ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பில் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கு சில இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியான, ஆர்வமுள்ள பெற்றோர் நேரடியாக பள்ளியில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி அலுவலகத்தில் இன்று முதல் (மே 13.,) முதல் வரும் 18ம் தேதிவரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவின் 73051 60907 என்ற மாணவர் சேர்க்கைப் பிரிவு உதவி எண்ணை அழைக்கலாம் என கேந்திரிய வித்யாலயாவின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022-23 கல்வியாண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்புக்கு மாணவர் சேர்கை தொடங்கியது.
இடஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற்றவர், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வரும் பிரிவினர், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் எனப் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்த சேர்க்கையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினரில் நிரப்பப்படாமல் உள்ள சில இடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகம் முடிவு செடித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் (மே.13.,) முதல் வரும் 18ம் தேதிவரை பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:
இந்தியப் பாதுகாப்புத் துறையில் சேவையாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் அடிக்கடி பணிமாறுதல்களால் பல இடங்களில் பணியாற்றும் சூழலில் அவர்களின் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் நிலையான கல்வியை வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கில் செயல்பட்டு வருகின்றன.
பிறகு இராணுவத் துறையில் தனியாக இராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய அரசுப் பணியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் கல்வியை அளித்து வருகிறது. இப்பள்ளிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன.