இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, ‘மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாகவும், இனி அது ‘லோக் பவன்’ என்றே அழைக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது…
ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு’ என்பது ‘மக்கள் மாளிகை, தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம்:
காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் “மக்கள் மாளிகை” என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, “ராஜ்பவன், தமிழ்நாடு” என்பது “மக்கள் மாளிகை தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை “மக்கள் மாளிகை” ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது. இது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது, மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது.
இந்தப் பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
மக்கள் மாளிகை, சென்னை-22.
– இப்படி மக்கள் மாளிகை – லோக் பவன் – எனும் பெயரிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களான எக்ஸ், பேஸ்புக் பக்கங்களிலும் ராஜ்பவன் என இருந்த பெயர்கள், லோக் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சொல்லப் போனால், இந்தப் பெயர் மாற்றத்துக்கான முதல்படி அமைத்தவர் தற்போதைய தமிழக ஆளுநரான ரவீந்திர நாராயண் ரவி. அவருடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் ஏற்கெனவே ராஜ் பவன் என்று இருந்தது, மக்கள் மாளிகையாகவே மாறிவிட்டிருந்தது. அதை பெயர் அளவிலும் மாற்றம் செய்திருக்கிறார் என்றே இப்போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்களின் பெயரை ‘மக்கள் பவன்’ என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
எனவே, இந்தப் பெயர்ப் புரட்சியானது, தமிழகத்தில் தொடங்கி நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பெயர் மற்றும் மன மாற்றத்துக்கு சென்னையே காரணமாக அமைந்ததும் நமக்குப் பெருமிதமே! காரணம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆளுநர் இல்லங்களான ராஜ்பவன் மற்றும் ராஜ் நிவாஸ் இனி, லோக் பவன் மற்றும் லோக் நிவாஸ் என பெயர் மாற்றப் படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வகையில் தேசத்துக்கு தமிழகமே வழிகாட்டியிருக்கிறது என்று சொல்லலாம்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனை ‘லோக் பவன்’ என மாற்றியுள்ளார். இந்தப் பெயர் மாற்றம், ஆளுநர் இல்லத்தை மக்களுக்கான திறந்த இல்லமாக மாற்றும் முயற்சியின் நீட்சியே எனக் கூறலாம்! இதனை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்று நன்கு விளக்கும்!
மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து தெரிவித்தபோது, மத்திய அரசின் இந்த உத்தரவு, பிரதமர் நரேந்திர மோடியின் விக்சித் பாரத் இலக்கை நோக்கிய பொதுமக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. காலனிய ஆதிக்க சகாப்தத்தின் எச்சமாக உள்ள ‘ராஜ்’ என்ற சொல்லை அகற்றி, மக்கள் சார்ந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளது.
ஆனால் வழக்கம்போல் சண்டைக் கோழியாக அரசியல் செய்து கொண்டிருக்கும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை விமர்சனம் செய்துள்ளார். பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை என்று அவர் தனது சமூகத் தளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அண்மைக் காலமாகவே தமிழக ஆளுநர் மாளிகைகளில் பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. முன்னர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோதும் சரி, தற்போது ரவீந்திர நாராயண் ரவி ஆளுநராக இருக்கும் போதும் சரி, ஆளுநர் மாளிகையில் பல்வேறு கலை இலக்கிய தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன. இவற்றில் பொதுமக்களின் பங்கேற்பும் தமிழக அறிஞர்கள் பெருமக்களின் பங்கேற்பும் இருந்தே வருகிறது. முன்பெல்லாம் ஆளும் வர்க்கத்தினருக்கும் அரசியல் தலைமைகளுக்கும் மட்டுமேயான இடமாக இருந்த ஆளுநர் மாளிகைகள் இப்போது மாநிலத்தின் கலாச்சார மொழிவழி பாரம்பரிய பங்கேற்புக்கும் பிரச்சாரத்துக்கும் ஒரு களமாக அமைந்திருப்பதை நாம் கண்டுவருகிறோம். அந்த வகையில் இது மக்கள்பவன் என்று பெயரளவில் மட்டுமல்ல, செயல்பாட்டிலும் இருந்து வருவது, மக்களாட்சியின் மாண்பை, விரிவாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
மக்களாட்சியின் அடையாளமாக மக்கள் மாளிகையாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டது. ஆனால் ஒரு குடும்ப மாளிகையாக இருக்கும் ஒரு கட்சியின் செயலகமாகத் திகழும் அரசுத் தலைமைச் செயலகம், எப்போது மக்கள்மன்ற செயலகமாக மாற்றம் காணப் போகிறது?
திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும் வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும். ரோகிணி : பயணங்களில் கவனம் மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
மிதுனம்
மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் ஏற்படும். பணியில் இருந்த பொறுப்புகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதார மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். நன்மை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுகூலம் ஏற்படும். பூசம் : உதவிகள் சாதகமாகும். ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : புரிதல் அதிகரிக்கும். பூரம் : தாமதம் ஏற்படும். உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.
கன்னி
சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒரு விதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். கணித தொடர்பான துறைகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும். சுவாதி : சூட்சுமங்களை அறிவீர்கள். விசாகம் : தெளிவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : அனுபவம் வெளிப்படும். அனுஷம் : கையிருப்புகள் மேம்படும். கேட்டை : வேறுபாடுகள் மறையும்.
தனுசு
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வருவாயை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
மூலம் : ஈடுபாடு ஏற்படும். பூராடம் : புரிதல் உண்டாகும். உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சரிவை சரி செய்வதற்கான சூழல்கள் உண்டாக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்
உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும். திருவோணம் : கவனம் வேண்டும். அவிட்டம் : மதிப்புகள் உயரும்.
கும்பம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும், எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும், அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும், தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்… தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
இன்று( 01.12.25 ) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இது முருகனின் அருளால், முருக பக்தர்களின் வேண்டுதால், இந்து வழக்கறிஞர்கள் முயற்சியால் கிடைத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பானது நீதியை நிலைநாட்டியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைதீபத்திற்காக போராடி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த அட்வகேட் அமரர் திரு. ராஜகோபாலன் அவர்களின் ஆன்மாவிற்கு கிடைத்த வெற்றி.
தனது தீர்க்கதரிசனத்தால் இந்து சமுதாயத்திற்கு போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இன்றும் தெய்வமாக இருந்து வழிநடத்தி வரும் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்களின் கனவு நனவாகியுள்ளது.
எப்படி பிரிட்டிஷ் காலத்தில் 12.5.1931இல் இலண்டன் பிரிவ்யூ கவுன்சில் இந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. சுதந்திர பாரதத்தில் 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் அந்த தீர்ப்பை ஊர்ஜிதப் படுத்தி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளது.
அதே போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1996இல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு தந்தது. அதனை இன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஊர்ஜிதப்படுத்தி தீபம் ஏற்ற உத்தரவு தந்துள்ளது.
இதற்காக குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும், வீடுதோறும் தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம் படித்த அனைவருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இனிமையான செய்தி ஆகும்.
இதற்காக சட்ட ரீதியாக போராடிய இந்து வழக்கறிஞர்கள் முன்னணி மற்றும் இதன் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய ஊடகத்தினர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இது முருகனின் வெற்றி. தர்மத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. எனவே பக்தர்களின் உணர்வுகளை மதித்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசும், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ஆண்டு திருவண்ணாமலை போல திருப்பரங்குன்றம் மலை தீபத்தை கண்டு முருகனுக்கு அரோகரா என்று விண்ணதிர முழங்கிட லட்சக்கணக்கான முருக பக்தர்களே மகிழ்வுடன் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தூணில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
முன்னர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து ஆங்கிலேய அரசு அதைத் தடை செய்தது. அதனால், பிள்ளையார் கோவில் முன்புறம் உள்ள மோட்ச தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இன்று வரை வழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் முன்னிருந்த வழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், பின்னாளில் மாற்றப்பட்ட இந்த வழக்கத்தை முன்பு போல் மாற்றக்கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் டிச.3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி, சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. அந்த தீபத் தூண் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளது. பதிலாக மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சட்டவிரோதம். தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் – என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அறநிலையத் துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ‘பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கத்தில், ஆதாரம் இல்லாமல் மனுதாரர் மனு செய்துள்ளார்’ என வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, பிறகு திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கே நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துகளைக் கேட்ட நீதிபதி, மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தீர்ப்பில் தெரிவித்தார்.
சபரிமலையில் மண்டல பூஜைக்கு நடைபெறந்த நாள் முதல் இன்று வரை 15நாட்களில் 12.48 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்த ஆண்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு வழக்கமான அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவுகளுக்கு பதில், சுவையான கேரள சத்யா உணவுகளை பரிமாற தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. சபரிமலையில் போட்டோ எடுக்க, ஐய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல திருவாங்கூர் தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
சபரிமலையில் பக்தர்களுக்கு இதுவரை புலாவ் மற்றும் சாம்பார் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் கூறுகையில், புலாவ் மற்றும் சாம்பார் ஐயப்பன் பக்தர்களுக்கு பிரசாதமாக பொருத்தமானதாக இல்லை என்று போர்டு கருதுவதாகவும், எனவே அதை பாயாசம் (இனிப்பு பாயாசம்) மற்றும் அப்பளம் உள்ளிட்ட கேரள சத்யா உணவால் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அன்னதானத்திற்கான பணம் டிடிபியில் இருந்து எடுக்கப்படுவதில்லை என்றும், ஐயப்பன் பக்தர்களுக்கு நல்ல உணவு வழங்குவதற்காக பக்தர்களால் போர்டில் ஒப்படைக்கப்பட்ட நிதியிலிருந்து இது வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்த புதிய திட்டம் டிச 2, முதல் அமலுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
மேலும் சபரிமலையில் மேல்சாந்தி, அர்ச்சகர்கள் தங்களது அறைகளில் வைத்து நெய் விற்பனை செய்யவோ, அபிஷேகம் செய்வதற்கு பக்தர்களிடமிருந்து நெய் வாங்கவோ கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது வழக்கம். இதற்கு கட்டணம் ரூ.10 ஆகும்.நெய்யை விற்பனை செய்வதற்காக சபரிமலையில் தேவசம் போர்டு சார்பில் தனி கவுண்டர்கள் உள்ளன. ஆனால் மேல்சாந்தி மற்றும் அர்ச்சகர்கள் அறையிலும் அபிஷேகம் செய்த நெய்யை விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மேல்சாந்தி மற்றும் அர்ச்சகர்களின் அறைகளில் வைத்து அபிஷேகம் செய்த நெய்யை விற்பனை செய்யவும், அபிஷேகம் செய்வதற்காக பக்தர்களிடமிருந்து நெய் வாங்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.மேல்சாந்தி பூசாரி மூலம் நெய் அபிஷேகம் செய்ய உரிய கட்டண ரசீது பெற்று ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யலாம்.
மேலும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் சில பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மரணமடையும் பக்தர்களின் உடல்கள் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சன்னிதானம் செல்லும் வழியில் மரணமடையும் பக்தர்களின் உடல்களை ஆம்புலன்சில் தான் பம்பைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் போட்டோ எடுக்க, அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, செய்தியாளர்களுக்கும் இங்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே செய்தியாளர்கள் திருமுற்றத்தில் போட்டோ எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள், அய்யப்பன் சிலைகளை இருமுடி கட்டுடன் கொண்டு வந்து, அய்யப்பனை தரிசனம் நடத்திய பின், ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படியேறும் முன் அதை எங்காவது வைத்துவிட்டு, அய்யப்பனை தரிசித்து திரும்பி போகும் போது எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பம்பை நதியில் பக்தர்கள் களையும் ஆடைகளை எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. ஆனாலும் நதியில் குவியும் ஆடைகளை அள்ளுவது சிரமமாக உள்ளது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், 15 ஊழியர்கள் பம்பை நதிக்கரையில் ஒவ்வொரு 750 மீட்டர் இடைவெளியில் நின்று, தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருப்பர் என்றும் சபரிமலையில் மண்டல பூஜைக்கு நடைபெறந்த நாள் முதல் இன்று வரை 15நாட்களில் 12.48 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.என்று தேவசம் போர்டு கூறியுள்ளது.
— கைலாஷ் விஜய் வர்கியா தமிழில் – திருநின்றவூர் ரவிக்குமார்
அண்மையில் இந்திய கம்யூனிச கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா ஆர்எஸ்எஸ் ஸை நியாயப்படுத்த முடியாது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை (இந்தியன் எக்ஸ்பிரஸ்) எழுதி இருந்தார். அதில் ஆர்எஸ்எஸ் மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அவை அவரது அறியாமையை வெளிப்படுத்துகின்றன அல்லது உள்நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் ஸைப் பற்றிய தவறான கருத்தை முன் வைப்பதாக இருந்தன. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன் , அரசியல் கண்ணாடி மூலம் மட்டுமே ஆர்எஸ்எஸ் ஸைப் பார்த்தால் தேசத்திற்கு அது ஆற்றியுள்ள பங்களிப்பை பற்றி தெரிந்து கொள்ள முடியாது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்று ராஜா கூறுகிறார். விரிவான பார்வையில் பார்த்தால், விடுதலைப் போராட்டம் என்பது அரசியல் களத்தில் நடந்த எதிர்ப்பு என்பதாக மட்டும் சுருக்கி விட முடியாது என்று வரலாறு கூறுகிறது. அது நான்கு பரிமாணங்களை கொண்டது. ஒன்று, புரட்சிகர செயல்பாடுகள். இரண்டு, அரசியல் விழிப்புணர்வு. மூன்று , சமூக சீர்திருத்தம். நான்கு, கலாச்சார மறுமலர்ச்சி. ஆர்எஸ்எஸ் ஸை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் இந்த நான்கு தளங்களிலும் தீவிரமாக செயலாற்றி உள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமே உண்மையான சுதந்திரம் என்பதை அவர் ஏற்கவில்லை . பல நூற்றாண்டுகளாக ஆதிக்கத்திற்கு உட்பட்டதாலும், ஆங்கிலேய கல்வி முறையாலும் உளவியல் ரீதியாக அடிமை பட்டிருந்த இந்தியர்களின் மனதை விடுவிப்பதே உண்மையான சுதந்திரம் என்று அவர் கருதினார்.
நம்முடைய சொந்த கலாச்சாரம், பாரம்பரியம், பண்புகள் ஆகியவற்றை மீட்டெடுக்காமல், அவற்றின் மீது பெருமிதம் கொள்ளாமல், அடையப்படும் அரசியல் சுதந்திரம் முழுமையற்றது என்று கருதினார். இந்த நோக்கத்துடன் தான் அவர் 1925 இல் ஆர்எஸ்எஸ் ஸை ஒரு அரசியல் அமைப்பாக இல்லாமல், ஒரு பண்பாட்டு இயக்கமாக துவங்கினார்.
ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிறகு மகாத்மா காந்திஜியும் கூட வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் போதுமானதல்ல என்பதையும் தார்மீக, கலாச்சார மறுமலர்ச்சி அதற்கு இணையாக தேவை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். அப்போதிருந்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இங்கிலாந்தில் கல்வி கற்று மேற்கத்திய தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்தார்கள். அதே வேளையில் 1925 ல் துவங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவின் கருத்தியலை பின்பற்றியது. இந்த இரண்டு துருவங்களுக்கிடையே இந்தியாவின் ஆன்மாவை – அதன் சனாதன பண்பாட்டை, மரபை, சமூக ஒற்றுமையை – மீட்டெடுக்கும் பாதையை டாக்டர் ஹெட்கேவார் தேர்ந்தெடுத்தார்.
ஆர் எஸ் எஸ் ஒருபோதும் தன்னை அரசியல் கட்சியாக கருதியதில்லை. 1930 ல் காங்கிரஸ் அறிவித்த காட்டு சத்யாகிரகத்தில் ஹெட்கேவார் பங்கேற்ற போது சர்சங்கசாலக் (தலைவர்) பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகி, அதில் பங்கேற்றார். அந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு ஓராண்டு தீவிர சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது சுதந்திர போராட்டத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை காட்டுகிறது. அதேவேளையில் ஆர்எஸ்எஸ் போட்டி அரசியலில் ஈடுபடாமல் சமூக மறுகட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவரது நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
ராஜா , அரசியல் கண்ணாடி மூலமாக மட்டுமே வரலாற்றை பார்ப்பதாக இருந்தால் சுவாமி விவேகானந்தர், மகரிஷி தயானந்தர், ஸ்ரீ அரவிந்தர் போன்றோர்களின் பங்களிப்பை மறுக்க வேண்டியிருக்கும். அவர்கள்தான் இந்த நாட்டில் பண்பாட்டு , ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் . அவர்கள் வழியில் ஆர்எஸ்எஸ் இந்தியாவின் பண்பாடு மற்றும் அறம் சார்ந்த மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது.
இந்த நாட்டில் உள்ள வேற்றுமைகளை ஆர்எஸ்எஸ் பலவீனமாக கருதுகிறது என்றும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துகிறது என்றும் ராஜா குற்றம் சாட்டியுள்ளார் . இது முற்றிலும் அடிப்படை அற்றது. டாக்டர் ஹெட்கேவார் தொடங்கி இங்குள்ளவர் வரை எல்லா சர்சங்கசாலக்குகளும் படிநிலை சமுதாய முறைமையையும் தீண்டாமையையும் வெளிப்படையாக எதிர்த்துள்ளனர்.
‘ ஹிந்து எவரும் தாழ்ந்தவர் இல்லை ‘ என்று குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் பிரச்சாரம் செய்தார். எந்த இந்துவும் தாழ்ந்தவர் இல்லை, தீண்ட தகாதவர் இல்லை. அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர் என்பதே அவரது நிலைப்பாடு. ‘தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் வேறு எதுவும் பாவமில்லை’ என்று பாளாசாஹேப் தேவரஸ் அறிவித்தார். ‘ஒரே கிணறு, ஒரே கோயில், ஒரே மயானம் அனைவருக்கும்’ என்று சமூக சமத்துவத்திற்கு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளார் இப்போதுள்ள சர்சங்கசாலக் மோகன் பாகவத்.
