Home Blog Page 4

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

joseph vijay oath taking ceremony in chennai - 2026

இலங்கை ஜெயராஜ் – இலக்கியப் பேச்சாளர்

கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்: வாழ்த்துரைப்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? ஆனால் அதைச் சொன்ன பிறகு மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதிர்ஷ்டத்தால் வரும் வெற்றிகள் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டுமானால், அதற்காக நிறையப் பாடுபட வேண்டியிருக்கும். விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியையும் அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

மக்கள் தொண்டு, சிறந்த இலட்சியம், கொள்கைப்பிடிப்பு, கொடைத்தன்மை, தனி வாழ்க்கைத் தூய்மை போன்ற எதுவும் இல்லாமல் கிடைத்திருக்கும் வெற்றியை, அதிர்ஷ்டத்தால் அமைந்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமில்லை, மக்கள் விஜய்க்கு அளித்திருக்கும் இந்த வெற்றியை, அவர்மீதான பற்றுதலால் மட்டும் விளைந்தது என்று சொல்ல முடியாது. அது பழைய ஆட்சியாளர்களின் மீதான பகையாலும் விளைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் இதுவரை தனது தலைமைப்பண்பை சினிமாவில் மட்டும்தான் காட்டியிருக்கிறார். நிஜத்தில் அதனை இதுவரை அவர் காட்டியதாய்த் தெரியவில்லை. பதவியேற்றதன் பின்னான இந்த சில நாட்களிலும் அவரது அப்பண்பு முழுமையாய் வெளிப்படவில்லை.

பதவி ஏற்பின்போது அவர் பேசிய விதத்திலும், ஊழியர்களோடு சேர்ந்து மேசை தூக்கிய விதத்திலும், நாடகத்தன்மைதான் மேலிட்டுத் தோன்றியது. அன்று கம்பீரமாய் அவர் பேசிய பேச்சில், இயற்கையைவிட செயற்கையே அதிகரித்திருந்தது. அவர் பதவிப்பிரமாணம் செய்தபோது, “பாகுபலியை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழினத் தலைவராய் சட்டசபைக்குள் “கோட்டும் சூட்டுமாய்” அவர் நுழைந்த விதம் ரசிக்கும்படியாய் இல்லை. அத்தனை பேரும் தமிழர் கலாசார உடையில் இருக்க, முதல்வர் மட்டும் மேற்கத்திய உடையில் வந்ததன் காரணம் புரியவில்லை. இவ்வுடை ஒருவேளை இளையோரை ஈர்க்கலாம். ஆனால் அது அவரை ஒரு தமிழ்த் தலைவராய்ப் பாமர மக்களின் நெஞ்சில் பதிய விடாதென்றே தோன்றுகிறது.

அடுத்து, விமர்சனத்துக்குரிய அவரது தோழிக்கு பதவியேற்பு வைபவத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெருமைக்குரிய ஒன்றாய்த் தோன்றவில்லை. இன்னொரு ஜெயலலிதா உருவாக்கப்படுகிறாரோ? என்று எண்ணத் தோன்றியது. அரசியலில் புதிய பாதை அமைக்க நினைக்கும் விஜய், தன் தனி வாழ்க்கையில் பழைய தலைவர்களின் பாதையிலேயே நடக்க நினைப்பது துரதிர்ஷ்டமே!

பதவியேற்றதும், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் ஆசி பெற்ற செயலில் அரசியற்பண்பாடு இருந்ததாய்ப் பலரும் சொல்கிறார்கள். அது உண்மையெனின், அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் சந்தித்திருக்க வேண்டும். அங்ஙனம் சந்திக்காததால், அவரது மற்றைய சந்திப்புகளெல்லாம் தனது பதவி நிலைப்புக்காகச் செய்யப்பட்டவை என்றே கருத வேண்டியிருக்கிறது.

தனது ஆஸ்தான சோதிடரை உதவியாளராய் நியமித்து, பின் மற்றவர்களின் எதிர்ப்பால் அவருக்குக் கொடுத்த பதவியை இரத்துச் செய்த விதம், அவரது எண்ணித் துணியாத இயல்பை வெளிப்படுத்தியது.

சட்டசபையில் விஜய்யை வைத்துக்கொண்டே, அவரையும் அவரது கட்சியின் செயற்பாட்டையும் உதயநிதி வெகு சாவகாசமாக இழித்துரைத்த போது, அதனை உடன் எதிர்கொள்ளாமல் விஜய் தலை கவிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த விதம் எரிச்சலூட்டியது.

அந்த இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. “பூனை மெலிந்தால் எலியும் எட்டி உதைக்குமாம்” என்ற கதைதான். சபையில் பதிலுரைக்காமல், பின்னர் உதயநிதியின் தூற்றுதலுக்கான எதிர்வினையை அவர் ஆற்றியிருக்கும் விதம் மதிப்புக்குரியதாய் இல்லை.

மேலதிக வாக்குகளுக்காக பழைய பகைவர்களிடம் கையேந்தினால், இப்படித்தான் இருக்க வேண்டி வரும். “நக்கினார் நாவிழந்தார்” என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

சிங்கம், முயல், புலி, மான், பாம்பு, கீரி, நாய், பூனை என ஒன்றுக்கொன்று பகையான அனைத்தையும் ஒரு கூட்டிற்குள் அடைத்து, அக்கூட்டின் மேல் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் விஜய். அதனால் தினம் தினம் அவரது சிம்மாசனம் ஆடிக்கொண்டுதான் இருக்கப் போகிறது.

நிர்வாகம் என்பது இலேசான வேலையில்லை. இலட்சியங்களைச் சுலபமாக வாயால் பேசிவிடலாம். அவற்றை நிறைவேற்றுவதில்தான் ஆளுமை தங்கியிருக்கிறது. ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் அவர் இட்டிருக்கும் சில கட்டளைகள் மகிழ்வு தருவதென்னவோ உண்மைதான். ஆனால் அவற்றை அவரால் தொடர்ந்து உறுதியாய்க் கடைப்பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை.

விஜய்க்கு இனி சம்பாதிக்க வேண்டிய தேவையேதுமில்லை என்பது நிஜமே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்களை வைத்துக்கொண்டு, இவரால் தூய அரசியல் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமே! மிளகாய்ப் பொடியைப் போட்டு, பாயாசத்தை இனிக்க வைப்பேன் என்பது போல்தான் இதுவும் இருக்கிறது. “மந்திரத்தால் மாங்காய் விழுத்தத்” தெரிந்தால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

சினிமா கதாநாயகனான விஜய்யை, உண்மைக் கதாநாயகனாய் நினைத்துக் கொண்டுதான் இளைஞர் கூட்டம் அவர் பின்னால் திரண்டிருக்கிறது. மாற்றம் வேண்டியே தமிழ்நாட்டு மக்கள் விஜய்யை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அவர்களைத் திருப்தி செய்ய விஜய் நிறையப் போராட வேண்டியிருக்கப் போகிறது. மேற்சொன்னவற்றை நிதர்சனம் உணர்ந்தே கூறியிருக்கிறேன். இத்தகைய எதிர்ப்புக் கடல்களை விஜய் நீந்திக் கடப்பாரானால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

railway news - 2026
#image_title

பெங்களூரு – தென்காசி

வண்டி எண் 06513 பெங்களூர் கண்டோன்மெண்ட் நிலையத்தில் மே 24 ஞாயிறு 10.20க்குப் புறப்பட்டு, மறுநாள் மே 25 திங்கள் மதியம் 1 மணிக்கு தென்காசி வந்தடையும். இதில், SL, 3A, 2S என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படும். 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்படும்.

இந்த ரயில் ஹோசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படுகிறது.

செங்கோட்டை – பெங்களூரு

பெங்களூரு-செங்கோட்டை – பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

செங்கோட்டை: கோடைக்கால விடுமுறை நெரிசலையும், வார இறுதி நாட்களின் கூடுதல் பயணிகளையும் கருத்தில் கொண்டு, செங்கோட்டையிலிருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் (BNC) நோக்கி மே 25 அன்று ஒரு பிரத்யேக ஒற்றை வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (One-Way Summer Special Express) இயக்கப்படும் என்று தென்மேற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வார இறுதி நாட்களைக் கழித்துவிட்டு எளிதாகப் பெங்களூரு திரும்பும் வகையில் இந்த இரவு நேரச் சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

புறப்படும் மற்றும் வந்தடையும் நேர விவரங்கள்:
செங்கோட்டை – பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06514), 2026 மே 25 (திங்கட்கிழமை) அன்று இரவு 23:00 மணிக்குச் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை, சேலம் மற்றும் ஓசூர் வழியாகப் பயணித்து, மறுநாள் மே 26 (செவ்வாய்க்கிழமை) மதியம் 13:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்தை வந்தடையும்.

முக்கிய வழித்தட நிறுத்தங்கள்:
இந்தச் சிறப்பு ரயில் கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, தர்மபுரி, ஓசூர் மற்றும் கார்மேலாராம் ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

பெட்டிகள் விவரம் (Coach Composition):
இந்த ரயில் மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது:

ஏசி 3-டயர் (AC Three Tier) – 1 பெட்டி

ஸ்லீப்பர் கிளாஸ் (Sleeper Class) – 5 பெட்டிகள்

பொது இரண்டாம் வகுப்பு (General Second Class) – 12 பெட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் (Divyangjan Friendly) – 2 பெட்டிகள்

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

அருணாச்சல பிரதேசத்திற்கு கிடைத்த வரம் ஆர்எஸ்எஸ் என்கிறார் மைசி. இவர் அருணாச்சல பிரதேச வனக்கழகத்தின் தலைவராக இருக்கிறார். பனிப்பொழிவு காணும் இந்த சீன எல்லையோர சிறிய மாநிலத்தில் 26 பழங்குடியினர்கள் உள்ளார்கள் என்கிறார் சேத்ர பிரச்சார் பிரமுக்கான முனைவர் சுனில் மொஹந்தி. 1925 இல் ஆர் எஸ் எஸ் துவக்கப்பட்டாலும் அது அருணாச்சல பிரதேசத்திற்கு அறிமுகமானது 1990 ல் தான்.

