டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டில்லி கவர்னர் நஜீப் ஜங் ஆம் ஆத்மி அரசிற்கு சர்வாதிகாரியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
அர்விந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து மேலும்தெரிவித்ததாவது, நஜீப் ஜங் நல்ல மனிதர். ஆனால், அவரது தலைமையின் குணம் சரியில்லை. பிரதமர் அலுவலகம் என்ன் சொல்கிறதோ, அதை மட்டுமே, கவர்னர் செய்கிறார். டில்லி அரசின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த விஷயங்களை, கவர்னர் காதுகொடுத்து கேட்பதில்லை என்று அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