ஆர்எஸ்எஸ் ஸால் ஊக்கம் பெற்ற சேவா பாரதி, வித்யா பாரதி , ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற அமைப்புகள் சமுதாயத்தில் அடிநிலையில் இருக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், தற்சார்பு மற்றும் பண்பு பதிவுகளை ஏற்படுத்தி அவர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தி உள்ளன. பல தசாப்தங்களாக அரசு திட்டங்களே சென்று சேராத உள்ஒதுங்கிய பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சென்று சுயநலமற்று சேவை செய்து வருகின்றனர்.
பழங்குடியினரிடையே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சேவை பணிகள் குறிப்பிடத்தக்கவை. பழங்குடியினரது மொழி, மரபுகள், கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பதோடு அது பற்றிய பெருமித உணர்வையும் நம்பிக்கையையும் அம்மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இன்று தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் கருத்தியலை பின்பற்றி அரசு தேசத்தின் சொத்துக்களையும் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு கொடுத்து வருவதாக ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் தரவுகள் கூறும் உண்மையோ நேர் எதிராக இருக்கிறது. 2013-14 ஆண்டு பட்ஜெட்டில் விவசாயம், விவசாயிகள் நல திட்டங்களுக்காக ரூபாய் 27, 633 கோடி ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் 2024-25 ஆண்டு இது ஐந்து மடங்கு அதிகரித்து ரூபாய் 1,37,664 கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமர்- கிஷான் சம்மான் நிதி மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி உதவி போன்ற மோடி அரசின் திட்டங்களால் விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது.
எடுத்துக்காட்டாக , மத்திய பிரதேச மாநிலத்தில் (2003 ல்) ஏழு லட்சம் ஹெக்டேராக இருந்த பாசன நிலம் இன்று 45 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதனால் அந்த மாநிலம் ஏழு முறை கிருஷி கர்மான் விருதை பெற்றுள்ளது. அதேபோல் சிறு, குறு தொழில் துறை கடந்த பத்தாண்டுகளில் 15 மடங்கு வளர்ச்சி பெற்று உள்ளது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் முத்ரா யோஜனா திட்டங்களால் லட்சக்கணக்கான இளைஞர்கள் சுய தொழில் முனைவோராக, தற்சார்பு கொண்டவர்களாக மாறி உள்ளனர்.
ஆர் எஸ் எஸ் ஸின் ஐந்தமுதம் என்ற நூற்றாண்டு திட்டத்தில் ஒன்று தன்னெறி, அதாவது சுதேசி வாழ்வியல். ஆர்எஸ்எஸ் ஸின் ஆத்ம நிர்பார் பாரத் – தற்சார்புள்ள பாரதம் – என்பது கார்ப்பரேட்டுகளை சார்ந்து இருப்பது அல்ல. மாறாக உள்ளூர் தொழில், உள்ளூர் உற்பத்தி முறை, குடிமக்களின் பங்கேற்பு/ ஈடுபாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் வெறுக்கிறது என்று ராஜா கூறியிருப்பது அவரது அறியாமையையே வெளிப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் ‘ஹிந்து’ என்பதை மதம் அல்லது குறிப்பிட்ட பிரிவு என்று வரையறுக்கவில்லை. மாறாக அதுவொரு வாழ்வியல் முறை என்கிறது. 1995 இல் ரமேஷ் யஸ்வந்த் பிரபு கொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் இந்துத்துவா என்பது மதமல்ல , வாழ்வியல் முறை என்பதை உறுதி செய்துள்ளது.
ஆர் எஸ் எஸ் ஸைப் பொறுத்தவரையில் இந்திய பண்பாடு, பாரம்பரியம், தேசிய அடையாளம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இந்தியரும் – அவர் எந்த நம்பிக்கையை பின்பற்றுபவராக இருந்தாலும் கூட – ஹிந்துவே. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் வெளிநாட்டினர் இல்லை, இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின் முன்னோர்கள் வேறொரு நம்பிக்கையை பின்பற்றுபவர்களாக மாறி இருக்கலாம். அதனால் அவர்களது தேச விசுவாசமோ பண்புகளோ மாற வேண்டியதில்லை என்கிறது ஆர்எஸ்எஸ். அப்படிப்பட்டவர்களை அது வரவேற்கிறது. அவர்களும் ஆர்எஸ்எஸ் ஸின் செயல்பாடுகளில் , எந்த விதமான வேறுபாடும் இல்லாததை பார்த்து , ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரத்தை அடையும் போராட்டம் அல்ல ஆர்எஸ்எஸ்ஸின் வரலாறு. மாறாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பிரிவினை அதன் நோக்கம் அல்ல. மாறாக நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பது.
சமுதாய நல்லிணக்கம், பண்பாட்டு பெருமித்துடன் கூடிய தற்சார்பு பொருளாதாரத்தையும் வாழ்வியலையும் நோக்கி நடைபோடும் இன்றைய இந்தியாவிற்கு ஆர்எஸ்எஸ் ஸின் பங்களிப்பு மேலும் அதிகமாக தேவைப்படுகிறது. பாரத தேசம், பாரதிய பண்பாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமை உள்ளது என்ற உணர்வை மக்களிடையே ஆர்எஸ்எஸ் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக ஏற்படுத்தி வருகிறது.
