தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை துர்காஸ்டாலின் தரிசனம் செய்தார்.
இங்கு 16 திருக்கரங்களுடன் அமைந்துள்ள அபூர்வ ஸ்ரீநரசிம்மர் கோவிலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, பூஜைகளில் பங்கேற்று அவர்; தரிசனம் செய்த அவர், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா ஸ்ரீபத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாசலபதி சுவாமியையும் தரிசித்தார்.