சுனில் கிட்காரூ , பிரசாத் பார்வே, வினய் தாரே, ராகேஷ் தேஷ்கர் என்ற சங்க பிரச்சாரகர்கள் வேறு மாநிலங்களில் இருந்து இங்கு சங்க பணியை செய்ய வந்தனர். 1992 இல் லித்தோம் நோசி , பிடி தயோம் என்ற இருவர் தலைமையில் இரண்டு குழுக்கள் அயோத்தியில் நடந்த கர சேவைக்கு சென்றனர்.

அருணாச்சல பிரதேசம் மட்டுமல்ல மிஜோராம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் கிறிஸ்துவ பெரும்பான்மை கொண்ட மாநிலங்களாக மாறிவிட்டன. தங்கள் தொன்மையான அடையாளத்தை இழந்து விட்டன. தேச ஒற்றுமை, சமூக ஒற்றுமை, தேச பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மீட்கும் பணியில் அக்கறை கொண்டு செயல்படும் ஆர்எஸ்எஸ் ஸுக்கு இந்த மாநில மக்களின் பண்பாட்டை மீட்கும் பணி முக்கியமானதாக பட்டது.

இப்பழங்குடியினரின் பாரம்பரிய தெய்வமான ரங்பரா என்ற தெய்வ உருவமே மக்கள் மத்தியில் இருந்து மறைந்து விட்டது. காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள். ராஜேஷ் தேஷ்கர் நல்ல ஓவியர் . அவர் பழங்குடியின மக்களில் மூத்தவர்களிடம் அத்தெய்வத்தின் உருவத்தைப் பற்றி கேட்டறிந்தார். பல்வேறு பழங்குடியினர் கூறிய விபரங்களை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப அந்த தெய்வ உருவை படமாக வரைந்தார். பல்வேறு பழங்குடியினரும் அதை பார்த்து ஏற்றுக் கொண்டனர்.

பிறகு அந்த தெய்வ உரு ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூருக்கு வந்தது. அங்கு சிலா விக்கிரகமாக வடிக்கப்பட்டது. முதல் விக்ரகம் அருணாச்சல பிரதேசத்திற்கு வந்தபோது பலர் அதை கண்டவுடன் முகத்தை கையால் மூடிக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டனர். பலர் அதை வியப்புடன் பார்த்தனர். பழங்குடி தலைவர்கள் ஒன்று கூடி அதை பார்த்து, நாங்கள் கிறிஸ்துவர்களாவதற்கு முன்னால் இதுவே எங்கள் தெய்வம் , என்று ஏற்று கொண்டாடினர். இன்று நூற்றுக்கும் அதிகமான ரங்பரா கோயில்கள் உருவாகி வழிபாடு நடத்துகின்றனர் அம்மக்கள்.

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

ஆர் எஸ் எஸ் ஸின் கிளை 1990 ல் அங்கு துவங்கினாலும் அதற்கும் முன்னதாக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தில் 1977 முதல் கல்விப் பணியும் மருத்துவ சேவைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன.

இன்று நம் மாநிலத்தில் 44 பள்ளிக்கூடங்கள், ஒரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறது விவேகானந்தா கேந்திரா. சுமார் 15,000 மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர். அதில் சுமார் 4000 பேர்கள் கேந்திரா நடத்தும் மாணவர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

ஆர் எஸ் எஸ் கருத்தியலின் அடிப்படையில் உருவான அமைப்பு அருணாச்சல் விகாஷ் பரிஷத் . அது 2000 கிராமங்களில் கிளைகளை கொண்டுள்ளது. 29 பள்ளிக்கூடங்களையும் பால்வாடிகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய மாணவர் விடுதிகளில் சுமார் 5000 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இது தவிர மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள், விடுமுறை கால தொழில் பயிற்சிகளை அந்த அமைப்பு நடத்தி வருகிறது.

‘ ஒரே பாரதம் உன்னத பாரதம் ‘ என்ற கோஷத்தை பிரதமர் மோடி எழுப்புவதற்கு முன்பாகவே ஆர்எஸ்எஸ் அந்த திசையில் பயணித்திருந்தது.

மலைகள், மழை, பனி, காடுகளை மட்டுமே பார்த்த இம்மாநிலத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் முதல் முதலாக ரயில் ஏறி, நீண்ட தூரம் பயணித்து மும்பாய் சென்று ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தனர் . அது அம்மாணவர்கள் , ஆசிரியர்கள் உள்ளங்களில் மட்டுமல்ல அவர்கள் கிராமத்திலும் பரந்து விரிந்த இந்தியா பற்றி உயர்ந்த உணர்வை ஏற்படுத்தியது.

அதுபோல நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்களையும் காரிய கர்த்தர்களையும் தேச எல்லையை தரிசித்தல் என்ற நிகழ்ச்சி மூலம் காஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வர ஆர் எஸ் எஸ் ஊக்கமளித்தது.

தேச ஒருமைப்பாட்டை பற்றி உதட்டளவில் பேசிக்கொண்டே தேச விரோதமாக செயல்படும் சக்திகளுக்கு இடையே அவப்பெயரைத் தாங்கிக் கொண்டு தேச ஒற்றுமைக்காக பாடுபடும் ஆர் எஸ் எஸ் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வரப்பிரசாதம் தான்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

வங்கதேச முஸ்லிம்களின் சட்ட விரோத ஊடுருவல், குடியேற்றத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணியில் இருப்பது அஸ்ஸாம். கடந்த நூற்றாண்டில் அந்த மாநில மக்கள் தொகையில் 12. 4 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1951 கணக்கெடுப்பின்போது 24.7 சதவீதமாகவும் 2011 ல் 34.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இப்போது அது 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து இருக்குமென நம்பப்படுகிறது. பார்பேடா, பாங்காய் காவான், தாராங், துப்ரி, கோல்பாரா, ஹைலகந்தி, கரீம்கஞ்ஜ் ,மோரிகாவான், நாகான் , ஓஜாய் , தெற்கு சால்மாரா போன்ற மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் இயல்பானதாகவோ உள்ளூர் சார்ந்ததாகவோ ஏற்பட்டது அல்ல. வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியர்களால் நிகழ்ந்தது. பிரம்மபுத்ரா நதியோர தீவுகளில் முதலில் ஆரம்பித்தது. எல்லையோர மாவட்டமான துப்ரியில் தொடங்கி தாராங் வரையிலும் அதற்கு அப்பாலும் பரவியது. படகுமூலம் நதி வழியாக ஆயிரக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி மாநிலத்தின் நகரங்கள், கிராமங்கள் போடோலாந்து , தைவா, கைசிங் போன்ற பழங்குடியினர் பகுதிகளுக்குள்ளும், கார்பி – ஆங்லாங் , வடக்கு கச்சார் மலைப்பகுதிகளிலும் குடியேறி உள்ளனர்.

காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியல் , ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையில் உள்ள ஊழல், பொதுமக்களின் அலட்சியம் ஆகியவை இந்த கலாச்சார, பொருளாதார, சமூக, புவியியல் ஆக்கிரமிப்புக்கு காரணங்களாகும்.

அஸ்ஸாமில் கடைசியாக நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கணிசமான அளவு உள்ளூர் காரர்கள் வெளியேற்றப்பட்டு சந்தேகத்துக்குரிய குடியுரிமை கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் சேர்க்க பட்டனர். இதனால் அஸ்ஸாமின் அரசியல் களமே மாறியது. மாணவர்கள் போராட்டம் வெடித்தது. 1970 – 80 களில் நடந்த அந்த போராட்டத்தின் மையமாக இருந்தவை மூன்று விஷயங்கள். அன்னியர்களை அடையாளம் காண் , அவர்களை தனிமை படுத்து, வெளியேற்று என்பதே அந்த மூன்று. சுமார் ஆறாண்டு காலம் அஸ்ஸாம் மாநிலம் கொதித்துக் கொண்டு இருந்தது. 1985 இல் அஸ்ஸாம் ஒப்பந்தம் – ராஜீவ் காந்தியின் நடுவண் அரசுக்கும் அஸ்ஸாம் மாணவர் அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் – ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் அஸ்ஸாம் மக்களின் கலாச்சாரம் , பொருளாதார, அரசியல் உரிமைகளை பாதுகாப்பதாக உறுதி கூறியது.

காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்ட விரோதமாக ஊடுருவல் செய்தவர்களை அடையாளம் காணும் தீர்ப்பாய சட்டம் (ஐ.எம்.டி.டி ) மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அது ஊடுருவல் காரர்களை அடையாளம் காணவே முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஏனெனில் புகார் அளிப்பவர்தான் சம்பந்தப்பட்டவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதை நிரூபிக்க வேண்டும். 2006 டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, ராஜீவ் காந்தி போட்ட சட்டம் மிக மோசமானது. எந்த அதிகாரமும் இல்லாதது. அது மட்டுமின்றி ஊடுருவல் காரர்களை அடையாளப்படுத்துவதற்கு பதிலாக அதற்கு தடையாக இருக்கிறது, என்று சாடியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஐ எம் டி டி நீக்கப்பட்டதும் பதுருதீன் அஜ்மல் அஸ்ஸாம் அரசியலில் புகுந்ததும் எதோச்சையாக நடந்த விஷயம் அல்ல . அஸ்ஸாமிய இந்துக்களும் முஸ்லிம்களும் எதை வெறுத்தார்களோ அதன் அடையாளமாக அஜ்மல் விளங்கினார். வாசனை திரவிய வியாபாரியான அவர் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களின் குரலாக ஓங்கி ஒலித்தார். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இப்போது அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

அஸ்ஸாமில் அஹோம் லச்சித் போர்புக்கான் என்றவொரு அரசர் இருந்தார். பிரம்மபுத்திரா நதியில் படகுகளைக் கொண்ட படையை ஏற்படுத்தி முகலாயர்களை வென்றார். அஸ்ஸாம் மக்களின் மனம் கவர்ந்த அந்த தேசபக்த அரசரின் பதாகையை முன்னிருத்தி ஆர்எஸ்எஸ் அஸ்ஸாம் மக்களிடையே தேசபக்தி கனலை எழுப்பியது. விளைவாக காங்கிரஸ் முதல்வர் கோயிலுக்கு சென்று பூஜை செய்வது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. சர்பானந்த சோனோவால், ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா போன்ற இளம் தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்து பின்னாளில் முதல்வராக ஆகினர்.

