spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம்!

பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம்!

- Advertisement -

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். 27 வயதான இவர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பீர் கிராமத்தில் பாரா கிளைடிங் பைலட் பயிற்சி முடித்துள்ளார்.

இவர் ஏற்காட்டில் உள்ள ஜென்ட்ஸ் சீட் அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று காலை ஏற்காட்டில் இருந்து முதல் முறையாக பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சுமார், 40 நிமிடங்கள் வானில் பறந்தபடியே சாகசம் செய்தார்.

பின்னர் சாகசத்திற்கு பிறகு சேலத்தில் உள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்கா அருகில் உள்ள சிறிய வனப்பகுதியில் தரை இறங்கினார்.

அதற்கு பிறகு மதியம் ஏற்காடு வந்து மீண்டும் ஒருமுறை அதே இடத்தில் இருந்து வானில் பறந்து சேலத்தில் தரை இறங்கினார்.

இவருக்கு உதவியாக அவரது சக பைலட்களாகிய அபிலாஷ் மற்றும் சூரியகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இவர் இதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள பல மலை பகுதிகளில் இருந்து 123 முறை இதுபோல் வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

ஆனால் ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe