Home Blog Page 3

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

thiruparankundram temple varushabhishekam - 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த 14 7 2025 அன்று கும்பாபிஷேகம் அவிட்டம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று அவிட்ட நட்சத்திரம் வருவதால் இன்று வருடாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை திருக்கோயிலின் வைகாசி விசாக குறடியில் மூன்று கலசங்கள் 7 சிறிய கலசங்கள் வைக்கப்பட்டு வருடாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதன் பின்பு இன்று மாலை 3.30 மணிக்கு கடம் புறப்பாடு ஆகி சிவபெருமானுக்கும் முருகபெருமானுக்கு கோவனத்தின அம்பிக்கைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு
சிறப்பு பூஜை செய்யப்பட்டது . விழா ஏற்பாடுகளை , நிர்வாகம் செய்து வருகிறது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ரவுண்ட் 32 – அதாவது 32 அணிகள் சுற்றில் மொத்தம் 16 ஆட்டங்கள். 28 ஜூன் அன்று ஒரு ஆட்டமும் 29, 30 ஜூன், 01, 02,03 ஜூலை ஆகிய நாட்களில் தலா மூன்று ஆட்டங்களும்!

முதல் ஆட்டம் ஜூன் 28, 2026 – தென் ஆப்பிரிக்கா கனடா இடையேயான ஆட்டம். கனடா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரண்டாவது ஆட்டம் ஜூன் 29, 2026 – பிரேசில் ஜப்பான் இடையேயான ஆட்டம். பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்றாவது ஆட்டம் ஜூன் 29, 2026 – ஜெர்மனி பராகுவே இடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன. பின்னர் 30 நிமிட நேர அதிக வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்ல. அதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை தொடங்கியது. அதில் பராகுவே 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்றது. கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருந்த ஜெர்மனி இந்த ஆட்டத்துடன் வெளியேறியது இந்தப் போட்டியின் மிகப் பெரிய அப்செட் ஆகும்.

நான்காவது ஆட்டம் ஜூன் 29, 2026 – நெதர்லாந்து மொராக்கோ இடையேயான ஆட்டம். இந்த ஆட்டமும் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. மொராக்கோ ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐந்தாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – ஐவரி கோஸ்ட் நார்வே அணிகளுக்கிடையேயான ஆட்டம். நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆறாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – ஃபிரான்சு, சுவீடன் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஃபிரான்சு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஏழாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – மெக்சிகோ, ஈக்வடார் அணிகளுக்கிடையேயான ஆட்டம். மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

எட்டாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – இங்கிலாந்து, டி ஆர் காங்கோ அணிகளுக்கிடையேயான ஆட்டம். இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஒன்பதாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – பெல்ஜியம், செனேகல் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்தன. பின்னர் அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் பெல்ஜியம் அணி ஒரு பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தது. இதனால் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

பத்தாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – அமெரிக்க, பொசானியா & ஹெர்சகோவினியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதினோறாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – ஸ்பெயின், ஆஸ்திரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்பெயின்   3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பன்னிரெண்டாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – போர்ச்சுகல், க்ரோஷியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதிமூன்றாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – ஸ்விட்சர்லாந்து, அல்ஜீரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்விட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதினான்காவது ஆட்டம் ஜூலை 3, 2026 – ஆஸ்திரேலியா, எகிப்து அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. எனவே ஆட்டம் மேம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் தரப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 2 கோல்களும் எகிப்து 4 கோல்களும் போட்டன. இதனால் எகிப்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதினைந்தாவது ஆட்டம் ஜூலை 3, 2026 – அர்ஜெண்டைனா, கேப் வெர்டே அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டிருந்தன. எனவே ஆட்டம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அந்த அரை மணி நேரத்தில் அர்ஜெண்டைனா ஒரு கோல் அடித்தது. இதனால் அர்ஜெண்டைனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதிநனாறாவது ஆட்டம் ஜூலை 3, 2026 – கொலம்பியா, கானா அணிகளுக்கிடையேயான ஆட்டம். கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

rss abps datrayea hosaballe - 2026
File Copy

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப் படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ்., தெரிவித்துள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) சர்கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) தத்தாத்ரேய ஹோசபாலே புது தில்லியில் ஜூலை 3 அன்று வெளியிட்ட அறிக்கை:

பல தலைமுறைகளின் போராட்டங்கள், கோடிக்கணக்கான ராம்பக்தர்களின் (பக்தர்கள்) அர்ப்பணிப்பு, தியாகம், பலிதானம் ஆகியவை காரணமாக, அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்திற்கும் மரியாதை, நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் மையமாக உருவாகியுள்ளது.

