இந்திய நீதிமன்றங்கள் தேசப் பாதுகாப்பிற்கும் , ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் நிறுவனங்களாக மாறுகிறதா ? என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம் ! ஒப்பந்தம் எட்டப்பட்ட வழிமுறைகளை மட்டும் நீதிமன்றத்தின் பார்வைக்கு மட்டுமே என்று சொன்னது ! ஆயுதங்கள், தொழில் நுட்பம் , விலை நிர்ணயம் போன்ற தகவல்கள் வேண்டாம் என்றது !
விவரங்களை அரசு கொடுத்தவுடன் , அதைப் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று சொல்வதுடன் இப்போது விலை விவரங்களையும் கேட்கிறது !
தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பொது வெளியில் கொண்டு வந்தால் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் என்று சாமானியனுக்குத் தெரிந்த உண்மை உச்ச நீதிமன்றத்திற்குத் தெரியாதா ?
இந்த உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு நாட்டு நலனை அடகு வைக்கும் விதமாகத் தெரிகிறது ! இந்த நீதிமன்றத்தின் செயல்பாடு சில அரசியல் கட்சிகளை வைத்து எதிரி நாடுகள் நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்க பயன் படுத்தும் !
https://m.timesofindia.com/india/in-a-sudden-turn-sc-asks-govt-for-rafale-price-offset-partner-details/articleshow/66452396.cms