சோனோவால் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். 2016 இல் பாஜக.,வின் முதல்வரானார் . அதனால் பல பழங்குடியினர் தேசிய சிந்தனை கொண்டவர்களாக மாறினார். பழங்குடியினரின் நிலங்களும் வங்கதேச முஸ்லிம்களால் அபகரிக்கப்படுவதால் அவர்கள் மற்ற அஸ்ஸாமிய இந்து, முஸ்லிம்களுடன் இணைந்து போராட தொடங்கினர். ஆனால் அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக இருந்தன. 2020 வரையிலும் ஊடுருவல் செய்த அந்நியர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 1.43 லட்சம் பேர்களில் வெறும் 329 பேர்கள் தான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

2021 ல் அஸ்ஸாம் மாநில அரசு புதியதொரு குழுவை அமைத்தது. அஸ்ஸாம் ஒப்பந்தம் நடந்த பிறகு 36 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட நான்காவது குழு இது. இந்த குழுவின் பரிந்துரைகள் பலவும் சிறப்பாக இருந்தன. அஸ்ஸாமின் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் 80 லிருந்து 100 சதவீதம் ‘அஸ்ஸாமியர்கள் மட்டுமே’ வேட்பாளராக முடியும். மத்திய ,மாநில அரசு வேலைகள் அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நில உரிமை அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே. பெருவாரியான மக்கள் பேசும் மாநில மொழியான அஸ்ஸாமி மாநில அரசின் மொழியாகும். இதெல்லாம் அந்த குழுவின் பரிந்துரைகள். இவை மெதுவாக நடைமுறைக்கு வர தொடங்கின. இதனிடையே நில உரிமை தகராறுகள் / மோதல்கள் மாநிலம் முழுவதும் வேகமாக ஏற்பட்டு வருகின்றன.

15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ மகான் ஸ்ரீ சங்கர தேவ். அஸ்ஸாமிய மக்களின் தந்தையாக கருதப்படும் அவர் சமுதாய , சமய தலைவர். நாகாவூனில் அவரது அவதார ஸ்தலம் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது. சர்பானந்த சோனோவால் முதல்வராக இருந்தபோது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.

அவருக்கு பிறகு 2021 ல் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா முதல்வரானார். பதவிக்கு வந்தவுடன் தாராங்கில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலை சுற்றி இருந்த வங்கதேச முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். நதியோரம் உள்ள அந்த பகுதி முழுக்கவும் வங்கதேச ஊடுருவல்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அதன் பிறகு காருகுந்தி பகுதி. அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றும் போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேஜர் அவினாஷ் உபாத்தியாயா என்ற இந்திய ராணுவ அதிகாரி கூறுகிறார் : பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் வரும்போதெல்லாம் அத்துடன் சேர்ந்து வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் ஊடுருவல் நடக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து விடுவதால் எல்லை காவல் படையினரால் அதை கண்காணிக்கவோ கட்டுப்படுத்துவோ முடிவதில்லை. ஊடுருவல் காரர்கள் நதியோர வளமையான இடங்களில் மக்காச்சோளம் விளைவிக்கிறார்கள். அந்த தட்டைகளையே அடுப்பெரிக்க பயன்படுத்துகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் வந்த அமர்ந்தால் பிறரை எதிர்பார்க்காமல் தங்களுக்குள் தற்சார்பு வாழ்க்கையை பின்பற்றுகிறார்கள்.

மங்கால்டோய் என்ற பகுதியில் 85 சதுர கிலோமீட்டர் அளவுக்கு வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள். உள்ளூர்வாசிகளுக்கு தங்கள் நிலத்தின் மதிப்பை பற்றியும் அது தங்கள் வசமே வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. உபாத்யாயா உள்ளூர் விவசாயிகளுக்கு போர் தொழில் பழக்கினார். விவசாயிகள் அரசின் உதவியுடன் விவசாய திட்டங்களை அமல்படுத்தவும் அதே வேளையில் தங்கள் நிலத்தை பாதுகாக்க போராடவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 1980 களில் அஸ்ஸாம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பத்மா ஹசாரிகா இதை முயற்சி செய்தார்.

எங்கள் நிலப்பரப்பு வளமானது. வெள்ளம் வடிந்ததும் விவசாயத்திற்கு தயாராகிவிடும். உரமே தேவையில்லை. ஆனால் இப்போது எங்கள் நிலங்களை மியாக்கள் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) ஆக்கிரமித்து விட்டார்கள், என்கிறார் இஸ்லாம்.அஸ்ஸாமிய முஸ்லீம்களுக்கும் பிரச்சனை உருவாகி வருகிறது. இதை கல்லூரி மாணவரான ஹபீசூர் சரியாக சொல்லுகிறார். நாங்கள் அவர்களுடன் தான் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) வளர்ந்தோம். ஆனால் எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும். எங்கள் மொழி, எங்கள் அடையாளம், எங்கள் பழக்க வழக்கங்களை நாங்கள் பின்பற்றினால் அவர்கள் எங்களை இஸ்லாத்திற்கு முரணானவர்களாக சித்தரிக்கிறார்கள். ஊடகங்களை எங்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள், என்கிறார் ஹபீசூர்.

மியாக்கள் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பண பலமும் ஆதிக்க சக்திகளின் ஆதரவும் உள்ளது என்று கூறும் ஹபீசூர் , எங்கள் முன்னோர்கள் இந்த பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். இந்த நிலங்களை தங்கள் பெயருக்கு ஆவணப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்து கூட பார்த்ததில்லை. அவர்களது அறியாமைக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது, என்று புலம்புகிறார்.

நாகாவூர் பகுதியில் பல வைணவ மடங்கள் இருந்தன. அவற்றையும் அதன் சொத்துக்களையும் வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ளனர். ஊடுருவல் காரர்கள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமல்ல, சட்டபூர்வமாகவே நிலங்களை பதிவு செய்கிறார்கள். போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினரும் உடந்தை. லஞ்சம், ஊழல் வெளிப்படையாக நடக்கிறது.

இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு பரவலாக நடைமுறையில் உள்ளது. அஸ்ஸாமிய முஸ்லிம்கள் அரசு ஒப்பந்த பணிகளை எடுப்பார்கள். அதை வங்கதேச முஸ்லிம்களுக்கு துணை ஒப்பந்தம் மூலம் கொடுத்து விடுவார்கள் . அஸ்ஸாம் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் ஊடுருவல்காரர்களால் பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பிரம்மபுத்திராவின் கிளை நதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால் படகு மூலம் நடக்கும் ஊடுருவலை தடுக்க முடியும். தடுப்பணை பகுதிகளில் மீன் வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க வேண்டும். பன்றி பண்ணைகளை வைத்து, பன்றி எச்சங்களை மீனுக்கு உணவாக பயன்படுத்தி லாபம் அடையலாம். இதனால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பொருளாதாரமும் மேம்படும், என்கிறார் உபாத்தியாயா. அந்த பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தலாம் என்ற ஆலோசனையையும் அவர் முன்வைக்கிறார்.

1946 அக்டோபர் 27 தேதி அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியில் முதல் ஆர் எஸ் எஸ் ஷாகா துவங்கப்பட்டது. 1975 க்குள் அஸ்ஸாமில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ஷாகா செயல்பட ஆரம்பித்துவிட்டது. பிரிவினைவாத அமைப்பான உல்பாவுக்கு தேச ஒற்றுமை பணி செய்யும் ஆர் எஸ் எஸ் ஸின் வளர்ச்சி சவாலாக இருந்தது ஆச்சரியமல்ல.

உல்பா பிரிவினைவாதிகள் முரளி மனோகர், ஓம் பிரகாஷ் சதுர்வேதி, பிரமோத் நாராயணன் போன்ற சங்க பிரச்சாரகர்களை கொன்றுள்ளனர். அவர்கள் அஸ்ஸாமிய பிரச்சாரகர்களையும் விட்டு வைக்கவில்லை. மதுமங்கள் சர்மா போன்ற அஸ்ஸாமிய பிரச்சாரகர்களையும் கொன்றுள்ளனர். இதையெல்லாம் 1961 இல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பிரசாரக்காக வந்த சசிகாந்த் சௌதாய்வாலி என்ற மூத்த முழு நேர ஊழியர் ‘பிரச்சாரக்காக எனது பயணம்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர். இது தவிர 540 ஓராசிரியர் பள்ளிகளை வித்யா பாரதி நடத்துகிறது. சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், விஎச்பி போன்ற அமைப்புகள் இந்த மாநிலத்தில் பல தசாப்தங்களாக பணியாற்றி வருகின்றன.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

நாகா மலைப்பகுதிக்கு 1832 ல் பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். முதல் உலகப் போரின் போது 3000 நாகர்களைக் கொண்ட நாகா உழைப்பாளர்கள் படையை உருவாக்கினார்கள். பதுங்கு குழிகள் வெட்டவும், பொருட்களை சுமந்து செல்லவும் அந்த படையை அவர்கள் பயன்படுத்தினர். போர் முடிந்து இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் அந்த படையினரில் பலர் ஒன்று சேர்ந்து நாம் தனித்தனி பழங்குடியினர் அல்ல நாகர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு 1918 கொஹிமாவில் நாகர் மனமகிழ் மன்றம் என்பதை ஏற்படுத்தினர். அந்த அமைப்பின் மூலம் பிரிட்டிஷார் வெளியேற வேண்டும் என பிரச்சாரம் செய்தனர்.

17 நாகர் இனக்குழுக்களும் 20 க்கும் மேற்பட்ட கிளை இனக்குழுக்களும் சேர்ந்து 1947 ல் நாகா தேசிய கவுன்சிலை ஏற்படுத்தினர். 1947 ஆகஸ்ட் 14 நாகாலாந்து சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தனர். 1954 இல் இந்திய ராணுவம் நாகா மலைப்பகுதிக்கு சென்றது. அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்து 1963 இல் தனி மாநிலமாக ஆனது. நாகாலாந்து பிரச்சனை பழங்குடி அடையாளம், அந்நிய நாட்டு சக்திகளால் தூண்டப்படும் பிரிவினைவாதம், இந்திய அரசு அந்த மாநிலத்தின் மீது காட்டிய அலட்சியம் என பல பிரச்சனைகளின் மொத்த உருவமாக வடிவெடுத்தது . பிரிவினைவாதிகள் தனி அரசமைப்பு, தனி கொடி வேண்டுமென கோரினர்.

நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து (ஐசக் – மூவா ) என்ற அமைப்பு பிரிவினைவாதத்தை தீவிரமாக முன்னெடுத்தது. அதற்கு இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் இருந்து உதவிகள் கிடைத்தது. ஆயுதங்கள், வெடி பொருட்கள், ஆயுதப் பயிற்சி, பாதுகாப்பாக பதுங்கிக் கொள்ள இடங்கள், அதற்கான வாகன வசதிகள், பணம் ஆகியவை கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மூலம் வழங்கப்பட்டன. 1971 வரை அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதம், பணம், உளவு தகவல்களை சொல்லி வந்தது. பிறகு 1990 வரையில் சீனா அவர்களுக்கு பின்புலமாக இருந்தது. அதன்பிறகு பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ. மியான்மரில் இருந்து செயல்பட்ட அந்த பிரிவினைவாத குழுவுக்கு போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் தரப்பட்டது என்று தெற்காசிய பயங்கரவாத கண்காணிப்பு வலைதளம் குறிப்பிடுகிறது.

நான் பாஜக.,வில் சேர்ந்ததற்கு காரணம் வாஜ்பாய்தான், என்கிறார் ஜேம்ஸ் வைசோ. அவர் 2000 ஆண்டு பாஜக., இளைஞர் அணியில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக மாவட்ட தலைவர், மாநில இளைஞரணி தலைவர், மாநில செய்தி தொடர்பாளர் என்று வளர்ந்து இப்போது பாஜக.,வின் தேசிய செயலாளர் ஒருவராக உள்ளார். அவருடைய வளர்ச்சியும் நாகாலாந்தில் பாஜக.,வின் வளர்ச்சியும் இணையானதாக சொல்லலாம் . இருபது முப்பது உறுப்பினர்களை கொண்டதாக இருந்த கட்சி இப்போது முன்னூறு முழு நேர ஊழியர்களை கொண்டதாக வளர்ந்துள்ளது.

அந்த வளர்ச்சி சாதாரணமாக வந்து விடவில்லை. கடினமான உழைப்பினால் வந்தது . பாஜக., சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். அதை வலுவான ஆயுதமாக பயன்படுத்தினார்கள். காரியகர்த்தர்களான எங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். முன்பெல்லாம் எங்களை அருவருப்போடு பார்ப்பார்கள் . நாங்கள் கிறிஸ்துவத்தில் உறுதியாக இல்லாமல் பாஜக.,வுக்காக சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டுவார்கள். சர்ச்சுகள் மூலம் பாஜக.,வில் சேர வேண்டாம், பணிபுரிய வேண்டாம் என்று வற்புறுத்தல்கள் வந்தன. 2018 ல் எனது நண்பர் பாஜக., சார்பில் தேர்தலில் போட்டியிட்டார் . எதிர் கட்சியினர் சர்ச் சுவற்றில் ஹிந்து தெய்வ படங்களை ஒட்டி விட்டு பழியை எங்கள் மீது போட்டனர், என்று கடந்து வந்த கடினமான பாதையை விளக்குகிறார் ஜேம்ஸ் வைஸோ.

மன்மோகன் சிங் ஒரு முறை கூட நாகாலாந்து வந்ததில்லை. ஆனால் வாஜ்பாய் வந்திருக்கிறார். மாநிலத்தின் சிதலமான சாலைகளின் பயணத்திருக்கிறார். அவரது ஆட்சியில்தான் கொஹிமாவிலிருந்து திம்மப்பூர் வரை நான்கு வழி சாலை போடப்பட்டது. அதனால் மூன்று மணி நேரம் பயணம் வெறும் ஒன்றரை மணி நேரமாக குறைந்துவிட்டது. 2014 ல் மோடி பிரதமரான பிறகு ஆறே மாதத்தில் நாகாலாந்து வந்தார் . சர்வதேச புகழ்பெற்ற ஹார்ன்பில் விழாவை தொடங்கி வைத்தார். அவர் பிரதமரான பிறகு மாற்றமும் வளர்ச்சியும் வேகமெடுத்தது . மக்களுக்கு அரிசி, சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு போன்றவை மத்திய அரசின் திட்டங்களாக கிடைத்தன. குறிப்பாக சாலை பணிகள் விரிவாகவும் வேகமாகவும் நடந்தன, என்கிறார் ஜேம்ஸ் வைஸோ.

நாகாலாந்து மக்களிடையே ஆர்எஸ்எஸ் ராணி கைடென்லியூவை முன்னிருத்தியது . அவர் நாகா மக்களின் ஆன்மீக, அரசியல் தலைவராக இருந்தவர். பிரிட்டிஷ்ஷாரை எதிர்த்து போராடியவர். அதனால் 16 வயதிலேயே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஆங்கிலேய அரசு. 1947 இல் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். நேரு அவருக்கு ‘ராணி’ என்ற பட்டத்தை கொடுத்தார். பின்னர் அவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராக அவர் ஹிராகா இயக்கம் என்ற பெயரில் பாரம்பரிய சமயத்தை மீட்டெடுத்தார். அவரது மறைவுக்கு பிறகு வலுவிழந்த அந்த சமய இயக்கத்திற்கு ஆர் எஸ் எஸ் புத்துயிர் ஊட்டியது. கிறிஸ்தவராக மதம் மாறி போயிருந்தவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பினர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அஜெய்லியூ நைமை என்பவர் சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘ ராணி கைடின்லியூ : வடகிழக்கு இந்தியாவின் கதாநாயகி . அந்த ஆய்வேட்டில், அவர் ஹிராகா சமயத்தை கச்சிதமாக அரசியலுடன் இணைத்து பிரிட்டிஷாருக்கு எதிர்ப்பை கூர்மைப்படுத்தினார். கண்ணுக்கு தெரியாதபடியே விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த பெண்களை சமூக – அரசியல் தலைவர்களாக்கினார் . பழங்குடியினரை, குறிப்பாக அவர் சார்ந்த நாகா பழங்குடியினரை, மைய இந்திய நீரோட்டத்தில் இணைக்க முடியும் என்பதற்கு அவரே சிறந்த சான்று. நாகா சமய இயக்கத்தையும் இந்திய தேசிய இயக்கத்தையும் பின்னி பிணைந்து அவர் வளர்த்தார், என்று குறிப்பிடுகிறது.

ஊடுருவல் பிரச்சனை இன்னமும் அங்கு உள்ளது. 2021 ல் இந்திய ராணுவம், தவறுதலாக, நிற்காமல் சென்ற வாகனத்தை சுட்டனர். அதில் ஆறு பேர்கள் உயிரிழந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் கிராம மக்கள் பதில் தாக்குதல் நடத்த, அதில் ஒரு ராணுவ வீரரும் ஏழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது தேசிய சக்திகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஜேம்ஸ் வைகோ சொல்கிறார் , முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

மேகாலயாவில் 1946 இல் ஆர் எஸ் எஸ் ஷாகா ஆரம்பிக்கப்பட்டது . அப்போது அது அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 1972 ஜனவரியில் தனி மாநிலமாக ஆனது. மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் முதல் ஷாகாவை ஆரம்பித்தவர் வசந்த் ராவ் ஓக். இவர் ஆர் எஸ் எஸ் ஸின் ஆரம்பகால முழு நேர ஊழியர்களின் ஒருவர். இவரும் தாதாராவ் பரமார்த், கிருஷ்ண பரஞ்சாபே ஆகிய மூத்த தலைவர்களும் இணைந்து வடகிழக்கு இந்தியாவில் கௌஹாத்தி, திப்ரூகார் , ஷில்லாங்கில் ஆர் எஸ் எஸ் கிளையை தொடங்கினார்கள். ஓக் தில்லியில் ஆர் எஸ் எஸ் ஸை வலுவாக இடம் பெற செய்தவர். அதனாலேயே அவரது நண்பர்களால் ‘தில்லீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்எஸ்எஸ் செயல்வீரர்கள் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். மேகாலயா, நாகாலாந்து போன்ற கிறிஸ்துவ பெரும்பான்மை கொண்ட மாநிலங்களில் உள்ளூர் அளவில் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் கருத்தியல் உறுதி கொண்ட தலைவர்களையும் உருவாக்குவதே அவர்களின் நோக்கம். மத மோதலில் ஈடுபடாமல் சரியான கலாச்சார பண்புகளை வளர்ப்பது என்பதே அவர்களது செயல் திட்டம். வடகிழக்கு பகுதியை மைய இந்தியாவுடன் ஒருங்கிணைப்பது மழைக்காலத்தில் ஈர ஆடைகளை காய வைப்பது போன்ற கடினமான பணி என்பது அவர்களுக்கு தெரியும்.

வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களின் உடல் அமைப்பு சீனர்களை போன்ற மங்கோலாயிடு அமைப்பைக் கொண்டது. மைய இந்திய பகுதியினரின் தோற்றத்திலிருந்து மாறுபட்டது. ஏழு வட கிழக்கு மாநிலங்களும் பல தசாப்தங்களாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தன. அந்த பகுதியில் 200 பழங்குடி வகுப்பினரும் 200 மொழிகளும் உள்ளன. இது தவிர 1000 க்கும் மேற்பட்ட பேச்சு மொழி இருக்கின்றன என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

மேகாலயாவில் உள்ள காசி, ஜெயின்தியா மலைப்பகுதியில் முழு நேர ஊழியராக பணி புரிகிறார் பிரதாப் சாம்பிரி. ஷில்லாங்கில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பெண்களுக்கு நகரம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. நெற்றியில் சிகப்பு திலகம் இடுவதே தொலைக்காட்சி தொடர்களை பார்த்து தெரிந்து கொண்டார்கள். யாருக்கும் இந்தி தெரியாது. இப்போது தொலைக்காட்சி, அலைபேசி, இன்டர்நெட் வந்த பிறகு சில பிள்ளைகள் இந்தி பேச தொடங்கியுள்ளார்கள், என்று கூறுகிறார் அவர்.

மேகாலயாவில் உள்ள காசி இன மக்கள் தங்களை மகாபாரதத்தில் வரும் துரோணரின் சீடரான ஏகலைவனின் வாரிசுகள் என்று நம்புகின்றனர். அஸ்ஸாமில் உள்ள போடோ பழங்குடியினர் பிரம்ம தேவரின் வழிவந்தவர்கள் என்றும் அதே அஸ்ஸாமில் உள்ள கார்பீஸ் பழங்குடியினர் தங்களை இராமாயணத்தில் வரும் சுக்ரீவ மகாராஜாவின் வாரிசுகள் என்றும் கூறிக் கொள்ளுகின்றனர். நாகாலாந்தின் தலைநகரான திம்மபூரின் பழைய பெயர் இடும்பப்பூர் என்றும் அது மகாபாரதத்தில் பீமனின் மனைவியான இடும்பியின் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. திம்மப்பூரில் உள்ள ஒரு காட்டில் பெரிய பெரிய உடைந்த சதுரங்க ஆட்ட காய்களை பார்க்க முடிகிறது. அந்த வனப் பூங்காவில் பீமன் தன் மகன் கடோத்கஜனுடன் சதுரங்கம் ஆடியதாக அந்த மக்கள் நம்புகின்றனர். அருணாச்சலத்தில் உள்ள ஐடூ மிஸ்மி பழங்குடியினர் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியான ருக்மணியின் வழிவந்தவர்கள் என்கிறார்கள். ருக்மணியின் காதலை எதிர்த்த அவளது அண்ணன் ருக்மியை ஸ்ரீ கிருஷ்ணர் கொல்லாமல் தலையை மொட்டை அடித்து விட்டதன் நினைவாக அவ்வின மக்கள் இன்றும் தங்கள் தலையில் வட்டமாக ஸ்ரீ கிருஷ்ணரின் சக்கராயுதம் போல் இருக்கும்படி சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர்.

1992 ல் ஜனாதிபதி தேர்தலில் பாஜக.,வினரால் முன்னிறுத்தப்பட்ட ஜி ஜி ஸ்வெல் என்ற மேகாலயாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸின் சங்கர் தயாள் சர்மாவிடம் தோற்றுப் போனார். அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் அவர் பாஜக.,வின் பசுவதை தடையை எதிர்த்து பேசினார். அப்போது, நாங்கள் (மேகாலயாவை சேர்ந்தவர்கள்/ வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்) மாட்டிறைச்சியை முக்கிய உணவாகக் கொள்கிறோம். நீங்கள் அதை தடை செய்ய நினைக்கிறீர்கள், என்று குற்றம் சாட்டினார். அது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

சங்கத்திற்கு இது ஒரு முக்கியமான பிரச்சனை. நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது இங்குள்ள நிலை. உள்ளூர் உணவு பழக்க வழக்கங்களை சங்கம் ஏற்க மறுப்பதில்லை. ஆற்று நீர் எப்படி கற்களையும் பாறைகளையும் தழுவி பயணிக்கிறதோ அது போன்ற சமரசப்போக்கு சங்கத்திற்கு உள்ளது. இங்கு ஷாகாவுக்கு வருகின்றவர்கள் அநேகர் மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்கள். நம்மூரில் காபி, டீ போல அங்கு வீட்டிலேயே ஒரு வகை மது தயாரித்து கொடுப்பார்கள் . முழு நேர ஊழியர்கள் அதை மறுக்க முடியாது. பல வீடுகளின் முன் வாசலில் மாட்டு தோல் காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே போனால் டாக்டர் ஜி, குருஜி படம் மாட்டியிருக்கும் . ஸ்ரீ குருஜி கோல்வல்கர், நாம் உடையால், உணவால் , பழக்க வழக்கத்தால் வேறுபட்டிருந்தாலும் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள், என்று சொல்லியுள்ளார்.

இங்கு பெண்களுக்கு தான் சொத்துரிமை உள்ளது. எண்பது சதவீதம் சொத்துக்கள் பெண்கள் பெயரில் இருக்கிறது. குடும்ப சொத்து வீட்டின் கடைசி பெண்ணுக்கு தான் சேரும். அவள்தான் பெற்றோர்களை பார்த்துக் கொள்ள கடமைப்பட்டவள் . குடும்ப பிணைப்பு மிகவும் உறுதியாக உள்ளது இங்கு. எந்த வகையிலும் குடும்ப கட்டுப்பாடு இங்கு பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகள் இறைவனின் வரம் என்று இம்மக்கள் நம்புகிறார்கள்.

ஆரம்பத்தில் ஷில்லாங்கில் தொடங்கிய ஆர் எஸ் எஸ் கிளை இன்று மேகாலயா மாநிலத்தில் எல்லா பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவா பாரதி, வனவாசி கல்யாண், வி எச் பி, ஏ பி வி பி , பூர்வ சைனிக் பரிஷத் போன்ற ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் மூலம் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பல்வேறு சேவை திட்டங்கள் மாநிலம் முழுக்கவும் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவ மதத் தலைவர்கள் சங்கத்துடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்டாலும் அவர்களது சேவை திட்டங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அண்மையில் சங்க நிகழ்ச்சி ஒன்றை உள்ளூர் பாதிரியார் காவி கொடியேற்றி தொடங்கி வைத்தார். ‘ உள்ளூர் கிறிஸ்தவ தலைவர்கள் நம்முடைய நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பல நிகழ்ச்சிகளில் காவி கொடியேற்றி துவங்கி வைப்பதே அவர்கள்தான். இது அவர்களுக்கும் நமக்குமிடையே கருத்து பரிமாற்றத்துக்கு வழிவகுக்கிறது’ , என்கிறார் பிரதாம் சாம்பிரி.

மேகாலயாவில் எழுந்த மிகப்பெரிய சவால் அங்கு கொண்டாட கூடிய தேசிய தலைவர்கள் யாரும் இல்லாததுதான். அந்த பழங்குடியின அரசர்கள், தலைவர்கள் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி உள்ளார்கள். அவர்களது வீரமும் தேசபக்தியும் அம்மக்களிடையே வாய்மொழி வரலாறாகவே நீடித்தது. ஆவணப்படுத்தப்படவில்லை. இது ஆதிக்க சக்திகளுக்கும் மதமாற்ற சக்திகளுக்கும் எளிதாக ஆயிற்று. அவர்கள் அந்த வரலாற்றை சுலபமாக அழித்துவிட்டார்கள். அதன் மூலமாக அம்மக்களின் அடையாளமும் பெருமையும் துடைத்தெறியப்பட்டது.

ஹிந்துத்துவ அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு பெரும் வீரர்கள் மூன்று பேர்களின் வரலாற்றை ஜனசமூகத்திலிருந்து அகழ்ந்தெடுத்தனர் . யூ கியாங் நாங்பா , யூ தைரோட் சின் சையீம் என்ற காசி இன தலைவர்கள் இருவர். மற்றொருவர் பா தோகன் சங்மா என்ற காரோ’ இனத்தலைவர் . இம்மூவரின் வாழ்க்கையை, விடுதலைப் போராட்டத்தை ஆவணப்படுத்தினார்கள். அது அம்மக்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் அந்த தலைவர்களின் தியாகத்தை புரிந்து கொண்டு போற்றத் தொடங்கினர். சங்கப் பணியிலும் பல தியாகிகள் உருவாகினர்.

காசி இன மக்களிடையே கலாச்சார மறுமலர்ச்சிக்காக துவங்கப்பட்டது செங்காசி என்று அமைப்பு. அது அம்மக்களின் மரபை , பாரம்பரிய சமயத்தை மீட்டெடுக்க துவக்கப்பட்டது. அந்த பெயரில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் காசி, ஜெயின்தியா மலை பகுதி மக்களை மதமாற்றம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராகவும் ஒரு இயக்கம் முன்பு நடந்தது. அது இப்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது . ரைஜோய் சின் கோங்சா என்ற ஆர்எஸ்எஸ்காரர் அதை உயிர்ப்பித்து துடிப்புடன் நடத்தினார் . உள்ளூர் மக்களிடையே பிரபலமானார். பிரிவினைவாதிகளிடமிருத்து அச்சுறுத்தல் வந்தது. 2001 மார்ச் மாதம் அவரை கடத்திச் சென்று கொன்று விட்டார்கள் . கண்டன ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. கடைசி வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரது கொலை பலரை ஆர் எஸ் எஸ் பக்கம் இழுத்து வந்தது. அப்படி வந்தவர்தான் பாவ்னாம் சிசா கோங்சோய். நான் மூன்றாவது படிக்கும்போது முதன் முதலில் ரைஜோவை சந்தித்தேன். சலிப்படையாமல் கிராமம் கிராமமாக சென்று பழங்குடி மக்களுக்கு அவர் பணியாற்றதை பார்த்தேன். அவரால் தான் இன்று காசி மலைப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு காரியகர்த்தா உருவாகியுள்ளார்கள், என்கிறார் பாவ்னாம் சிசா.

உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் பிரதமர் மோடியை புகழ்கிறார்கள். வங்கதேசத்தின் எல்லைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் திங்ரியாங் கிராமத்திற்கு மின்சாரம் , சாலை, கழிப்பிடம் ஆகியவை எல்லாம் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. மோடி பிரதமரானதும் இவையெல்லாம் வெகு விரைவாக எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்கள். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதலை நடத்திய பிரதமர் மோடியை கிறிஸ்துவ இளைஞர்கள் வெகுவாக புகழ்கிறார்கள். பாஜக.,வில் இணைகிறார்கள். உள்ளூர் வட்டச் செயலாளர்களாக பல கிறிஸ்தவ இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இயற்பியலில் முதுகலை பட்டதாரியான பாவ்னாம் ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் . அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் செங்காசி அமைப்பின் உதவியால் பள்ளியை தொடங்கினார். இன்று அது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மேற்படிப்புக்காக தில்லி, மகாராஷ்டிரா, அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டனர். வெளிமாநில தொடர்பு அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது படித்த, வசதியான காசி இன பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு கிறிஸ்துவ பையன் தானாகவே கிறிஸ்துவத்தை விட்டுவிட்டு தாய் மதம் திரும்புவது சகஜமாகிவிட்டது, என்கிறார் பாவ்னாம்.

நாங்கள் யாரையும் தாய் மதம் திரும்பும் படி வற்புறுத்துவதில்லை. ஆனால் கிறிஸ்துவ பாதிரிகளால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு சர்ச் மூலமாக பாரம்பரிய பூசாரிகளை கொண்டு சடங்குகளை செய்கிறார்கள். அதற்காக பாரம்பரிய சமய பூசாரிகளை அணுகுகிறார்கள். தங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை நோக்கி திரும்பும் பயணத்தை அம்மக்கள் அங்கிருந்து தொடங்குகிறார்கள். இப்படி பல நூறு குடும்பங்கள் தாய் மதம் திரும்பி உள்ளனர், என்கிறார் பா என்ஜிஸ்டர். இவர் பாவ்னாவுக்கு உதவியாக இருக்கும் செயல்வீரர்.

நான் பெங்களூரில் எம்பிஏ முடித்தேன். அப்போது தான் நான் இந்தியாவை புரிந்து கொண்டேன். காப்பீட்டு துறையில் வேலை செய்கிறேன். நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் பாஜக., பற்றி எனக்கு வேறு பார்வை இருக்கிறது, என்கிறார் முப்பத்தி ஐந்து வயதான பிலைலேடு காங்கியாங் . இவர் அங்குள்ள கத்தோலிக்க சர்ச்சின் தலைவர். கிராம சபைக்கு பொறுப்பாளர்.

இந்த மாநில மக்களுக்கும் சரி எனது பழங்குடியினருக்கும் சரி வெளியுலகம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தங்களுக்கு உண்மையில் எது பிரச்சனை என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை. உண்மையான முன்னேற்றத்தையும் பாராட்ட தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாமே இலவசமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்கிறார் அவர். பாஜக.,வில் வேலை செய்ய பிரச்சனையாக இல்லையா என்று கேட்டபோது, எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் வேலை செய்ய முடிகிறது . என்னுடைய பிரச்சினை பாஜக., எனக்கு பயணப்படியை ஒழுங்காக தருவதில்லை என்பதுதான், என்கிறார். பணத்திற்காக பாஜக.,வில் சேர்ந்தீர்களா? என்றதற்கு, ஐந்து ரூபாய் பணம் கட்டி கட்சியில் சேர்ந்தவன் நான் , என்று குரலை உயர்த்துகிறார் காங்கியாங்.

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

2018 ன் தொடக்கத்தில் திரிபுராவில் கம்யூனிச ஆட்சியை வீழ்த்தி பாஜக., வாகை சூடியது. வெற்றி பெற்றதும் அங்கிருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. ஊடகங்களில், குறிப்பாக தமிழ் ஊடகங்களில், பலத்த கூக்குரல் எதிரொலித்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தபோது 1999 இல் விஜயபாரதத்தில் வெளியான ஆர்எஸ்எஸ் தலைவர் கு. சி. சுதர்சன்ஜியின் நேர்காணல் நினைவுக்கு வந்தது.

அந்த நேர்காணலின் முதல் கேள்வியே ஆர்எஸ்எஸ்.,காரரான வாஜ்பாய் பிரதமராக உள்ள நிலையில் திரிபுராவில் ஆர்எஸ்எஸ்., தலைவர்கள் வங்கதேசத்திற்கு கடத்தப்பட்டதை பற்றி இருந்தது. 1999 இல் திரிபுராவில் கம்யூனிச ஆட்சி இருந்தது. ஆர்எஸ்எஸ்., இன் மாவட்ட , மாநில மற்றும் பிராந்திய தலைவர்கள் ஆறு பேர்களை திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பினர் வங்கதேசத்திற்கு கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொன்றனர். தேசிய சிந்தனை கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக ஊடகங்கள் அதை அமைதியாகக் கடந்து சென்றன. அடுத்த இருபது ஆண்டுகளில் அங்கு பாஜக., ஆட்சியை கைப்பற்றியது . இன்று பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்து தேசியவாதிகளே ஆட்சியில் உள்ளனர் . இது சாதாரணமாக வந்தது அல்ல. அதற்குப் பின்னணியில் கடும் உழைப்பும் தியாகமும் உள்ளது.

மணிப்பூர்

மணிப்பூரின் தலைநகர் இம்பால் அங்கிருந்து 100 கிலோமீட்டர் குறைவான தூரத்தில் உள்ளது பங்க்டி சீரூ என்ற கிராமம். பசுமையான மலையடிவாரத்தில் உள்ள பல கிராமங்களில் இதுவும் ஒன்று. அந்த பகுதி தான் 26 வயதான லீசியின் கர்மபூமி. அவர் ரோங்மோய் என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவள். குக்கி , மொய்த்தி என்ற இரண்டு பழங்குடி வகுப்பினர் பெயர்கள் மட்டுமே நமக்கு தெரியும். அதுவும் கலவரத்தினால் தெரியும். ஆனால் அந்த சிறிய மாநிலத்தில் சுமார் 9 – 10 பழங்குடி வகுப்பினர் உள்ளனர். ஒவ்வொன்றுக்கும் மற்றதை ஏற்றுக் கொள்வதில்லை. பூசலிடுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு தேசம், அரசாங்கம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். தங்கள் இனக்குழுவின் ஆதிக்கம் தான் பிரதானம்.

இந்த சூழ்நிலையில்தான் லீசி அந்த கிராமத்தில் எட்டு பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறாள் . தனது நான்கு வயது தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தங்கை அல்ல நான்கு பேர்கள். கடைக்குட்டி யின் வயது நான்கு. இது தவிர அவர் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிப்பாள். ஏனெனில் அவள் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் முழு நேர ஊழியர். கல்யாண் ஆசிரமம் பழங்குடியினர்களிடையே சேவையாற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு. அது நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் பழங்குடி கிராமங்களில் 18 ஆயிரம் சேவை திட்டங்களை செயலாற்றி வருகிறது. இதன் முழு நேர ஊழியர்களுக்கு ஐந்து முதல் பத்தாயிரம் வரை மாத மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

லீசி கிராமங்களுக்கு நடந்து செல்வாள் . சற்று தூரமாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் செல்வாள் . பெரும்பாலான கிராமங்கள் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்கள். வீடு வீடாக சென்று பிள்ளைகளின் படிப்பு முதல் பாட்டின் உடல்நிலை என அன்றாட விஷயங்கள் தொடங்கி எல்லா விஷயங்கள் பற்றியும் அவள் விசாரித்து பேசி வருவாள் .பெரும்பாலும் தனியாக செல்வாள். சில நேரங்களில் கல்யாண் ஆசிரமத்தின் மூத்த ஊழியர் அவளுடன் கிராமங்களுக்கு செல்வார் . பல குடும்பத்தினருக்கு குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவு லீசி தான்.

வடகிழக்கு இந்திய பகுதிகளில் 1931 முதல் கிறிஸ்துவம் வேகமாக வளர்ந்தது. விடுதலைக்கு பிறகு இன்னும் வேகம் எடுத்தது. கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (2011) நாகலாந்தில் 87.9 சதவீதம் கிறிஸ்துவர்கள் . மிசோராமில் 87.2 சதவீதம். மேகாலயாவில் 74.6 சதவீதம். மணிப்பூரில் 41.3 சதவீதம். அருணாச்சல பிரதேசத்தில் 31 சதவீதம். அஸ்ஸாமில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 34 சதவீதம் . இப்பொழுது 40 சதவீத்தைக் கடந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீசி சொல்கிறாள் : சில கிறிஸ்துவ கிராமங்களில் மக்கள் என்னை மடக்கி நீ எங்களை இந்து மதத்திற்கு மாற்ற வந்திருக்கிறாய் என்று சொல்லி மிரட்டுவார்கள். அவர்களெல்லாம் குடித்துவிட்டு என்னை சுற்றி வளைத்து மிரட்டுவார்கள். நான் மதப் பிரச்சாரம் செய்யவில்லை. என் வேலை பழங்குடி பண்பாடு பற்றியது என்பேன். கிராமத்தில் உள்ள மற்ற சிலர் எனக்கு ஆதரவாக வந்து என்னை அவர்களிடமிருந்து மீட்டு அனுப்புவார்கள்.

மணிப்பூரில் இப்போது பாஜக., ஆட்சியில் இருக்கிறது. ஆனால் மாற்றத்திற்கான அடித்தள பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டன. மதுமங்கள் ஷர்மா இவர் 1987 இம்பாலில் பிறந்தார். மாநில அரசு அதிகாரியாக பணி ஓய்வு பெற்ற இவர் 1985 முதல் 1990 வரை பாஜக.,வின் மாநில தலைவராக இருந்தார். கட்சியை வளர்த்தார். அவருக்கும் முன்பாக 1950 களில் ஆர்எஸ்எஸ் , வி எச் பி யின் பணிகள் தொடங்கி விட்டன. மதுமங்கள் சர்மா தினமும் சுமார் 75 கிலோமீட்டர் பயணிப்பார். கிராமம் கிராமமாக சென்று போதை பொருள் பழக்கத்திற்கு எதிராகவும் பிரிவினை வாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தார்.

மணிப்பூரில் குறிப்பாக இம்பாலில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரிவினைவாதிகளின் வலைபின்னலில் முக்கிய பங்கு இருந்தது. அவர்கள் ஊடுருவும் தீவிரவாதிகளை பாதுகாத்தனர். அவர்களுக்கு உளவு சொல்லினர். மதுமங்கள் சர்மா 1995 பிப்ரவரி மாதம் ஒரு பிரிவினைவாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சர்மாவின் கொலை தனியானது அல்ல. மாவட்ட , மாநில அளவிலான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அபாயங்களை பற்றி கவலைப்படாமல் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் பாஜக., ஆட்சி இல்லாத போதும் களப்பணி ஆற்றினர். பாஜக., ஆட்சி வருவதற்கு முன்பு தினமும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்கிறார் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர். இன்று மணிப்பூரில் மட்டும் 120 ஆர்எஸ்எஸ் ஷாகாகள் உள்ளன. 1995 இல் ஆர் எஸ் எஸ் நடத்திய பள்ளிக்கூடங்கள் 650 ஆக இருந்தன. இன்று 6000 மாக அதிகரித்துள்ளன. ஆர் எஸ் எஸ் நடத்தும் ஒராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கல்வியின் மூலமாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய சிந்தனையை வலுப்படுத்தி வருகிறது ஆர் எஸ் எஸ்.

சடு – சீரு கிராமத்துக்குள் லீசி நுழைந்ததும் அங்குள்ள ஒரு கிறிஸ்துவ குடும்பம் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. அந்த வீட்டின் மூத்த பாட்டி ஒரு நாற்காலியில் வெயிலில் உட்கார்ந்து இருந்தார். லீசியைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது. கையை அசைத்து அவளை அருகே அழைத்தார். அவருக்கு இதய கோளாறு. அந்த குடும்பத்தின் மாத வருமானம் ரூபாய் 15 ஆயிரம் . சிகிச்சைக்கு 1.7 லட்சம் தேவைப்பட்டது. லீசி கல்யாண் ஆசிரமத்தின் மேலிடத் தலைவர்களிடம் பேசினார்.

அவர் முன்பு இரண்டு பிரச்சனை இருந்தன. மிக அவசரமான பிரச்சனை சிகிச்சை. பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இருந்த பெரிய தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பேசி மருத்துவ கட்டணத்தை குறைத்தனர் கல்யாண ஆசிரமத்தில் மாநில பொறுப்பாளர்கள். சிகிச்சை பெற்றவரின் குடும்பம் மட்டுமல்ல அந்த கிராமமே மகிழ்ச்சி அடைந்தது. வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அருமையை புரிந்து கொண்டது.

இரண்டாவது பிரச்சனை பிரதம மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தனியார் மருத்துவமனை தான் இணைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பெரிய அரசு மருத்துவமனை இணைக்கப்படவில்லை. மாநில பொறுப்பாளர்கள் மேலிடத்திற்கு விஷயத்தை எடுத்துச் சென்றார்கள். அவர்கள் மூலம் மத்திய அரசுக்கு செய்தி போனது. இப்போது பலரும் பலனடையும்படி அரசு மருத்துவமனைக்கும் ஆயுஷ்மான் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

சீரூ பழங்குடி கிராமத்திற்கு மற்றொரு வரப்பிரசாதமாக அமைந்தது பிரதமரின் கிராம சாலை திட்டம். அதன் மூலம் அருகில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அந்த சாலை ஓரத்தில் உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் வீட்டு தயாரித்த அன்னாசி பழச்சாறு, உள்ளூரில் விளையும் மாதுளை போன்ற மற்ற பழங்களின் சாறுகளை விற்கத் தொடங்கினர். வருவாய் அதிகரித்தது. தங்கள் வீட்டை ஒட்டிய இடங்களில் அவர்கள் விளைவித்த வெங்காயம் நேரடியாக நல்ல விலை போனது.

மணிப்பூர் மாநிலத்தில் மாற்றத்திற்கு வித்திட்டவர்களின் முக்கியமானவர் சங்கர் தின்கர் கானே. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் 1971 தனது ஆசிரியர் பணியை விடுத்து இம்பால் வந்தார். பிறகு தூஷோம் பகுதியில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற தொடங்கினார். அடுத்த 15 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களை மகாராஷ்டிராவில் உள்ள ஆதரவான குடும்பங்களில் தங்க வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அவர்கள் படிந்து திரும்பி வந்தபோது அவரது நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல அவரது பணியும் சுலபமானது. அவர் காலமான போது அவரது மாணவர்கள் ஓஜா சங்கர் வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தை அவர் நினைவாக தொடங்கினர். அந்த பள்ளி மியான்மர் எல்லையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கூட தேசிய கொடியை ஏற்ற முடியாது. பிரிவினைவாத அமைப்பினர் அதற்கு தடை விதித்திருந்தனர். ஆர் எஸ் எஸ் சார்புடைய அமைப்புகளின் பணியினால் இன்று சூழ்நிலை மாறியுள்ளது. தேசிய கொடியும் தேசிய கீதமும் அந்த பகுதியில் பாடப்படுகிறது. சர்ச் நடத்தும் பள்ளிகளிலும் தேசிய பாடல்கள், தேசிய சின்னங்கள், விழாக்கள் ஆகியவற்றை அவர்களது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். கூடவே பண்பாட்டை மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

கிறிஸ்துவ மிஷனரிகள் உள்ளூர் கலாச்சாரத்தை தீயது என்று புறமொதுக்கி அதில் வெற்றியும் பெற்றனர் . வனவாசி கல்யாண் ஆசிரமம் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அந்த குழு கோம், மோயோன் , மாரிங் , தாங்குல் போன்ற பழங்குடியினர் இடையே எழுபது வயதிற்கும் மேற்பட்ட மூத்தவர்கள் பலரிடம் பேசி மறைந்து போன பழங்குடியினரின் சொற்களை, பழமொழிகளை, வாய்மொழி வரலாற்றை மீட்டெடுத்து ஆவணப்படுத்தினர் . அவர்களது பழங்குடி பாடல்களை, சுமார் 300 பாடல்களை, தொகுத்து ஒரு இசை தட்டில் பதிவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

கலாச்சார மீட்டெடுப்பு அத்துடன் நிறவில்லை. ஒன்பது பழங்குடி வகுப்பினரது பாரம்பரிய விளையாட்டுக்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த விளையாட்டுக்கள் சுவாரசியமானவை மட்டுமல்ல ஆழமான சமூக பிணைப்பை ஏற்படுத்துபவை.

எடுத்துக்காட்டாக , மாஓ பழங்குடியினர் விளையாடும் ஓசு காகா விளையாட்டு. இது அறுவடை காலங்களில் விளையாடப்படுகிறது. பயிர் அறுவடை செய்யும் போது இடையே கிடைக்கும் இடைவேளை பொழுதில் விளையாடப்படுகிறது. அதில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆனவர்களை சவாலுக்கு அழைப்பார்கள். அதே பழங்குடி சமூகத்தினர் விளையாடும் இன்னொரு விளையாட்டு லீரீ கைபிச் சோ . அது ஒரு பண்டிகை காலத்தில் விளையாடப்படுகிறது. ஈட்டிகளை கொண்டு விளையாடப்படும் அந்த விளையாட்டு பழங்கால போர்களை நினைவூட்டுவதாக உள்ளது.

மன் பழங்குடியினர் விளையாடும் நாக்கின்ஜி – நாக்கின்ஜி என்ற விளையாட்டு. அதில் பாட்டு போட்டி உள்ளது. மணிப்பூரில் போலோ (குதிரை மீதேறி விளையாடும் பந்தாட்டம்) விளையாட்டை போன்றதொரு விளையாட்டு உள்ளது. அதன் பெயர் சகோல் காங்ஜியீ. பொதுயுகம் 33 ல் மணிப்பூரை ஆண்ட நாங்டா லைலென் போக்காங்பா என்ற மன்னர் தன் நண்பர்களுக்கும் இதர பழங்குடி தலைவர்களுக்கும் சகோல் காங்ஜியீ விளையாட்டில் சிறந்தவரான லைசனாவை பெருமையுடன் அறிமுகப் படுத்துவார் என்று தொன்மையான ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

மறைந்து போன / மறந்து போன பழங்குடியினர் இசைக்கருவிகளை வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் குழு மீட்டெடுத்துள்ளது. டாங் டங் , ரோசெம், சராங்தார் என்று அந்த மூன்று இசைக்கருவிகளுக்கு பெயர். ரோசெம் என்பது பேக் பைபர் போல் உள்ளது. மூங்கிலால் செய்யப்பட்டது. சராங்தாரைச் செய்ய குதிரைவால் பயன்படுத்தப்படுகிறது.

