எம்.எல்.ஏ.வை முதுகில் சுமந்து ஆற்றைக் கடந்த காவலர்: படம் வெளியாகி பரபரப்பு

Published:

river_bjp ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆற்றைக் கடக்கும் போது, அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் அக்கறையில் அவரை முதுகில் சுமந்து ஆற்றின் அக்கரையில் விட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரைக் கால் மூழ்கும் அளவு கூட இல்லாத நிலையில் ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்க, பாஜக எம்எல்ஏ ஆற்றில் நடக்க முயற்சி செய்யாமல், அவரை காவலர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பலர் கண்டனக் கருத்து எழுப்பியுள்ளனர். ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ க்ருஷண் லால், இதில் அதிகார துஷ்ப்ரயோகம் ஏதும் இல்லை. நான் ஆற்றைக் கடக்க அவர் உதவினார். அவ்வளவே என்று பதில் கூறியுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img