சித்திரை விஷு பண்டிகை முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கட்கிழமை இரவு அடைக்கப்பட்டது.
சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை யாகும். இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இவ்வருட சித்திரை விஷு பண்டிகை கடந்த 15ம் தேதி சபரிமலையில் கொண்டாடப்பட்டது
ஆன்லைனில் முன்பதிவு செய்த அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்ததால் இரண்டு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவிலில் ஏப் 11முதல் ஏப்18 வரை தினமும் படிபூஜை நெய் அபிஷேகம், உட்பட சிறப்பு பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெற்றது. நேற்று இரவு ஐயப்பன் தவமிருக்க வைக்கப்பட்டு ஹரிவராஸனம் பாடி நடை அடைக்கப்பட்டது.