குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கி செல்வம் உண்டு.
தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம் காட்டும். பெரும் பாவம் உண்டாகும்.
மிக மிக கவனிக்க வேண்டியது, குத்துவிளக்கை தானாக அணையவிடக் கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தால் அ்ணைக்க வேண்டும்.
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
தீபம் ஏற்றி வழிபடுவதன் சிறப்புகள்
பசு நெய் : செல்வம் பெருகும்
நல்லெண்ணெய் : உடல் ஆரோக்கியம்
விளக்கெண்ணெய் : புகழ், தாம்பத்திய சுகம்
இலுப்பெண்ணெய் : ஜீவ சுகம், ஞானம்
புங்க எண்ணெய் : முன்னோர்கள் ஆசி
இந்த 5 வகையான எண்ணெய் கலந்து அதாவது பஞ்ச எண்ணெயில் தீபம் ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்!
விளக்கு மகிமை:
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள்தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.
விளக்கு ஏற்றும் முகத்தின் பலன்:
குத்துவிளக்கில்
ஒரு முகம் ஏற்றினால் – மத்திமபலன்
2முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை
3 முகம் ஏற்றினால் – புத்தி, சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி.
4 முகம் ஏற்றினால் – பசு,பால், பூமி, சேர்க்கை
5 முகம் ஏற்றினால் – பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.
– பரிகார ஜோதிடர் S காளிராஜன்,
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,
தாந்த்ரீக பரிகார ஜோதிடம். இலத்தூர்.