தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் செயல்படும் ரேஷன் கடைகளின் நேரம் நிர்ணயம் பற்றி தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதன்படி, சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8.30 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும்.
இதர பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை, இதன்பின்னர் பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.