என்ன ஆச்சு சுசித்ராவுக்கு?! காணாமல் போய்… மீட்கப்பட்டு… மனநல சிகிச்சைக்கு சேர்த்து..?!

suchitra - 2026

சென்னை, அடையாறில் திடீரென காணாமல் போனார் என்று புகார் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, பாடகி சுசித்ராவை போலீசார் வலைவீசித் தேடி, அலைபேசி சமிக்ஞை உதவியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து மீட்டனர். தொடர்ந்து சேத்துப்பட்டில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சுசித்ரா சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தொடக்க காலத்தில் பண்பலை வானொலி தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்ற சுசித்ரா என்ற சுசி, பின்னர் திரைப்படங்களில் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். ஆர்.ஜே.,யில் இருந்து பின்னணிப் பாடகியாக உருமாறிய இவர், பின்னாளில் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார்.

இதன் பின்னர் இவரது பெயர் ஊடகங்களில் பலமாக அடிபடத் தொடங்கியது. ‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் திரைப்பட பிரபலங்களின் அந்தரங்க படங்கள் இவரது டிவிட்டர் பக்கங்களில் அதிரடியாக வெளியாகின. இதன் பின்னணியில் சுசித்ரா இருப்பதாகவும், இவருக்கு மனநிலை சரியில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், தனது டிவிட்டர் பக்கம் யாராலோ களவாடப் பட்டு இயங்கப்படுகிறது என்று சுசித்ரா புகார் கூறினார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இந்நிலையில் சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாக ரத்து பெற்றார். இதன் பின்னர், சென்னை அடையாறில், காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரி சுனிதா, திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

சுசித்ராவின் சகோதரி, சுசித்ராவை சென்னை தி.நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்.

சுசித்ரா சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் சுசித்ரா அவரது தோழியிடம் ‘நான் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இதை அடுத்து பதறிப் போன அவரது தோழி, சுசித்ராவின் சகோதரி சுனிதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதை அடுத்து போலீஸாரிடம் புகார் செல்லவே, அடையாறு போலீசார் சுசித்ரா வீட்டுக்குச் சென்று பார்த்தனர். ஆனால் வீடு பூட்டப் பட்டிருந்தது. இதனால், ‘சுசித்ராவைக் காணவில்லை’ என்று அவரது சகோதரி சுனிதா, அடையாறு போலீசில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கி இருப்பதை அறிந்து, பெண் போலீசாருடன் சென்று சுசித்ராவை மீட்டனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

பின்னர் தி.நகர் மருத்துவமனைக்கு சுசித்ராவை அழைத்துச் செல்ல சுனிதா முயன்றார். ஆனால் அவர் அங்கே செல்ல மறுத்தார். இதையடுத்து பெண் போலீசார் உதவியுடன் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

இதனிடையே, சுசித்ரா இது குறித்துக் கூறுகையில், தனக்கு ஒன்றுமில்லை என்றும், தன்னை மனநலம் பாதிக்கப் பட்டவராக சித்திரிக்க முயற்சி நடக்கிறது; நான் ஓட்டலில் ஓய்வு எடுத்தேன் ஆனால் வேண்டுமென்றே இப்படி என் சகோதரி புகார் அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories