8 ஆம் வகுப்ப மாணவி மா்மமான முறையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; தற்கொலைய? கொலை? போலீசார் தீவிர விசாரணை….!

fire man - 2026

கன்னியக்குமரி மாவட்டம்
களியக்காவிளை அருகே 13 வயது சிறுமி தீயில் கருகி பலி – கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை!

களியக்காவிளை அடுத்துள்ள கேரள பகுதியான அயிரயை சேர்ந்தவர் மனோஜ். இவருடைய மனைவி சவுமியா, இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் அஞ்சனா (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவுமியாவின் கணவர் மனோஜ் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்பு, சவுமியா, சஜீவ்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் சிறுமி அஞ்சனாவும் வசித்து வந்தார். இந்தநிலையில், தாய் சவுமியா தனது 2-வது கணவருடன் சேர்ந்து சிறுமி அஞ்சனாவை அடித்து கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அஞ்சனா திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி அஞ்சனாவை தேடி கண்டு பிடித்தனர்.

அப்போது, தாயின் கொடுமையை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறியதாக அஞ்சனா தெரிவித்தாள். இதையடுத்து, அதிகாரிகள், சவுமியாவை எச்சரித்து அவருடன் சிறுமியை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சவுமியாவும், அவரது கணவனும் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அஞ்சனா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் சிறுமி உடலில் தீ எரிந்த நிலையில் அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் அஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார்..

இதுகுறித்து தகவல் அறிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமியின் சாவுக்கான காரணம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது, தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories