தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வாழ்பவர்களில் சினேகா பிரசன்னாவும் முக்கியமானவர்கள்.
காதலித்து திருமணம் செய்த இவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினேகா முதன்முறையாக தனுஷுடன் பட்டாசு படத்தில் நடித்தார்.
பிரசன்னாவும் அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வருகிறார். மேலும் சோஷியல் மீடியாவில் இருவரும் சேர்ந்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து ரசிகர்களை பொறாமை படும் அளவிற்கு பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது மகன் மகளுடன் இருவரும் சேர்ந்து அனைவரும் பொறாமை படும்படியான அழகான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டனர்.
மேலும் கடைசியில் சினேகாவை தூக்கி நடப்பதுமான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். ரசிகர்கள் பார்த்து ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.