ஐந்து முகங்களும் அதன் நிறங்களும், திக்குகளும்:
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம்.
நடுவில் இருக்கும் ஈசானம் – பளிங்கு நிறம். கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம்-வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.
நடனமாடிய ஐந்து சபை:
சிதம்பரம்: தங்கசபை, மதுரை-வெள்ளி அம்பலம், திருஆலங்காடு-ரத்தினசபை, திருநெல்வேலி-தாமிரசபை, குற்றாலம்-சித்திர சபை.
தொழில்கள்:
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
மலர்கள்:
வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை.
ஐந்தெழுத்து மந்திரம்:
ஐந்தெழுத்து-நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும். அவ்ஐந்தெழுத்து மந்திரத்தையும் சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என ஐந்து வகையாக உச்சரித்து உருவேற்ற, உள்ளொளி பெருகும் என உரைக்கிறது திருப்புகழ்.
சிவராத்திரி பொழுதின் காரியங்கள்:
விபூதி பூசிக் கொள்ளுததல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல்