மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல்.
பலவித புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டில், ராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு 35,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மேலும், ராணுவத்திற்கு முதல் முறையாக ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பியூஷ் கோயலின் இந்த அறிவிப்பை கேட்டு ‘ஜெய் ஜவான்’ என பாஜக எம்பிக்கள் கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.