காமன்வெல்த் போட்டிகள் – முதல் நாள் 29.07.2022
– K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று லண்டன், பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. இராணி எலிசபத்தின் சார்பாக இளவரசர் சார்லஸ் விளையாட்டுகளை கங்கவர் நிகழ்ச்சியொன்றில் தொடங்கிவைத்தார்.
இந்திய அணி, தங்களது பாரம்பரிய நீல வண்ண உடையில் இறகுப்பந்து வீராங்கனை பி.வி. சிந்து மற்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைவர் மன்பிரீத் சிங் தலைமையில் அணிவகுத்துச் சென்றனர். இந்தியாவிலிருந்து 200 விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாகக் கலந்துகொள்ளவில்லை.
இன்று நடந்த போட்டிகளில் இந்திய பெண்கள் கிரிக்கட் அணி ஆஸ்திரேலிய அணியிடம் மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. இந்திய பெண்கல் ஹாக்கி அணி கானா அணிக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளது. இந்திய கலப்பு பாட்மிண்டன் அணி குரூப் ஏ பிரிவில் 5-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தான் அணியை வென்றுள்ளது. ஸ்குவாஷ் போட்டியில் அனஹாத் சிங் பெண்கள் பிரிவில் முதல் போட்டியை வென்றிருக்கிறார்.
ட்ரையத்தால் விளையாட்டில் ஆண்கள் பிரிவில் இந்தியா 30 மற்றும் 33ஆவது இடத்தைப் பிடித்தது; பெண்கள் பிரிவில் 26 மற்றும் 28 ஆவது இடத்தைப் பிடித்தது. இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் முதல் இரண்டு சுற்றில் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆண்கள் பிரிவிலும் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற்று இந்திய அணி கால் இறுதிக்குச் சென்றுள்ளது.
குத்துச் சண்டை போட்டியில் ஷிவ தாப்பா 63.5 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் வெற்றிபெற்றிருக்கிறார். நீசல் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது. ஸ்ரீஹரி நடராஜ் 100மீ பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறார்.
சைக்கிளிங் போட்டியில் ஆண்கள், பெண்கள் இரண்டு அணிகளும் தோல்வியடைந்து வெளியேரியுள்ளன. லான் பௌல்ஸ் போட்டியில் இந்தியாவின் இரு அணிகளும் தொல்வியடைந்து வெளியேறின.