8 ஆம் வகுப்ப மாணவி மா்மமான முறையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; தற்கொலைய? கொலை? போலீசார் தீவிர விசாரணை….!

fire man - 2026

கன்னியக்குமரி மாவட்டம்
களியக்காவிளை அருகே 13 வயது சிறுமி தீயில் கருகி பலி – கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை!

களியக்காவிளை அடுத்துள்ள கேரள பகுதியான அயிரயை சேர்ந்தவர் மனோஜ். இவருடைய மனைவி சவுமியா, இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் அஞ்சனா (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவுமியாவின் கணவர் மனோஜ் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்பு, சவுமியா, சஜீவ்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் சிறுமி அஞ்சனாவும் வசித்து வந்தார். இந்தநிலையில், தாய் சவுமியா தனது 2-வது கணவருடன் சேர்ந்து சிறுமி அஞ்சனாவை அடித்து கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அஞ்சனா திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி அஞ்சனாவை தேடி கண்டு பிடித்தனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

அப்போது, தாயின் கொடுமையை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறியதாக அஞ்சனா தெரிவித்தாள். இதையடுத்து, அதிகாரிகள், சவுமியாவை எச்சரித்து அவருடன் சிறுமியை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சவுமியாவும், அவரது கணவனும் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அஞ்சனா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் சிறுமி உடலில் தீ எரிந்த நிலையில் அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் அஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார்..

இதுகுறித்து தகவல் அறிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமியின் சாவுக்கான காரணம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது, தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories