தென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு! மகிழ்ச்சியில் மூன் ஜே!

Published:

moon jae1 coat - 2026

அண்மையில் தென்கொரிய அதிபர் இந்தியா வந்தபோது, மோடி அணிந்திருக்கும் ஜாக்கெட் கோட் மிகவும் அழகாக இருக்கிறது என்றும், தனக்கு அது மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.

தீபாவளிப் பரிசாக தனக்கு வந்த கோட்களைக் கண்டு மகிழ்ந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே, அதை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்தபடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

இந்திய பிரதமர் மோடியின் அன்பான செயலுக்கு நன்றி கூறியுள்ள, அந்த கோட்கள் தனக்கு மிகவும் அழகாகப் பொருந்துவதாகவும், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த டிவிட் இப்போது டிவிட்டர் வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி, பலரும் மூன் ஜேக்கு ஜே போட்டு வருகின்றனர்.

 

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img