செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பயணியர் சேவைக் குழு உறுப்பினர்கள் ஆய்வு!

Published:

mnsundar - 2026

வியாழன் மாலை 5 மணியளவில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே பயணிகள் சேவைக் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சின்னபாலன், எம்.என்.சுந்தர் ஆகியோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள், பயணியருக்கான சேவைகள், ஓய்வு அறை, நடை மேடை உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்தனர். ரயில் நிலைய உணவகம், தங்கும் இடங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ததுடன், பயணிகளிடம் அவர்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

mnsundar1 - 2026

தொடர்ந்து இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ரயில்வே துறை மூலம், பயணிகளுக்கான வசதிகளைக் கேட்டறிந்து, பரிந்துரைகளையும் தகவல்களையும் கொடுக்கும் பாலமாக தாங்கள் செயல்படுவதையும், ரயில் நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தாங்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில், பிட் லைன் வசதி, லிப்ட் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டுள்ளதாகவும், அது குறித்து அறிக்கை அனுப்பப் படும் என்றும் கூறினர்.

mnsundar3 - 2026

முன்னதாக, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில், செங்கோட்டை ரயில் நிலையத்தில் பிட் லைன் வசதி ஏற்படுத்துதல், லிப்ட் வசதி, பயணிகள் ஓய்வறைகள், கூடுதல் டிக்கட் கவுண்டர்கள், அனைத்து நடைமேடைகளிலும் குடிநீர் மற்றும் கழிவறை வசதி, எல்லா நடைமேடைகளிலும் ரயில்களின் வருகை புறப்பாடு பற்றி அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் கூடுதலாக அமைத்தல், ரயில் பெட்டிகளை கண்டறியும் எலக்ட்ரானிக் போர்டுகள் அனைத்து நடைமேடைகளிலும் அமைத்தல் இவை குறித்து மனு ஒன்று அளிக்கப் பட்டது.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img