Home Blog Page 4

2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (4)

எனதருமை நாட்டுமக்களே, நான் வளர்ச்சியடைந்த பாரதம் பற்றிப் பேசுகையிலே, தேசத்தை விரைவு கதியில் முன்னேற்றுவதைப் பற்றிப் பேசுகையிலே, இதன் மிகப்பெரிய பயனாளிகள் யார்?  இந்த முயற்சிகளை மிகப்பெரிய அளவில் சாதிப்பவர் யார்?   சாதிப்பவர்கள் என்றால் என் தேசத்தின் இளைஞர்கள் தாம்.  அவர்கள் தேசத்தின் இளைஞர் சக்தி தாம்.  வளர்ச்சியடைந்த பாரதம் பயணத்தில் இளைஞர்களின் பங்களிப்பு பெரியது.  இது மட்டுமல்ல.  வளர்ந்த பாரதத்தின், மிகப்பெரிய பயனாளியும் கூட, என் தேசத்தின் இளைஞர்கள்  தாம்.  அந்த வகையிலே, நாம், வளர்ந்த பாரதம் இலக்கினை, இளைஞர்களோடு இணைத்து, முன்னெடுக்க வேண்டும்.  இளைஞர்களே, நமது முதன்மையோடு நீங்கள் கைகோர்த்துப் பயணிக்க வேண்டும். 

நண்பர்களே, கடந்த 10-12 ஆண்டுகளிலே, இந்தத் திசையிலே நிறைய நடந்திருக்கிறது.  ஸ்டார்ட் அப் இண்டியா இயக்கப்படி, இன்று தேசமெங்கிலும், இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள் பதிவாகியிருக்கின்றன.  தேசத்தின் இளைஞர்கள் தாங்கள் வேலை செய்வதோடு, பலருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறார்கள்.  ஒரு இலட்சம் கோடி ரூபாய், நூதனங்கள் படைக்க பாரத அரசு அறிவித்திருக்கிறது.  நாட்டின் இளைஞர்களிடம் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் உங்களைக் கனவுகளைக் கொண்டு வாருங்கள்.  ஆதாரங்களுக்குக் குறைவில்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 

ஒரு இலட்சம் கோடி ரூபாய், உங்கள் மனதிற்கும் சிந்தைக்கும், சிறகுகளை அளிக்கும் பணியை நாங்கள் செய்திருக்கிறோம்.  ஆய்வுகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  டிஜிட்டல் இண்டியாவின் புதிய, மலிவான தரவுகள், இளைஞர்களுக்கு சக்தியளித்தது.  உலகிலே, விலைமலிவான தரவு என்றால் அது இந்தியாவிலே தான்.  தேசத்தின் இளைஞர்கள், அவர்களுக்குப் புதிய பலத்தை அளித்திருக்கிறது.  திறன்மிகு இந்தியா தேசிய திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். விண்வெளித்துறையை நாங்கள் திறந்து விட்டோம்.  தேசிய ட்ரோன் கொள்கையை உருவாக்கினோம்.  கேலோ இண்டியா கொள்கையை உருவாக்கினோம்.  35 ஆண்டுகளாக இல்லாதிருந்த புதிய கல்வித் திட்டத்தை நாங்கள்  முன்னெடுத்து வந்திருக்கிறோம்.  இதனால் ஆதாயம், நடுத்தட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

நண்பர்களே, 2004 முதல் 14வரை, புள்ளிவிவரங்களை நான் அளித்தாக வேண்டும்.  2004 முதல் 14 வரை, நமது தேசத்திலே, 350க்கும் குறைவான பல்கலைக்கழகங்களே இருந்தன.  ஆனால் இன்றோ, 10-12 ஆண்டுகளுக்கு உள்ளேயோ, கிட்டத்தட்ட 650 புதிய பல்கலைக்கழகங்கள் இணைந்திருக்கின்றன.  கிட்டத்தட்ட 1000த்தை நாம் எட்டிக் கொண்டிருக்கிறோம்.  2014க்கு முன்பாக, மருத்துவத்துறையில் 400 இருக்கைகளே இருந்தன.  இன்றோ, கிட்டத்தட்ட 850 இருக்கைகள், மருத்துவத் துறையிலே ஆகிவிட்டன.  இதுமட்டுமல்ல, அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்தியாவிலே வரவிருக்கின்றன. 

பாரதத்திலே, அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் டிகிரிகள் எனது இளைஞர்களுக்குக் கிடைக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.  நமது தேசத்தின், இளைய மனங்கள் சிறுவயது தொடங்கி, தொழில்நுட்பத்தின் பால் கவரப்பட, இதை நோக்கிப் பணியாற்றுகிறோம்.  இந்த வகையிலே நாங்கள், கிட்டத்தட்ட 10,000த்திற்கும் மேற்பட்ட, அடல் டிங்கரிங் லேபுகளை, சின்னச்சின்ன குழந்தைகளுக்கு அளித்திருக்கிறோம்.  இதனால் அவர்களுக்கு, புதுமைகள் படைத்தல் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும்.  12 வயது சிறுவர்களுக்கு என, நாங்கள் பல கதவுகளைத் திறந்திருக்கிறோம்.  ஸ்டார்ட் அப் விஷயத்தை, நீங்களே கூட கவனித்திருக்கலாம். 

பாரதத்தின் தனியார் ஸ்டார்ட் அப், 28 வயது சராசரி கொண்ட இளைஞர்கள், ஆர்வலர்கள், உலகின் முதல், முதல் முயற்சியாக, சுயமாக செயற்கைக்கோள்கள் ராக்கெட்டுகள் ஏவினார்கள்.  மேலும், ராக்கெட்டை ஏவினார்கள்.  மிகப்பெரிய பணியாற்றியிருக்கிறார்கள்.  இன்று சுமார், இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் பதிவாகியிருக்கின்றன.  நாங்கள் கடந்த நாட்களிலே, ஏஐ இம்பாக்ட் மாநாட்டை நடத்தினோம்.  செயற்கை நுண்ணறிவின், விரிவாக்கம், வேகமாக வளர்ந்து வருகிறது.  செங்கோட்டையிலிருந்து, நான் நாட்டின் இளைஞர்களிடம் அறிவிக்க விரும்புகிறேன்.  நாங்கள் தீர்மானித்திருக்கிறோம், வரவிருக்கின்ற ஓராண்டிலே, ஒரு கோடி இளைஞர்களுக்கு, ஏஐ திறன் மேம்படுத்த, பயிற்சி அளிப்பதில் ஈடுபட இருக்கிறோம்.  இதனால், நமது தேசத்தின் இளைஞர்கள், ஏஐ உலகிலும் கூட, தலைமையேற்கும் வல்லமை பெற வேண்டும். 

நண்பர்களே, உயிரி பொருளாதாரம் பெரியதொரு துறை.  ஒரு காலத்தில் 2014க்கு முன்பாக, வெறும் 60,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ளதாக இது இருந்தது.  ஆனால் நாட்டின் இளைஞர்கள் என்ன அற்புதத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் பாருங்கள்!  கொள்கைகள் நேரியதாக இருந்தால், இலக்கு தெளிவாக இருந்தால், தேசத்தின் இளைஞர்கள் சாதனைகளை கண்டிப்பாகப் படைப்பார்கள்.  தேசத்தின் இளைய சக்தி தனது வல்லமையைக் காட்டியது.  2014க்கு முன்பாக இருந்த 60,000 கோடி ரூபாய் வியாபாரமாக இருந்தது, இன்று இந்த உயிரி பொருளாதாரமானது, இந்தப் பொருளாதாரம், 20 இலட்சம் கோடி ரூபாயாகி விட்டது நண்பர்களே. 

2009-10 காலகட்டம் அது.  வெறும் ஒண்ணரை இலட்சம்.  மின்வாகனங்கள், நமது தேசத்திலே, விற்கப்பட்டன.  ஒண்ணரை இலட்சம் வெறும் ஒண்ணரை இலட்சம் மின்வாகனங்களே விற்கப்பட்டன.  2009-10இலே, ஒண்ணரை இலட்சம் மின்வாகனங்கள்.  இந்த 25-26இலே, 25 இலட்சம் மின்வாகனங்கள் விற்பனையாயின. 

எனதருமை நாட்டுமக்களே, விமானத்துறை கூட, எனது இளைஞர்களுக்காக விரைவாக முன்னேறி வருகிறது.  புதிய விமானநிலையங்கள் புதிய பாதைகள், புதியபுதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவருகிறது.  பராமரிப்பு பழுதுபார்த்தல், இதன் காரணமாகவும் கூட, தேசத்திலே பெரிய அளவிலே, திறனுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கிறது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களை, உருவாக்கும் திசையிலே வெற்றி கிடைத்திருக்கிறது.  இந்தியாவில் த்யாரான பாதுகாப்புப் போக்குவரத்து விமானம், சி-295, தனது வான்பயணத்தைத் தொடங்கி விட்டது.  வெற்றிகரமான பயணம் இது.  இது நாட்டின் இளைஞர்களுக்கு பெரிய சாதனை.

நண்பர்களே, ட்ரோன்களும் கூட, பெரிய பணியாற்றி இருக்கின்றன.  ஸ்வாமித்வ திட்டம் கிராமங்களிலே, ட்ரோன்களால், இந்தத் திட்டம் வெற்றிபெற்று வருகிறது.  சுமார் மூணேகால் கோடி குடும்பங்களுக்கு, ஸ்வாமித்வ திட்டத்தால் ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன.  இதன் காரணமாக, 140 இலட்சம் கோடியளவு, சொத்துக்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.  இதன் காரணமாக வங்கிகளிடமிருந்து கடன் பெற முடிகிறது.  மக்கள் தங்கள் வியாபாரத்தை செய்ய முடிகிறது.

எனதருமை நண்பர்களே, நமது, மத்தியத்தட்டு மக்கள் முன்பாக, ஒரு மிகப்பெரிய சுமை என்றால், பயிற்சி வகுப்புகள் என்ற சவால்.  பயிற்சி வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பவில்லை என்றால் பெற்றோர்களுக்கு அது ஒரு கௌரவப் பிரச்சனையாகிறது.  இந்த ஏழை மற்றும் நடுத்தட்டு மக்களின் மீது கரிசனம் கொள்ளும் வகையிலே, அவர்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவைத் தடுக்க, பிள்ளைகளும் அருகே இருந்து பெற்றோர் அவர்களை கவனித்துக் கொள்ளும் வகையிலே, குடும்பங்களுக்குப் நிதிச்சுமை ஏற்படாமல் இருக்க, இதன் பொருட்டு, நாங்கள் இளைஞர்களுக்காக, பல்வேறு தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சிக்கு, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு இருக்கிறது.  நம்மிடம் சிறப்பான திறமைகள் உண்டு ஆசிரியர்கள் உண்டு.  இந்த ஆதாரங்களை இணைத்து, நாங்கள், தேசத்தின் இளைஞர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்க முழுமையானதொரு, வலைப்பின்னலை ஏற்படுத்த இருக்கிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, நான் எப்போதுமே கூறிவந்திருக்கிறேன்.  விளையாட்டே வளர்ச்சிதரும் என்று.  நான் விளையாட்டு-வளர்ச்சி பற்றி பேசும் போது, எனதருமை நாட்டுமக்களே, இன்று, பாரதம் விளையாட்டு உலகிலே, தனது இடத்தை ஏற்படுத்தி வருகிறது.  இப்போது, வெற்றி மேடையிலே, பாரதத்தின், தேசிய கீதம் ஒலிக்கிறது.  பாரதத்தின் ஜனகணமன ஒலிக்கிறது.  பாரதத்தின் மூவண்ணக்கொடி பறப்பதைக் காண முடிகிறது. 

டாப்ஸ் திட்டமானது, பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.  கேலோ இண்டியா விளையாட்டுகள், பல்கலைக்கழக விளையாட்டுகள், பனிக்கால விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், விளையாட்டுக் கட்டமைப்பு, விளையாட்டு பயிற்சி, விளையாட்டு மருத்துவம், விளையாட்டுக்கான ஊட்டச்சத்து, இந்த அனைத்து விஷயங்களிலும், பாரதம் இப்போது நிபுணத்துவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.  இளைஞர்களுக்கான புதியதோர் துறை, விளையாட்டு வீரராகவில்லை என்றாலும் ஆதரவு அமைப்பு என்ற, மிகப்பெரிய துறை திறக்கப்பட்டிருக்கிறது.  விளையாட்டு உலகிலே, பாரதத்தின் வெளிப்பாடு சிறப்பாக ஆகிவருகிறது.   மேலும் நாம், 2036ஆம் ஆண்டிலே, ஒலிம்பிக்சுக்கான புரவலராக ஆக இருக்கிறோம்.  2030ஆம் ஆண்டிலே, காமன்வெல்த் விளையாட்டுக்களை, பாரதம் நடத்த இருக்கிறது. 

மேலும் எனது நண்பர்களே, உலகிலே எப்போது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கின்றனவோ, வெறும் 40 வகையான விளையாட்டுகள் மட்டுமே இருக்கும்.  மேலும் சுமார், 325-350 போட்டிகள் மட்டுமே நடக்கும்.  ஒலிம்பிக்ஸ்.  உங்களுக்கு இது வருத்தத்தை அளிக்கலாம் என் நாட்டுமக்களே!!  என்னுடைய இளைஞர்களே நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன் அறைகூவல் விடுக்கிறேன்.  நான் உங்கள் உதவியைக் கோருகிறேன்.  சுமார் 325 போட்டிகளிலே, பாரதம், மூன்றில் இரண்டு பங்கிலே கலந்து கொள்வதேயில்லை.  நாம் இடம்பெறுவதே இல்லை.  நாம் தகுதி பெறுவதேயில்லை. 

நாங்கள் தீர்மானித்திருக்கிறோம், 2036இலே, நடக்கும் ஒலிம்பிக்சிலே, அது பாரதத்தில் நடக்க விரும்புகிறோம், ஆனால் 2036லே, எந்த விளையாட்டுக்களில் பாரதம் விளையாடுவதில்லையோ, எதிலே பாரதம் தகுதி பெறுவதில்லையோ, எந்தப் போட்டிகளை பாரதம் பங்கு பெறுவதில்லையோ, அந்த நான்கில் 3 பங்கு நமக்காக காத்திருக்கிறது.  பாரதம் இவற்றின் மீது பலமளிக்கும்.   இதன் பொருட்டு, நாங்கள் திறன் தேடலுக்கான இயக்கம் ஒன்றை நடத்த விரும்புகிறோம். 

நமக்கு 2036க்கான வீரர்கள் தேவை, 5-10-15 வயதுடைய இளைய நண்பர்கள், அவர்களின்பால் கவனத்தை பெண்களின்பால் கவனத்தைச் செலுத்த வேண்டும்.  அந்த வகையிலே, 5 முதல் 15 வயது வரையான, குழந்தைகளிடம் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிய, கிராமம்தோறும் நகரம்தோறும் பள்ளிதோறும், திறமைகள் தேடும், வகையிலே இயக்கமொன்று முடுக்கி விடப்படும்.  குழந்தைகளின் திறமைகள் ஆராயப்படும்.  அதன் பிறகு, அவர்களுக்குச் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தேசத்திற்காக விளையாடும், நல்ல வீரர்களாக ஆக்கப்படுவார்கள். 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (3)

எனதருமை நாட்டுமக்களே, நாம் தயாரிப்புத் துறையை மிகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  மேலும் உற்பத்தியைப் பெருக்குவதோடு கூடவே, நாம், சின்னச்சின்ன, கருவிகளையும் தயாரிக்க வேண்டும்.  பெரியபெரிய பொருட்களையும் தயாரிக்க வேண்டும்.  மொத்த மதிப்புச்சங்கிலியும் நமதாக வேண்டும்.  இதை நாம் கைக்கொள்ள வேண்டும்.  நமக்கு, உட்கூறுகளும் தேவை, மேலும் நமக்கு, ஒட்டுமொத்த, தயாரிப்பும் தேவை.  பொருட்கள் மொத்தமாகவும் தேவை.  வடிவமைப்பு தொடங்கி தயாரிப்பு வரை, பாரதம் உலக விநியோகச் சங்கிலியின், நம்பகமான மையமாக வேண்டும்.  இதன் பொருட்டு, நான் மூன்று விஷயங்களின் மீது சிறப்பு அழுத்தமளிக்க விரும்புகிறேன்.  தயாரிப்புத் துறையிலே இருக்கும் நமது சகோதர சகோதரிகள், இது அவர்களுக்கு, சந்தர்ப்பமாகும்.  இந்தச் சந்தர்ப்பத்தை இழந்து விடாதீர்கள்.  இதன் பொருட்டு, நாம் விலை, தரம், மற்றும் அளவு, இவற்றின் மீது, உலகளாவிய, அளவீடுகளுக்கு இணங்கச் செயல்பட வேண்டும்.  நமது தொழிற்சாலைகள், போட்டித்தன்மை உடையதாக ஆக வேண்டும்.  நமது பொருட்கள், பயனாளிகளுக்கு நேசமாக இருக்க வேண்டும்.  நமது பேக்கேஜிங், உலகின் மக்களை, ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.  கவரும் வகையிலே இருக்க வேண்டும்.  நமது பூஜ்யம் குறைபாடு, உடைய தயாரிப்பு, இதுவே நமது அடையாளமாக ஆக வேண்டும்.  மேலும் நமது தயாரிப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் எம் எஸ் ஈக்கள், அனைத்து எம் எஸ் எம் ஈக்களிடமும், நான் கூற விரும்புகிறேன், உலகச் சந்தைகளிலே, நமது அடையாளம், நம்பகத்தன்மை, மற்றும் தரத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும்.  தரம் விஷயத்திலே எந்தச் சமரசமும் இருத்தல் கூடாது.  அந்த வகையிலே நமது மந்திரம் தரம் தரம் தரம் என்று மட்டுமே இருக்க வேண்டும்.  இதுவே நமது உலகளாவிய ப்ராண்டாகும். 

எனதருமை நாட்டுமக்களே, இந்த 7 போக்குகளின் இரண்டாவது சக்தி.  விவசாயம் மற்றும் உணவு, உற்பத்தி.  உணவு உணவுப் பதப்படுத்தல்.  நாம் இந்தத் திசையில் முன்னேற வேண்டும்.  நமது விவசாயிகளுக்கு, உலகின் சந்தைகள்  திறக்கப்பட்டு விட்டன எஃப் டி ஏ காரணமாக மிகப்பெரிய சந்தை கிடைத்து வருகிறது.  நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.  நாம் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும்.  நாம் வயல்வெளி தொடங்கி ஏற்றுமதிச் சந்தைவரை பயணிக்க வேண்டும்.  நமது பாரம்பரிய உணவாகட்டும் சிறுதானியங்களாகட்டும் நமது மசாலாவாகட்டும் நமது பருப்புகளாகட்டும், எதுதான், நம்மிடத்த்லே என்னதான் இல்லை கூறுங்கள்!!   இவை உலகளாவிய ப்ராண்டுகள் ஆக வேண்டும்.  நமது, விவசாயிகள், வேதிப்பொருள் இல்லாத விவசாயத்திற்கு பலமளிப்போம்.  உலகிலே இதற்கான தேவை அதிகரிக்க இருக்கிறது.  மேலும் உலக அளவீடுகளுக்கு உட்பட்டு, அனைத்து வகையிலும் வெற்றியடையக்கூடிய நமது, வேளாண்பொருட்கள் இருக்கும்.  இதை உலகிற்கு எளிதாக நம்மால் கொண்டு செல்ல இயலும். 

என்னுடைய 7 போக்குகளின் 3ஆவது சக்தி என்னவென்றால், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தல்.  எனதருமை நாட்டுமக்களே, இன்று, உலகம் செயற்கை நுண்ணறிவுடையது.  க்வாண்டமுடையது.  விண்வெளியுடையது.  ரோபோடிக்ஸுடையது.  தரவு மையங்களுடையது.   முழுமையாக ஒரு புதிய துறை திறக்கப்பட்டு விட்டது.  வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், இவையும் கூட, கணம்தோறும் நமக்கு சவால்கள் விடுத்துக் கொண்டிருக்கின்றன.  அந்த வகையிலே தேசத்தை, உலகத்திற்கான சந்தையாக்கக் கூடாது.  நாம் புதுமைகள் படைத்தலின் மையமாக வேண்டும்.  நாம் யுபிஐ மற்றும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பிலே, நம்மை நிரூபித்திருக்கிறோம்.  நம்முடைய சக்தியை அடையாளப்படுத்தி விட்டோம்.  இப்போது பாரதம், டிஜிட்டல் டிஜிட்டல் பொதுத் தொழில்நுட்பங்களை, உலகின் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.  பாரதத்தை அடுத்த தலைமுறை, தகவல்பரிமாற்ற தொழில்நுட்பத்திற்கு, தலைமை தாங்கச் செய்ய வேண்டும்.  இந்தியாவில் தயாரான 6ஜி, அனைத்து இடங்களையும் சென்றடையச் செய்தல், இதுவே நமது இலட்சியமாக வேண்டும்.  மேலும் இதிலே விரைவு கூட்டப்பட வேண்டும்.  இதன் பொருட்டு நமது முயற்சி, குறைவுபடக் கூடாது. 

7 போக்குகளின் நான்காவது சக்தியென்றால், கதிசக்தி.  இந்த கதிசக்தி, தேசத்திலே தடையில்லா இணைப்புத்திறன் மீதான ஊக்கம்.  நகரங்களை நாம் அதிவிரைவு ரயில்களால் இணைக்க வேண்டும்.  நவீன நெடுஞ்சாலைகள் தேவை.   உள்நாட்டு நீர்வழிகள் தேவை.  விமான நிலையங்கள் தேவை.  பல்லடுக்கு தளவாடவியல் அமைப்புகள் தேவை.  நாம் துறைமுகங்களை வெறும், பொருட்களை இறக்குதல் ஏற்றுதல் இடங்களாக மட்டுமல்ல, உலகக் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சும் இடங்களாக மட்டுமல்ல, நாம் நமது துறைமுகங்களை, துறைமுகம்சார்  முன்னேற்றம் வளர்ச்சியை நோக்கிய திசையில், நாம் முன்னேற வேண்டும். 

நமது 7 போக்குகளின், 5ஆவது சக்தி, அதுதான் பாதுகாப்பு சக்தி.  நமக்கு பாதுகாப்பு சக்தியின் மகத்துவம் அனைத்து வகைகளிலும் உண்டு.  எனதருமை நாட்டுமக்களே, பாதுகாப்புத்துறையிலே தற்சார்பு என்பது, இதை பாரதமும் அனுபவித்து விட்டது உலகமும் பார்த்து விட்டது.  இது மிகமிக முக்கியமானது.  உலகநாடுகள், அவரவர் குறித்துச் சிந்திக்கும் போது, அப்போது பாரதம், உலகத்தின் சந்தையாகத் தேங்கி விட முடியாது.  பாதுகாப்புத் துறையிலே நாம் தற்சார்பு நிலையை அடைந்தே ஆக வேண்டும்.  அடுத்ததலைமுறை பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை, மேம்படுத்தி,  உலகத்துக்கே அளிக்கும் நாடாக ஆகும் திசையிலே, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.  நாம் ட்ரோன், மற்றும் ட்ரோனை எதிர்கொள்ளும் முறைகளையும் மேம்படுத்த வேண்டும்.  மேலும், ஹைப்பர்சோனிக் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், இவை மீதும் நாம், தலைமையேற்க  வேண்டும். 

நண்பர்களே சைபர் பாதுகாப்பும் கூட, அனைத்து இல்லங்களுக்கும் இன்று பிரச்சனையாகி வருகிறது.  இதுவும்கூட ஒரு பாதுகாப்புத் துறை தான்.  இதிலே நமது இளைஞர்களின் வல்லமை, இந்த வல்லமையின் பயன்பாட்டை, நாம் தேசத்திற்கும் உலகிற்கும் உதவும் வகையில் செய்ய முடியும். 

நமது 7 போக்குகளின் 6ஆவது சக்தி, பசுமை பொருளாதாரம்.  நீலப் பொருளாதாரம்.  இவையே பசுமை வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.  நாம் பசுமை ஹைட்ரொஜன், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, எரிசக்தி சேமிப்பு, பசுமை பெயர்ச்சி, பசுமை தயாரிப்பு, பிரும்மாண்ட அளவுகளிலே, நாம் கையகப்படுத்த வேண்டும்.  நாம் உலகினிலே, புவி வெப்பமயமாதல் பற்றி விவாதங்களே நடக்கும் வேளையிலே, நாம் பாதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.  நாம் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை அளித்து வருகிறோம்.  மேலும் பாரதம், இந்த பசுமை இயக்கத்தை, பெரும் வலுவோடு முன்னெடுத்துச் செல்கிறது.  பாரதத்திடம் நீலப் பொருளாதாரத்திற்கும் கூட, மிகப்பெரிய சந்தர்ப்பம் இருக்கிறது.  நம்மிடம் மிகப்பெரிய நீண்ட கரைப்பகுதி இருக்கிறது.  நீலப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.  மீன்வளத்துறை உண்டு.  கரைப்பகுதி சுற்றுலாத்துறை.  கடல் தொழில்நுட்பமுண்டு.  இப்படி எத்தனையோ துறைகள் இருக்கின்றன.  இவற்றிலே நாம் முன்னேற முடியும். 

என் கனிவான நாட்டுமக்களே, பாரதம், 7 போக்குகள் குறித்து முன்னேறும் வேளையிலே, நமது 7ஆவது போக்கென்றால், இது உலகினுக்கு, ஒரு விசேஷமான மகத்துவம் உண்டு.  அது என்னவென்றால், பாரதத்தின் மென்சக்தி.  பாரதத்தின் மென்சக்திக்கு ஒரு பலம் உண்டு.  இன்று யோகக்கலையானது, மொத்த உலகையுமே, பாரதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது.  யோகக்கலை உலகிற்கு சக்தியாக ஆகி வருகின்றது.  பாரதத்திற்கு நம்பிக்கைக்கான காரணமாக ஆகி வருகின்றது.  எந்த பாரதத்திடம், வழிபாட்டு மையங்கள் உள்ளதோ, எந்த பாரதத்திடம் ஆயுர்வேதம் உள்ளதோ, எந்த வகையிலே பாரதத்திடம், முழுமையான உடல்நல அமைப்புமுறை உள்ளதோ, இந்தியாவில் குணப்படுத்தல் இயக்கம் இருக்கிறதோ, நாம் உலகத்தினிலே, நமது திறமைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். 

கைவினைப் பொருளாகட்டும், கலாச்சாரமாகட்டும், திரைப்படங்களாகட்டும், நமது படைப்பாற்றல் உலகாகட்டும், வி எஃப் எக்ஸ் ஆகட்டும், நமது அனிமேஷனோ கேமிங்கோ ஆகட்டும், டிஜிட்டல் உள்ளடக்கமாகட்டும், படைப்புத்திறன் உலகினிலே, பாரதம் தனது திறமையை வெளிப்படுத்த முடியும்.  நாம் இவற்றை உலக அளவிலான திறமை என்ற வகையிலே, மேம்படுத்த வேண்டும்.  இன்று பாரதமானது, வேவ்ஸ் மாநாட்டுக்கு மிகப்பெரிய சக்தியளித்திருக்கிறது.  உலகம் மெல்லமெல்ல, பாரதத்தின் இந்த………. வோர்ல்ட் ஆடியோ விஷுவல், அண்ட் எண்டர்டெயின்மெண்ட் சம்மிட் இருக்கிறதே, இதற்காக காத்துக் கொண்டிருக்கிறது.  இதுவும் கூட, பாரதத்தின் மென்சக்தியை பாரதத்தின் படைப்புத்திறனை, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். 

என்னுள் நிறைந்த நாட்டுமக்களே, பாரதத்திடம் ஏராளமான வனவளங்கள் இருக்கின்றது.  நம்மிடத்திலே 100க்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்கள் இருக்கின்றன.  சாத்தியங்கள், அதிகம் இருக்கின்றன.  ஆனால் அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதிலே, நாம் பின்தங்கி இருக்கிறோம்.  நமது மென்சக்தி வாயிலாக நமக்கொரு சந்தர்ப்பம், உலகின் சுற்றுலாப்பயணிகளை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதற்கு.  நமது வல்லமையால் உலகை நாம் வெல்ல வேண்டும்.  நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்.  விரைவாகச் செய்ய வேண்டும்.  இது மட்டுமல்ல, உலகிலே விளையாட்டுக்கள் மீதான ஆர்வம், இது மிகப்பெரிய, ஈர்ப்பாக வேண்டும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சி இங்கே நடக்க வேண்டும்.  கச்சேரி பொருளாதாரம் வளர்ந்து வருகிறது இளைஞர்களை இது ஈர்க்கிறது.  உலகின் அனைத்துக் கலைஞர்களும் விரும்புகிறார்கள், பாரதத்தில் ஒருமுறையாவது கச்சேரி செய்ய வேண்டுமென்று.  இது மிகப்பெரிய சந்தர்ப்பமாகும்.  நாம் இதை ஒருங்கிணைக்க அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நண்பர்களே, 7 போக்குகளின் இந்த, 7 சக்திகள், 7 சக்திகள், இவை வெறும், ஒரு துறையில் முன்னேற்றம் அடைவதற்கு அல்ல.  முழுமையான ஒரு வழிமுறையோடு கூட, நாம் தேசத்தை, நாம் தாங்கியிருக்கும் இலக்கை நோக்கி லட்சியத்தை நோக்கி, அதைச் சென்றடைவதில் முனைப்போடு பணியாற்ற வேண்டும். 

எனதருமை நாட்டுமக்களே, நான் சில விஷயங்களைக் கூறினேன்.  ஆனால் நான் இதைத் தாண்டியும் சிந்திக்கிறேன்.  நான் தேசத்தில் ஒரு விழிப்பினை ஏற்படுத்த விரும்புகிறேன்.  நான் தேசத்தின் சக்தியை எழுப்பிவிட விரும்புகிறேன்.  தேசம் என்றால் அது அரசாங்கம் மட்டுமே அல்ல.  தேசன் என்றால் அனைத்துக் குடிமக்களின் இணைவு.  ஃபார்ச்சூன் 500 பற்றி, நாம் இது குறித்து நிறைய கேள்விப்பட்டு வந்திருக்கிறோம்.   வரவிருக்கின்ற பத்தாண்டுகளிலே, இந்த ஃபார்ச்சூன் 500இலே, 50 பாரதக் கம்பெனிகள் இந்தியாவுடையாக ஏன் இருக்கக் கூடாது, இதுவே நமது இலக்காக வேண்டும்.  இன்று வங்கித்துறை, மலர்ந்து வளமாக இருக்கிறது.  உலகின் தலைசிறந்த வங்கிகளிலே, பாரதத்தின் வங்கிகள் ஏன் கோலோச்ச முடியாது?  பாரதத்தின் வங்கிகளும் கூட, உலகின் தலைசிறந்த 5 வங்கிகளிலே, ஒன்றாக இருக்க வேண்டும். 

பாரதத்தின் மருந்தியல் துறை, ஃபார்மா, இந்தத் திசையில் நாம், நிறைய பணியாற்றி இருக்கிறோம்.  ஆனால் காலத்தின் தேவை, உலகின் 5 தலைசிறந்த ஃபார்மா கம்பெனிகளில், பாரதத்தின் ஒன்றிரண்டு கம்பெனிகளின் பெயர் ஒலிக்க வேண்டும்.  பாரதம், அதிலே தன்னிடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.  சட்ட கம்பெனிகள், தரச்சான்று கம்பெனிகள், காலத்தின் தேவை இல்லையா?  இவற்றின் உலகளாவிய தலைமை நம்மிடம் இருக்க வேண்டுமில்லையா?  திறமை உண்டு திறன்களுண்டு, நமக்கென நீண்ட வரலாறு உண்டு.  மொழிகளின் மீது புலமை உண்டு.  நாம் உலக அரங்கில் மிளிர வேண்டும்.  நமக்கென ஒரு ஆலோசனை நிறுவனம், கணக்கியல் நிறுவனம், உலகின் தலைசிறந்தவற்றில் ஏன் ஒன்றாக இருக்கக்கூடாது?  பாரதத்தின் தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகிலே தலைசிறந்து விளங்க வேண்டும்.  இதுவே நமது இலட்சியமாக வேண்டும்.  நமக்கே உரித்தான பிராண்ட் இருக்க வேண்டும்.  இதனிடம் உலகம், ஈர்க்கப்பட வேண்டும்.  நமது பிராண்ட் நமது தேசத்தின் அடையாளமாக வேண்டும்.  இது உலகினுக்கு, நிறைவான இடமாக வேண்டும், இந்தத் திசையிலே நாம் பணியாற்ற வேண்டும்.  இதன் பொருட்டு, நான் மாநில அரசுகளிடம் வேண்டிக் கொள்கிறேன். 

நான் உள்ளாட்சி அலகுகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.  பாரத அரசின் பொறுப்பும் கூட இது.  நாம் நமது சீர்திருத்த வேகத்தைக் கூட்ட வேண்டும்.  நாம், 2047 இலக்கிற்கு ஏற்ப, நமது அமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.  நாம் கடந்த கால விதிமுறைகளுக்கு ஏற்ப பயணிக்க முடியாது.  நாம் வரவிருக்கின்ற காலத்தின் கனவுகளுக்கு ஏற்ப விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.  இதை நாம் செய்தோமென்றால், எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நான் நாட்டுமக்களுக்கு, நம்பிக்கை அளிக்கிறேன், இதே பாதையில், எந்தச் சுணக்கமும் காட்டாமல், நாம் வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை எட்டியே தீருவோம்.  நாமனைவரும் இணைந்து இதை மேற்கொள்ள வேண்டும். 

மத்திய அரசாகட்டும் மாநில அரசுகளாகட்டும், தொழில்துறை ஆகட்டும், நாமனைவருமாக இணைந்து, முன்னேறியாக வேண்டும்.  நாம் தொடர்ந்து சீர்திருத்த வேண்டும், சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுக்க வேண்டும்.  நான் முன்னமேயே கூறியிருந்தேன்.  நாம் சீர்திருத்தங்களை, கட்டாயத்தினால் அல்ல, கடப்பாட்டுடன் செய்கிறோம்.  இலக்கை எட்ட இதை நாம் செய்கிறோம். 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (2)

எனதருமை நாட்டுமக்களே, பலமுறை, ஆதாரங்களின் குறைபாடு காரணமாக, தேசம் தடைப்படுவதில்லை.  ஆனால் தடைபடுவதற்கான காரணம், குறுகிய பார்வை தான்.  எண்ணங்கள் தடைப்படும் போது, எல்லைகளுக்கு உள்ளே, அவை அழுகத் தொடங்குகின்றன.  அப்போது, நம்மால், நமது வல்லமையைக் கூட அடையாளம் காண முடிவதில்லை.  தேசம், இன்று கச்சா எண்ணையைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.  நமது தவறான எண்ணப்பாடு காரணமாகத் தான் இது.  உங்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியமளிக்கலாம், நாங்கள், கடற்கரையோரத்திலே, 99 சதவீதம் நமது கரையோரப்பகுதிகளிலே, குறுகிய கண்ணோட்டம் காரணமாக, போகத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறோம்.  நாம் தான், கடலுக்குள்ளே சென்று, ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம்.  இது எண்ணப்பாட்டின் ஏழ்மை.  நாங்கள் இது தொடர முடியாது என்று முடிவெடுத்தோம்.  நாங்கள் அந்த 99 சதவீதத்தை, ஒரு காலத்தில், தடுக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது, நாங்கள் அதை, போகத் தடையில்லாத பகுதியாக, திறந்து விட்டோம்.  மேலும் இப்போது, கடலுக்கு உள்ளே கூட, ஆய்வு மேற்கொள்ள, புதியபுதிய களஞ்சியங்களைத் தேடும் திசையிலே, நாம் சுறுசுறுப்பாயிருக்கிறோம், முயற்சிகள் செய்து வருகிறோம்.  நாங்கள் கடந்த ஆண்டிலே, இந்தத் திசையிலே மகத்துவமான அடியெடுத்து, கடலைக் கடைதலுக்கான அறிவிப்பை வெளியிட்டோம்.  கடந்த நாட்களிலே நாங்கள், 85 கோடி ரூபாய், இந்தப் பணிக்காக, அளித்து பணிகளுக்கு வேகத்தை அளித்திருக்கின்றோம். 

எனதருமை நாட்டுமக்களே, எரிசக்திப் பாதுகாப்பு, என்று நான் கூறும் போது, நாம் மாற்று எரிசக்தி, ஆதாரங்கள் குறித்தும் கூட, முழுச்சக்தியை செலுத்துவது அவசியமாகிறது.  அந்த வகையிலே, எரிசக்தியின் சரியான பயன்பாட்டை அதிகரிப்பது, என்ற இந்தத் திசையினிலே, பாரதம் விரைவாக பணியாற்றுகிறது.  2014க்கு முன்னால் அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்னால், நமது தேசத்திலே, வெறும், 70, எழுபது நகரங்களில் மட்டுமே, குழாய்வழி எரிவாயு அமைப்பிருந்தது குழாயெரிவாயு அளிக்கப்பட்டது.  12 ஆண்டுகளிலே, இந்த 70 நகரங்களை நாங்கள், 700 நகரங்களாக ஆக்கி விட்டோம்.  இதன் பெயர் தான் வேகம்.  இது தான் விரிவாக்கம்.  2014க்கு முன்னால், அதிகபட்சம், 20-22 இலட்சம் வீடுகளிலே, குழாய்வழி எரிவாயு அளிக்கப்பட்டது.  இன்று, ஒண்ணே முக்கால் கோடி வீடுகளுக்கு, குழாய்வழி எரிவாயு கொண்டு செல்லும் பணி நடந்தேறி வருகிறது.  12 ஆண்டுகளுக்கு முன்னாலே, தேசத்திலே, சூரியசக்தியின் திறன், வெறும், 2 கிகாவாட்டாக இருந்தது.  2 கிகாவாட் மட்டுமே.  இன்றோ, 107 கிகாவாட்டை, நாம் எட்டியிருக்கிரோம். 

எனதருமை நாட்டுமக்களே, மேலும் ஒரு தகவலை அளிக்கிறேன்.  நாங்கள் இதன் ஆதாயங்கள், தேசத்தின் சாமான்யர்களுக்கும் மத்தியத்தட்டவர்களுக்கும் கிடைக்க வேண்டி, இந்தத் திசையிலும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறோம்.  நாங்கள் பிஎம் சூரியசக்தி இல்லம் இலவச மின்சாரம் திட்டத்தைத் தொடங்கினோம்.  இன்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது மிகக்குறைவான நேரத்திலே, 50 இலட்சம் வீடுகளிலே, சூரியசக்திப் பணிகள், என்ற புள்ளிவிவரத்தைக் கடந்து விட்டோம், விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.  இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இல்லங்களின் மின்கட்டணம், பூஜ்யமாகி விட்டது.  ஆயிரக்கணக்கான இல்லங்கள், தங்களுடைய பயன்பாட்டுக்கு மிஞ்சிய மின்சாரத்தை, இன்று விற்பனை செய்து பணம் ஈட்டுகிறார்கள்.  அனைத்துக் குடும்பங்களுக்கும் இந்தப் பணிக்காக, 80,000 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவியாக அளிக்கப்பட்டு வருகிறது.  இவற்றின் விளைவாகவே, நம்மால் இந்தப் பணியை நிறைவேற்ற முடிந்தது. 

எனதருமை நாட்டுமக்களே, உங்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியமளிக்கலாம்.  நமது ரயில்வே இருக்கிறதே, இதன் மின்மயமாக்கல் பணிகள், நமது தேசத்திலே 1925ஆம் ஆண்டிலே தொடங்கியது.  1925 மின்மயமாக்கல் பணிகள் தொடங்கினாலும், 90 ஆண்டுகளிலே, 1925 தொடங்கி, 90 ஆண்டுகளிலே, வெறும், 30 சதவீதம் மட்டுமே, ரயில்களின், மின்மயமாக்கல் நடந்தது.  அதாவது 90 ஆண்டுகளிலே 30 சதவீதம்.  நமது வேகத்தைப் பாருங்கள்.  இலக்கை அடைய நமது ஓட்டத்தைக் காணுங்கள்.  நாங்கள், இந்த ஒரு பத்தாண்டுக்குள்ளாகவே, 100 சதவீதம் பணியை நிறைவேற்றி விட்டோம்.   90 ஆண்டுகளிலே 30 சதவீதம், பத்தாண்டுகளிலே 70 சதவீதம்.  இதுதான் பணியாற்றல். இதன் காரணமாக, டீசலை, நாம் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டியிருக்கிறது.  இது சேமிக்கப்பட்டது.  மின்சாரத்தால் நமது ரயில்கள் இயங்கியதால் சுற்றுச்சூழலுக்கு சாதகமானது. 

எனதருமை நாட்டுமக்களே, இதோடு நாம் நிற்கவில்லை.  நாம் உலகத்தினிலே, பின்னடைந்திருக்க விரும்பவில்லை.  கடந்த நாட்களிலே நீங்கள் ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கலாம்.  பாரதமானது, எரிசக்தியின் ஒரு புதிய துறையையும் எட்டியிருக்கிறது.  தேசத்தின் முதல், ஹைட்ரொஜனால் இயங்கும் ரயில் தொடங்கப்பட்டது.  எனக்கு மகிழ்ச்சியான விஷயம், இது மிகவும் நீளமான ரயிலாகும்.  அதோடு மிகவும் சக்திவாய்ந்த ரயிலுமாகும்.  மேலும் உலகத்திலே, ஹைட்ரோஜன் ரயில் துறையிலும் பாரதம், தனது கொடியை நாட்டியிருக்கிறது. 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கடந்த 10-12 ஆண்டுகளில் நாம் தொடர்ச்சியாக, 1947 என்ற இலக்கை அடைய வேண்டி ஓடிக் கொண்டிருக்கிறோம்.  ஒன்றன்பின் ஒன்றாக, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.  நாம் யோசித்துக் கூடப் பார்க்கவில்லை.  அதாவது நாம் இதிலும்கூட, சில இடைஞ்சல்களை, எதிர்கொள்ள வேண்டிவரும் என்று.  கடந்த 10-12 ஆண்டுகளிலே, நாம் பல சங்கடங்களை சந்தித்து வருகிறோம்.  கொரோனா போன்ற உலகளாவிய பெருந்தொற்று, உலகம் முழுவதையும், கவலையில் ஆழ்த்தி விட்டது.  அனைத்து அமைப்புகளும் நிலைகுலைந்து போயின.  கொரோனாவிலிருந்து வெளிவந்தோம்.  போர் என்ற பயங்கரமான பூதம் பற்றிய செய்திகள் வரத்தொடங்கின.  ஒருபக்கம் உக்ரேன், மறுபுறம் மேற்காசியா, அனைத்து இடங்களிலும் நெருக்கடியான சூழ்நிலை. 

