Home Blog Page 3

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 16

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ .. 2 ( 16.3.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 08.55 am வரை துவாதசி பின் த்ரயோதசி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ மறுநாள் காலை 5.57 am வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ சிவம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.24
சந்திராஷ்டமம் ~ 5.35 pm வரை மிதுனம் பின் கடகம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி
இன்று ~ ப்ரதோஷம்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (16-3-2026) ராசி பலன்கள்


மேஷம்

புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வர்த்தக சிந்தனைகள் புதுவிதமான உத்திகள் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். பொன் பொருள் சேர்க்கைக்கான சூழல் ஏற்படும். தானியம் மற்றும் ஆபரண தொடர்பான பணிகளில் லாபங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : வரவுகள் கிடைக்கும்.
பரணி : நெருக்கடிகள் குறையும்.
கிருத்திகை : லாபங்கள் ஏற்படும்.


ரிஷபம்

சிந்தனையில் போக்கில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் லாபங்கள் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் பணிகளிலிருந்து வந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : லாபங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


மிதுனம்

பணிகளில் பொறுப்புகளும் அலைச்சலும் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மற்றவர்கள் பற்றி கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடத்தில் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வியாபார செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அலைச்சல் உண்டாகும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


கடகம்

கணவன் மனைவியிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்

புனர்பூசம் : வாதங்கள் மறையும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : நன்மைகள் உண்டாகும்.


சிம்மம்

மற்றவர்களிடம் எதிர்பார்த்து இருந்த உதவிகள் சாதகமாக கிடைக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் அமையும். நெருக்கமானவர்கள் இடத்தில் கோபம் இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

மகம் : உதவிகள் சாதகமாகும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : திருப்தியான நாள்.


கன்னி

உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

உத்திரம் : பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம் : மேன்மை ஏற்படும்.
சித்திரை : ஆதாயகரமான நாள்.


துலாம்

குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் காணப்படும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : தேடல் அதிகரிக்கும்.


விருச்சிகம்

பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : அனுபவம் வெளிப்படும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.


தனுசு

புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்ப நபர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : அறிமுகம் உண்டாகும்.
பூராடம் : நன்மைகள் ஏற்படும்.
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


மகரம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தக செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். கருத்துக்களை கூறும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : தாமதம் ஏற்படும்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


கும்பம்

பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். குலதெய்வ தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன வரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : சேமிப்பு குறையும்.
சதயம் : பயணங்கள் கைகூடும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


மீனம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.


thiruvalluvar 1 - 2026

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

election commisioner annouced date of election - 2026

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தேர்தல் நடத்தை விதிகள் என்பது தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த தேர்தல் ஆணையத்தா அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிகள், அரசு அதிகாரம், பொதுப்பணத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதைத் தடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், சாதி, மத ரீதியான வெறுப்புப் பிரசாரம், மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி இல்லாமல் புதிய திட்டங்கள் அறிவிப்பதை தடுப்பதற்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்: 

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொதுமக்களுக்கான மற்றும் அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, 

  • பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியைத் தொடங்கி உள்ளன.
  • கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
  • அரசியல்கட்சிகள்,
  • தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.
  • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.
  • அரசு விழாக்கள் நடத்த கூடாது,  அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.
  • ஆளும் கட்சி அரசு இயந்திரத்தையோ, வாகனங்களையோ, அதிகாரிகளையோ சொந்தப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. 
  • வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. சாதி, மதம், மொழி அடிப்படையில் ஓட்டுக்களை கேட்கக் கூடாது .
  • வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ கொடுப்பது, மற்றும் ஓட்டுக்களுக்கு விலை பேசுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் செய்யக்கூடாது.
  • பொதுமக்கள்,
  • உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல வேண்டும்.
  • அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

election commisioner annouced date of election - 2026

தமிழகத்தில்
வாக்குப்பதிவு: 23/04/2026
வாக்கு எண்ணிக்கை: 04/05/2026

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவித்தது.

தில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸாம் ஆகிய மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் வெளியிட்டனர். இதனுடன், சில மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதை அடுத்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது. 