ராமர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில் நடந்த துரதிர்ஷ்டவசமான திருட்டுச் சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின், ராமபக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது; இந்த நிகழ்வால் நாம் அனைவரும் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்துள்ளோம்.

ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வற்புறுத்தலின் பேரில், உத்தரப் பிரதேச அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம்.

மிகவும் கண்டிக்கத்தக்க இந்தச் சம்பவத்தை ஒரு அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் செயல்பாடுகளிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்ய அறக்கட்டளை பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் உட்பட ஒட்டுமொத்த இந்து சமூகமும் எதிர்பார்ப்பது இயல்பே.

அயோத்தி கோயில் மீது கோடிக்கணக்கான ராம பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும் தளராமல் உறுதியாக நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியம். தற்போதைய குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் முடிவுக்கு வர வேண்டும். இது தொடர்பாக, கோயில் நிர்வாகமும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (SIT) தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

முறையான நிதி மேலாண்மை, குறை இல்லாத, வெளிப்படையான செயல்பாட்டு அமைப்புகள், தூய்மை, புனிதம், உண்மையான தார்மிகம் நிறைந்த சூழல் ஆகியவற்றின் மூலம், ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இந்தக் கடினமான தருணத்தில் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறும், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி ஹிந்து தர்மத்தையும் சமுதாயத்தையும் களங்கப்படுத்த முயலும் ஹிந்து விரோத, தேச விரோத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்குமாறும் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கேட்டுக்கொள்கிறது.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம்
வழி : அம்பாசமுத்திரம் தென்காசி சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி கோயம்புத்தூர் …..

திருநெல்வேலி – தாம்பரம்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் ….

திருநெல்வேலி -சென்னை எழும்பூர்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை கொடைக்கானல்-ரோடு திண்டுக்கல் திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருத்தாச்சலம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் .

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி
வழி : விழுப்புரம் விருதாச்சலம் திருச்சி மதுரை விருதுநகர் திருநெல்வேலி நாகர்கோவில் .

தூத்துக்குடி – தாம்பரம்
வழி : கோவில்பட்டி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சிதம்பரம் விழுப்புரம்

ஆகிய சிறப்பு ரயில் சேவைகள் அனைத்தும் ஜூலை இறுதி வரை 4 வாரங்களுக்கு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

இதில் கன்னியாகுமரி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை காலை 08:00 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருநெல்வேலி தாம்பரம் மற்றும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் முன்பதிவு துவங்கியுள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

kadeswara subramaniam hindu munnani - 2026
hindumunnani

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

நேற்று (02.07.2026) தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்து, கோவில் இடங்களை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள், நீண்ட நாள் வாடகைகார்கள், குத்தகைதாரர்களுக்கு பட்டா வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவில் வாடகை, குத்தகை என்பது சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவு. அந்த தொகையை கூட, ஆண்டு அனுபவிப்பவர்களில் பலர் பல ஆண்டுகளாக தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.

மேலும் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் யாவும் சட்டப்படி மைனர் சொத்து. அதாவது ஆலயத்தில் இறைவன் என்றும் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கோவிலின் சொத்து என்பது அந்த கோவிலின் இறைவனின் பெயரில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கோவில் செலவுகளைச் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை ஆகும். எனவே இறைவனின் சொத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, கூடாது. அப்படி கொண்டாடினால் அது சட்ட விரோதம் ஆகும். மேலும் ஏழைகளுக்கு தருவதற்கு என்று கம்யூனிஸ்ட்கள் கூறுவார்களேயானால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் சொத்துக்களை ஏழைகளுக்குப் பிரித்து பட்டா தந்து முன்மாதிரியாக அக்கட்சி விளங்கலாமே!

கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் கார்ப்பரேட் மாளிகைகளாக பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றன. இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜாதியைக் காரணம் காட்டி வாடகைக்குக் கூட இடம் தர மறுத்தவர்கள்தான் இந்த கம்யூனிஸ்ட்கள்.

நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் இருப்பது வக்ஃப் வாரியம் எனும் மசூதி சொத்தும், கிறித்துவ மிஷனரி எனும் சர்ச்சுக்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தான். எனவே அவற்றில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க கம்யூனிஸ்ட்கள் கோரலாமே? அதைப்பேச மாட்டார்கள். பேசினால் கம்யூனிஸ்ட்களின் கூட்டணி கட்சிகளான சிறுபான்மை மக்களிடம் ஓட்டு பிச்சையெடுக்கும் கட்சிகளே எதிர்க்கும்.

கோவில் சொத்து என்பது பணக்காரர்கள், மன்னர்கள் கொடுத்தது என்று பலரும் நினைக்கிறார்கள். சாதாரண மக்கள் பலரும் கோவிலுக்கு தங்களுக்கான சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார்கள். காரணம் இறைவன் மீதான பக்தி மற்றும் வேண்டுதல். உதாரணமாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்த ஒருவர் மனம் திருந்தி பின்னாளில் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் சென்னை அடையாறில் சொத்து வாங்கி அதனை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு எழுதி வைத்த இடம் தான் இன்று ஆக்கிரமிப்பில் உள்ள அடையாறு அருணாசலபுரம் பகுதி.

இன்று அதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். அந்த சொத்து முழுவதும் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எனவே பக்தர்கள் கோவிலின் அன்றாட பூஜை, விசேஷ கால பூஜைகள், திருவிழாக்கள், அன்னதானம் என பலவற்றை நடத்துவதற்காக என்று குறிப்பிட்டே சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்கள். அந்த பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும் கோவில் நிர்வாகத்தை ஏற்று இருக்கிற இந்து சமய அறநிலையத் துறைக்கும், அந்த கோவிலில் உள்ள இறைவனை வழிபடும் பக்தர்களாகிய நமக்கும் இருக்கிறது.

இதனை கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத பகல் கொள்ளைகாரர்கள் திருடி சுருட்டுவதை வேடிக்கை பார்த்தால் அந்தப் பாவம் நமக்கும் வந்து சேரும். எனவே மக்களிடையே பேராசையை வளர்த்து கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்திட தூண்டிவிடும் மக்கள் விரோத கம்யூனிஸ்ட்களிடம் தமிழக முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக, தர்மத்திற்கு எதிரான செயல்களுக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

thiruthangal therottam - 2026

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல்லில், 108 திவ்ய தேசத்தில் ஒன்றான, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வைணவ திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நின்ற நாராயணப்பெருமாள் சமேத – செங்கமலத்தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நடப்பாண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 25- ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தி, தீபாரதனையோடு,கருட கொடியேற்றத்துடன்
தொடங்கி நடந்து வருகிறது.

பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவுநின்ற நாராயணப்பெருமாள் சமேத – செங்கமலத்தாயார் சர்வ அலங்காரத்துடன் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்மம்,சேஷம், கருடன், அன்னம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்ட திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் அதி விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திரு தேரில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் செங்கமலத்தாயார் எழுந்தருள தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.

தேரோட்டத்தில் பங்கேற்ற பெண் பக்தர்கள் ஆன்மீகப் பாடல்கள் பாடியபடியே கோலாட்டத்துடன் கும்மியடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோபாலா! கோவிந்தா!! என்ற சரண கோஷத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

fifa2026 - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

முதல் சுற்று முடிந்து 32 அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. 32 அணிகள் விளையாடும் இரண்டாம் சுற்றும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை மிகப் பெரிய அப்செட் என்று சொல்வதானால் அது ஜெர்மனி இரண்டாம் சுற்றில் தோற்று போட்டியை விட்டு வெளியேறியதுதான்.

முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா அணிகள் தேர்வு பெற்றன. குரூப் பி பிரிவில் சுவிட்சர்லாந்து, கனடா, பொசானியா மற்றும் ஹெர்சகொவினியா ஆகிய மூன்று அணிகள் தேர்வுபெற்றிருக்கின்றன. குரூப் சி பிரிவில் பிரேசில், மொராக்கோ அணிகள் தேர்வுபெற்றுள்ளன.  குரூப் டி பிரிவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே ஆகிய அணிகள் அடுத்த சுற்றிற்கு முனேறியுள்ளன.

குரூப் ஈ பிரிவில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட், ஈக்வடார் ஆகிய அணிகள் அடுத்த ரவுண்டிற்குச் சென்றுள்ளன. குரூப் எஃப் பிரிவில் நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. குரூப் எச் பிரிவில் ஸ்பெயின், கேப் வெர்டெ அணிகள் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளன.

குரூப் ஐ பிரிவில் ப்ரான்சு, நார்வே, செனகல் ஆகிய அணிகள் ரவுண்ட் 32க்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜே பிரிவில் அர்ஜெண்டைனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் கே பிரிவில் கொலம்பியா, போர்ச்சுகல், டி ஆர் காங்கோ ஆகிய அனிகள் முன்னேறியுள்ளன. குரூப் எல் பிரிவில் இங்கிலாந்து, க்ரோஷியா, கானா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

a v rangachary swami chidambaram - 2026


சிதம்பரம்: பிரபல ஸ்ரீவைணவப் பேரறிஞரும். ஆன்மீகச் சொற்பொழிவாளரும், சிறந்த கல்வியாளருமான உபய வேதாந்த முனைவர் ஏ.வி. ரங்காச்சாரி ஸ்வாமி (ஏவிஆர் ஸ்வாமி) ஜூலை 2, வியாழன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

ஸ்ரீ வைஷ்ணவ உலகத்தினராலும், ஆன்மீக அன்பர்களாலும் “நடமாடும் ராமானுஜர்” என்று போற்றப்பட்ட அவரது மறைவு, ஆன்மீக மற்றும் கல்வி உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. சிதம்பரம் தில்லைத் திருச்சித்திரகூடத்துடன் எண்பது ஆண்டு பந்தம். சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை பகவத் பாகவத கைங்கரியத்திற்காகவே அர்ப்பணித்தவர் . சிதம்பரத்தின் சைவர்களும் வைணவர்களும் ஒருசேர மதித்துப் போற்றிய மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

இளம் வயது அறங்காவலர்

தமது 13வது வயதிலேயே நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களைக் கற்று, ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். சிதம்பரம் திவ்யதேசத்தின் உத்ஸவங்களைச் செம்மையாக நடத்துவதில் சிறு வயது முதலே பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இதன் காரணமாக, தனது 18வது வயதிலேயே அறங்காவலர் குழுவில் இணைந்து, மிக இளம் வயதில் இப்பொறுப்பை ஏற்ற பெருமைக்குரியவர் ஆனார். பின்னர் இக்கோவிலின் முதன்மை நிர்வாக அறங்காவலராக (Managing Trustee) சிறப்பாகப் பணியாற்றினார்.

இவர் ஆன்மீகத்துடன், அறங்காவலராகவும் பணியாற்றியது மட்டுமின்றி, கல்வித்துறையிலும் முத்திரை பதித்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பொருளாதாரத் துறையின் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

பாரம்பரிய ஆன்மீகக் கருத்துகளைத் தற்கால கல்வித் தத்துவத்தோடு இணைத்து வழங்குவதில் வல்லவரான அவர், Managerial Ability of Sri Ramanuja in Retrospection, Ramanuja: A Reality, Not a Myth உள்ளிட்ட பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ராமாயண உபந்நியாசங்களும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களை நல்வழிப்படுத்தின. பாரம்பரியக் கல்வி மற்றும் வைணவ நெறிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காகப் புகழ்பெற்ற “ஸ்ரீ ராமானுஜ சேவா ஸ்ரீ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

why kanyakumar like this - 2026
  • எம். தங்கராஜ்

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

ஒருவேளை அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு சாதாரண மனிதனின் இயல்பான கேள்வி என்னவாக இருக்கும்?

“இந்த மணல்தான் பிரச்சினை என்றால், அதை முழுவதுமாக அள்ளிக்கொண்டு போய்விடுங்கள். எங்களுக்கு எந்த ஆபத்தும் வேண்டாம். இந்த மண்ணே இங்கே இருக்கக் கூடாது” என்பதுதான் பெரும்பாலான மக்களின் இயல்பான எண்ணமாக இருக்கும்.

ஆனால், அந்த மணலை காந்த சக்தி மூலம் பிரித்து எடுப்பதற்கு ஒரு நிறுவனம் வரும் போது, “அந்த மணலை மட்டும் பிரித்தெடுக்கக் கூடாது, அது அப்படியே இங்கேயே இருக்க வேண்டும்” என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது போல் தெரிகிறது. அதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்ன என்பதுதான் புரியவில்லை.

இதுபோலவே, ஒரு காலத்தில் துறைமுகம் வந்தால் அந்தப் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யாது, கடல் வளம் அழிந்துவிடும் என்று பல்வேற விதமான அச்சத்தை மக்கள் மத்தியில் கிளப்பி விட்டார்கள். ஆனால், இன்று கேரளாவில் வெறும் சில கிலோமீட்டர் தூரத்தில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கும் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன, நண்டுகள் முட்டையிடுகின்றன, மீன்பிடித் தொழிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல், கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாவரா பகுதியில் பல ஆண்டுகளாக IREL நிறுவனம் கடற்கரை கனிம மணலைப் பிரித்தெடுத்து வருகிறது. ஒடிசாவிலும் அதேபோன்ற கனிம மணல் பிரிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு இந்தக் கனிமங்களை அகற்றுவதை இயல்பான தொழில்துறை நடவடிக்கையாகவே பார்க்கிறார்கள்.

அப்படியிருக்க, தமிழ்நாட்டில் மட்டும் இதே விஷயத்திற்கு முற்றிலும் மாறுபட்ட எதிர்ப்புகள் ஏன் உருவாகின்றன என்ற கேள்வி எழுவது இயல்புதான். எந்தத் திட்டமாக இருந்தாலும் அதன் நன்மை, தீமை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களின் நலன் ஆகிய அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து விவாதிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

உணர்ச்சியை விட உண்மைகளுக்கும் ஆதாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே சமூகத்திற்கு நல்லது. இந்த திராவிட கல்வி சிலைகள் உண்டியல் கூட்டங்கள் மற்றும் மிஷனரிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படி விளங்காத வேலை தான் நடைபெறும்.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

christian missioneries propaganda - 2026

— ராம் மாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

வெளிநாட்டு நன்கொடைகளை பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சடிக்கலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம், யாத்திரிகர் விடுதிகளை கட்டலாம், சமூக உணவு கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக்கூடாது என்கிறது அந்த சட்ட திருத்தம்.

அந்த திருத்தங்கள் அரசாணையாக வெளியிடப்படுவதற்கு முன்பே இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த சட்ட திருத்தங்கள் அண்மையில் நடந்த கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல்களில் முக்கிய விஷயமாகியது. அதிர்வலைகள் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையையும் எட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை கமிட்டியின் தலைவராக உள்ள ஜேம்ஸ் ரிஸ்ச் , கிறிஸ்தவர்களின் மனித உரிமைகளை மதிக்காத நாடுகளை அம்பலப் படுத்துவோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காது, என்று அச்சுறுத்தி உள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மத மாற்றம் குறித்து விவாதம் எழுந்தது. விடுதலைக்கு பிறகு ஒரிசா (1967) , மத்திய பிரதேசம் (1968), அருணாச்சல பிரதேசம் (1978) போன்ற சில மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கர் (2000), குஜராத் (2003), இமாச்சல பிரதேசம் (2016), ஜார்கண்ட் (2017), உத்தரகாண்ட் (2018), உத்தரப்பிரதேசம் (2021), ஹரியானா (2022), ராஜஸ்தான் (2025), மகாராஷ்டிரா (2026) ஆகிய மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டன.

‘ மத பிரச்சாரம் செய்யும் உரிமை’ என்றால் ‘மதமாற்றம் செய்யும் உரிமை’யும் சேர்த்ததுதான் என்று பல கிறிஸ்துவ பிரிவுகள்/ குழுக்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் 1977 இல் மத்திய பிரதேச அரசு எதிர் ரெவெரென்ட் ஸ்டைன்ஸ்லாஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்டப்பிரிவு 25 ஒருவருக்கு தாம் எந்த மதத்தை பின்பற்றுவது என்பதை தீர்மானிக்கும் உரிமையை அளித்துள்ளதே தவிர மற்றவர்களை தம் மதத்திற்கு மாற்றும் உரிமையை வழங்கவில்லை, என்று கூறியுள்ளது. அரசு இந்த தீர்ப்பை ஒட்டியே இப்போது செயல்பட்டுள்ளது.

