திடீரென ஐயையோ.கொரோன ஐயையோ கொரோன என அரசும் மீடியாக்களும் மக்களை பீதியில் ஆழ்த்தி தடுப்பூசி போடுங்க ஓடுங்க என மக்களை பேயாக ஓட.வைக்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது மக்கள் முண்டியடித்து வருகின்றனர். அது ஒருபுறம் இருக்க, கோவீஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன் காய்ச்சல் வருகிறது.
அப்படி காய்ச்சல் காணும் நேரத்தில் செய்ய கூடியவை செய்ய கூடாதவை என தெளிவான வழிகாட்டுதல் சொல்லப்படுவதாக தெரியவில்லை.
காய்ச்சல் வந்தால் சுகாதார நிலையத்தில் கொடுக்கப்படும் மாத்திரை மட்டுமே சாப்பிட வேண்டுமா?
அப்படி சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?
கடைகளில் பாராசிட்டமல் மாத்திரை வாங்கி சாப்பிடலாமா?
அப்படி சாப்பிட்டால் ஏதாவது ஆபத்து வருமா?
சாப்பிடலாம் என்றால் என்ன எம் ஜி.அளவுக்கான மாத்திரை வாங்கி சாப்பிடலாம்?
என்னென்ன மாத்திரைகளை தடுப்பூசிக்கு பிறகான காய்ச்சல் சமயத்தில் சாப்பிட கூடாது?
தடுப்பூசி கு பிறகு மீன் மற்றும் பிற அசைவ உணவுகள் சாப்பிடலாமா?
தடுப்பூசிக்கு பிறகான காயச்சல் வரும் பட்சத்தில் வேறு என்னென்ன உணவு உட்கொள்ளலாம் உடகொள்ள கூடாது?
இப்படி பலவிதமான சந்தேகங்களுக்கு எந்த.விதமான வழிகாட்டுதலும் தடுப்பூசி போட வரும் மக்களுக்கு.கொடுக்க படுவதாக தெரியவில்லை.
இந்த சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுவிட்டு காய்ச்சல் வந்தால் இதை போடுங்க என 3 , 500 எம்ஜி மாத்திரைகளை கொடுத்து விடுகின்றனர். சில இடங்களில் 6 மாத்திரைகள் என்று சொல்லப்படுகின்றது. நல்ல.விஷயம் தான். ஆனால்.கூடவே செய்ய கூடியவை செய்ய கூடாதவை என ஒரு பட்டியல் அனைத்து மருத்துவ மனைக்களிலும் எழுதி ஒட்டியாவது வைத்தால் பிரயோஜனமாக இருக்கும்.
காரணம்.இந்த தடுப்பூசி உள்ளே என்ன.வேலை.செய்யுதோ தெரியாது. அது தெரியாமல்.யாரேனும் ஏடாகூடமாக.ஏதாவது மாத்திரைகளை உண்டு விட்டு உயிருக்கே ஆபத்தாக போயி முடிந்து விட கூடாது.
எனவே அரசும் மீடியாக்களும்.மக்களை. பீதியில் ஆழ்த்தி தடுப்பூசி போட சொல்லுவதுடன் இப்படி உருப்படியான வழிகாட்டுதலும் செய்தால் பலரது.வாழ்க்கைக்கு நன்மை. அரசு கவனிக்க வேண்டும்.
- வி.ராம்குமார்