இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
நீண்ட காலம் இந்திய பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 ல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியை பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியலைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடிஜி என் தந்தையை சந்திக்க ராஷ்டிரபதி பவனுக்கு வந்தார். பேச்சுவாக்கில் என் தந்தை தேர்தலை பற்றி அவரது கருத்தை கேட்டார். அதற்கு அவர், 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஒரு அரசியல் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது, என்றார். பிறகு தனக்கேவுரிய சாதுரியத்துடன் என் தந்தை ‘வேறென்ன?’ என்று கேட்டார் . மோடி அமைதியாக இருந்ததை கண்டு என் தந்தை, நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் 2014 முக்கியமானது. அது ஒரு புதிய முகத்தை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது, என்றார்.
2014 ல் பெரும்பான்மை பலத்தை மக்கள் பாஜகவுக்கு அளித்தது மட்டுமன்றி மோடி இந்திய பிரதமராக வேண்டும் என்று நேரடியாக வழங்கப்பட்ட வெற்றியாகும். மற்ற தேர்தலைகளை போல – பிரதமர் இவர்தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் ஆனால் ஒரு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டதோ அல்லது வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கும் வழமை போலோ அல்லது தேர்தலுக்கு பின்னர் நடக்கும் கூட்டணி கணக்கோ – இல்லாமல் நேரடியாக வழங்கப்பட்ட மக்கள் தீர்ப்பு அது.
மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் எப்போதும் மக்கள் தலைவராக இருந்தவர் இல்லை. மாறாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் தெரிந்தெடுக்கப்பட்டவர். பி வி நரசிம்மராவ் , தேவ கௌடா ஆகிய இரண்டு பேரும் பிரதமரானபோது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக கூட இல்லை. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மூத்த அரசியல்வாதிகள் பிரதமரானார்கள். இந்திய அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது 2014 தேர்தல். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் மக்கள் மோடியை தங்கள் பிரதமராக தேர்ந்தெடுத்தனர். ஏறத்தாழ அது ‘ஜனாதிபதி மாடல் தேர்தல்’ போலிருந்தது.
2014 தேர்தலுக்கு முன்பு வரை மோடி தேசிய அரசியலுக்கு புதியவர். மிக நீண்ட காலம் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தார். அதனால் தனக்கென ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ஆனால் 2014 தான் அவரது முதலாவது நாடாளுமன்ற தேர்தல். முதல்முறையாக உறுப்பினரான போதே பிரதமராக நாடாளுமன்றத்தில் நுழைந்தது ஒரு முன்மாதிரி. அதற்கு முன்பு யாரும் செய்யாதது. நாடாளுமன்ற (பழைய) கட்டடத்துக்குள் அடி எடுத்து வைத்த போது அவர் அதை உணர்வுபூர்வமாக வணங்கியது கோடிக்கணக்கான இந்தியர்களின் நெஞ்சை தொட்டது.
தேர்தலில் வெற்றி பெறுவதென்பது தனி மனித சாகசமாக எப்போதும் இருந்ததில்லை. அது பற்பல அம்சங்கள் கொண்ட சிக்கலான நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்டது. அடிமட்டத்தில் ஊக்கத்துடன் செயல்படும் கட்டமைப்பு பாஜகவுக்கு உள்ளது. வெவ்வேறு ஜாதிகள், சமூக குழுக்களை தொடர்ந்து அணுகக் கூடிய யுக்தியும் அதற்கு உண்டு. தவறுகளை விரைவாக கண்டறியவும் அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ளும் பழக்கமும் அதற்கு உள்ளது. இவையெல்லாம் அந்த கட்சியை தேர்தல் வெற்றிப்பாதையில் கொண்டு சேர்த்தது. அது மட்டுமல்ல இப்போது அந்த வெற்றிப் பயணம் யாருடைய குறுக்கீட்டினாலும் தடைபடாமல் தொடரும் என்று உறுதியாக தெரிகிறது.
இருந்தாலும், பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் மோடி என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அடிமட்டத்திலிருந்து தன் கடின உழைப்பாலும் தகுதியாலும் உயர்ந்து வந்த உறுதியான தலைவர் என மக்கள் நினைக்கிறார்கள். காங்கிரசை போன்று வாரிசு உரிமையாக அல்ல. அதிகாரம் குடும்பத்தின் இறுகிய இரும்பு பிடியில் இருக்கும் மாநில கட்சிகளைப் போல் அல்ல. உழைப்பால் உயர்ந்த நிலையை எட்டியவர் என்று கருதுகிறார்கள்.
ஒருவகையில், பாஜகவும் மோடியும் ஒன்றுதான் என்றாகி விட்டது. அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில தேர்தல் தொடர்பாக என் நண்பர்களுடன் நடந்த பேச்சுக்களை இங்கு சொல்கிறேன். என்னுடைய உறவினர்கள் பலரும் இன்றும் வெறிபிடித்த காங்கிரஸ் ஆதரவாளர்கள்தான். காங்கிரசுக்கு அந்த மாநிலத்தில் உள்ளது வெறும் 2.9 சதவீத வாக்குகள்தான். எனது உறவினர்களின் பங்களிப்பும் அந்த வாக்கு சதவீதத்துக்குள் அடக்கம்.
என்னுடைய நண்பர்கள் பலரும் தெரிந்தவர்கள் அநேகரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு அவர்களிடம் எந்த கட்சிக்கு ஓட்டு போட போகிறீர்கள் என்று கேட்டேன். எல்லோரும் ‘மோடி’க்கு என்றார்கள். இது மாநில தேர்தல், இதில் மோடி போட்டியிடவில்லை என்று நான் அவர்களுக்கு நினைவூட்டினேன் . ‘எல்லாம் ஒன்னுதான்’ என்பது அவர்களின் பதிலாக இருந்தது.
இந்தியாவில் நீண்ட காலம் பதவியின் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிதான். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாடு கண்ட உறுதியான பிரதமரும் அவர்தான். கூட்டணி பேரம், ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தலுக்கு விழுந்து விடாமல் வலிமையான, நிலையான கூட்டணி அரசை அவர் நடத்தி வருகிறார். இத்தனைக்கும் இந்த அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவை சார்ந்தே இருக்கிறது.
அவருடைய கொள்கைகள் சிலவற்றைப் பற்றியும் மற்றும் அவர் செயல்படும் விதம் குறித்தும் எவருக்கும் முரண்பட்ட கருத்து இருக்கலாம். அது ஜனநாயகத்தில் ஏற்புடையதுதான். ஆனால் மக்களிடையே அவருக்குள்ள ஈர்ப்பு , எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும் என இந்திய வாக்காளர்கள் இடையே அவர் ஏற்படுத்தி உள்ள உத்வேகத்துடன் கூடிய பிணைப்பு ஆகியவற்றை எவரும் மறுக்க முடியாது. அது 2019 லும் 2024 லும் வெளிப்பட்டுள்ளது.
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் ‘மோடி என்ற தகுதி முத்திரை’யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்றும் நம் தேசம் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றும் ஒரு சாதாரண குடிமகளாக நான் பிராத்திக்கிறேன்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள். எழுத்தாளர். தற்போது பிரணாப் முகர்ஜி லெகசி பவுண்டேசனை நடத்தி வருகிறார்.
‘மனதின் குரல் (135ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 28.06.2026 தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
மனதின் குரலின் மகிழ்ச்சி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.
டிஆர்டிஓ – தற்சார்பு பாரதம்
நண்பர்களே, ஜூன் மாதத்திலே தான் விமானத்துறையிலேயும் கூட, தேசம் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. சி-295 என்ற இந்த விமானம் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது, மேலும் இந்த சி-295 விமானம் தனது முதல் வான் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது, இப்படி 40 விமானங்கள் பாரதத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சிறுகுறுநடுத்தரத் தொழில்துறை மற்றும் வான்வெளித்துறைக்கு புதிய சக்தி கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதோடு கூடவே, தற்சார்பு பாரதம் என்ற உள உறுதிப்பாடும் உறுதிப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த மாதம் தான், டிஆர்டிஓ நிறுவனம், உள்நாட்டுத் தயாரிப்பான நீண்டதூர தரைத்தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனையை நிறைவு செய்திருக்கிறது. இதனை டிஆர்டிஓவின் பரிசோதனைக்கூடங்களும், இந்திய தொழில்துறைக் கூட்டாளிகளும் இணைந்து உருவாக்கி இருக்கின்றார்கள். அதாவது, இன்று கடல் தொடங்கி, வானம் வரை பாரதம் அதிக அளவிலே பாதுகாப்பாகவும், தற்சார்பு உடையதாகவும் ஆகி வருகிறது.
யோகாவில் முதலிடம்
நண்பர்களே, ஜூன் மாதத்திலேயே நடந்த ஒரு நிகழ்ச்சியிலே, ஒட்டுமொத்த உலகின் முயற்சிகளும் பாரதத்தோடு இணைந்தது; இந்த நிகழ்ச்சி தான் சர்வதேச யோகக்கலை தினம். இந்த முறை உலகின் 2500க்கும் மேற்பட்ட இடங்களிலே யோகக்கலையோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நமது தேசத்திலே கோடிக்கணக்கான மக்கள், பல இடங்களில் யோகக்கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த மாதம் தான், அஹமதாபாதிலே ஏற்பாடு செய்யப்பட்ட உலக யோகாசன சேம்பியன்ஷிப் கூட பெரிய அளவில் விவாதப்பொருளானது. இதிலே பாரதம் மொத்தமாக 114 பதக்கங்களை வென்றிருக்கிறது, இதிலே 102 தங்கப் பதக்கங்களும் அடங்கும். பாரதம் இந்தப் போட்டியின் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. நான் வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம். மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது. தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்திதான், பாரதத்தின் மிகப்பெரிய மூலதனம், இந்த மக்கள் பங்களிப்பினை நாம் மீண்டும்மீண்டும் அனுபவித்து வருகிறோம்.
வேண்டுகோளை செவிசாய்த்த மக்கள்
நண்பர்களே, மேற்கு ஆசியாவிலே மூண்டிருக்கும் போரைக் காணும் போது, நான் நாட்டுமக்களிடம் சில வேண்டுகோள்களை விடுத்தேன். எத்தனை முடியுமோ, சிலகாலம் வரை தங்கம் வாங்குவதைத் தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அயல்நாடுகளுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதைத் தவிருங்கள், குழுவாகக் கார்களில் பயணிக்கும் கார் பூலிங் முறைக்கும் ஊக்கமளியுங்கள், இரசாயனம் இல்லா விவசாயத்தை மேற்கொள்ளுங்கள், நிலத்தைக் காக்கவும், இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள் என்று விவசாயிகளிடம் கேட்டு கொண்டேன். நண்பர்களே, என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, அவர்கள் இதற்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், இதிலே தங்களுடைய ஒத்துழைப்பையும் கூட அளித்திருக்கிறார்கள் என்பதற்கு நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். பல குடும்பங்கள் எனக்குச் செய்திகள் அனுப்பித் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை இல்லத் திருமணங்களிலே தங்கம் வாங்கப் போவதில்லை என்றும் எவ்வளவோ குடும்பங்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். தேவை வருமானால் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து புதிய நகைகளை உருவாக்குவோம் என்று தீர்மானித்தார்கள். எப்படி இந்த முறை அயல்நாட்டுப்பயணத்தை ஒத்திப் போட்டதாக எத்தனையோ பேர், சமூக வலைத்தளங்களிலும் கூட பதிவு செய்திருந்தார்கள்.
நண்பர்களே, கார் பூலிங் தொடர்பாக, அதாவது ஓர் காரிலே, ஒரே இடம் செல்வோர் பலர் ஒன்றாகப் பயணிப்பது தொடர்பாகவும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். யாரெல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் ஒரே திக்கிலே செல்கிறார்களோ, அவர்கள் இப்போது ஒன்றாகப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் முடிந்தமட்டிலே பேருந்து அல்லது மெட்ரோவினைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படுகிறது. இதைப் போலவே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிப்பது தொடர்பான செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. நண்பர்களே, உலக அளவிலான இந்தச் சங்கடத்தை பாரதநாட்டவர் நாமனைவரும் இணைந்து எதிர்கொண்டு வருகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்கள் பங்களிப்பின் இந்தச் சக்தி நமக்கு பலத்தை அளிக்கும், வெற்றியை உரித்தாக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
மனம் நிறைந்த திருமணப் பரிசு
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது தேசத்திலே பிறந்தநாள், திருமணம் போன்றவை குடும்ப நிகழ்ச்சிகளாக இருப்பதோடு கூடவே, ஒட்டுமொத்த சமூகத்தின் கொண்டாட்டங்களாகவும் ஆகின்றன. ஒவ்வொரு குடும்பமுமே, அதன் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர வேண்டும் என்றே விரும்புகிறது. மக்கள் விருந்தாளிகளுக்குப் பரிசுகளையும் அளிக்கிறார்கள். நண்பர்களே, மகாராஷ்டிரத்தின் நாந்தேடில் ஒரு குடும்பம் தனது சந்தோஷங்களைப் பகிரும் வகையில் செய்த செயல் இப்போது விவாதப்பொருளாகி இருக்கிறது. இங்கே நாந்தேடின் பஹாதுர்புரா கிராமத்திலே பேட்கர் குடும்பம் வசித்து வருகிறது. சந்தோஷங்களைப் பகிர வேண்டுமென்றால், சங்கட வேளையிலே எந்த ஒரு குடும்பத்துக்கும் கைகொடுப்பதாக இருக்கக்கூடிய ஒரு பொருளை நாம் அளிக்க வேண்டும் என்று இந்தக் குடும்பம் சிந்தித்தது. தங்கள் இல்லத் திருமண விழாவிலே இந்தக் குடும்பம் கிராமத்தின் கிட்டத்தட்ட 3,500 மக்களுக்கு விபத்துக்காப்பீட்டிற்கான ஏற்பாட்டினைச் செய்தது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீட்டினை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த முன்னெடுப்பின் பின்புலத்தில் இருந்த உணர்வு உள்ளத்தைத் தொடும் வகையில் இருந்தது. விபத்திற்குப் பிறகு குடும்பங்கள் பொருளாதாரச் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதை இந்தக் குடும்பத்தார் கவனித்தார்கள். இத்தகைய வேளையிலே ஒரு சின்னச்சிறிய உதவிகூட, பேராறுதலாக ஆகிறது.
அரசின் காப்பீட்டுத் திட்ட பலன்
நண்பர்களே, தேசத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு அரசாங்கம் பாதுகாப்புக் கவசத்தைக் கொண்டு சேர்த்து வருகிறது. பிரதம மந்திரி விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, வருடந்தோறும் 20 ரூபாய் பிரீமியம் அதாவது ஆண்டொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே பிரீமியம் தொகை செலுத்துவதன் வாயிலாக, இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான விபத்துக்காப்பீட்டினை உறுதி செய்கிறது. இதுவரை இந்தத் திட்டத்திலே 58 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 28 கோடிக்கும் மேற்பட்டோர் தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள். இந்தத் திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் உதவித்தொகை 3,700 கோடி ரூபாய்க்கும் அதிகமானது.
நண்பர்களே, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டமும் இதைப் போலவே முக்கியமானது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேர்ந்தால், அவருடைய குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு உத்திரவாதம் உறுதி. இதற்கான வருடாந்திர பிரீமியம் வெறும் 436 ரூபாய் மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒண்ணரை ரூபாய் மட்டுமே. இந்தத் திட்டத்தோடு இதுவரை 27 கோடிக்கும் அதிகமானோர் இணைந்திருக்கிறார்கள். இதன் மூலம் தேசத்தின் சுமார் 11 இலட்சம் குடும்பங்களுக்குக் கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் உதவி கிடைத்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் மிகவும் பெரியவை. இந்தப் புள்ளிவிவரங்களின் பின்னணியில், இலட்சக்கணக்கான குடும்பங்களின் சொந்தக் கதைகள்-சோகக்கதைகள் பல உண்டு. ஏதோ ஒரு தாயால் தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்கு உதவி கிடைக்கிறது, ஏதோ ஒரு மனைவிக்குத் தன் குடும்பப் பொறுப்புக்களைச் சமாளிக்கத் தேவையான உதவி கிடைக்கிறது. நண்பர்களே, பலமுறை, பெரிய அளவிலான பாதுகாப்பின் தொடக்கம் மிகவும் சிறிய அளவு நிதி மற்றும் சின்னதொரு முன்னெடுப்பால் தான் சாத்தியப்படுகிறது. ஒரு சிறிய தீர்மானம், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் குடும்பத்திலே இந்தத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் இப்போது பேச இருக்கும் சிறியதொரு விஷயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமூகத்திலே பீடமிட்டு அமர்ந்திருக்கிறது. அது தான் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கை என்பது பல வேளைகளில் தவறான புரிதல் மட்டுமல்ல. அது பயத்தை ஏற்படுத்துகிறது, எப்போது பயம் மனதில் பீடிக்கிறதோ, மனிதன் வாய்மையைக் காண மறுக்கிறான். மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்கள், பிறகு எந்த ஆதாரமோ, உண்மை அம்சமோ இல்லாமலேயே, முடிவுகளை எடுக்கிறார்கள், இதனால் பெரும் தீமைகள் விளைகின்றன. ஆனால், அறிவியல், அனுபவம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலே இந்த நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கும் மனிதர்களும் அதே சமூகத்திலே இருக்கிறார்கள். மூடநம்பிக்கை தொடங்கி நம்பிக்கை வரையிலான இந்தப் பயணம் எளிதானது அல்ல, இன்று இப்படிப்பட்ட ஒரு வெற்றிப் பயணம் பற்றித் தான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மங்கலமான பறவை
நண்பர்களே, அசாமிலே ஒரு பறவையைக் காண முடியும், அதன் பெயர் ஹர்கிலா. ஹர்கிலா ஒரு அரியவகைப் பறவை. இயற்கையைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்தப் பறவை. ஆனால் அசாமின் சில பகுதிகளில் நீண்ட காலமாகவே இது அமங்கலமான பறவையாகக் கருதப்பட்டது. தங்கள் அக்கம்பக்கங்களில் இதைக் காண்பதை மக்கள் விரும்புவதில்லை. இந்த ஹர்கிலாவின் கூடுகள் இருக்கும் மரங்களைக்கூட பல வேளைகளில் அவர்கள் வெட்டி விடுவதும் உண்டு. சுற்றுச்சூழலின் தூய்மைக்கு உதவும் ஒரு பறவையான ஹர்கிலாவை மக்கள் பயத்தின் காரணமாக வேட்டையாடி வருகிறார்கள். அறிவியலாரான பூர்ணிமா தேவி பர்மன் அவர்கள் இவை அனைத்தையும் கவனித்தார்கள். மக்கள் மனதிலே இருக்கும் இந்தத் தவறான எண்ணத்தை மாற்ற உறுதி பூண்டார் அவர். பெண்களுடன் உரையாடினார், அறிவியல்ரீதியான சான்றுகளை அளித்துப் புரிய வைத்தார், மெல்லமெல்ல பெண்கள் இந்த இயக்கதோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எந்தப் பறவை ஒருகாலத்தில் அமங்கலமானது என்று விரட்டப்பட்டதோ, அதுவே கிராமங்களின் அடையாளமாக ஆகிப் போனது. ஆயிரக்கணக்கான ஊரகப்பகுதிப் பெண்கள் ஹர்கிலாவைக் காப்பாற்ற முன்வந்தார்கள். இன்று இவர்கள் ஹர்கிலா படை என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் சமூகத்திற்கு எதிராகப் போராடினார்கள். சமூகத்திற்குப் புரியவைக்க இரவுபகலாகச் செயல்பட்டார்கள், மூடநம்பிக்கையைப் புறந்தள்ளினார்கள். சரியான தகவல் கொண்டு சேர்க்கப்பட்டால், பல்லாண்டுக்காலப் பழமையான எண்ணத்தைக் கூட மாற்றிவிட முடியும் என்பதை அவர்கள் செய்து காட்டினார்கள்.
இது பேபி லீக் அல்ல!
நண்பர்களே, யார் விளையாடுகிறார்களோ, அவர்கள் வெல்கிறார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. இன்று தேசத்திலே இப்படிப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. முந்தைய காலத்தோடு ஒப்பு நோக்குகையில், இப்போது அதிக அளவிலான இளைஞர்கள் விளையாட்டுக்களைத் தங்களுடைய தொழிலாகவே ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். நாகாலாந்தில் நடந்த இரண்டு மிகவும் சுவாரசியமான விஷயங்கள் குறித்த தகவல்கள் எனக்குக் கிடைத்திருக்கிறது. முதல் முயற்சி, நாகாலாந்து பேபி லீக். பெயரைக் கேட்டவுடனேயே இது சிறிய குழந்தைகள் தொடர்பான சாதாரண கூட்டிணைவாக இருக்கும் என்று தோன்றலாம், ஆனால் அப்படி அல்ல. இது 5 முதல் 10-12 வயதுடைய சிறிய குழந்தைகளுடைய ஒரு அசாதாரணமான கூட்டிணைவாகும். இந்தக் குழந்தைகளுக்கு, கால்பந்தாட்டக்காரர்களின் கூட்டிணைவோடு ஒரு தொடர்பு இருக்கிறது; அவர்கள் இவர்களுக்கு வேகம் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள உத்வேகம் அளிக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதன் தொடக்கம் நாகாலாந்தின் அதிகப்படியான குழந்தைகளைக் கால்பந்தாட்டத்தோடு இணைப்பதற்காக செய்யப்பட்டது. 5 முதல் 12 வயதுடைய ஆண்-பெண் குழந்தைகள் இதிலே கலந்து கொள்ள முடியும். இந்தக் கூட்டிணைவு இப்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. இந்தக் கூட்டிணைவு குழந்தைகளின் மனதிலே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகாலாந்தின் பெண்கள் ஃபுட்சால்
நண்பர்களே, நாகாலாந்திலே மேலும் ஒரு நல்ல முயற்சி நடந்தேறி வருகிறது. இதன் பெயர் நாகாலாந்து பெண்கள் ஃபுட்சால் கூட்டிணைவு. உங்களுக்கு வேண்டுமானால் இந்த ஃபுட்சால் என்பது புதிய பெயராக இருக்கலாம், ஆனால் ஃபுட்சால் என்பது உள்ளரங்குக் கால்பந்தாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இதிலே தலா ஒரு அணியில் ஐந்து வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். விளையாட்டு மைதானமும் கூட கால்பந்தாட்டக் களத்தை விட மிகவும் சிறியதாக இருக்கிறது. இதன் காரணத்தால் ஆட்டக்காரர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்களுடைய உத்திகளையும், திறன்களையும் சிறப்பான வகையிலே பயன்படுத்தியாக வேண்டியிருக்கிறது. நாகாலாந்தின் பெண்கள் ஃபுட்சால் கூட்டிணைவு, தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட நமது பெண்களுக்கு அருமையான சந்தர்ப்பமாக இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புக்களுக்காக நான் நாகாலாந்தின் மக்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இத்தகைய முயற்சிகள், தேசத்தின் பிற பாகங்களுக்கும் உள்ளெழுச்சியை அளிக்கிறது.
நாலந்தா பல்கலையின் புதிய அவதாரம்
நண்பர்களே, இது தொழில்நுட்ப யுகம். நாள்தோறும் ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன. புதிய புதிய செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த வேளையிலே ஒரு கேள்வி மிகவும் மகத்துவம் வாய்ந்தது, அதாவது மக்களின் படைப்பாற்றலை எவ்வாறு பாதுகாத்துப் பராமரிப்பது என்பது தான். புதிய தொழில்நுட்பத்தோடு கூடவே முன்னேறும் அதே வேளையிலே நாம் நமது வேர்களோடும் எப்படி இணைந்திருப்பது? இந்த வினாக்களுக்கான விடையை, நாலந்தா பல்கலைக்கழகத்தார் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம்முடைய நாலந்தா பல்கலைக்கழகம் இப்போது புதிய அவதாரம் எடுத்து, பாரதத்தின் எதிர்காலத்திற்கு உரமூட்டி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நாலந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கும் வாய்ப்புக் கிட்டியது. நாலந்தா பல்கலைக்கழகம் வாதவிவாதங்களில் ஈடுபடும் நமது பழைய மரபினை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
வாதவிவாதங்களில் ஈடுபடுதல் என்பது ஏதோ தனது தரப்பை முன்வைப்பதற்கான ஊடகம் மட்டுமல்ல. இந்த வாதவிவாதங்கள், இந்தக் கடைசல் என்பன ஒழுங்குமுறையோடுகூடிய செயல்பாடு. இதிலே தர்க்கத்தோடு கூடவே, ஆதாரங்களுடன், அவரவர் தத்தமது வாதங்களை-கருத்துக்களை முன்வைப்பது அவசியம், அதிலே திறமைசாலிகளாக இருக்கவும் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டு, புரிந்து கொள்ளும் கற்றலும் கூட இந்த வாதவிவாதச் செயல்பாட்டில் கிடைக்கிறது. நாலந்தா பல்கலைக்கழகத்தார் தங்களுடைய பட்டமளிப்பு விழாவின் ஒரு அங்கமாக ஆக்கியிருக்கிறார்கள் என்பது எனக்குக் களிப்பை அளிக்கிறது.
இதிலே கலந்து கொண்டவர்களில், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பண்டைய பாரம்பரியத்தை இன்றைய காலகட்டத்தோடு இணைக்கும் ஒரு முயற்சி என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. இதன் பொருட்டு நான் நாலந்தா பல்கலைக்கழகத்தாருக்குப் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாக நீங்களும் சிந்தனை செய்யலாம் என்று நான் நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சுய செயற்கை நுண்ணறிவு
நண்பர்களே, வேர்களோடு இணைந்திருக்கும் அதே நேரத்தில் இளைஞர்களைப் புதிய தொழில்நுட்பத்திற்காகவும் தயார் செய்வது என்ற மேலும் ஒரு நல்ல முயற்சி நடைபெற்று வருகிறது. தில்லியில் இருக்கும் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைகளில் பி.டெக் – தொழில்நுட்பத்தில் இளநிலைப் படிப்பைத் தொடங்க இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தோடு பாரதத்தின் பாரம்பரியமான ஞானத்தை இணைக்கும் திசையில் ஒரு மகத்துவம் வாய்ந்த படியாகும். இதனால் பாரதநாட்டு மொழிகளுக்கு, புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தயாரித்தளிப்பதில் உதவிகரமாக இருக்கும். நமது பண்டைய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல்மயமாகச் செய்து பாதுகாக்கும் பணிக்குப் புதிய வேகம் கிடைக்கும். மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தாருக்கு இந்த முயற்சி தொடர்பாக நான் பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன்.
பாரத கலாசாரத் தூதுவர்கள்
நண்பர்களே, இன்று பாரதநாட்டுக் கலாச்சாரமானது உலகின் பல்வேறு பாகங்களைச் சென்றடைந்து வருகிறது. நமது பாடல்கள், இசை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை உலகத்தார் அனைவரும் அறிந்து வருகிறார்கள், ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். பாரதத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலான கரிபியன் கடற்பகுதியிலே டொமினிகன் ரிபப்ளிக் என்ற பெயரிலான ஒரு தேசம் உண்டு. அங்கே பாரத நாட்டவரின் எண்ணிக்கை சுமார் 100 இருக்கலாம், இன்னும் குறைவாகவும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி, பாரதநாட்டுக் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடைய ஒரு மிக அருமையான முயற்சி அங்கே நடந்து வருகிறது. அங்கே ஸ்பானிஷ் மொழி பேசும் சிலர் ஒரு புதிய குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர், பிரும்மகமல் டொமினிகானா.
குழுவின் உறுப்பினர்கள் இணைந்து வேதகால இலக்கியத்தைப் படிக்கிறார்கள். இவர்கள் வேத மந்திரங்களின் உச்சரிப்பு வெளிப்பாட்டையும் கற்று வருகிறார்கள். இதற்கான எந்தவிதமான முறையான பயிற்சியும் இவர்களிடம் இல்லை. ஆனால் இவர்கள் ஒலிப்பதிவுகளைக் கேட்டு வேத மந்திரங்களின் சரியான உச்சரிப்பு வெளிப்பாட்டைக் கற்றிருக்கிறார்கள். இன்று இவர்கள் பல மந்திரங்களை மிகச் சிறப்பாக ஜபித்து வருகிறார்கள். இவற்றில் புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம், ஸ்ரீ ருத்ரம், துர்கா சூக்தம், தேவி மகாத்மியம் ஆகியன அடங்கும்.
பாரதத்திலிருந்து இத்தனை தொலைவில் இருந்தும்கூட, நமது பாரம்பரியங்களைக் கற்கும் அவர்களின் இந்த முயற்சி மிகவும் கருத்தூக்கமளிக்கவல்லது. பிரும்மகமல் டொமினிகானா குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அவர்களின் முயற்சிகளுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதநாட்டுக் கலாச்சாரத்தை உலகில் மிகவும் விரும்பப்படுவதாக ஆக்குவதில் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடும் அனைவரையும் நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
வேர்ப் பாலங்கள்
எனதருமை நாட்டுமக்களே, மேகாலயத்தின் அடையாளம் மேகங்களோடு, அழகான காட்சிகளோடு. யார் மேகாலயா மாநிலம் செல்கிறார்களோ, அங்கிருப்போரின் இயல்பான அன்புபாராட்டும் தன்மை நீண்டகாலம் வரை மனதை வருடிக் கொடுக்கும். ஆனால் மேகாலயத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம் ஒன்று குறித்து இன்றைய மனதின் குரலில் நாம் விவாதிக்க இருக்கிறோம். அது தான் மேகாலயத்தின் Root Bridge. இது பாதையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Route-ரூட் அல்ல, வேர்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Root-ரூட். அதாவது வேர்ப்பாலம். இந்த வேர்ப்பாலங்களின் கதை மிகவும் சுவாரசியமானது.
இந்தப் பாலங்கள் சில நாட்களிலோ, சில ஆண்டுகளிலோ உருவாவதில்லை. இந்த வேர்கள் நீர்ப் பெருக்குகளைத் தாண்டி கொண்டு செல்லப்படுகிறது. காலப்போக்கில் இதுவே ஒரு பலமான பாலமாக ஆகிறது. இந்தப் பாலங்களுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. இவை வாழும் பாலங்கள். காலப்போக்கில் இவை மேலும் பலமடைகின்றன. இவற்றிலே மேகாலய மக்களின் படைப்புத்திறனை நம்மால் பார்க்க முடிகிறது. இவற்றின் பின்னணியிலே பல்லாண்டுக்கால பொறுமை மற்றும் இயற்கையின்பால் ஆழமான மரியாதை புலனாகிறது.
மனிதன் இயற்கையோடு இணைந்தால் எத்தனை அற்புதமான பொருட்களை உருவாக்க முடியும் என்பதை இந்தப் பாலங்கள் நமக்கு உரைக்கின்றன. இவை நமது தேசத்தின், இந்த மண்ணின் மரபுகள். யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுசார் இடங்கள் வலைப்பின்னலில் மேகாலயத்தின் வேர்ப்பாலங்களை இணைக்க வேண்டும் என்று பாரதம் விண்ணப்பித்திருக்கிறது.
நண்பர்களே, சூழல் மாற்றம் காரணமாக இந்த வேர்ப்பாலங்கள் முன்பாக பல சவால்களும் எழுகின்றன. இப்படிப்பட்ட வேளையிலே, மேகாலய மாநில மக்கள், இந்த இயற்கை மரபுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மிகச்சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்கள். இப்படிப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது கூட எளிதாக இருக்கவில்லை. பிறகு உள்ளூர் மக்கள் இத்தகைய பாலங்களின் எண்ணிக்கை மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இதன் பிறகு சமூகங்கள், இந்தப் பாலங்களின் பராமரிப்புத் தொடர்பான தங்களுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இன்று உள்ளூர் மக்கள், 120க்கும் அதிகமான வேர்ப்பாலங்களைப் பராமரித்து வருகின்றார்கள். சில குழுக்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாலங்களின் நிலைமையை ஆராய்ந்து வருகிறார்கள். சிலர் தங்களுக்கு அருகிலே இருக்கும் பகுதிகளை பலப்படுத்த Nursery-நாற்றுப்பண்ணையை தயார் செய்து வருகிறார்கள்.
இதைப் போலவே இவற்றின் பாதுகாப்பிற்காக வேண்டி ஒரு மொத்த சூழலமைப்பே தயாராகி விட்டது. இந்த ஆண்டு ஹைலீ வார் அவர்களுக்கு பத்ம விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம். தனது வாழ்க்கையின் 50க்கும் அதிகமான ஆண்டுகளை இந்த வேர்ப்பாலங்களைப் பராமரிப்பதிலேயே செலவு செய்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. நண்பர்களே, நீங்கள் எப்போதேனும் இந்த வேர்ப்பாலங்களில் பயணித்திருந்தீர்கள் என்றால், கண்டிப்பாக அதன் படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய படங்கள் மற்றவர்களுக்கும், மேகாலயத்தின் இந்த அற்புதமான மரபு பற்றித் தெரிந்து கொள்ள உத்வேகம் அளிக்கும்.
சூழலியலின் புத்துணர்ச்சி
எனதருமை நாட்டுமக்களே, நமது கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும், நமது நகரங்கள் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று நாமனைவரும் விரும்புகிறோம். ஆனால், நம்மருகே திரளும் குப்பையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பதை நாம் யாராவது யோசித்திருப்போமா? இது மற்றவர்களுடைய பொறுப்பு, அவர்கள் சுத்தமாவதைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், தங்களுடைய சிந்தனை வாயிலாக நமக்கு உள்ளெழுச்சி அளிக்கவல்ல சிலர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் ராஜ்கட் மாவட்டத்தைச் சேர்ந்த பியாவராவின் சில சகோதரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.
இவர்கள் தங்களுக்கு அருகிலே பரவிக் காணப்படும் நெகிழிக் குப்பைகளை அகற்ற உறுதி பூண்டார்கள். எல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் கருதவில்லை. இவர்கள் தாங்களே நகர்முழுவதிலிருந்தும் நெகிழிக் குப்பைகளையும், காலி பாட்டில்களையும் சேகரிக்கத் தொடங்கினார்கள். மெல்லமெல்ல இந்த முயற்சி முன்னேறிச் செல்லத் தொடங்கியது, பிறகு அந்த நெகிழி சூழலுக்கு நேசமான செங்கற்களாக உருவாகத் தொடங்கியது. இன்று இதே சூழலுக்கு நேசமான செங்கற்களின் பயன்பாடு பொதுவிடங்களுக்கு அழகு சேர்க்கப் பயன்பட்டு வருகிறது.
ராஜ்கட்டிலே கடந்த சில மாதங்களாக பல்லாயிரக்கணக்கான கிலோ அளவிலான நெகிழிகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அவை சிறப்பான வகையிலே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, எந்த நெகிழி முன்பெல்லாம் நகரை மாசுபடுத்தி வந்ததோ, அதுவே இன்று இந்தச் சகோதரிகளின் முயற்சியால் நகரின் அழகை அதிகரிப்பதில் பங்காற்றி வருகிறது. பியாவ்ராவின் அனைத்து சகோதரிகளுக்கும், இந்த இயக்கத்தோடு இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதேசி மண் பிள்ளையாரையே விற்கவும்; வாங்கவும்!
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒரு சிறப்பான விஷயம் குறித்துப் பேச எனக்குப் பலர் கடிதங்கள் வாயிலாக ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இந்த விஷயம் கணேச உற்சவத்தோடு தொடர்புடையது. பார்க்கப்போனால் பிள்ளையார் சதுர்த்திக்கு இன்னும் போதுமான நேரம் இருந்தாலும், இந்த விஷயம் குறித்து இப்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று பலர் என்னிடம் விண்ணப்பித்திருந்தார்கள். உள்ளபடியே, பிள்ளையார் சிலைகளை உருவாக்கும் வேலை மிகவும் முன்னதாகவே தொடங்கி விடுகிறது. திருவுருவங்களைத் தயாரிப்போர், அதன் வியாபாரத்தில் இணைந்தவர்கள் இப்போதிலிருந்தே செயல்படத் தொடங்கி விடுவார்கள். ஆகையால் நான் உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் வீடு, சமூகம் அல்லது அருகிலே இருக்கும் இடங்களில் பிள்ளையாரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும் போது, அவை நமது தேசத்தின் மண்ணால் உருவாக்கப்பட்டவையாக, நமது மண்பாண்டம் தயாரிப்போரால், உள்ளூர் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற வகையில் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
யாரெல்லாம் பிள்ளையார் திருவுருவச் சிலைகளை உருவாக்குகிறார்களோ, அவர்களிடமும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் மண்ணாலான திருவுவச் சிலைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். அதே போல யாரெல்லாம் திருவுருவ சிலைகளை வாங்குகிறார்களோ, அவர்களும் பிள்ளையாரின் திருவுருவச் சிலை எதனால் செய்யப்பட்டது, எந்த நாட்டில் உருவானது என்பதையும் கவனித்து வாங்க வேண்டும்.
பிளாஸ்டர் ஆஃப் பேரிஸால் தயாரிக்கப்பட்ட திருவுருவச் சிலைகளைக் கண்டிப்பாக வாங்க வேண்டாம். நண்பர்களே, மண்ணாலான திருவுருவச் சிலைகளை வழிபட்ட பிறகு, நாம் இயல்பான வகையிலே நீரிலே கரைக்கிறோம். இதனால் நமது நதிகள், ஏரிகள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. நமது நம்பிக்கையும் பராமரிக்கப்படுவதோடு, இயற்கையின்பால் நமது கடமையும் நிறைவேறுகிறது. நாம் உள்ளூர் கைவினைஞர்களிடமிருந்து திருவுருவச் சிலைகளை வாங்கும் போது, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் கொள்கை வலுவடைகிறது.
இந்தமுறை பிள்ளையார் சதுர்த்தியன்றும், இப்படிப்பட்ட அனைத்துக் கொண்டாட்டங்களின் போதும், இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் கண்டிப்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டும், நாட்டுநலனில் அடுத்தடுத்த படிகளை முன்வைப்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
மழை நீரைச் சேமியுங்கள்!
நண்பர்களே, நமது தேசத்தின் மிகப்பெரிய சக்தி என்றால் அது நமது தேசத்தின் மக்கள் தாம். தேசத்தின் பல்வேறு பாகங்களில் நடைபெறும் முயற்சிகள் நமக்கு நிறைய கற்பித்தல்களை அளிக்கின்றன. நம் மனதிலே உறுதிப்பாடு இருந்தால், சமூகத்தோடு இணைந்து சென்றால், எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை இந்த முயற்சிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. நீங்கள் உங்கள் அருகிலே நடக்கும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்து எனக்குக் கண்டிப்பாக எழுதி வாருங்கள். உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய சிந்தனைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வாருங்கள், முடிந்தால், உங்கள் அருகிலே எந்தவொரு சின்ன முன்னெடுப்பு இருந்தாலும், அது ஒட்டுமொத்த தேசத்திற்குமே உத்வேகம் அளிக்கவல்லதாக ஆகலாம்.
அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம். நாட்டுமக்களின் சில புதிய முயற்சிகள் குறித்த விவாதத்தில் ஈடுபடுவோம். அதுவரை நீங்கள் உங்களுடைய மற்றும் உங்களுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், அப்புறம்….. நீர் சேமிப்பை எக்காலத்திலும் மறந்துவிட வேண்டாம். மழைநீரின் ஒவ்வொரு சொட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும். ‘Catch the Rain’ – மழைநீரைச் சேமியுங்கள் என்ற இந்த இயக்கம் எக்காரணம் கொண்டும் தொய்வடைய விடக்கூடாது. நாமனைவரும் இணைந்து மழையின் ஒவ்வொரு சொட்டு நீரையும் விரயமாகாமல் பாதுகாக்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் என் சிறப்பு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன.
ஆனால் காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கட்டுப்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் விதிமுறைகளாகப் பார்க்காமல் அடக்குமுறையாகக் கருதும் நிலை உள்ளது. சுதந்திரம் என்ற பெயரில் விழுமியங்களைக் கைவிடுவதைப் பரவலாகக் காண முடிகிறது.
திருமண அமைப்பு சிதைந்து வரும் நிலையைக் காண்கிறோம். நிச்சயதார்த்த விழாக்களைத் தேவையற்ற ஆடம்பரத்தோடு நடத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. நிச்சயித்த திருமணத் தேதி வருவதற்கு முன்பே உறவை முறித்துக் கொள்வதும் சகஜமாகி விட்டது. எந்த சாஸ்திர நூலிலும் இல்லாத நிச்சயதார்த்த ஆடம்பரம் எதற்காக? திருமணமான சில நாட்களிலேயே சின்னச் சின்ன காரணங்களுக்காகப் பலர் பிரிந்து விடுறார்கள். பெரியவர்கள் அறிவுரை கூறவோ, சமரசம் செய்து வைக்கவோ முடியாத சூழ்நிலை உள்ளது.
சம்பிரதாயத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மரியாதை குறைந்து வருவது கவலையளிக்கிறது. திருமண அமைப்பின் மேல் நம்பிக்கை குறைந்து, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் சமுதாய மரியாதையைச் சிதைத்து வருகிறார்கள். டேட்டிங், கோ லிவிங், லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்று புதிய சொற்கள் உருவாகி வருகின்றன. உள்ளூர் மொழிகளில் இவற்றுக்கு ஏற்ற மொழிபெயர்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுப்பாடுகளை அடக்குமுறை என்று நிராகரித்தால், எல்லை மீறும் செயலை எப்படி அழைப்பது? கரையை மீறும் கடல் அழிவைத்தானே விட்டுச் செல்கிறது? பெருகிவரும் பொருளாதார வளமும் வருமானமும் சிற்றின்ப நாட்டத்தை அதிகரிக்கின்றன. யோகா, புலனடக்கம், தியானம், சுயபரிசோதனை போன்ற கருத்துகள் பழமைவாதிகளின் உளறலாக நிராகரிக்கப்படுகின்றன. இவற்றால் கிடைக்கும் அமைதி எட்டாக் கனியாகி வருகிறது.
புலன்களை சுகப்படுத்துவதே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு பாரம்பரிய சமூகக் கண்ணியத்தைத் தூக்கியெறிந்துவிட்டு மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகும் ஆண்களும் பெண்களும் பெருகி வருகின்றனர்.
“உடலால் ஆணுக்கு நெருக்கமாகும் பெண் மரியாதைக்குரிய நிலையிலிருந்து விலகிச் செல்கிறாள்” என்ற நாவலாசிரியர் ஒருவரின் கூற்று இங்கே நினைவுக்கு வருகிறது, ஆடை, அலங்காரம் குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டால், எதிர்ப்புக் கும்பல்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்துகின்றன. அப்படியிருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை.
இந்தக் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்குக் கனமான விலையைச் செலுத்த வேண்டியுள்ளது. உண்பதிலும் அருந்துவதிலும் அளவுக்குமீறி ஈடுபடும் பழக்கம் உடல்நலத்தைச் சிதைக்கிறது. துடிப்பான இளைய தலைமுறை நோய்க்குள்ளாகித் தளர்வடைகிறது.
குடும்பங்கள் சிதைந்து போகின்றன. திருமணமாகி, குழந்தைகள் உள்ள பெண்களும் பிற ஆண்களிடம் ஈர்க்கப்பட்டு குடும்பம் சிதைவதற்குக் காரணமாகின்றனர். கலாச்சாரம் சீரழிவதைக் கண்டு முதிய தலைமுறை வருந்துகிறது.
“இது ஒரு புதிய கலாச்சாரம். மாற்றங்களை வரவேற்கத் தெரியாத பழமைவாதிகள் இக்காலப் போக்கைப் புரிந்துகொள்வதில்லை” என்பது கட்டுப்பாடற்ற தாராளவாதக் கொள்கையை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம். பெரும்பாலும் இது அர்த்தமற்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.
விலங்குகள் கூடக் கட்டுப்பாடுகளையும் இயற்கை நியமங்களையும் கடைப்பிடிக்கின்றன. தம்மை உயர்ந்தவராகக் கருதும் மனிதர்கள் இயற்கை நியமங்களைக் கைவிட்டு விலங்குகளும் அருவருக்கக் கூடிய கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் தர்மம் என்ற சொல்லையே மறந்து வருகின்றனர்.
எல்லை மீறத் துடிப்பவர்களுள் கணிசமானோர் இளம் இந்துப் பெண்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இச்சூழ்நிலை மதமாற்றத்தில் ஈடுபடும் கும்பல்களுக்குச் சாதகமாக அமைகிறது. இதன் விளைவாகத் தம் சொந்த மத சம்பிரதாயகளைக் கைவிடத் துடிக்கும் இந்துப் பெண்கள், பிற மதக் கவர்ச்சிக்கு எளிதாக இரையாகின்றனர். ‘பரந்த மனப்பான்மை, அதிநவீனப் போக்கு, எல்லா மதங்களும் ஒன்றுதான்’ போன்ற அறியாமையிலிருந்து பிறந்த கவர்ச்சிகரமான சொற்களால் ஈர்க்கப்பட்டு அப்பெண்கள் அந்தப் பாதையில் சென்று மோசமான விளைவுகளைச் சந்திக்கின்றனர்.
சமுதாயம் எனபது, ‘பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் கட்டுப்பாட்டுடன் இருப்போம்’ என்று கருதும் புலன்களை அடக்கிய ஆண்களால் மட்டுமே ஆனது அல்ல. பெரும்பான்மையானோர் சுயக்கட்டுப்பாடு இல்லாத சாதாரண மனிதர்களே. நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகில், கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள் பெண்களின் மேல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. அதனால்தான் அத்தகைய எதிர்மறைத் தாக்கங்களிலிருந்துப் பெண்களைப் பாதுகாப்பதற்காக நம் முன்னோர் நடை, உடை, சிகை அலங்காரம் ஆகியவற்றில் பாரம்பரிய நெறிமுறைகளை வகுத்தனர். ஆனால் பாரம்பரியத்தைப் புறக்கணிப்பதன் மூலம், இந்து இளம் பெண்கள் தீய சக்திகளைத் தம் உடலிலும் மனத்திலும் நுழைவதற்கு அனுமதியளித்துக் கதவைத் திறந்து விடுகிறார்கள். அதன் விளைவாக அவர்கள் மனம் சிதைந்து வக்கிரமான எண்ணங்கள் பெருகி அதர்மச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தர்மம் அளிக்கும் பாதுகாப்பு, கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் இடையிலான உறவில் தர்மத்தோடு கூடிய அர்ப்பணிப்பு, சிற்றின்ப நாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு, பண்பாடு ஆகிய அனைத்தும் இன்று சிதைந்து வருகின்றன. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமாக இருக்கும். அதர்மம் பெருகும்போது அது தவிர்க்க முடியாமல் இயற்கைச் சீற்றங்களுக்கு வழிவகுக்கும். இது தர்ம சாஸ்திரங்கள் விடுக்கும் எச்சரிக்கை.
ஜாதகம் பார்ப்பது, வாஸ்து பார்ப்பது, கோவிலுக்கும் க்ஷேத்திரங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்வது போன்றவை மட்டுமே தார்மீக வாழ்க்கை அல்ல. தரமத்தோடு வாழ்ந்து பணிவோடும் கண்ணியத்தோடும் உன்னத மனிதராக உயர்வதே தார்மிக வாழ்க்கை. இப்பண்புகளை இளம் பெண்களிடம், முக்கியமாக இந்துப் பெண்களிடம் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
சுயக் கட்டுப்பாடு, பொறுமை, தம்மைத் திருத்திக் கொள்ளும் திறன் ஆகியவற்றால் நம்முள் விழித்தெழும் தெய்வீக ஆற்றலை உணர வேண்டும். பண்பாடே உண்மையான கலாச்சாரம். பண்பாட்டுச் சிதைவைப் புதிய கலாச்சாரம் என்று ஏற்க இயலாது. அதை விகாரமான கலாச்சாரம் அல்லது பண்பாடின்மை என்றே விவரிக்க வேண்டும்.
தீங்கானதும் நச்சுத்தன்மை வாய்ந்ததுமான வாழ்க்கை முறையைக் கைவிட்டு, நற்பண்புகள் நிறைந்த தார்மிக வாழ்க்கை முறை மலரும் என்ற நம்பிக்கையுடன் இத்தகைய உயரிய விழுமியங்களை மதிப்பவர்கள் தகுந்த முறையில் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்.
(Source: தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், ஜூலை, 2026)
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.
இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ். தான் இயக்கிய படங்களில் தாமே நடித்து புது விதமான முயற்சிகள் மூலம், தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் இடம்பிடித்தார். திரைக்கதை எழுத்தாளராகவும் சிறந்த இயக்குனராகவும் வலம்வந்த பாக்கியராஜ் 100 படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களுடன் குடும்ப திரைப்படங்களையும் தனித்துவமாக தெரியும் கதைக்களங்களையும் கொண்டு இவரது திரைப்படங்கள் ரசிக உள்ளங்களில் தனி இடத்தை இவருக்கு அளித்தது பாக்கியராஜ் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை! இந்தியாவின் வரைபடத்தையே மாற்றப்போகும் அந்த ரகசியத் திட்டம் என்ன?
அருள் அருள்வர்ஷன்
2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்டு, பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, ஆளும் பாஜக (208 இடங்களுடன் அமோக வெற்றி பெற்றது) வங்காளத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்திய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஊடகங்கள் வெறும் அரசியல் அல்லது கொள்கை ரீதியான போராகக் கொண்டாடிக்கொண்டிருக்கலாம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள கொடூரமான மற்றும் வெளிப்படையான உண்மை அதுவல்ல; இது முற்றிலும் ராணுவப் புவியியல் (military geography) சார்ந்த விஷயமாகும்.
இந்தியாவின் நிலப்பரப்பு வரைபடத்தை உற்றுநோக்குங்கள். இந்தியாவின் முக்கிய நிலப்பரப்பு, வடகிழக்கு மாநிலங்களுடன் மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிகக் குறுகிய நிலப்பகுதி வழியாக இணைக்கப்பட்டுள்ளது. அதுதான் ‘சிலிகுரி வழித்தடம்’ (Siliguri Corridor) அல்லது ‘சிக்கன்ஸ் நெக்’ (Chicken’s Neck – கோழியின் கழுத்து போன்ற பகுதி) என்று அழைக்கப்படுகிறது. இதன் மிகக் குறுகிய பகுதியில், இது வெறும் 22 கி.மீ அகலம் மட்டுமே கொண்டது.
இதற்கு வடக்கே டோக்லாம் பீடபூமி உள்ளது; அங்கு சீன ராணுவம் எல்லா காலநிலையிலும் பயன்படுத்தக்கூடிய ராணுவச் சாலைகளை அமைத்து வருகிறது. தெற்கே வங்கதேசம் உள்ளது. புது தில்லி இப்போது ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளது: வட வங்காளத்தின் இந்த குறுகிய நிலப்பகுதி மீது மத்திய அரசுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றால், சீன மக்கள் விடுதலை ராணுவத்தால் (PLA) வெறும் 48 மணி நேரத்தில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த 5 கோடி மக்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்க முடியும்.
நாளை ஒரு போர் ஏற்பட்டால், சீனா முழு இமயமலைத் தொடரையும் கடக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எளிதாகச் சும்பி பள்ளத்தாக்கு (Chumbi Valley) வழியாகத் தங்கள் பீரங்கிகளை நகர்த்தி, இந்த 22 கி.மீ நிலப்பகுதியை மட்டும் கைப்பற்றினாலே போதும். ஒருவேளை சிலிகுரி வழித்தடம் துண்டிக்கப்பட்டால், இந்தியாவின் ‘கிழக்குக் கட்டளைப் பிரிவு’ (Eastern Command) ராணுவ ஆதரவிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடும்.
பல தசாப்தங்களாக, இந்த முக்கியமான வழித்தடத்தின் பாதுகாப்பு என்பது சட்டரீதியாகக் கொல்கத்தாவில் உள்ள மாநில அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருந்தது. ராணுவத் தேவைகள், ரயில் பாதைகள் அல்லது எல்லைக் கட்டமைப்பு வசதிகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதில் மாநில அரசு தாமதம் செய்தால், இந்திய ராணுவத்தால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இதற்கு நிரந்தரத் தீர்வாக, 2026 வங்காளத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, வட வங்காளத்தையும் பீகாரின் கிஷன்கஞ்ச் மற்றும் பூர்னியா ஆகிய சீமாஞ்சல் மாவட்டங்களையும் இணைத்து ஒரு புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்கும் முயற்சிகள் தில்லியில் தீவிரமடைந்துள்ளன. இது வெறும் உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த விஷயம் அல்ல; மாறாக, மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ‘இராணுவமயமாக்கப்பட்ட இடைப்பகுதியை’ (militarized buffer zone) உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஒரு யூனியன் பிரதேசம் உருவாக்கப்படுவதன் மூலம், மாநில முதலமைச்சரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமலேயே, பாதுகாப்பு அமைச்சகத்தால் உடனடியாக நிலத்தைக் கையகப்படுத்தவும், மத்தியப் படைகளை நிலைநிறுத்தவும், வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் அமைப்புகளை (anti-aircraft systems) நிறுவவும் முடியும்.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு அச்சமூட்டும் யதார்த்தம் – மக்கள் தொகை மற்றும் வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான தொகுதி மறுவரையறை (delimitation) ஆகும். 2026-இல் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் அரசியல் வரைபடம் மாற்றியமைக்கப்படவுள்ளது. வங்கதேசம் மற்றும் நேபாளத்திலிருந்து நடைபெறும் சட்டவிரோதக் குடியேற்றம், பீகாரின் சீமாஞ்சல் பகுதி மற்றும் வங்காளத்தின் எல்லை மாவட்டங்களில் பெரும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்தக் குடியேற்றத்தை வெறும் மக்கள் தொகை சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், சீன எல்லைக்கான இராணுவ விநியோகப் பாதைகளுக்கு விடுக்கப்படும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே புது தில்லி கருதுகிறது.
இப்பகுதி யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதன் மூலம், சட்டவிரோதக் குடியேறியவர்களைத் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தும் உள்ளூர் அரசியல்வாதிகளின் அதிகாரம் பறிபோகும். எல்லைப் பாதுகாப்பு முழுமையாக மத்திய அமலாக்க முகமைகளின் கைகளில் இருக்கும்.
பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது. ஏனெனில், நாளை சீன டாங்கிகள் எல்லையைக் கடந்து வரும்போது, நாட்டைப் பாதுகாப்பதற்கு உள்ளூர் அரசியல்வாதியின் அனுமதிக்காகக் காத்திருக்க முடியாது!
‘கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை..
தமிழகம் முழுவதும் கடந்த 22 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா அவர்கள் கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி சார்பிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம். தவெக கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பல கோயில்களின் கருவறைக்குள் ஜோசப் விஜய் படத்தை வைத்து வழிபட்டுள்ளனர். இது அங்கு வருகை தந்த பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பழனி தண்டாயுதபாணி கோயிலில் தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா தலைமையில் நடைபெற்ற தங்கத்தேர் நிகழ்வில் தங்கத்தேரில் விஜய் படத்தை வைத்துள்ளனர். இதற்கு முருக பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பலபட்டரை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், அந்தக் கோயிலில் பூஜை செய்கின்ற பூசாரியை மிரட்டி அம்மன் கருவறைக்குள் அம்மனுக்கு இணையாக விஜய் படத்தை வைத்து வழிபட்டு இருக்கின்றனர். இது அங்கு வழிபட வருகை தந்த பக்தர்களுக்கும் அதை சமூக வலைதளங்கள் மூலமாக கண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியும் முகம் சுளிக்கும் வகையில் இருந்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விநாயகர் கோயிலிலும், அம்மன் கோயிலிலும் கருவறையில் ஜோசப் விஜய் அவர்கள் படத்தை வைத்து வழிபட்டது, மேலும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..
தமிழகத்தில் இந்து சமுதாய மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திற்கு இணையாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் படத்தை வைத்து வழிபட்ட தமிழக வெற்றி கழகம் கட்சியினரின் செயல் தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியும் மிகுந்த மன வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக தங்களது கட்சியினருக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இந்து சமுதாய மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திற்கு இணை கற்பித்து கருவறைக்குள் படத்தை வைத்து பூஜை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
மதுரை: இந்திய ரயில்வேயின் மைல்கல்லாக திகழும் வந்தே பாரத் ரயில்கள் எதிர்பார்ப்பிற்கும் மேலாக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளன. குறிப்பாக தென் மாநில வந்தே பாரத் ரயில்கள், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சொகுசு மற்றும் பாதுகாப்பான விரைவான பயணம், நடப்பு முன்பதிவு போன்ற அம்சங்களால் வெற்றி நடை போடுகிறது தென் மாநில வந்தே பாரத் ரயில்கள்!
இந்திய ரயில்வே உலகிலேயே நான்காவது பெரிய வலை அமைப்பை கொண்டது. சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை கொண்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. உலகில் பயணிகள் போக்குவரத்தில் முன்னணி அமைப்புகளில் ஒன்றாகவும், மிகப்பெரிய பொது போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகவும் இந்திய ரயில்வே விளங்குகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் கடந்த 1853 ஆம் ஆண்டு பம்பாய் – தானே இடையே ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நீராவி இன்ஜின்களின் மூலம் இந்திய ரயில்வேயின் பயணம் தொடங்கியது. சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் உலகின் மிகப்பெரும் அரசுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே திகழ்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்வே மிக வேகமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 100% மின்மயமாக்கப்பட்ட பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் செலவும் கார்பன் உமிழ்வும் குறைந்துள்ளன. சரக்கு போக்குவரத்துக்காக தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் சரக்கு வழித்தடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
இதனால் , சரக்கு ரயில்களின் வேகம் மற்றும் திறன் அதிகரித்துள்ளது. இந்த சாதனைகளின் தொடர்ச்சியாக தான் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Semi High Speed ரயிலான வந்தே பாரத், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி புது டெல்லியில் இருந்து வாரணாசி வரை பிரதமர் நரேந்திர மோடியால் முதல் பயணிகள் சேவையை தொடங்கியது.
அதிவேக இயக்கம், நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக, தற்போது நாடு முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் இந்தியாவில் உள்ள சுமார் 270 மாவட்டங்களை இணைத்து பயணம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2025–26 நிதியாண்டில் மட்டும் வந்தே பாரத் ரயில்களில் 3.98 கோடி (39.8 மில்லியன்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். நாடு முழுவதும் சராசரியாக தினமும் சுமார் 1.1 லட்சம் பேர் வந்தே பாரத் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்ட 2019 முதல் 2026 வரை, 9.1 கோடிக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன.
1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணச் சுற்றுகளை (trips) நிறைவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் தெற்கு ரயில்வேயின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகளிடம் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவற்றில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வருவாயும் ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.
2024-25 ஆம் ஆண்டில் 54.12 லட்சம் பயணிகள் மற்றும் ₹540.65 கோடி வருவாய் என்ற நிலையிலிருந்து, 2025-26 ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் 24 வந்தே பாரத் சேவைகள் மூலம் மொத்தம் 77.38 லட்சம் பயணிகள் பயணிம் மேற்கொள்ளவும், ₹803.86 கோடி வருவாய் ஈட்டவும் முடிந்தது.
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்டு வரும் உயர்தர சேவையின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. மங்களூரு – திருவனந்தபுரம், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்கள், தொடர்ந்து 100%-க்கும் அதிகமான இருக்கை பயன்பாட்டு அளவைப் பதிவு செய்துள்ளன. பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை இவை உறுதி செய்கின்றன.
2026-27 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) மட்டும், இந்த ரயில்கள் 15.21 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று ₹162.96 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. அதேபோன்று, ‘நடப்பு முன்பதிவு’ (Current-Booking) வசதி மூலம் ரயில்களில் முழுமையான இருக்கை பயன்பாடு மற்றும் பயணிகளின் கடைசி நேரப் பயணமும் எளிதாக மாற்றப்பட்டுள்ளது.
இருக்கை பயன்பாட்டு அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தபோதிலும், தெற்கு ரயில்வேயின் மேற்கொண்ட ‘நடப்பு முன்பதிவு’ என்ற புதிய முயற்சி பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை, ரயிலின் தொடக்க நிலையங்கள் மற்றும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்தே ஆக வேண்டிய பயணிகளும் எளிதாக முன்பதிவு செய்துகொள்ள முடிகிறது.
சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட 8 ரயில்களில், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிந்தைய (ஆகஸ்ட்-அக்டோபர் 2025) நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில், கிட்டத்தட்ட அனைத்து வழித்தடங்களிலும் ‘நடப்பு முன்பதிவு’ மூலம் பயணித்தவர்களின் எண்ணிக்கையிலும் வருவாயிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.
ரயில் வாரியான ஒப்பீடு – நடப்பு முன்பதிவு பயணிகள் மற்றும் வருவாய்
வண்டி எண்
தடம்
சராசரி நடப்பு முன்பதிவு பயணிகள் எண்ணிக்கை (ஏப். – ஜூன் 2025)
சராசரி நடப்பு முன்பதிவு பயணிகள் எண்ணிக்கை (ஆக. – அக் 2025)
சராசரி நடப்பு முன்பதிவு வருவாய் (ஏப். – ஜூன் 2025)
சராசரி நடப்பு முன்பதிவு வருவாய் (ஆக. – அக் 2025)
20631
மங்களூரு to திருவனந்தபுரம்
3,335
6,954
ரூ.22.24 லட்சம்
ரூ.45.01 லட்சம்
20632
திருவனந்தபுரம் to மங்களூரு
5,164
11,896
ரூ.32.79 லட்சம்
ரூ.73.35 லட்சம்
20627
சென்னை எழும்பூர் to நாகர்கோவில்
1,501
2,832
ரூ.14.36 லட்சம்
ரூ.28.98 லட்சம்
20628
நாகர்கோயில் to சென்னை எழும்பூர்
1,788
3.846
ரூ.15.51 லட்சம்
ரூ.36.34 லட்சம்
20642
கோயம்புத்தூர் to பெங்களூர் கண்டோன்மென்ட்
878
835
ரூ.6.84 லட்சம்
ரூ.6.68 லட்சம்
20646
மங்களூரு to – மடகாவோன் (கோவா) சந்திப்பு
690
667
ரூ.6.21 லட்சம்
ரூ.6.25 லட்சம்
20671
மதுரை சந்திப்பு to – பெங்களூரு கண்ட்டோன்மென்ட்
544
725
ரூ.4.94 லட்சம்
ரூ.6.69 லட்சம்
20677
சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் to விஜயவாடா
2,829
2,512
ரூ.21.91 லட்சம்
ரூ.18.87 லட்சம்
அளவுகோல்
ஏப்.-ஜூன் 2025
ஆக.-அக்.2025
வளர்ச்சி
சராசரியாக நடப்பு முன்பதிவு செய்த பயணிகள்
16,729
30267
80.93%
நடப்பு முன்பதிவு மூலம் பெற்ற சராசரி வருவாய்
ரூ.124.80 லட்சம்
ரூ.222.17 லட்சம்
78.02%
இதனால் தெற்கு ரயில்வே, ‘நடப்பு முன்பதிவு’ முறையை அனைத்து வந்தே பாரத் ரயில்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 17 வந்தே பாரத் ரயில்களிலும், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை பயணத்தைத் தொடங்கும் நிலையம் மற்றும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் ‘நடப்பு முன்பதிவு’ (current-booking) வசதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகமான பயணிகள் தேவை மற்றும் ‘நடப்பு முன்பதிவு’ வசதி ஆகியவற்றின் கூட்டு விளைவே தற்போது தெற்கு ரயில்வேயின் அனைத்து வந்தே பாரத் ரயில்களின் செயல்பாட்டிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
தெற்கு ரயில்வே – வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
அளவுகோல்
நி.ஆ 2024-25
நி.ஆ 2025-26
ஏப்.-மே 2025
ஏப்.-மே 2026
மொத்த வருவாய் (கோடியில்)
ரூ.540.65
ரூ.803.86
ரூ.119.52
ரூ.162.96
பயணம் செய்த மொத்த பயணிகள் (லட்சத்தில்)
52.12
77.38
11.41
15.21
நடப்பு முன்பதிவின் மூலம் பயணம் செய்த பயணிகள்
2,98,989
7,42,428
61,990
1,39,817
நடப்பு முன்பதின் மூலம் பெறப்பட்ட வருவாய் (லட்சத்தில்)
2,181.53
5.706.75
444.28
1,013.50
விரைவு மற்றும் சொகுசான பயணத்தின் அடிப்படையில் தற்போது ரயில் பயணிகள் வந்தே பாரத் ரயில்களை தேர்வு செய்கின்றனர். தற்போது நடப்பு முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது பயணிகளுக்கு வரப்பிரசாதம். சென்னையிலிருந்து மதுரைக்கு கால் டாக்ஸி எடுத்துக்கொண்டு வருவதற்கு ஆகும் செலவில் கால் பங்கு கூட வந்தே பாரத் கட்டணத்தில் கிடையாது என்பதால் பகல் நேர விரைவு பயணத்திற்கு வந்தே பாரத் ரயில்களை பயணிகள் பெரிதும் தேர்வு செய்கின்றனர்.
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வேத மந்திரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், யாக சாலையிலிருந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் மேளதாளங்கள் முழங்க கோவில் விமானம் நோக்கி புறப்பாடு ஆகியது .
தொடர்ந்து திட்டமிட்டபடி, காலை 9.57 மணி முதல் 10.17 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மேளதாளங்கள் முழங்க வேதியர்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. மூலவர் , கோதண்ட ராமர் சுவாமி, விநாயகர், முருகப்பெருமான், ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், கிருஷ்ணர் மற்றும் நவக்கிரக தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் மீது யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். திரளான பொதுமக்களின் பங்கேற்பால் விழா ஆன்மீக எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
த.வெ.க. இன்னுமொரு திமுக தானா? திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறை படுத்த தயங்குவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு இந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
அதாவது நூறாண்டு வழக்கமா? நீதிமன்ற தீர்ப்பா? என்று யோசிப்பதாக கூறியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டத்தின் மாண்பை, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தான் கடமை. நீதிமன்றம் தீர விசாரணை நடத்தும்போது போது தனது கருத்தை தெரிவிப்பதோடு அரசின் நிலைப்பாடு முடிவுக்கு வந்துவிடுகிறது.
ஆனால் தீர்ப்பை அமல்படுத்தாமல் தற்போது மக்களை குழப்புவது போல நீதிமன்றத்தில் பதில் மனு தருவது த.வெ.க அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிகாட்டுவதாக உள்ளது. மேலும் தவெக மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகிறது.
த.வெ.க அரசானது திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுதான் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன் காரணமாகவே திமுகவின் இந்து விரோத மக்கள் விரோத செயல்பாட்டை முதல்வர் திரு. ஜோசப் விஜய் தொடர நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்களை மக்கள் தூக்கி எறிந்து திரு ஜோசப் விஜய் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் இந்து விரோதமாக செயல்பட்டு மக்களின் வெறுப்பிற்கு ஆளானதுதான். அதை உணராமல் தவெக இன்னும் ஒரு திமுக வாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையை பொய்த்து போக வைக்கிறது.
நேற்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடந்த இந்து முன்னணி மாநில பொதுக்குழுவில், தமிழக அரசு பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வருகின்ற கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு கடந்த ஆட்சியைப் போல மதிக்காது, தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வாழும் முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் திருஜோசப் விஜய் அரசின் கருத்து தெரிவித்து இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு தனது நிலையை சட்டத்தின் மாட்சிமையை மதிக்க தனது கருத்தை, செயலை திருத்திக் கொள்ள வேண்டும் . நீதிமன்ற தீர்ப்பின்படி கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றிய நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் வைக்கிறது.
— ராம் மாதவ் — தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் முக்கிய செய்தியானது. எந்த இந்திய சட்டத்தின்படி ஆர் எஸ் எஸ் செயல்படுகிறது, அதன் சட்டபூர்வமான நிலை என்ன, பதிவு செய்யப்பட்டுள்ளதா, நிர்வாகிகள் யார், நிதி எப்படி வருகிறது, எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது, வரி கட்டப்படுகிறதா, அதன் செயல்பாடுகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா, இதையெல்லாம் ஆர்எஸ்எஸ் விளக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
எதிர்பார்த்தபடியே, கார்கேவின் கடிதத்திற்கு பாகவத் ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று கூறி அதற்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். ‘இது அரசியல். இதுபோன்ற கூத்துக்களை ஏற்கனவே முயற்சித்துள்ளார்கள். எங்களுக்கு இது பழகிப்போன விஷயம்’ , என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு கார்கே ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ஆர்எஸ்எஸ் இந்த மண்ணின் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டுமென்று தாம் கேட்பதாக, வலியுறுத்தி பேசியுள்ளார். நேர்காணல் செய்தவர் ‘ஆர்எஸ்எஸ் எந்த சட்டத்தை மீறி இருக்கிறது’ என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. எந்த சட்டத்தின் படி ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது என்று தனக்குத் தெரியவில்லை என்று உளறி இருக்கிறார்.
‘ எல்லா குடிமக்களுக்கும் அமைப்பு அல்லது சங்கம் அல்லது கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 19 (1)(இ) தெளிவாக கூறுகிறது. இந்த சட்டமே ஆர் எஸ் எஸ் நாடு முழுக்கவும் தனது செயல்பாடுகளை சுதந்திரமாக நடத்த உரிமை வழங்கி உள்ளது. இது போன்ற அமைப்புகள் பதிவு செய்வது கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தவில்லை. அரசிடம் இருந்து நிதி உதவி பெறும் அமைப்புகள் அல்லது வர்த்தக செயல்பாடுகள் கொண்ட அமைப்புகள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று சட்டம் கூறுகிறது. இதுவும் ஆர்எஸ்எஸ் க்கு பொருந்தாது.
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. காந்தி கொலையுடன் இணைத்து தவறாக குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டபோது ஜவஹர்லால் நேருவின் அரசு ஆர் எஸ் எஸ் அமைப்பு சாசனத்தை தருமாறு கேட்டது . அந்த இயக்கம் அதை காட்டியது. இது நடந்தது 1949 இல். அதை ஏற்றுக் கொண்ட நேருவின் அரசு தடையை நீக்கியது. இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் மட்டுமன்றி நிதி திரட்டும் முறைமையையும் அரசு ஏற்றுக் கொண்டது என்பதையே காட்டுகிறது.
அரசுக்கு சமர்ப்பித்த சாசனத்தின்படி ஆர் எஸ் எஸ் அதன் பிறகு இந்த நாட்டில் தொடர்ந்து செயல்படுகிறது. அதன் உறுப்பினர்கள் நேருவின் அரசில் 1963 இல் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 1965 இல் (இந்திய- பாகிஸ்தான்) யுத்தத்தின் போது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆர் எஸ் எஸ் தலைவர் எம் எஸ் கோல்வல்கரின் ஆலோசனையை கேட்டு பெற்றார். 1973 இல் கோல்வல்கர் காலமான போது பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய இரங்கல் உரையில், குரு கோல்வல்கர் என்ற புகழ் மிக்க ஆளுமையை நாம் இழந்து உள்ளோம். அவர் இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத போதிலும் தனது ஆளுமையாலும் இலட்சிய பற்றாலும் இந்த தேசத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார், என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட தலைவர்கள் யாரும் ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று எப்போதும் கேட்டதில்லை.
வருமான வரி சட்டம் 1961 தின்படி ‘தனி மனிதர்களின் அமைப்பு’ என்று ஆர் எஸ் எஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கம்பெனியாகவோ பொது ட்ரஸ்ட் ஆகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாகவோ அல்ல. தனி நபர்களின் அமைப்பு என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சாசனத்தில் நிதி திரட்டும் முறை விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ‘வியாச பௌர்ணமி’ அல்லது அதை ஒட்டி வரும் புனித நாள் ஒன்றில் ஒவ்வொரு கிளையிலும் ‘ தட்சணை தினம்’ கொண்டாடப்படும். அப்போது தன்னார்வத்துடன் அளிக்கப்படும் நிதி பெறப்படும். அவ்வாறு பெறப்படும் நிதி ஆடிட்டர் மூலம் ஆய்வு செய்யப்படும். குரு தட்சணை எனப்படும் தன்னார்வ முறையில் நிதி திரட்டுவது ‘பரஸ்பரம்’ என்ற வருமான வரி சட்டப் பிரிவில் அடங்கும்.
சில தனிநபர்கள் சேர்ந்து குழுவாக வர்த்தக நோக்கம் இல்லாமல் பொது காரியத்திற்காக நிதி திரட்டுவது பரஸ்பரம் என்ற வகையில் வரும். அவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு வரிவிதிப்பு கிடையாது. இந்த அடிப்படையில்தான் நேரடி வரிக்கான மத்திய ஆணையம் சுயம்சேவகர்களிடமிருந்து குரு தட்சிணையாக பெறப்படும் நிதி பரஸ்பரம் என்ற வகையில் திரட்டப்படுவதால் அதற்கு வரி விதிக்க முடியாது, என்று கூறியுள்ளது.
1994 ல் பாட்னா உயர்நீதி மன்றம் இது தொடர்பான வழக்கில் மேற்படி வருமான வரித்துறையின் ஆணையை சுட்டிக்காட்டி, உறுப்பினர்களிடமிருந்து குரு தட்சணை என்ற வகையில் பெறப்படும் நிதிக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமா? என்று கேட்டால், ஆம் வரிவிதிப்பு கூடாது , என்று ஆர் எஸ் எஸ் க்கு ஆதரவாக தீர்ப்பு கூறியுள்ளது.
மத அமைப்புகள் பலவும் வேறு பல அமைப்புகளும் பதிவு செய்யப்படாமல் அதேவேளையில் சுதந்திரமாக இந்த நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆர் எஸ் எஸ் ஐ பொறுத்த வரையில், ‘தனி நபர்களின் அமைப்பு’ என்ற முக்கியமான அம்சத்தை தவிர மற்ற எல்லா வகையிலும் — அதன் அசையா சொத்துக்கள், பள்ளிகள், சகோதர அமைப்புகள் — எல்லாம் முறையாக சொசைட்டி, டிரஸ்ட் என்று பதிவு செய்யப்பட்டு விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்படுகின்றன.
1925 ல் ஆர் எஸ் எஸ் துவங்கப்பட்ட போது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அந்நிய அரசிடம் பதிவு செய்வது என்ற கேள்வியே எழவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு பதிவு செய்யப்படாத அமைப்பாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்ற நிலையை மேற்கொண்டது. இதை இதுவரை இருந்துள்ள அரசுகள் ஏற்று வந்துள்ளன. இன்று யாரோ ஒருவர் இது பற்றி கேள்வி எழுப்பினால் அவர் அறியாமையில் அரசியல் லாபத்திற்காக கேட்பதாகவே கருதப்படும்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர், தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார்.