பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜை ஜெயந்தி விழாவையொட்டி ஆளில்லா விமானம் மூலம் பசும்பொன் கிராமம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது குருபூஜை விழாவும் திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் ஆன்மீக விழா துவங்கியது.
இதில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வா் ஒ.பன்னீா்சச்செல்வம் உள்ளிட்ட 8 அமைச்சா்கள், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாஜக, காங்கிரஸ், அமமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், ஆன்மீக தலைவா்கள், பொது மக்கள், சமூதாய தலைவா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனா்.
இதையடுத்து பாதுகாப்பிற்காக பசும்பொன் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மூலமாகவும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பசும்பொன் கிராமத்தில் மட்டும் 6 டிஐஜிகள், 20 எஸ்பிகள், 6 ஆயிரம் காவலர்கள், 80க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 20 சோதனை சாவடிகளுடன் பசும்பொன் கிராமம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கபட்டு வருவதாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ஜெயந்த் முரளி பசும்பொன்னில் தெரிவித்தார்.