அழகிய பூனைக்குட்டி ஒன்று விவசாயியிடம் கறந்த பசுவின் பால் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சத்தீஸ்கரின் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், “அனைவரின் சைகையையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 5,000 ரீட்வீட்களையும், 28k லைக்குகளையும் பெற்றுள்ளது. பிரெஷ் பசுவின் பாலுக்காக, பால் கறக்கும் விவசாயியிடம், பூனை கெஞ்சுவதை வீடியோவில் காணலாம்.
பூனை அவனிடம் பால் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு அதன் இரண்டு கால்களில் நிற்கிறது. விவசாயி பசுவின் பால் கறப்பதில் மும்முரமாக இருப்பதைக் காணும்போது, பூனை மீண்டும் அவரை தட்டி பால் கொடுக்குமாறு கேட்கிறது.
அழகான பூனை பலமுறை கேட்ட பிறகு, அந்த நபர் பசுவின் பாலை பூனையின் வாயை நோக்கி பீய்ச்சி அடிக்கிறார். அப்போது பூனை தனது வாயில் பீய்ச்சி அடிக்கும் பால் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் குடிப்பதைக் காண முடிந்தது.
நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் ரசித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பூனையின் இந்த குறும்பு இணையத்தை கலக்கி வருகிறது. “ஒரு மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான அன்பு நிபந்தனையற்றது” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
बस सबके इशारे को समझने की ज़रूरत है.❤️ pic.twitter.com/2UrqPwS8Pv
— Awanish Sharan (@AwanishSharan) May 2, 2022