கொரோனா அறிகுறியுடன் வெளியில் நடமாடினால்… கொலைமுயற்சி வழக்குகள் பதியப்படும்!

corona virus - 2026

இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பொதுவெளியில் நடமாடும் நபர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 1,34,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேபான் மற்றும் கானா நாடுகளில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் கொரோனோவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா மற்றும் தென் கொரியாவில் அதன் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இத்தாலியில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. அங்கு 15,113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தாலியில் பொதுமக்கள் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், உணவுப்பொருள் கடைகள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பொதுவெளியில் நடமாடும் நபர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் தடையை மீறி வெளியில் நடமாடுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus causes symptoms and treatment - 2026

வெளியில் நடமாடியவர்கள் மூலம் மற்றவருக்கு கொரோனா பரவினால் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு 21 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.

கொரோனா தடுப்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் குழுவை சீனா இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 31 டன் அளவிலான உதவிப் பொருட்களையும் சீனா அனுப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஈரானில் 10,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 429 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தடுப்பு முயற்சியில் ஈரானுக்கு உதவ இணையதள தன்னார்வலர்கள் குழு ஒன்று முன் வந்துள்ளது. சீனா, ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேர் இணையதளத்தில் ஒன்றிணைந்து சீனாவின் நோய்த்தொற்று எதிர்ப்பு குறித்த செயல்முறைகளையும், அனுபவங்களையும் பெர்சிய மொழியில் மொழிபெயர்த்து வழங்குகின்றனர். இதனை சமூக வலைத்தளங்களில் பரவச் செய்து, ஈரானிய மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories