January 26, 2025, 4:37 PM
28.9 C
Chennai

கொரோனா அறிகுறியுடன் வெளியில் நடமாடினால்… கொலைமுயற்சி வழக்குகள் பதியப்படும்!

இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பொதுவெளியில் நடமாடும் நபர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 1,34,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேபான் மற்றும் கானா நாடுகளில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் கொரோனோவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா மற்றும் தென் கொரியாவில் அதன் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இத்தாலியில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. அங்கு 15,113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தாலியில் பொதுமக்கள் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், உணவுப்பொருள் கடைகள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பொதுவெளியில் நடமாடும் நபர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  ராஷ்டிரீய ஹிந்து மகா சபா நடத்திய மஹா சண்டி யாகம்!

காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் தடையை மீறி வெளியில் நடமாடுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் நடமாடியவர்கள் மூலம் மற்றவருக்கு கொரோனா பரவினால் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு 21 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.

கொரோனா தடுப்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் குழுவை சீனா இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 31 டன் அளவிலான உதவிப் பொருட்களையும் சீனா அனுப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஈரானில் 10,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 429 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தடுப்பு முயற்சியில் ஈரானுக்கு உதவ இணையதள தன்னார்வலர்கள் குழு ஒன்று முன் வந்துள்ளது. சீனா, ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேர் இணையதளத்தில் ஒன்றிணைந்து சீனாவின் நோய்த்தொற்று எதிர்ப்பு குறித்த செயல்முறைகளையும், அனுபவங்களையும் பெர்சிய மொழியில் மொழிபெயர்த்து வழங்குகின்றனர். இதனை சமூக வலைத்தளங்களில் பரவச் செய்து, ஈரானிய மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ALSO READ:  வங்கதேசத்தில் இஸ்கான் செயலர் கிருஷ்ணதாஸ் கைது; இந்தியாவில் வலுக்கும் கண்டனங்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று