சொந்தவீடு ஆசை இல்லாதவர்களே இல்லை. வீட்டை எங்கே வாங்கலாம், எப்படி வாங்கலாம், இ.எம்.ஐ ல வாங்கணுமா,இப்படி ஏக பிரச்சனை,சந்தேகம், ஆனா எப்படி ஆனாலும் சொந்தமா ஒரு வீடு எப்படியும் வேண்டும்.
சொந்தவீடு அமைய இந்த திருப்புகழ் சொல்லி பூஜித்து முருகப்பெருமானை வழிபட்டு வர நற்பலன் கிடைக்கும்..அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!
புந்தி நிறை அறிவாள! உயர்தோளா !
பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீச வடிவேலா
தண்மரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப !
தண்தமிழன் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே … !!! (724)