சிவராத்திரி விழா கோலாகலம்…

Published:

.தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகோலமாக விடிய விடிய நடைபெற்றது

தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் தலமாகும். அந்த வகையில் சங்கரன்கோவில் கோமதியம்மாள் சமேத சங்கரலிங்க சுவாமி ஆலயம் மண் தலமாகவும், கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோவில் நெருப்பு தலமாகவும், தென்மலை திரிபூரநாதர் ஆலயம் காற்று தலமாகவும், தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவனார் ஆலயம் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.இந்த ஐந்து.கோயில்களிலும் நேற்று இரவு முதலா இன்று‌அதிகாலை வரை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு இரவு 11:30 மணிக்கு கொதிக்கும் நெய்யில் 84 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பம் சுட்டு பக்தர்களை பரவசப்படுத்தினார்..திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?
202203020120598599 Waffle SECVPF - 2026

Related articles

Recent articles

spot_img