தாவரவியல் குறித்து உள்ளூர் பாரம்பரிய ஞானம் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மட்டுமின்றி மண்ணை சாகடிக்காத பாரம்பரிய விவசாய முறைகள்,சிறு காடுகள், சதுப்பு நிலப்பகுதி, உள்ளூர் மீன் வகைகள் என சூழலியல் அழிவிலிருந்து அந்த பகுதியை பாதுகாக்கும் அம்சங்கள் கண்டறியப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் தட்பவெப்பத்திற்கு ஏற்ப முன்பு பயன்பாட்டில் இருந்த பயிர் விதைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் பாரம்பரியத்தை மீட்கும் அதே வேளையில் மியான்மர், வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவலையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. பாஜக., அரசு வந்த பிறகு மாநிலத்துக்குள் பயணம் செய்ய இன்னர் லைன் பர்மிட் என்ற அடையாளம் / அனுமதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு குறுகிய காலம் சென்று வர முடியும். இது சட்ட விரோதமாக ஊடுருவி குடியமர்பவர்களை தடுக்கவும் பயன்படுகிறது. மொய்த்தி பழங்குடியினருக்கு பழங்குடியினர் அந்தஸ்தையும் சலுகைகளையும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆர் எஸ் எஸ் ஆதரித்து வருகிறது.

மியான்மரில் இருந்து ஊடுருவும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஜிரிபாம் , லீலாங் போன்ற நகர் பகுதிகளில் அதிகமாக குடியேறி வருவதை கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றன ஆர் எஸ் எஸ் அமைப்புகள். உள்ளூர் வாசிகளின் துணையுடன் ஹிந்து பண்பாட்டு தேசியவாதிகள் தங்கள் போராட்டத்தை தொடர உறுதியாக உள்ளார்கள்.

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

garlanding vaidyanatha iyer statue - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதை முன்னிட்டு, உயரமான சுவரில் சிரமப்பட்டு வயதானவர்கள் ஏறி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது, திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த உதவியாக, படிக்கட்டுகள் அமைத்துத் தர புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சுததிரப் போராட்ட கால கட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை நடத்திக் காட்டியவர் மதுரை வைத்யநாதய்யர். தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவோடு வைத்தியநாத அய்யர் போராட்டம் நடத்தி வெற்றிபெற்று கோவிலுக்குள் ஹரிஜன் மக்களை அழைத்து சென்றார்.

சட்டமும் இயற்றப்பட்டது‌ அதோடு தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்று வைத்தியநாத ஐயரும் அவரது குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் பிறந்த தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தியாகி வைத்தியநாத ஐயர் திருவுருவ சிலைக்கு அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, உக்கிர பாண்டி பட்டர், தன்னார்வலர் மற்றும் தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர் இல.அமுதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வைத்தியநாத ஐயரின் திருவருவ சிலை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளதால் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க தன்னார்வலர்கள் மிகவும் சிரமப்பட்டு சுவர் ஏறி குதித்து சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தன்னார்வலர்கள் வைக்கும் வேண்டுகோள் உடனடியாக, ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கும் வைத்தியநாத ஐயர் சிலை அமைந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சிலைக்கு செல்ல படி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிற்காக பல போராட்டாங்கள் நடத்திய தியாகியின் சிலைக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமித்துள்ள இடம் சீரமைக்கப்பட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

anaimangalam seppedu returned to india by modiji - 2026

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

நமது சோழப் பேரரசின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமது தாயகத்திற்குத் திரும்பியுள்ளன.

1976 முதல் 2013 வரை வெளிநாடுகளில் இருந்து வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. ஆனால், நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 228-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மற்றும் நமது பழங்காலப் பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுப் பத்திரமாகத் தாய்மண்ணிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வரலாற்றுச் சாதனையின் உச்சமாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தச் செப்பேடுகள் முறைப்படி நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நமது தொன்மையை மீட்டெடுப்பதில் இந்திய அரசு காட்டும் ஈடுபாட்டிற்கு இதுவே மிகப்பெரிய சான்று.

இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு எப்படிச் சென்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு வலிமிகுந்த வரலாறு. நமது நிலத்தின் சில பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில், இந்த விலைமதிப்பற்ற செப்பேடுகள் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனாலேயே இது லைடன் செப்பேடுகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் செப்பேடுகள் வெறும் உலோகத் தகடுகள் அல்ல; தமிழர்களின் ஈடு இணையற்ற கலைத்திறன், அறிவியல் அறிவு, துல்லியமான நில அளவை முறைகள் மற்றும் செம்மையான ஆட்சி நிர்வாகத்தின் உயிரோட்டமான ஆவணம்.

இதில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு வரலாற்று உண்மை உள்ளது. மாமன்னர்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தீவிரமான சிவபக்தர்கள். சைவம் தழைக்கப் பல பிரம்மாண்டமான சிவாலயங்களை எழுப்பியவர்கள். அன்றைய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் (இன்றைய இந்தோனேசியா) மன்னர் மாரவிஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை என்ற புத்த விகாரத்தை அமைக்க உதவிகோரினார்.

ஒரு தீவிர சிவபக்தராக இருந்தபோதிலும், பௌத்த மத விகாரைக்கு ஆனைமங்கலம் கிராமத்தை முழுமையாக மானியமாக வழங்கி மாமன்னர் ராஜராஜ சோழன் ஆதரவளித்தார். இது சோழர்களின் அளப்பரிய மத நல்லிணக்கத்தையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்த மானிய விவரங்களை அவரது மகன், மாமன்னர் ராஜேந்திர சோழன் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் செப்பேடுகளாகப் பொறித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இன்று மீண்டும் நம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு நெடிய சட்டப் போராட்டம் உள்ளது. வழக்கறிஞர் திரு.பி.ஜெகநாத் அவர்கள் 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான ராஜதந்திர நகர்வுகளுமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

திரு.பி.ஜெகநாத் அவர்களின் பயணம் இதோடு முடிந்துவிடவில்லை. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சு மிஷனரிகளால் இடிக்கப்பட்ட சூடாமணி விகாரையின் கோபுரத்தை, மீட்கப்பட்ட இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் குறிப்புகளைக் கொண்டு அதே நாகப்பட்டினத்தில் மீண்டும் கட்டமைக்க வேண்டும் எனத் தனது அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை அவர் தற்போது துவங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

நமது பண்பாட்டின் ஆணிவேரான இந்தச் செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது, தமிழ் கலாச்சாரத்திற்கும் வரலாற்றுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை. நமது வரலாற்றை மீட்டெடுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்தப் பணிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது பெருமைமிக்க வரலாற்றை மீட்டெடுப்போம்! வருங்கால சந்ததிக்குச் சோழர்களின் புகழைக் கொண்டு சேர்ப்போம்!

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

udayanidhi in assembly - 2026
  • ஆனந்த் வெங்கட் –

சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி. ஏற்கனவே இது போல பேசியதற்கு வழக்கு நடக்கிறது. ஆக இது ஒன்றும் தெரியாமல் பேசிய பேச்சல்ல என்று நிரூபணம் ஆகிறது. அந்த வழக்கை துரிதப்படுத்த நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும் பாஜக. (அப்போது முதல்வரின் reactionஐயும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆமோதித்து போல இருந்தது அந்த தலையாட்டல்.)

வேண்டுமென்றே முதல்வரை வம்புக்கு இழுத்து அவரையும் மறைமுக திமுகவாக ஆக்க செய்யப்படும் முயற்சி இது. இதற்கெல்லாம் இசைந்து கொடுப்பது நன்றாக இல்லை.

திமுக ஆதரவு தந்தது விஜயின் கட்சியை காப்பாற்ற அல்ல. மாறாக உள்ளே இழுத்துக்கொள்ள. இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களது மறைமுக வழிகாட்டுதல் இல்லாமல் நடக்காது. இதை விஜய் உணர்ந்தால் நல்லது.

முதல்வர் மீது இருக்கும் சந்தேக நிழலை ஊர்ஜிதம் செய்வது போல இருக்கிறது அந்த தலையாட்டல். முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது. உங்களுக்கு வாக்களித்தது வெறும் கிருஸ்தவர்கள் மட்டுமல்ல. மிகப்பெரும்பான்மையில் ஹிந்துக்களே. இளைஞர்களும் பெரியவர்களும் இளைஞிகளும் மிகப்பெருமளவில் நம்பிக்கை வைத்துள்ளார்கள் முதல்வர் மீது.

திமுக விரிக்கும் வலையில் சிக்கி வீணாக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சாராய கடைகளை மூடுவது பெரும் பாராட்டுக்குரிய செயல். இதுதான் தேவை நாட்டுக்கு. இந்த காலாவதியான சனாதன எதிர்ப்பை கையில் எடுத்ததன் விளைவைத்தான் திமுக இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

உறவாடிக்கெடுக்க முயற்சி செய்கிறது திமுக, செய்தே தீரும், நம்பிக்கையை பெற்றே தீரும், விஜயை அழித்தே தீரும். எப்படி அழிந்தோம் என்ற தடம் கூட தெரியாமல் அழிக்கும். யாராவது முதல்வருக்கு இதை சொல்லுங்கள்.