ரவுடிகள் மிரட்டுவதால் என்னால் படிக்க இயலவில்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி!

modi-speech

திருவனந்தபுரம் அருகே பேட்டை ஆனையறா பகுதியை சேர்ந்தவர் சுஜித் மகள் கவுரி நந்தனா (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நகை பறிப்பு வழக்கு தொடர்பாக, பேட்டை எஸ்ஐ மீது உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார் சுஜித். அவரிடம் சமரசம் பேச எஸ்ஐ அணுகினார். அதற்கு சுஜித் மறுத்து விட்டார். அதன்பிறகு 2 ரவுடிகளை சமரசம் பேச அனுப்பியுள்ளார் எஸ்ஐ. அதற்கும் மசியவில்லை. அடிக்கடி அவரது வீட்டுக்கு ரவுடிகள் வந்து மிரட்டி சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவி கவுரி நந்தனா, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ”எனது தந்தை எஸ்ஐக்கு எதிராக புகார் கூறினார். அதனால் ரவுடிகள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிரட்டி ரகளை செய்கின்றனர். கமிஷனருக்கு புகார் செய்ததால், ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் போலீசார் எங்களை பழிவாங்க, எனது தந்தை மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு போலீசார் பலமுறை மிரட்டி சென்றனர்.

பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்தும் கடுமையாக தாக்கினர். ரவுடிகள் மிரட்டுவதாலும், போலீசார் அடிக்கடி வந்து பிரச்னை செய்வதாலும், என்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேட்டை போலீசார் கூறுகையில், ஒரு பெண்ணிடம் இருந்து நகையை பறித்து, அவரை வீட்டுக்குள் சிறை வைத்தது தொடர்பாக சுஜித், அவரது மனைவிக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 பேரும் முன்ஜாமீனில் உள்ளனர் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories