ஐபிஎஸ் அதிகாரி மார்பில் பாய்ந்த குண்டு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

sharma

பெங்களூருவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.பி.ஷர்மா குண்டு காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநில காவலர் வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் ஆர்.பி.ஷர்மா. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், கடந்த 1977-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு கொத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆர்.பி.ஷர்மா தனது அறையில் இருந்தார். அப்போது அவரது அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் ஆர்.பி.ஷர்மா உயிருக்கு போராடினார்.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தினர் ஆர்.பி.ஷர்மாவை மீட்டு கொலம்பியா ஆசியா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த ஆர்.பி.ஷர்மாவின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.

கைத்துப்பாக்கியில் இருந்து தவறுதலதாக குண்டு பாய்ந்து ஆர்.பி.ஷர்மா காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது தற்செயலாக வீட்டில் நடந்த விபத்து. அவர் நன்றாக இருக்கிறார், சுயநினைவுடன் இருக்கிறார், உரையாடுகிறார் “என்று பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

sharma1

இந்நிலையில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஷர்மா எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 2018-இல் சித்தராமையா தலைமையிலான அரசு காவல்துறையின் செயல்பாட்டில் தலையிடுவதாக ஆர்.பி.ஷர்மா கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. 59 வயதாகும் ஆர்.பி.ஷர்மா வரும் டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories