கொரோனா: சிங்கப்பூரிலிருந்து வந்த பெண்! தொற்றுடன் வந்தது தெரியாமல் வீடு திரும்பிய 169 பயணிகள்!

corona-test
corona-test

சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. கொரோனா காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டாலும், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தில் மத்திய அரசு சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் அந்த நாட்டில் கொரோனா டெஸ்ட் எடுத்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த சான்றிதழ் இல்லாவிட்டால் விமானத்தில் ஏற்ற மாட்டார்கள்.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. அதில், 169 பயணிகள் வந்தனர். அவர்களின் உடமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த 38 வயது மதிப்புடைய பெண்ணின் மருத்துவ சான்றிதழை வாங்கிப்பார்த்த இமிகிரேஷன் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கொரோனா டெஸ்ட் எடுத்திருந்த அந்த பெண்ணின் சான்றிதழில் பாசிட்டிவ் என இருந்தது.

பாசிடிவ் என்றால் கொரோனா இருப்பதாக அர்த்தம். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் உடனே அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trichy airport 1 - 2026

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”சான்றிதழில் பாசிடிவ் என தெளிவாக இருந்தும், கொரோனா பாதித்த பெண்ணை சிங்கப்பூரில் எப்படி விமானத்தில் ஏற்றினார்கள். இதுபற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த பெண்ணுடன் வந்த மற்ற 168 பேரும் அவர்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். அவர்கள் திருச்சி மற்றும் அருகில் உள்ள புதுக்கோட்டை, கரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். மேலும் விமானத்தில் பணியாளர்களும் இருந்துள்ளனர். இதுதவிர விமான நிலைய வாசலில் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை பெண் மூலம் இவர்களில் யாருக்காவது தொற்று பரவி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே பயணிகள் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்.மேலும் விமான பணியாளர்கள், இமிகிரேஷன் ஊழியர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்” என்றனர்.

தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதித்த பெண் திருச்சிக்கு விமானத்தில் வந்ததும், அவருடன் வந்த பயணிகள் தனிமைப்படுத்துதல் இன்றி வீடுகளுக்கு திரும்பி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories