் இயக்கத்துக்கு காந்தியடிகள் அளித்த ஆதரவைத் தொடர்ந்து இந்திய அரசியல் வரலாற்றில் அறிமுகமான முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல் அதாவது அப்பீஸ்மென்ட் கொள்கைக் கோளாறு காரணமாக முஸ்லிம்களிடையே வந்தே மாதரம் செல்வாக்கு இழந்தது.

அந்தக் கோளாறைச் சரிசெய்ய முயலாமல் அரசியல் சுயநலத்துக்காக கொம்புசீவ முயல்வது நாட்டுக்கு நல்லதல்ல. அதேநேரத்தில் – சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில் செல்வதை இந்த எதிர்ப்பு விரைவுபடுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

joseph vijay oath taking ceremony in chennai - 2026

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர் அர்லேகர். அப்போது, ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் ஜோசப் விஜய். அவருடன் அமைச்சர்கள் ஒன்பது பேர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டனர்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், தமிழ்நாடு முதல் அமைச்சராக இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் பதவி ஏற்றார். 

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு  விளையாட்டரங்கத்துக்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டார். வழியில் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கருப்பு பேன்ட், கோட் வெள்ளை சட்டை அணிந்து பதவியேற்பு விழாவுக்கு  வந்தார் விஜய். விஜய் பதவியேற்பு விழாவில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் சென்னை வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் ஆதரவுக் கட்சி எனும் வகையில் ராகுல் பங்கேற்றார்.

13வது முதல் அமைச்சர்

தமிழகத்தில் இதுவரை 12 முதல் அமைச்சர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில் 13வது முதல் அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். 

பி.எஸ். குமாரசாமி ராஜா
சி. ராஜகோபாலாசாரியார்
கு.காமராஜ்
எம். பக்தவத்சலம்
சி.என். அண்ணாதுரை
மு.கருணாநிதி
எம்.ஜி.ராமசந்திரன்
வி.என். ஜானகி
ஜெ.ஜெயலலிதா
ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி
மு.க. ஸ்டாலின் – ஆகிய 12 பேர் இதற்கு முன் முதல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள். என்.ஆர்.நெடுஞ்செழியன் மட்டும் இரண்டு முறை பொறுப்பு முதல் அமைச்சராக இருந்துள்ளார். அந்த வகையில், ஜோசப் விஜய் தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

முதல் கையெழுத்து

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக, 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் (500 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு) உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும், பெண்கள் பாதுகாப்பு கருதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைபொருட்கள் குற்றம் தடுக்க அனைத்து மாநகரங்களில் போதைபொருள் தடுப்பு பிரிவு உருவாக்குதல் என ஆணையில் கையெழுத்திட்டார்.

முதல்வராக முதல் உரை

பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர் மரபுக்கு மாறாக உரை நிகழ்த்தினார் ஜோசப் விஜய். அவர் பேசியதாவது…

சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என்று இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமை, பசி என நல்லாவே தெரியும். நான் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. 

உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்கள் பிள்ளை மாதிரியாக, மகன் மாதிரி, அண்ணன் மாதிரி, தம்பி மாதிரி தான் உணர்கிறேன். நீங்களை என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் எனக்கு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள்.

அதை எல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன். இந்த விஜயை, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் வா பாத்துகிறோம் என்று அவ்வளவு அன்பாக, உறவாக என்னை ஏற்றுக்கொண்டீர்கள். இந்த நேரத்தில் இதனை நான் சொல்ல வேண்டும்.

இந்த பயணத்தில் கஷ்டங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டேன். எனக்காக கூட நின்ற உங்களுக்கும் ஏற்பட்ட அவமானங்கள், கஷ்டங்களை பொருட்டாக எடுத்து கொள்ளாமல் என்னுடைய வேதனைகளை உங்களுடையதாக நினைத்து நின்றதால், ஜோசப் விஜய் எனும் நான் – அதனை உண்மையாக்கி இருக்கிறீர்கள்.

இதனை என்ன சொல்றது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய உறவுகளே, சொந்தங்களே, நான் ஒன்றும் தேவ தூதன் கிடையாது. நான் இயல்பான வாழ்க்கை வாழும் சாதாரண மனிதன் தான். நான் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன். ஏது சாத்தியமோ அது மட்டும் தான் செய்வேன்.

சாத்தியமில்லாதவற்றை செய்யமாட்டார்களாக என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் வரலாம். இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும் போது ஏது வந்தாலும் பார்த்து கொள்ளலாம். என்ன வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனது மனதில் இருக்கிறது.

இன்றைக்கு தமிழக அரசு இருக்கும் நிலைமையை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்து விட்டு போய் இருக்கும் போது, கஜானானை சுத்தமாக துடைத்து வைத்துவிட்டு போய் இருக்கும் போது, சுமையை ஏத்தி வைத்து விட்டு போய் இருக்கும் போது, அப்படிப்பட்ட சூழலில் தான் நாம் இந்த பொறுப்பை கையில் எடுத்து இருக்கிறோம். உள்ளே போய் பார்த்தால் தான் ஏது எந்த நிலைமையில் இருக்கிறது என்று தெரியும். அதனை எல்லாம் பார்த்து விட்டு உங்களுக்கு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.

யாரைவாவது சந்திக்க வேண்டும் என்றால் முகத்தை மூடி கொண்டு சந்திக்காமல், வெளிப்படையாக, ஒளி மறைவு இல்லாமல் வெளிப்படையாக தான் செய்வேன். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்து இருக்கிறீர்கள்.

