”மானே நீ நென்னலை நாளை வந்துங்களை” என்று தொடங்கும் திருவெம்பாவையின் ஐந்தாம் பாடலை நாம் இன்று காண இருக்கிறோம்.
”வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக்கின்றாய்.” என்று தோழிகள் வந்து இன்னொரு தோழியை எழுப்புவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடல் வழியாக நம்மையும் மாணிக்கவாசக பெருமான் எழுப்பி ஈசனை வழிபட அழைக்கிறார்.