விமர்சனங்கள் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த விஷயம். ஆனால் அவை உண்மையையும் சரியான புரிதலையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் பற்றிய ராஜாவின் அலசல் உளச்சாய்வு கொண்டதாக உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக பண்பாட்டு எழுச்சி, சுதேசி என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலால் உத்வேகம் பெற்றதொரு அரசு கடந்த பதினோரு ஆண்டுகளாக நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்திவது இந்தியாவிலுள்ள கம்யூனிச கட்சிகள் எதிர்பாராத ஒன்று.
ஒரு காலத்தில் , உலகின் பாதியை ஆதிக்கம் செய்து வந்தது கம்யூனிச தத்துவம். ஆனால் இன்று எத்தனை நாடுகள் அதை நம்புகின்றன ? அதற்கு மாறாக நூறு ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று ஏறத்தாழ , உலகிலுள்ள எல்லா நாடுகளிலும், இந்துக்கள் கணிசமாக வாழும் நாடுகளில், ஆர்எஸ்எஸ் உள்ளது. அண்மையில் நாகபுரியில் நடந்த சங்க சிக்ஷவர்காவிற்கு (ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் ) வெளிநாட்டில் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த நாட்டிலும் இது போன்றதொரு இயக்கத்தை துவங்க ஆர்வம் காட்டியுள்ளனர். சங்கத்தின் கருத்தியல் குறுகியதாக இருந்தால் உலகம் முழுவதும் அது ஏற்கப்பட்டிருக்குமா ?
எனவே, சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஆர்எஸ்எஸ் ஸை கருத்தியல் காழ்ப்புடன் பார்க்காமல் இந்திய கலாச்சார, நாகரீக பாரம்பரியத்தின் கண்கொண்டு பார்க்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். ஆர்எஸ்எஸ் ஸின் குறிக்கோள் அதிகாரம் அல்ல, சேவை. அதுவே இந்தியாவின் எழுச்சிக்கு பின்புலமாக உள்ள மிக சக்தி வாய்ந்த வலிமையாகும்.
நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் – மத்திய பிரதேச மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். கைசிக ஏகாதசி! – கார்த்திகை மாதம் “சுக்லபக்ஷ ஏகாதசி” மற்றும் “துவாதசி” அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான “கைசிக ஏகாதசி”.
மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான “வைகுண்ட ஏகாதசி”. மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான “கைசிக ஏகாதசி”. மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.
கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-
கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் “ஸ்ரீ வராக மூர்த்தியே” கூறுவதாக உள்ளது. இதற்கு “ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்” அருளியுள்ளார்.
ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார்.
மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த “கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு” உரைத்தார். பகவான் கூறியது.
தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் “திருக்குறுங்குடி”. இங்கு பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் “திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி” மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான். பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை “திருப்பள்ளியெழுச்சி” செய்து வந்தான். இந்த புண்ணியவானே “நம்பாடுவான்”.
நம்பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.
கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார், அதுவே போதும். அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.
“கைசிகம்” என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான். நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான்.
இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் “ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம்பாடுவான்” எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மஹாத்மியம் “கைசிக புராணம்” என்ற நாமம் தாங்கி வராஹ புராணத்தில் உள்ளது.
ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான். அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் “சோமசர்மா” என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான். அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம். பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை.
பிரம்மராக்ஷஸனை பார்த்து, “நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது.
நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செய்ய மலையேற வழிவிடுமாறு மன்றாடினான். பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான். இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்து கொண்டான் நம்பாடுவான்.
உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து “திருப்பள்ளியெழுச்சி” பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, “சண்டாளனே! பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.? என்றதோடு மட்டுமல்லாமல், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்”” என்றது.
அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான். (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்). 17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் “மிகக் கொடிய பாவம்” என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது.
அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????
மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் :
சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.
பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.
எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.
எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.
எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.
எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிறானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.
எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.
எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு ஏதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.
எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.
இந்த “17 சபதங்கள்” நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை.
சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த “ஸ்ரீமன் நாராயணனையும்” மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.
இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன்.
நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது. பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான். நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.
பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா! இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான். உள்ளிருந்த “அழகிய நம்பி பெருமாள்” நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். தான் ஆட்கொள்ள வேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன? என்று யோசித்தார்.
எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது.
“விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்! அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!! விலகு” என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.
எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்.
கொடிமரம் விலகிய அடுத்த நொடியே “பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா” என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான். ஆஹா! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம்.
நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது. அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான். இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது. நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, “யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்?. நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே”” என்று கூறினான்.
நம்பாடுவானும், “சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான்.
அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.
நம்பாடுவான் “சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்” என்று வேண்டினான்.
தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த “சுந்தரபுருஷன்” உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான்.
அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி.
நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாறப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது.
“ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.
அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்… ஆகவே என்னை புசித்துக்கொள்… நான் பாடிய “கைசிகப் பண்” ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான்.
அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான்.
பிரம்மராட்க்ஷஸனும், “அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன் ஜன்மத்திலிருந்து காப்பாற்று” என்று மன்றாடியது.
“நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான் நம்பாடுவான்.
அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது.
தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான்.
அதன்படியே, “நேற்றிரவு கைசிகம் என்ற பண்” பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான்.
நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான்.
ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த “பராசர பட்டர்” என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
ஒவ்வொரு கார்த்திகை மாதம் “சுக்லபக்ஷ ஏகாதசி” அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது.
அப்பேற்பட்ட இந்த “கைசிக மகாத்மியத்தை” கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு “வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்” இந்த மஹாத்மியம்.
வராஹமூர்த்தி கூறுவது :-
நம்பாடுவானும் கால முடிவில் “திருநாடு பெற்றான்” என்ற வராஹமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-
எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!
என்று பூமிதேவி தாயாரிடம் இந்த “கைசிக ஏகாதசி மஹாத்மியம்” பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.
விசேஷம் :-
பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராஹ புராணத்தின் உள்ளீடான “கைசிக ஏகாதசி மஹாத்மியம்” என்பதன் சாரமாகும்.
இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும்.
ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-
ஸ்ரீரங்கம் கோவிலில் “கைசிக ஏகாதசி” நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும்.
இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் “கைசிக புராணம்” விடிய விடிய வாசிக்கப்படும். மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை “ஸ்ரீரங்கம்” சென்று தரிசித்திடுங்கள்.
திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது. திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் “கைசிகப்பண்” மற்றும் வராஹ மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டும்? நாம் அனைவரும் “பாக்கியசாலிகள்” “புண்ணியவான்கள்” என்று கூட சொல்லலாம்!.
அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும். மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம்.
இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.
ஓம் வராஹ மூர்த்தியே நமஹ! திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!
SIR – எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதேபோல், நாடு முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பணிகளை முடித்து, திருத்தப் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் தீர்மானித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுகள் இந்தப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, சாக்குப் போக்குச் சொல்லி, பணிகளை முடக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காரணம் தற்போதைய பட்டியலில் உள்ளபடி தேர்தல் நடந்தால் முறைகேடுகளில் ஈடுபடலாம்; மீண்டும் ஆட்சியமைப்பதில் வாய்ப்பு ஏற்படும் என்று மாநிலங்களில் ஆளும் தரப்பு முனைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு ஏற்ப, தமிழக ஆளும் கட்சியின் அங்கமாகத் திகழும் அரசு ஊழியர் சங்கம், தங்களுக்கு வேலைப்பளு அதிகம் என்று கூறி தேர்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்து வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டன. அதை முன்னிட்டு, தேர்தல் பட்டியல் திருத்தப் பணிகளைச் செய்து முடிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசும் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதியுடன் அவகாசம் முடிவடையும் நிலையில் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபங்கள் குறித்து பிப்ரவரி 7ம் தேதிக்குள் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கணக்கீட்டுப் படிவங்களை ‘ஆன்லைனில்’ பூர்த்தி செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அதற்கு, வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலிலும், ஆதார் அட்டையிலும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது…
தமிழகத்தில், 2002, 2005ம் ஆண்டு நடந்த, தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் தங்கள் விபரங்களை, https://www.voters.eci.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில், ‘Search your name in the last sir’ என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதில் தமிழகம் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில், ‘பெயர் மூலம் தேடுதல்’ அல்லது, வாக்காளர் அடையாள அட்டை எண் வழியே தேடுதல் என்பதன் அடிப்படையில், தங்கள் விபரங்களை மீட்டெடுக்கலாம்.
பெயர் பயன்படுத்தி தேடும்போது, மாவட்டம், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர், தந்தை, தாய், கணவர், சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரி பார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து, வாக்காளர் தங்கள் விபரங்களைப் பெறலாம்.
வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை, ஆன்லைன் வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. வாக்காளர் தங்கள் மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, ஆன்லைன் வழியே உள்நுழைய வேண்டும். அப்போது, மொபைல் எண்ணுக்கு வரும், ஒரு முறை ஓ.டி.பி., எண்ணை உள்ளிட வேண்டும்.
உள்நுழைந்த பின், அந்த பக்கத்தில் காட்டப்படும், ‘ Fill Enumeration Form’ என்ற இணைப்பை தேர்வு செய்யலாம். இந்த வசதியை, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள் நுழைந்த பின், அதில் கோரப்படும் விபரங்களை நிரப்ப வேண்டும். சரியான விபரங்களை சமர்ப்பித்த பின், இணைய பக்கம் ‘e-sign’ பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்ததும், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். – என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே பி.எல்.ஓ.க்கள் மூலம் அவரவர் தொகுதியில் இந்தத் திருத்தப் படிவங்களைக் கொடுத்திருந்தாலும், அது சமர்ப்பிக்கப்பட்டது என்பதை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (01-12-2025) ராசி பலன்கள்
மேஷம்
மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகள் நல்ல மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் மேம்படும். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களால் சில பணிகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும். திருவாதிரை : அனுபவம் ஏற்படும். புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
கடகம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். வருத்தம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டும் நிங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மகம் : செயல்பாடுகளில் கவனம் பூரம் : வரவுகள் கிடைக்கும். உத்திரம் : திருப்பங்கள் ஏற்படும்.
கன்னி
சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : ஆதாயகரமான நாள். அஸ்தம் : சிக்கல்கள் குறையும். சித்திரை : தாமதங்கள் விலகும்.
துலாம்
சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
சித்திரை : தாமதங்கள் விலகும். சுவாதி : மேன்மையான நாள். விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
விருச்சிகம்
பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்புங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : அனுபவம் வெளிப்படும். அனுஷம் : அறிமுகம் ஏற்படும். கேட்டை : திருப்பங்கள் ஏற்படும்.
தனுசு
நினைத்த பணிகளில் இருந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : தடைகள் குறையும். பூராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும். உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
மகரம்
சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறு துர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் சாதகமாகும். திருவோணம் : அனுகூலமான நாள். அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உருவாக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும். உத்திரட்டாதி : ஏற்ற இறக்கமான நாள். ரேவதி : கவனம் வேண்டும்.
தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!
பயணிகள் கவனத்திற்கு திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீடித்து இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயிலை தினசரி நிரந்தர ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பயணிகள் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
பராமரிப்பு பணிகளால் மயிலாடுதுறை, ராமேஸ்வரம் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை கோட்டத்தில் சோழவந்தான், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டிசம்பரில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பகுதி ரத்து இன்று (நவ., 30), டிச., 1 முதல் 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) ஈரோடு – செங்கோட்டை (16845), டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை – ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் திண்டுக்கல் – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. டிச., 8, 9ல் மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில்கள் (56711/56714) ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. மாற்றுப் பாதை டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை -ப மயிலாடுதுறை (16848), டிச., 4, 7, 11, 14, 18, 21, 28ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), டிச., 6, 13, 20, 27ல் கன்னியாகுமரி – ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இன்று (நவ., 30) டிச., 1 முதல் 28 வரை (டிச., 2, 9, 15, 16, 22, 23, 24 தவிர்த்து) குருவாயூர் – தாம்பரம் (16128), டிச., 5, 12, 19, 26ல் கன்னியாகுமரி – ஐதராபாத் (07229), டிச., 1, 5, 8, 12, 15, 19, 22, 26, 29ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16340) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
டிச., 27ல் நாகர்கோவில் – காச்சிகுடா ரயில் (16354) திருச்சி செல்லாமல் திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. நேர மாற்றம் டிச., 4, 11, 18ல் மதுரை – பிகானீர் ரயில் (22631) 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். இன்று, டிச., 7ல் பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் ரயில் (16368), 20 நிமிடங்கள் செல்லும் வழியில் தாமதமாக இயக்கப்படும். சிறப்பு ரயில் டிச., 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் 10 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (06846), தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர் வழியாக காலை 9:30 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் டிச., 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06845), இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். இந்த பணிகளால், ராஜபாளையம், சிவகாசி பகுதியினர் காலையில் மதுரை வருவதற்கு (மாதத்தில் 4 நாட்கள் தவிர) ரயில் சேவை கிடைக்காமல் அவதிக்குள்ளாவர். செங்கோட்டை – மதுரை இடையே ராஜபாளையம் வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற பல நாள் கோரிக்கை கனவாகவே உள்ளது.
ரயில் சேவை நீட்டிப்பு ..
பயணிகளின் பெரும் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் (06190/91) பகல் நேர ரயில் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.