பக்தனுக்காக பாதுகை அளித்த பாண்டுரங்கன்!

pandu
pandu

மகா பெரியவர் பண்டரி சேத்ராடனம் செய்தபோது விட்டலனை கூட தரிசிக்காமல் முதலில் நேராக சென்று இந்த பாதுகையை தரிசித்து தன் தலை மேல் வைத்து கொண்டாராம் பிறகே விட்டல தர்சனம் செய்தாராம் அப்பேர்பட்ட விட்டலன் பாதுகை பண்டரியில் உள்ளது இன்றும் நாம் சென்றால் சேவிக்கலாம் மஹாத்வாரத்திலிருந்து.. அப்ரதக்ஷிணமாக இரண்டு நிமிடங்கள் நடந்தால் ஒரு சிறிய தெரு வருகிறது. நெளிந்தும் வளைந்தும் செல்லும் மிகக்குறுகிய அந்த வீதியில் இருக்கிறது கால்யாசாவாடா.

இதன் பெயர்க்காரணம் தெரியவில்லை.
இவ்விடத்தில் பகவான் பாண்டுரங்கனின் பாதுகைகள் உள்ளன… இதில் என்ன சிறப்பு?‌ எல்லாக் கோவில்களிலும் இருப்பதுதானே என்று தோன்றலாம்.

அவ்வாறன்றி இந்தப் பாதுகைகளுக்கு ஒரு பெரிய சிறப்பு இருக்கிறது. பல தலைமுறைகளுக்கு முன்னால் அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் (லக்ஷ்மணன் என்று சொல்கிறார்கள்) பகவான் பாண்டுரங்கனைக் காண்பதற்காக அழுதுகொண்டே இருந்தார்.

கடும் கோடையில் சந்திரபாகாவின் சுடுமணலில் படுத்து விட்டலா விட்டலா என்று கதறுவார். கடுங்குளிர் வீசும் காலங்களில் சந்திரபாகையின் நீருக்குள் நின்றுகொண்டு விட்டல நாமத்தைச் சொல்லி அழுதழுது அவன் தரிசனத்திற்காக ஏங்கித் தவித்தார். இப்படிப் பல நாட்கள் சென்றன.

பகவத் தரிசனத்திற்காக அழும் அவருக்காக மனமிரங்கினான் தேவாதி தேவனான விட்டலன் கோடி சூர்யன் ஒன்றாய் உதித்ததுபோல் சங்கு சக்கர கதா பத்ம சோபேயுடன் மகர குண்டலம் சிரசில் சூரியனையும் மங்க செய்யும் மகுடமும் கழுத்தில் கெளஸ்துபம் வைஜயந்தி மாலை புரள கண்ணெதிரே தோன்றினான் மகா க்ருபாகரனான பாண்டு ரங்கன்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

யாருக்குக் காட்சி கொடுத்தாலும் என்ன வரம் வேண்டும்? என்று கேட்பது பகவானின் பழக்கதோஷம்.

உண்மையில் அனைத்துக்கும் முதலும் இறுதியுமான பகவானையே கண்டபின் ஒருவனுக்கு மற்ற பொருள்களால் ஆகவேண்டியது என்ன?

உன் நினைவு எப்போதும் வேண்டும், ஸத்சங்கம் வேண்டும், உன் அடியாரின் தொடர்பு வேண்டும் என்று பல பக்தர்கள் கேட்பதைப் பார்க்கிறோம். மிக அபூர்வமாக சிலர், குழந்தைப் பேறு, மற்றும் மற்ற செல்வங்களை வேண்டுகின்றனர்.

இந்த பண்டரி பக்தர் என்ன கேட்டார் தெரியுமா?
விட்டலா, மின்னல் போல் நீ தோன்றி மறைந்துவிடுகிறாய். உன்னை எப்போதும் என்னுடன் இருக்க வைக்க இயலாது. ஆனால், நீ எனக்குக் காட்சி கொடுத்ததன் அடையாளமாக உன் பாதுகைகளைக் கழற்றிக் கொடு. நான் ஆராதனை செய்கிறேன்.
இந்தக் கலியுகத்திலும் உன் பெயர் சொல்லி உண்மையாக அழைப்பவர்க்கு நீ தரிசனம் தருகிறாய் என்பதற்கு இந்தப் பாதுகைகள் சாட்சி சொல்லட்டும் என்றார்.

இன்றும் அவரது ஏழாவது தலைமுறையினர் அவ்வீட்டில் பகவானின் பாதுகைகளை ஆராதனை செய்து வருகின்றனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

நமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதில், நம்மை நன்னெறிக்குய்ப்பதில், நமது முன்னோர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை!!

தவத்திற்கிரங்கி காட்சி கொடுக்க வந்த பகவானின் பாதுகைகளைப் பார்த்ததும் இன்னும் நிறைய நாமம் சொல்ல சொல்ல நாமும் இறைவனைக் காணலாம் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories