மதுரை:
மதுரை நகரில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 5க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கு இரையாகின. இதை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் காலி செய்யக் கோரி கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கிழக்கு கோபுரம் அருகே வீர வசந்த மண்டபம் அருகே நடைபெற்ற தீவிபத்தில் பாரம்பரியமான அந்த மண்டபம் பெரும் சேதம் அடைந்தது. தீவிபத்தால் பாதிக்கப் பட்டு 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில், தீவிபத்தால் பாதிக்கப் பட்ட பகுதியில் மேபுற சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் நாளை காலைக்குள் காலி செய்ய கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ராஜநாகலு, மாற்று இடம் கொடுத்த பின்னர் கடைகளை காலி செய்ய சொல்ல வேண்டும். இந்த நோட்டீஸால் 500 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று கூறினார்.