ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

Published:

1001338002 1 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் 27.03.26 வெள்ளிக்கிழமை ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தன பர்வத வாகனத்திலும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்கள்.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏப்1ல் திருக்கல்யாணம் நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் பிறந்த புண்ணிய பூமியாக ஸ்ரீவில்லிபுத்தூர் போற்றப்படுகிறது. இங்கு உள்ள பெரிய கோபுரம் தமிழ்நாடு அரசின் சின்னமாக விளங்குகிறது.

இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 24‌ ல் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு பூஜைகள் செய்து, தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த திருக்கல்யாண உற்சவ கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் தினமும் காலை ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.இன்று 27.03.26 வெள்ளிக்கிழமை ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தன பர்வத வாகனத்திலும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்கள்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம் (ஏப்ரல் 1) அன்று மாலை 6 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img