அதேபோல போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒளிவு மறைவு இன்றி நிர்வாகத்தை நடத்துவேன். நான் சொன்னதை எல்லாம் படிபடியாக நிறைவேற்றுவேன். நீங்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும்.

இது உங்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை கண்டிப்புடன் வைத்து இருப்பேன். போதை பொருள் கலாசாரத்திற்கு தடுக்க இன்றைக்கு இருந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்பேன். நமது பசங்களை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கு, எல்லோருக்கும் பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்களாக இருந்தாலும் அவங்களும் என்னுடைய மக்கள் தான்.

நண்பர்களாக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தானே, அடிப்படை வசதிகளில் எனது முழு கவனத்தை செலுத்துவேன். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டேன், எனக்கு அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவிடவும் மாட்டான். ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். ஒரே பவர் செண்டர் அதுநான் தான்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் எல்லோரும் தவெக அரசில் நல்லாயிருப்போம்; சிறுபான்மையினருக்காக தவெக அரசு துணை நிற்கும். உங்களுக்கு அதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கான முகம் தான் இந்த விஜயின் முகம்.

அதில் 100 சதவீதம் இந்த விஜயை நம்பலாம், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு நன்றி. இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா, நண்பீஸ்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்; உங்களாலதான் இது நடந்துருக்கு. உங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு எல்லா நல்ல விஷயங்களையும் விஜய் மாமா செய்து கொடுப்பான்.

நம்பிக்கையுடன் இருங்கள், தமிழக வெற்றிக்கழக கட்சியினரை நான் எப்படி மறப்பேன். நீங்கள் இல்லை என்றால் எதுவுமே இல்லை. கட்சியினருக்கு, நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். இது புதிய தொடக்கம், புதிய சகாப்தம். சமூக நிதியை நிலைநாட்டு அரசு தொடங்கியது, நமது அரசுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி.

ஆதரவளித்த கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விசிக கட்சியினரை வருக..வருக என்று வரவேற்கிறேன். இந்த மாதிரியான நேரத்தில் குரல் கொடுத்ததுக்கு நன்றி. நம்பிக்கையோடு இருங்கள்; நல்லதே நடக்கும். மீண்டும், மீண்டும் சந்திப்போம். – இவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசினார் விஜய்.

பின்னர் மேடையில் செல்பி வீடியோ எடுக்கப்பட்டது. அப்போது, மேடையில் இருந்த மேஜையை உதவியாளர்களுடன் சேர்ந்து தானும் தூக்கி நகர்த்தினார். 

பின்னர் தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் விஜய்க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அரசுக் கோப்புகளை பார்வையிட்டார்.

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

vijay met tn governor arlekar friday evening - 2026

காங்கிரஸ், விசிக., இரு கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் லீக் ஆகிய திமுக., கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில், பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏ.,க்களின் ஆதரவுக் கடிதங்கள் கிடைத்ததை அடுத்து, நாளை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். 120 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜோசப் விஜய்.

இதை அடுத்து, தமிழகத்தின் 18 வது முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான சி. ஜோசப் விஜய். நாளை காலை 10 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக நாளை காலை 10 மணிக்கு ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜோசப் விஜயுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். 

4வது முறையாக ஆளுநரை சந்தித்த ஜோசப் விஜய்!

ஆட்சியமைப்பதற்குப் போதிய ஆதரவில்லாததால் திணறி வந்தது ஜோசப் விஜய்யின் த.வெ.க., இந் நிலையில், பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, திருமாவளவனின் விசிக.,வும், முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்ததை அடுத்து, ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கும் எம்எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்தது. 

இதை அடுத்து, மாலை 5 மணிக்கு 4வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோர ஜோசப் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக பட்டினப்பாக்கத்தில் இருந்து விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன், ஆளுநர் அர்லேகரை சந்திக்க ஜோசப் விஜய் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால் ஆளுனர் அர்லேகர் இன்று இரவு 7.10க்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல இருப்பதாகவும், அதனால் ஜோசப் விஜயை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்து, தனது கான்வாய் வாகனத்துடன் பாதியிலேயே காரை திருப்பிக் கொண்டு, மீண்டும் வீடு திரும்பினார்.  

இந்நிலையில், ஆளுநர் அர்லேக்கரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மாலை 6.30க்கு ஜோசப் விஜய்க்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது. 

இதை அடுத்து மீண்டும் தன் ஆதரவாளர்கள் சூழ ஆளுநர் அர்லேகரை சந்தித்து கடிதங்களை ஒப்படைத்த ஜோசப் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை முதல்வர் நியமன உத்தரவை வெளியிட்டது. நாளை 10 – ஞாயிறு காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜோசப் விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்கின்றனர்.

பொது நிர்வாகம் காவல் மற்றும் உள்துறை – ஜோசப் விஜய்
நகராட்சி நிர்வாகம் – என் .ஆனந்த்
பொதுப்பணித்துறை செங்கோட்டையன்
விளையாட்டு மற்றும் மதுவிலக்கு துறை ஆதவ் அர்ஜுனா
பள்ளி கல்வித்துறை வெங்கட்ரமணன்
மின்சாரத்துறை சிடி நிர்மல் குமார்
ஆதி திராவிடர் நலத்துறை ராஜ்மோகன்
சிறுபான்மை நலத்துறை முஸ்தபா
பத்திரப்பதிவு வணிக துறை அருண் ராஜ்

ஜோசப் விஜய், பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர் அர்லேகர். இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.