
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கோடைக்காலப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 13 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030):
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை புறப்படும்.
நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 5, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை நீடித்தது பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029):புறப்படும் நாள்: திங்கட்கிழமை
நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 6, 2026 முதல் ஜூன் 29, 2026 வரையாகும்.
பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாகும்.
இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை மற்றும் கோவை வழியாகச் செல்லும் இந்த ரயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்கலாம்.வளக்கமான கோச் வடிவிலேயே இயங்கும்.என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது



