ரெபோ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும். நடப்பு நிதியாண்டு இறுதிவரை, இந்த விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி வகிதம் 3.35 சதவீதமாகவே தொடரும். பொருளாதார வளர்ச்சி 2020-21ல் 9.5 சதவீதமாக சரியும் .
21ம் நிதியாண்டின் 4வது காலாண்டின் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.