தேச விடுதலைக்கு முன்பு ராம் மோகன் ராய், விவேகானந்தர், காந்தி போன்ற சீர்திருத்தவாதிகளும் தலைவர்களும் மதம் மாற்றம் குறித்து கூர்மையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். 1931 மார்ச் மாதத்தில் ஒரு செய்தியாளர், சுதந்திரத்திற்கு பிறகு வெளிநாட்டு கிறிஸ்துவ மிஷனரிகள் இந்தியாவில் செயல்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? , என்று காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர் , ஏழ்மையில் இருப்பவர்களுக்கு பொதுநல சேவைகளை மனிதாபிமான நோக்கில் செய்யாமல் மதம் மாற்றும் நோக்கத்துடன் கல்வி, மருத்துவ சேவை ஆகியவற்றை செய்வதாக இருந்தால் நான் அவர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்வேன்’ , என்று பதிலளித்தார்.

1935 மே மாதம் ஹரிஜனில் வெளியான ஒரு நேர்காணலில், ‘எனக்கு அதிகாரம் இருக்குமானால் மதமாற்றம் அனைத்தையும் தடை செய்யும் சட்டத்தை இயற்றுவேன். மதமாற்றம் பல கலவரங்களுக்கு காரணமாக இருக்கிறது அது தவிர்க்கப்பட வேண்டும்’ , என்று கூறியுள்ளார்.

ஆனால் ஜவஹர்லால் நேரு 1946 ல் ‘கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் மூன்றாவது பெரிய சமுதாயம். அவர்களது மத உரிமைகளும் இதர உரிமைகளும் நசுக்கப்படும் என்று யாராவது நினைத்தால் அது அர்த்தமற்றது’, என்று கூறியுள்ளார். இந்திய அரசமைப்பு சபையில் ‘மதப் பிரச்சாரம்’ அல்லது ‘மதத்தை பரப்புதல்’ மற்றும் ‘மதம் மாற்றம்’ போன்ற விஷயங்களை பற்றி விவாதிக்கப்பட்டது. மதத்தை ‘பிரச்சாரம்’ செய்யவும் ‘பின்பற்றவும்’ சுதந்திரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் மிஷனரிகள் ‘மதம் பரப்பும் உரிமை’ என்பது ‘மதம் மாற்றம் செய்யும் உரிமை’யை உள்ளடக்கியதுதான் என்றனர்.

கே எம் முன்ஷி , அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் , சி ராஜகோபால் ஆச்சாரியார் போன்ற உறுப்பினர்கள் மதமாற்றம் குறித்து மாறுபட்ட கருத்து கொண்டிருந்தனர். சர்தார் பட்டேலும் மௌலானா ஆசாத்தும் கூட மிஷனரிகள் திரல் மதமாற்றத்தை செய்யக்கூடாது என்றனர். ஆனால் இது போன்ற கருத்துக்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் ‘மதம் பரப்புதல்’ என்ற வார்த்தை அரசமைப்பு பிரிவு 19 இல் சேர்க்கப்பட்டு சட்டமானது.

மிஷனரிகளின் செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. மத்திய பிரதேச அரசு 1954 இல் அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் மிஷனரிகளின் செயல்பாடுகளை ஆராய நியோகி கமிட்டியை நியமித்தது. நியோகி கமிட்டி , மதமாற்றத்தை தனது முக்கிய நோக்கமாக கொண்ட மிஷனரிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு மிஷனரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். வெளிநாட்டினர் மூலம் செய்யப்படும் மதம் பரப்புதல் மற்றும் தவறான வழிமுறைகளை பின்பற்றி செய்யப்படும் மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும். அதற்காக தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தவறான வழிகளில் செய்யப்படும் மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்று மிஷனரிகளுக்கு எதிராக பல பரிந்துரைகளை கூறியது.

நேரு அரசு அந்த கமிட்டியின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் புறம் தள்ளியது. ஏழு தசாப்தங்களுக்கு பிறகு மோடி அரசு அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார்.