தவறான புரிதல்: தேசிய கீதம் இசைத்தபோது மேடையிறங்கிய சர்ச்சைக்கு ஆளுநர் தரப்பு விளக்கம்

Published:

karnataka_governorபெங்களூரு: தேசியகீதம் இசைத்தபோது கர்நாடக ஆளுநர் மேடையைவிட்டு இறங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தவறான புரிந்துணர்வில் ஏற்பட்டுவிட்டதாக ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராஜ்பவனில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராகவேந்திர சிங் சௌஹானுக்கு பதவிப் பிராமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் தலைமை நீதிபதி வகேலா உட்பட புதிதாக பதவி ஏற்ற நீதிபதி ராகவேந்திரசிங் சவுகான் மற்றும் தலைமை செயலாளர் முகர்ஜி உள்ளிட்டோர் எழுந்து நின்றனர். ஆனால் தேசிய கீதம் ஒலிக்கும் முன்பே ஆளுநர் பாஜ்பாய் மேடையில் இருந்து இறங்கியதால், நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உதவியாளர் இதுபற்றிக் கூற, தவறை உணர்ந்து உடனே அவர் மேடையில் ஏறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய கீதத்தை ஆளுநர் அவமானப் படுத்த வில்லை என்றும், கவனக்குறைவின் காரணமாக கழிவறைக்குச் செல்லும் அவசரத்தில் கீழே இறங்கினார் என்றும் பின்னர் தெரிய வந்தது. இது குறித்த விளக்கத்தை ஆளுநர் மாளிகை பின்னர் தெரிவித்தது.   https://www.youtube.com/watch?v=Wr-IGMLyzHE

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img