மேற்கு வங்கம் தவிர, தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி,

தமிழக தேர்தல் விவரம்

மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30
மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06
மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை : மே 04

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில்:

மனு தாக்கல் தொடங்கும் நாள்: மார்ச் 16
மனுத்தாக்கல் கடைசி நாள் : மார்ச் 23
மனுக்கள் பரிசீலனை : மார்ச் 24
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: மார்ச் 26
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை : மே 04

மேற்கு வங்கத்தில்…

மேற்கு வங்கம் – 2 கட்டம்
மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30 | ஏப்ரல் 02
மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06 | ஏப்ரல் 09
மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07 | ஏப்ரல் 10
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09 | ஏப்ரல் 13
வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23 | ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை : மே 04

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்

*“தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

*பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.

*தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.

*அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.

*கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

corruption charges in palamedu municipal office - 2026

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

மதுரை பாலமேடு பேரூராட்சியில் 3.50 லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வாரச்சந்தை ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல், காவல்துறையினரை வைத்து தடுத்து மிரட்டுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது ஒப்பந்ததாரர் குற்றச்சாட்டுகள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை, மாவட்டம், பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான ஏலம் பாலமேட்டை சேர்ந்த குணசேகரன் (47) என்பவர் 21 லட்சத்து 66 ஆயிரத்து 35 ரூபாய்க்கு ஏலம் எடுத்ததுடன், கடையை கடந்த 11 மாதமாக நடத்தி வந்துள்ளார்.

மேலும் வாரச்சந்தை நடைபெறும் கடைகளை சாலையில் போட எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்ததாரர் குணசேகரன் சாலையில் வாரச்சந்தை கடை போட அனுமதிக்க வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

ஆனால் , பேரூராட்சி நிர்வாகமோ . அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர இயலாது என்றும், சந்தைக்கு மறு ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது இதனைத் தொடர்ந்து வாரச்சந்தை. ஏலம் எடுப்பதற்கு பலர் பாலமேடு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில் திடீரென பழைய ஒப்பந்த தாரர் குணசேகரன் ஏற்கனவே 21 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டதால் தனக்கே மறுபடியும் வாரச்சந்தையை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் என்னிடம் லஞ்சப்பணமாக வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணை தலைவர் என மூவரும் சேர்ந்து ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விட்டு பொது ஏலத்தை நடத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவரை அலுவலக ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் வெளியே போகச் சொல்லி போலீசாரை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த குணசேகரன் தன்னிடம் பெற்ற 3.50 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி தர வேண்டும் இல்லையென்றால் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டேன் என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

இதனால், பேரூராட்சியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் தன்னை காவல்துறையின் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதனால் ஏலக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செயல் அலுவலருக்கு 50 ஆயிரம், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் என மொத்தம் 3.50 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும் ஒப்பந்ததாரர் குணசேகரன் கூறிய நிலையில், இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை செய்து பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் லஞ்சப்பனம் பெற்றது உண்மையாக உண்மையாகும் பட்சத்தில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இதுபோல், பேரூராட்சியில் நடைபெறும் மற்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என பாலமேடு பேரூராட்சிக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

madurai school silambam in tumbler - 2026

மதுரையில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை; டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 107 மழலையர் பள்ளி மாணவர்கள்!

மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர்.
கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Kingdom World Record) அமைப்பின் நேரடி கண்காணிப்பில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.

மதுரையிலேயே, முதல் முறையாக ஒரே இடத்தில் நான்கு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக சாதனை அமைப்பின் பிரதிநிதி செல்வராஜ் தெரிவித்தார்.
107 மாணவர்கள் ஒரு சிறிய டம்ளர் மீது ஏறி நின்று, ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி வியக்க வைத்தனர்.

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி பயிலும் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அரை மணி நேரம் தொடர்ந்து புஜங்காசன நிலையில் நின்று சாதனை படைத்தனர். மாணவர்கள் கர்ணபீடாசன நிலையில் இருந்துகொண்டே அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி தங்களின் பன்முகத் திறமையை நிரூபித்தனர்.

இது குறித்து பள்ளி தாளாளர் பேசுகையில்: குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்துவதற்காகவும், அவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரவும் கடந்த 45 நாட்களாக தினமும் ஒரு மணி நேரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. பெற்றோர்களின் பெரும் ஆதரவும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றிக்குக் காரணம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பயிற்சியாளர் ரமேஷ் மாஸ்டர் மாணவர்களை யோகா மற்றும் சிலம்பம் ஆகிய இரண்டிலும் பக்குவமாகத் தயார்படுத்தியதை கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது.

ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘நோபல் ரெக்கார்ட்’ செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

election voting - 2026

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய ஐந்து மாநில சட்ட மன்றங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதை அடுத்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது. 

இந்நிலையில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது  இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.

தில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸாம் ஆகிய மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று வெளியிடுகின்றனர்.  இதனுடன், சில மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது 

தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் மேற்கு வங்கத்தில் ஐந்து முதல் ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது 

ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

gnanapeet award - 2026

பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை போடுபவர்கள் என்கிற கண்ணோட்டமும் உலகம் முழுதும் ஏற்பட்டிருப்பது தான்! காரணம் இது சிந்தனை வயப்பட்டும் சித்தாந்தங்களுக்குள் சிக்கிக் கொண்டும் வெளிப்படுத்தும் எண்ணங்களின் தொகுப்பு என்பதால்.

எனவே சர்ச்சை இல்லாமல் இலக்கியம் முழுமை பெறாது என்பது ஒரு விதத்தில் அதன் ஜனநாயகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இருந்தாலும் அதிக அளவில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஒருவருக்கு இது போன்ற இலக்கிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அது பெருமளவில் அந்த அமைப்பின் மீதும் விருதின் மீதும் அவமரியாதையை சமூகத்தில் ஏற்படுத்த தான் செய்யும். அத்தகைய நிலைமை இப்போது ஞானபீடம் விருதுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமாக அமைந்தது, தமிழகத்தின் சினிமா கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிற ஞானபீட விருது.

அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு ஆள்பவர்களுக்கு அனுசரணையாக வாழ்ந்து கொண்டு இலக்கியம் எனும் போர்வையில் அரசியல் பிரசாரம் செய்து வரும் வைரமுத்து போன்றவர்களுக்கு விருது அளிக்கப்படுவது உண்மையில் இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரும் மனச்சோர்வையும் கொந்தளிப்பையும் தந்துள்ளது என்பது கடந்த ஓரிரு தினங்களாக வெளிவரும் கருத்துக்களை பார்த்தபோது புரிகிறது. அவ்வாறு வந்த சில கருத்துகள்…


முகத்தில் பூசிய கரி!

  • ஜடாயு, பெங்களூரு

முதலில் திட்டமிட்ட வதந்தியோ என்று நினைத்தேன். ஆனால் கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு என்று செய்திகளில் வந்து விட்டது. ஒரு தேசத்தின் உயர்ந்த விருதுகள், அதுவும் கல்வி, கலை, இலக்கியம், கலாசாரம் போன்ற துறைகளின் விருதுகள் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர்களுக்கும் கயவர்களுக்கும் அளிக்கப் படுவது என்பது பெரும் கொடுமை. அந்தத் தேசத்தின் அறிவுப் பாரம்பரியத்தின் மீது வீசப்படும் மற்றுமொரு சாணி, அதன்மீது படியும் மற்றுமொரு கறை. அப்படிப்பட்ட ஒரு தருணம் இது.

1965ல் நிறுவப்பட்ட பாரதத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருது ஞானபீட விருது. கடந்த வருடங்களில், தாராசங்கர் பந்தோபாத்யாய, குவெம்பு, ராமதாரி சிங் தினகர், சிவராம் காரந்த், ஜெயகாந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற மகத்தான இலக்கிய சாதனையாளர்களுக்காக வழங்கப் பட்ட இந்த விருதை இந்த வருடம் வைரமுத்து வாங்குகிறார்.

ஏற்கனவே 6-7 முறை சிறந்த திரைப்பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும், பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் “வாங்கி”யுள்ள வைரமுத்து, 2018ல் இந்த விருதுக்காக கடுமையாக முயற்சி செய்வதாக வதந்திகள் வரத் தொடங்கியதும், அப்போது அதை எதிர்த்து ஆன்லைன் பெடிஷனில் கையெழுத்து போட்டது, கையெழுத்து சேகரித்தது எல்லாம் நினைவு வருகிறது. ஆண்டாளைக் குறித்த அவதூறுப் பேச்சினால் அப்போது வைரமுத்துவின் மீது படிந்திருந்த எதிர்மறைப் பிம்பத்தில் விருதை வாங்கும் அவரது முயற்சி வெற்றியடையவில்லை என்று இப்போது தோன்றுகிறது.

ஆனால், வைரமுத்து போன்ற ஜந்துக்கள் இத்தகைய விஷயங்களில் மனம் தளர்வதில்லை. எந்தவித இலக்கியத் தரமும் இல்லாத சராசரிக்கும் கீழான ஒன்றிரண்டு புனைவுகளையும், பாலியல் வக்கிரங்களும் வெறுப்புணர்வு அரசியலும் தளும்பும் பாடல்களையும் மட்டுமே எழுதியது போக, பாலியல் அத்துமீறல்களுக்காக பாதிக்கப்பட்ட #Metoo பெண்கள் வெளிப்படையாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர் இந்த நபர். இந்த உயர்விருது இத்தகைய ஒரு ஆசாமிக்கு வழங்கப் படுவது அசிங்கம், தேசிய அவமானம்.

அதிகாரபூர்வமாக ‘பாரதிய ஞானபீடம்” என்பது ஒரு தனியார் அறக்கட்டளை என்று கூறப்பட்டாலும், ஒவ்வொரு வருடமும் இந்த விருதுக்கான தேர்வுகள் மத்திய அரசின் பார்வையையும், பரிந்துரையையும் தாண்டி வழங்கப் படுவதில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற இந்த வருடம், இப்படியாகப் பட்ட ஒரு மிக மோசமான விருதுத் தேர்வை செய்துள்ள மத்திய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். அதுவும் பாரத கலாசாரத்தையும், இந்து பண்பாட்டையும் பாதுகாக்கக் கூடிய கட்சி என்பதையே மையமாக தமிழ்நாட்டில் முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஆதரவாளர்கள், தொண்டர்கள் முகத்தில் இதைவிட மோசமாக கரியைப் பூசவே முடியாது. வெட்கம்.


சூடு சொரணை, வெட்க, மானமெல்லாம் நமக்கெதற்கு?

  • வேதா டி. ஸ்ரீதரன்

ஆண்டாளை தே* என்றவனுக்கு ஞானபீட விருது.
மத்திய அரசாங்கம் தவறிழைத்து விட்டதாம். மோதிஜி குற்றவாளியாம்.

மன்னிக்கவும்.

ஞானபீடம் என்பது ஒரு பணக்காரக் குடும்பம் தனது அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்காக ஏற்படுத்திய விருது. அது பல வருடங்களாகப் பாரபட்சமில்லாமல்தான் இயங்கி வருகிறது. ஆனாலும், ஆங்காங்கே – குறிப்பாக, மாநில வாரியாக – ஏற்படுத்தப்படும் தேர்வுக் குழுவினரின் முடிவுகள் எப்படி அமைகின்றனவோ, அதன்படிதான் அந்த அமைப்பு செயல்பட முடியும்.

இதற்கும் மத்திய அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.

பாரதத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த தேர்வுக்குழுக்களில் ரத்த வாடை வீசும். காரணம், இலக்கியம் என்பதே தற்கால இந்தியாவில் இடதுசாரிகளின் குத்தகைப் பொருள் என்றாகி விட்டது.

அதிக துர்நாற்றம் வீசுவது சாகித்ய அகாதமியில்தான். காரணம், அது மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சுதந்திர அமைப்பு. அரசுப் பணம் என்பதாலும், சுதந்திர அமைப்பு என்பதாலும் அதில் இடதுசாரிகள் அதிகம் கோலோச்ச முடிகிறது. சிவலிங்கத்தின்மேல் சிறுநீர் கழித்தேன் என்று எழுதிய கன்னட கார்ல்புகிக்கு ஓடோடிப்போய் சாகித்ய அகாடமி விருது வழங்கினார்கள்.

ஆண்டாள் பிரச்சினையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததுமே (அதுவரை இல்லாமல், திடுதிடுப்பென) மாலனுக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கினார்கள். (ஆண்டாள் திருவெம்பாவையை இயற்றினார் என்று இவ்விருவரும் கண்டுபிடித்த காரணத்துக்காகவும் இருக்கலாம்.)

அமெரிக்க நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு (மாதொருபாகன் என்ற நாவலில்) திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழாவைப் பற்றிக் கொச்சையாக எழுதிய பெருமாள் முருகனை உள்ளூர் ஹிந்துக்கள் நாறடித்து விட்டார்கள். அவனும் தனது புத்தகத்தை வாபஸ் வாங்கிவிட்டு எழுத்துப் பணிக்குத் தலைமுழுக்குப் போட்டு விட்டான்.

ஆனால், இடதுசாரிகளின் மானம் போய்விட்டதே, என்ன செய்வது? அட்ரஸ் இல்லாத அவனுக்காக இந்தியா முழுவதும் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தார்கள். மேலும், மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு (மோதிஜி பிரதமராக இருக்கும்போதே) சாகித்ய அகாடமி விருது வழங்கி அரிப்பைத் தணித்துக் கொண்டார்கள்.

ஒருபுறம் பாரத அரசாங்கம் நக்சல்களை எதிர்த்துப் பல விதங்களில் போராடிக் கொண்டிருக்கும்போது – ஏராளமான காவல்துறை, ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கொண்டிருக்கும்போது – நக்சல்கள் தேசபக்தர்கள் என்று அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை (மத்திய அரசாங்கத்தின் நிதியுடனும், கண்காணிப்பின் கீழும் செயல்படும்) மனோன்மணியம் பல்கலைக்கழகம் பாடநூலாக வைத்தது.

இத்தகைய சூழலில்கூட ஓரளவு மரியாதைக்குரியதாக இயங்கி வந்தது ஞானபீடம். எனவேதான், அது ஆண்டாளை தே* என்றவனுக்கு விருது வழங்கியது என் போன்றவர்களைப் புருவம் உயர்த்த வைக்கிறது.

அதேநேரத்தில், இந்த விருது வழங்கும் குடும்பம்தான் எகனாமிக் டைம்ஸ் அவார்ட், ஃபிலிம்ஃபேர் அவார்ட், மிஸ் இந்தியா அவார்ட் ஆகியவற்றையும் வழங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால், ஞானபீடம் என்பது வெறும் ஃபேமிலி ஷோ மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, இதற்காக அலட்டிக்கொள்வது அனாவசியம்.

ஆனாலும், ஞானபீட விருது என்பது சான்றிதழ், (ரூ 11 லட்சம்) பணமுடிப்பு ஆகியவற்றுடன் ஸரஸ்வதி விக்கிரகத்தையும் உள்ளடக்கியது. ஆக, ஆண்டாளை தே* என்றவனுக்கு வாக்தேவி ஸரஸ்வதியைப் பரிசாக வழங்கப் போகிறார்கள்.

அந்த விக்கிரகத்தை அவன் ஈ. வெ. ரா., கருணாநிதி சமாதிகளில் வைத்து அஞ்சலி செலுத்தினாலும் செலுத்துவான். யார் கண்டது? பாம்புக்கறி தின்னும் கூட்டத்தில் வாழ்கிறோம். நடுக்கண்டம் நமக்குத்தான் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுதான் புத்திசாலித்தனம்.

சூடு சொரணை, வெட்க, மானமெல்லாம் நமக்கெதற்கு?


உணர்ச்சிவசப்பட என்ன இருக்கிறது?

  • டி.கே.எல். ஸ்ரீராம்

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீட விருது, மத்திய அரசால் வழங்கப்படுவது கிடையாது. இந்த விருதை பாரதிய ஞானபீடம் (Bharatiya Jnanpith) என்ற தனியார் பண்பாட்டு அமைப்பு வழங்குகிறது.

இது 1944-ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் மற்றும் அவரது மனைவி ரமா ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்டது. முதல் விருது 1965-ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஜி. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. ஞானபீட விருதுக்கும் மத்திய அரசுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை.

அரசு விருதுகளான ‘சாகித்ய அகாடமி’ போன்றவற்றுடன் இதை ஒப்பிடக்கூடாது; அவை மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளால் வழங்கப்படுபவை. இருப்பினும், இந்த விருதின் கௌரவம் கருதி, பெரும்பாலும் நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் தான் விழாவில் கலந்துகொண்டு விருதை வழங்குவார்கள்.

விருது பற்றிய முக்கிய விவரங்கள்:

பரிசுத் தொகை | ₹11 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி சிலை.

விருதுக்கு தகுதி என்னவென்றால் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். தேர்வு முறை நடக்கும் விதம் எப்படி என்றால் ஒரு குறிப்பிட்ட நூலுக்கு மட்டுமல்லாமல், அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.

இதுவரை அகிலன், ஜெயகாந்தன் மற்றும் கவிஞர் வைரமுத்து (2024-ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது) ஆகியோர் பெற்றுள்ளனர். திரும்பவும் சொல்வது என்னவென்றால் மத்திய அரசு நேரடியாக சாகித்ய அகாடமி விருதுகளைத் தான் வழங்குகிறது. ஞானபீடம் என்பது ஒரு கௌரவமிக்க தனியார் இலக்கிய அங்கீகாரம். ஆக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.


வேளச்சேரி – பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

bringimalai to velachery train stared - 2026

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும்ரயில், 80 நிமிடப் பயணம் இனி 15 நிமிடங்களில்!

வேளச்சேரி – பிருங்கிமலை (பரங்கிமலை) பறக்கும் ரயில் : இருபது வருட கனவு நிறைவேறியது பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இந்தத் திட்டத்தை சாத்தியமாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

சென்னைவாசிகளின் 18 வருட கனவான வேளச்சேரி – பிருங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் இணைப்பு மார்ச் 14ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் MRTS எனும் பறக்கும் ரயில் ஒரு வரப்பிரசாதம். ₹5க்கு அடுத்த ஸ்டேஷன் பஸ் கட்டணம் கூட இல்லாமல் போனபின்பு அதை தருகிறது. மந்தைவெளி – பரங்கிமலை ரிட்டர்ன் டிக்கெட் ₹10. அதனால் மட்டுமல்ல, அதன் மூலம் சேமிக்கும் நேரம் என்பது அதீதமானது. பரங்கிமலை – மந்தைவெளி ஒரு 35 நிமிட நேர பயணம். அதுவும் பரங்கிமலையிலிருந்து வேளச்சேரி மெதுவாக வருவதால் ஒரு 5 நிமிடம் கூடுதல் நேரம். வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஸ்டேஷன் நிற்பதில்லை, அடுத்து பரங்கிமலை ஸ்டேஷன். அது வேளச்சேரி அளவிற்கு பெரியதல்ல என்பதால் அது அங்கிருந்து நீட்டிக்கப் படலாம்.

வேளச்சேரி – பிருங்கிமலை இடையே கடந்த 11ம் தேதி பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் தொடங்கி வைக்கப்படவில்லை.. தற்போது தற்காலிக அனுமதிச் சான்றிதழ் கிடைத்துள்ளதால், மார்ச் 14 அன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பிருங்கிமலை வரை எத்தனை ரயில் சேவை, வேளச்சேரி வரை எத்தனை ரயில் சேவைகள், வேளச்சேரி -பிருங்கிமலை இடையே எத்தனை ரயில் சேவைகள் என்பது குறித்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழித்தடத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் சவால்களைக் கடந்து பணிகள் முடிக்கப்பட்டது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரயிலை இயக்கி பாதுகாப்பு சோதனை செய்தார். அதற்கு முன்பாக சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தற்போது அனைத்து சோதனைகளும் முடிந்து, தற்காலிக பாதுகாப்புச் சான்றிதழ் கிடைத்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மார்ச் 5 அன்று புதிய பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் திருப்தி அடைந்த அவர், மார்ச் 11 அன்று இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தற்காலிக அனுமதியை வழங்கினார். இதன்படி தொடக்கத்தில் ரயில்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் குடிநீர் வசதி போன்ற சில பணிகளை வரும் மே 15-க்குள் முடிக்க நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது. எனவே இந்த ரயில் நிலையங்களில் நிறுத்தம் பின்னர் வரும்.

இதுவரை சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் வேளச்சேரியுடன் நின்றுவிடும். இனி வேளச்சேரி வழியாக பிருங்கிமலை வரை நீட்டிக்கப்படும். அதேபோல் பிருங்கிமலையிலிருந்து ரயில்கள் கடற்கரைக்குத் திரும்பும். எனவே பயணிகள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பிருங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடியும்.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் மக்கள் இனி பஸ் அல்லது ஆட்டோவை நம்பி இருக்காமல் நேரடியாக எழும்பூர் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயில்களைப் பிடிக்க பிருங்கிமலைக்கு போக முடியும். அதேபோல் பிருங்கிமலையில் பறக்கும் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என மூன்றுமே ஒரே இடத்தில் சந்திப்பதால் பயண நேரம் பெருமளவு குறையும். வேளச்சேரி-விமான நிலையம் செல்லும் உள்வட்டச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

1001314434 - 2026

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அம்மன் அழைப்பு,பக்தி பரவசத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.வரும் பங்குனி பரணியில் தூக்கத்திற்கு விழா நடைபெறும்.

தமிழகம் கேரளா மாநிலத்தில் எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மீனபரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடக்கிறது. குழந்தை பேறு வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழவும் அம்மனை வேண்டி இந்த தூக்க நேர்ச்சை நிறை வேற்றப்படுகிறது.

இங்கு கொல்லங்கோடு கண்ணனாகத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டர் தொலைவில் வட்டவிளையில் மூலஸ்தான கோவிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 500 மீட்டர் தொலைவில் வெங்கஞ்சியில் தூக்கத் திருவிழா கோவிலும் அமைந்துள்ளன.

இந்நிலையில் இந்த கோவிலில் தூக்கத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகியது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு முலஸ்தான கோவிலில் பள்ளி உணர்த்தல், மகா கணபதி ஹோமமும், காலை 6 மணிக்கு திருவிழா கோவிலில் மகா கணபதி ஹோமம் போன்றவை நடைபெற்றது.

தொடர்ந்து 7 மணிக்கு கொடிமரம் மேளதாளங்களுடன் திருவிழா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு 8.30 மணிக்கு அம்மன் மூலஸ்தான கோவிலில் இருந்து எழுந்தருளி புறக்கால் கிணறு வலம் வந்து கரிவயல், கொல்லங்கோடு மடம், சாஸ்தா நகர், திருமன்னம் சந்திப்பு ஆகிய இடங்களுக்கு சென்று பூஜைகள் பெற்று மீண்டும் மூலஸ்தான கோவில் வந்தடைந்தது.

மாலை 3 மணிக்கு அம்மன் மீண்டும் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி கண்ணனாகம் சந்திப்பு வழியாக கீழ வீடு நாகராஜா காவு, இளம்பாலமுக்கு மகாதேவர் கோவில் வழியாக திருவிழா கோவில் வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தந்திரி கொட்டாரக்கரை நீலமனை மடம் ஈஸ்வரன் போற்றி கொடியேற்றி வைத்தார். பின்னர் வாண வேடிக்கையை தொடர்ந்து தூக்கத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி துவங்கியது.

கொல்லம்கோட்டில் உள்ள பத்ரகாளி கோவில் மிகவும் பிரபலமான சக்தி ஆலயமாகும். இந்த கோவிவில் உள்ள குழந்தைகளைக் காக்கும் தெய்வமான கொல்லங்கோட்டம்மனை பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி வழிபாடு செய்கின்றனர். இங்குள்ள ஸ்ரீ பத்ரகாளி தேவி, சக்தியின் இரட்டை வடிவமாக, பத்ரா மற்றும் காளியாகத் தோன்றியதாக நம்பப்பட்டாலும், பக்தர்கள் அன்னை துர்க்கையின் ஒருங்கிணைந்த வடிவத்திலிருந்து ஆசீர்வதிப்பதாக நம்புகின்றனர். இந்த தெய்வங்கள் அரை வட்ட வடிவ ‘முடிகளில்’ (தேவியின் செயற்கை சிலை) வசிக்கின்றன, அவை பலா மரத்தால் செதுக்கப்பட்ட பாம்பு தொப்பி அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாத தம்பதியினர், இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அப்படி வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், குழந்தைகள் நோய் நொடிகள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக, இந்த கோவிலில் நடக்கும் தூக்க நேர்ச்சை திருவிழாவில் பங்கேற்கிறார்கள்.

அதாவது வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் திருவிழாவுக்கு அழைத்து வந்து ‘தூக்க நேர்ச்சை’ செலுத்துவது வழக்கம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு 3 வயது நிறைவடையும் முன்பாக தூக்க நேர்ச்சையில் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம். கொல்லம்கோடு தூக்க நேர்ச்சை திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் (மார்ச்-ஏப்ரல்) பரணி நட்சத்திர நாளில் நடைபெறும். இந்த திருவிழா இந்தாண்டு வெள்ளிக்கிழமை மார்ச்13-ம்தேதி இன்று துவங்கியுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாவில் இந்தியா முழுவதிலுமிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் சிறப்பு பூஜைகள், வண்ணமயமான ஊர்வலங்கள், காவடி மற்றும் காவடியாட்டம், வண்டியோட்டம், பக்தி இசை நிகழ்ச்சிகள், ஓட்டம் துள்ளல், கதகளி, ஹரிகதா போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 9-வது நாள் திருவிழாவில் ‘தூக்க நேர்ச்சை’ நடைபெறும். தூக்க நேர்ச்சையில் பங்கேற்கும் தூக்கக்காரர்கள் 10 நாட்களும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதம் இருந்து காப்பு கட்டி திருவிழா முடியும் வரை கோவிலில் தங்கி இருப்பார்கள்.

மரத்தாலான ஒரு வண்டியில், சுமார் 20 அடி உயரமுள்ள இரு மரத்தடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மரத்தடிகளை 20 அடி உயரத்துக்கு மேலே தூக்கி, கீழே இறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மரத்தடிகளின் உச்சியில் உள்ள மரச்சட்டங்களில் நான்கு தூக்க காரர்கள் தொங்கிக் கொண்டு, (4 பேரையும் விழாமல் இருக்க துணியால் கட்டி இருப்பார்கள்) தலா ஒரு குழந்தையை கையில் ஏந்திக்கொள்வார்கள்.

பின்னர் கோவிலைச் சுற்றி இந்த வண்டியைத் தேர் போல பக்தர்கள் இழுத்து வருவார்கள். அதன் பின்னர் அடுத்த நான்கு குழந்தைகளுடன், வேறு நான்கு தூக்க காரர்கள் இந்த மரத்தடியில் தொங்கிக் கொள்ள, வண்டி இழுத்து வரப்படும். இவ்வாறு ‘தூக்க நேர்ச்சை’ வழிபாடு அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் 2000க்கும் மேற்பட்ட தூக்க நேர்ச்சைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

1781972 congress1 - 2026

இன்று ஈரான் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தார்மீக நிலைப்பாடு அவர்களுடைய முந்தைய நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது குழப்பம் அளிப்பதாக இருக்கிறது. (சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் நடந்த) ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

இது அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றும், இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடக்கும் நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு செய்யப்பட்டது என்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடை என்ற அழுத்தத்திற்கு பயந்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டது.

அப்போது ஈரான், பாகிஸ்தான், இந்தியாவை இணைத்து எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இவையெல்லாம் அத்தியாவசியமான மூலோபாயங்கள் என்று சொல்லப்பட்டது. அதே கட்சி இப்போது மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளை கோழைத்தனமானது என்று விமர்சிப்பது சாரமற்றது.

வசுதைவ குடும்பம் என்ற சொல்லாடலை மேற்கோள் காட்டி தார்மீக பொறுப்பை துறந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகிறார்.

ஆனால் அதே தார்மீக துடிப்பை அவர் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட போது காட்டாதது ஏன்?

காஷ்மீரில் 1980ல் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்த போதும் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருந்தது ஏன்?

  • பல்பீர் பூஞ்ச் – எழுதிய கட்டுரையில் இருந்து