spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தண்டவாளத்தில் படுத்தபடியே போன் பேசிய பெண்! கடந்து செல்லும் ரயில்!

தண்டவாளத்தில் படுத்தபடியே போன் பேசிய பெண்! கடந்து செல்லும் ரயில்!

- Advertisement -

ரயில் தண்டவாளத்தில் ரயில் செல்லும் போது, சிறுமி ஒருவர் படுத்துக்கிடந்து ஃபோன் பேசிக்கொண்டிருந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேகமாக ஓடும் ரயிலுக்கு கீழே பெண் ஒருவர் படுத்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதோடு ரயிலுக்கு கீழே படுத்திருந்த போது அந்த பெண் செய்து கொண்டு இருந்த சம்பவம்தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் விசித்திரமான சாகசத்தை செய்துள்ளார். ட்விட்டரில் ஐபிஎஸ் அதிகாரி டிப்பன்ஷு காப்ரா அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

அதில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளம் நடுவே படுத்திருக்கிறார். குறுக்கு வெட்டாக படுக்காமல், தண்டவாளத்தோடு தண்டவாளமாக நடுவில் நேர்கோடாக படுத்து இருக்கிறார். அப்போது அந்த வழியாக சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது.

ரயில் வருவது தெரிந்தும் அந்த பெண் எழுந்து செல்லவில்லை. அந்த ரயில் தண்டவாளத்தில் எந்த தடையும் இன்றி அவரை கடந்து சென்றது. அவர் குறுக்கு வெட்டாக படுக்காமல் இருந்ததால் ரயில் அவர் மீது ஏறாமல் சென்றது. அதோடு அவரும் எந்த விதமான சின்ன காயமும் இன்றி தப்பித்தார். ரயில் வேகமாக சென்ற பின் அமைதியாக அந்த பெண் எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப்பதிவில், ‘ தொலைபேசியில் புரளி பேசுவது மிகவும் முக்கியமானதா?’ என்று அவர் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டு இருக்கும் வீடியோவில், தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ர

யில் சென்ற உடன், அங்கு சிறுமி ஒருவர் படுத்து கிடக்கிறார். அவரது தலை துப்பட்டாவால் மூடப்பட்டிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்க்கும்போது, அவர் போன் பேசிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது. தொடர்ந்து போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் அசால்ட்டாக நடந்து வருகிறார்.’

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் எங்கே நடந்தது என்று தெரியவில்லை. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். அந்த பெண் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த பெண்ணின் செயல் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe