மசாலா பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான ஆச்சி மசாலா, தனது மிளகாய்த் தூள் பாக்கெட்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி ரசாயனத்தைக் கலந்து விற்பனைக்கு விட்டுள்ளது என்று கூறி, கேரளத்தில் ஆச்சி மசாலாவின் மிளகாய்ப் பொடி விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், ஆச்சி மசாலா குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனமும் கேலியும் செய்யப் பட்டு வருகிறது. பயனர்கள் பலரும் இது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் கருத்துகளில் சில…
Manoj Manjunath நல்ல வேளை ஆச்சி மசாலாவை கேரளா கம்யூனிஸ்ட் அரசு தடை பண்ணிடுச்சு இதுவே எதாவது பாஜக ஆளும் மாநிலமா இருந்தா இந்நேரம் சிறுப்பான்மை தொழிலை நசுக்கும் நாசிச பாசிச மோடி அரசேனு ஓரு கும்பல் கிளம்பி இருக்கும்.