Home Blog Page 6035

முக்கியச் செய்திகள்

[pb_row ][pb_column span=”span12″][pb_divider el_title=”Divider 1″ div_border_width=”2″ div_border_style=”solid” div_border_color=”#ff0000″ appearing_animation=”0″ ][/pb_divider][pb_articlelist el_title=”TamilNaduNews” articlelist_title=”தமிழக செய்திகள்” articlelist_show_title=”yes” articlelist_source=”k2_article” articlelist_filter_k2_categories=”116″ articlelist_filter_k2_categories_select_multi=”9″ articlelist_amount=”5″ articlelist_sort_by=”a.ordering” articlelist_sort_order=”DESC” articlelist_filter_date=”off” articlelist_date_field=”a.created” articlelist_layout=”layout_horizontal” articlelist_show_first_description=”yes” articlelist_first_description_limit=”30″ articlelist_show_first_thumbnail=”yes” articlelist_first_thumbnail_type=”custom” articlelist_first_thumbnail_dimension_width=”320″ articlelist_first_thumbnail_dimension_height=”180″ articlelist_show_first_meta_data=” ” articlelist_show_read_more_first=”yes” articlelist_list_style=”thumbnail” articlelist_thumbnail_type=”custom” articlelist_thumbnail_dimension_width=”120″ articlelist_thumbnail_dimension_height=”90″ articlelist_show_description=”no” articlelist_show_meta_data=” ” articlelist_show_read_more=”no” appearing_animation=”0″ ][/pb_articlelist][pb_divider el_title=”Divider 1 2″ div_border_width=”2″ div_border_style=”solid” div_border_color=”#ff0000″ appearing_animation=”0″ ][/pb_divider][pb_articlelist el_title=”IndiaNews” articlelist_title=”தேசிய செய்திகள்” articlelist_show_title=”yes” articlelist_source=”k2_article” articlelist_filter_k2_categories=”99″ articlelist_filter_k2_categories_select_multi=”9″ articlelist_amount=”5″ articlelist_sort_by=”a.ordering” articlelist_sort_order=”DESC” articlelist_filter_date=”off” articlelist_date_field=”a.created” articlelist_layout=”layout_horizontal” articlelist_show_first_description=”yes” articlelist_first_description_limit=”30″ articlelist_show_first_thumbnail=”yes” articlelist_first_thumbnail_type=”custom” articlelist_first_thumbnail_dimension_width=”320″ articlelist_first_thumbnail_dimension_height=”180″ articlelist_show_first_meta_data=” ” articlelist_show_read_more_first=”yes” articlelist_list_style=”thumbnail” articlelist_thumbnail_type=”custom” articlelist_thumbnail_dimension_width=”120″ articlelist_thumbnail_dimension_height=”90″ articlelist_show_description=”no” articlelist_show_meta_data=” ” articlelist_show_read_more=”no” appearing_animation=”0″ ][/pb_articlelist][pb_divider el_title=”Divider 1 3″ div_border_width=”2″ div_border_style=”solid” div_border_color=”#ff0000″ appearing_animation=”0″ ][/pb_divider][pb_articlelist el_title=”World News” articlelist_title=”உலகச் செய்திகள்” articlelist_show_title=”yes” articlelist_source=”k2_article” articlelist_filter_k2_categories=”102″ articlelist_filter_k2_categories_select_multi=”9″ articlelist_amount=”5″ articlelist_sort_by=”a.ordering” articlelist_sort_order=”DESC” articlelist_filter_date=”off” articlelist_date_field=”a.created” articlelist_layout=”layout_horizontal” articlelist_show_first_description=”yes” articlelist_first_description_limit=”30″ articlelist_show_first_thumbnail=”yes” articlelist_first_thumbnail_type=”custom” articlelist_first_thumbnail_dimension_width=”320″ articlelist_first_thumbnail_dimension_height=”180″ articlelist_show_first_meta_data=” ” articlelist_show_read_more_first=”yes” articlelist_list_style=”thumbnail” articlelist_thumbnail_type=”custom” articlelist_thumbnail_dimension_width=”120″ articlelist_thumbnail_dimension_height=”90″ articlelist_show_description=”no” articlelist_show_meta_data=” ” articlelist_show_read_more=”no” appearing_animation=”0″ ][/pb_articlelist][pb_divider el_title=”Divider 1 4″ div_border_width=”2″ div_border_style=”solid” div_border_color=”#ff0000″ appearing_animation=”0″ ][/pb_divider][/pb_column][/pb_row]

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்

- 2026

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் …
எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்…
கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.

திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் – நா.பா.

சிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் – எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.

என் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.

பத்திரிகை – எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக – திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர்  கிடைத்தார்கள்.

கௌதம நீலாம்பரன் – ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.

ஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருடைய விகடன் தொடர்பான அனுபவம்,  முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்… எல்லாம்தான்!

இவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.

15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது முதல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.

தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.

சிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்…  அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும்! சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்…

கலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.

சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான்! இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.

பல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்… நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என…?! மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான்! பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.

அண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.

அண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்!

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்

- 2026

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் …
எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்…
கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.

திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் – நா.பா.

சிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் – எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.

என் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.

பத்திரிகை – எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக – திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர்  கிடைத்தார்கள்.

கௌதம நீலாம்பரன் – ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.

ஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருடைய விகடன் தொடர்பான அனுபவம்,  முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்… எல்லாம்தான்!

இவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.

15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது முதல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.

தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.

சிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்…  அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும்! சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்…

கலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.

சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான்! இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.

பல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்… நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என…?! மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான்! பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.

அண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.

அண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்!

எம்.எல்.ஏ.வை முதுகில் சுமந்து ஆற்றைக் கடந்த காவலர்: படம் வெளியாகி பரபரப்பு

river_bjp ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆற்றைக் கடக்கும் போது, அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் அக்கறையில் அவரை முதுகில் சுமந்து ஆற்றின் அக்கரையில் விட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரைக் கால் மூழ்கும் அளவு கூட இல்லாத நிலையில் ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்க, பாஜக எம்எல்ஏ ஆற்றில் நடக்க முயற்சி செய்யாமல், அவரை காவலர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பலர் கண்டனக் கருத்து எழுப்பியுள்ளனர். ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ க்ருஷண் லால், இதில் அதிகார துஷ்ப்ரயோகம் ஏதும் இல்லை. நான் ஆற்றைக் கடக்க அவர் உதவினார். அவ்வளவே என்று பதில் கூறியுள்ளார்.

மும்பை ரயில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 பேர் குற்றவாளிகள்: தீர்ப்பு

mumbai-train-bomb-blast மும்பை: மும்பையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் ரயில்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக, நீதிமன்றம் இன்று 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, தீர்ப்பு கூறியுள்ளது. இவர்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். மும்பை பயணிகள் ரயில்களில் வெடித்த 7 குண்டுகளில் சிக்கி 180க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் லஸ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரே இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்ததாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப் பட்டிருந்த 12 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இவர்கள் மீது, தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல், சதித்திட்டம், கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இவர்கள் 12 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இவர்களுக்கான தண்டனைகள் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

கேஜ்ரிவாலை சந்தித்த கமல்ஹாசனால் தொற்றிக் கொண்ட பரபரப்பு

புது தில்லி: Kamal- president meet IMG-20150911-WA0024 புது தில்லி சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், திடீரென தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். அவரது இந்த சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியிலும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்கி, திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், திடீரென கேஜ்ரிவாலை சந்தித்திருப்பது பரபரப்பான ஒன்றாக பார்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பதால் இந்தப் பரபரப்பு எழுந்துள்ளது. முன்னதாக, தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று தேநீர் விருந்தளித்தார். நடிகர்கள் கமல் ஹாசன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், தொழிலதிபர் அணில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், இந்த திட்டத்துக்கு வலுசேர்க்கும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சிறப்பு விருந்தினர்களின் கருத்துகளை, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கேட்டறிந்தனர். அப்போது, பிரதமர் மோடி, இத்திட்டத்திற்கான தூதர்கள் தங்களின் ஆளுமையை முழுமையாக பயன்படுத்தி, தூய்மை இந்தியாவை பிரபலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான கையேட்டின் முதல் பிரதியை பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார். அத்துறை இணை அமைச்சர் பாபுலால் சுப்ரியோ திட்டத்தின் சிறப்புகள் குறித்து தூதர்களிடம் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சௌரவ் கங்குலி, முகம்மது கைஃப், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் அருண் பூரி, ராமோஜி ராவ், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, எழுத்தாளர் சேத்தன் பகத், வடகிழக்கு தில்லி தொகுதி மக்களவை பாஜக உறுப்பினர் மனோஜ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டவர்களும் ஆள்பவர்களும் ஒன்றுமே செய்யவில்லை: தேனியில் விஜயகாந்த் பேச்சு

vijayakanth தேனி: தமிழகத்தில் ஆண்ட கட்சிகளும் சரி, ஆள்பவர்களும் சரி ஒன்றுமே செய்யவில்லை என்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேமுதிக., சார்பில் மக்களுக்கான மக்கள் பணி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கினார். பின்னர் அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் நடத்தி இருக்க வேண்டும் ஆனால் தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறுகிறார்… நான்கரை ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடுகள்தான் கிடைத்துள்ளன என்று. ஆனால் இன்னும் ஆறு மாதத்தில் எப்படி ரூ. 2 லட்சம் கோடி முதலீடுகளுக்கான தொழில்களை உருவாக்க முடியுமா? முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் நன்றாக ‘யோகா’ செய்கிறார்கள். புரிந்து உணர்ந்து ஒப்பந்தம் போடுகிறார்களாம். அதற்கு 2 மாதமாம். 98 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவே இரண்டு மாதம் ஆகும் என்றால் ரூ 2 லட்சம் கோடி முதலீடுகள் என்பது எப்படி சாத்தியம் என்று அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக, தேனி மாவட்ட மக்களைப் பார்த்து, இந்தத் தேனி மாவட்டம் 3 முதல்வர்களைப் பார்த்திருக்கிறது. யுபிஎஸ் என்பவர் உள்பட. ஆனால், இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னேற்றம் எதுவும் இல்லை. ஆண்ட கட்சியும் ஒன்றும் செய்யவில்லை, ஆளும் கட்சியும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் என்றும் மக்களுக்காக மக்கள் பணி செய்யும் ஒரே கட்சி தேமுதிகதான் என்று கூறிப்பிட்டார் விஜயகாந்த்.

காஷ்மிர் சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீரின் ஹந்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும் கொல்லப்பட்டனர்.

கீதையை பாடமாக வைக்க அரசு திட்டம்

உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: 5 பேர் குற்ற வாளிகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு…. குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 5 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு