கிரிமினல்களுக்கு பணத்துக்காக பீகாரில் சீட்டை பாரதீய ஜனதா கட்சியினரே விற்கிறார்கள்” என அந்த கட்சியின் எம்பி ஆர்.கே.சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசின் முன்னாள் உயர் அதிகாரியாக இருந்து, பாரதீய ஜனதா சார்பில் எம்பியானவர் ஆர்.கே.சிங். இவர் தான் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது:
பீகாரில் சில பாரதீய ஜனதா கட்சியினரே பணத்தை வாங்கிக்கொண்டு சீட்டுகளை விற்கின்றனர். உண்மையான கட்சியினருக்கு சீட் கிடைக்கவில்லை.
நன்றாக செயல்பட்டுக்கொண்டு இருந்த எம்எல்ஏக்களுக்கு தற்போது சீட் தரப்படவில்லை. கிரிமினல்களுக்கு சீட் விற்கப்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.இப்படி கிரிமினல்களுக்கு சீட் கொடுத்தால், லாலு பிரசாத்துக்கும் நமக்கும் (பாஜ) என்ன வித்தியாசம்?.
பீகார் மக்களுக்கு இதனால் அநீதி இழைக்கப்படுகிறது. நாம் நல்ல ஆட்சி தருவோம் என பொதுமக்கள் நம்பினால், அதற்கு தகுந்தாற்போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். கிரிமினல்களை விட, ஊழலற்றவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்..