அதுமட்டுமா?  தொலைநோக்குப் பார்வையில் பலவற்றை கணித்திருக்கிறார்கள்!!  தேசத்தை பயமுறுத்துவது, தேசத்தை அச்சத்தில் ஆழ்த்துவது, தேசத்தைக் கவலைக்குள்ளாக்குவது, இதிலே சிலருக்கு சந்தோஷம் ஏற்படுகிறது!!  தடுப்பூசிகள் கிடைக்காது, யாரும் பிழைக்க முடியாது, ஒன்றும் ஆகப்போவதில்லை, மேற்கு ஆசியாவின் நெருக்கடி வந்தது, பெட்ரோல் பம்பிலே பெட்ரோல் கிடைக்காது, எரிவாயு கிடைக்காது, டீசல் கிடைக்காது, உரங்கள் கிடைக்காது, வகைவகையான வதந்திகளைப் பரப்பினார்கள். 

பாரத நாட்டவர்களை அச்சத்திலாழ்த்த கலவரம் ஏற்படுத்த, கவலைக்குள்ளாக மூழ்கடிப்பதில், சிலருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது.  ஆனால் தேசமானது, கவனித்து விட்டது.  அதாவது கடந்த 10-12 ஆண்டுகளின், செம்மையான திட்டங்கள் எப்படி பலனளிக்கிறது என்பதை.  மேலும் நாங்கள், இத்தனை பெரிய சங்கடங்களைத் தாண்டியும் கூட, குடிமக்களே கடவுளர்கள் என்ற மந்திரத்தை உள்வாங்கி, பாரதம் மேற்கொண்ட தயாரிப்புகள், ஒன்றன்பின் ஒன்றாக படிகள் மேற்கொண்டோம்.  இப்படிப்பட்ட சங்கடம் ஏற்படும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.  ஆனால் இந்தச் சங்கட காலத்திலும்கூட, இவை அனைத்தும், உதவிகரமாக இருந்தன.  மேலும் இன்று தேசத்திலே, எரிவாயு இருக்கிறது பெட்ரோல் உண்டு யூரியா உண்டு.  நாம் நமது பலத்தின் துணையால் நிற்கிறோம் முன்னேறுகிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, உலகின் இந்தச் சங்கடங்களின் தாக்கம், அனைவரின் மீதும் இருந்தது நாம் விதிவிலக்கல்ல.  யூரியாவின் விலை, உலகிலே ஒரு மூட்டை 3000 ரூபாய் வரை சென்றது.  இன்றும் கூட நமது நாட்டின் விவசாயிகளின்மீது நாம், அந்தச் சுமையைச் சுமத்தவில்லை, அரசாங்கம் தனது தோள்களிலே அதைச் சுமக்கிறது.  உலகச் சந்தைகளிலே மூடை 3000 ரூபாய், என்ற விலைக்கு வாங்குவதை, நாம் விவசாயிகளுக்கு வெறும் 300 ரூபாய் விலைக்குக் கொடுக்கிறோம்.  இது மட்டுமல்ல, டிஏபி, இன்று உலகச் சந்தையிலே 5000 ரூபாயாகி விட்டது.  ஆனால் என் நாட்டு விவசாயிக்கு சங்கடமேதும் வரக்கூடாது, என்பதற்காக 1350 ரூபாய்க்கு டிஏபியை அளிக்கும் பணியை, நாங்கள் செய்து வருகிறோம். 

என்மனம்நிறை நாட்டுமக்களே, ஒரு காலத்திலே, நான் தற்சார்பு பாரதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, சில, நபர்களோ, ஏசி அறைகளிலே அமர்ந்து ஆலோசனை கூறும் இவர்கள் அப்போது உலகமயமாக்கத்துக்கு என்னவாகும் என்று வினவினார்கள்.  ஆனால் உலகமே கவனிக்கிறது கடந்த பத்தாண்டுகளிலே, உலகமயமாக்கல் என்று கூறுவதையே உலகம் விட்டுவிட்டதாகத் தெரிகிறது.  எங்கிருந்து உலகமயமாக்கல் பற்றிப் பேசுவார்களோ அவர்களே அமைதியாக பேசாமல் இருக்கிறார்கள்.  உலகின் அனைத்து நாடுகளும், தங்கள்தங்கள் இயல்புக்கு……… ஏற்றவகையிலே நடக்கிறார்கள்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தச் சங்கடமான காலகட்டத்திலே, சில நபர்களோ, தங்களுடைய நிபுணத்வத்தை வெளிப்படுத்தும் வகையிலே, ஆதாரங்களை ஆயுதங்களாக ஆக்கும் வகையிலே, விளையாடிப் பார்த்தார்கள்.  உலகம், தன்னிடம் என்ன இருக்கிறதோ, அதை ஆயுதமாக ஆக்க முனைந்திருக்கிறது.  ஆதாரங்களின் ஆயுதமாக்கல்.  ஆயுதங்களாகப் பயன்படுத்தல்.  பெட்ரோல் டீசல் செயற்கை உரங்கள், மருந்துகள், தொழில்நுட்ப சிப்புகள்.  இது மட்டுமல்ல, நிலத்தைக் கூட ஆயுதமாக்குகிறார்கள்.  இத்தகைய காலகட்டத்திலே, நாம் தற்சார்பு என்ற மந்திரத்தைத் தாங்கி பத்தாண்டுகள், சரியான திசையிலே செல்லாமல் இருந்திருந்தால், நம்மால் கற்பனை கூட செய்திருக்க முடியாது, எப்படி இத்தகைய சங்கடங்களை எதிர்கொண்டிருப்போம் என்று.  மேலும் நமது தயாரிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

என் உளம்நிறை நாட்டுமக்களே, இன்னொரு புறத்திலே, இன்று பாரதத்தின் கருத்து, முழுமையாக வளர்ந்து வருகிறது.  இன்று பாரதம், உலகின் பார்வையில், ஒரு பலமான மற்றும் மதிப்புமிக்க தேசம் என்ற வகையிலே, ஆகி வருகிறது.  பாரதத்திடம், திடமான அரசியல்ரீதியான அங்கீகாரம் இருக்கிறது.   திடமான அரசாங்கம் இருக்கிறது.  பாரதத்திடம் உயிர்ப்பான ஜனநாயகம் உள்ளது.  பாரதத்திடம் பலமான நீதியமைப்பு உள்ளது.  மேலும் நம் அனைவருக்கும் திசைகாட்டும், பாரதத்தின் அரசியல் சட்டம் இருக்கிறது.  மேலும் இப்போது உலகம், நமது இந்த வல்லமைகளை அடையாளம் கண்டுவருகிறது.  அந்த வகையிலே, 2014க்குப் பிறகு, உலகம் கிட்டத்தட்ட 40 நாடுகளுடன், நமது எஃப்டிஏ ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது. 

நீங்களே பாருங்கள்!!  எத்தனை பெரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்பதை.  அண்மையில் நடந்த, வர்த்தக ஒப்பந்தம் இருக்கிறதே, இது மிகப்பெரிய வாய்ப்பு.  ஆகையினாலே சிறப்பாக, நான் எம் எஸ் எம் ஈக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், அதாவது நாம், இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது.  உலகத்தை நாம் சென்றடைய வேண்டும்.  பாரத உற்பத்தியின் அனைத்துப் பொருட்களும், உலகச் சந்தைகளில் சென்றடைய, மேலும், நமது ஜவுளித்துறையாகட்டும், நமது இயந்திரங்களாகட்டும், நமது மருந்துகளாகட்டும், இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.  ஆனால் உலகளாவிய அளவுகோல்கள், அவற்றைத் தாண்டி நாம் செயல்பட வேண்டும்.  உலகம் அளிப்பவற்றை விடச் சிறப்பான தரத்திலே நாம் அளிக்க வேண்டும்.  உலகம் அளிப்பதைக் காட்டிலும் விலை மலிவாக நாம் அளிக்க வேண்டும். 

பஞ்சாபின் லுதியானா தொடங்கி, தமிழ்நாட்டின் திருப்பூர் வரை, நமது ஜவுளித்துறை, உலகைச் சென்றடைய முடியும்.  இதுமட்டுமல்ல, கேரளம் தொடங்கி குஜராத் வரை, தமிழ்நாடு தொடங்கி வங்காளம், இந்த நமது கடற்கரைப் பகுதி, நமது மீனவ சகோதர சகோதரிகள், இன்று, இந்த எஃப்டிஏ காரணமாக, நமது ப்ரான்கள்,  அதாவது இறால்கள், இதன் ஏற்றுமதிக்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன.  நமது கடல் உணவு வகைகள், உலகச் சந்தைகளில் பெருகும் சாத்தியங்கள் அதிகமாகியிருக்கின்றன.  மேலும் என்ன விரும்புகிறேன் என்றால், நாம் இந்தச் சூழலை சாதகமாக்கிக் கொண்டு, நாம் முன்னேறும் வகையிலே, இந்தப் பணிகளை ஆற்ற நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். 

என் மனம்நிறை நாட்டுமக்களே, நான் உங்கள் முன்னால் வைத்த பங்களிப்பை, இதன் பின்னணியிலே, 2047 என்ற இலக்கின், பலமான அஸ்திவாரத்தின் மீது அமைந்திருக்கிறது.  2047 வளர்ந்த பாரதம் என்ற இலக்கு, கடந்த 10-12 ஆண்டுகளிலே, நாட்டுமக்கள் வெளிப்படுத்திய திறமை, அந்த திறமைகளின், அங்கமாகும்.  அந்த வகையிலே என்னுடைய சகோதர சகோதரிகளே, நூற்றாண்டின் நான்கில் ஒரு பங்கு கடந்து விட்டது.  அடுத்த நான்கில் ஒருபங்கு, நமக்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தது.  நாம் இனி தடைப்பட முடியாது.  நமது வேகம் குறைந்திட முடியாது.  நமது திசை, தீர்மானிக்கப்பட்டு விட்டது.  நாம் இதை அடைந்தே ஆக வேண்டும். 

அந்த வகையிலே, நாம் நமது பணிப்பாங்கை மாற்றியாக வேண்டும்.  நமது பணிக்கலாச்சாரத்தை மாற்றும் வகையிலே, நாம் நமது எண்ணப்பாட்டையும் மாற்ற வேண்டும்.  நாம் நமது பணியின் வேகத்தையும்….. மாற்றியாக வேண்டும்.  இந்தப் பணி, கடந்த 6-7 தசாப்தங்களிலே நடக்கவில்லை.  இந்தப் பணியை நாம் வரவிருக்கின்ற 6-7 ஆண்டுகளிலே செய்தாக வேண்டும்.  தேசத்தின் இளைஞர் சக்தி மீது, என்னுடைய அசையாத நம்பிக்கை உண்டு.  என் நாட்டின் இளைஞர்களின் மீது, என் நாட்டின் பெண்கள் சகோதரிகளின் மீது, என் நாட்டின் விவசாயிகளின் மீது, என் தேசத்தின் தொழிலாளர்களின் மீது, அதாவது நாம், நம்மால் இந்தக் கனவை மெய்யாக்க முடியும் என்று. 

அந்த வகையிலே, நாம் சீதிருத்த வேகத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.  நான் சீர்திருத்தங்கள் பற்றிக் கூறும் போது, சீர்திருத்தங்கள், இவை நமக்குக் கட்டாயங்கள்.  வெறும் சீர்திருத்தங்களா?  இல்லை இவை நமக்கு மந்திரச் சொற்கள்.  இந்தச் சீர்திருத்தங்கள், நமது நெஞ்சுறுதிகள்.  நாம் நெஞ்சுறுதியோடு, நாம் சீர்திருத்த விரைவுவண்டியிலே பயணிக்கிறோம்.  வரவிருக்கின்ற நாட்களிலும் கூட, அடுத்தகட்ட சீர்திருத்தங்களை நோக்கி முன்னேற இருக்கிறோம்.  அந்த வகையிலே அரசாங்கம், சமூகம், தொழில்துறை, உற்பத்தியாளர்கள், விவசாயிகள், என அனைவருமே, தங்களுடைய பாரம்பரிய வழிமுறைகளை சீர்திருத்த வேண்டும்.  எண்ணப்பாட்டிலே சீர்த்திருத்தம் வேண்டும்.  நமது இலக்குகளில் சீர்த்திருத்தம் வேண்டும்.  அந்த வகையிலே, எனதருமை நாட்டுமக்களே, நாம் தீர்மானமான பாதையில் பயணித்தாக வேண்டும்.  நான் இன்று, அந்தக் காலமும் நினைவுக்கு வருகிறது, அப்போது தேசம், பாரதத்தின் வல்லமையை, சப்தசிந்து என்ற வகையிலே, நாம் அறிந்தோம் தெரிந்தோம் புரிந்தோம். 

இப்போது வளர்ந்த பாரதத்தை உருவாக்க, நமக்குப் புதிய போக்குத் தேவை.  இன்று செங்கோட்டையின் மீதிருந்து, நான் தேசத்தின் முன்பாக, சக்தியின் ஏழு போக்குகளை அறிவிப்பு செய்கிறேன்.  வரவிருக்கின்ற 6-7 ஆண்டுகளிலே, கடந்த 5-6 தசாப்தங்களிலே நடக்காததை, அந்த 7 போக்குகளால், வல்லமையால் நம் ஆற்றலால், நமது தேசத்திற்கு புதிய உயரம் புதிய வேகத்தை அளிப்போம்.  புதிய இலக்குகளை எட்டக்கூடிய வல்லமையை அளிப்போம்.  இதோடு கூடவே, தேசத்தின் இளைஞர் சக்தியின் ஆற்றலும், தேச நிர்மாணத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படும்.  அவர்களின் சக்தி இணைக்கப்படும்.  வர்விருக்கின்ற நாட்கள்லே, நான் பேசுகின்ற 7 போக்குகள், இந்த 7 போக்குகளின் முதல் சக்தியானது, தயாரிப்பு வல்லமை. 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, இன்று நாமனைவரும், 80ஆவது, சுதந்திர, திருநாளைக் கொண்டாடுகிறோம்.  இன்று, அனைத்து இதயங்களின் துடிப்பு, வந்தே மாதரம் முழக்கத்தில் எதிரொலிக்கின்றது.  இன்று, அனைத்து இல்லங்களிலும் மூவண்ணக்கொடி.  அனைத்து மனதிலும் மூவண்ணக்கொடி.  மேலும் தேசம், உற்சாகம் மற்றும் ஊக்கத்தோடு, புதிய உறுதிப்பாடுகளைத் தாங்கி, இன்று, முன்னேறிக் கொண்டிருக்கிறது.  உங்களனைவருக்கும், சுதந்திரத் திருநாளின், பலப்பல நல்வாழ்த்துக்கள்.  தேசம் இன்று, மகத்தான மைந்தர்களை நினைவில் கொள்கிறது, அவர்கள் தாம், தேசத்தின் சுதந்திரத்திற்காக, தியாகம், உயிர்த்தியாகம் புரிந்திருக்கிறார்கள், தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.  தங்களுடைய தவம், தியாகம் மற்றும் உயிர்த்தியாகம் வாயிலாக, சுதந்திரத்தின் ஒரே இலக்கை மனதில் தாங்கி, தங்களுடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிறார்கள்.  வணக்கத்திற்குரிய அண்ணல் அவர்கள், அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள், உயிர்த்தியாகத்தின் மகத்தான பாரம்பரியத்தை, உயிர்த்தெழச் செய்யும், மகத்தான புரட்சியாளர்களுக்கு, இன்று நான் சிரத்தையுடனனான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.  இன்று இந்த நிகழ்ச்சியிலே, பங்கெடுத்துக் கொண்டிருக்கிற, அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுப்பூர்வமான கணமாகும்.  சுதந்திரத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று, செங்கோட்டையிலிருந்து முதன்முறையாக, வந்தே மாதரம் எதிரொலிக்கின்றது.  இன்று தேசத்தின் குடிமக்கள், வந்தே மாதரத்தின் 150ஆவது ஆண்டினைக் கொண்டாடும் வேளையில், இதைவிடச் சிறப்பான, சந்தர்ப்பம் வேறு என்னவாக இருக்க முடியும்? 

எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களிலே, தேசத்தின் சில பாகங்களிலே, வெள்ளத்தின் சீற்றம் காணப்பட்டது, நிலநடுக்கத்தின் பயங்கரத்தைக் காண முடிந்தது, பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.  அவர்களின் துக்கம்-துயரத்தை, நாம் நன்றாகவே, அனுபவித்தோம்.  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் ஆறுதல் அளிக்கிறேன், அதாவது நாங்கள், மற்றும் தேசம் முழுவதும், அவர்களுக்குத் துணை நிற்கிறது. 

எனதருமை நாட்டுமக்களே, எந்த ஒரு தேசமும், எப்போது மகோன்னதமாக ஆகிறது என்றால், தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றும் போதுதான்.  அப்போது, தனது கனவுகள், தனது உறுதிப்பாடுகள், மேலும் தனது வல்லமையின் துணையாலே, முன்னேறுகிறது.  எனது நாட்டுமக்களே, நாம் சிறிய கனவுகளால் நிறைவடையப் போகிறவர்கள் இல்லை.  நாம், பெரிய கனவுகள், ஏனென்றால் பெரிய கனவுகள், நமது எண்ணப்பாட்டையும் விரிவடையச் செய்கிறது.  நமது எண்ணங்களின் வீச்சினை ஆழமாக ஆக்கவும் செய்கிறது.  நமது உறுதிப்பாடுகள், உறுதியானவையாக இருக்க வேண்டும்.  உறுதிப்பாடுகள் உறுதியானவையாக இருக்கும் போது, இடர்ப்பாடுகளிலிருந்து, சங்கடங்களுக்கு இடையிலிருந்து, தேசத்தை மீட்டெடுக்க, வல்லமை  தானே வெளிப்பட்டு ஒளிர்கிறது. 

எனக்கு உவப்பான நாட்டுமக்களே, நமது உறுதிப்பாடுகளும் கூட, பெரியவையாக இருக்க வேண்டும்.  ஏனென்றால், கனவுகள் உயர்வானவையாக இருக்கும் போது, உறுதிப்பாடுகள் உயர்ந்து இருக்கும் போது, அப்போது நமது வல்லமையின் வீச்சும் பலப்படுகிறது.  நமது முயற்சிகளின், உயரங்களும் ஓங்குகிறது.  அப்போது தான், நம்மால், கனவுகளை மெய்ப்பிக்கச் செய்ய முடியும். 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று பாரதமும் கூட, ஒரு மிகப்பெரிய கனவினைக் கண்டிருக்கிறது.  திடமான உறுதிப்பாட்டுடன் இதைக் கண்டது.  புதிய உயரங்களை முத்தமிடப் பார்த்திருக்கிறது.  அந்தக் கனவு என்ன தெரியுமா?  சுதந்திரத்தின் 100 ஆண்டுகள் ஆகும் வேளையிலே, 2047ஆம் ஆண்டினிலே, நாம், வளர்ந்த பாரதம், படைத்தே தீருவோம்.  140 கோடி நாட்டுமக்களின் வல்லமையின் துணையாலே, இந்த இலட்சியத்தை நாம் அடைந்தேயாக வேண்டும்.  மேலும் உலகத்தின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட தேசம், வளர்ந்த நாடாகும் உறுதிப்பாட்டை மேற்கொள்ளும் போது, அப்போது உலகின் பார்வையிலும் கூட, நமது சாகஸத்தை அடையாளப்படுத்திக் காட்டுகிறது.  உலகம், நம்மைக் காணும் கண்ணோட்டத்திலே மாறுதல் ஏற்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. 

எனதருமை நாட்டுமக்களே, இதை நான் சும்மா ஒன்றும் சொல்லவில்லை.  கடந்த 12 ஆண்டுகளிலே, தேசத்தின் கோடானுகோடி மக்கள், தலித்துக்களோ பாத்க்கப்பட்டவர்களோ பிற்படுத்தப்பட்டவர்களோ பழங்குடியினத்தவரோ, கிராமத்தில் வசிப்பவரோ நகரில் வசிப்பவரோ, ஏழைகளோ, மத்தியத்தட்டவரோ, இளைஞரோ முதியவரோ பெண்களோ ஆடவர்களோ, வடக்கோ தெற்கோ மேற்கோ கிழக்கோ, அனைவரும், கடந்த 12 ஆண்டுகளிலே, ஒரு உறுதிப்பாட்டுடனே, அர்ப்பணிப்பு உணர்வோடு, தேசத்தை புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்வதில், அனைத்துவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  அவர்களின் முயற்சிகளை மிகுந்த மரியாதையுடன், நான் ஏற்றுக் கொள்கிறேன்.  அதன் விளைவாகவே, இத்தனை குறைவான நேரத்திலே, 25 கோடி நாட்டுமக்கள், ஏழ்மையைத் தோற்கடித்து, ஏழ்மையிலிருந்து வெளிவந்திருக்கிறார்கள்.  இந்த நாட்டுமக்களின் முயற்சியின் விளைவாகவே, நாம், ஒருகாலத்தில் கடைநிலை 5 நாடுகளில் இருந்தது மாறி, 12 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, நாம், ஒரு பெரிய பொருளாதார சக்தியாக விரைவாக முன்னேறும் பொருளாதாரமாக ஆகியிருக்கிறோம். 

நண்பர்களே, தேசம் விடுதலை அடைந்தது, பல கனவுகளைத் தாங்கி விடுதலை அடைந்தது.  ஆனால், நாம் வேகத்தை எட்ட முடியவில்லை.  விரைவை அடைய முடியவில்லை.  ஆகட்டும் நடக்கட்டும், பார்த்துக் கொள்ளலாம் பார்க்கலாம், இதில் ஊறிப்போனோம்.  2014ஆம் ஆண்டு வந்த போது, உலகம் முழுவதும், நம்மை கடைநிலை 5 நாடுகளிலே, பிடித்துத் தள்ளி விட்டன.  அந்த வேளையிலே, கடந்த 12 ஆண்டுகளிலே, பாரதம், ஒரு புதிய விரைவைத் தனதாக்கிக் கொண்டது.  விரைவு கதியினிலே, நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  மேலும் தேசத்தின் மக்களின் உறுதிப்பாடு, இனி,  கோடி நாட்டுமக்களின் வல்லமை பராக்கிரமத்தைத் தடுப்பது என்பது, இயலாத காரியம். 

அன்பான நாட்டுமக்களே, கடந்த 12 ஆண்டுகளிலே, பாதுகாப்புப் பொருட்களின் உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது.  காதி மற்றும் கிராமப் பொருட்களின், உற்பத்தி, கிட்டத்தட்ட 5 மடங்காகி இருக்கிறது.  மின்னணுப் பொருட்களின் தயாரிப்பிலே, கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரிப்பு.  நவீன ரயில் கோச்சுகளின் அமைப்பு, 21 மடங்கு அதிகரித்திருக்கிறது.  மொபைல் பேசிகளின் உற்பத்தி, 33 மடங்கு அதிகரிப்பு, இது மட்டுமல்ல, நவீன காலத்தைக் கணக்கில் கொண்டு, டிஜிட்டல் மற்றும் புதுமைகள் படைக்கும் வகையிலும், நாம் நமது அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.  இணையப் பயன்பாட்டாளர்கள், இணய கன்ச்யூமர்கள், கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்திருக்கிறார்கள்.  காப்புரிமை வழங்கல் எண்ணிக்கை, 4 மடங்கு அதிகரித்திருக்கிறது.  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, 100 மடங்கு அதிகரிப்பு.  சாதாரண மனிதர்களின் வசதிகள் என்பதிலும் கூட, நாங்கள் அதே முனைப்போது பணியாற்றினோம். 

ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக, 15 மடங்கு அதிக வேகத்தோடு, நாங்கள், குழாய்வழி குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்தினோம்.  ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக, 6 மடங்கு அதிக விரைவாக மக்களுக்கு, எரிவாயு இணைப்புகளை அளித்தோம்.  ஒவ்வோர் ஆண்டும் 4  மடங்கு அதிக வேகத்தில், ஏழைகளுக்கு கழிப்பறை அமைக்கும் பணியைப் புரிந்திருக்கிறோம்.  ஒவ்வொர் ஆண்டும் 3  மடங்கு அதிக வேகமாக, ஏழைகளுக்கு வீடு வழங்கும் பணியை ஆற்றியிருக்கிறோம்.  தேசத்திலே, ஆளுகையிலே பெரிய மாற்றம் ஏற்பட்டது.  ஆயிரக்கணான எண்ணிக்கையிலே, நாங்கள் ஒப்புதல்களுக்கு முடிவு கட்டினோம்.  நூற்றுக்கணக்கான் எண்ணிக்கையிலே, பழைய சட்டங்களுக்கு முடிவு கண்டோம். 

கடந்த நூற்றாண்டின் சட்டங்களைக் கொண்டு, 21ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் காண முடியாது.  நாங்கள் நவீன கட்டமைப்புக்காக, மெட்ரோவின் விரிவாக்கத்தைச் செய்தோம்.  நாங்கள் பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு பலமளித்தோம்.  எந்த வேகத்திலே வேலை, எந்த அளவுக்கு வேலை என்றால், இவையனைத்தும், இந்த வேகம், இந்த விரிவு, இந்தச் சாதனை, சுதந்திரத்திற்குப் பிறகு, முதன்முறையாக, கடந்த பத்தாண்டுகளிலே பார்க்க முடிந்தது.  மேலும் இத்தனை, சாதனைகள் நம்முன் இருக்கையிலே, இத்தனை வேகத்தைக் காணுகையில், நாட்டுமக்களின் வல்லமை, ஒவ்வொரு கணமும் வெளிப்படுகிறது.  அந்த வகையிலே, 2047ஆம் ஆண்டிலே, வளர்ந்த நாடாக ஆகும் உறுதிப்பாடு, நிறைவேறாமல் இருக்க முடியாது.  இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும், என்ன சான்று பகர்கிறது என்றால், அதாவது நாம், முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, ஆனால் இதற்காக, தன்னம்பிக்கை அவசியமாகிறது.  சுயமரியாதை அவசியமாகிறது.  மேலும் இதோடு கூடவே, தற்சார்பு பாரதம் ஆவதும் அவசியமாகின்றது.  அந்த வகையிலே, கடந்த ஆண்டுகளிலே, நமது நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால், அதாவது பாரதத்தை, நாம் மற்ற நாடுகளை, சார்ந்து வாழச் செய்ய முடியாது.  நாம் தற்சார்புடையவர்களாக ஆக வேண்டும்.  உலகத்திலே, பல விஷயங்கள் கிடைக்கின்றன, மலிவாகக் கிடைக்கின்றன, விரைவாகக் கிடைக்கலாம், ஆனால் இவற்றால், நமது வல்லமையை வளர்த்தெடுக்க முடியாது.  இது நமது வல்லமையின் உரைகல்லாகவும் இருக்க முடியாது.  அந்த வகையிலே, நாமும் நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  நமது நலன்களின் பாதுகாப்பை, நாமே தான் செய்து கொள்ள வேண்டும்.  அந்த வகையிலே, தற்சார்பு பாரதம் என்ற மனவுறுதியை, மிகவும் உறுதிப்பாட்டோடு, நாம் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  இந்தியாவில் தயாரிப்போம், சுதேசி, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, இந்த அனைத்துத் துறைகளிலும், இன்று, அனைத்து இந்தியர்களின் மனமும், இணைந்து கொண்டிருக்கிறது.

என் கனிவான நாட்டுமக்களே, நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டை அளிக்கிறேன் குறைகடத்திகள்.  தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, உலகிலே குறைகடத்திகள் பற்றிப் பேசப்பட்டது.  நமது நாட்டிலும் கூட பேசப்பட்டது.  ஆனால் குறைக்கடத்திகள் விஷயத்தில் பெரிய திட்டம், முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.  மேலும், இன்று நிலைமை என்ன?  இன்றைய டிஜிட்டல் உலகினிலே, இன்றைய தொழில்நுட்பத்தினிலே, சிப்பின் மகத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம்.  எந்த ஒரு மின்னணுப் பொருளாகட்டும், நமது மருத்துக் கருவியாகட்டும், நமது போக்குவரத்துப் பாதையாகட்டும், அனைத்திலுமே, சிப் மிக அவசியமானது.  மேலும் இந்த, இந்த சிப் இல்லாமல், உலகம் தடைப்பட்டுப் போகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.  அந்த வகையிலே, பாரதமானது, தற்சார்பை எட்டும் திசையினிலே, தனது குறைக்கடத்தி ஆலை பெரிய ஆலை, 3 குறைக்கடத்தி ஆலைகளை, தொடங்கி இருக்கிறது.  என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், அங்கே தயாராகும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவும் தொடங்கிவிட்டன.  நான் நாட்டுமக்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன், வரவிருக்கின்ற 7-8 ஆண்டுகளிலே, மேலும், 5-7 அல்லது 8, குறைக்கடத்தி ஆலைகள், மிகவும் விரைவாகத் தொடங்கப்பட இருக்கின்றன.  இந்த தற்சார்பு பாரதம், வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணத்திலே, நமக்கு பாதையை அளிக்கும்.

என்மனம் நிறை நாட்டுமக்களே, இதே போன்ற விவாதம், முக்கியமான கனிமங்கள் தொடர்பாகவும் இருக்கிறது.  மொத்த தொழில்நுட்பமும், முக்கியமான கனிமங்களையே சார்ந்திருக்கிறது.  பாரதம், இதிலும் கூட, தன்னைத் தானே, பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கிறது.  இந்த முக்கியமான கனிமங்கள் என்ற இலட்சியம் மெய்ப்பட, தேசிய முக்கிய கனிமங்களை, நாங்கள் அடையாளப்படுத்தியிருக்கிறோம்.  அண்மையிலே, முக்கியமான கனிமங்களின் இடைவழியை, நாங்கள் அறிவித்திருக்கிறோம்.  பல தேசங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.  உலகின் பல நாடுகள், இப்போது இந்த  முக்கியமான கனிமங்கள் திசையிலே, பாரதத்தின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. 

எனதருமை நாட்டுமக்களே, அது குறைகடத்திகளாகட்டும், முக்கியமான கனிமங்களாகட்டும், இதைப் போலவே, எந்தத் தொழில்நுட்பத்தை நோக்கி நாம் பயணிக்கிறோமோ உலகம் பயணிக்கிறதோ, அதில் எரிசக்தியின் மகத்துவம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.  நாம் எரிசக்தி இல்லாமலே, இந்த உலகத்தை இயங்கச் செய்ய முடியாது.  அந்த வகையிலே, நாம், சிப்பாகட்டும், ஏஐ ஆகட்டும், தரவு மையங்களாகட்டும், நாம், மிகப்பெரிய அளவிலே எரிசக்தியை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.  எரிசக்திப் பாதுகாப்பு, இது நமது காலத்தின் தேவையாகிறது.  அந்த வகையிலே, நாங்கள் தொடக்கத்திலிருந்தே, இந்தத் திசையினிலே ஒன்றன்பின் ஒன்றாக, பலமான அடிகளை முன்வைத்திருக்கிறோம். 

எரிசக்திப் பாதுகாப்பின் மிகப்பெரியதொரு ஊடகம், அது அணுசக்தி ஆற்றல்.  ந்யூக்லியர் எனர்ஜி.  நாங்கள் நாடாளுமன்றத்தில் அமைதிச் சட்டத்தை இயற்றி, ஒரு புதிய இலக்கை நோக்கிச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  2047ஆம் ஆண்டுக்குள்ளாக, நாம், 100 கிகாவாட், அணுசக்தி ஆற்றல் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.  இந்த தசாப்தத்திலே, நாம், 5 புதிய அணுசக்தி ஆலைகளை, தொடங்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.  இந்த ஆண்டிலே, பாரதம், ஃபாஸ்ட் ப்ரீடர் அணுசக்தி தொழில்நுட்பத்திலே, வல்லமையை அடைந்து, ஒரு முக்கிய கட்டத்தைக் கடந்திருக்கிறோம்.  இதன் காரணமாக, அணுசக்தி ஆற்றலிலே, தற்சார்பை நோக்கிய திசையினிலே, நாம் ஒரு மிகப்பெரிய, வெற்றியின், படியை வைத்திருக்கிறோம். 

பிரதமர் உரையின் தொடர்ச்சி… அடுத்த செய்திக் கட்டுரையில் – சுட்டி

ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

janagai mariamman adipooram - 2026

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வளையல்கள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலுக்கு பெண்களுக்கு கோவில் சார்பில் வளையல்கள் வழங்கப்பட்டது.

முன்னதாகஆடிப்பூர நாளை முன்னிட்டு, ஜெனகை மாரியம்மனுக்கு பல்வேறு வகையான மங்கள திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து, ஆடிப்பூரத்தின் சிறப்பம்சமாக அம்மனுக்கு வளையல் மாலை சாற்றப்பட்டது. சர்வ அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபா ஸ்ரீ ஆகியோர் ஆடிபுர விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல் குருவித்துறை பேச்சி அம்மன் கோவில் திருவேடகம் துர்க்கை அம்மன் கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

srivilliputhur andal rangamannar adi pooram ther - 2026

ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிபூர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள் திரண்டதால் குலுங்கியது கோதை நகர் ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிபூரத்தன்று தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் குவிந்ததால் கோதை நகர் குலுங்கியது. பக்தர்கள் கோபாலா கோவிந்தா என உற்சாக கோஷமிட்டு தேரை விரைவாக இழுத்து நிலையம் சேர்த்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த் திருவிழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இந்த ஆண்டு ஆடித் தேர்த் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம், ஐந்து கருட சேவை என, பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஆக.14ம் தேதி இன்று, வெகு விமர்சியாக நடைபெற்றது. அதிகாலை 4:30க்கு ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார்கள். அப்பொழுது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து காலை 8:45 மணிக்கு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக தொடங்கியது. தேரோட்டத்தை அமைச்சர்கள் ச. கீர்த்தனா கு. ஜெகதீஸ்வரி ராம்கோ நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி. ஆர்.வெங்கட்ராம ராஜா மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா, சட்டமன்ற உறுப்பினர் எ. கார்த்திக் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

மாவட்ட எஸ். பி. கௌதம் கோயல் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், மதுரை அறநிலையத் துறை இணை ஆணையர் செ. மாரியப்பன், உதவி ஆணையர் மற்றும் கோவில் தக்கார் மு. நாகராஜன், கோவில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாள் உட்பட, பல்லாயிரக் கணக்கான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.தேர் சரியாக 11:55 மணியளவில் நிலையம் சேர்ந்தது.

திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் நீர் மோர் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதி போக்குவரத்து வசதி பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தேர் நிலையம் அடைந்ததும் கோயில் நிர்வாகம் சார்பாக தேரை இழுத்து நிலையம் சேர்த்த பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரின் மீது ஏறிச்சென்று ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசித்தனர். தேரோட்டத்தினை முன்னிட்டு ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் பக்தர்களுக்கு இடை விடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தின் போது போலீசார் கோயிலை சுற்றி பல இடங்களில் தடுப்பு வேலி அமைத்து பக்தர்களை திசை திருப்பி விட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

srivilliputhur andal srirangam maalai mariathai - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை இன்று வந்தடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகஸ்ட் 14 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா ஆக 14ஆம் தேதி காலை சிறப்பாக நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது.

இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்தன்று நடைபெறும் தேர் திருவிழாவின் போது ஆண்டாளுக்கு மரியாதையாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மஞ்சள் குங்குமம் சந்தனம் வளையல் பழங்கள் தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருள்கள் கொண்டு வருவது வழக்கம்.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்களப் பொருட்கள் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அதிகாரியும் இணை ஆணையுருயமான சிவ ராம்குமார் தலைமையில் குழுவினர் மங்களப் பொருட்களை நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கொண்டு வந்து, மாட வீதிகள் வழியே மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாளிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை மதுரை அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மரியாதைகளை கள்ளழகர் திருக்கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

முன்னதாக, ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் சார்பில் வஸ்திர மரியாதை சீர் பொருள்கள், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீரங்கங்கத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு, ஶ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, ஆண்டாளுக்கு அரங்கத்தின் சார்பில் வழி அனுப்பி வைத்தனர்.

srivilliputhur andal mariyathai from srirangam - 2026

நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

adi amavasai tharpanam in vaigai river - 2026

ஆடி அமாவாசையை முன்னிட்டு சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் இறந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

ஆடிஅமாவாசை, புரட்டாசிஅம்மாவாசை,தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மாசாந்தி பெறும்.குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.

இந்த வகையில் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக இன்று அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர், இங்குள்ள கோபால்சாமி அய்யர்,பாலகிருஷ்ண அய்யர் உட்பட விற்பனர்கள் மந்திரம் ஓத எள், பச்சரிசி, வெல்லம்,தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வைகை வறண்டு இருப்பதால் வைகை கரையில் ட்ரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர் இதை வரக்கூடியவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்துஇங்குள்ள ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அர்ச்சகர் பரசுராமன் பட்டர் சிறப்பு அர்ச்சனை, பூஜை செய்து பிரசாதம் வழங்கினார்.இதே போல் சோழவந்தான் வைகை ஆற்றில் அருகே வரத விநாயகர் கோவிலில் கார்த்திஐயர் மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார்.

வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர். இதனால் திருவேடகத்தில் சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் இரண்டு புறங்களும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மோட்டர் சைக்கிளும் வந்திருந்தவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் ஊர்ந்து சென்றது.சோழவந்தான் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்திலும், ஆடி அம்மா வாசயை ஒட்டி பிதுர்களுக்கு தர்பணம் செய்து வைக்கப்பட்டது.

vaigai river with out water in adi amavasai - 2026

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வறண்ட வைகையால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் திருவேடகம் வைகை நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கடுமையான சிரமங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்துள்ளனர்.
​ஆடி அமாவாசை நாட்களில் வைகை ஆற்றில் புனித நீராடி, எள் மற்றும் பச்சரிசி கொண்டு பித்ரு கடன் கொடுத்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

இதற்காக அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் திருவேடகம் வைகை நதிக்கரைகளுக்குப் படையெடுத்தனர். ​ஆனால், வைகை நதி முழுவதும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு, மணல் பரப்பாய் பாலைவனம் போலக் காட்சியளித்ததை கண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ​ஆற்றில் தண்ணீர் இல்லாததால் புனித நீராட முடியாமல், வெறும் கைகளுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் .

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அபிஷேக பொருட்களை தண்ணீரில் விட்டு கரைப்பது வழக்கம் ஆனால், தண்ணீர் இல்லாததால் வைகை ஆற்றில் மணல் மீது வைத்து விட்டு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது. இது போன்ற காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக அறநிலைய துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று இப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

andal rangamannar sayana kolam adi pooram utsav - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் 7ம் திருநாளான இன்று புதன்கிழமை இரவு ஸ்ரீ ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் அமர்ந்து சயன கோலத்தில் காட்சி யளித்தார் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான திவ்ய தேசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. இங்கு அவதரித்த ஆண்டாளின் திருநட்சத்திரமான திரு ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு திருஆடிப்பூர உற்சவம் கடந்த 06.08.2026 அன்று கொடியேற்றப்பட்டு துவங்கியது
06.08.2026 முதல் 14.08.2026 வரை உத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த உத்ஸவ காலங்களில் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக 4ம் திருநாள் ஸ்ரீ ஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்க மன்னார், கண்ணன் திருக்கோலத்தில் கோவர்த்தனகிரி வாகனத்திலும் எழுந்தருள சிங்கமாள்புரம் மண்டபத்தில் இருந்து திருவீதி உலா முக்கிய வீதிகளில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாள் நள்ளிரவில் ஐந்து கருட சேவையும் அதி விமர்சையாக நடைபெற்றது.இன்று புதன் கிழமை இரவு ஏழாம் திருநாள் இரவு சயன சேவை கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் ‌. ஒன்பதாம் திருநாள் ஆடிப்பூரத்தன்று ( 14.08.2026 )ஆம் தேதி வெள்ளிக்கிழமை
காலை 8.35க்கு மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

pm modi speech about operation sindoor - 2026

சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுவோம் வாருங்கள், அழைக்கிறார் மோதிஜி

ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுங்கள், தேசியக் கொடியுடன் செல்ஃபி படம் வெளியிடுங்கள் என்று, பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

‘ ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ எனப்படும் , ‘ ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்தது . அது முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

தற்போது, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது இந்தியர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

வாருங்கள், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று, கோலாகலம் உற்சாகத்தோடு கொண்டாடுவோம்.  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிரத்தாஞ்சலிகளை சமர்ப்பிப்போம்.   வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான உறுதிப்பாட்டை மேற்கொள்வோம்.  வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி.  அனைத்து வீடுகளிலும் மூவண்ணக்கொடி.  அனைத்து மனங்களிலும் மூவண்ணக்கொடி.  வாருங்கள், அனைத்து வீடுகளிலும் மூவண்ணக்கொடி பறக்க விடுவோம். 

என்று குறிப்பிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் . மேலும் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும், நாட்டின் பெருமை , ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.